Wednesday, July 04, 2012

Test Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!

#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ!

தினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை!
அதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல! நானும் ஒர் தும்பி!

இன்று 365th day of 365பா!
இந்தத் தமிழ் முயற்சி, "பல்லாண்டு பல்லாண்டு" என வாழ்த்துமாறு, பந்தல் வாசகர்களை மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
இது = தினம் ஒரு பா மட்டுமல்ல!
இது = தினம் ஒரு உணவு.... பல தமிழ் ஆர்வலர்களுக்கு!

ஒவ்வொரு நாளும்.....
* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,
* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,
* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,
* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,
* இன்னும் பல...
மிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த "வாழ்த்துகள்"!:)
* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்!


முக்கியமான நிகழ்வுகளை = புதிரா? புனிதமா?? (கேள்வி-பதில் போட்டி) வைத்துக் கொண்டாடுவது, பந்தலில் வழக்கம்!
முருகனருள்-100, கண்ணன்பாட்டு-100, போல்..... 365பா-365! Enjoy this Tamizh Quiz:)

* எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? போன்ற எளிய கேள்விகளும் உண்டு!:)
* சினிமாப் பாட்டில் வரும் சங்கப் பாடல் கேள்விகளும் உண்டு!
* பத்தே கேள்விகள் - காப்பி அடிப்பது உங்கள் பிறப்புரிமை!:)

அனைத்து பதில்களும் இங்கே "பாத் தேடல்" -இல் தேடினால் எளிதில் கிடைக்கும்:) = http://365paa.wordpress.com/?s=(searchterm, ex: குறுந்தொகை)
அனைத்து கேள்விகளும் 365Paa வில் வந்த தகவல்களே!

முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசு உண்டு!:)
அங்கே தேர்வை முடித்து விட்டு, இங்கே உங்கள் மதிப்பெண்ணைக் கையொப்பம் இட்டுப் போகவும்:)
இதோ வினாத்தாள்! = Test Your PaaQ... Your Time Starts Now:)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP