Friday, September 09, 2011

SatelliteCity=தமிழ்ப் "படுத்தல்கள்" & வேப்பிலை!

இந்தச் சுருக்கமான பதிவு, இரண்டு கோள்களின் பாற்பட்டது!
1. தமிழாக்க முயற்சிகள்
2. பிழையான ஆக்கத்தை எதிர்க்கிறேன்-ங்கிற போர்வையில்...தமிழ் முயற்சிகளை எப்பமே கும்மியடித்து நகையாடும் பழக்கம்:(


அண்மையில்.....தமிழக அரசின், திருமழிசைத் திட்டம்!
சென்னைக்கு வெளியே ஒரு Satellite City = துணைக்கோள் நகர்!


இன்று ட்விட்டரில்...
அது என்ன "துணைக்கோள்" நகர்? இன்னுமா இந்தப் "படுத்தல்"?
"உப நகரம்"-ன்னு சொன்னா என்ன? ஊசியாப் போகும் நகரம்?

.......என்று துவங்கிற்று!

கூடவே...தமிழ் ஆர்வலர்கள்-ன்னாலே, "படுத்தல்-ப்பா; தமிழாக்கியே நம்மள படுத்தறா", "கொள்ளை", "இவிங்கள ஜெயில்ல போடணும்" என்ற "ஆசீர்வாதம்":)
=================================
முடிப்பாக...
@elavasam: ஒரு தடவை ரெண்டு தடவை தப்பா மொழிமாற்றம் பண்ணினா நிதானமாப் பேசலாம். "தமிழார்வம் தலைவிரிச்சாடி" எப்பவுமே படுத்தினா என்ன பண்ண? -ன்னு கேட்க...

@losangelesram: பலே! இப்படி ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுவதால் தான் அவ்வப்போது வேப்பிலையைக் கையில் எடுக்க வேண்டி இருக்கு! - என்று முடித்தார்!
=================================

வேப்பிலை தேவையா?
இந்த மொழியாக்கம் பிழையானதா?
....இல்லை.."பிழை" போல் காட்டி, தமிழ் முயற்சிகளுக்கு அடிக்கப்படும் கும்மியா?

செல்வி ஜெயலலிதா அவர்களை முதல்வராகக் கொண்ட...
தமிழக அரசின் மொழியாக்கம் = பிழையான ஆக்கமா-ன்னு பார்ப்போமா?


மு.கு 1: Twitter-இல் #tag/filter போட்டேன்! ஆனால் பதிவில் அவ்வசதி இல்லை! எனவே நீங்க படிச்சித் தான் ஆகணும்! :)
மு.கு 2: தமிழ் இலக்கணம் 'ஷொல்லிக்' குடுக்குறேன் என்ற பேரில், தமிழ் மொழியையே எள்ளல் செய்யும் பதிவர்= @elavasam! இந்தக் கும்மியில், அவரும் 'ஜம்'மென்று கலந்து கொண்டார்! :)

பேசுபொருளுக்கு வருவோம்!
* Satellite City = உப நகரம்-ன்னு சொல்ல வேணாம்! அது வடமொழி!
* துணை நகர், புற நகர், சேய் நகர், குறு நகர் ன்னு விதம்விதமாச் சொல்லலாம் தான்!
* துணைக்கோள் நகர் = அதுவும் பிழையே இல்லை! herez = wiki defn!

Satellite City = English-இல் நெருடாதது,
துணைக்கோள் நகர் = தமிழில் மட்டும் ஏனோ நெருடுது!
'உப நகரம்'-ன்னு ஆக்கினால், அப்போ நெருடலையாம்! :)

வெறுமனே 'ஜல்லி' அடிக்காமல், @elavasam, நல்ல ஒரு வாதத்தை முன் வைத்தார்! அதாச்சும், ஆங்கிலத்தில்...
*Satellite = Outer Space Object-ஐ மட்டும் குறிக்காதாம்!
*Satellite = A place under the domination/influence of another-உம் குறிக்குமாம்!
அதனால் Satellite City = ஆங்கிலத்தில் சரி! ஆனா, தமிழில் தவறாம்!

நல்ல வாதம்! இதோ ஆங்கில அகராதி, பார்த்துக்கோங்க! "Satellite" is relatively a new term, used in English!

விஞ்ஞான யுகத்துக்கு முன்னாடி, Shakespeare/Keats போன்றவர்கள், Satellite-ன்னு எழுதினாங்களா என்ன?
இல்லை....சிற்றரசர்களை = (A place under the domination) Satellite Kings-ன்னு சொன்னாங்களா?

"சார்ந்து இருக்கும்" தன்மையால், Satellite என்ற விஞ்ஞானப் பதம்,
விஞ்ஞானம் கடந்து, மற்றதையும் குறிக்கத் தொடங்கி விட்டது ஆங்கிலத்தில்! ஆனா தமிழில் மட்டும்??

துணைக்கோள்-ன்னு நாம தான் "விஞ்ஞானத்தனமா" ஆக்கிட்டோமாம்!
= தமிழாக்குறேன் பேர்வழி-ன்னு கேணத்தனமான ஆக்கம்!
= இந்தத் தமிழ் ஆர்வலர்கள் எப்பமே இப்படித் தான்!:)
"யோவ், நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறயா?"-ன்னு என் மேல ஒரு "அஸ்திரத்தை" ஏவுனாரு இலவச அண்ணன்! :))


இது ஒரு நல்ல வாய்ப்பு, தமிழில்=காரணப் பெயர்களின் சுவை அறிய.....எனவே மேற்கொண்டு படியுங்கள்!

கோள் = வெறுமனே planetary "சமாச்சாரம்"-ன்னு நினைச்சிடாதீங்க!
"கொள்" என்பதில் இருந்து => "கோள்"!
1. வேண்டு-கோள்
2. கால்-கோள்
3. பொருள்-கோள்
4. கருது-கோள்
-ன்னு பல "கோள்கள்" தமிழில் உண்டு! = அதே போல "துணைக் கோள்"!

* "பொருள் கோள்"ன்னு தமிழில் இருக்கு!
= அதாச்சும்... இடத்துக்கு ஏத்தாப் போல, கொண்டு+கூட்டி, பொருள் கொள்வது
= அப்படிப் பொருள் "கொள்வதால்" => பொருள்-கோள்!

அதே போல...
ஒரு பெரும்-அமைப்பை, துணையாகக் "கொள்ளும்" சிறு-அமைப்பு = துணைக் கோள்! => துணை "கொள்ளுதல்" => காரணப் பெயர்!
பெரியாரைத் துணைக்கோடல்-ன்னு திருக்குறளே இருக்கு = பெரியோர்களைத் துணைக் "கொள்வது"

தமிழில் இடுகுறிப் பெயர்களே கொஞ்சம் தான்! பலவும் காரணப் பெயர்களாகவே இருக்கும்!
* உண்பதால் = உண+வு (ஆனா ஆங்கிலத்திலோ eat=verb; food=noun)
* அவிப்பதால் = அவியல்
* வடுப்பதால் = வடை
* தோய்ப்பதால் = தோசை

* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* அதே போல் "கொள்வதால்" = கோள்!

காரணப் பெயர்களின் தமிழ் அழகு இப்போ தெரிகிறது அல்லவா?
அதற்காகவே இந்த இடுகை! தமிழ் = இனிமை!


Satellite City = துணைக்கோள் நகர்
.....என்று தமிழக அரசு ஆக்கியது, நயமான மொழியாக்கமே!


Fly Over = "மேலே பற"-ன்னு ஆக்கலை! "மேம்பாலம்" என்று தான் ஆக்கம்!
சில சமயங்களில், எங்கோ ஓரிருவர், பிழையாக ஆக்கி இருக்கலாம்! "Literal"-ஆக ஆக்கி இருக்கலாம்! 
ஆனால், இல்லாத ஒன்றை.....ஊதி ஊதிக் கும்மியடித்தே.....

தமிழ் ஆர்வலர்களே இப்படித் தான்...
கேணத்தனமான மொழியாக்கம்...
தமிழாக்கியே நம்மள படுத்தறா...
இவிங்கள ஜெயில்ல போட முடியாதா...


இப்படியெல்லாம் பேசிப்பேசி...
பெயர்ச்சொல் ஆக்கங்கள் = தமிழாக்கங்கள் ஆகாது-ன்னு சொன்ன பிறகும், இவங்கெல்லாம் 'இசுடாலின்' கேஸ்-ப்பா என்று கும்மியடித்து...

மக்களின் மனங்களில், ஒரு வித..."தமிழ் ஒவ்வாமையை உருவாக்குவதில்"
இந்தக் கும்மிக்குப் பெரும்ம்ம்ம்ம் பங்கு உண்டு!

அதை...அனைவரும் உணர்ந்து கொள்ள வேணும்-ன்னு தான் இங்கே பதிவாக்கி வைக்கிறேன்!
= கும்மியில் மயங்கி விடாதீர்கள்! தமிழுக்கு ஆக்கம் = இனிமைக்கு ஆக்கம் = நமக்கு ஆக்கம்!

இப்படிக் கும்மியடித்தவர்கள்....கடேசீல....
Satellite City! நகரம் = தமிழா? -ன்னும் ஒரு "மாயை"-யை உருவாக்கிட்டாங்க! :)

"நகரேஷூ காசி"-ன்னுட்டா...."திவ்யமா" இருக்கும்! 
"நகரேஷூ"கிட்ட இருந்து, தமிழ், தானம் வாங்கிக்குச்சி-ன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்! ஆனா....ஆனா......
எட்டுத் தொகை, சிலப்பதிகாரம்... இதுல எல்லாம்..."நன்னகர், கடிநகர், கூடல்நகர்"-ன்னு.........நகர்=தமிழாவே இருக்கு! நான் என்ன செய்ய? :))

ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுது; வேப்பிலையைக் கையில் எடுப்போம் என்பவர்கள்...
சரிப்பா, இனி ஓவரா ஆடாம,
"இவிங்களுக்கு" உட்பட்டு மட்டும் தமிழை அடக்கி வாசிப்போம்! 
= அப்போது "சர்வாபீஷ்ட ஸித்திரஸ்து! :))
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP