tag:blogger.com,1999:blog-18001940.post8263380931503329167..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பதிற்றுப் பத்தில் தமிழ்க் கடவுள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18001940.post-49782017640519881232010-10-07T16:06:20.592-04:002010-10-07T16:06:20.592-04:00//ஏழாம்பத்தின் பதிகம் என்கிறீர்கள். பதிகம் என்றால்...//ஏழாம்பத்தின் பதிகம் என்கிறீர்கள். பதிகம் என்றால் பாடியவர் யார்? அது நூல் இயற்றப் பட்ட போதோ தொகுக்கப் பட்ட போதோ எழுதப்பட்டதா? பிற்காலத்தில் எழுதப்பட்டதா? பிற்காலம் என்றால் அதனை நீங்கள் சங்க காலத் தரவாக வைப்பதில்லையே! அதனால் கேட்கிறேன்//<br /><br />:)<br />சூப்பரா மடக்கினீங்க குமரன் அண்ணா! ஐ லைக் இட்! :)<br />இப்படிக் கேள்விகளோடு கலந்துரையாடும் இன்பமே தனி! கேள்வியும் பதிலுமாய் வாசிக்கும் அனைவர்க்கும் புரிதல் மேம்படும்!<br /><br />பதிற்றுப் பத்தில் மொத்தம் பத்து கவிஞர்கள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்து! <br /><br />ஒவ்வொரு பத்தின் முடிவில் வருவது பதிகம்! பதிகத்தைப் பாடியவர் பெயர் அறிகின்றலை! பத்தையும் தொகுத்தவரே, அந்தத் தொகுப்புக்கான காரணத்தையும் சொல்லிப் பாடியுள்ளார்!<br /><br />அந்தப் பத்தைப் பாடியவர் பெயர், பாடப்பட்டவர் பெயர், பாடப்பட்டவர் செய்த அருஞ்செயல்கள், அவர் பாடியவர்க்கு அளித்த பரிசில் போன்ற செய்திகளையும் குறிப்பிடுகிறார்! அதே காலமாய் இருந்தால் அன்றி, கொடுத்த பரிசிலின் கணக்கு எல்லாம் சொல்ல முடியாது!<br /><br />எனவே, இத்தனைத் தகவல்களையும் ஒருங்கே சொல்வதால், பதிகம் பாடியவரும் - பத்து பாடியவரும், சம காலத்தவர் என்பது புலனாகும்!<br /><br />மேலும் எட்டுத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டதும் அதே சங்க காலத்திலேயே தான்! <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" rel="nofollow">இதோ சுட்டி!</a><br /><br />அதனால் தான் பதிகமும், இந்தத் தரவோடு உடன் சேர்த்தேன்!<br />எப்படியாயினும், முதல் தரவு = பதிற்றுப்பத்தின் 31ஆம் பாடல் தான்! பதிகம் அல்ல!<br /><br />தரவுடனான உடன் சேர்க்கையே பதிகம்! அதை முடிப்பாகக் கொடுத்துள்ளேன்! கூடுமானவரை சங்க காலத் தரவுகளை மட்டுமே தர விருப்பம்! பின்னாளில், "இது சங்க காலப் பாட்டல்ல,அதனால் திருமால் சங்கத் தமிழ்க் கடவுள் அல்ல"-ன்னு யாரும் சொல்லீறக் கூடாது பாருங்க! அதுக்குத் தான் இந்தச் சுயக் கட்டுப்பாடு :)<br /><br />தங்கள் கேள்விக்கு அடியேன் சொன்ன விடை சரியா என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும்! அடியேன் சிற்றஞ் சிறு ஞானத்தன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-45111512004741967622010-10-07T15:10:02.163-04:002010-10-07T15:10:02.163-04:00//தென்னக மாயோனும் வடபுல விஷ்ணுவும்/கிருஷ்ணனும் முற...//தென்னக மாயோனும் வடபுல விஷ்ணுவும்/கிருஷ்ணனும் முற்காலத்தில் வெவ்வேறாக இருந்து பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்றொரு வழக்கு இருக்கிறது!//<br /><br />:)<br />மாயோன் மட்டுமா? முருகனுக்கு கூட அப்படி ஒரு வழக்கு இருக்கே! :)<br /><br />//சங்க கால நூல்களில் காலத்தால் முந்தைய நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்திலும் வடமொழி வேதங்களில் வரும் விஷ்ணுவின் அதே அடையாளங்கள் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தால்//<br /><br />என்னாது, வடமொழி வேத அடையாளமா?<br />* துழாய்-மாலை<br />* திரு-மறு<br />* ஆழிப்-படை<br />இதெல்லாம் தமிழ் நிலத்து மாயோனுக்கும் உண்டு குமரன்!<br /><br />* நல்ல கருந் துழாய், காட்டில் தான் வளரும் - காடும் காடு சார்ந்த இடம்!<br />* திரு-மறு = மச்சம் என்னும் உடற் குறி, குறிஞ்சிக் குறவர்கள் குறி சொல்லுவார்களே!<br />* ஆழிப் படை = Boomerang, காட்டுவாசிகளின் ஆயுதம் தானே!<br /><br />//எப்போது மாயோனும் விஷ்ணுவும் வெவ்வேறாக இருந்தார்கள்; எப்போது இணைந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது!//<br /><br />இராம.கி ஐயாவைக் கேட்டுப் பார்க்கலாம்!<br /><br />//தரவுகளின் மீது கொள்கைகளைக் கொள்ளாமல் கொள்கைகளுக்கு ஏற்ப தரவுகளைக் காண்கிறார்களோ அவர்கள் என்ற கேள்வியும் எழுகிறது!//<br /><br />:))<br />Atleast, அப்படியாச்சும் தரவு தந்தாத் தான் பரவாயில்லையே! தரவே இல்லாமல் வெறுங்"கொள்கைகளை"ச் சுமந்து திரிவது இன்னும் அபாயம்!:)<br /><br />//அனைத்தும் அறிந்தவன் இல்லை நான்! அவர்கள் சொல்லும் தரவுகளையும், அப்படி ஏதேனும் இருந்தால், அவற்றையும் பார்க்க வேண்டும்//<br /><br />எனக்கும் காட்டுங்க! நானும் தெரிஞ்சிக்க ஆவலாய் உள்ளேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4170293257486384262010-10-07T14:54:48.738-04:002010-10-07T14:54:48.738-04:00//மாயோன் என்றால் மாயங்கள் செய்பவனா கருநிறம் கொண்டவ...//மாயோன் என்றால் மாயங்கள் செய்பவனா கருநிறம் கொண்டவனா - என்ன பொருள் என்ற கேள்வி மனத்தில் ஓரத்தில் இருந்தது<br /><br />இங்கே தெளிவாக மாய வண்ணம் என்று சொல்லி மாயோன் என்றால் கருநிறம் கொண்டவன் என்ற பொருளைத் தெளிவாகத் தந்துவிட்டார்கள். கேள்விக்கும் விடை கிடைத்தது. :-)//<br /><br />சூப்பர்! தமிழ்க் கடவுளைக் கொஞ்ச நேரம் சுற்றி வந்ததுக்கே தெளிவான பதில் கிடைச்சிருச்சி பாருங்க :)<br /><br />மாயோன் = கருப்பன்!<br />மாய வண்ணன் = கருப்பு வண்ணன்! <br /><br />கொற்றவையை மாயோள் என்று சொல்வது மட்டுமா? கருப்பான தலைவியை, மாயோய் என்று சொல்லும் சங்கப் பாடல்களும் உண்டு குமரன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59489844608038941522010-10-07T14:49:41.646-04:002010-10-07T14:49:41.646-04:00//வண்டு ஊது பொலி தார்த் திருஞெமர் அகலத்துப்
கண் ப...//வண்டு ஊது பொலி தார்த் திருஞெமர் அகலத்துப் <br />கண் பொரு திகிரிக் <br />கமழ் குரல் துழாஅய் <br />அலங்கற் செல்வன்... <br />ஆகா!//<br /><br />:)<br />என்ன குமரன்? தமிழ் அர்ச்சனை கேட்டாப் போல இருக்கா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25342040735953439142010-10-07T12:57:33.412-04:002010-10-07T12:57:33.412-04:00//பதிற்றுப்பத்தில் வரும் முருகனைப் பற்றிய குறிப்பை...//பதிற்றுப்பத்தில் வரும் முருகனைப் பற்றிய குறிப்பை முன்பு கூடலில் எழுதியிருக்கிறேன். மாயவண்ணனைப் பற்றிய குறிப்பையும் துழாய் அலங்கற் செல்வனைப் பற்றிய குறிப்பையும் இன்று கண்டேன். நன்றி இரவி//<br /><br />:)<br />முருகனைப் பற்றிய பதிற்றுப்பத்து பதிவை இங்கே இணைத்து வையுங்கள் குமரன்! இரண்டு தமிழ்க் கடவுளும் ஒரு சேர இருக்கட்டும்! <br /><br />பிறந்த வீடும் புகுந்த வீடும் அருகிலேயே இருக்கும் சுகமே சுகம்! :) சுட்டி தாருங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6771387429407803722010-10-07T07:43:53.415-04:002010-10-07T07:43:53.415-04:00பதிற்றுப்பத்தில் வரும் முருகனைப் பற்றிய குறிப்பை ம...பதிற்றுப்பத்தில் வரும் முருகனைப் பற்றிய குறிப்பை முன்பு கூடலில் எழுதியிருக்கிறேன். மாயவண்ணனைப் பற்றிய குறிப்பையும் துழாய் அலங்கற் செல்வனைப் பற்றிய குறிப்பையும் இன்று கண்டேன். நன்றி இரவி. <br /><br />சங்ககால சேர மன்னர்களைப் பல புலவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பு பதிற்றுப் பத்து. <br /><br />வண்டு ஊது பொலி தார்த் திருஞெமர் அகலத்துப் கண் பொரு திகிரிக் கமழ் குரல் துழாஅய் அலங்கற் செல்வன்... ஆகா! தென்னக மாயோனும் வடபுல விஷ்ணுவும்/கிருஷ்ணனும் முற்காலத்தில் வெவ்வேறாக இருந்து பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்றொரு வழக்கு இருக்கிறது! சங்க கால நூல்களில் காலத்தால் முந்தைய நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்திலும் வடமொழி வேதங்களில் வரும் விஷ்ணுவின் அதே அடையாளங்கள் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தால் எப்போது மாயோனும் விஷ்ணுவும் வெவ்வேறாக இருந்தார்கள்; எப்போது இணைந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது! தரவுகளின் மீது கொள்கைகளைக் கொள்ளாமல் கொள்கைகளுக்கு ஏற்ப தரவுகளைக் காண்கிறார்களோ அவர்கள் என்ற கேள்வியும் எழுகிறது! அவர்களுக்கு ஏற்ப கிடைத்த தரவு எதுவோ? அனைத்தும் அறிந்தவன் இல்லை நான்! அவர்கள் சொல்லும் தரவுகளையும், அப்படி ஏதேனும் இருந்தால், அவற்றையும் பார்க்க வேண்டும். <br /><br />ஏழாம்பத்தின் பதிகம் என்கிறீர்கள். பதிகம் என்றால் பாடியவர் யார்? அது நூல் இயற்றப் பட்ட போதோ தொகுக்கப் பட்ட போதோ எழுதப்பட்டதா? பிற்காலத்தில் எழுதப்பட்டதா? பிற்காலம் என்றால் அதனை நீங்கள் சங்க காலத் தரவாக வைப்பதில்லையே! அதனால் கேட்கிறேன். <br /><br />மாயோன் என்றால் மாயங்கள் செய்பவனா கருநிறம் கொண்டவனா - என்ன பொருள் என்ற கேள்வி மனத்தில் ஓரத்தில் இருந்தது. கொற்றவையை மாயோள் என்று சங்க இலக்கியம் அழைக்கும் போதும் அதே கேள்வி தான். இங்கே தெளிவாக மாய வண்ணம் என்று சொல்லி மாயோன் என்றால் கருநிறம் கொண்டவன் என்ற பொருளைத் தெளிவாகத் தந்துவிட்டார்கள். கேள்விக்கும் விடை கிடைத்தது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com