Thursday, December 18, 2008

மார்கழி-03: நீங்காத செல்வம் - Dollar or Euro or Rupee?

உஷ்...அப்பாடா! இன்னிக்கி இந்திய நேரத்துக்குப் பதிவைப் போட்டாச்சி-ப்பா! :) சரி...நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்-ன்னு சொல்லுறாளே கோதை! எது நீங்காத செல்வம்? = டாலரா? யூரோவா? ரூபாயா? ஹிஹி! பாக்கலாம் வாங்க!

புதிர்-03:
இந்தப் படத்தில் உள்ளது யார்-ன்னு சொல்லுங்க! இவருக்கும் இன்னிக்கிப் பார்க்கப் போற செல்வத்துக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கு! :)



சரஸ்வதி சபதம் படத்தில் ஒரு வசனம் வரும்! நாரதர் (சிவாஜி), லட்சுமி கிட்ட பேசுறா மாதிரி...அதுல செல்வம், செல்வம், செல்வோம்..ன்னு சொல்லுவாரு!
செல் = போ! போயிக்கிட்டே இருக்கும்! அதான் அதுக்குப் பேரு செல்+வம்! :)

ஒரு இடத்தில் நிக்காது! ஓடிக்கிட்டே இருக்கும்! அதான் Cash "Flow" என்பார்கள்! நண்பன் திருப்பிக் கொடுத்த கடனை, பாக்கெட்டில் போடும் முன்பே, அது இன்னொரு நண்பனுக்கு ஓடிரும்! :)

அது ஓடலை-ன்னா தான் பிரச்சனையே! இப்ப பார்க்கிறோமே அமெரிக்காவிலும், இன்னும் பல நாடுகளிலும் உள்ள பொருளாதார நெருக்கடி! அதுக்கு ஆணிவேரே இந்தச் செல்வம் ஒரே இடத்துல நின்னது தான்!
பாவம், செல்வம் தானா நிக்கலை! சில பேராசைப் பெருமகன்கள் அதை ஒரே இடத்தில் நிக்க வச்சி கொள்ளை லாபம் அடிக்கப் பாத்தாங்க! லாபத்தை விற்ற காலம் போய், கடன்களையே வித்து வித்தாங்க! ஒரே இடத்தில் Collateral Mortgage Obligation (CMOs)/Mortgage Pool-ன்னு குளம் மாதிரி தேக்கி வைக்கப் பாத்தாங்க! இப்போ காட்டாறு மாதிரி புட்டுக்கிச்சி :)

இப்படி நீங்கிக்கிட்டே இருக்கும் செல்வம்! அதைப் போயி நீங்காத செல்வம்-ன்னு சொல்லுறாளே! இவள் கோதையா? இல்லை பேதையா? ஹா ஹா ஹா! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
இந்தப் பாசுரம் மிகவும் மங்களகரமானது! இரண்டு முறை சொல்லுவாங்க! திருமண வீடுகளில்/சுப நிகழ்ச்சிகளில் வாழ்த்திப் பாடுவாங்க!
எங்க குடும்பம் சைவக் குடும்பமா இருந்தாலும், கல்யாண சீர் முடிஞ்சி, சபையின் காலில் மணமக்கள் விழும் போது, பல பெருசுகள் இந்தப் பாட்டைப் பாடித் தான் வாழ்த்துவாங்க! :)

ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,

பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!



ஓங்கி உலகளந்தவன் யாரு? = வாமனனா? திருவிக்ரமனா??
சாதாரணமா உலகு அளக்கல! குள்ளமாய் இருந்தாத் தானே பின்னாடி ஓங்க முடியும்? அப்படி வாமனனா இருந்து, திருவிக்ரமனா ஓங்கி, உலகளந்தான்!
அடப் பாவி, குள்ளமா இருந்த போது மண்ணைக் கேட்டுவிட்டு, உசரமா ஆன போது அளந்தானா?
இது அநியாயம் இல்லையா? அவனுக்குப் போயி "உத்தமன்"-ன்னு சர்ட்டிபிக்கேட் வேற கொடுக்கிறாளே இந்தப் பொண்ணு! ஹிஹி!

முதல் ஆண்டுல பம்மி, இரண்டாம் ஆண்டுல ரம்மி, மூனாம் ஆண்டுல கும்மினாலும்,
உசரமா சீனியர்-ன்னு வளர்ந்த பின்னர், நாலாம் ஆண்டுல தானே சர்ட்டிஃபிக்கேட் கெடைக்குது? இது அநியாயம் இல்லையா? :)
அதே போல குள்ளமா முதலாண்டில் கேள்வி கேட்டாலும், நாலாம் ஆண்டுல நல்லா வளர்ந்த பின் தான் உலகளந்த சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கும்! :)
மாவலி அசுரன்! ஆனாலும் பக்தன்! பிரகலாதனின் பேரன்!
எம்பெருமானுக்கு என்னிக்குமே தேவாசுர பேதா பேதங்கள் கிடையாது!
கண்ணாடியில் அவரவர் எதுவாகப் பார்க்கிறார்களோ, அதுவாகவே தெரிகிறார்கள்!

* அசுரன் பிரகலாதன் = பக்த சக்ரவர்த்தி! யாரும் பிரகலாதாசுரன்-ன்னு சொல்லுறதில்லை! பிரகலாதாழ்வான்-ன்னு தான் சொல்லுறாங்க! இன்னிக்கும் சுலோகங்களில்/பூசைகளில், பிரகலாதனை முதலில் சொல்லிட்டு, அப்புறம் தான், சுக-வசிஷ்ட முனிவர்களையே சொல்லுகிறார்கள்!
* அசுரன் வீடணன் = வீடணாசுரன் இல்லை! விபீஷணாழ்வான்! இன்றும் இலங்கையில் ஒரு கோடியில் இருந்து கொண்டு, எனக்கு மோட்சமும் வேண்டாம்-ன்னு சொல்லிட்டு, அனுமன் வழியிலே இராம நாமம் சொல்லிக்கிட்டு இருக்கான்!

* தேவன் ஜெயந்தன் = இந்திரனின் அருமைப் புதல்வன்! "ஒழுக்க ஜீலன்"! இவனைத் தான் சூரபத்மன் சிறை வைத்தான்! ஏதோ எங்க முருகன் தலையிட தப்பிச்சான் இந்த ஜெயந்தன் ராஸ்கல்!
காமக் காகமாய் மாறிப் பெண்ணின் மார்பைக் கொத்த வந்தான் ஜெயந்தன்! இவனை அமரேந்திரன்-ன்னோ, ஜெயந்தேந்திரன்-னோ வைணவர்கள் யாரும் கொண்டாடுவது கிடையாதே! இந்திரன் புள்ளை தேவன் தானே? ஆனால் ஜெயந்த-தேவன் என்று சொல்லுறது இல்லை! காகாசுரன் என்று தான் சொல்லப்படுகிறான்!

இப்படி குலம் பார்த்து அல்ல! குணம் பார்த்து வருவது தான் எம்பெருமானின் தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!
அடுத்த முறை யாராச்சும் மெத்தப் படித்தவர்கள், பெருமாள் என்னிக்குமே தேவர்களுக்குத் தான் சப்போர்ட்டு-ன்னு சொன்னாக்கா, அடியேன் உங்களுக்கு மேலே சொன்னதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்!
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே, தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம்!
நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவும், நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்!


இந்த உண்மையை உலகத்துக்கு காட்டி அருளியதால் தான் ஓங்கி உலகளந்த "உத்தமன்" என்றாள் கோதை! கோதை நல்ல பொண்ணு! அவளுக்குப் பொய்யா புகழ்ந்து பாட வரவே வராது!
இந்த அவதாரம் மட்டுமே அவன் திருவடிகளை "அனைவருக்கும்" தந்தது! இராம அவதாரம் கூட பாதுகைகளைத் தான் தந்ததே தவிர, திருவடிகளைத் தரவில்லையே மொத்த உலகத்துக்கும்?

அதான் "திருவடிகளைத் தந்த ஒரே அவதாரம்" = அதை உத்தமன் என்று பாடுகிறாள் என் தோழி கோதை!
* வாமனன், திருவிக்ரமன் = ஒரே அவதாரத்துக்குள் இரண்டு அவதாரம் பாத்தீங்களா? ஹிஹி! அதான் சூட்சுமம்!
* இந்த அவதாரத்தில் தான் அழிவு என்பதோ, சங்காரம் என்பதோ நிகழவே இல்லை! காந்தியடிகளுக்குப் பிடித்த மிகவும் அகிம்சையான அவதாரம்! உத்தமாவதாரம்!

சைவர்களும், சாக்தர்களும், இன்னும் வேறு வேறு பிரிவினரும், தங்கள் முதன்மைக் கடவுளாகக் கொள்ளாவிட்டாலும், இந்தத் திருவிக்ரமனுக்கு மட்டும், ஒவ்வொரு வேள்வியிலும் மூன்று முறை "உத்தமா, உத்தமா" என்று அழைத்து அவிர்ப்பாகமும், ஆகுதியும் கொடுக்கிறார்கள்! வைணவர்களும் அப்படியே!

திருப்பாவையும் ஒரு காதல் வேள்வி, ஞான யக்ஞம் அல்லவா! ஆண்டாளும் மூன்று முறை இந்த வாமனை விளித்து,
1 ஓங்கி "உலகளந்த" உத்தமன் பேர் பாடி
2 அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி "உலகளந்த"
3 அன்று "இவ்வுலகம் அளந்தாய்" அடி போற்றி-ன்னு
முதல் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்று மும்முறை "உத்தமனுக்கு" அவிர்ப் பாகத்தையும் அளிக்கிறாள்! அவள் பாகத்தையும் அளிக்கிறாள்!


ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி = அவனைப் பாடவில்லை! அவன் "பேரை"ப் பாடுகிறார்கள்! சென்ற பாட்டில் "அடி" பாடி! இந்தப் பாட்டில் "பேர்" பாடி! ஹிஹி! ஆக மொத்தம் அவனைப் பாடப் போறதே இல்லை! :)

இறைவனின் பேர், இறைவனின் திருநாமம், இறைவனைக் காட்டிலும் உயர்வானது! அடியார்களுக்கு அவனைக் காட்டித் தருவது!
யாரும் ஹே பரப்பிரம்மமே, தேவரீர் எண் குணத்தானே-ன்னு எல்லாம் கூப்பிடுவதில்லை!
பாஞ்சாலியும் என்னென்னமோ கத்திப் பார்த்தாள்! கருணை நிலையமே, ஆபத் பாந்தவா! இன்னும் என்னென்னமோ! ஆனால் அவன் வருவதற்கு அம்புட்டுத் தாமதம்! ஆனால்.....அவன் நாமம்? அவனை விட வேகமானது! நம் மீது தாகமானது!

கோவிந்தாஆஆஆஆஆ = உடனே அவள் சேலை வளர ஆரம்பித்தது!

* முன்னம் அவனுடைய "நாமம்" கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்!! - இப்படி முதலில் நாமத்தைச் சொல்லி, அப்புறமாத் தான் அவனைச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள்!
* நமசிவாய வாழ்க-ன்னு முதலில் நாமத்தைப் பாடித் தான் திருவாசகமே தொடங்குறாரு மணிவாசகர்! இப்படி "நாமம்" பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
* நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்! நாராயணா என்னும் "தெய்வம்" - அப்படின்னா இருக்கு? இல்லையே!
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்! நாராயணா என்னும் "நாமம்"!-ன்னு நாமம் தானே இருக்கு?

இந்த நாமத்தை நாமும் இப்போ உரக்கச் சொல்லிப் பாத்துக்குவோமா? ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா - கோவிந்தா! கோவிந்தா!



நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி, நீராடினால் = எங்கள் நோன்புக்கு, திருநாமத்தைச் சாற்றிக்கிட்டே (சொல்லிக்கிட்டே) நீராடுகிறோம்!

தீங்கின்றி, நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து = எந்தக் குறைவும் இன்றி, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், நாடு முழுக்க மும்மாரி என்னும் மூன்று மழைகள் பெய்யும்!
ஒரேயடியாக் கொட்டினாலும் பாதகம்! கொட்டவே இல்லீன்னாலும் பாதகம்! அதான் மும்மாரி! கேப் கொடுத்து, கேப் கொடுத்து மும்மாரி!

ஓங்கு பெறும் செந்நெல், ஊடு கயல் உகள = இப்படிப் பெய்ததால் விளைந்த நெல்லு! அந்த நெல் வயலின் ஊடே, தண்ணி பாய்ச்சி இருக்கு!
அதில் கயல் மீன்கள் குதித்து விளையாட...அடடா...அரிசிக்கு அரிசியும் ஆச்சி! மீன் குழம்புக்கு மீன் குழம்பும் ஆச்சி! :)

பூங் குவளைப் போதில் = நெல்வயலே குளம் போல சதசத-ன்னு இருக்க, அதில் குவளைப் பூ பூத்திருக்கு! (போது=பூ)
பொறி வண்டு கண் படுப்ப = அந்தக் குவளைப் போதில், சாதாரண வண்டு இல்ல பொறி வண்டு! அது வந்து கண் படுக்குது! ஆனா தூங்கலை!
கண்ணு மட்டுமே படுக்குது! கண் மட்டுமே படுத்தா என்ன அர்த்தம்? நல்லா குடிச்ச நமக்கு(உங்களுக்குத்) தெரியாதா என்ன? :)

தேங்காதே, புக்கு இருந்து, சீர்த்த முலை பற்றி வாங்க = நைசா வச்சிக்கிட்டே இல்லை-ன்னு சொல்லலை இந்த ஜீவன்! எல்லாத்தையும் நமக்குக் கொடுக்க, நாமளா பாத்து, அதுக்கும் அதன் கன்றுக்கும் கொஞ்சம் பாலை விட்டு வைக்கிறோம்!
பசுவின் பக்கத்தில் இருந்து, அந்தச் செவப்பான சீத்த காம்பைப் புடிச்சி ஒரு வாங்கு வாங்க...சல்ல்ல்ல்ல்ல்.....
ஆண்டாள் பால் எல்லாம் கறந்திருப்பாளோ? அப்படியே தானே செஞ்சது போலத் தத்ரூபமா சொல்லுறாளே!

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் = குடம் குடமா நிறைக்கும் வள்ளல்கள் வாழ்க!
ஆண்டாளின் பன்முகங்களில் இந்த ப்ளூ கிராஸ் முகமும் ஒன்று! விலங்குகள் பால் கருணை! ஜீவ காருண்யம்!
* மாடு = செல்வம்! கேடில் விழுச் செல்வம் கல்வி! ஒருவர்க்கு மாடு அல்ல மற்றையவை! - அப்படின்னு வள்ளுவர் கூட மாட்டைச் செல்வமாத் தான் பாத்தாரு!
* ஆனா கோதையோ ஒரு படி மேலேயே போயிடறா! பாரி, காரி, ஓரி-ன்னு, புலவர்கள் எல்லாம் மனுசனைப் பாட, ஒரு விலங்கை "வள்ளல்" ஆக்கிய மொத ஆளு இவளாத் தான் இருப்பாப் போல!

நீங்காத செல்வம் நிறைந்து = என்னிக்குமே நீங்காத செல்வம், உங்க வாழ்வில் நிறைஞ்சிக்கிடே இருக்கட்டும்!
ஏல்-ஓர் எம் பாவாய் = பெண்களே, மக்களே, நீடுழி வாழுங்கள்! நீடுழி வாழுங்கள்!!



நீங்காத செல்வம் = நித்ய விபூதி!
கீதையில் விபூதி யோகம் உண்டு!
விபூதி என்பதற்குச் செல்வம்-ன்னே பொருள்!

ஒரு முறை, திருச்செந்தூரில், அப்பன் முருகப் பெருமானின் கோயிலுக்கு கூலி வேலை பாத்தவங்களுக்கு, பணமுடையின் காரணமாகச் சம்பளம் தர முடியாமல் போனது! அப்போது மிகவும் மனமுடைந்து, கையில் விபூதியையே அள்ளி அள்ளித் தர, அந்தப் பொடி எல்லாம் பொன்னான கதை மிகவும் பிரசித்தம்! இப்படி விபூதி=செல்வம்!

நீங்காத செல்வம் எது? = டாலரா? யூரோவா? ரூபாயா?
எது எது, எப்ப ஏறும், எப்ப எறங்கும்-ன்னு சொல்லவே முடியாது!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி 1 USD <>= 50 INR! :)
INR பெருமை அந்த அய்யனாருக்கே வெளிச்சம்! :))

அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசிட்டில் போட்டாக்கா, அடுத்த பிறவியிலும் வந்து வட்டி கொடுக்கும் செல்வம் எது?
வருங்கால வைப்பு நிதி = வைத்த மா நிதி!
அவனிடம் செய்யும் சரணாகதியே நீங்காத செல்வம்!

ஒருமைக் கண் தான் கற்ற கல்வி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!
ஒருமுறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!


மோட்ச நிலையில் இருந்து, உலக நன்மையின் பொருட்டு, எம்பெருமான் திருவுள்ளப்படி மீண்டும் பிறந்தால் கூட....பிறவி எழுமையும், ஏமாப்பு உடைத்து!
ஜய-விஜயர் மீண்டும் பிறவி எடுத்தாலும், தீய குணத்தைக் காட்டினாலும், அவர்கள் முன்பு செய்த பரிபூர்ண சரணாகதி அவர்களைக் கைவிடவில்லை!
இரணியன் தன்னையும் அறியாமல், "எங்கேடா அரி?, எங்கேடா அரி?" என்று அரி நாம ஸ்மரணமாகத் தான் இருந்தான்! அரி நாம வாசனையாகத் தான் இருந்தான்!

பிரகலாதன் ஒரு முறை அரி என்றால், இரணியன் பத்து முறை அரி!
அதை அறிவோம்! அரி-ஓம்!
அதுவே நீங்காத செல்வம்! அது நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

31 comments:

  1. அப்பாடி.. இன்னைக்காவது முதல்ல வர்ற வாய்ப்பு கிடைச்சுதே..

    ReplyDelete
  2. //Raghav said...
    அப்பாடி.. இன்னைக்காவது முதல்ல வர்ற வாய்ப்பு கிடைச்சுதே..//

    இதுக்காக 1st rank போடுங்க-ன்னு எல்லாம் கேக்கக் கூடாது! சொல்லிப்பிட்டேன்! அதுக்கெல்லாம் குமரன், ஷைலு அக்கா இருக்காக!

    நாம (என்னையும் சேர்த்து) எல்லாம் அப்படி ஓரமா உட்கார்ந்தோமா, மொக்கையைப் போட்டோமா, சக்கரைப் பொங்கலை லபக்கனோமா-ன்னு இருக்கோனும்! :)

    ReplyDelete
  3. அந்த படத்தில் இருக்கும் பெரியவர் கிருபானந்த வாரியார்
    அவர்கள் ,

    சர்க்கரை பொங்கல் க்கு என்னையும் சேர்த்துக்குங்க pls.....

    ReplyDelete
  4. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Raghav said...
    அப்பாடி.. இன்னைக்காவது முதல்ல வர்ற வாய்ப்பு கிடைச்சுதே..//

    இதுக்காக 1st rank போடுங்க-ன்னு எல்லாம் கேக்கக் கூடாது! சொல்லிப்பிட்டேன்! அதுக்கெல்லாம் குமரன், ஷைலு அக்கா இருக்காக!

    நாம (என்னையும் சேர்த்து) எல்லாம் அப்படி ஓரமா உட்கார்ந்தோமா, மொக்கையைப் போட்டோமா, சக்கரைப் பொங்கலை லபக்கனோமா-ன்னு இருக்கோனும்>>>>>

    என்னே அடக்கம் கே ஆர் எஸ்ஸுக்கு !! தாங்கள் அளிப்பது மொக்கையாக்கும்...சக்கரைப்பொங்கல் இப்போ கிடையாது சுவாமி! பால் நெய் கூடாதுன்னு சொல்லிட்டு என்ன ச.பொ..ஆசை !!! நெய் அதுல விடணுமே ! அதனாலத்தான் கூடாரைவெல்லும் பாசுரத்துல மூட நெய்பெய்து அப்போ பண்ணச்சொல்றாங்க உங்க தோழி!

    ReplyDelete
  5. புதிர்-03:
    இந்தப் படத்தில் உள்ளது யார்-ன்னு சொல்லுங்க! இவருக்கும் இன்னிக்கிப் பார்க்கப் போற செல்வத்துக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கு! :)
    [Photo]>>>>>>>>>>


    கிருபானந்தவாரியார் ஒருவர்..இன்னொருவர் தெரியல‌

    பாதிபரிசு தாங்கப்பா!!!

    ReplyDelete
  6. @ All
    புதிரில் உள்ளவருக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுங்க!

    ReplyDelete
  7. //என்னே அடக்கம் கே ஆர் எஸ்ஸுக்கு !! தாங்கள் அளிப்பது மொக்கையாக்கும்...//

    அப்படித் தான் ஊர்ல பேசிக்கறாங்க-க்கா! :)

    //சக்கரைப்பொங்கல் இப்போ கிடையாது சுவாமி! பால் நெய் கூடாதுன்னு சொல்லிட்டு என்ன ச.பொ..ஆசை !!!//

    அட அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்-க்கா! :)

    //அதனாலத்தான் கூடாரைவெல்லும் பாசுரத்துல மூட நெய்பெய்து அப்போ பண்ணச்சொல்றாங்க உங்க தோழி!//

    ஆமா! ஆமா! அவளுக்கென்ன சொல்லிருவா! நெய் விக்குற விலையில்...பெட்ரோல், டிசல் விக்குற விலையில்...:))

    ReplyDelete
  8. //மணி said...
    அந்த படத்தில் இருக்கும் பெரியவர் கிருபானந்த வாரியார்
    அவர்கள்//

    எப்படிச் சொல்றீங்க! படத்தில் இருப்பவர்க்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

    //சர்க்கரை பொங்கல் க்கு என்னையும் சேர்த்துக்குங்க pls.....//

    கட்டாயமா! உங்களுக்கு இல்லாமலா?

    ReplyDelete
  9. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @ All
    புதிரில் உள்ளவருக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுங்க!

    4:45 AM, December 18, 2008
    >>>>>>>>>>>>>>>>>>>>

    முதல்ல படத்துல இருக்கறவர் வாரியார் சுவாமிதாங்கறது சரியான்னு சொல்லுங்கப்பா....செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அதாவது கேள்விஞானம்
    வாரியார் அடுத்தவ்ர்கள் கேட்கும்படி உபந்நியாசம் செய்பவர் ஆன்மீக சொற்பொழிவாளர் இதானான்னு டக்குனு சொல்லிடுங்கப்பா தல வெடிச்சிடும்போல இருக்கு:)

    ReplyDelete
  10. ஓங்கி உலகளந்தவன் பதிவுக்கு இன்னும் பின்னூட்டம் விவரமாஅளிக்கணும்.இருங்க சற்று நேரத்தில் வரேன் இப்போ ப்ர்ர்ரேக்க்க்க்:)

    ReplyDelete
  11. பாசுரம்,ஓங்கி வளர்ந்ததுபோல உங்கள் பாவைப்பணியும் வளரும் ரவி.

    ஆண்டாளை ரொம்ப விசாரித்ததாகச் சொல்லவும்.

    ReplyDelete
  12. முன்பு ஒரு முறை அவரிடம் பழங்குடி இன மக்கள் வந்து ஐஸ்வர்யம் தாருங்கள் என்று கேட்ட பொழுது உடனிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர் , ஆனால் வாரியார் அவர்கள் அவர்கள் கோரும் ஐவர்யம் ( செல்வம் ) என்பது திருநிறு என்று திருத்தினார் இதுவே சம்பந்தம் என்று நினைக்கிறேன் சரிதானா?


    மேழும்

    "வேங்கடவற்கு என்னை விதி" அதற்க்கு இன்னும் பதில் வரலைனு நினைக்கிறேன் ........

    Mani Pandi

    ReplyDelete
  13. //முதல்ல படத்துல இருக்கறவர் வாரியார் சுவாமிதாங்கறது சரியான்னு சொல்லுங்கப்பா//

    ஹா ஹா ஹா
    படத்தில் இருப்பது செஞ்சொற் தமிழ்க் கொண்டல், வாகாம்ருத வர்ஷீ, பிரம்ம ஸ்ரீ, திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள்!
    உடன் இருப்பது நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை!

    பதிவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பா? சுவாமிகள் விபூதி=செல்வம்=நித்ய விபூதி=நீங்காத செல்வம் என்று கீதையும் கோதையும் என்று பேருரை ஆற்றியது!

    ReplyDelete
  14. இங்கே எம்.எல்.வி அம்மா, இந்தப் பாடலை பாடும் இராகம் : ஆரபி

    ReplyDelete
  15. //செல் = போ! போயிக்கிட்டே இருக்கும்! அதான் அதுக்குப் பேரு செல்+வம்! :) //
    செல்போன்: செல் + போ + ன் : அடிக்கடி ரிப்பேர் ஆகிக்கிட்டே இருக்கும், புதுசு புதுசா மாடல் வர, இருக்கறது சீக்கிரமா அதரப் பழசாகி போய்கிட்டே இருக்கும்?

    ReplyDelete
  16. விபூதி:
    கீதை (10.41)
    "எந்தெந்தப் பொருள் பெருமையுள்ளதாகவோ, வளமுள்ளதாகவோ, சக்தி வாய்ந்ததாகவோ இருக்கிறதோ, அது என்னுடைய சக்தியின் அம்சம் (விபூதி) என அறிந்துகொள்" என்பார் கண்ணன்.
    இந்த விபூதிகள் எல்லாம் உன் நன்மைக்காக படைக்கப்பட்டுள்ளவை என்றாலும், உனக்காக மட்டும் என்று எண்ணாமல், எதையும் சீர்குலைக்காமல், நன்றியுடன் பயன்படுத்துவாயாக - என்ற பொருளில்.

    ReplyDelete
  17. தல

    இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;))

    ReplyDelete
  18. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //செல் = போ! போயிக்கிட்டே இருக்கும்! அதான் அதுக்குப் பேரு செல்+வம்! :) //
    செல்போன்: செல் + போ + ன் : அடிக்கடி ரிப்பேர் ஆகிக்கிட்டே இருக்கும், புதுசு புதுசா மாடல் வர, இருக்கறது சீக்கிரமா அதரப் பழசாகி போய்கிட்டே இருக்கும்?

    >>>>>>>>>>>>>>ஜீவா....:) ரசித்தேன்!!

    ReplyDelete
  19. ரவி! இந்தப்பாடலுக்கு வழக்கம்போலவே உங்க விளக்கம் மிகவும் அற்புதம்!சின்ன வாமனனாய் மாவலியிடம்போய் மூவடி மண் வேண்டி இரண்டே அடிகளால் உலகமெல்லாம் அளந்துவிட்டானே அந்த உத்தமன் அவன் பாதம் சரணம்!

    இந்தப்பாட்டில் கயல்மீன்கள் ஆத்மாக்களாகவும் குவளைமலர் இதயங்களையும்
    பொறிவண்டு இறைவனையும் , பசுக்க‌ள் குருவையும், பால் ஞானத்தையும் குறிப்பதாக் ஒரு ஆன்மீகப்பெரியவர் கூறக்கேட்டிருக்கிறேன்.


    பக்குவமடைந்த ஆத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின்காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆன்ந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் ஆண்டவன் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம்!

    ReplyDelete
  20. பெருமாளின் எல்லா அவதாரத்திலும் சக்கரத்தாழ்வாரும் உடன் வருகிறார். உத்தமமான வாமன அவதாரத்திலும் வருகிறார். எப்படின்னு அண்ணா, நீங்க தான் சொல்லனும்.

    ReplyDelete
  21. //முதல் ஆண்டுல பம்மி, இரண்டாம் ஆண்டுல ரம்மி, மூனாம் ஆண்டுல கும்மினாலும், உசரமா சீனியர்-ன்னு வளர்ந்த பின்னர், நாலாம் ஆண்டுல தானே சர்ட்டிஃபிக்கேட் கெடைக்குது? இது அநியாயம் இல்லையா? :)
    அதே போல குள்ளமா முதலாண்டில் கேள்வி கேட்டாலும், நாலாம் ஆண்டுல நல்லா வளர்ந்த பின் தான் உலகளந்த சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கும்! :)//

    ஓங்கி உலகளந்த உத்தமனாம் திரிவிக்கிரம் கண்ணபிரான் இரவிசங்கர் திருவடிகளே சரணம். :-) அதான் பதிவு தலைப்புல இப்புடி ஒரு படம் போட்டீங்களா? சரி தான். :-)

    ReplyDelete
  22. ஜெயந்தனை அமரேந்திரன்னோ ஜெயேந்திரன்னோ வைணவர்கள் மட்டும் இல்லை வேறு யாரும் கூட போற்றுவதில்லை; எல்லோருக்கும் காகாசுரன் தான். :-)

    ReplyDelete
  23. 'உத்தமன்' என்பதற்கு நல்ல விளக்கம். மொத்தத்துல நல்லா இருக்கு. :-)

    ReplyDelete
  24. //சூடான, அடாவடியான பின்னூட்டங்களுக்கு மட்டும் உடனே பதில்!//

    இதுல உ.கு. எதுவும் இல்லையே? :)

    //தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
    ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,

    பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!//

    எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல். ஷையக்கா சொன்ன விளக்கமும் நன்று.

    ReplyDelete
  25. //மணி said...
    முன்பு ஒரு முறை அவரிடம் பழங்குடி இன மக்கள் வந்து ஐஸ்வர்யம் தாருங்கள் என்று கேட்ட பொழுது....ஐவர்யம் ( செல்வம் ) என்பது திருநிறு என்று திருத்தினார் இதுவே சம்பந்தம் என்று நினைக்கிறேன் சரிதானா?//

    யாரங்கே...
    மணி பாண்டி-ண்ணே...உமக்கே பரிசு! உமக்கே சர்க்கரைப் பொங்கல்! அக்கார அடிசில்! ஆனா கூடாரவல்லிக்கு அப்புறமா! :)

    //"வேங்கடவற்கு என்னை விதி" அதற்க்கு இன்னும் பதில் வரலைனு நினைக்கிறேன் ........//

    இதுக்குப் பதில் போட்டாச்சே! மார்கழி-01 பதிவைப் பாருங்க!

    ReplyDelete
  26. நீங்காத‌ செல்வ‌ம் அவ‌ன‌ன்றி வேறு யார் என்று சொல்லிட்டீங்க‌. அருமையா இருக்கு வித்தியாச‌மான‌ உங்க‌ திருப்பாவை விள‌க்க‌ங்க‌ள். ஷைலாக்கா சொன்ன‌தும் அருமை. பெரிய‌ பெருமாளுக்கு தான் ந‌ன்றி சொல்ல‌னும். :)

    ReplyDelete
  27. இத்தனை தகவலை கூறும் நீங்கள் ஒரு மினி தகவல் களஞ்சியம் தான் ..ஸ்ஸ்ஸ் உண்மையிலே கண்ணை கட்டுது..

    இத்தனை விஷயம் எப்படி தெரிந்து வைத்து இருக்கீங்க!!!!!!!!!!..

    ReplyDelete
  28. //அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசிட்டில் போட்டாக்கா, அடுத்த பிறவியிலும் வந்து வட்டி கொடுக்கும் செல்வம் எது?
    வருங்கால வைப்பு நிதி = வைத்த மா நிதி!
    அவனிடம் செய்யும் சரணாகதியே நீங்காத செல்வம்!

    ஒருமைக் கண் தான் கற்ற கல்வி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!
    ஒருமுறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!

    மோட்ச நிலையில் இருந்து, உலக நன்மையின் பொருட்டு, எம்பெருமான் திருவுள்ளப்படி மீண்டும் பிறந்தால் கூட....பிறவி எழுமையும், ஏமாப்பு உடைத்து!
    ஜய-விஜயர் மீண்டும் பிறவி எடுத்தாலும், தீய குணத்தைக் காட்டினாலும், அவர்கள் முன்பு செய்த பரிபூர்ண சரணாகதி அவர்களைக் கைவிடவில்லை!
    இரணியன் தன்னையும் அறியாமல், "எங்கேடா அரி?, எங்கேடா அரி?" என்று அரி நாம ஸ்மரணமாகத் தான் இருந்தான்! அரி நாம வாசனையாகத் தான் இருந்தான்!

    பிரகலாதன் ஒரு முறை அரி என்றால், இரணியன் பத்து முறை அரி!
    அதை அறிவோம்! அரி-ஓம்!
    அதுவே நீங்காத செல்வம்! அது நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!//

    சரணம், சரணம், சரணம்

    உங்கள் சேவை மேலும் வளரனும்.

    இன்றுதான் வர முடிந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. //அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசிட்டில் போட்டாக்கா, அடுத்த பிறவியிலும் வந்து வட்டி கொடுக்கும் செல்வம் எது?
    வருங்கால வைப்பு நிதி = வைத்த மா நிதி!
    அவனிடம் செய்யும் சரணாகதியே நீங்காத செல்வம்!

    ஒருமைக் கண் தான் கற்ற கல்வி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!
    ஒருமுறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!

    மோட்ச நிலையில் இருந்து, உலக நன்மையின் பொருட்டு, எம்பெருமான் திருவுள்ளப்படி மீண்டும் பிறந்தால் கூட....பிறவி எழுமையும், ஏமாப்பு உடைத்து!
    ஜய-விஜயர் மீண்டும் பிறவி எடுத்தாலும், தீய குணத்தைக் காட்டினாலும், அவர்கள் முன்பு செய்த பரிபூர்ண சரணாகதி அவர்களைக் கைவிடவில்லை!
    இரணியன் தன்னையும் அறியாமல், "எங்கேடா அரி?, எங்கேடா அரி?" என்று அரி நாம ஸ்மரணமாகத் தான் இருந்தான்! அரி நாம வாசனையாகத் தான் இருந்தான்!

    பிரகலாதன் ஒரு முறை அரி என்றால், இரணியன் பத்து முறை அரி!
    அதை அறிவோம்! அரி-ஓம்!
    அதுவே நீங்காத செல்வம்! அது நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!//

    சரணம், சரணம், சரணம்

    உங்கள் சேவை மேலும் வளரனும்.

    இன்றுதான் வர முடிந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Sri aandal paasurattai apadiye villakkam kooraamal ungal nadaiyil
    Paamara makkalum purindu kollumaaru azhagaga kooriyirukireergal
    Arumai ..
    krs ungala photala paakrappa namma vayasu paiyan maadiritaan
    Irukeenga , namma vayasu paiyanukku imbuttu aanmeega arivu irukku ennum podu romba sandosama irukku..
    Naangallam anda kaalatula , Naangallam anda kaalatula enru soolum…..,,,, Poli Perusungalai tooki saaptutta kannu nee.
    kulandaiyil irunde ungalukku aanmeega patru adigam kareetaa!

    ReplyDelete
  31. //Rajesh Narayanan said...
    Sri aandal paasurattai apadiye villakkam kooraamal ungal nadaiyil
    Paamara makkalum purindu kollumaaru azhagaga kooriyirukireergal//

    ஒரு பாமரன் மனசு இன்னொரு பாமரனுக்குத் தானே புரியும்! அதான் ராஜேஷ்! :)
    கண்ணனும்...
    "அறிவொன்றுமில்லாத" ஆய்க்குலத்து உன் தன்னைப்
    பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் அல்லவா? :)

    //krs ungala photala paakrappa namma vayasu paiyan maadiritaan
    Irukeenga//

    ஹிஹி! நான் சின்னப் பையன் தாங்க! ஆனா பொடிப் பையன் இல்லை! :)

    //Naangallam anda kaalatula , Naangallam anda kaalatula enru soolum…..,,,, Poli Perusungalai tooki saaptutta kannu nee//

    ஹிஹி! தவறு தவறு!
    எம்பெருமான் அடியவர்களிடத்தில், யாரையும் போலி-ன்னு எல்லாம் நாம சொல்லீற முடியாது!
    Therez nothing good or bad!
    Only Thinking makes it so! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP