Saturday, July 25, 2009

கோதையின் பிறந்தநாள்: Kissing For Dummies

மக்களே, என் மனத்துக்கினிய தோழி, என் மன்னவன் காதலி,
தென் பாண்டித் தெள்ளமுது, பேரழகுப் பெட்டகம்,
தமிழன்னையே விரும்பிச் சுவைக்கும் தமிழ் பேச வல்லாள், காதலர்க்கு நல்லாள்
...அவளுக்கு இன்று பிறந்த நாள் (Jul-25-2009, ஆடிப் பூரம்)!

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-டீ, கோதை!
Happy Birthday dee, my sweet lil' village girl! :)

அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, இன்னும் பல நூற்றாண்டு இரு!


பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? சும்மா கற்பனைக் குதிரையில் போய் வருவோமா?
வாங்க மக்கா! ஆடல் மா என்னும் வெண் புரவி காத்துக்கிட்டு இருக்கு! :) மொதல்ல அரங்கத்தில் இருந்தே ஆரம்பிப்போம்!

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே!
- இது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாடல்! இதையே என் தோழி ஆண்டாள் பாடினா?

இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா-ன்னு "ரன்" படப் பாடல் போல பாடலாம் தான்! ஆனால் பாசுரச் சந்தம் வரணும்-ல்ல? இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!
அதான் ஆண்டாள் "இச்" சுவையைப் பாடுகிறாள்! :)
"இச்" சுவையைத் தவிர, இந்திர லோகத்துச் சுகமே கொடுத்தாலும் வேணவே வேணாம் என்கிறாள்! :)

"இச்" சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகர் உளானே!


காதல் விளையாட்டை...முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது என்பது ஒரு பெரிய கலை!
ஏழு ஜென்ம பந்தத்து முத்தம் கொடுப்பது எப்படி?
கோதை கிட்டயே கேட்கலாம் வாரீகளா?
Here we go...முத்தம் For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க! திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் ஒருத்தனும் மதிக்க மாட்டான்!
எப்பவும் அவனே கதி என்று கிடந்த என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல? இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

கதி என்றும் தான் ஆவான்,
கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே!



2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? அப்போ என்ன பண்ணனும்? உடனே "இச்" கொடுத்துறதா? நோ நோ! :)

அவன் ஆடையைப் பிடித்து இழுத்து அவனை வம்பு செய்யணும்! அது என்ன எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா? அவன் இடுப்புத் துணியை நான் ஒளிச்சி வச்சா என்ன?

அவன் இடுப்புத் துணியின் வாசத்தில் அவன் வாசம் வீசுகிறதே! அந்தத் துணியைப் பிடித்திழுத்து என் மேல் சுற்றிக் கொள்கிறேன்!
அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் சூட்கேசில் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை,
வாட்டம் தணிய வீசீரே!



3. அடுத்து??? ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!
ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும் மனசு லாஸ்ட் மினிட் கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாதே! அதுக்கப்புறம் நானோ கண்ணை மூடிக்குவேன்! அதுனால அவனைச் சரியாப் பார்க்க முடியாது போயிடும்!

* அவன் முடியைக் கோதி விடும் குழல் அழகு!
* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) நான் விடும் பம்பரம் அழகு!

அதையெல்லாம் நான் முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்து விடுகிறேன்! அதுக்கு அப்பறமா என் மூடின கண்ணு மூடினது தான்! :)
எனவே, இதழொடு இதழ் கலக்கும் முன், கண்ணோடு கண் கலக்கட்டும்!
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் தான் கீழோர் = இதழ்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர்! வாய் அழகர்! கண் அழகர்! கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!




4. ஹைய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! அவன் கிட்டக்க வந்துட்ட்ட்ட்ட்ட்டான்! அவன் உதடுகள் கிட்ட்ட்ட்ட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது பிராண்ட் ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும் தேக்கினான்! அவளும் தேக்கினாள்!

சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


அடியார்க்கு நீர்த் தீர்த்தம்! எனக்கோ அவன் வாய்த் தீர்த்தம்!
* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்! = உன்-என் வாழ்வில், செயல் வெற்றி!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம்! = உன்-என் வாழ்வில், அறன் வலியுறுத்தல்!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரிதீயம் மோக்ஷ ப்ரோக்தம்! = உன்-என் வாழ்வில், வாழ்வாங்கு வாழல்!


5. முத்தம் கொடுத்து முடித்த பின்னர், தேன் உண்ட மயக்கத்தில்,
"ஆகா, வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு தப்பித் தவறிக் கூட டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "I am not that satisfied, But ’twaz Just Okay" என்பது போல் ஒரு லுக்கு விடணும்! :)

அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா அழகா வேறு மாதிரி முயல்வான்? :)
ஞாபகம் வச்சிக்க மனசே! வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட, வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!
அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும், வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை,
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?

ஏலாப் பொய் சொல்லும் என் செல்லப் Porkki-ன்னு கொஞ்சம் திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாப் போவான்! அப்போ தான் அடுத்த முத்தச் சுவை இன்னும் சுவை பெறும்! :))


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு-ன்னு கெடையாது! வெளியில் இருந்து பார்க்க வேணும்-ன்னா ரொம்ப பணக்கார மலைவீடு போல இருக்கும்! ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க விட மாட்டானுங்க! :)
108 வீடு வீடாச் சுத்தணும்! வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்! ஏசி கூட இருக்காது! கரென்ட் கூட இருக்காது! பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

Soothing music from the street
My windows open, welcome beat...
Gentle breeze that brings in ease

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

Thatz my home, Thatz my home!
His arms have rooms that are large enough!
Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு உற்றோமே ஆவோம்!
* "உனக்கேஏஏஏ" நாம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

அவனுக்கு என்னை "விதி!"
என்ற இம் மாற்றம் நான் கடவா வண்ணமே நல்கு!



இவள் விசித்திர விறுவிறு காதல், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிர முத்தங்களுடன் வாழியே! வாழியே!!

42 comments:

  1. உங்க தோழிக்கு முதல்ல என் வாழ்த்துகள்!! மறக்காம சொல்லிருங்க.. ட்ரீட் உண்டு தானே :)

    ReplyDelete
  2. //தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
    நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!//

    ஆஹா.. நாள் எல்லாம் அவள் நட்பில் வாழும் வரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. //மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? //

    அந்தக் கற்பனையை விட, அப்படிப் பாடியிருந்தால், மார்கழி மாதம் திருப்பாவை மட்டும் பாடாமல்.. அனைத்து திவ்ய பிரபந்தங்களையும் அனைவரும் பாடியிருப்பர் அல்லவா

    ReplyDelete
  4. //முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)//

    என்னமோ போங்க ரவி...

    ReplyDelete
  5. நமக்காகக் கலங்காப் பெருநகரை விட்டிறங்கி வந்தவர்,பொருப்பன்ன பொன்னியல் மாடங்கள் பொலிந்து தோன்றும் புதுவையில் வளர்ந்தருளிய பூவையார், மல்லி நாடாண்ட மடமயில், அரங்கனையே ஆண்டு முடிவில் அரங்க நகர் சேர்ந்த நாச்சியார் எப்படி ‘lil' village girl’ ஆக முடியும் ?


    தேவ்

    ReplyDelete
  6. //இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!//

    அடடா.... நான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தான் சுவையான சுவைன்னு நினைச்சேனே :)

    ReplyDelete
  7. //கோதையின் விசித்திர விறுவிறு காதல் வாழியே! //

    வாழிய வாழியவே

    ReplyDelete
  8. // தமிழ் said...
    என்னமோ போங்க ரவி...//

    ஹா ஹா ஹா! இது யாரு? தமிழா? முகிலா? :))

    ReplyDelete
  9. // R.DEVARAJAN said...
    எப்படி ‘lil' village girl’ ஆக முடியும் ?//

    வாங்க தேவ் சார்!
    அவளை அப்படிச் செல்லமா சீண்ட ரொம்பப் பிடிக்கும்! :)
    Villiputhur Village அல்லவா? ஓங்கு பெரும் செந்நெல்லூடு கயல் உகளும் Village! :)

    நாட்டுப்புற வழக்காயும் பாசுரக் கவிதை எழுதுவாளே?-"கண்ணாலம்" கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்! இன்னும் பலப்பல நாட்டு வழக்கு! அதனால் Village Girl :)

    ஆனா அவ ஒத்துக்க மாட்டா! என்னிடம் வம்பு செய்வா! Village-ai City-nnu Cholvaa! :)
    வில்லி புதுவை "நகர்" நம்பி
    விட்டு சித்தன் வியன்கோதை! :)

    இப்படிச் சீண்டல் சண்டையெல்லாம் தோழிக்கும் எனக்கும் தினமும் நடக்கும்! :)

    ReplyDelete
  10. //Raghav said...
    //தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
    நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!//

    ஆஹா.. நாள் எல்லாம் அவள் நட்பில் வாழும் வரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்//

    அதான் நன்றாக இருக்குதே, அடியேனுக்கு! :)

    //Raghav said...
    உங்க தோழிக்கு முதல்ல என் வாழ்த்துகள்!! மறக்காம சொல்லிருங்க.. ட்ரீட் உண்டு தானே :)//

    வெறுமனே வாழ்த்து-ன்னு தான் சொல்லி இருக்க ராகவ்!
    பிறந்தநாள் வாழ்த்து-ன்னு சொல்லவே இல்லையே! அதனால் உனக்கு ட்ரீட் கொடுக்கலாமா-ன்னு யோசிச்சிங்! :))

    ReplyDelete
  11. கலக்கல் பதிவு... :)



    மருப்பொசிந்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

    தோழியோட பாசுரங்கள் பிடிச்சது இந்த வரிகள் தான்...

    செம குஜாலா இருக்கும்... ஹி ஹி

    ReplyDelete
  12. //Raghav said...
    //மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? //

    அந்தக் கற்பனையை விட, அப்படிப் பாடியிருந்தால், மார்கழி மாதம் திருப்பாவை மட்டும் பாடாமல்.. அனைத்து திவ்ய பிரபந்தங்களையும் அனைவரும் பாடியிருப்பர் அல்லவா//

    ஹா ஹா ஹா!
    மார்கழி மாதத்தின் போது மற்ற நாச்சியார் திருமொழிகளை மட்டும் பாடுறோமா என்ன? :)

    திருப்பாவை என்னிக்குமே திருப்பாவை தான்!
    அதைக் கோதையே கூட மீண்டும் இன்னொரு முறை வேறு மாதிரி செய்ய முடியுமோ என்னமோ?

    வேதம் அனைத்துக்கும் வித்து!
    கோதைத் தமிழ் ஐ ஐந்தும் ஐந்து!
    முப்பதுக்குள் முக்தி!

    ReplyDelete
  13. //Raghav said...
    //இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!//

    அடடா.... நான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தான் சுவையான சுவைன்னு நினைச்சேனே :)//

    என் முருகன் மேனி தழுவி வரும் பஞ்சாமிர்தத்தை விடவா? :)

    அப்பேர்ப்பட்ட அந்தப் பஞ்சாமிர்தத்தையும் விடச் சுவையானது "இச்" சுவை! :))

    ReplyDelete
  14. Convey my wishes to sweet Kothai :-)

    ReplyDelete
  15. ஆஹா, கோதை நல்லாளின் காதல் போலவே உங்க பதிவும் கொள்ளை அழகு :) அவளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. நம் தோழிக்கு வாழ்த்துகள்! அரங்கமாநகரில் அண்ணலோடு என்றும் இனிதாய் வாழ வாழ்த்துகள் முதலில்,வரேன் பதிவுக்கு..தலைப்பிலேயே அதிரவைக்கிறீங்க போல?:)

    ReplyDelete
  17. http://www.youtube.com/watch?v=EosBxF0FvxQ

    arputham.
    athi suham.
    anandham.

    subbu thatha.

    ReplyDelete
  18. //ஆஹா, கோதை நல்லாளின் காதல் போலவே உங்க பதிவும் கொள்ளை அழகு :) அவளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
    //

    வழிமொழிகிறேன் ரவி! ஆண்டாள் ஒரு பாசுரத்துல ‘புறம் போல் உள்ளும் கரியானை’ ந்னு கண்ணனை சொல்றா! நானும் சித்துவும் பேசி பேசி சிலாகிச்சோம் இதை என்னா கோபம் இது.. கோபமும் கொஞ்சலும் கலந்து செல்லமா ஊடற கலை அவளுக்கு மட்டும் தான் ரொம்ப அழகா கை வந்திருக்கு. (அனுபவம் தான்!) :)

    ReplyDelete
  19. தல

    தோழிக்கு வாழ்த்துக்கள் ;))

    இதுல இன்னொரு விஷயம்...நானும் ஜூலை அவுங்களும் ஜூலை..ஆகா..ஆகா ;))

    அப்புறம் பதிவு செம காதல் ஹாட் தல ;)

    ReplyDelete
  20. //ஹா ஹா ஹா! இது யாரு? தமிழா? முகிலா? :))//

    தமிழேதான்!

    ReplyDelete
  21. //இராம்/Raam said...
    கலக்கல் பதிவு... :)//

    என்னடா ராம் ஒன்னும் சொல்லலையே-ன்னு பார்த்தேன்! :)

    //மருப்பொசிந்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

    தோழியோட பாசுரங்கள் பிடிச்சது இந்த வரிகள் தான்...//

    அடுத்த வரிகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாப் படி ராமேய்! கிறங்கிப் போயிருவ! :)

    //செம குஜாலா இருக்கும்... ஹி ஹி//

    பாசுரத்தைக் "குஜால்"-ன்னு சொன்ன உன் மேல் மெளலி அண்ணா வந்து நெற்றிக் கண்ணு தொறக்கப் போறாரு! :))
    சேச்சே! இல்லையில்லை! என் மேல் தான் தொறப்பாங்க! இப்படியெல்லாம் உன்னைப் பேச வச்சேன் பாரு! அதான்! :))

    ReplyDelete
  22. //Ezhil said...
    Convey my wishes to sweet Kothai :-)//

    Convey-aach Ezhil! Dankees :)

    ReplyDelete
  23. //கவிநயா said...
    ஆஹா, கோதை நல்லாளின் காதல் போலவே உங்க பதிவும்//

    ஆகா! இது என் பதிவா? இது அவ பதிவு-க்கா!
    இங்கிலீஷ் பாசுரம் எல்லாம் பாடி இருக்கா பாருங்க! :)

    ReplyDelete
  24. //OSAI Chella said...
    happy Bday wishes!
    //

    நன்றி செல்லா-ண்ணே! :)

    ReplyDelete
  25. //ஷைலஜா said...
    நம் தோழிக்கு வாழ்த்துகள்! அரங்கமாநகரில் அண்ணலோடு என்றும் இனிதாய் வாழ வாழ்த்துகள்//

    அரங்க மாநகரில் தான் என்றும் வாழணுமா?
    அப்பப்போ, நாளும் கெழமையுமா, என் வீட்டுக்கும் வந்து போவச் சொல்லுங்க! புகுந்த வீடு-ன்னா அதுலயே போட்டு என் தோழியை அடைச்சிருவீங்களே! இந்த திருவரங்கப்ரியாக்களே இப்படித் தான் :)

    //..தலைப்பிலேயே அதிரவைக்கிறீங்க போல?:)//

    ஹிஹி! இச்சுவை-ன்னு பாசுர வரி தானேக்கா தலைப்பு? அதுவா அதிருது? :))

    ReplyDelete
  26. //sury said...
    http://www.youtube.com/watch?v=EosBxF0FvxQ

    arputham.
    athi suham.
    anandham.//

    ஹிஹி!
    பாட்டு சூப்பர் சூரி சார்! :)
    நானே எதிர்பார்க்கலை...இதை இப்படியும் பாட முடியும்-ன்னு! :)

    ReplyDelete
  27. //கோபிநாத் said...
    தல
    தோழிக்கு வாழ்த்துக்கள் ;))//

    நன்றி மாப்பி!

    //இதுல இன்னொரு விஷயம்...நானும் ஜூலை அவுங்களும் ஜூலை..ஆகா..ஆகா ;))//

    அடப்பாவிங்களா? எப்படியெல்லாம் உரிமை கொண்டாடுறானுங்க? :)
    தோழிக்கு ஆகஸ்ட்-லயும் வரும்! ஆடிப் பூரம் தான் கணக்கு!
    நானும் ஆகஸ்ட்! அவளும் ஆகஸ்ட்! :))

    //அப்புறம் பதிவு செம காதல் ஹாட் தல ;)//

    தெர்மாமீட்டர் எங்கே? எங்கே? :)

    ReplyDelete
  28. //தமிழ் said...
    //ஹா ஹா ஹா! இது யாரு? தமிழா? முகிலா? :))//

    தமிழேதான்!//

    ஓ...அப்படீன்னா சரி! ஏன் தமிழ் "என்னமோ போங்க"-ன்னு சொன்னீங்க? முத்தத்துக்கு முன்னுள்ள மொத்தக் கோபத்தின் மேல் உங்களுக்கு என்ன கோபம்? :)

    ReplyDelete
  29. //தமிழ் said...
    //ஹா ஹா ஹா! இது யாரு? தமிழா? முகிலா? :))//

    தமிழேதான்!//

    ஓ...அப்படீன்னா சரி! ஏன் தமிழ் "என்னமோ போங்க"-ன்னு சொன்னீங்க? முத்தத்துக்கு முன்னுள்ள மொத்தக் கோபத்தின் மேல் உங்களுக்கு என்ன கோபம்? :)

    ReplyDelete
  30. //காயத்ரி said...
    வழிமொழிகிறேன் ரவி!//

    ஓ...நீங்களே ரிப்பீட்டே சொல்றீங்களா கவிதாயினி? :)

    //ஆண்டாள் ஒரு பாசுரத்துல ‘புறம் போல் உள்ளும் கரியானை’ ந்னு கண்ணனை சொல்றா! நானும் சித்துவும் பேசி பேசி சிலாகிச்சோம்//

    ஹிஹி! நீங்க ரெண்டு பேரும் சிலாகிச்சதையே ஒரு கவிதையாப் பதிவு போட்டா என்ன? :)

    //இதை என்னா கோபம் இது.. கோபமும் கொஞ்சலும் கலந்து செல்லமா ஊடற கலை அவளுக்கு மட்டும் தான் ரொம்ப அழகா கை வந்திருக்கு. (அனுபவம் தான்!) :)//

    ஹிஹி! என் தோழிக்கு இந்தக் கொஞ்சல்-கோபல் டெக்னிக் எல்லாம் கை வந்த கலை! :)))
    அதைப் படித்துப் படித்து ரசிப்பது எனக்கும் கை வந்த கலை! :)

    ReplyDelete
  31. @கவிதாயினி காயத்ரி & மக்கா

    காயத்ரி கொடுத்த "புறம் போல் உள்ளும் கரியானை" பாசுரம் இதான்!

    பொருத்தம் உடைய நம்பியைப்
    புறம் போல் உள்ளும் கரியானை
    கருத்தைப் பிழைத்து நின்ற அக்
    கருமா முகிலைக் கண்டீரே?

    அதாச்சும் பொருத்தம் உடைய நம்பி-யாம்! என்னா பொருத்தம்? ஜோடிப் பொருத்தமா? இல்லையில்லை! :)
    அவன் உடலும் உள்ளமும் அப்படி ஒரு பொருத்தமாம்! எப்படி?

    அவன் உடம்பும் கருப்பு!
    என் மேல் கருணை இல்லா உள்ளமும் கருப்பு! :))

    காப்பவன் என்னும் கருத்தைப் பிழைத்து நின்ற அக்
    கருமா முகிலான் = உடற் கருப்பன்! உள்ளக் கருப்பன்! :)

    //அருத்தித் தாரா கணங்களால்
    ஆரப் பெருகு வானம் போல்,
    விருத்தம் பெரிதாய் வருவானை
    விருந்தா வனத்தே கண்டோமே//

    இதுக்கு யாராச்சும் பொருள் சொல்லுங்களேன்! அருத்தித் தாரா-வா? அப்படீன்னா?

    ReplyDelete
  32. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    நம் தோழிக்கு வாழ்த்துகள்! அரங்கமாநகரில் அண்ணலோடு என்றும் இனிதாய் வாழ வாழ்த்துகள்//

    அரங்க மாநகரில் தான் என்றும் வாழணுமா?
    அப்பப்போ, நாளும் கெழமையுமா, என் வீட்டுக்கும் வந்து போவச் சொல்லுங்க! புகுந்த வீடு-ன்னா அதுலயே போட்டு என் தோழியை அடைச்சிருவீங்களே! இந்த திருவரங்கப்ரியாக்களே இப்படித் தான் :)>>>>>>>>>>>>>>>>>>>>>

    ஆயிரமே இருந்தாலும் சீதைக்கு ராமன் இருக்குமிடம்தானே அயோத்தி?:)

    //////..தலைப்பிலேயே அதிரவைக்கிறீங்க போல?:)//

    ஹிஹி! இச்சுவை-ன்னு பாசுர வரி தானேக்கா தலைப்பு? அதுவா அதிருது? :))
    //////

    தொண்டரடிப்படி இச்சுவைதவைர யான்போய் என்று எழுதி இருக்கார் அச்சுதன்மீது அவர் இங்க வந்து பாத்து ’இச்’ சுவை விவரம் கண்டு ‘கோச்’சிக்காம இருந்தா சரி!!!!

    ReplyDelete
  33. //
    1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)
    ......///

    லேசா இங்க A போடணும் போல இருக்கே!!!

    ReplyDelete
  34. . //
    Kothai Says:
    "Just a small room, power cuts ok...
    Even with a lil' candle light,
    His sight is tight that makes me light!

    Soothing music from the street
    My windows open, welcome beat...
    Gentle breeze that brings in ease

    High Definition in his Eyes...
    Sub Woofer as he Whispers...
    Home Theater in his Prank
    That makes me really crank...
    [Photo]Armani, CK, Obsession
    Are dull and dumbest possession!
    His fragrance comes and fascinates
    The "Smell of my Lover" oscillates!

    Thatz my home, Thatz my home!
    His arms have rooms that are large enough!
    Thatz my home! Thatz my home!
    //

    கான்வெண்ட்லாம் கோதை காலத்திலேயே இருந்திருக்கோ?:)
    அசத்தலா பாடி இருக்கா உங்கமூலமா உங்க தோழி?!

    ReplyDelete
  35. ///
    //அருத்தித் தாரா கணங்களால்
    ஆரப் பெருகு வானம் போல்,
    விருத்தம் பெரிதாய் வருவானை
    விருந்தா வனத்தே கண்டோமே/////



    >>>>>>>>>>>>>>>>>>>>>>>..கே ஆர் எஸ் அவர்களே! திருநெல்வேலிலேயே அல்வா இல்லையா? தாரான்னா நட்சத்திரம் கணம்னா கூட்டம் பூதகணம் சொல்வாங்களே

    அதனால அருத்தின்னா விருப்பம்னு நினைக்கிறேன் உன்னை அருத்தித்து வந்தோம் நு உங்க தோழி சொல்லி இருக்கா..விருப்பமுடன் நடசத்திரக்கூட்டங்கள் நெருங்கிச்சூழ்ந்த வானம் போல அப்டீன்னு தோணுது சரியான்னு யாராவது சொல்லலாம்:)

    ReplyDelete
  36. Mutha chuvai pola romba enipaana padhivu , Kothai in HD innu sollalaama ? Pazhaya paata remix panni potta maari kalakkala erukku, pazhaya azhamana karuthum pudhiya sindhanaigalum.

    In between gapla unnoda aalukku ezhudhina poem pote paaru anga dhaan nikkarey nee ;)

    May god bless you with unconditional love and fulfilling life!

    ReplyDelete
  37. //Srivats said...
    Mutha chuvai pola romba enipaana padhivu//

    ஓகோ! எனக்குத் தெரியாதே! அப்படியா? :)

    //Kothai in HD innu sollalaama ? Pazhaya paata remix panni potta maari kalakkala erukku, pazhaya azhamana karuthum pudhiya sindhanaigalum//

    விட்டா, கோதை இன் 3G, 4G-ன்னு எல்லாம் சொல்வ போல இருக்கே!

    //In between gapla unnoda aalukku ezhudhina poem pote paaru anga dhaan nikkarey nee ;)//

    அடப் பாவீ! எலே ஸ்ரீ...அது பொதுவான எழுதின ஒரு கவிதை! கவிதையைக் கவிதையாத் தான் பாக்கணும்! அதுக்கு மேல பார்க்கக் கூடாது! ஆமா! :)

    //May god bless you with unconditional love and fulfilling life!//

    நன்றி! நன்றி! ஸ்ரீவத்சானந்தா! :)

    ReplyDelete
  38. ஷைலஜா said...
    //
    1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)
    ......///

    லேசா இங்க A போடணும் போல இருக்கே!!!
    //

    ஹா ஹா ஹா
    A+ போடக் கூடாதா-க்கா?
    என்னமா யோசிச்சிச் சொல்லி இருக்கேன்? :))

    ReplyDelete
  39. //ஷைலஜா said...
    கான்வெண்ட்லாம் கோதை காலத்திலேயே இருந்திருக்கோ?:)//

    ஆமா! ஸ்ரீவில்லிபுத்தூர் kryes convent! ;)

    //அசத்தலா பாடி இருக்கா உங்கமூலமா உங்க தோழி?!//

    நன்றிக்கோவ்! இதெல்லாம் காக்காக்கடி மிட்டாய் மாதிரி! என் பாட்டையும் அவ பாட்டையும் அப்பப்போ மாத்திப்போம்! :)

    ReplyDelete
  40. //ஷைலஜா said...
    ஆயிரமே இருந்தாலும் சீதைக்கு ராமன் இருக்குமிடம்தானே அயோத்தி? :)//

    ஆமா ஆமா!
    சீதைக்கு ராமன் இருக்கும் இடம் தான் அயோத்தி!
    சீதைக்கு ஜனகன் இருக்கும் இடம் தான் மிதிலை! :)
    கேஆரெஸ் இருக்கும் இடம் தான் நியூயார்க்! :))

    //தொண்டரடிப்படி இச்சுவைதவைர யான்போய் என்று எழுதி இருக்கார் அச்சுதன்மீது அவர் இங்க வந்து பாத்து ’இச்’ சுவை விவரம் கண்டு ‘கோச்’சிக்காம இருந்தா சரி!!!!//

    அவர் அதெல்லாம் கோச்சிக்கவே மாட்டாரு!
    அஞ்சு குடிக்கொரு சந்ததியாய்
    ஆழ்வார்கள் தம் செயலை "விஞ்சி நிற்கும்" தன்மையளாய்...ஆச்சே இவ! அதான் இச்சுவையில் விஞ்சி நின்னுட்டா! நின்னுட்டேன்! :)

    ReplyDelete
  41. //ஷைலஜா said...
    கே ஆர் எஸ் அவர்களே! திருநெல்வேலிலேயே அல்வா இல்லையா?//

    அவர்களே-வா? என்னக்கா இப்பிடி மரியாதை எல்லாம் குடுக்கறீங்க? :)

    //தாரான்னா நட்சத்திரம் கணம்னா கூட்டம் பூதகணம் சொல்வாங்களே//

    தாரா-ன்னா நட்சத்திரம் தான்! தாரே ஜமீன் பர்!

    //அதனால அருத்தின்னா விருப்பம்னு நினைக்கிறேன் உன்னை அருத்தித்து வந்தோம் நு உங்க தோழி சொல்லி இருக்கா..//

    :)

    //விருப்பமுடன் நடசத்திரக்கூட்டங்கள் நெருங்கிச்சூழ்ந்த வானம் போல அப்டீன்னு தோணுது சரியான்னு யாராவது சொல்லலாம்:)//

    சூப்பரு! சரியே! நீங்க சொன்னாச் சரி இல்லாம இருக்குமா?

    அருத்தித் தாரா கணங்களால்
    ஆரப் பெருகு வானம் போல்,
    = எண்ண முடியாத அளவுக்கு நட்சத்திரம் கூட்டம் கூட்டமா மிதக்கிற வானம் போல்

    விருத்தம் பெரிதாய் வருவானை
    விருந்தா வனத்தே கண்டோமே
    = எண்ண முடியாத அளவுக்கு ஃபிரெண்ட்ஸ் கும்பல் சேத்துக்கிட்டுத் திரியும் இந்த மடப்பயலை விருந்தா வனம் என்னும் துளசிக் காட்டில் கண்டேனே!

    பாவிப் பய! புறம் போல் உள்ளும் கரியான்! அவன் உடம்பும் கருப்பு!
    என் மேல் கருணை இல்லா உள்ளமும் கருப்பு! :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP