Thursday, October 21, 2010

புதிரா? புனிதமா?? - கபீர் என்னும் சீக்கிய இந்து முஸ்லீம்!

மக்களே! பந்தலில் புதிரா புனிதமா வந்து ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு இல்ல? இன்னிக்கு அதுக்கு ஒரு பதிவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்! -யார் அவர்?

நூறாவது பதிவும், ஐந்தாவது ஆண்டுமாய், வலம் வரும் அவரின் வலைப்பூவை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்! - யார் அவர்?


* ஆன்மீகத் திருக்குறளை, ஈரடி தோஹாக்களை இந்தியில் எழுதியவர் யார்?

* இவர் ஆன்மீகவாதியா? சிறந்த கவிஞரா? - இன்னொரு கவிஞனைக் கவர்ந்த கவிதை என்பது மிகவும் அரிதாயிற்றே! கவியரசர் தாகூரே விரும்பி மொழி பெயர்த்த கவிதைக்குச் சொந்தக்காரர் யார்?

* இன்று பலரும் போற்றுகிறார்கள்! ஆனால் அன்று இவரைத் தூக்கில் போடாமல் ஊரை விட்டு மட்டும் துரத்தினார்கள், காசி நகரத்துக் குருமார்கள் - இவர் யார்?

* இவர் சொன்னது...முதலில் எட்டிக்காயாகக் கசந்தது பல பேருக்கும்! பல ஆன்மீக குழாம்களிலிருந்து ஒதுக்கப்பட்டார்!
உண்மையை எதிர்கொள்ளும் துணிவு மனிதர்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லவா? உண்மை நெல்லிக்காய் போலவோ?
முதலில் ஒரு சுவை, உள் இறங்கும் போது தண்ணீரோடு இன்னொரு சுவை! அதான் உண்மையை உள்ளங்கை "நெல்லிக்கனி" என்கிறார்களோ?

* மனைவி-குழந்தைகளுடன் வாழ்ந்த தத்துவத் "துறவி"! எதைத் துறக்க வேண்டுமோ, அதை மட்டுமே துறந்தவர் - இவர் யார்?

என்னது, திடீர்-ன்னு யார் யார்-ன்னு இத்தனை "யார்" போடுகிறேன்-ன்னு பார்க்கறீங்களா? ஆத்ம விசாரணையில் "யார்" என்ற கேள்வி மிகவும் முக்கியம்-ன்னு சொல்வாங்களே!
ஏன் திடீர்-ன்னு, "யார்?" என்பதற்கு இவ்ளோ பில்ட்-அப் போடுறேன்-ன்னு பார்க்கறீங்களா?
எல்லாம் ஒரு நூறாவது பதிவு காணும் ஐந்தாண்டுப் பதிவுக்குத் தான்! :)


இவர் பதிவுகள், இவர் எடுத்துக் கொண்ட பொருள் போலவே எளிமையானவை!
* இவர் பதிவுகள், இறைவனைப் பேசுபவை அல்ல!
* இவர் பதிவுகள், அடியார்களைப் பேசுபவை! - அதனாலேயே என்னை மிகவும் கவர்ந்தவை!
* அவர்களின் பிரச்சனை, எதிர்கொள்ளல், ஆன்மீக வழித்தடங்கள், அதற்கான உபகரணங்கள் பற்றிப் பேசுபவை!

நம் வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளை ஒட்டிப் பதிவுகளைப் பின்னுவதில் இவர் வல்லவர்!
வீட்டு மோட்டார் ரிப்பேர், எந்த ரேட்டிங் ஒயரை எதற்குப் பயன்படுத்தினால் ஓவர் லோடு ஆகாது! சைக்கிளைத் துரத்தும் நாய், துரத்த முடியாமல் களைத்துப் போனாலும், அடுத்த சைக்கிளையும் அதே போல் துரத்தும் நாய்ப் புத்தி, நம் புத்தி...

என்று பாலு மகேந்திரா சினிமா பார்ப்பது போல் இவர் ஆன்மீகப் பதிவுகளைப் படிக்கலாம்! :)
நீங்களே வாசித்துப் பாருங்கள்!
குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது. விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது.

கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.
அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது.

இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி.
ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது!


இந்நேரம் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க எல்லாருக்கும் தெரிந்திருக்கும்! = கபீரன்பன்!



ஆன்மீகப் பதிவுலகில் ஒரு துருவ நட்சத்திரம் கபீர் வலைப்பூ! எளிய நடையில், எளிய கதைகள், எளிய கவிதை என்று எதிலுமே எளிமை!
சடங்கு சார்ந்த ஆன்மிகம் பேசுவதில்லை! மனம் சார்ந்த ஆன்மீகம் பேசுபவர்!

இந்திக் கவிதை என்ற மொழி அசூயையோ,
தத்துவக் குப்பை என்ற கருத்து அசூயையோ...
என்று பிரிவினையை ஒட்டிப் பதிவுகள் வளர்க்காது,
மன-ஒற்றுமையை ஒட்டி வளர்ப்பவர்!

ஏன்னா அவர் பேசு பொருளே அப்படி! = கபீர்!

கபீர் என்பவர்...
* கவிஞரா? ஆன்மீகவாதியா?
* தத்துவச் செம்மலா? குடும்பத் தலைவரா?
* இந்துவா? மூஸ்லீமா? சீக்கியரா?
* சாஸ்திர விற்பன்னரா?
* சுஃபியா? யோகியா? சித்தரா?
இப்படியெல்லாம் அடக்கத் தான் முடியுமா?

கபீரின் தத்துவங்களைக் கபீரன்பன் தொடர்ந்து இந்த வலைப்பூவில் சொல்லத் தான் போகிறார்!
ஆனால் கபீர் யார்? என்று அறிந்து வைத்துக் கொள்வதும் ஒரு சுகம்! கபீர் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதில் ஒரு சுகம்!
ஏனென்றால் கபீர்.....மகான் என்பதை விட மனிதர், நம்மைப் போல!
அவரால் முடிந்தால், நம்மாலும் முடியாதா என்ன? வாருங்கள் எட்டித் தான் பார்ப்போம்!
Lives of great men all remind us
We can make our lives sublime
And, departing, leave behind us
Footprints on the sands of time.

புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு!
முதன் முதலாக மாதவிப் பந்தல் அல்லாத ஒரு வெளிப்பூவில்! நான் விரும்பும் வலைப்பூவில்!
இதோ! இங்கே சென்று விளையாடுங்கள், கபீரன்பன் வலைப்பூவுக்கு!
பரிசும் கொடுக்கறாரு! லம்ப்பா வாங்கிக்கோங்க! :))

3 comments:

  1. // சுஃபியா? யோகியா? சித்தரா?

    //

    எனக்குத் தெரிஞ்சு மூணும் ஒன்னுதான் :)

    ReplyDelete
  2. உங்கள் கேள்விக்கு விடை அளித்து விட்டேன்.

    அருமையாக எழுதி விட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்க வலைக்குள்ளே வந்தன்.... நான் மாட்டிகிட்டேன்
    தரமான பதிப்பு.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP