Tuesday, February 26, 2008

மஜ்ஜை தானம் மகத்தான தானம்! Bone Marrow Donation - Part 2

எலும்பு மஜ்ஜை தானம்-னு பதிவுல சொல்றதுக்கு எல்லாம் ஈசியாத் தான் இருக்கும்! ஆனா உதவணும் மனம் இருந்தாக் கூட, மனத்தில் கூடவே பயமும் இருக்கேப்பா! எங்க வீட்டுல சொன்னா அவ்ளோ தான்! டின்னு கட்டிருவாங்க! இந்த வேலையெல்லாம் உனக்குத் தேவையா-ன்னு கேட்பாங்களே! அட என்னாங்க அண்ணாச்சி, இப்பிடி வீட்டுக்குப் பயந்த புள்ளையாட்டும் Act கொடுக்கறீங்க? நீங்க "தம்" அடிக்கறது வீட்டுக்குத் தெரியுமா என்ன? :-) இல்லீன்னா மவுண்ட்...
Read more »

Thursday, February 21, 2008

எச்சரிக்கை!! ரிவர்ஸ் கியரில் - பூம்பாவாய்! ஆம்பல் ஆம்பல்!! - 10

ஆர்க்குட் தள நிர்வாகத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கை!சுரேஷ் என்னும் பெயர் உள்ளவர்கள், தங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை, மறு தேதி குறிப்படப்படும் வரை, ஆர்க்குட் தளத்தில் இருந்து நீக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில தொடர் விபத்துகள் காரணமாகத் தமிழகக் காவல் துறை ஆர்க்குட் தளத்தை அணுகி இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளது.இது முற்றிலும் சுய விருப்பத்துக்கு உட்பட்டதே! இருப்பினும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் ஆர்க்குட் கோருகிறது!அதுக்காக...
Read more »

Monday, February 18, 2008

ஒரு பெண் மனசு, ஆண் மனசு, ஆழ்வார் மனசு!

"என்னாங்க குழந்தையைக் கொஞ்ச நேரம் பாத்துக்குங்களேன்! வீல் வீல்-ன்னு அழுவறான் பாருங்க!""பசியா இருக்கும். வந்து பால் குடும்மா. இதப் போயி என் கிட்டச் சொன்னா நான் என்ன பண்ண முடியும்?""அட, இப்ப தாங்க கொடுத்தேன்! அரை மணி கூட ஆவலை! தூக்கத்துக்கு அழுவறான்! தெரியலை உங்களுக்கு?""ஆமா, வீல் வீல்-னு அழுவாம, சக்கரம்-சக்கரம்-ன்னா அழுவும் குழந்தை? என்ன தான் நீ பெருமாள் பக்தையா இருக்கலாம்! ஆனா இதெல்லாம் டூ மச் டீ...
Read more »

Sunday, February 17, 2008

இரத்த தானம் செய்யலாம்! Bone Marrow Donation செய்யலாமா? - 1

அண்மையில் Help Gayathri - Leukemia-ன்னு ஒரு பதிவை நண்பர் கப்பி சுவரொட்டியில் போட்டிருந்தாரு! அதுல காயத்ரி என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய்-இருபத்து எட்டு வயதுப் பெண், எலும்பு மஜ்ஜை தானம் தேடி அலையும் செய்தி வந்துச்சி. இரத்த தானம்-ங்கிறது இப்பெல்லாம் சர்வ சாதாரணமா ஆகிப் போச்சு! ஆனா அது என்னாங்க எலும்பு மஜ்ஜை தானம்? பேரைக் கேட்டாலே பயமா இருக்கே! = எலும்பு/ மஜ்ஜை தானம் கொடுக்கறேன் பேர்வழி-ன்னு ஏதாச்சும்...
Read more »

Thursday, February 14, 2008

புதிரா? புனிதமா?? - காதல்! (காதலர் தின ஸ்பெஷல்)

சொல்லிடலாமா? வேணாமா?அடச்சே....லவ்வையா சொல்லப்போற? போட்டி முடிவைத் தானே சொல்லப்போற! அதுக்கு எதுக்கு பில்டப்பு? :-)கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! தனியான விளக்கம்ஸ் பின்னூட்டத்தில்! நெறைய விளக்கத்தைக் கெக்கேபிக்குணி அக்காவே கொடுத்துட்டாங்க! என் வேலை மிச்சம்! நன்றிக்கோவ்! :-)இதோ காதல் வெற்றியாளர்கள்: அட, அது என்னாங்க அது? காதல்-ல தான் பெரும்பாலும் பெண்களே ஜெயிக்கறாங்க! காதல் போட்டில கூடவா, அவங்களே ஜெயிப்பாங்க?...
Read more »

Sunday, February 03, 2008

புதிரா? புனிதமா?? - திருக்குறள்!

அட, என்னாங்க! கேள்வி எல்லாம் ரொம்பக் கடினமா என்ன? தொலை பேசறவுங்க எல்லாம் திட்டறாங்களே! :-)ஆனால் இங்கிட்டு இத்தனி பேரும் அடிச்சி ஆடியிருக்கீங்க! பாராட்டுக்கள்!!முடிவுகள் அறிவிச்சிடலாமா?கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! ஒவ்வொரு கேள்விக்கும் தனியான விளக்கத்தைப் பின்னூட்டத்தில் சொல்லி விடுகிறேன்! பல குறள்களைக் குமரனே கொடுத்துட்டாரு! அனந்த லோகநாதனும் குறள்களை எடுத்துக் காட்டியிருக்காரு! இதோ வெற்றியாளர்கள்:ஜெயஸ்ரீ,...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP