Wednesday, July 04, 2012

Test Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!

#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ!

தினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை!
அதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல! நானும் ஒர் தும்பி!

இன்று 365th day of 365பா!
இந்தத் தமிழ் முயற்சி, "பல்லாண்டு பல்லாண்டு" என வாழ்த்துமாறு, பந்தல் வாசகர்களை மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
இது = தினம் ஒரு பா மட்டுமல்ல!
இது = தினம் ஒரு உணவு.... பல தமிழ் ஆர்வலர்களுக்கு!

ஒவ்வொரு நாளும்.....
* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,
* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,
* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,
* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,
* இன்னும் பல...
மிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த "வாழ்த்துகள்"!:)
* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்!


முக்கியமான நிகழ்வுகளை = புதிரா? புனிதமா?? (கேள்வி-பதில் போட்டி) வைத்துக் கொண்டாடுவது, பந்தலில் வழக்கம்!
முருகனருள்-100, கண்ணன்பாட்டு-100, போல்..... 365பா-365! Enjoy this Tamizh Quiz:)

* எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? போன்ற எளிய கேள்விகளும் உண்டு!:)
* சினிமாப் பாட்டில் வரும் சங்கப் பாடல் கேள்விகளும் உண்டு!
* பத்தே கேள்விகள் - காப்பி அடிப்பது உங்கள் பிறப்புரிமை!:)

அனைத்து பதில்களும் இங்கே "பாத் தேடல்" -இல் தேடினால் எளிதில் கிடைக்கும்:) = http://365paa.wordpress.com/?s=(searchterm, ex: குறுந்தொகை)
அனைத்து கேள்விகளும் 365Paa வில் வந்த தகவல்களே!

முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசு உண்டு!:)
அங்கே தேர்வை முடித்து விட்டு, இங்கே உங்கள் மதிப்பெண்ணைக் கையொப்பம் இட்டுப் போகவும்:)
இதோ வினாத்தாள்! = Test Your PaaQ... Your Time Starts Now:)

18 comments:

  1. Only if you allow anonymous tests, I will take this

    ReplyDelete
    Replies
    1. anonymous?
      அப்பறம் உங்களுக்கு எப்படிப் பரிசு குடுக்குறதாம்?:)

      Delete
  2. நூற்றுக்குநூறு.

    ReplyDelete
  3. 90/100. வாங்கிக் கடைசியிலிருந்து முதலிடத்தைப் பிடித்த வெற்றியாளன் ஆகிவிட்டேன். புற்றில் வாள் அரவம் என்னை ஒரு போடு போட்டுவிட்டது. தெரிவுகளைச் சரியாகப் பார்க்காமல் சொடுக்கிவிட்டேனே, முருகா.

    ReplyDelete
  4. துவங்கி விட்டேன் - பார்க்கிறேன் - வெற்றி பெறுவேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. A Quik Update on the Quiz:
    #Ppl who have tried = 36
    100% = 5
    90% = 8
    80% = 4
    70% = 3
    60% = 3
    Others = 13
    Still some ppl are “In Progress” State; Will wait till Fri Noon, before closeout
    ————————–

    100% வந்த “முதல் மூவருக்கு”ப் பரிசாக எண்ணியிருப்பது இதுவே:
    வென்றவர் பெயரில்,
    சென்னை, வள்ளுவர் குருகுலம்… சிறார்களுக்குத் தமிழ்க்-கதைப் புத்தகங்கள்! (3 sets)

    இது Ok-vaa? Ok illiyaa? Lemme know:)

    ReplyDelete
  6. நான் 40 - எனக்குத் தெரிந்தது - என் துணைவி 90 - அடுத்த டெஸ்டில் 100 வாங்கிடுவோம். நல்வாழ்த்துகள் இரவி - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. பரிசு ஓக்கே கேயாரெஸ் -

    ReplyDelete
  8. நான் அதர்ஸ்லே தான் வந்திருக்கேன் - துணைவி 8 பேர்ல ஒருத்தர் - ம்ம்ம்ம்ம் - அடுத்த டெஸ்ட் பாத்துடுவோம் - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. நண்பர்களுக்கு வணக்கம்!
    இதோ போட்டி முடிவுகள்!:))
    சற்று நேரமாகி விட்டது; மன்னிக்க!

    Total Takers=46
    முதல்பரிசு= Ramachandran BK
    இரண்டாம்= SreeGuruparan
    மூன்றாம்= Rameshforu (@hsemar)
    மூவருமே 100% – இனிய வாழ்த்துக்கள்!:)

    இவர்களைத் தவிர 100% வாங்கியவர்களும் உண்டு!:) ஆனால் இந்த மூவரே உலகை முதலில் சுற்றி வந்தவர்கள்! அதனால் பழம் = இவர்களுக்கே!:))
    ————————

    Other 100% folks
    @dagalti & @tmt_selvam – உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!:)

    ReplyDelete
    Replies
    1. Few Stats…
      #Total Takers = 46
      100% = 5
      90% = 10
      80% = 5
      All others >= 50% except two! = That shows the skill of 365paa Readers:)

      தமிழ் விரும்பும் 365பா வாசகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் + வணக்கம்!
      ——————–

      இதே எம் தோழி பரிசு-ஏலோ ரெம்பாவாய்:)

      Ramachandran BK, SreeGuruparan, Rameshforu சார்பாக,
      சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகப் பள்ளிக்கு = மூன்று புத்தக வரிசைகள் (Amar Chitra Katha) – 10 books each!
      * The Best of Indian Wit and Wisdom – தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திரம்
      * Timeless Ten – காவியச் சுருக்கம்
      * Indian Leaders – அம்பேத்கர், நேரு, பாரதியார், திலகர்…

      வாழ்த்துக்கள்! பரிசு ஓக்கே தானே?:)

      Delete
    2. அனைத்து விடைகளும், விளக்கங்களும் இங்கே = http://goo.gl/dhOi6 (pdf)
      ————–

      சென்னையில், இப்புத்தகங்களைக் குழந்தைகள் இல்ல நூலகத்தில் சேர்த்துவிட,
      இன்னொரு பிரபலமான #365paa வாசகர் = @amas32 அம்மா அவர்கள் முன்வந்துள்ளார்கள்! நன்றிம்மா!:)

      - இப்படியான #365paa கூட்டு முயற்சியில்,
      - தமிழும் அன்பும் என்றும் தழைக்க,
      - காதல் முருகனை வேண்டி விடைபெற்றுக் கொள்கிறேன்!

      நன்றி சொக்கரே, நன்றி வாசகர்காள்!:))

      Delete
  10. திரு. கேஆர்எஸ்,
    இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். ஒரு அருமையான தளத்தை இத்தனை நாள் பார்க்காமல் படிக்காமல் இருந்து விட்டேனே என்ற வருத்தம் மேலோங்குகிறது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. 80 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. தமிழை நான் சரியாகப் படிக்கவில்லை என்று உணர்த்தியது.

    ReplyDelete
  11. இந்தப் பதிவுத் தொடர்களும்,அதில உங்க பட்டாசுகளும் வெடிகளும் எப்படியோ கண்ணுக்குத் தப்பிப் போச்சு..
    அதுக்குப் பிராயச்சித்தமா இன்னும் ஒரு ஆண்டுக்கு'ன்னு நாகா முயற்சியைத் தொடர்ந்துகிட்டிருக்கேன்.
    :))

    ReplyDelete
    Replies
    1. அறிவன்
      நீங்க கேட்ட நேரம்... தொடங்கியாச்சு http://dosa365.wordpress.com தினம் ஒரு சங்கத்தமிழ் :)

      Delete
    2. ஹ்ம்ம் ரொம்ப கடினமா இருக்கு!google la கூட பதில் கிடைக்கலை! அடுத்த பதிவு போடுங்க ப்ளீஸ். பழைய பதிவுகள் எல்லாம் ஒரு 7 தடவை படிச்சாச்சு! அதுல வேண்டும்னா ஒரு டெஸ்ட் எடுங்க

      Delete
  12. ஹ்ம்ம் ரொம்ப கடினமா இருக்கு! google la கூட பதில் கிடைக்கலை! அடுத்த பதிவு போடுங்க ப்ளீஸ். பழைய பதிவுகள் எல்லாம் ஒரு 7 தடவை படிச்சாச்சு! அதுல வேண்டும்னா ஒரு டெஸ்ட் எடுங்க :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP