Wednesday, September 09, 2009

ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் "ரகசியத்" தாலி!

இன்னிக்கி, ஓம் நமோ Dash தொடரின், Climax-க்கு வந்திருக்கோம்!
மாதவிப் பந்தலுக்கும், "ரகசியத் தாலி"க்கும் என்ன சம்பந்தம்? ஹிஹி! அதெல்லாம் பதிவு முடியும் போது தான் தெரியும்! :))


இந்தப் பதிவு, மாதவிப் பந்தலுக்கு மிக முக்கியமான பதிவு! இந்த ஓம் நமோ Dash தொடரால், பந்தல் தன்னுடைய ஆன்ம பயனைப் பெற்றது-ன்னு கூடச் சொல்லீறலாம்!

பல சமயங்களில்,
* என்னிடம் வருந்தினோர்க்கு எல்லாம் என் மன்னிப்புகளையும்...
* என்னிடம் அருந்தினோர்க்கு எல்லாம் என் அன்பினையும்...
அன்பரல்லாதார்/அன்பர் என்று.....அடியவர்கள் "அனைவருக்குமே" பல்லாண்டு பாடி,
உங்கள் KRS, உங்கள் "அனைவரையும்" இந்த நேரத்தில் வணங்கிக் கொள்கிறேன்!

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ...
சடகோபன் தண்"தமிழ் நூல்" வாழ...
அனைவரும் இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இந்தப் பதிவில், இராமானுசர் உங்களுடன் பேசப் போகிறார்!
அவர் திருக் கையொப்பத்தையும் நீங்கள் காணப் போகிறீர்கள்!

இந்த Climax பதிவின் Climax என்ன? = கோபுரம் மேல நின்னு ஊருக்கே கூவியது-ன்னு சொல்வாய்ங்களே! அது! :)

* அ-உ-ம்-க்கு = 3 பதிவு!
* நமோ-க்கு = 2 பதிவு!
* நாராயணாய-க்கு = 5 பதிவு!
அத்தனையும் இவரு மூனே நிமிஷத்துல எப்படிப்பா லீக்-அவுட் பண்ணாரு? :))
வாங்க, இன்னிக்கி பார்த்து விடலாமா? சென்ற பதிவு இங்கே!



மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்த உடையவரைச் சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா?
* ஒரு மணி நேரம், ஒருவருக்காக, வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது!
* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, ஏழை எளிய மக்களிடம், எப்படி வாய் கூசாமல் சொல்வது?
ஐயகோ! இதுவா "நீர்"-மை? இதுவா "நீரா"யணம்? இதுவா "நாரா"யணம்???

குருவின் வார்த்தையை மீறினால் நரகம் தான்! ஆனால் வரப் போவது சொர்க்கமா? நரகமா? மோட்சமா? என்றெல்லாம் அவர் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கவில்லை!
** அவருக்கு இருந்த ஒரே குழப்பம் = குருவைப் பார்ப்பதா? அடியவர்களைப் பார்ப்பதா?
தர்ம சங்கடம்! முன்பு இராமன் வசிட்டரை மீறினான்! இன்று இராம-அனுசன் நம்பிகளை மீறப் போகிறாரா? ஆகா!

அதோ.....திருக்கோட்டியூர் கோபுரம் கண்ணுக்குத் தெரியுதே! அஷ்டாங்க விமானம்! அது ஒரு வித்தியாசமான அமைப்பு!
ஆனானப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், திருவரங்கம் கோயிலுக்கு கூட 4 பக்கம் - 4 கோணம் மட்டுமே! ஆனா, இந்தச் சின்ன ஊரில்....
ஒரே விமானத்தில்....மூன்று கருவறையும் உள்ளடங்கி இருக்கு!

மொத்தம் 8 கோணமாய் - 3 அடுக்குகள்! (Octagonal Trimetry)
(ஓம்) + (ந-மோ) + (நா-ரா-ய-ணா-ய) = 8 & 3

ஆகா! ஆகா!
* பொறி தட்டுகிறது இராமானுசருக்கு! எம்பெருமானே இப்படி ஊர் அறிய மந்திரத்தைக் காட்டிக் கொடுக்கிறானே? "வெட்ட வெளிச்சமாத்" தானே இந்தக் கோபுரம் இருக்கு?
* கண்டவனுக்கும் சொல்லீறக் கூடாது என்று "ரகஸ்யமாய்" தன்னை மறைந்து கொள்கிறதா என்ன? "கண்டவனுக்கு" எல்லாம், அது தன்னைக் காட்டி விடுகிறதே!


விறு விறு என்று கோபுரத்தின் மேல் ஏறுகிறார் உடையவர்! கண்களின் ஓரத்தில் லேசாக நீர்!

வந்த கண்ணீரை, கண்களின் நடு வழியில் வரும் போதே....
"படக்"கென்று தொண்டைக்குள் அடைத்துக் கொள்ளும் வித்தை!
அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கார் போல!

சின்னஞ் சிறு வயதிலேயே அத்தனை கொடுமையும் பார்த்து விட்டார் அல்லவா?
ஆசிரியர் தன்னை விரட்டி விடல், பின்பு, குருவே தன்னைக் கொல்ல முயற்சி,
பின்பு, திருமண முறிவு, பின்பு, உடன் பழகிய பலரின் வெறுப்பு, பின்பு சக அடியவர்கள் தன் மீது பொறாமை...
பின்பு, குருவைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் போதே குருவின் மரணம்!
- இப்படிப் புடம் போட்டு விட்டது போல! கண்ணீர் மட்டும் வெறுமனே வழிகிறது!

கோபுரத்தில் இருந்து, உரத்த குரலில் கூவிக் கூவி எல்லாரையும் அழைக்கிறார்!
உடன் வந்த சீடர்கள், "இவர் என்ன தான் பண்ணுறாரு?"-ன்னு தெரியாமல் விழிவிழி-ன்னு விழிக்கிறார்கள்!
வயல் வெளிகளில் இருந்தும், ஊர்ச் சந்தைக்கும் வந்த கூட்டம், கீழே அலை மோதுகிறது! கோபுரத்தின் கீழ் நிற்க இடமில்லை!

இந்தச் சின்னப் பையன், வாலிபத் துறவி, இனிக்க இனிக்கப் பேசுகிறான் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா அப்படி என்ன பெருசா சொல்லிடப் போறான்?
உடையவர் கீழே குனிந்து அத்தனை பேரையும் பார்க்கிறார்!
கன்னங் கரேல் என்று அன்றாடம் வெயிலில் வாடிடும் மக்கள்! இவர்களுக்கு என்னா-ன்னு சொல்லுறது? நம்பிகள் தம்மிடம் சொன்னது என்ன???

நர சமூகோ நாரா:
நாரா ஜாதானி தத்வானி
நாரா நிதி ததோ விது:
தான்யேவ சயனம் தஸ்ய - தேன
நாராயண ஸ்மிருதா:

செற்றமே வேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி,
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்
நாரணா என்னும் நாமம்!


இப்படி எல்லாம் சொன்னா, இவிங்களுக்குப் புரியுமா? சரி, சரி, மிகவும் எளிதாக்கிச் சொல்லீற வேண்டியது தான்! வேறு வழியில்லை.....
இறைவனே பன்றியாய்க் கீழே இறங்கி வருகிறானே! நாம் இறங்கினால் ஒன்னும் குறைந்து விட மாட்டோம்!! என்னை மன்னித்து விடுங்கள் திருக்கோட்டியூர் நம்பிகளே!


ஓம் நமோ Dash.....
அந்த "ரகஸ்யம்",
இதோ.....ஊருக்கே போட்டு உடைக்கப்பட்டு விட்டது! உங்களுக்கு? :))

அனைவர் முகத்திலும் ஏதோ எளிமையாகப் புரிந்து கொண்ட திருப்தி!
எல்லாருக்கும் வாயெல்லாம் சிரிப்பு!
உடையவர் வாயால் திருமந்திர அர்த்தம் கேட்டதே போதும் என்ற மோட்சத் திருப்தி! அடியவர்களோடு கூடி இருந்து குளிந்தேலோ என்ற மோட்சத் திருப்தி!

அப்பாடா....இனி பிறவியே இல்லை என்ற சுயநலம் = வெறுமனே சம்சார துக்க நிவர்த்தி = அதுவா மோட்சம்?
இல்லை! இல்லவே இல்லை!
அந்தமில் பேரின்பத்து "அடியவர்களோடு" கூடி
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!


உடையவர் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறார்.....எதிரே சாட்சாத் திருக்கோட்டியூர் நம்பிகள்! அவர் முன்குடுமி கோபத்தால் ஆடுகிறது!

பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவ சிவ! :)
கண்கள் சிவ சிவ! பற்கள் நற நற! அதரம் அர அர! :)

நம்பி: "இராமானுஜா! என் முகத்தில் விழிக்காதே! போய் விடு இங்கிருந்து! திருக்கோஷ்டியூர் பக்கம் இனி எட்டியும் பார்க்காதே!"

உடையவர்: "அடியேன் என்றைக்கும் உங்கள்-இராமானுசன் தான், குருவே!"

நம்பி: "இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! உதட்டில் பஞ்சு, உள்ளத்தில் நஞ்சா? குருத் துரோகி! போயும் போயும் உன்னையா ஆளவந்தார் நம்பினார்?"

உடையவர்: "ஐயோ...சுவாமீ...."

நம்பி: "ச்சீ....அப்படி அழைக்காதே! நான் உன்னைச் சபித்தால் என்ன ஆவாய் தெரியுமா?"

உடையவர்: "ஆச்சார்யர் திருவடிகளே தஞ்சம் என்று, அப்போதும் உங்கள் காலடியிலேயே வீழ்ந்து கிடப்பேன்!"

(நம்பிக்குக் கண் கலங்குகிறது...இவனை என்னவென்று சொல்வது?..எவ்வளவு திட்டினாலும், நம்மை அல்லவா ஏக்கமுடன் பார்க்கிறான்!
சாத்திரத்தை மீறியவன் போலவும் தெரிகிறான்! மீறாதவன் போலும் தெரிகிறானே.........?

நம்பியின் கோபத்தைப் பார்த்து, மொத்த ஊரே அரண்டு போய் நிற்கிறது!)
நம்பி: "குருவின் வார்த்தையை, அரை நாழிகைக்குள் மீறி விட்டாயே! உனக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?"

உடையவர்: "நரகம் தான் சுவாமி!"

நம்பி: "தெரிந்துமா இப்படிச் செய்தாய்?"

உடையவர்: "கேட்பவர் "எவராயினும்" அவருக்கு மோட்சம் "காட்ட" வல்லது என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
இத்தனை பேர் இங்கு உழல்வதை விட, அடியேன் ஒருவன் தானே? நரகத்தில் தாராளமாக உழலலாம் அல்லவா? கேட்ட அத்தனை பேரும் மோட்சம் அடைவார்கள் இல்லையா?"

நம்பி: "ஆஆஆஆஆஆஆ...இராமானுஜா!"

உடையவர்: "நொண்டியோ, குருடோ, விகாரமோ, அழகோ.....அத்தனை குழந்தைகளும் தாயிடம் சேரட்டுமே!
அடியேன் ஒருவன் குருத் துரோகி ஆகி நரகத்தைச் சேர்கிறேன்! எனக்கு ஆசி கூறி, நரகத்துக்கு அனுப்பி வையுங்கள் சுவாமி!"

(நம்பியின் காலில் உடையவர் விழ......அதட்ட வந்த நம்பிகள் அரண்டு போகிறார்! இப்படி ஒரு பதிலைத் தன் வாழ்நாளில் அவர் கேட்டதே இல்லை!)

(இளைய இராமானுசனை வாரி எடுத்துக் கொள்கிறார்!)
நம்பி: "காரேய்க் கருணை இராமானுசா! ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி "வரம்பு அறுத்தாயோ"?

எம்பெருமான் தன்னிலை இறங்கி வருவான் தெரியும்! ஆனால் மனிதன் இறங்கி வர மாட்டானே? அவன் பிடிச்சதே பிடியாச்சே! இள ரத்தத்துக்கு இன்னும் அதிகமாச்சே? இந்தச் சின்ன வயதில் இவ்வளவு இரக்கமா உனக்கு? நீ மகாலக்ஷ்மித் தாயாரின் குணத்தை அல்லவா பெற்று இருக்கிறாய்?

அவன் எம்+பெருமான்! ஆனால் நீயோ எம்+பெரும்+ஆனார்! நீரே எம்பெருமானார்! நீரே எம்பெருமானார்!

குறிப்பு:
1. பதிவின் நிறைவு வேறு மாதிரி அமையணும் என்பதற்காக, கோபுரத்தின் மேலிருந்து அப்படி என்ன தான் சொன்னார்-ன்னு, இன்னும் அடியேன் உங்களுக்குச் சொல்லவில்லை! :))

2. "ஓம்" என்பது வேத மந்திரம்! அதில் பெண்கள், நான்காம் வருணத்தவர் உட்பட சில பேருக்கு அதிகாரம் இல்லை!
மேலும், கிழக்கு பார்த்து சொல்லணும் போன்ற நியம ஆச்சாரங்கள் உண்டு - என்றெல்லாம் ஒரு சிலர் கருதுவார்கள்!

அந்த ஒரு சிலர், "இராமானுசர், "ஓம்" என்பதை விட்டுவிட்டு, "நமோ நாராயணாய" என்பதற்கு மட்டுமே விளக்கஞ் சொன்னார்" என்று எடுத்துக்கிட்டு வருவார்கள்! அப்படி வந்தும் இருக்கிறார்கள் பல மின் குழுமங்களில்! :)

ஆனால் அவற்றில் கிஞ்சித்தும் ஆதாரம் இல்லை! "காரேய்க் கருணை" இல்லை! எதையோ கட்டிக் காப்பாத்த வேணும் என்ற எண்ணம் இருக்கே அன்றி "பகவதோஸ்ய தயைக சிந்தோ" இல்லை!

* நம சிவாய(5), சரவண பவ(6) என்று இறைவனின் மற்ற மகா மந்திரங்களைப் போல் அல்லாமல்.....
திரு-எட்டு-எழுத்தின் தன்மையே = ஓங்காரத்தை அதில் இருந்து பிரிக்கவே முடியாது என்பது தான்! ஒழிக்க ஒழியாது = DNA!

ஓம்-ஐ நீக்கி விட்டால், திரு-எட்டு-எழுத்து என்பது ஏழு எழுத்தாகி விடும்! அஷ்டாட்சரம்=சப்தாட்சரம் ஆகி விடும்! :) அதை உடையவர் ஒரு நாளுஞ் செய்யார்!

ஆச்சாரம் பார்ப்பவர்களின் மன நிம்மதிக்கு வேணுமானால்:
வேதம் தான் எல்லாரும் சொல்லக் கூடாது! "வேதம்" என்ற சொல்லையாச்சும் அனைவரும் சொல்லலாம் அல்லவா?
அது போல "ஓம் என்ற சொல்லைச்" சொன்னதாக எடுத்துக்கிட்டு, "அப்பாடா இராமானுஜர் ஆச்சாரத்தை மீறலை"-ன்னு வேணும்-ன்னா அவரவர் திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்! :))
"சாங்கேத்யம் பாரிகாஸ்யம் ச" என்று பரிகாசமாகக் கூட இதைச் சொல்லலாமாம்! அதையும் வேதமே தான் சொல்லுது! உண்மை அப்படி இருக்க......இவர்கள் மட்டும்....ஹைய்யோ ஹைய்யோ! :))


சரி.....உடையவர் கோபுரத்தில் இருந்து சொன்னது தான் என்ன? அவர் வாயாலேயே நாம் கேட்க வேண்டாமா?
.
.
.
எங்கே, உங்கள் காதுகளையும், கண்களையும், உள்ளத்தையும்.....இனி உடையவரிடம் கொடுங்கள்!
.
.
.
இதோ...உங்கள் உள்ளத்திலே...இராமானுசர் கையொப்பமிட்டு...பேசத் துவங்குகிறார்!

"அன்பர்களே, ஆசை உடையோர் எல்லாரும் ஓடி வாருங்கள்!
உழன்றும் உழவே தலை என்று தலையாய இருக்கும் நீங்களா இன்னும் உழன்று கொண்டிருப்பது? இதோ, கேளுங்கள்....
* உங்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள, மந்திரப் பொருள் இதுவே!
* நம் அனைவருக்கும் பொதுச் சொத்தான மந்திரப் பொருள் இதுவே!


நீங்கள் இதைத் தனியாக எங்கு போய்ப் படிப்பீர்கள்? படிக்க, பக்கம் நின்று கேட்டாலே போதும்! பரிந்து உள் உணர்ந்தாலே போதும்!
அதனால் "தெரிந்து/அறிந்து" வைத்துக் கொள்வதை விட, "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!
கவனமாகக் கேட்டு, ஆராத ஆசையுடன், "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்! "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!

----------------------------------------------------------------------------------------------------


* ஓம் என்றால் அ-உ-ம்! = அவன்-உறவு-நாம்!

* அ = அனைத்துக்கும் முதல் = அகர முதல = இறைவன்!
* ம் = நாம்!
* உ = உறவு!

அவன் எங்கோ இருக்கிறான், தவம் செய்தால் மட்டுமே அடைய முடியும் என்று நினைத்து விடாதீர்கள்! பெற்றவளைக் காணத் தவம் செய்ய வேணும் என்றில்லை!
அவனுக்கும்-நமக்குமான உறவு "என்றும்" இருக்கிறது! அதை அவனே நினைத்தாலும் ஒழிக்க முடியாது!


அவனுக்காகவே நாம்! நமக்காகவே அவன்!
# அதனால் "பய பக்தியில்" பயத்தை விட்டு விடுங்கள்! பத்தியைக் கைக் கொள்ளுங்கள்! ப்ரபத்தியைக் கைக்கொள்ளுங்கள்!
# "நம் வீட்டிலே அவனும் ஒருவன்" என்று அனுதினமும் அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்! = அது தான் ஓம்!

----------------------------------------------------------------------------------------------------


* நமோ என்றால் ந-ம = எனதில்லை! எனது இல்லவே இல்லை!

# எல்லாம் எனக்குக் "கொடுக்கப்பட்டது"! எல்லாமே வாடகைப் பொருள்!
அதற்காக எல்லாத்தையும் விட்டுறச் சொல்லலை! அவற்றுக்கு நிரந்தர மதிப்பைக் கொடுக்காமல், தற்காலிக மதிப்பைக் கொடுங்கள், போதும்!
உலகம் மாயை அல்ல!
உலகம் உண்மை! நீங்களும் உண்மை!


# ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது "அதிக" ஆசை வைத்து விடுங்கள்!

அங்கு அதிகம் வைத்து விட்டால், மற்ற "ஆசை"களால் உங்களை "அசை"க்க முடியாது!
ந-மோ = நான் எனக்குச் சொந்தம் இல்லை! நான் அவனுக்கு மட்டு"மே" சொந்தம்!

----------------------------------------------------------------------------------------------------


* நாராயணாய என்றால் நமக்கு அவ"னே" தஞ்சம்! அவனுக்கு நாம், நமக்கு அவன்!
வேறு உபாயங்கள் நடுவில் உள்ளனவா? = இல்லை! இல்லவே இல்லை! அவ"னே" தஞ்சம்!

நாரம் என்றால் நீர்!
அணம் என்றால் அருகில்!
நாரணம் = அந்த "நீர்" நம் எல்லாருக்கும்!


# அவன் நீரைப் போல! = நீர் இன்றி அமையாது உலகு!
# அவன் நீரைப் போல! = எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைக் கொள்வான்!
# அவன் நீரைப் போல! = கீழ் நோக்கியே இறங்கி வருவான்!
நீரே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவையும் அதுவே விளைவிக்கும்!
அது போல் காரணமும் அவனே! காரியமும் அவனே!


அவன் தொலைவில் இருக்கிறவன் என்று பூஜைகளோடு மட்டும் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்!
அவன் நம்மில் ஒருவன் என்று அனுதினமும்...
அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்!
அந்த உறவு தான் பலம்! இன்பம்! நிம்மதி! எல்லாம்!



பொதுவாகத் தாலிச் சரட்டில், 8 இழைகள் 2 சரடாய் இருக்கும்! 8x2=16
ஆனால் இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது! 8 எழுத்து x 3 பதம் = 8 இழை x 3 சரடுகளாய், 8x3=24...
இன்னும் இறுக்குகின்றது! உங்களை அவனோடு இன்னும் இறுக்குகின்றது!

1. ஓம் (1)
2. ந-மோ (2)
3. நா-ரா-ய-ணா-ய (5)

* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!
* நம்மை அவனுக்கு மட்டு"மே" கட்டி வைத்துள்ள திருமாங்கல்யம்!
* அவனையும் பிடித்து, நம்மிடத்தில் உறவு ஏற்படுத்தி விட்ட திருமாங்கல்யம்!

பிறவிகள் தோறும் உலகத் தாலி மாறி விடும்!
ஆனால் இந்தத் தாலி மட்டும் என்றும் மாறவே மாறாது!
என்றும் கூடவே வரும்! எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து!


எங்கே.......
திருக்கோட்டியூர் நம்பிகளின் சீடன்,
அடியேன் இராமானுசனுடன் எல்லாரும் சேர்ந்து...

இந்தப் பெரிய திருமந்திரத்தை,
நாடும் நகரமும் நன்கறிய...
சொல்லும் போது...வெறுமனே வாய் அளவில் சொல்லாமல்...


* தாலிச் சரட்டை மனசாரத் தொட்டுக் கொள்ளுங்கள்!
* உறவு, உறவு, உறவு என்று நினைத்துக் கொண்டு,
எல்லாரும் மூன்று முறை சொல்லுங்கள்!


ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!


(நிறைவு)




இத்துடன்....மாதவிப் பந்தலில்,

* ஓம் (அ-உ-ம்) என்பதற்கான விளங்கங்களும் - 1, 2, 3
* நமோ என்பதற்கான விளக்கங்களும் - 1, 2
* நாராயணாய என்பதற்கான விளக்கங்களும் - 1, 2, 3, 4, 5

நிறைந்தே நிறைவானது! மாதவிப் பந்தலும் நிறைவானது! "நிறைந்தேலோ" ரெம்பாவாய்!


புகுந்த வீட்டில் புகுந்தாலும், சில அதீத அன்புள்ள பெண்கள், பிறந்த கிராமத்தையே மனத்தளவில் சுவாசித்துக் கொண்டு இருப்பார்கள்!
அது போலத் தான், பந்தலின் சுவாசத்தில், துளசீ மணமே அதிகம் கமழ்ந்து கொண்டு இருந்தது!

ஆனாலும், எங்கள் குல தெய்வம், தமிழ்க் கடவுள், அடியேன் இள வயதில் புகுந்த பிரான்,
என் முருகப் பெருமானிடத்திலே.....

இது வரை வந்த பந்தல் பதிவுகளையும், அடியார் கைங்கர்யத்தையும், இனி-தே ஒப்புக் கொடுத்து விடுகிறேன்!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி, நாடி நான் கண்டு கொண்டேன் நாரணா என்னும் நாமம்!

காதல் என் பெருமானே,
"உன் தனக்கு-நான்"
என்று "எழுதப்பட்ட" அந்நாள்!


உனக்கே நான் ஆட்செய்வேன்! உனக்கே நான் ஆட்செய்வேன்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
காதலால்...
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!



- உன் இதய வாசல்படி, மாதவிப் பந்தல்!

103 comments:

  1. அண்ணா, படிக்கத் தொடங்கி சிறிது நேரத்திலேயே என் கண்களில் நீர் வந்து விட்டது.. அதனைத் துடைக்கக் கூடத் தோணாமல் ”உணர்ந்து” முடித்தேன்.. வேறு என்ன சொல்ல.. கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்உ வருகிறேன்..

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய

    கண்ணபிரான் ரவிசங்கர் திருப்படிகளே சரணம்
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்
    தாயார் திருவடிகளே சரணம்
    எம்பெருமான் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  2. //அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ...
    சடகோபன் தண் தமிழ் நூல் வாழ...
    அனைவரும் இன்னுமொரு நூற்றாண்டு இரும்!//

    வாழ்த்துக்கு நன்றிகள் பல ! எமக்கு இராமானுஜ சம்பந்தம் ஏற்படுத்தித் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்..

    ReplyDelete
  3. திருக்கோஷ்டியூர் நிகழ்வை எம் கண்முன்னால் கொண்டு வந்துட்டீங்கண்ணா.. நானும் அங்கிருந்த அடியார் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதை உணர முடிந்தது.. நீங்கள் எத்தனையோ சிறப்பான பதிவுகள் எழுதினாலும் இராமானுசனைப் பற்றி எழுதுவது போல் வராது.

    ReplyDelete
  4. //ஆகா! ஆகா!
    * பொறி தட்டுகிறது இராமானுசருக்கு! எம்பெருமானே இப்படி ஊர் அறிய மந்திரத்தைக் காட்டிக் கொடுக்கிறானே! "வெட்ட வெளிச்சமாகத்" தானே அந்தக் கோபுரம் இருக்கு?//

    அற்புதம் அற்புதம்.. ரொம்ப நாட்களாக இருந்த சந்தேகம் இன்று தீர்ந்தது.

    ReplyDelete
  5. //இத்தனை பேர் இங்கு உழல்வதை விட, அடியேன் ஒருவன் தானே? நரகத்தில் தாராளமாக உழலலாம் அல்லவா? கேட்ட அத்தனை பேரும் மோட்சம் அடைவார்கள் இல்லையா?"//

    எம்பெருமானார் இருக்குமிடம் அல்லவோ நமக்கு வைகுந்தம்..

    ReplyDelete
  6. //ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
    ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது அதிக ஆசை வைத்து விடுங்கள்! //

    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! அவனுடன் நமக்கு இருக்கும் உறவை ஒழிக்கவோ, ஒளித்து வைக்கவோ யாரால் முடியும்

    ReplyDelete
  7. எம்மாம் பெரிய விளக்கம்... இதுக்கு அர்த்தமெல்லாம் இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் தான் புரியும் போலே... :))

    நன்னி..

    ReplyDelete
  8. என்னத்த சொல்ல... என்ன எழுதறதுன்னு தெரியல.... அப்பறம் வரேன்...

    இராகவ் முதல் பின்னூட்டத்தில் சொன்னதேதான்...

    - முகில்

    ReplyDelete
  9. இராகவ், தமிழ் சொல்வது போன்றே நான் உணர்கிறேன். நாம் கண்ணதாசன் ஆக வேண்டியதில்லை இராமானுஜதாசன் ஆக இருக்கும் பாக்கியம் கிட்டினாலே போதும். ஸ்ரீரங்கம் போய் உடையவர் சந்நிதி முன் அதிகாலைப் பொழுதில் போய் நில்லுங்கள். அவர் திருவிழி காடாட்சம் ஒரு துளி பட்டால் போதும் நமக்கு. அடியார்க்கு, அடியார் என்று அந்த வரிசையில் சும்மா நின்றால் போதும்.
    கண்ணபிரான் என்ன கைங்கர்யம்! உள்ளம் பூரிக்கிறது. நீரல்லவோ எம்பெருமானார்!

    ReplyDelete
  10. Vanakkam sir,


    Adiyen vanangugindren.
    Arangan arulvanaga.
    anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  11. @மக்கள்ஸ்
    சிறிது நேரம் கழிச்சி வாரேன்!
    இப்போ கொஞ்சம் தாபம் அடங்கலை! பேச முடியாது தவிப்பதால்...

    இன்னருளால் இனி எனக்கு ஒரு பாரம் ஏற்றாமல்...
    எம்பெருமான் அடைக்கலங் கொள் என்னை நீயே!!!

    ReplyDelete
  12. மாதவிப் பந்தலும் நிறைவு பெறுகிறதா? :-( இப்பதிவில் வெளிப்படையாக Followers ஆக இருக்கும் 69 பேர்களுக்கும் கூகுள் ரீடரில் இப்பதிவைப் படிக்கும் 197 பேர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் இரவி?

    ReplyDelete
  13. மாதவிப்பந்தல் நிறைவு பெறுகிறதா.:(

    ஆனால் நீங்கள் சரியான காரணம் வைத்திருப்பீர்கள். அதை தெரிந்துகொள்ளலாமா?

    ReplyDelete
  14. ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய

    நன்றி தல ;))

    ReplyDelete
  15. பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
    சொல்லி நின்று பின்னரும்
    பேசுவார் தமை உய்ய வாங்கிப்
    பிறப்பறுக்கும் பிரான் நாமமதை
    பிரித்துரைத்த பிரனே நீர் வாழ்க,
    இன்னொமொரு நூற்றாண்டு, இனிதே.

    விளக்கமாய் விரித்தாலும்
    விளங்கினாலும் விளங்காவிட்டாலும்
    களங்கம் கலைத்து, களைப் பிரித்து
    நல்லனவெல்லாம் துலங்கிடச் செய்யும்
    நாராயண நாமம், ஐயம் இல்லை.

    ReplyDelete
  16. Dear KRS,
    Ramanujan after telling this manthiram to people doesn't stop.He tried to reach as many as people he can, Similarly you also don't stop your panthal. To day you reached only 125 people. Still you have to reach 1^125+2^125+5^125 people.
    Anbudan
    Bakthan

    ReplyDelete
  17. //குமரன் (Kumaran) said...
    மாதவிப் பந்தலும் நிறைவு பெறுகிறதா? :-( //

    என்னதிது குமரன்.. மாதவிப்பந்தல் இப்பதிவுகளினால் ஒரு முழுமை பெற்றது எனு அர்த்தம் தான் நான் கொண்டிருந்தேன்.. இப்படிச் சொல்கிறீர்கள். :(

    ReplyDelete
  18. Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa

    Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa

    Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa

    Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa
    Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa
    Entanai murai nanri kurinaalum pattadunga sri ramanujar
    Tirumantira upadesam kooriyadarku (with signature- superb)

    ReplyDelete
  19. nam poorvarkalukku kidaitha bagyam
    thangalal adiyongalum kidaikapetrom.
    Thangal thiruvadikku pallandu!

    ReplyDelete
  20. அன்பர்கள் முதலி பதிவைப் பற்றிப் பேசுங்களேன்! மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்!

    1. இந்த ஓம்-நமோ-நாராயணாய சுருக்க விளக்கம் புரியும்படி இருந்ததா?

    2. யாருக்கும் கண்கள் சிவ-சிவ இல்லையே? :)

    3. திருக்கோட்டியூர் கோபுரத்தைப் பார்த்து உடையவர் மனசு ஆறுதல் கொண்டார் என்பது அடியேன் அவருடனான கற்பனை மட்டுமே!
    ஆனால் அந்தக் கோபுரம் உண்மையிலேயே 8 கோணம்-3 அடுக்கு தான்! அது திருமந்திர விளக்கத்தையே காட்டிக் கொடுக்கிறது! அது கற்பனை அல்ல!

    ReplyDelete
  21. 4. "ஓம்" என்பதை விட்டு விட்டு, "நமோ நாராயணாய" என்பதற்கு மட்டுமே விளக்கஞ் சொன்னார் என்று, ஒரு கைப்பிடியே உள்ள சிலர், பல குழுமங்களில் முன்னர் பேசி உள்ளனர்!

    அதில் உண்மையே இல்லை என்று ஆணித்தரமாக மறுக்கத் தான், அதையும் பதிவில் சேர்த்தேன்!

    ReplyDelete
  22. Dash தொடரின், Climax-க்கு வந்திருக்கோம்!
    அதுக்கும், மாதவிப் பந்தலுக்கும், "ரகசியத் தாலி"க்கும் என்ன சம்பந்தம்? ஹிஹி! அதெல்லாம் பதிவு முடியும் போது தான் தெரியும்! :))>>>>>>>>>


    தாலின்னாலே பொதுவா மறைஞ்சிதானே இருக்கும்?:)
    இப்படிக்கு,

    பதிவு எழுதும்போது கூடவே இருந்தபெருமையுடன்
    அன்பு அக்காவின் பின்னூட்ட சுனாமி இதோ தொடங்குகிறது!

    ReplyDelete
  23. இந்தப் பதிவு, மாதவிப் பந்தலுக்கு மிக முக்கியமான பதிவு!
    இந்த ஓம் நமோ Dash தொடரால், பந்தல் தன்னுடைய ஆன்ம பயனைப் பெற்றது-ன்னு கூடச் சொல்லீறலாம்///

    >>>>>>>>>>>


    இன்னமும் டாஷ் ஆ? ஓ ரகசியம் கடைசிலதான் வெளிவருமா? ஆன்மப்யனால் ஆன்மபலமும் பெற்று
    பந்தலுக்கு வருவாரெல்லாம் உய்யுமாறு உடையவரைப்போல நாமும் வேண்டிக்கொள்வோம்.

    ReplyDelete
  24. இந்தப் பதிவு, மாதவிப் பந்தலுக்கு மிக முக்கியமான பதிவு!
    இந்த ஓம் நமோ Dash தொடரால், பந்தல் தன்னுடைய ஆன்ம பயனைப் பெற்றது-ன்னு கூடச் சொல்லீறலாம்///

    >>>>>>>>>>>


    இன்னமும் டாஷ் ஆ? ஓ ரகசியம் கடைசிலதான் வெளிவருமா? ஆன்மப்யனால் ஆன்மபலமும் பெற்று
    பந்தலுக்கு வருவாரெல்லாம் உய்யுமாறு உடையவரைப்போல நாமும் வேண்டிக்கொள்வோம்.

    ReplyDelete
  25. இந்தப் பதிவில் உடையவர் இராமானுசர் உங்களுடன் பேசப் போகிறார்!
    அவர் திருக் கையொப்பத்தையும் காணப் போகிறீர்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>

    இரு
    விழிகள் செய்த தவம்தான் என்னே என்னே!

    பாக்கியமடைந்தோம்! எங்கதான் இதெல்லாம் தேடி எடுக்கறீங்களோ ரவி! புதையல் பொகிஷம்கண்ட மகிழ்ச்சியினும் பெரிதும் இதுதான்!

    ReplyDelete
  26. .....திருக்கோட்டியூர் கோபுரம் கண்ணுக்குத் தெரிகிறதே! அஷ்டாங்க விமானம்!
    அது ஒரு வித்தியாசமான அமைப்பு! ஆனானப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், திருவரங்கம் கோயிலுக்கு கூட 4 பக்கம் - 4 கோணம் மட்டுமே!
    ஆனா, இந்தச் சின்ன ஊரில்....ஒரே விமானத்தில்....மூன்று கருவறையும் இருக்கு! மொத்தம் 8 கோணமாய், 3 அடுக்குகள்! (Octagonal Trimetry)
    எட்டு கோணம்! மூனு அடுக்கு! = 1 + 2 + 5 = ஓம் + நமோ + நாராயணாய!
    <<<>>.///



    ஆஹா இறைவனை எட்டுத்திக்கும் காண்கிறார் எதிராஜர் என்பதால் அவர் பாதம்படும் கோபுரமும் அப்படி அமைந்துள்ளதா?

    ReplyDelete
  27. கண்டவனுக்கும் சொல்லீறக் கூடாது என்று "ரகஸ்யமாய்" மறைந்து கொள்கிறதா என்ன?
    * "கண்டவனுக்கு" எல்லாம், அது தன்னைக் காட்டி விடுகிறதே!
    >>>>>>>>>>>>>>>>>>>>


    கண்டுகொண்டோம் கண்டுகொண்டோம்!

    ReplyDelete
  28. விறு விறு என்று கோபுரத்தின் மேல் ஏறுகிறார்! கண்களின் ஓரத்தில் லேசாக நீர்!

    வந்த கண்ணீரை, கண்களின் நடு வழியில் வரும் போதே, தொண்டைக்குள் அடைத்துக் கொள்ளும் வித்தை! அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கார் போல!
    சின்னஞ் சிறு வயதிலேயே அனைத்துக் கொடுமைகளையும் பார்த்து விட்டார் அல்லவா?
    ஆசிரியர் விரட்டி விடல், கொலை முயற்சி, திருமண முறிவு, உடன் பழகிய பலரின் பொறாமை/வெறுப்பு, குருவைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் போதே குருவின் மரணம்! - இப்படிப் புடம் போட்டு விட்டது போல!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஏற்கனவே குளமான கண்கள் காவிரியாகின்றன இப்போது..

    ReplyDelete
  29. //
    ஓம் நமோ Dash.........???


    என்னது dash ஆ? மக்களுக்கு இங்கிலீஷ் அப்போவே தெரியுமான்ன?:)

    ReplyDelete
  30. அப்பாடா....இனி பிறவியே இல்லை என்ற சுயநலம் - வெறுமனே சம்சார துக்க நிவர்த்தி - அதுவா மோட்சம்? இல்லை! இல்லவே இல்லை!
    அந்தமில் பேரின்பத்து "அடியவர்களோடு" கூடி
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
    [>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    அதை எளிமையாய் அளித்தது எதிராஜர் மதியே !

    ReplyDelete
  31. //
    அவன் எங்கோ இருக்கிறான், தவம் செய்தால் மட்டுமே அடைய முடியும் என்று நினைத்து விடாதீர்கள்! - பெற்றவளைக் காணத் தவம் செய்ய வேண்டும் என்றில்லை!
    அவனுக்கும் நமக்குமான உறவு "என்றும்" இருக்கிறது! அதை அவனே நினைத்தாலும் ஒழிக்க முடியாது!///////

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ஆமாம்.

    அவனாலும் முடியாது நம்மாலும் முடியாது!

    ReplyDelete
  32. # அதனால் "பய பக்தியில்" பயத்தை விட்டு விடுங்கள்! பத்தியைக் கைக் கொள்ளுங்கள்! ப்ரபத்தியைக் கைக்கொள்ளுங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>


    ////மேன்மைப்படுவாய் மனமே கேள்
    விண்ணின் இடிமுன் விழுந்தாலும்

    பான்மைதவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயனில்லை///



    ஆன்மாவான கணபதியை கண்டுகொள்ளச்சொல்லும் பாடலில் இப்படி பாரதி சொல்வது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  33. //பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவ சிவ! கண்கள் சிவ சிவ! பற்கள் நற நற! அதரம் அர அர!///////

    வர வர என்னென்னவோ எழுதறீங்க!!
    ம்ம்ம்.....:)

    ReplyDelete
  34. //
    3. நா-ரா-ய-ணா-ய (5)* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!
    //
    தாலிச் சரட்டில், எட்டு இழைகள்-ரெண்டு சரடாய் இருக்கும்! = 16

    ஆனால் இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது!
    8 எழுத்து x 3 பதம் = 8 இழைகள் x 3 சரடுகளாய்,
    இன்னும் இறுக்குகின்றது! உங்களை அவனோடு இறுக்குகின்றது!
    ///
    >>>>> அருமை! மிகவும் அற்புதமான விளக்கம். புதிய கோணத்திலான சிந்தனை,பாராட்டுக்கள்>

    ஓம் நமோ நாராயணாய!

    வைணவத் தத்துவப்படி திருமால் உபேயமாக மட்டும் இல்லாமல் உபாயமாகவும் இருக்கிறான். அதாவது லட்சியமாக மட்டுமில்லாமல் அதை அடைவதற்குரிய கருவியாகவும் இருக்கிறான் என்று படித்திருக்கிறேன்.
    பந்தலில் எட்டெழுத்து திருமந்திரம்
    இப்படிக்கொட்டிமுழங்கவும் அவனே கருவியாக உங்களை பயன்படுத்தி அவனிடம் நம்மைச்சேர வழி சொல்லித்தருகிறான். தூயோமாய் வந்தோம்....தூமலர்சொற்களில் நீங்கள் அளித்த எட்டெழுத்து திருமந்திரப்பாமாலை கண்டோம்.
    இனி இதனையே வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திப்போம் எனக்கூறி]மகிழ்ச்சியுடன் முடிக்கிறேன் நன்றி ரவி.

    ReplyDelete
  35. என்ன ஒரு உணர்ச்சிப்பெருக்கு KRS ஐயா அற்புத பணி. அன்று இராமானுஜர் செய்ததை இன்று தாங்களும் செய்துள்ளீர்கள்.

    ஒரு வேண்டுகோள் மாதவிப்பந்தலில் குயில்கள் கூவ வேண்டும். தயவு செய்து தொடருங்கள்.

    ReplyDelete
  36. அனைவரின் ஆசிக்கும் நன்றிகள் பல!

    @கண்ணன் சார்
    //நா.கண்ணன் said...
    இராகவ், தமிழ் சொல்வது போன்றே நான் உணர்கிறேன்//

    :)
    தங்களுக்கேவா? ஆகா!

    //நாம் கண்ணதாசன் ஆக வேண்டியதில்லை இராமானுஜதாசன் ஆக இருக்கும் பாக்கியம் கிட்டினாலே போதும்//

    மிகவும் உண்மை!
    * அவனுடன் கூட இருந்த கீதை கேட்டவனே, கடைசியில் சரணம் வ்ரஜ-ன்னு சரணாகதி செய்யவில்லை! = இது எம் + பெருமான் லட்சணம்! :)
    * இவருடன் கூட இருந்து இவர் வாய்மொழி கேட்டோரெல்லாம் சரணாகதி செய்தார்கள்! தொண்டர் குலமே உருவானது! = இது எம் + பெரும் + ஆனார் லட்சணம்!

    இரண்டு லட்சணங்களில், எந்த லட்சணம், லட்சணமா இருக்கு-ன்னு இப்போ நீங்களே முடிவு கட்டிக்கலாம்! :))

    //கண்ணபிரான் என்ன கைங்கர்யம்! உள்ளம் பூரிக்கிறது//

    தங்களைப் போல அடியவர் உள்ள உகப்பே உகப்பு, கண்ணன் சார்!

    //நீரல்லவோ எம்பெருமானார்!//

    ஆகா! தவறு தவறு! அப்படி உச்சரிப்பது கூட தவறு!
    அவர் ஆதி சேஷன்!
    இவன் அற்ப சேஷன்!

    சேஷிக்கும்(அவனுக்கும்) - சேஷனுக்கும்(எனக்கும்) பல்லாண்டு-ன்னு சொல்லி வாழ்த்துங்கள்!அதுவே போதும்!

    ReplyDelete
  37. //நாம் கண்ணதாசன் ஆக வேண்டியதில்லை இராமானுஜதாசன் ஆக இருக்கும் பாக்கியம் கிட்டினாலே போதும்//

    மிகவும் உண்மை!
    * அவனுடன் கூட இருந்த கீதை கேட்டவனே, கடைசியில் சரணம் வ்ரஜ-ன்னு சரணாகதி செய்யவில்லை! = இது எம் + பெருமான் லட்சணம்! :)
    * இவருடன் கூட இருந்து இவர் வாய்மொழி கேட்டோரெல்லாம் சரணாகதி செய்தார்கள்! தொண்டர் குலமே உருவானது! = இது எம் + பெரும் + ஆனார் லட்சணம்!

    kannadasan aaga vendiyadillai enru koorugireergale enda kannadasan (kavijar kannadasan or neenga arjunarai solreengala)

    கண்ணதாசன் ஆக வேண்டியதில்லை
    sri krishnarai pattri koorugeergal enraal (perumalidam saranagathi aaga vendiyadillai enru koorugireergale - )
    perumalidam saranagathi adaindudaane sri ramanujar pala nalla ennangalai petraar
    (ex: ragasiyam velipadutiyadu)

    ReplyDelete
  38. நாம் கண்ணதாசன் ஆக வேண்டியதில்லை :)

    KANNANUKKUM DAASANAGA IRUKKANUM

    AVARIN ADIYAVARGALUKKUM (sri ramanujar) DAASANAGA IRUKKANUM ENBADU EM KARUTTU

    ReplyDelete
  39. இச்சுவை தவிரயான்போய்
    இந்திரலோகமாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகருளானே!

    எங்கயோ எப்பவோ படித்தது :)

    ReplyDelete
  40. DEAR KRS

    I REQUEST YOU TO CONSIDER MY PLEA. I STRONGLY BELIVE YOU AND YOU FRIENDS AND CO BLOGGERS AND BLOG READERS, i trust you guys CAN HELP.

    Recently, i went to PALLI KONDA TEMPLE, very ancient temple more than 600 years old.

    TN government undertook the temple and no MUTTS are supporting the temple.

    For MAHASAMPROSANAM they started renovating the temple. The work was started 3 years ago and still going on.TN Government just alloted 15000 rupees for that.

    Due to lack of funds, the committee formed by good heart BHAKTAS are struggling to complete that, needs FUNDS to complete the renovation.

    ONE DOLLAR CAN BUY SOME STUFF. i request you and your friends to support the temple's "MAHASAMPROSANAM"..

    "srimadhay ramanujaya nama"
    contacts:

    SRI ARANGAN BHAKTHA SABHAI
    REGISTERED NO: 140/2007
    24/14 SANNATHI STREET.
    PALLIKONDA. 635809
    VELLORE DISTRICT. TAMILNADU

    MR.venkatesan, secretary ...mobile 0091 9042137785...00919443989668.......00919443686869.....00914171244261..

    I BEG YOU AND YOUR FRIENDS,I FELL AT YOUR FEET.....PLEASE HELP....

    OM HARI...OM NAMO NARAYANA....


    your sincerely

    murali

    muralidaran_y@yahoo.co.in

    ReplyDelete
  41. //Anonymous said...
    DEAR KRS
    I REQUEST YOU TO CONSIDER MY PLEA. I STRONGLY BELIVE YOU AND YOU FRIENDS AND CO BLOGGERS AND BLOG READERS, i trust you guys CAN HELP//

    உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன்.. பாருங்க!
    உதவுதல் எளியது தாங்க முரளி! No problems about it! ஆனால்...எல்லாவற்றுக்கும் முன்...

    ஆலயத்தில் இப்போது அரங்கன் திருமேனி நலம் தானே? எந்தக் குறையும் இல்லையே?
    அது தான் முக்கியம்! அப்புறம் தான் சம்ப்ரோஷணம்/ குடநீர் தெளித்தல்/ குடமுழுக்கு பற்றிய விவரணங்கள் எல்லாம்!

    பள்ளிகொண்டா வேலூர்-வாணியம்பாடி ரூட் தானே? நாங்க வேலூருக்கு இந்தப் பக்கம், ஆரணி-வாழைப்பந்தல்!

    தொடர்பு விவரங்கள் கொடுத்தமைக்கு நன்றி! ஆலயம் பற்றியும், அதன் மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும் இன்னும் தெரிந்து கொள்ள வேணும்!
    மேலும் உதவுதல் என்பது ஒன்று! போதிய அளவு உதவல் என்பது இன்னொன்று! இதற்கு திருமடங்களையும் திரட்ட வேண்டும்! ஜீயர்களின் ஒத்துழைப்பும் அவசியம்! முனைப்பு மிகவும் தேவை!

    அடியேன் தனிப்பட்ட உதவி, இதோ, சில மணி நேரங்களில்...
    ஆலயம் குறித்து மேலும் தகவல்கள் தாருங்கள்!

    ReplyDelete
  42. Dear KRS

    I haven't receive you e-mail. Glad to know you are from VAZHAIPANTHAL.So "ARANGAN" is more close to you than me. I am stunned now, he used me to inform you about "kumbha abhisegam".All his wish.....om namo narayana...

    He has given an opportunity to us to participate in kumbha abhisegam".

    You are right, temple is near to GUDIYATTAM, I always go to "pallikonda temple" whenever i visit india.

    When, i talked to "bhattar", he said, temple is not supported by any "jeeyar mutts". Some good devotee's like you formed a commitee for "MAHASAMPROSANAM" due to lack of funds they are struggling.

    "Arangan is fine(MOOLAVAR SANNITHI IS CLOSED ALL ARATHIS IS FOR URCHAVAR") but his house is not good" that has to be fixed. The condition of "THIRUKULUM IS VERY BAD". Inside the temple everywhere grass and weeds, inclined walls"என் கண்களில் நீர் வந்து விட்டது"

    I have given you the contact numbers of persons involved in "THIRUPANI". Please ring MR.VENKATESAN 0091 9042137785 for more details because he is the key person.He will answer your queries.

    You can write a blog about "PALLIKONDA and ARANGAN" because your are chosen by him.

    AGAIN, I FELL AT THE FEET OF ALL HIS BHAKTA'S......PLEASE HELP.....

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய

    Murali

    ReplyDelete
  43. என்னது "மாதவிப் பந்தலும் நிறைவானது" ஆ

    தயவுகூர்ந்து தொடருங்கள்,

    ReplyDelete
  44. //Raghav said...
    அண்ணா, படிக்கத் தொடங்கி சிறிது நேரத்திலேயே என் கண்களில் நீர் வந்து விட்டது..//

    :)
    இனி ரொம்ப பேரை அழ வைக்க மாட்டேன் ராகவ்! :)

    //அதனைத் துடைக்கக் கூடத் தோணாமல் ”உணர்ந்து” முடித்தேன்..//

    "உணர்வது" என்பதற்குத் தான் இத்தனையும்!
    உள்ளத்தோடு உள்ளம் பேசினால் தான் "உணர" முடியும்!
    யோகங்களால் "அறியலாம்"! உள்ளத்தால் "உணரலாம்"! :)

    //கண்ணபிரான் ரவிசங்கர் திருப்படிகளே சரணம்//

    அடப்பாவமே! :)
    என்னைய விட்டுருங்க! நான் எங்கோ ஒரு ஓரமா இருந்துட்டுப் போயிடறேன்!

    //எம்பெருமானார் திருவடிகளே சரணம்
    தாயார் திருவடிகளே சரணம்
    எம்பெருமான் திருவடிகளே சரணம்//

    எம்பருமானார் திருவடிகளே சரணம்!
    ஸ்ரீயப் பதியான எம்பெருமான் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  45. //Raghav said...
    வாழ்த்துக்கு நன்றிகள் பல ! எமக்கு இராமானுஜ சம்பந்தம் ஏற்படுத்தித் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்..//

    இராமானுஜ சம்பந்தம் என்றால் அது கருணையின் சம்பந்தம்!
    காரேய் கருணையை உள்ளத்தில் கொண்டவர்க்கெல்லாம் இராமானுஜ சம்பந்தம் தான்!

    ReplyDelete
  46. //Raghav said...
    திருக்கோஷ்டியூர் நிகழ்வை எம் கண்முன்னால் கொண்டு வந்துட்டீங்கண்ணா..//

    :)

    //நானும் அங்கிருந்த அடியார் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதை உணர முடிந்தது..//

    நானும் அங்கிருந்து தான் இதை அப்படியே எழுதினேன்!
    அப்போ வீட்டில் ஷைலஜா அக்காவும் இருந்தாங்க! :)

    //நீங்கள் எத்தனையோ சிறப்பான பதிவுகள் எழுதினாலும் இராமானுசனைப் பற்றி எழுதுவது போல் வராது//

    :)
    என் முருகனைப் பற்றி எழுதும் பதிவுகள் கூடவா? :)
    அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

    ReplyDelete
  47. //Raghav said...
    //ஆகா! ஆகா!
    * பொறி தட்டுகிறது இராமானுசருக்கு! எம்பெருமானே இப்படி ஊர் அறிய மந்திரத்தைக் காட்டிக் கொடுக்கிறானே! "வெட்ட வெளிச்சமாகத்" தானே அந்தக் கோபுரம் இருக்கு?//

    அற்புதம் அற்புதம்.. ரொம்ப நாட்களாக இருந்த சந்தேகம் இன்று தீர்ந்தது//

    இது என்னுடைய-அவருடனான கற்பனை மட்டுமே ராகவ்! உடையவர்க்கும் அவ்வண்ணமே தோன்றி இருக்கலாம்!
    கோபுரமே வெளிப்படையாக நிற்பதைப் பார்த்து, அவர் இன்னும் துணிந்தார் என்று "உணர்ந்து" பார்த்தேன்! அவ்ளோ தான்! :)

    ஆனால் கோபுரத்தின் தாத்பர்யம் கற்பனை அல்ல! அது திரு மந்திர அர்த்தத்தைத் தான் காட்டிக் கொடுக்கிறது! அதை யாரும் மறுப்பதற்கில்லை!

    ReplyDelete
  48. //Raghav said...
    எம்பெருமானார் இருக்குமிடம் அல்லவோ நமக்கு வைகுந்தம்..//

    உண்மை தான்!
    அவன் திருவடி நிலைகள் தானே மோட்சம்!
    நின்றால் மர"அடியாம்",ஆதி சேஷன் அல்லவா அவர்! அப்படிப் பார்த்தால் அந்த அடியான அவர் தான் வைகுந்தம்!

    இன்றும் ஆழ்வார் திருநகரியில், மாறனின் திருவடி நிலைகள் (சடகோபனின் சடகோபம்), இராமானுசம் என்ற சிறப்புப் பெயரால் தான் வழங்குகிறது!

    அதனால் திருவடிச் செல்வமான அவர் இருக்கும் இடமே வைகுந்தம் தான்!

    ReplyDelete
  49. Raghav said...
    //ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
    ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது அதிக ஆசை வைத்து விடுங்கள்! //

    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! அவனுடன் நமக்கு இருக்கும் உறவை ஒழிக்கவோ, ஒளித்து வைக்கவோ யாரால் முடியும்//

    :)

    அதான் திருப்பாணாழ்வார் திருமேனி அழகில் "மட்டும்" ஆசை வைத்துப் பாசுரம் பேசினார்!

    பல ஆசைகளை விடவே முடியாது! துறவிகளும் மடம் செழிப்பா இருக்க ஆசைப்படுவார்கள்! :)
    உலகம் மாயை! ஆசையெல்லாம் மாயை! ஜீவன் முக்தி! கைவல்யம்-ன்னு பதிவில் வேணும்ன்னா கண்டதையும் பேசலாம்! ஆனால் அந்த வாக்கியங்களின் சக்தி நிமிடத்தில் காணாமப் போகும்! :)

    பல ஆசைகளை விடவே முடியாது! ஆருயிர் நண்பனைக் கனவிலும் துறக்கவே முடியாது!
    சிறு சிறு பிழைகள் கண்டாலும் அம்மா அப்பாவை விட முடியாது! அப்பறம் என்ன ஆசையை ஒழி? :)

    அதான் அவன் திருமேனி மேல் அதிக ஆசை வைத்து விட வேண்டும்!
    அப்படி வைத்து விட்டால், மற்ற ஆசைகள் கூடவே இருக்கும்! ஆனால் அவன் மேலுள்ள ஆசையை மிஞ்சாது! அடங்கியே இருக்கும்!

    அதுக்குத் தான் இத்தனை திருமேனிகள்! இத்தனை ஆலயங்கள்! இத்தனை அர்ச்சா விக்ரகங்கள் ஆலயம் தோறும்!

    இந்தத் திருமேனிகளுக்கு குடம் குடமா பாலோ, தங்கக் கவசமோ தேவையில்லை!
    அந்தத் திருமேனி மேல் குடம் குடமாப் பாலை ஊற்றச் சொல்லிக் கேட்பதில்லை பெருமாள்!
    நம் கண்களை அல்லவா ஊற்றச் சொல்லிக் கேட்கிறான்?


    எப்படி ஒரு காதலிக்கு, தலைவன் திருமேனியைத் தவிர வேறு ஒரு இன்பம் தோன்றாதோ...அதே போல்...
    அவன் திருமேனி மீது "அதிக" ஆசை வைத்து விட்டால்...
    மற்றைய நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் தான்! :)

    ReplyDelete
  50. //இராம்/Raam said...
    இதுக்கு அர்த்தமெல்லாம் இன்னும் கொஞ்சநாளைக்கப்புறம் தான் புரியும் போலே... :))
    நன்னி..//

    ஹிஹி!
    எப்ப புரிஞ்சாலும் ஓக்கே தான் ராமேய்! :)
    இன்னிக்கி "உணர்ந்துக்கலாம்"! நாளைக்கி "புரிஞ்சிக்கலாம்"! :)

    அதான் தாலி-ன்னு சொல்லி முடிச்சேன்! அது ஈசியா "உணர்ந்துக்கலாம்" தானே? :)

    ReplyDelete
  51. //தமிழ் said...
    என்னத்த சொல்ல... என்ன எழுதறதுன்னு தெரியல.... அப்பறம் வரேன்...//

    ஹிஹி!
    இனிமே இந்தப் பதிவுக்கு மட்டுமே தான் வரமுடியும் முகில்! :)

    //இராகவ் முதல் பின்னூட்டத்தில் சொன்னதேதான்...
    - முகில்//

    கண்களின் நீரால் திருமஞ்சனமா? :))

    ReplyDelete
  52. //Anonymous said...
    Vanakkam sir,
    Adiyen vanangugindren.
    Arangan arulvanaga.
    anbudan,
    k.srinivasan//

    வாங்க ஸ்ரீநிவாசன் சார்! இது நாள் வரைக்கும் தொடர்ந்து வந்து, ஒவ்வொரு பின்னூட்டத்திலும் "அரங்கன் அருள்வானாக" என்று ஆசித்த உங்களுக்கு மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  53. //குமரன் (Kumaran) said...
    மாதவிப் பந்தலும் நிறைவு பெறுகிறதா? :-(//

    நீங்காத செல்வம் "நிறைந்தேலோ" ரெம்பாவாய்...குமரன்!

    //இப்பதிவில் வெளிப்படையாக Followers ஆக இருக்கும் 69 பேர்களுக்கும் கூகுள் ரீடரில் இப்பதிவைப் படிக்கும் 197 பேர்களுக்கும்//

    நீங்க சொல்லி முடிக்கறத்துக்குள்ள 71 ஆயிரிச்சி! :)


    //என்ன சொல்ல விரும்புகிறீர்கள் இரவி?//
    நான் என்ன சொல்ல விரும்பறேனா? என்ன குமரன் இப்படியெல்லாம் கேள்வி கேட்டு பயமுறுத்தறீங்க! எனக்கு கேள்வீ-ன்னாலே பயம்! :)

    இராமானுசரும், வண்ணான், குயவன் முதலான கோயில் பணியாளர்களும், சார்த்தாத முதலிகள், சார்த்திய நம்பிகள் என்று அடியவர் பலரும்...குணானுபவத்தில் பேசிக் களிக்கும் போது, டொங் டொங் என்று சத்தம் கேட்குமாம்! அரங்கன் மதில் உலா வரும் சத்தம்!

    "வந்துட்டான்-யா கோஷ்டி கலைப்பான்! நல்ல குணானுபவத்தை எதுக்கு ரங்கா நீ வந்து கலைக்கற? உன்னை எவன் வரச் சொன்னா? அதான் குணானுபவத்தில் உன்னை விதம் விதமா ஏளப் பண்ணுறோமே? போதாதா??"-ன்னு இராமானுசர் வேடிக்கையாக் கேட்பாராம்! :))

    நல்ல காலம், அவர் மேல யாரும் பாயலை, அரங்கனைச் சினிமாத்தனமா பேசிட்டீர்-ன்னு! :)))
    இன்றும் நம்பெருமாளுக்கு "கோஷ்டி கலைப்பான்" என்ற திருநாமம் உண்டு, கட்டியம் கூறும் போது!

    அதையே சொல்ல விரும்புகிறேன், 71 பேர்களுக்கும் 197 பேர்களுக்கும்! = குணானுபவத்தில் என்றும் இருங்கள்!

    கண்டவனையும் பேசுவோம்!
    அதோடு கூட,
    நம்மைக் கொண்டவனையும் பேசுவோம்!

    பலதைப் பேச பலதும் விளையும்!
    அவனைப் பேச அவனே விளையும்!

    குணானுபவத்தில், கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  54. //சின்ன அம்மிணி said...
    மாதவிப்பந்தல் நிறைவு பெறுகிறதா.:(
    ஆனால் நீங்கள் சரியான காரணம் வைத்திருப்பீர்கள். அதை தெரிந்துகொள்ளலாமா?//

    வாங்க சின்ன அம்மிணி-க்கா! ஹிஹி! காரணம் எல்லாம் ஒன்னுமில்லை! கோஷ்டி கலைப்பான்-ன்னு குமரனுக்குச் சொன்னதே தான்-க்கா!

    சரீ...பேசாம புதிரா புனிதமா இனி நீங்க போடுங்களேன்! :)

    ReplyDelete
  55. //கோபிநாத் said...
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ நாராயணாய

    நன்றி தல ;))//

    ஜூப்பரு! மூனு வாட்டி சொல்லீட்டியா மாப்பி! தினமும் ஒரு தபா, இதே போல மனசாலத் தொட்டுக்கிட்டு சொல்லணும்! ஓக்கேவா? :)

    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!
    ஓம் நமோ நாராயணாய!

    ஓம் நான் உன்னுடையவனே!
    ஓம் நான் உன்னுடையவனே!
    ஓம் நான் உன்னுடையவனே!

    ReplyDelete
  56. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
    சொல்லி நின்று பின்னரும்
    பேசுவார் தமை உய்ய வாங்கிப்
    பிறப்பறுக்கும் பிரான் நாமமதை//

    பாசுரம் கலக்கல் ஜீவா!

    //பிரித்துரைத்த பிரானே நீர் வாழ்க,
    இன்னொமொரு நூற்றாண்டு, இனிதே//

    ஆசிக்கு நன்றி ஜீவா!

    //விளக்கமாய் விரித்தாலும்
    விளங்கினாலும் விளங்காவிட்டாலும்
    களங்கம் கலைத்து, களைப் பிரித்து
    நல்லனவெல்லாம் துலங்கிடச் செய்யும்
    நாராயண நாமம், ஐயம் இல்லை.//

    உண்மை தான் ஜீவா!
    விளக்கமோ, கலக்கமோ, பொருள் புரிதலோ, பொருள் புரியாதலோ...
    எதுவாயினும் "உணர்தல்"...

    நாடி நான் "தெரிந்து" கொண்டேன்!
    நாடி நான் "புரிந்து" கொண்டேன்!
    நாடி நான் "விளங்கிக்" கொண்டேன்
    -ன்னு எல்லாம் சொல்லாம...
    நாடி நான் "கண்டு" கொண்டேன் என்று பாடுவதில் இருந்தே தெரியுது-ல்ல ஜீவா? சரியான நேரத்தில் சரியாகச் சொன்னீர்கள்!

    பந்தலின் பால் பலகாலம் தாங்கள் காட்டிய அன்புக்கு இவ்வமயத்தில் அடியேனின் நன்றிகள் பல!

    ReplyDelete
  57. //Anonymous said...
    Dear KRS,
    Ramanujan after telling this manthiram to people doesn't stop.He tried to reach as many as people he can//

    ஹிஹி! உண்மை தாங்க!

    //Similarly you also don't stop your panthal. To day you reached only 125 people. Still you have to reach 1^125+2^125+5^125 people.//

    ஹா ஹா ஹா!
    பந்தல் பதிவுகள் எல்லாம் அப்படியே தாங்க இருக்கும்!
    பின்னூட்டச் சர்ச்சைகள் அதிகம் நடந்த சில பதிவுகளை அழிக்கலாமா என்ற ஒரு எண்ணம் தோன்றி, அதைக் கூட விட்டுவிட்டேன்!

    * யார் தமிழ்க் கடவுள்?
    * தமிழில் அர்ச்சனை செய்யலாமா?
    * தில்லை ஆறுமுகச் சாமி ஐயாவுக்கும், தீட்சிதர்களுக்கும் திறந்த மடல்
    * தேவாரம் பாடிய "ஒரே" பெண்
    * கோயில் உண்டியலில் காசு போடலாமா?

    ஆக...பந்தல் அப்படியே தான் இருக்கும்! Dont Worry! :)
    நானும் வேறு சில அன்பர்கள் பதிவில் பேசிக்கிட்டு தானே இருக்கேன்? :)

    ReplyDelete
  58. //Raghav said...
    என்னதிது குமரன்.. மாதவிப்பந்தல் இப்பதிவுகளினால் ஒரு முழுமை பெற்றது எனு அர்த்தம் தான் நான் கொண்டிருந்தேன்.. இப்படிச் சொல்கிறீர்கள். :(//

    நீ குமரனை விடவே விடாதே ராகவ்! :)
    கூடல், பல் கால் குயில் இனங்கள் கூவும் இடமாக இருக்க, கூடவே இரு!
    எம்பெருமான் குணானுபவத்துக்கு, அனைவரும், கூடிடு கூடலே! கூடிடு கூடலே!

    ReplyDelete
  59. //srikamalakkanniamman said...
    Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa
    Nanringa Nanringa Nanringa Nanringa Nanringa//

    என்னது இது? இத்தனை நன்றியா? :)

    //Entanai murai nanri kurinaalum pattadunga sri ramanujar
    Tirumantira upadesam kooriyadarku//

    ஹிஹி! இது பல நாள் ஆசை தான்! பல இடங்களில் கோபுரத்தின் மேல் ஏறிச் சொன்னாரு-ன்னு தான் இருக்கும்! ஆனா என்ன சொன்னாரு-ன்னு இருக்காது! :)
    அதான் பந்தலில் அந்த விழைவைத் தீர்த்துக் கொண்டேன்! :)

    //(with signature- superb)//

    அந்தக் திருக் கைச்சாற்று/கையொப்பம் இன்றும் மேலக்கோட்டையில் MA Azhwar என்ற அர்ச்சகர்/அரையர் வீட்டில் உள்ள ஓலைச் சுவடியில் உள்ளது! விசாரித்துக்கொண்டு போனால், கவனமாக எடுத்துக் காட்டுவார்! அதை Digitize-உம் செய்து வைத்துள்ளார்கள்!

    ReplyDelete
  60. //selvanambi said...
    nam poorvarkalukku kidaitha bagyam
    thangalal adiyongalum kidaikapetrom.//

    அடியேனும்...
    அன்று முன்னோர்களுக்கு கிட்டியது போலவே, கோபுரத்தின் கீழ் இருந்தே, தங்கள் எல்லாருடன் சேர்ந்து, பெரிய திருமந்திரம் சேவிக்கப் பெற்றேன்!

    //Thangal thiruvadikku pallandu!//
    தவறு! தவறு! :)

    * எம்பெருமானார் இடையான ஆச்சார்ய திருவடிக்குப் பல்லாண்டு!
    * மாறன் முதலான ஆழ்வார் திருவடிகளுக்குப் பல்லாண்டு!
    * பெரிய சிறிய திருவடிகளின் திருவடிகளுக்குப் பல்லாண்டு!

    * என் தோழி கோதையின் மென் பிஞ்சுத் திருவடிகளுக்குப் பல்லாண்டு! :)
    * செவ்வடி செவ்வித் திருக்காப்பு!

    ReplyDelete
  61. ஷைலஜா அக்கா பின்னூட்டப் புயலுக்கு இப்போ பதில் சொல்ல முடியாது! :)
    மத்தவங்களை எல்லாம் முடிச்சிட்டு வாரேன்-க்கா! :)

    ReplyDelete
  62. //Kailashi said...
    என்ன ஒரு உணர்ச்சிப்பெருக்கு KRS ஐயா அற்புத பணி.//

    :)
    கூடி இருந்து குளிர்ந்தேலோ, கைலாஷி ஐயா!

    //அன்று இராமானுஜர் செய்ததை இன்று தாங்களும் செய்துள்ளீர்கள்.//

    ஆகா!
    அன்று இராமானுசர் செய்ததை, அடியேன் பதிவில் ஒப்பிச்சேன்! அவ்வளவே! :)

    //ஒரு வேண்டுகோள் மாதவிப்பந்தலில் குயில்கள் கூவ வேண்டும். தயவு செய்து தொடருங்கள்.//

    பந்தல் அப்படியே தான் இருக்கும் கைலாஷி ஐயா!
    நான் தான் ஒங்க பதிவுக்கெல்லாம் வரப் போறேனே! அப்பறம் என்ன? :)

    ReplyDelete
  63. //Rajesh Narayanan said...
    sri krishnarai pattri koorugeergal enraal (perumalidam saranagathi aaga vendiyadillai enru koorugireergale - )//

    ஹா ஹா ஹா
    கண்ணன் சார் அப்படிச் சொல்லவில்லை ராஜேஷ்!
    கண்ணனின் தாசன் ஆக நாம் ரொம்ப முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை! இராமானுசரிடம் போய் வெறுமனே நின்றால், அந்த வெள்ளமே, துரும்பை அடிச்சிக்கிட்டு போய் கண்ணனிடம் சேர்த்து விடும்! அதைத் தான் சொல்கிறார்! :)

    //KANNANUKKUM DAASANAGA IRUKKANUM
    AVARIN ADIYAVARGALUKKUM (sri ramanujar) DAASANAGA IRUKKANUM ENBADU EM KARUTTU//

    ஹிஹி! நல்ல கருத்து தான்!
    கண்ணனின் தாசனா இருக்குறது நிஜ வாழ்வில் ரொம்ப கஷ்டம்! கள்ளன் ரொம்ப கண்டிஷன் எல்லாம் போடுவான்! :)

    அதான் இராமன் கோஷ்டியா? இராமானுசன் கோஷ்டியா?-ன்னு கேட்கும் போது, மக்கள், இராமானுசன் கோஷ்டி-ன்னு இந்தப் பக்கம் வந்துட்டாங்க! :)

    ReplyDelete
  64. //எம்.எம்.அப்துல்லா said...
    இச்சுவை தவிரயான்போய்
    இந்திரலோகமாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகருளானே!

    எங்கயோ எப்பவோ படித்தது :)//

    ஆகா! அப்துல்லா, கலக்கறீய! :)
    இதைக் கொஞ்சம் மாத்தி, "இச்"-சுவை தவிர யான் போய்-ன்னு கோதை பாடுவதா பாட்டை மாத்திப்புட்டேன்! :))

    சரி, நோன்பு எப்படிப் போகுது? ஸ்வாமி ஓம்கார் கிட்டக்கச் சொல்லி, துலக்கா நாச்சியார் பற்றி எழுதச் சொல்லணும்!

    ReplyDelete
  65. //Logan said...
    என்னது "மாதவிப் பந்தலும் நிறைவானது" ஆ
    தயவுகூர்ந்து தொடருங்கள்//

    வாங்க லோகன்! நான் இங்கிட்டு தான் இருப்பேன்! No Issues! :)

    ReplyDelete
  66. //Anonymous said...
    Dear KRS
    I haven't receive you e-mail. Glad to know you are from VAZHAIPANTHAL.So "ARANGAN" is more close to you than me.//

    ஹிஹி! உங்க பதில் மின்னஞ்சலும் இப்போ வந்துவிட்டது!
    கோயில் பற்றிய உங்க தொடுப்புகளைப் பார்த்தேன்! தமி மடலில் பேசுவோம்! குமரன் அண்ணாவைப் பதிவிடச் சொல்கிறேன் ஆலயம் பற்றி!

    //Inside the temple everywhere grass and weeds, inclined walls"என் கண்களில் நீர் வந்து விட்டது"//

    உழவாரம் பற்றி Temple Cleaners குழுமத்தில் பேசுகிறேன்!
    அப்பர் சுவாமிகள் செய்த பணியின் அருமை இப்போ தான் நமக்குத் தெரியுது பாத்தீங்களா?

    ஆலயம்-பொது மக்கள் உறவு எப்போதும் நன்கு அமைந்தால் தான் கோயில் சீர்மை காணும்! ஒரு முறை திருப்பணி செய்து விட்டாலே முடிந்து விடாது! தொடர்ந்து Maintenanceஇல் இருக்க, மக்களைச் சென்றடையணும்! நிர்வாகிகள் தான் திட்டம் வகுக்கணும்!

    இங்கே பள்ளிகொண்டா நிலையை எழுப்பிச் சொன்னமைக்கு நன்றி முரளி!

    ReplyDelete
  67. ஹிஹி! இது பல நாள் ஆசை தான்! பல இடங்களில் கோபுரத்தின் மேல் ஏறிச் சொன்னாரு-ன்னு தான் இருக்கும்! ஆனா என்ன சொன்னாரு-ன்னு இருக்காது! :)
    அதான் பந்தலில் அந்த விழைவைத் தீர்த்துக் கொண்டேன்! :)


    Krs ayya ennanga idu kanla neer nikkudu
    Ramanujar history pala padikkum podu
    No body ramanujar enna mandira upadesam seidaar enru kooravillai
    Ramanujar kopuram meleri ragasyam velipadutinnar enre paditirukiren
    Enna upadesam enru naan arindavarai yaarum velipaditiyadillai. (books, internet)
    I realy feeling long days;. And Iam contact some devotional persons in mail
    and everybody not in perfect. Suddenly I seen in ur mail iam so happy
    that’s why I thanks more more more. Perumaalin arulum aasiyodum nalamudan vazhveenga --- om namo narayanaaaaaaaaaaaaya!!!

    ReplyDelete
  68. அந்தக் திருக் கைச்சாற்று/கையொப்பம் இன்றும் மேலக்கோட்டையில் MA Azhwar என்ற அர்ச்சகர்/அரையர் வீட்டில் உள்ள ஓலைச் சுவடியில் உள்ளது! விசாரித்துக்கொண்டு போனால், கவனமாக எடுத்துக் காட்டுவார்! அதை Digitize-உம் செய்து வைத்துள்ளார்கள்!

    aaha enna ungal sevai (aridaana sri ramanujar sign) engalukku kaatineere kodi punniyamya ungalukku

    ReplyDelete
  69. மாதவிப்பந்தல் நிறைவு பெறுகிறதா

    Pala nalla visaiyangalai kooriyirukireerga
    Mukkiyamana sriramanujarin ragasiyattaiyum velipaduti irukireergal
    Indha visayangalai pera neenga niraiya kadinapattu irupeenga
    Ungal anubavattai engalidan pagirndu kollalame (surukamaga)
    nagalum terindu kolvom
    already perumaaluku teriyum

    ReplyDelete
  70. Hope you ment to say the end for this topic. If not then it's not fare as i'm just started to join the groove..
    more over, what about "1^125+2^125+5^125" mentioned by Anbudan
    Bakthan

    ReplyDelete
  71. //Rajesh Narayanan said...
    @Krs ayya ennanga idu kanla neer nikkudu//

    ஆகா! நான் ஐயா இல்ல! பையா! :)

    //Ramanujar kopuram meleri ragasyam velipadutinnar enre paditirukiren
    Enna upadesam enru naan arindavarai yaarum velipaditiyadillai. (books, internet)//

    அதான் இப்ப வெளிப்படுத்தியாச்சே! என்சாய் மாடி! :)

    //Suddenly I seen in ur mail iam so happy
    that’s why I thanks more more more. Perumaalin arulum aasiyodum nalamudan vazhveenga//

    :)
    ஆசிக்கும் அன்புக்கும் நன்றி ராஜேஷ்!

    ReplyDelete
  72. //Rajesh Narayanan said...
    Indha visayangalai pera neenga niraiya kadinapattu irupeenga
    Ungal anubavattai engalidan pagirndu kollalame (surukamaga)
    nagalum terindu kolvom
    already perumaaluku teriyum//

    ஹிஹி! என்னோட தனிப்பட்ட அனுபவமா? அப்படி எல்லாம் பெருசா ஒன்னுமில்லீங்க! :)

    ஒரு பெண், இவர் தான் என் காதல் கணவன், அவனின் பழக்க வழக்கங்கள்-ன்னு ஜாலியா கலாய்ச்சிப் பொதுவில் பேசுவாள்!

    ஆனால் கணவனுடனான அனுபவங்களை, பெற்ற சுகத்தைப் பொதுவில் பேச முடியாது நின்றாற் போலே...

    :))))

    சரி சரி, அதான் ஆயிரம் ஆண்டுக்கு முன்னுள்ள திருக்கோட்டியூருக்கு கற்பனையாப் போய் மந்திரப் பொருள் எது-ன்னு தெரிஞ்சிக்கிட்டாச்சே! நானே பதிவைப் பத்து முறை படிச்சிட்டேன்! நிறைவா இருந்துச்சி! போதும் அல்லவா! :))

    ReplyDelete
  73. //Vinu said...
    Hope you ment to say the end for this topic.//

    :)

    //If not then it's not fare as i'm just started to join the groove..//

    கண்ணன் பாட்டு, முருகன் அருள் போன்ற குழு வலைப்பூக்களையும் வாசியுங்கள்! அங்கே குமரன், கவி அக்கா போன்ற அன்பர்கள் இதே போல் அமுது செய்விப்பார்கள்! நானும் பின்னூட்டங்களின் வாயிலாக இங்கிட்டு தான் இருப்பேன்! எங்கும் போகவில்லை! :)

    பந்தலில் திருப்பாவைப் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்! மின் புத்தகம் வலப்பக்கச் சுட்டியில் இருக்கு!

    ReplyDelete
  74. //ஷைலஜா said...
    தாலின்னாலே பொதுவா மறைஞ்சிதானே இருக்கும்?:)//

    ஹிஹி! தாலி, கட்டிக்கிட்ட பின்பு தான் மறைஞ்சி இருக்கும்-க்கா!

    ஆனா அதுக்கு முன்னாடி, ஊருக்கே காட்டிக் காட்டித் தான், ஆசி வாங்குவாங்க! ஸோ, நோ மறைவு or மறை பொருள்! :)) ஊருக்கே காட்டணும்! மறைக்கக் கூடாது! :))

    //இப்படிக்கு,
    பதிவு எழுதும்போது கூடவே இருந்தபெருமையுடன்
    அன்பு அக்காவின் பின்னூட்ட சுனாமி இதோ தொடங்குகிறது!//

    ஹா ஹா ஹா
    நல்ல வாய்ப்பு! நீங்க வீட்டுக்கு வந்த போது தான், இந்த முத்தாய்ப்பான பந்தல் பதிவு போடணும்-ன்னு இருக்கு போல! :)

    ReplyDelete
  75. //ஷைலஜா said...
    இன்னமும் டாஷ் ஆ? ஓ ரகசியம் கடைசிலதான் வெளிவருமா?//

    ஆமாம்! டாஷ் என்னும் நாமம்! நாடி நான் கண்டு கொண்டேன்-ன்னு கடைசீ வரில தானே வைக்கறாரு? :)

    //ஆன்மப்யனால் ஆன்மபலமும் பெற்று
    பந்தலுக்கு வருவாரெல்லாம் உய்யுமாறு உடையவரைப்போல நாமும் வேண்டிக்கொள்வோம்//

    அப்படியே ஆகட்டும்-க்கா!
    ஆமென்! ததாஸ்து!

    பந்தலுக்கு வருகை புரிந்தோர்க்கு மட்டுமே அல்லாது, அனைவருக்கும் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

    ReplyDelete
  76. //ஷைலஜா said...
    இந்தப் பதிவில் உடையவர் இராமானுசர் உங்களுடன் பேசப் போகிறார்!
    அவர் திருக் கையொப்பத்தையும் காணப் போகிறீர்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>

    பாக்கியமடைந்தோம்! எங்கதான் இதெல்லாம் தேடி எடுக்கறீங்களோ ரவி! புதையல் பொகிஷம்கண்ட மகிழ்ச்சியினும் பெரிதும் இதுதான்!//

    :)
    இந்தப் பதிவுகளுக்கு எல்லாம் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருந்தது-க்கா!
    எப்படிக் கொடுத்தா திருமந்திரப் பொருள் பலருக்கும் எளிமையாப் போய்ச் சேரும்-ன்னு, கொஞ்சம் மனசுக்குள்ள காரு ஓட்ட வேண்டி இருந்துச்சி! :)

    அதான் கதையை முதலில் சொல்லி, பொருளைப் பதிவின் இறுதியில் வைத்தேன்!

    பந்தல் பதிவுகள் கொஞ்சம் நீளம் தான்! ஆனா ரொம்ப மொக்கை இல்ல! கொஞ்சமாச்சும் விஷயம் இருக்கும்-ன்னே நினைக்கிறேன்! :))

    பார்த்து பார்த்து செய்யும் போது கிடைக்கும் மனத் திருப்தியே தனி! அரங்கனுக்குச் செய்யும் கர்ப்பூர படியேற்றச் சேவை போல! :)

    ReplyDelete
  77. //ஷைலஜா said...
    ஆஹா இறைவனை எட்டுத்திக்கும் காண்கிறார் எதிராஜர் என்பதால் அவர் பாதம்படும் கோபுரமும் அப்படி அமைந்துள்ளதா?//

    இல்லக்கா!
    அந்தக் கோபுர அமைப்பு முதலில் இருந்தே அப்படித் தான் இருக்கு! பல ஆயிரம் ஆண்டுகளாய்! அந்த "வெளிப்படையை" பார்த்து தான் உடையவருக்கும் பொறி தட்டியதோ என்னவோ!
    சாத்திரம் எதுவும் மீறல் கிடையாது என்று கோபுரமே அவருக்குக் காட்டிக் கொடுத்தது போலும்!

    ReplyDelete
  78. //ஷைலஜா said...
    என்னது dash ஆ? மக்களுக்கு இங்கிலீஷ் அப்போவே தெரியுமான்ன?:)//

    Adiyen Dashan-ன்னு சொல்றாங்க-ல்ல? அதான்-க்கா! :))))))

    ReplyDelete
  79. //ஷைலஜா said...

    மேன்மைப்படுவாய் மனமே கேள்
    விண்ணின் இடிமுன் விழுந்தாலும்
    பான்மைதவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயனில்லை

    ஆன்மாவான கணபதியை கண்டுகொள்ளச்சொல்லும் பாடலில் இப்படி பாரதி சொல்வது நினைவுக்கு வருகிறது//

    சூப்பரு! பய-பக்தி இல்லை! பக்தியே-ன்னு பாரதியார் பாட்டு எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி-க்கா!
    பயத்தால் ஏதும் பயனில்லை! ஆகா! என்னமாச் சொல்லிட்டாரு நம்ம மீசைக் கவி! ஆசு கவி!

    ReplyDelete
  80. //ஷைலஜா said...
    //பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவ சிவ! கண்கள் சிவ சிவ! பற்கள் நற நற! அதரம் அர அர!///////

    வர வர என்னென்னவோ எழுதறீங்க!!
    ம்ம்ம்.....:)//

    ஹா ஹா ஹா
    கண்கள் சிவ சிவ -ன்னு சிவந்து போவதைத் தான் சொன்னேன்-க்கா! :)

    இப்படியெல்லாம் எழுதும் போதே, சிவனுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்-ன்னு சொல்லுறாங்க! :)
    மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி- சைவ இடி, வைணவ இடி-ன்னு பேதமே இல்லாம கெடைக்குது எனக்கு! ஐ லைக் இட்! :)))

    ReplyDelete
  81. //ஷைலஜா said...

    //3. நா-ரா-ய-ணா-ய (5)* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!//

    அருமை! மிகவும் அற்புதமான விளக்கம். புதிய கோணத்திலான சிந்தனை,பாராட்டுக்கள்//

    இது என் விளக்கம் மட்டுமில்லை-க்கா! தாலி பற்றி இராமானுசரும் சொன்னது தான்! முமுட்சுப் படி என்னும் நூலில் கடேசியில் ஒரே ஒரு வரி மட்டும் இருக்கும்!

    //வைணவத் தத்துவப்படி திருமால் உபேயமாக மட்டும் இல்லாமல் உபாயமாகவும் இருக்கிறான். அதாவது லட்சியமாக மட்டுமில்லாமல் அதை அடைவதற்குரிய கருவியாகவும் இருக்கிறான் என்று படித்திருக்கிறேன்.//

    நீங்க சொல்றது சரி தான்-க்கா!
    உபாயமும் அவனே!
    உபேயமும் அவனே!
    கோதையும் இதை ஒரே வரியில் காட்டிக் கொடுக்கிறாள்! என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்? :)

    //பந்தலில் எட்டெழுத்து திருமந்திரம்
    இப்படிக்கொட்டிமுழங்கவும் அவனே கருவியாக உங்களை பயன்படுத்தி அவனிடம் நம்மைச்சேர வழி சொல்லித்தருகிறான்.//

    :)
    நன்றி-க்கா!
    அதுவே நியமனம் என்றால் படியாய்க் கிடப்பேன்! :)

    //இனி இதனையே வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திப்போம் எனக்கூறி]மகிழ்ச்சியுடன் முடிக்கிறேன் நன்றி ரவி.//

    பந்தல் வாசகர்களுக்கு எல்லாம் நன்றி-ன்னு சொல்லும் இந்த வேளையில், உங்களுக்கு என்னா சொல்றது-ன்னு தான் தெரியலை! அதுனால ஒன்னும் சொல்லாமயே முடிக்கிறேன்! :)

    ReplyDelete
  82. Krs ayya adiyen oru sandegam (oru mukkiya visayamaaga idai ketkiren anda visayattai piragu koorugiren)
    Vaduga nambi sri ramanujar taligai sevai seidaara
    Kidambi aachaan sri ramanujar taligai sevai seidaara

    ReplyDelete
  83. //srikamalakkanniamman said...
    Krs ayya adiyen oru sandegam (oru mukkiya visayamaaga idai ketkiren anda visayattai piragu koorugiren)//

    :)
    என்ன ராஜேஷ்? பந்தல் நிறைந்தும் கேள்விகள் நிறையவில்லை போல! :))

    //Vaduga nambi sri ramanujar taligai sevai seidaara
    Kidambi aachaan sri ramanujar taligai sevai seidaara//

    இராமானுசருக்கு தளிகைச் சேவை செய்யும் பொறுப்பில் இருந்தவர் கிடாம்பி ஆச்சான்!
    அவரை அப்படி நியமித்தது திருக்கோட்டியூர் நம்பிகள்!

    உடையவரை ஸ்ரீரங்கத்து ஆச்சார சீலர்கள் விஷம் வைத்துக் கொல்லப் பார்த்த போது, அன்றிலிருந்து வீதி வீதியாகப் பிட்சை வேண்டாம், கிடாம்பி ஆச்சானே தளிகை செய்து பிட்சை இடுவார் என்று நம்பிகள் மாற்றி வைத்தார்!

    வடுக நம்பி என்பவர் மடப்பள்ளிக் கைங்கர்யத்தில் முழுதும் இல்லையென்றாலும், அவ்வப்போது அதிலும் வந்து உதவி செய்வார்! அப்படி ஒரு நாள் பால் காய்ச்சித் தரும் போது தான், வீதியில் வந்த நம்பெருமாளை விடத் தனக்கு உடையவரான எம்பெருமாளே முக்கியம் என்று சொன்னார்! :))

    ReplyDelete
  84. //srikamalakkanniamman said...
    Krs ayya adiyen oru sandegam (oru mukkiya visayamaaga idai ketkiren anda visayattai piragu koorugiren)//:)

    Sholingur paadayaatirai kaingaryamaaga inda varudam sri raamanujar vazhkai varalatrai veliyida ullom (small book)
    Anaitu tagavalgalum kidaitu vittadu. Sri ramanujar ragasiyam enna koorugiraar enru emakku kidaikavillai.
    Last week taangal padivil veliyittadu engalukku oru vara prasaadam. Taangal veliyitta sri ramanujar ragasiyattaiyum
    Sri ramanujar signature- um bayanpadutti kollalaama. Tangal anumadi vendum.

    ReplyDelete
  85. //srikamalakkanniamman said...
    Sholingur paadayaatirai kaingaryamaaga//

    ஆளரிப் பெருமாள், பிரகலாத வரதன் திருவடிகளே சரணம்!

    //inda varudam sri raamanujar vazhkai varalatrai veliyida ullom (small book)
    Anaitu tagavalgalum kidaitu vittadu. Sri ramanujar ragasiyam enna koorugiraar enru emakku kidaikavillai.//

    ஆகா!

    //Last week taangal padivil veliyittadu engalukku oru vara prasaadam. Taangal veliyitta sri ramanujar ragasiyattaiyum
    Sri ramanujar signature- um bayanpadutti kollalaama. Tangal anumadi vendum//

    உடையவர் திருக்கைச்சாற்றும், உடையவர் அருளப்பாடும் ரகசியம் இல்லை!
    அது போலவே என் வலைப்பூவும் காப்புரிமை-Copyright-kku உட்பட்டது அல்ல! :))

    இருப்பினும்...
    1. பதிவில் எந்தப் பகுதியை எடுத்துப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
    2. அடியார்களுக்கு தரும் புத்தக கைங்கர்யமா? இல்லை இதற்கு விலை நிர்ணயம் செய்வீர்களா?
    3. ஒரு மாதிரிப் புத்தகத்தை அடியேன் முகவரிக்கும் அனுப்பி வைக்க முடியுமா? - என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன்!

    முக்கியமாக
    பதிவில் இருந்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விழையும் திருமந்திரப் பொருளை, தங்கள் ஆச்சார்யர் அல்லது பாதயாத்திரைத் தலைவர் பார்வைக்கும் ஒரு முறை வைத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

    நாராயண நாராயண!

    ReplyDelete
  86. 1. பதிவில் எந்தப் பகுதியை எடுத்துப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

    padivil sri ramanujar om namo narayanaya enra mandira porulaiyum sri ramanujar siganaturaiyum bayanpadutta pogirom swamy.


    2. அடியார்களுக்கு தரும் புத்தக கைங்கர்யமா? இல்லை இதற்கு விலை நிர்ணயம் செய்வீர்களா?
    accho naraayanaa sri ramanujarukku vilai nirnayamaa. swamy batha yatirai bhaktargalluku kaingaryam - om namo narayanaaya

    3. ஒரு மாதிரிப் புத்தகத்தை அடியேன் முகவரிக்கும் அனுப்பி வைக்க முடியுமா? - என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன்!:))

    nichayamaga anupi vaikiren swamy . tangal address mail seiavum apnkrajesh@gmail.com (naan ninaitadai neengal kooriviteergal)

    பதிவில் இருந்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விழையும் திருமந்திரப் பொருளை, தங்கள் ஆச்சார்யர் அல்லது பாதயாத்திரைத் தலைவர் பார்வைக்கும் ஒரு முறை வைத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்:))

    paada yatirai talavarukku sri ramanujar patri arindavar enraalum tiru mandira porulai arindavar illai. aadalaal tangal padivil ulladai veliyidugirom . neengal padivil pottadu saridaane.enna krs ungaluku sandegam... ungal mail id teriyadu my mail id apankrajesh@gmail.com

    ReplyDelete
  87. 1. padivil sri ramanujar om namo narayanaya enra mandira porulaiyum sri ramanujar siganaturaiyum bayanpadutta pogirom swamy.
    - sure.

    2. accho naraayanaa sri ramanujarukku vilai nirnayamaa. swamy batha yatirai bhaktargalluku kaingaryam - om namo narayanaaya
    - he he...no issues.

    3. nichayamaga anupi vaikiren swamy . tangal address mail seiavum apnkrajesh@gmail.com (naan ninaitadai neengal kooriviteergal)
    - email address you already have. chennai postal address venumaa? illa soft copy email panreengala?

    //neengal padivil pottadu saridaane.enna krs ungaluku sandegam...//
    he he..santhegam illai. u can surely publish. chila acharyar-gal, thaangal oru paarvai cheri paarthu vida virumbuvaargal enpathal chonnen. no issues. pl go ahead.

    ReplyDelete
  88. Dear KRS

    Thank you very much for your help. God has shown me the real human faces through "Sri Arangan Temple Kumbahishegam" issue.

    I thought all Bhakats,bloggers and comment writers will contribute something. My trust failed.

    I realised now, MONEY is the first and BHAKTHI is second. In this world people will talk,discuss,cry and write about god and holyman.

    In reality, if we ask some help/assistance only few will......

    I am not finding fault on anyone, including me "No one is true to god"

    God has given me a wonderful opportunity to learn....i learnt a lot....your blog has helped me to weigh myself and others....

    Thank you very much

    Murali

    ReplyDelete
  89. Enna Murali, romba virakthi aayiteenga? :)
    As I told you already, konjam process dynamic-aa irunthaan thaan, ithukku innum momentum gather aagum.

    Neenga adiyavargalai salithu koLvathil oru payanum illai! Athu thavaRum, bhagavatha apacharamum kooda!

    You have an anubhavam with the local temple, which you cannot expect every adiyavar to feel the same way, coz, they have not even seen the temple or felt it so far!

    Tirumalai emperumaan-kku mattum ippdi oru nilamai. Athe emperumaan in tiruvithuvakodu-kku onnume illaiye nu cholra pola irukku :))

    You have shown Palli konda temple. Can I show you amirtha narayana perumal temple in thirukadaiyur?
    Almost everyone goes to thirukadaiyur for their 60th these days. Still that temple is in such a state. Athukku enna cholveenga?

    Pl come out of this self pity and steer the process, so that things move forward.
    What is important is not dejection, but direction!
    Persistent efforts towards arangan's paNi - that shd be the spirit!

    ReplyDelete
  90. Coming to action points...

    1. Starting from self - Chennai-la irunthu appa, adiyongal-oda kainkarya thogaiyai, shd have sent a cheque by now
    2. Mumbe chonnathu pola, Temple cleaners - reach foundation - chandrasekaran sir kitta pesineengala? Did Murali Bhattar of Gouprapatti respond?
    3. Is there a brochure that has been prepared, so that it can be posted and circulated online, for help?
    4. Is there a paypal account, where ppl can donate online?
    5. Details of thirupani commitee - estimate - action done - action yet to be done, ithellam pdf la irukkanum
    makkal help panna ninachaalum, enge anupparathu, eppdi-nu chonnaa thaane theriyum? :)
    One single comment will not trigger a process! :)


    6. Thirupani comittee themselves can start an exclusive blog - itz just my humble idea - they can post updates every week.
    7. Involving mutts, requesting their one time help etc...somebody from the committee has to spruce up efforts for this.
    8. Mukkkiyama, local people in the town have to have a feel and hand in this whole process. Antha sense of ownership irunthaa thaan nilaikkum. Illeena it will go again like this.
    Avangalai eppdi involve pannanum-nu oru plan pannarathu nallathu, by the committee.
    9. Adiyenukku therinja varai eduthu cholli irukken. Implementation-kku committee-la iruntho, illai from local place, coordinate pannanum, that too persistently, without virakthi.

    Blog-la chonna, ppl will rush to help, like the way they rushed to help senthilnathan during his surgery.
    Antha need realization is important. Athukku thaan coordinator venum local-la irunthu.

    Pl stop blaming adiyavargal and direct the energies in coordination.

    ReplyDelete
  91. They are villagers not HIGH TECHS like us. I am not blaming just expressed my “feeling”. I know, hundreds of temples in our country are in pathetic condition.

    When people doesn’t respond to my plea, I worried.
    I was afraid, how the Thirupani committee will face the challenges
    I grieved on seeing the Temple condition.



    I conclude this issue in his words….


    DEDICATE YOUR BEING TO GOD
    HE IS THE ONE TO BE ULTIMATELY RELIED UPON
    THOSE WHO KNOW OF HIS SUPPORT ARE FOREVER
    FREE FROM FEAR,WORRY AND SORROW


    WHATEVER YOU DO
    DO IT AS A DEDICATION TO GOD
    THIS WILL BRING YOU THE
    TREMENNDOUS EXPERIENCE OF
    JOY AND LIFE-FREEDOM FOREVER



    I realised now….I leave this issue to ARANGAN now, let him decide. I APOLOIZE, if I wounded any of the “ADIYAVARS” heart.


    MURALI

    ReplyDelete
  92. @Murali
    Cheri, cheri, no issues..
    Action points-kku vaanga. Konjam coordinate panni kodunga, all the details, in a collective format.

    I understand that itz a small village or town and most of them are villagers. I myself am one :)
    But committee-la atleast there will be one accountant and literates...konjam coordinate panni, evlo estimate, enna-nu ellam oru collective format-kku help pannunga.

    //When people doesn’t respond to my plea, I worried//

    Information eduthu chonna thaan, with pics and other estimates...ppl will come fwd. Enna-ne theriyaama, how can they lend a helping hand?

    Pl coordinate this effort. I will also offer my help to take it to more levels of awareness. There is a host of sri vaishnava sites and I can request them to promote this appeal too. But we need to assemble the information in a collective format, before doing all these.
    arangan paNiyil, avan aruLaale!

    ReplyDelete
  93. Kadasiyaaga yam anupiya mail tangalukku varavillaiya
    Tangal padilukkaga kaatirukiren.
    (sri ramanujarai patriyadu)

    ReplyDelete
  94. அடியார்களும் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் இந்தியாவில் பிறந்ததன் காரணம் என்ன ---
    பெருமாள் எங்கும் நிறைந்து இருந்தாலும் பெரிய அளவில் தன்னை வெளிபடுத்தியது இந்தியாவில் ,,
    என்ன காரணம் !

    வாமன அவதாரத்தில் பெருமாள் உலகை அளந்த போது பாதம் இந்தியாவின் மீது வைத்தாரோ (நாம் சிறு பந்தில் கால் விட்டால் பந்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நம் பாதம் படும் அதுபோல ) பெருமாள் பாதம் பட்ட பகுதி இந்தியாவோ !!!
    அதில் மைய பகுதி திருப்பதியாக இருக்கும் போல .,,

    ஹி ஹி மாதவி பந்தல் முடிவு பெற்றாலும் தொல்லை தாங்கலப்பா
    (என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது )
    மாதவி பந்தலில் நம் பதிவும் இனிதே நிறைவு பெற்றது
    நாம் மெயில் - ல் தொடர்பு கொள்ளலாம்
    regards
    rajesh narayanan

    ReplyDelete
  95. :)))

    பந்தல் வாசகர்கள் கலக்கறாங்கப்பா! நல்ல வேளை தப்பிச்சேன்! :)

    ReplyDelete
  96. ungal pathivu ellam arumai. rendu vaarama continuous ukkandhu unga pathivu ellam padichiten. niraya thelivu kedaithathu. Unga pathivu thaan ennoda first blog visit. idhukku munnala blog pathi enakku romba theriyathu. inoru doubt eppadi neenga tamilla eludharinga. edhana sw download pannuma. apram en sondha ooru trichy. ippa blore familyoda settle ayiten. enakku pudicha sriranga perumal pathi neriya eluthirukkinga. enakku sriranga thayar mela romba anbu. enna thalaivar (Perumal)eppa ponaulum romba busya irupparu. varushathukku ippalam rendu thadavai pakkrathu adhisayam. ana amma romba paasam. pona odane tharisanam kidaithidum. kovilla spl queuela poga kudathungra karuthellam enakkum irukkum karuthukkal. thirupavai pathivu romba arumai. naanum inime thirupaavaiya mananam panna muyarchi pandren. inoru doubt neenga america irukkara maadthiri theriyuthu, ana eppadi nadakkura kovil vishayam ellam eludharinga. Ungal valai natpu kidaichathula enakku romba sandhosam. Vaalga Valamudan avan pathangalil.

    ReplyDelete
  97. Sri ramanujarukku century podaama irupomaa . pottutomla century,.
    fentastic=-

    emperumaanaar tiruvadigale saranam
    emperumaan tiruvadigale saranam
    om namo narayanaya!

    ReplyDelete
  98. குலம் தரும்! செல்வம் தந்திடும்!
    அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
    நிலம் தரம் செய்யும்! நீள்விசும்பு அருளும்!
    அருளொடு பெருநிலம் அளிக்கும்!

    வலம் தரும்! மற்றும் தந்திடும்!
    பெற்ற தாயினும் ஆயின செய்யும்!
    நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்!:)))


    நன்றி

    ReplyDelete
  99. //muni said...
    பெற்ற தாயினும் ஆயின செய்யும்!
    நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்!:)))//

    உம்...அப்படியே பாட்டை முடிக்க வேணாமா? :)
    நான் தான் ஓம் நமோ "Dash"ன்னு பதிவு போட்டேன்! என் நிர்ப்பந்தம் அப்படி :)
    நீங்க சொல்றதுக்கு என்ன? :)

    ...நான் கண்டு கொண்டேன்,
    நாராயணா என்னும் நாமம்!

    நன்றி முனி! :)

    ReplyDelete
  100. Very well written...Romba azhagaga vilakki ezhudhi irukkereergal.Nanri.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP