tag:blogger.com,1999:blog-18001940.post4243766320651791848..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்ட சிவ "பக்தர்"!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-18001940.post-69517097850104275812011-06-02T05:57:18.572-04:002011-06-02T05:57:18.572-04:00இன்னிக்கி ஒருகா முழுக்க வாசிச்சேனா? வெட்டி பாலாஜிய...இன்னிக்கி ஒருகா முழுக்க வாசிச்சேனா? வெட்டி பாலாஜியின் டகால்ட்டி ஆட்டம் நல்லாவே புரிஞ்சுது! :)<br /><br />//வெட்டிப்பயல் said...<br />நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் தெய்வத்தின் சொத்து தான். நாமும் அவனின் சொத்து தான்//<br /><br />இதை, ஆரம்பித்திலேயே சொல்லி விட்டேன்! //சிவனின் உண்மையான சொத்து நாம் தான் சுவாமி!// சிவன் சொத்து குல நாசம்-ன்னு சொன்ன ஸ்வாமி ஓம்காருக்குச் சொன்ன பதிலில்!<br /><br />இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வெட்டி, வேப்பிலை அடிச்சி ஆடி, அவர் பேயை அவரே எறக்குற வரைக்கும் ஓய மாட்டாரு-ன்னு அப்போ தெரியாமப் போச்சு!:)<br /><br />//எனக்கு ராமானஜுரையும் தெரியாது, அப்பரும் தெரியாது. எனக்கு நாராயணனும், ஈசனும் தான் தெரியும்//<br /><br />ஆமா! வெட்டி பாலாஜி...காலையில் நாராயணன் வீட்டுல ஒரு வாய் காபி, சாயுங்காலம் ஈசன் வீட்டுல ஒரு வாய் காபி சாப்பிடுவது தான் வழக்கம்! அவருக்கு அவிங்களைத் தான் நல்லாத் தெரியும்:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58580607902832742382010-08-02T11:54:25.513-04:002010-08-02T11:54:25.513-04:00KRS:
I sent you an email to your gmail address on ...KRS:<br />I sent you an email to your gmail address on July 27. Will you read it and respond? It was about Thamizh phonetics.Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17114747430045799722010-07-30T10:45:23.519-04:002010-07-30T10:45:23.519-04:00//தெய்வ சொத்தை உண்டார்கள் என்பதற்காக தண்டனைக் கொடு...//தெய்வ சொத்தை உண்டார்கள் என்பதற்காக தண்டனைக் கொடுத்தான் என்பதாக புரிந்து கொள்ளப்படவேண்டும் //<br /><br />இந்த புரிதல் தான் தவறு என்று சொல்கிறேன். தெய்வத்திற்கு ஏது சொத்து? இந்த உலகில் தெய்வத்திற்கு சொந்தமில்லாத ஒரு பொருளைக் காட்ட முடியுமா? <br /><br />நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் தெய்வத்தின் சொத்து தான். நாமும் அவனின் சொத்து தான். உணர்ந்தாலும் சரி. உணரா விட்டாலும் சரி.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24085115275923307932010-07-30T10:41:15.390-04:002010-07-30T10:41:15.390-04:00கோவி,
மனுநீதி சோழன் தவறு செய்த தன் மகனுக்கு, ம...கோவி,<br /> மனுநீதி சோழன் தவறு செய்த தன் மகனுக்கு, மன்னனாக தண்டனை அளித்தான். அனைத்து உயிருக்கும் ஒரே மதிப்பு என்பதாக அந்த கதையில் இருந்து நமக்கு பாடம் கிடைக்கிறது.<br /> பிரகலாதன் கதையை விளக்கினால் இங்கே சைவ, வைணவ பிரச்சனை தான் வரும். பக்த சாம்ராஜ்யத்தின் அரசனாக அவனை நாராயணனே வைக்கிறான் என்றால் அதன் சாரம் என்னவாக இருக்கும் என்பதை படித்து அவரவர் புரிந்து கொள்ளட்டும். பக்த பிரகலாதன் படம் பார்த்து அல்ல. <br /> பெரிய புராணத்தை வைத்து கோட்புலியின் செயல்களைப் பார்த்தால், உயிர் பிழைத்த குழந்தையையும் தூக்கிப் போட்டு வாளால் வெட்டினான் என்பது எனக்கு கம்சனையே நினைவூட்டுகிறது. தவறு செய்யாதவருக்கு தண்டனை என்பது என்னால் ஏற்க முடியவில்லை. அவ்வளவே! <br /> பெரிய புராணத்திலிருந்து ஒரு படி மேலே சென்று திருத்தொண்டர் புராணத்தைப் பார்த்தால் அதில் அப்படி எல்லாம் சொல்லப்பட வில்லை. அதில் சிவன் சொத்தை கொள்ளை அடித்த தன் சொந்தங்களைக் கொன்றான் என்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். அதைப் பெருமையாக விளக்கவில்லை. ஆனால் பெரிய புராணம் உயிர் பிழைத்த குழந்தையைக் கூட விடாமல் தூக்கி போட்டு இரு துண்டுகளாக வெட்டினான் என்று பெருமைப் பேசுகிறது. இதைத் தான் மத தீவிரவாதம் என்கிறேன். சிவ பக்தியால், ஒரு கணம் நிதானம் இழந்து தவறிவிட்டான் என்று சொன்னால் எனக்கு அதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவல்லவோ பக்தி என்றால் நான் இதிலிருந்து முரண்படுகிறேன்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32556653852383631492010-07-29T21:19:19.948-04:002010-07-29T21:19:19.948-04:00பாலாஜி சிவனடியார் கதைகளை ஆதரிக்கவில்லை. ஆனால் இதே ...பாலாஜி சிவனடியார் கதைகளை ஆதரிக்கவில்லை. ஆனால் இதே தொனியில் காலம் காலமாக கதைகள் சொல்லப்பட்டுவருகிறது, மாடு மணி அடிச்சதாகச் சொல்லி மகனை தேர்காலில் கொன்றான் சோழன் என்று சொல்லுவார்கள், ஒரு மாட்டுக்காக மகனை கொல்வது கூட பகுத்தறிவினால் ஏற்க முடியாது, ஆனால் மனித உயிரைவிட மற்ற உயிர்களுக்கும் மதிப்பு இருக்கிறது என்பதாகத்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.<br /><br />நமக்கு தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு சொல்லுவாங்க, அதையே பிரகலாதன் சொல் வேண்டும் என்பதாக நாராயணன் எடுத்துரைக்கவில்லை, தனது நாமம் சொல்வதற்கு தடைவிதித்தான் என்பதற்காகத்தான் இரணியன் கொல்லப்பட்டான் என்று புரிந்து கொண்டாலும் கூட நாராயண நம கூட நாரசமாகத்தானே இருக்கும்.<br /><br />அரசு சொத்துக்கு ஊருவிளைவிப்பது தன் மக்களே என்றாலும் தண்டனை கொடுப்பவன் நடுநிலையாளன் என்று ஒப்புக் கொள்வோம், அப்படியாகத்தான் கோட் புலி கதை கூட தெய்வ சொத்தை உண்டார்கள் என்பதற்காக தண்டனைக் கொடுத்தான் என்பதாக புரிந்து கொள்ளப்படவேண்டும் மற்றபடி அதையே பிறருக்குமான வழிமுறையாகக் காட்டப்படுவதாக நினைத்து விமர்சிப்பது பொருத்தமான விவாதமாகத் தெரியவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90205055782410536842010-07-29T11:02:48.844-04:002010-07-29T11:02:48.844-04:00அறிஞர் அண்ணா அவர்கள், முன்பு பெரியபுராணத்தைக் கொளு...அறிஞர் அண்ணா அவர்கள், முன்பு பெரியபுராணத்தைக் கொளுத்த வேண்டும் என்று துவங்கி, "தீ பரவட்டும்" என்ற குறு நூலை எழுதினார்! அதில் கூட அல்குல், முலை வர்ணனை, ஆபாசச் சொற்கள், புனைவு என்பதைத் தான் காட்டினாரே அன்றி, "மனிதம்" என்ற நோக்கில் தொட்டுச் செல்லவில்லை!<br /><br />ஆனால் இந்த விவாதத்தில், "மனிதம்" என்பதை மட்டும் கருப்பொருளாக்கிய உங்களுக்கு என் வந்தனங்கள் பாலாஜி!<br /><br />மேன்மைகொள் சைவநெறி உலகெலாம் ஓங்க வேண்டும் என்று சொல்லுவார்கள்!<br />ஆனால், "நெறி" உலகெலாம் ஓங்கினாலே போதும்! <br /><br />அதற்கு நாயன்மார்களின் வரலாறு, நல்லபடியாக, வரும் தலைமுறைகளைச் சென்றடைவதில் பெரும்பங்கு உள்ளது!<br /><br /><b>அடியார்கள் வாழ</b>, அரங்க நகர் வாழ<br />சடகோபன் தண் <b>தமிழ்நூல் வாழ</b> - கடல்சூழ்ந்த<br /><b>மன்னுலகம் வாழ</b>, மணவாள மாமுனியே<br />இன்னுமொரு நூற்றாண்டு இரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70970394615797053012010-07-29T10:50:11.169-04:002010-07-29T10:50:11.169-04:00என்னளவில் முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறேன்...Ha...என்னளவில் முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறேன்...Have to go now for an appointment!<br /><br />மீதியை, வலையுலகில் உள்ள சைவப் பெரியவர்கள் வந்து மேல் விளக்கம் தரலாம், பொதுக் கடமையாக! மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்!<br /><br />இது என்னளவில் மட்டுமே! மூல நூலில் இருந்து! புனைவுகளில் இருந்து அல்ல! <br />(சேக்கிழாரின் பெரியபுராணத்தில் இவ்வளவு புனைவுகள் தேவையே இல்லை என்று முன்பே சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டும் உள்ளேன்! திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்து மண்டையை உடைத்ததை உள்ளவாறு காட்டுகின்றார்களே! ஆனால் நந்தனாரைப் பூர்ண கும்பத்துடன் வரவேற்று தீக்குளிக்கச் சொன்னார்கள் என்று எழுதும் போது புனைவு அப்பட்டமாகத் தெரிந்து, நல்ல கருத்தும் அதனால் அடிபட்டு போகிறது, வரும் தலைமுறைகளும் ஏற்க மறுக்கும் என்று சொல்லி...அப்போது அதுவும் வைணவக் கும்மியாகவே பார்க்கப்பட்டது! :) இருப்பினும் அடியார்கள் வாழ...அவர்தம் திருக்கதைகள் நம்மை வாழ்விக்க...இதோ...என்னளவில்...<br /><br />* "கொன்று குவித்த பெருமைக்காக", கோட்புலியை நாயன்மார் என்று கொண்டாடவில்லை! <br />* அவர் முன்பே சிவத் தொண்டிலும், அடியார் தொண்டிலும் ஈடுபட்டு, பலரின் பசிப்பிணி ஆற்றியவர்! அதனால் தான் அவர் நாயன்மார்!<br /><br />இங்கே நான் சொல்வதெல்லாம்...<br /><br />1. கோட்புலி, அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தவறிழைத்த சுற்றத்தைக் கொன்றது தவறு! அவ்வளவு தொண்டில் ஈடுபட்டுவர், கடைசியில் இப்படிச் செய்திருக்க வேண்டாம் தான்! He did it in a fit of rage! Not a worthy act!<br /><br />2. ஆனால், அதற்காக, அவரை, "இவன் எல்லாம் நாயன்மாரா? இது என்ற அஃறிணை, இவன் ஒரு டெரரிஸ்ட்" என்று சொல்லத் தேவையில்லை என்பதே...நான் உங்களுக்கு முன் வைத்தேன்!<br /><br />கடைசியில், fit of rage-இல் செய்தது குற்றம் குற்றமே!<br />ஆனால் அதற்காக அவர் முன்பு செய்த தொண்டெல்லாம் பாழாகி விடாது! அவர் நாயன்மார் என்பதில் இருந்து de-promote ஆகி விடவும் மாட்டார் என்பதே காட்ட விழைவது!<br /><br />இந்தக் கொலைகளைக் கொண்டாடி, அவர் நாயன்மார் ஆகிடவில்லை!<br />பசிப்பிணி ஆற்றிய தொண்டில் அவர் என்றும் நாயன்மாரே!<br /><br />To make it very simple...<br />1. நாயன்மார் கடைசியில் செய்தது தவறு!<br />2. தவறு செய்ததாலேயே அவர் அடியவர் என்னும் முந்தைய தகுதியையும் இழந்திடவில்லை!<br /><br />உங்கள் நோக்கம் என்ன?<br /><br />1. இவர் செய்தது தவறு என்று காட்டுவதா?<br />2. இவர் அடியவர் அல்ல! இவரை நாயன்மார் வரிசையில் இருந்து தூக்க வேண்டும் என்பதா?<br /><br />If it is 1st option, even before you raised, I myself told, his last action (fit of rage) wasn't right!<br /><br />If it is 2nd option, then instead of just speaking like a vaai chol veeran, you have to act!<br /><br />Do the needful, or atleast make some positive efforts, so that he is dethroned from naayanmar and his story will not go to future generations!<br />1. Write to publications like kizhakku, to stop publishing such stories!<br />2. Discuss with saivap perumakkaL and adheenams, and evoke their sensitivity, so that future generations will not be misguided by such "bad examples"!<br /><br />We saw u in words, so far!<br />Can we see u in action now?<br />Walk the talk!<br />சிவ சிவ! <br />நற்றுணையாகப் பற்றினேன் அடியேன் நாரணா என்னும் நாமம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10683872411992892912010-07-29T10:28:30.326-04:002010-07-29T10:28:30.326-04:00//நாங்கள் எல்லாம் பக்தியாளர்கள், அவர்கள் பிள்ளைகளை...//நாங்கள் எல்லாம் பக்தியாளர்கள், அவர்கள் பிள்ளைகளைப் பற்றி பேசினால் நாங்கள் உருகுவோம். மற்ற உயிர்களுக்கு எங்களிடம் மரியாதை இல்லை என்பதைப் போல் தோன்றுகிறது...//<br /><br />ஒன்றை ஏற்கவில்லை என்று சொன்ன பின்பும், பேசிற்றே பேசிப்பேசி, பத்துமுறை அடித்தால் ஒரு முறையாவது நிலைத்து விடும் என்ற சைவ-வைணவக் கும்மி...பந்தலில் சிலர் முன்பு செய்தது தான்! இதைப் போல் வார்த்தை இடுக்குகளில் ஒளிந்து கொண்டு, வரிக்கு வரி அரசியல் செய்வதற்கு மிகுந்த திறமை வேண்டும்! வாழ்த்துக்கள்!<br /><br />சாம்பிளுக்கு...உங்கள் வரியில் இருந்து கூட ஆரம்பிக்கலாம்!<br />//அடியவர்களை தவறாக சொல்லியதற்கே உருகும் உங்கள் நெஞ்சம், ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை எப்படி ஏற்கிறது?//<br /><br />குழந்தைகளையும், பெண்களையும்....என்று மட்டும் விட்டு விட்டீர்களே! ஏன் மற்ற உயிர்கள், உயிர்கள் இல்லையா? உயிருக்கு ஆண் ஏது? பெண் ஏது? உடலுக்கு மட்டும் தானே அதெல்லாம்? எதற்கு குழந்தைகளையும், பெண்களையும்...குழந்தைகளையும், பெண்களையும்...என்பதை மட்டும் வரிக்கு வரி சொல்கிறீர்கள்? அப்படியென்றால் மற்ற உயிர்கள் என்ன Cheapஆ? How dare u have an order of priority for lives?<br /><br />இப்படி நானும் கேட்டுக் கொண்டே போகலாம்! Just Hypothetical! இது தான் நீங்கள் செய்து கொண்டிருப்பது!<br /><br />உங்கள் நோக்கம் என்ன? <br />= தேடலா? சாடலா??<br /><br />தேடல் என்று தான் இது வரை உங்களை நம்புகிறேன்! அதனால் தான் உடல் வலியிலும் இத்தனையும் எடுத்துக்காட்டப் புகுந்தேன்!<br /><br />நான் இங்கு நாயன்மாரைப் பற்றிச் சொன்னது பலவும், சைவ நூற்களில் இருக்காது! <br /><br />அவர் அழுது மாண்டு போனார் என்பதைக் கூட பின்னாளைய புனைவுகளில் சொல்லாமல் விடுத்து, குழந்தையைக் கூடக் கொன்றார் என்று சிலர் சிலாகித்தும் இருப்பார்கள்! சிவனை விலைபேசி விட்டுச் சைவத்தைக் காப்பாற்றத் துடிப்பது போல்...கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கி்னாற் போல் :((<br /><br />ஆனால் மூல நூலைப் பார்த்தால், அடியவர் யார் என்று ஒருவாறு விளங்க வரும்!<br /><br />"அடியார்கள் வாழ" என்று முதலில் சொல்லி விட்டுத் தான்...<br />"அரங்கநகர் வாழ", <br />"சடகோபன் தன் தமிழ்நூல் வாழ"<br />என்று சொல்லி...<br />அடியவருக்குப் பின்னரே, அழகு தமிழை நிறுத்தி, <br />அதன் பின்னர் தான் ஆண்டவனையே நிறுத்தும் மரபை மனத்தால் போற்றுபவன் நான்! அதனால் தான் அடியவர் என்னும் விஷயத்தில் இத்தனை மெனக்கெடுகிறேன் - அது சைவமோ, வைணவமோ...<br /><br />அடியவர் திருக்கதைகள், புனைவுகள் அதிகம் இன்றி, இயல்பாக, உள்ளது உள்ளபடியே...<br />இன்றும் நாளையும் உள்ள தலைமுறைகளுக்கும் இயன்றவாறு சேர்ப்பிக்க வேண்டும் என்பதே ஆவல்! பந்தலில் இதுவரை வந்த நாயன்மார் பதிவுகள் அந்த அடிப்படையில் தான்! <br /><br />* காரைக்கால் அம்மையார்-பெண்கள் ஆன்மீக/இலக்கியத் துறைகளில் வெற்றி (Icon Poetry)<br />* நீலநக்க நாயனார் மனைவி-சிவலிங்கம் மேல் ஊதி, எச்சில் பட்டாலும், சாஸ்திரம் வேறு, சிவ-அன்பு வேறு...<br />இப்படியெல்லாமான Focus வழக்கமான புத்தகங்களில் இருக்காது! சைவ மடப் பதிப்பகங்களில் இருக்காது! ஆனால் இந்தப் பதிவுகளில் இருக்கும்!<br /><br />மற்றபடி, எனக்கு அடியவர் உயிர் மட்டுமே பெரிது, மற்ற உயிர்கள் எக்கேடு போனால் என்ன என்ற மனப்பான்மை இல்லை, ஜஸ்டிஸ் வெட்டிப்பயல் அவர்களே!<br /><br />பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...<br /><br />அது திருவாரூர் சிவ ஸ்தலத்தில் பிறந்தாலும் சரி...<br />Illegitimate Child என்று முத்திரை குத்தினாலும், ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் குழந்தை ஆனாலும் சரி...<br /><br />முருகா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47854995293841361192010-07-29T09:56:32.143-04:002010-07-29T09:56:32.143-04:00//பெற்றவர்களின் தவறுக்கு அவர்கள் குலத்தையே அழிப்பத...//பெற்றவர்களின் தவறுக்கு அவர்கள் குலத்தையே அழிப்பது எவ்வளவு கொடூரம் என்று இன்னும் புரியவில்லையா?//<br /><br />இதற்கும் முன்பே சொல்லியாகி விட்டது! கோட்புலி தவறிழைத்த சுற்றத்தாரைக் கொன்று, பின்னர் தானும் மாண்டார் (சிவகதி அடைந்தார்) என்பது மட்டுமே மூலநூல் சொல்லுவது - திருத்தொண்டத் தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி! <br /><br />குழந்தையைக் கூடப் பாராமல் வாளால் வெட்டினார் என்பதெல்லாம் பின்னாளைய பெரிய புராணப் புனைவு! சேக்கிழார் முதலானவர்கள் எழுதியது! இதற்கான முன்னிகை திருத்தொண்டத் தொகையில் இல்லவே இல்லை! இதை ஸ்ரீதர் நாராயணனுக்கு அளித்த பதிலில் முன்னரே சொல்லி விட்டேன்! அதையும் வாசித்துப் பாருங்கள்!<br /><br />//அடியைப் பற்றியவர்கள் எவராயினும் அடியவர்கள் என்றால் ஒசாமா அடியவரா?//<br /><br />இல்லை! <br /><br />//பாபர் மசூதியை இடித்தவர்கள் அடியவர்களா? அவர்களை இறைவன் ஏற்பானா?//<br /><br />இல்லை!<br /><br />அடியைப் "பற்றினவர்கள்" தான் அடியவர்கள்! <br />"பற்றினவர்கள்" என்பதற்கும் "தொட்டுக் கொண்டவர்கள்" என்பதற்கும் வித்தியாசம் உள்ளது! <br /><br />"பற்றுதல்", "பற்றுக" பற்றற்றான் பற்றினை = அடியைப் "பற்றுதல்" - அவ்வாறு வருவது!<br />பற்றினவர்கள் யார்? = விடுவன எல்லாம் விட்டு, தன்னையும் விட்டவர்கள்! அவன் ஒருவனையே "பற்றிக்" கொண்டவர்கள்! தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளாது, அதையும் அவனுக்கே விட்டவர்கள்!<br /><br />மேற்கூறிய "பற்றுதல்"-இல் இருந்து, ஓசாமா, பாபர் மசூதி இடிப்பாளர்கள், அடியைப் பற்றினவர்களா? என்பதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும்!<br /><br />கோட்புலி "பற்றினார்" என்பதால் தான், இந்தக் கோரச் சம்பவத்துக்குப் பிறகு அவர் வாழவே இல்லை! <br />இத்தனை நாள் அன்னதானத் தொண்டும், இப்படி ஒரு கோரத்தில் முடிந்து விட்டதே என்று மாண்டும் போனார்! கணக்கு போட்டு, கணக்கு போட்டு, அடுத்த Target என்ன என்று மதத்தின் பேரால் அரசியல் செய்யவில்லை! தன் செயலுக்கு ஒரு அமைப்பு உருவாக்கி விட்டும் செல்லவில்லை! கண நேரத்தில் "பற்றுதலை" மறந்தவர், அந்தப் பற்றை மீண்டும் எண்ணி, மாண்டே போனார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78785661876903725702010-07-29T09:48:30.781-04:002010-07-29T09:48:30.781-04:00உங்கள் முரண்பாடுகள் இதோ:
//அடியவர்களை தவறாக சொல்ல...உங்கள் முரண்பாடுகள் இதோ:<br /><br />//அடியவர்களை தவறாக சொல்லியதற்கே உருகும் உங்கள் நெஞ்சம், ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை எப்படி ஏற்கிறது?//<br /><br />கோட்புலி செய்த கடைசிக் கட்டத் தண்டனைக் கொலைகள் ஏற்புடைத்து அல்ல என்று முன்னரே சொல்லி விட்டேன்! அதற்குப் பதிலாக அன்னதானக் கூடத்தில் அவர்களைக் கூலி இல்லாமல் வேலை செய்ய வைத்து, பசிக் கொடுமையை உணர்த்தி இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னதே நான் தான்!<br /><br />ஏற்கவில்லை என்ற சொன்ன பின்பும், "உங்கள் நெஞ்சம் எப்படி ஏற்கிறது, எப்படி ஏற்கிறது" என்று திரும்பத் திரும்பக் கேட்டு, அதே அரசியல் தான் செய்கிறீர்கள்!<br /><br />//அடியவர்களின் கற்பு முக்கியம் ஆனால் மற்றவர்களின் உயிருக்கு மரியாதை இல்லை. அப்படி தானே?//<br /><br /><b>கற்பை விடவும் உயிர் முக்கியம்...அது அடியவரோ, கொடியவரோ! <br />தற்கொலைக்கு முயன்று, பிழைத்து, இன்றும் வாழாமல் வாழ்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்! தெரிய வரும்!</b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24617103368543027152010-07-29T03:18:51.454-04:002010-07-29T03:18:51.454-04:00கோட்புலி நாயனார் சொந்தம் பந்தம் என்று பார்க்காமல் ...கோட்புலி நாயனார் சொந்தம் பந்தம் என்று பார்க்காமல் சிவபெருமான் மேல் எவ்வளவு அன்பு <br />வைத்துள்ளார்.<br /><br />அன்பே சிவம்!<br /><br />kkAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46516687878150219212010-07-28T21:42:57.315-04:002010-07-28T21:42:57.315-04:00////or you should bring some Saamiyar to your plac...////or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//<br /><br />இந்த வாசகம் - தேடலா? சாடலா?<br />இதே, இதை இன்னொருவர் எழுப்பி இருந்தால், மன்னிப்பு கேட்கும் வரை ஓய மாட்டார்கள்! //<br /><br />அடியவர்களை தவறாக சொல்லியதற்கே உருகும் உங்கள் நெஞ்சம், ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை எப்படி ஏற்கிறது?<br /><br />அடியவர்களின் கற்பு முக்கியம் ஆனால் மற்றவர்களின் உயிருக்கு மரியாதை இல்லை. அப்படி தானே?<br /><br />இது வேண்டுமென்றே நான் எழுப்பிய கேள்வி தான். இப்பொழுது எனக்கு கண்டனம் சொல்லி தலை குனிகிறேன் என்று சொல்லும் உங்கள் உள்ளம் ஏன் அந்த குழந்தைகளுக்காக உருகவில்லை? இதே அடியவர்களின் பிள்ளைகள் என்றால் மட்டும் தான் உருகுமா?<br /><br />பெற்றவர்களின் தவறுக்கு அவர்கள் குலத்தையே அழிப்பது எவ்வளவு கொடூரம் என்று இன்னும் புரியவில்லையா?<br /><br />கற்பை விட உயிர் எந்த விதத்தில் குறைந்தது? நான் தரம் தாழ்ந்ததாக சொல்லும் உங்கள் நெஞ்சம், கோட்புலி தரம் தாழ்ந்ததாக ஏன் சொல்லவில்லை?<br /><br />அடியைப் பற்றியவர்கள் எவராயினும் அடியவர்கள் என்றால் ஒசாமா அடியவரா? பாபர் மசூதியை இடித்தவர்கள் அடியவர்களா? அவர்களை இறைவன் ஏற்பானா?<br /><br />நாங்கள் எல்லாம் பக்தியாளர்கள், எங்கள் கூட்டத்தினரைப் பற்றி பேசினால் எங்கள் உள்ளம் உருகும், அவர்கள் பிள்ளைகளைப் பற்றி பேசினால் நாங்கள் உருகுவோம். மற்ற உயிர்களுக்கு எங்களிடம் மரியாதை இல்லை என்பதைப் போல் தோன்றுகிறது...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55573210497187713042010-07-28T19:25:48.557-04:002010-07-28T19:25:48.557-04:00நன்றி முகில், இது வரை களம் காத்தமைக்கு! :)
வெட்டி...நன்றி முகில், இது வரை களம் காத்தமைக்கு! :)<br /><br />வெட்டி கேட்பதில் பெரிய தவறொன்றும் இல்லை! இது யாருக்கும் தோனக் கூடிய ஒன்றே! <br />பந்தலில் எந்தக் கேள்விக்கும் தடை சொல்லியது கிடையாது - அது ஆத்திகமோ/நாத்திகமோ! கோவி.கண்ணனோ/மெளலி அண்ணாவோ!<br /><br />ஆனால்...<br />தடை சொல்லாமல் விடுவது என்பது ஒன்று!<br />வந்த கேள்வியைக் கண்டுகொள்ளாமல் போவது ஒன்று - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையோடு போய் விடலாம்! இது பதிவுலகில் பலரும் செய்வது தான்!<br /><br />ஆனால் அது ஆன்ம ரீதியான ஆன்மீகத்துக்கு அழகல்ல! இயன்ற வரை கூட்டாகப் பதில் தேடுவது தான் "தேடல்"! கூடி இருந்து குளிர்ந்தேலோ! <br /><br />கூடக்கூட விவாதிக்க வேண்டும், வாதத்தில் வெற்றி போன்ற நோக்கம் அல்ல! நல்ல ஆன்மீகத்தில் "தேடல்" என்பது தடைபடக் கூடாது என்பது தான் நோக்கம்! அதனால் தான் முன்பெல்லாம் பல கேள்விகளுக்கும் இதே approachஐ பின்பற்றி வந்தேன்! <br /><br />ஆனால் இப்போது அது தவறான அணுகுமுறையோ என்ற சந்தேகம் மனசுக்கு தோனுது!<br />ஏனென்றால்...கேள்விகளில் முதலில் நியாயம் இருந்தாலும், போகப்போக...அதில் தேடல் குறைந்து, சாடல் எழுகிறது! <br />//or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//<br /><br />இந்த வாசகம் - தேடலா? சாடலா?<br />இதே, இதை இன்னொருவர் எழுப்பி இருந்தால், மன்னிப்பு கேட்கும் வரை ஓய மாட்டார்கள்! <br /><br />* இந்த வாசகம் - தேடலா? சாடலா?<br />அது சைவமோ, வைணவமோ, கிறிஸ்துவமோ, இஸ்லாமோ, பகுத்தறிவோ...பந்தலில் அனைத்துமே பவனி வந்துள்ளன! "தேடல்" என்பதன் அடிப்படையில்! "அடியார்கள்" என்ற அடிப்படையில்! <br /><b>"அடியவர்கள்" = எவராயினும், அடியைப் பற்றிக் கொண்டவர்கள்!</b> அதனால் இந்த வாசகம் கண்டு கலங்கியது என்னவோ உண்மை!<br /><br />அதனால் தான், அதை அறியும் வரை, நேற்றில் இருந்து இந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்தேன்! தேடலா? சாடலா? என்பதை அறிந்த பின், தேடலுக்கு மீண்டும் வருகிறேன்! <br /><br />அது வரை, இன்ன சில பெரியவர்கள் வந்து விளக்குமாறு மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டுள்ளேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49493797886308537432010-07-28T10:10:51.519-04:002010-07-28T10:10:51.519-04:00வெட்டிப்பயல் said...
மீண்டும்...
//வெட்டிப்பயல் s...வெட்டிப்பயல் said...<br />மீண்டும்...<br /><br />//வெட்டிப்பயல் said... <br />This is a lesson - how a bhakthar should be, after he realized how he should not be!<br /><br />//<br />how a bhakthar should be?<br /><br />He felt bad (Cried) after killing Children and Women? what is the lesson in that? That we should cry after Murdering Kids and Women...<br /><br />This is my question... What is the lesson from the life of Kotpuli?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76239841487136181802010-07-28T09:58:21.898-04:002010-07-28T09:58:21.898-04:00இறைபக்தி என்பது இதுதான்.. இது இத்தனை அடி உயரம், இத...இறைபக்தி என்பது இதுதான்.. இது இத்தனை அடி உயரம், இத்தனை அடி நீளம், இத்தனை அடி அகலம் கொண்டது என்று எவராலும் சொல்ல இயலாது. உங்களால் இறைவனை, எந்த சுயநலமில்லாத, புறகாரணிகளால் பாதிக்கப்படாமல், முழுமையாக இறைவனை உணர முடிந்தால்... இறைபக்தி உங்களுக்குத் தானாகவே வந்துவிடும்.<br /><br />சுவரில்லாமல் சித்திரம் வரையமுடியாது... இறைவனை உணராமல், இறைபக்தியை அறிந்துணர இயலாது.<br /><br />அது சரி, இறைவன் என்பவன் யார்??<br /><br />இதுக்கும் விளக்கம் நம்ம திருவள்ளுவர் ஐயாவே சொல்லியிருக்கார். அவரை விடத் தெளிவா விளக்கமா சொல்ல எனக்கு ஞானம் இல்லை.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50062452503696295212010-07-28T09:57:26.254-04:002010-07-28T09:57:26.254-04:00//சுற்றி வளைத்து ஏன் பேச்சை எங்கெங்கோ கொண்டு போகனு...//சுற்றி வளைத்து ஏன் பேச்சை எங்கெங்கோ கொண்டு போகனும். உங்களுக்கு என்ன, உயிர்க்கொலை செய்த ஒருவரை அடியவராக எண்ணி வரலாற்றில் வைத்தால் சந்ததிகளும் அதைப் பின்பற்றிக் கெட்டுப் போவார்கள் என்பது தானே!<br /><br />அவர் செய்தது தவறுதான். உறவினர்களைக் கொன்றிருக்கக் கூடாதுதான். ஏதோ உணர்ச்சிவசப்பட்டுட்டார். <br /><br />இன்று எத்தனையோ அநியாயங்கள் கோயில்களில் நடக்கின்றன. இறைவன் பெயரால் எவ்வளவோ மோசடிகள். இவை எல்லாம் எந்த இலக்கியங்களிலும் இல்லையே. பின்னர் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது. இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்துக் கெட்டுப் போவதை விட, இலக்கியங்களைப் படித்துத்தான் கெட்டுப் போவார்கள் என்பது சரியானதாக இல்லையே.<br /><br />படித்தவர்களோ, படிக்காதவர்களோ, வரலாறு அறிந்தவர்களோ, அறியாதவர்களோ எவரும் படித்ததை அப்படியே பின்பற்றுவதில்லை. அந்த சூழலில் அவர்கள் நடந்துகொள்வது அவர்களது EQ வைப் பொறுத்தது.//<br /><br />நாளைக்கு நித்யானந்தாவை அடியவர்கள் லிஸ்டில் சேர்ப்பீர்களா? ஏதோ ஒரு தவறு தானே செய்திருக்கார். <br /><br />கோவிலில் தான் பல பாவங்கள் நடக்குது. நித்யானந்தா யாரையாவது கொன்றாரா, கொள்ளை அடித்தாரா?<br /><br />அவரையும் அடியவர்கள் லிஸ்டில் சேர்த்து கோவிலில் வைத்து பூஜிக்கலாமா?<br /><br />அதான் எல்லாருக்கும் EQ இருக்கிறதே.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69056425322131601602010-07-28T09:53:42.845-04:002010-07-28T09:53:42.845-04:00//காதல் என்றால், ஆணும் பெண்ணும் இருவருக்குமான உணர்...//காதல் என்றால், ஆணும் பெண்ணும் இருவருக்குமான உணர்வுதான் காதல் என்பது தவறான புரிதல். தன் தந்தை, கணவர், மற்றும் பிள்ளைகள் பலரையும் போருக்கனுப்பி, இறுதியாகத் தானே போருக்குச் சென்ற தமிழ்ப்பெண்ணுக்கு வீர உணர்வினை விட காதல் உணர்வு அதிகமிருந்ததால் தான் அவளால் செல்ல முடிந்தது. அவள் நாட்டின் மேல் அவளுக்கிருந்த காதல்.<br />//<br /><br />நானும் என் அண்ணனும் சின்ன வயசுல இருந்து காதலிச்சிட்டு இருக்கோம்னு சொன்னா அதுக்கு அர்த்தம் வேற. எங்க அண்ணனுக்கு சின்ன வயசுல இருந்தே என் மேல பாசம்னு சொன்னா அதுக்கு அர்த்தம் வேற.<br /><br />ஆங்கிலத்துல தான் Loveனு ஒரு வார்த்தைல அடைச்சிட்டான். தமிழ்ல காதல், அன்பு, பாசம், பற்று அப்படினு நிறைய வார்த்தைகள் இருக்கு.<br /><br />காதலுக்காக அப்படி போருக்கு போன பெண் யாரையாவது காதலுக்கு எடுத்துக்காட்டா சொல்லுங்க பார்ப்போம்.<br /><br />லைலா மஜ்னு, சலீம் அனார்க்கலி, தேவதாஸ் பார்வதி இப்படி காவியக் காதல் யாராவது சொல்லுங்க. <br /><br />அந்த பெண்களை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள். காதலுக்கு அல்ல :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88203762893547514322010-07-28T09:47:55.596-04:002010-07-28T09:47:55.596-04:00தனக்கு இல்லாவிட்டாலும், கோயில் தானதர்மங்களுக்கென்ற...தனக்கு இல்லாவிட்டாலும், கோயில் தானதர்மங்களுக்கென்று கொடுத்தது அந்தக்காலம். <br /><br />தனக்குத் தேவையானவற்றிற்கும் மேல் பணம் சம்மாதிக்க, குறுகிய வழியில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கத்தான் கோயிலும் கடவுளும் என்பது இந்தக்காலம்.<br /><br />அக்கால அடியவர்கள் எதையும் பேர், புகழ், ஆடம்பரம், சுகபோக வாழ்வு ஆகியவற்றிற்காக எதையுமே செய்ததில்லை. ஆனால், இன்றைய நாள்களில் இறை அடியவர்கள் என்ற போர்வையே அத்தகைய ஒரு வாழ்க்கைக்காகத்தான். இது ஆன்மீகம்.<br /><br />தான் அரசாட்சியை விரும்பாவிட்டாலும், தன் சந்ததிகளால் கூட வாரிசுரிமை போர் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் துறவு பூண்டவர் - இளங்கோவடிகள். இன்றைய சூழல்...?? இது அரசியல். <br /><br />சாவா மருந்தாயினும் விருந்தினர் உண்டது போக மிச்சமுண்ட தமிழர்கள், இன்று...?? இது இல்லறம்.<br /><br />எந்த நிலையிலயும் அக்கால வாழ்வைப் பின்பற்றாத நாம், அக்கால வாழ்க்கை முறையை முழுமையாக அறிந்துணராத நாம், அக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருவது எப்படி சரியானதாகும்??Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20444525485906886582010-07-28T09:39:40.291-04:002010-07-28T09:39:40.291-04:00சுற்றி வளைத்து ஏன் பேச்சை எங்கெங்கோ கொண்டு போகனும...சுற்றி வளைத்து ஏன் பேச்சை எங்கெங்கோ கொண்டு போகனும். உங்களுக்கு என்ன, உயிர்க்கொலை செய்த ஒருவரை அடியவராக எண்ணி வரலாற்றில் வைத்தால் சந்ததிகளும் அதைப் பின்பற்றிக் கெட்டுப் போவார்கள் என்பது தானே!<br /><br />அவர் செய்தது தவறுதான். உறவினர்களைக் கொன்றிருக்கக் கூடாதுதான். ஏதோ உணர்ச்சிவசப்பட்டுட்டார். <br /><br />இன்று எத்தனையோ அநியாயங்கள் கோயில்களில் நடக்கின்றன. இறைவன் பெயரால் எவ்வளவோ மோசடிகள். இவை எல்லாம் எந்த இலக்கியங்களிலும் இல்லையே. பின்னர் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது. இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்துக் கெட்டுப் போவதை விட, இலக்கியங்களைப் படித்துத்தான் கெட்டுப் போவார்கள் என்பது சரியானதாக இல்லையே.<br /><br />படித்தவர்களோ, படிக்காதவர்களோ, வரலாறு அறிந்தவர்களோ, அறியாதவர்களோ எவரும் படித்ததை அப்படியே பின்பற்றுவதில்லை. அந்த சூழலில் அவர்கள் நடந்துகொள்வது அவர்களது EQ வைப் பொறுத்தது.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47859863844130219382010-07-28T09:33:47.104-04:002010-07-28T09:33:47.104-04:00வெட்டிப்பயல் said...
//நாம மனிதர்கள் நம்மள நே...வெட்டிப்பயல் said...<br /><br /> //நாம மனிதர்கள் நம்மள நேசிப்போம், நம்ம உடலைப் பாதுகாப்போம். உயிருக்கோ, உடலுக்கோ துன்பம் வரும்போது எப்படி செயல்படுவோமோ, அதே மாதிரிதான், கோட்புலி நாயனார் அவருக்கு உடலா உறவா இருந்த சிவப்பெருமானுக்கும், சிவபெருமானோட சேவைக்கும் ஊறு விளைவித்தவர்களிடம் நடந்து கொண்டிருந்தார்.<br /> //<br /><br /> அப்படினா ஒசாமா பின்லேடனும் அப்படி தான் நடந்து கொள்கிறார். கோடிக் கணக்கில் பணம் இருந்து அவர் ஓடி ஒழிய வேண்டிய தேவை என்ன?<br /><br /> நான் வணங்கும் கருணைக் கடலான ராமனுடைய கோவிலை இடித்து பாபருக்கு மசூதி கட்டிவிட்டார்களே என்ற “அதீத” பாசத்தால் தானே இந்து மத தீவிரவாதிகள் பாபர் மசூதியை இடித்து தள்ளினார்கள்.<br /><br /> இதுவும் கோட்புலிக்கு வழங்கும் நியாயம் போல உங்களால் நியாயம் வழங்க முடியுமா?<br /><br /> அதீத அன்பு என்றால் உங்களை துன்பப்படுத்தி கொள்ளுங்கள். ஏன் உங்கள் கடவுளின் பெயரால், நம்பிக்கையால் மற்றவர் உயிரை வாங்குகிறீர்கள்.//<br /><br /><br />பக்தியானது அக்காலத்தில் இருந்த பரிமாணத்தில் இப்போது இல்லை. பக்தியாளர்கள் அனைவரும் இவ்வாறு நடந்து கொள்ளவில்லையே. ஒரு சில விதிவிலக்குகள். மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எல்லா மலரும் ஒரே மாதிரியான மணம் வீசுவதில்லை.<br /><br />சமய இலக்கியங்களில் எத்துனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே. இறைஅடியவர்கள் எத்தனையோ பேர் நல்லவர்களாக, அன்பை மட்டும் போதித்தவர்களாக, அறவாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றியுந்தான் இலக்கியங்களில் இருக்கின்றது.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59503068007315777872010-07-28T09:24:32.657-04:002010-07-28T09:24:32.657-04:00வெட்டிப்பயல் said...
//மனிதர்கள் பால் அன்பு ச...வெட்டிப்பயல் said...<br /><br /> //மனிதர்கள் பால் அன்பு செலுத்துவது -மிதவாதம்; மனிதர்களுக்குத் துன்பம் விளைவிப்பது -தீவிரவாதம்<br /> அப்படியா??//<br /><br /> ஒரு லட்சியத்திற்காக உயிர்களை துன்புறுத்தி லட்சியத்தை அடைய பெறுவது தீவிரவாதம் என்று கொள்ளலாம்.<br /><br /> உணவுக்காக மானை வேட்டையாடும் புலியை தீவிரவாதி என்று யாரும் சொல்வதில்லை.//<br /><br />மானும், புலியும் மனிதர்கள் அல்லவே. அவைகளுக்கு மிதவாதியும் தெரியாது, தீவிரவாதியும் தெரியாது.<br /><br />ஆனால், நாம் மனிதர்கள். ஒன்றை சரி என்றால் அது முழுவதும் சரியானதாக இருக்க வேண்டும். நான் உணவுக்காக ஒரு உயிரைக் கொன்றேன் என்ற அளவில் சரி என்னும் போது, தன் சொல்லை மீறியவர்களைக் கொன்றது எப்படி சரி இல்லாமல் போகும். எப்படி இருந்தாலும் அது கொலை தானே. ஒருகால், உணவுக்காகக் கொன்றால் அது இலட்சியக்கொலையோ...<br /><br />தன் கற்பிற்கோ, தன் பிள்ளைகளுக்கோ, கணவருக்கோத் தீங்கு நேரும் வேளையில் பெண்களே கொலை செய்திருக்கிறார்கள். தற்காப்புக்கு செய்தால் அதுவும் இலட்சியக் கொலையோ... இலட்சியக் கொலைகளிலும் உயிர்கள் இறக்கத்தானே செய்கின்றன.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42486630689928842782010-07-28T09:12:50.706-04:002010-07-28T09:12:50.706-04:00@வெட்டிப்பயல்...,
காதலுக்கு உயிர்விட்டவர் பலர். க...@வெட்டிப்பயல்...,<br /><br />காதலுக்கு உயிர்விட்டவர் பலர். கொலை செய்தவர் மிக அரிது. அப்படி கொலை செய்பவரின் காதலை உலகம் மதிப்பதில்லை. அதற்கு பெருமையும் சேர்ப்பதில்லை.// <br /><br />காதல் நீங்கள் பார்க்கின்ற ஒரு பார்வையில் மட்டும் பார்த்தால்... நான் என்ன செய்ய??<br /><br />தேச விடுதலைக்காக, எத்தனையோ பேர் அந்நியர்களை எதிர்த்துப் போராடி இருக்கின்றனர். அவர்களைக் கொன்றும் இருக்கின்றனர். எவரும் போய் தற்கொலை செய்து கொண்டதில்லை. இது எல்லா நாட்டு வரலாற்றிலும் இருக்கின்றது.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57716916102036187232010-07-28T09:01:50.896-04:002010-07-28T09:01:50.896-04:00வெட்டிப்பயல் said...
//இறைநிலை இறைபக்தி என்பத...வெட்டிப்பயல் said...<br /><br /> //இறைநிலை இறைபக்தி என்பது காதலைப் போன்றது. வீரம், காதல், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் போன்று பக்தியும் ஒரு உணர்வு.//<br /><br /> மிக சரி...<br /><br /> எனக்கு வீரம் இருக்கிறது என்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் சண்டைக்கு இழுப்பது பெருமை தராது.<br /><br /> காதலர்கள் தங்களுடைய கேலிக்கைகளை ஊரார் முன் அரங்கேற்றினால் அது அசிங்கம்.<br /><br /> அதே போல் பக்தி அதிகமாகி கொலை செய்யும் அளவுக்கு சென்றால் அது கோடூரம்.//<br /><br />வீரமோ, பேச்சாற்றலோ... எந்த திறமையாய் இருந்தாலும், எதுவாயினும் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துவேண்டும் என்ற அறிவு மாக்களுக்கே இருக்கின்றது. <br /><br />காதல் என்றால், ஆணும் பெண்ணும் இருவருக்குமான உணர்வுதான் காதல் என்பது தவறான புரிதல். தன் தந்தை, கணவர், மற்றும் பிள்ளைகள் பலரையும் போருக்கனுப்பி, இறுதியாகத் தானே போருக்குச் சென்ற தமிழ்ப்பெண்ணுக்கு வீர உணர்வினை விட காதல் உணர்வு அதிகமிருந்ததால் தான் அவளால் செல்ல முடிந்தது. அவள் நாட்டின் மேல் அவளுக்கிருந்த காதல்.<br /><br />காதலை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானது என்ற குறுகிய உணர்வைத் தவிர்த்து விட்டுப் பார்த்தல் நலம்.<br /><br />பக்தி அதிகமானால் தான் கொலை செய்யும் நிலையைத் தூண்டும் என்று சொல்வது சரியானதாகத் தோன்றவில்லை. <br /><br />தேர்வில் பார்த்து எழுத வேண்டாம் என்பது விதிமுறை. அதையும் மீறி எழுதினால் அவர்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை. <br /><br />இங்கு தண்டனை அவர்கள் பார்த்து எழுதியதற்காக அல்ல. விதிமுறைகளை மீறியதற்காக. அதுபோல்தான், கோட்புலியாரும்.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32891919040254946552010-07-28T08:53:07.182-04:002010-07-28T08:53:07.182-04:00@வெட்டிப்பயல்...
இல்லை. என்றுமே மனித மனம் நிரூபண...@வெட்டிப்பயல்...<br /><br /><br />இல்லை. என்றுமே மனித மனம் நிரூபணமின்றி எதையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையிலே இருந்திருக்கிறது.<br /><br />கீதா உபதேசத்திற்கு பிறகும், விஸ்வ ரூப தரிசனத்திற்கு பிறகும் கண்ணன் மேல் முழுமையான நம்பிக்கையை அர்ச்சுணன் வைக்கவில்லையே.<br /><br />அன்று இருந்தவர்கள் எல்லாம் நல்லவர்கள், இது தான் கலி காலம். கெட்டவர்கள் நிறைந்து உள்ளார்கள் என்ற எண்ணம் தான் சிலர் மனதில் இருக்கிறது. மனிதன் என்றும் இப்படி தான்.//<br /><br />எப்போதுமே மனிதர்கள் எதையும் நிரூபனமின்றி நம்பமாட்டார்கள் என்ற நிலை மட்டும் மாறாமல் இருக்கும் போது, நல்லவர்கள் மட்டும் நிறைந்திருந்த்து அந்த காலம், இன்று அனைவரும் மாறிவிட்டிருக்கின்றனர் என்பது மட்டும் எப்படி மாறியது. <br /><br />தருக்க ரீதியாக எல்லாவற்றையும் பேசலாம்... ஆனால், உண்மையில் உலகம் அப்படி அல்ல. அது பலவகைகளில் நெகிழ்வுத்தன்மை கொண்டது.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88349902827973962652010-07-28T02:28:04.770-04:002010-07-28T02:28:04.770-04:00//ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே தொல்காப்பியமும், திர...//ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே தொல்காப்பியமும், திருக்குறளும் வந்துவிட்டது. தமிழ் சமூகம், சமூக அமைப்பில் மிக உயர்ந்த நிலையிலே அன்று இருக்கிறது. பழங்குடி என்று சொல்லி தப்பிக்க முடியாது. சமணமும், பௌத்தமும் தமிழ் மண்ணில் பரவி விட்டிருந்தது. அதனால் உயிர் கொலை சிறந்ததென்று அன்றைய தமிழ் சமூகத்தில் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை.//<br /><br />200 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய வரலாறு ஒட்டி கருத்து கூறும் ஒருவர் "பெரியாரின் தாக்கம் இருந்த தமிழ்நாட்டில், திராவிட இயக்கங்களின் ஆட்சி நடந்தபோதும் தமிழ் நாட்டில் கோவில்கள் திறந்திருந்திருந்து, பூசைகள் நடைபெற்றன என்பதை நம்ப முடியாது" ன்னு யாரும் கருத்து கூறினால் நாமும் அந்தக் கூற்றுச் சரியாகக் கூட இருக்கும் என்று நினைப்போம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com