Showing posts with label டகால்ட்டி. Show all posts
Showing posts with label டகால்ட்டி. Show all posts

Tuesday, May 26, 2009

Happy Birthday: ஜிரா வித் சில்க் ஸ்மிதா!

பிறந்த நாள் அதுவுமா என் தோழன் ஜிரா என்னும் ஜி.ராகவன், ஒரு பரங்குன்றின் மேல், பலத்த போதையில் மலையேறிக்கிட்டு இருந்தாரு! புதுச் சொக்கா, புது IPod! பிறந்தநாள் பரிசுகள் பளபளக்க, IPod-இல் ஒரு செம கிக்கான ரொமான்டிக் பாட்டு!
"நடவிஞ்ச மயூராலு ஒச்சின மோமு ஒக்கடே!
ஈசருகி பாக மொழி செப்பின மோமு ஒக்கடே!"


1975-இல், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, நம்ம சில்க் ஸ்மிதா-க்குன்னே போட்ட தெலுங்குப் பாட்டாம்! இந்தப் பாட்டெல்லாம் எம்.எஸ்.வி-க்கு கூட இப்போ கிடைக்காது! ஆனா எங்க ஜிராவுக்கு மட்டும் எப்படியோ கிடைச்சிரும்! :)

ஜிராவுக்கு அன்னிக்கின்னு பார்த்து ரொம்ப ஆழ்ந்த சிந்தனை!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்-ன்னு எகனை மொகனையாச் சொல்லுறாங்களே! அது நிஜமாலுமே உண்மையா?
* அப்படீன்னா திருப்பதி மலை மேல குமரன் தானே இருக்கணும்?
* சோளிங்கபுரம் மலை மேல குமரன் தானே இருக்கணும்?
* அட, சென்னைப் பரங்கிமலை மேல கூட குமரன் தானேப்பா இருக்கணும்?

இதை யாரு கிட்ட போயி எப்படிக் கேட்கறது-ன்னு தெரியாம தவியாத் தவிச்சிக்கிட்டு இருந்தாரு ஜிரா! அந்த நேரம் பார்த்து அங்கன வந்தாரு அவரோட உயிர்த் தோழன் சூரியச்சிவம்! :)



ஜிரா: "ஹேய், வா வா! நல்ல சமயத்தில் வந்தே! மொதல்ல இதுக்குப் பதில் சொல்லு! நீ தானே எனக்கு எப்பமே சந்தேக நிவாரணி!"

நண்பர்: "எலே ராகவா! நிவாரிணி, பவாரிணி-ன்னு எப்பமே பொண்ணுங்க பேராத் தான் பேசிக்கிட்டுத் திரிவியா? பொறந்த நாளு அதுவுமா என்ன ராசா ஒனக்குச் சந்தேகம்?"

ஜிரா: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமா? அதை மொதல்ல சொல்லு"

நண்பர்: "இதுல என்னப்பா சந்தேகம்? அப்படித் தானே தமிழ் சினிமா முதற்கொண்டு எல்லா டயலாக்-லயும் சொல்லிட்டு வராய்ங்க! ஏதோ புதுசா கேக்குறாப்புல கேக்குற?"

ஜிரா: "அட போப்பா! உனக்குத் தெரியாது! இதுக்கும் ஏதாச்சும் சங்கத் தமிழ்ப் பாட்டை எடுத்துக் காட்டி, அவன் பதிவு போட்டாலும் போட்டுருவான்! எல்லாரும் வந்து கும்மி அடிப்பாய்ங்க! அவன் சொல்லுறதும் நம்பறாப் போலத் தான் இருக்கும்! எனக்கே என் மேல சந்தேகம் வந்துரும்! அதான் முன்னாடியே உன்னைக் கேட்டுக்கிடறேன்!"

நண்பர்: "உம்...நீ ஆன்மீகப் பதிவு எழுதறத நிப்பாட்டிட்டே! காதல் குளிர், காதல் சளி-ன்னு எழுதினா இப்படித் தான் ஆவும்! நீ ஏன் ஆன்மீகப் பதிவை நிப்பாட்டினே? அதைச் சொல்லு மொதல்ல!"

ஜிரா: "ஓய், இது என்ன புதுப்பழக்கம்? கேள்வி எல்லாம் கேக்குற? பதில் மட்டும் தான் நீ சொல்லணும்! கேள்வி எல்லாம் நான் தான் கேப்பேன்! சரியா??"

நண்பர்: "அப்படீயா நண்பா! இதோ...இந்தச் சின்ன மலையில் படியேறிப் போனா, ஒரு "குளுகுளு" குகை வரும்! அதுக்குள்ளாற போயி பாரு! குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருக்கானா?-ன்னு உன் கேள்விக்கு விடை கிடைச்சிரும்!"

ஜிரா: "சங்கரா, அது எப்படிடா இவ்வளவு கரெக்ட்டா சொல்றே? இதெல்லாம் உனக்கு மட்டும் எப்படிடா தெரியுது?"



நண்பர்: "அலோ! விஷயம் தெரியாம பேசாதே! இப்போ நீ நிக்கற இடம் என்னா-ன்னு தெரியுமா?
இந்தக் குகையில தான் அலெக்சாண்டர் நக்கீரரை அடைச்சி வச்சாரு! அப்போ நக்கீரர் பாடின மியூசிக்கல் தான் புகழ் பெற்ற "The Murugan River Troops"! (திரு-முருகு-ஆற்றுப்-படை)! சும்மா கும்முன்னு மிலிட்டிரி சாங்! அந்த Beat-ஐக் கேட்டு ஓடியாந்து தான், முருகன் நக்கீரனைக் காப்பாத்தினாரு! தெரிஞ்சிக்கோ!"

ஜிரா: "ஓ! மிலிட்டிரி பாட்டா? அதான் எனக்கு முருகனை ரொம்ப பிடிச்சிருக்கு போல! நமக்கு எப்பமே மிலிட்டிரி-ன்னா தான் பிடிக்கும்! சாப்பாட்டில் கூட!"

நண்பர்: "சரி சரி போதும்! மிலிட்டிரி ஏப்பம் எல்லாம் அப்பறம் விட்டுக்கலாம்! மொதல்ல குகைக்குள்ளாற போயி உன் கேள்விக்குப் பதில் தெரிஞ்சிக்கிட்டு வா"

ஜிரா: "நீ உள்ள வரலையா?"

நண்பர்: "நீ உள்ளாற போயிட்டா, யாரு குகைக்குக் காவல் இருக்கறதாம்? எவன்-ன்னா தெரியாம குகையை மூடிட்டா, நீ உள்ளாற மாட்டிப்பியே!"

ஜிரா: "ஹேய்....Thanksடா! இங்கு உன்னை நான் பெறவே...என்ன தவம்...செய்து விட்டேன்"

நண்பர்: "போதும் போதும்; சட்புட்டுனு பதில் தெரிஞ்சிக்கிட்டு சீக்கிரமா வந்துடுப்பா ராசா!"


ஜிரா குளுகுளு குகைக்குள் நுழைகிறார். ஓம் ஓம்-ன்னு குகை முழுக்க சவுண்டு டிஜிட்டல் டால்பியில் கேட்குது! ஜிரா பயபக்தியுடன் கன்னத்துல போட்டுக்கறாரு! குகைக்குள்ளே குளிர்! வெறும் குளிர் தான்! காதல் குளிர் இல்ல! ஜிராவுக்கு மயிர்க் கூச்செறிகிறது! மயில் கூச்செறிகிறது!

ஆகா! ஆங்கே பெரிய, கரிய, மயில் வாகனத்தில்...வாவ்...ஜிராவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை! ராஜ கம்பீர நாடாளும் நாயகன் நம்ம முருகப் பெருமானா அது?


ஜிரா: "பச்சைக் கலாப - மயில் மேல் அமர்ந்து
இச்சைக்கு இனித்திடும் இகபர வேலா!
இன் தமிழ்ச் சீலா! வள்ளியின் லீலா!
என் சிவ பாலா! மருகனே மாலா!

(மனதிற்குள்: ச்சே! இதுக்குத் தான் அவன் கூட ரொம்ப பழகக் கூடாது-ன்னு சொல்லறது! மால்...மாலா-ன்னு வந்துருது பாரு!
வேணாம்! வேற எதுனா ரைமிங்கா போடுவோம்...ஆங்... அது தான் சரி.... )
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா"

குரல்: "வாட்?..."

ஜிரா: "அடடா! நீயா முருகா என்னைத் தேடி வந்து காட்சி கொடுப்பது?"

குரல்: "ஹேய்! நான் ஒன்னியும் தேடி வரவில்லை! நீ தான் என்னைத் தேடி குகைக்குள்ளே வந்து, கோக்கோ கோலா-ன்னு கேலி பேசிக் கொண்டிருக்கிறாய்!"

ஜிரா: "ஆகா! கோபித்துக் கொள்ளாதே சண்முகா! தமிழோடு நீ மட்டும் தான் விளையாடணுமா?

கோ-ன்னா = உலகம்!
கோ-கோ-ன்னா = உலகை ஆளும் அரசே-ன்னு அர்த்தம்!
கையில் கோல் வேற வச்சிக்கிட்டு நிக்குறியா! கையில் வேல் இருந்தா வேலா! கோல் இருந்தால் கோலா!
அதான் கோ-கோ-கோலா-ன்னு... உணர்ச்சி வசப்பட்டு செந்தமிழில் முந்துற முழங்கிவிட்டேன் முருகா! "

குரல்: "அடப்பாவி! நீ மச்சியாள் குச்சியாள்-ன்னு பேசுவே-ன்னு முன்னமே சொல்லி இருக்காய்ங்க! ஆனா முருகனுக்கே கோக்கோ கோலா கொடுத்து, கோக்கோ கோலாவுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுத்துட்டியேப்பா!"


ஜிரா: "முருகா! சற்று இரு! என் தோழனையும் உள்ளே அழைக்கிறேன்! வெளியே காட்டிக்கலீன்னாலும் அவனுக்கு உன் மேல ரொம்பவே ஆசை! இரு, அவனும் உன்னைக் கண்ணாரக் கண்டு களிக்கட்டும்!"

குரல்: "வேணாம்! வேணாம்! அவன் சொல்லித் தான்....நானே இங்கே...அவனே இங்கே...நீயே இங்கே...."

ஜிரா: "என்ன முருகா இப்படித் தடுமாறுகிறாய்? தமிழ்க் கடவுள் தடுமாறலாமா? தடம் மாறலாமா? என்ன ஆயிற்று உனக்கு?
சரீரீரீரீ...அப்பவே கேக்கணும்-ன்னு நினைச்சேன்! உன்னோட குரல் ஏன் பெண் குரல் போல இருக்கு? முருகன்-னா இவ்வளவு மென்மையா?"

குரல்: "ஹேய்! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சி எல்லாம்? கள்ளியிலும் பால் வடியும்! என்னிலும் பெண்குரல் கேட்கும்! "கள்ளி மே தூத்" படம் பார்த்ததில்லையா நீ?
சரி போகட்டும்! உனக்குப் பிறந்த நாள் பரிசு அளிக்கச் சொல்லி எனக்குக் கட்டளை! என்ன வேண்டும்? கேள் ஜிரா!"

ஜிரா: "முருகா! உன் கிட்ட சொல்றத்துக்கு என்ன? வெட்கத்தை விட்டுச் சொல்றேன்! எனக்கு சில்க் கூடப் பேசணும் பழகணும்-ன்னு ரொம்ப நாளா ஆசை! அதுவும் அவங்க சின்னப் பாப்புவா வந்து, என்னைப் பாவா, பாவா-ன்னு கூப்பிடணும்-ன்னு ரொம்ப நாள் ஆசை!"

குரல்: "என்னே உன் தமிழ்த் தாகம்!"

ஜிரா: "இந்தக் கிண்டல் தானே வேணாங்குறது!"

குரல்: "சரி, சரி! சில்க்கை உமக்குத் தந்தோம்! என்னருகில் வா!
வா...ஜிரா...வா!
வா...பாவா...வா! "

ஜிரா: "வாட்! முருகா! ஏமி செப்தாவு நூவு? ஒள்ளு பாக லேதா? என்னைப் பார்த்து ஏன் பாவா என்று அழைக்கிறாய்? சரவண பவா தானே? சரவண பாவா இல்லையே!"

குரல்: "ஜிரா! என்னை நன்றாகப் பார்! நான் அழைத்த பாவா-வில் குற்றமா?"

ஜிரா: "ஹேய்! ஹேய்...உங்க கண்ணு! அந்தக் கண்ணு!......ஹேய், நீங்க சில்க் தானே?"



குரல்: "என்ன பாவா, அதைக் கண்டு பிடிக்க உங்களுக்கு இம்புட்டு நேரம் ஆச்சா? அதான் பொண்ணு குரல்-ன்னு அப்பவே சந்தேகமாக் கேட்டீங்களே! ஹாங்....அப்பறம் என்னவாம்?"

ஜிரா: "ஆஆஆ...நீ....நீங்க எப்படி முருகனா வந்தீங்க?"

சில்க்: "ஏன்...வரக் கூடாதா? ஸ்ரீதேவி முருகனா வந்தா மட்டும் படம் பாக்குறீங்க! இந்த சில்க்கு முருகனா வேசம் கட்டக் கூடாதா? தப்பா ஜிராஆஆ?"

ஜிரா: "சேச்சே! தப்பே இல்ல! ஆக்சுலி உங்க கண்ணு போலவே தான் முருகன் கண்ணும் இருக்கும்! உங்களைப் போலவே முருகனும் ரொம்ப சாஃப்ட்!
முருகன் இடுப்பு கூட உங்களைப் போலவே வளைஞ்சி ஒடிசலாத் தான் இருக்கும்! என்ன... அவரு கையில கூர் வேல்! உங்க கண்ணுல கூர் வேல்! அவ்ளோ தான் வித்தியாசம்!"

சில்க்: (மனதிற்குள்) அடப்பாவி ஜிரா! இப்படிக் கம்பேர் பண்ணி அந்த முருகனையே கவுத்துட்டியே! இதுக்கு அந்த கேஆரெஸ் பய புள்ள எவ்ளோ தேவலாம்! :)

ஜிரா: "என்னது கேஆரெஸ்-ஸா? அவனை உங்களுக்கு முன்னமே தெரியுமா? இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தது அவன் தானா? அவனை....."

சில்க்: "ச்சீச்சீ! பாவம் அவரு! அவரும் பாவா தான்! அவரை ஒன்னும் சொல்லாதீங்க!
சரி....பொறந்த நாள் அதுவுமா என்னைப் பார்க்க வந்துட்டு வெறுங்கையோட போனா எப்படி? சின்னப் பாப்பு வச்சிருக்கும் திருப்பதி உண்டிக்கு டப்பு இச்சி பாவா! ஈ திருப்பதி உண்டி-ல உங்க கையால காணிக்கை வேஸ்கோண்டி பாவா!"

ஜிரா: "ஆகா! அப்படியே செஞ்சிட்டாப் போச்சி! சின்னப் பாப்புக்கு பிடிச்ச பெருமாள் தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும்! You know what? I actually like PerumaaL very much! :) சின்னப் பாப்புவுக்காகவே நான் கண்ணன் பாட்டு வலைப்பூவில் இருந்திருக்கேன் தெரியுமா? இந்தாங்க ஜிராவோட திருப்பதிக் காணிக்கை, 1008 Euros!" :)

சில்க்: "வாவ்! ஜிரா! நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு....."

ஜிரா: "ஆமாங்க..." (மனசுக்குள் கறுவிக் கொண்டே...ஆனா அவனுக்கு மட்டும் நான் நல்லவன் இல்ல...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)

சில்க்: "குகைக்குள்ள ஏதோ கேள்வி கேட்கணும்-ன்னு வந்தீங்களே ஜிரா! உங்க கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சா? குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் தானே?"

வெளியில் இருந்து தோழன்: "சேச்சே! யாரு சொன்னா? குன்று இருக்கும் இடமெல்லாம்.....ஒங்களைப் போல....குமரி இருக்கும் இடம்!"
.......
ஓடும் சத்தம் கேட்க..... "டேய், ஓடாதே! நில்லுடா.....டேய்...." என்று ஜிரா நண்பனைத் துரத்திக் கொண்டு ஓட...

சில்க்: "ஹிஹி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா!"
நாமும்: "ஹிஹி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா!"
May-27-2009! Happy Birthday Ragava! கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா! :)

இன்னிக்கி நடக்கும் மொத்த பார்ட்டிக்கும் பில்லு கட்டிய சந்தோசம், புள்ள முகத்துல :))

Read more »

Wednesday, January 28, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா, பதிவர்கள், பிளாக்-காயணம் Part 1

சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!
(பிரபல பதிவர்களின் கீமாயணம் - Part 1 - Take 1!)


கலியுகத்தில், கப்சா கண்டத்தில், முதலாம் பேரக் மன்னன் ஆட்சி புரிந்த O-பாமா தேசத்தில், தர்மம் தழைத்தோங்குது! மாதம் முவ்வங்கி திவாலாகுது!
அங்கே பாஸ்டன் என்னும் வெள்ளையர் நகரிலே ஒரு கொள்ளையன்!
பாஸ்டன் பாலா என்ற திருநாமம்! = பா-பா என்று இவரைப் பாடி, ப்ளாக் ஷீப்பை இவருக்குப் பலி கொடுப்பாய்ங்க!
பா-பா ஒரு பெரிய கொள்ளைக் கூட்ட பாஸ்! சுட்டித் திருடன்! பலரின் பதிவுகளைத் திருடித் திருடி, சுட்டி இட்டுக் கொள்வார்!
இவரே திருடன்! இவரே நீதிபதி! இவரே கில்லி! இவரே ஸ்நாப் ஜட்ஜ்!
இட்லி-வடை தான் இவருக்குப் பிடித்தமான படையல்! ப்ளாக்கர், வோர்ட் பிரெஸ், மை ஸ்பேஸ், ட்விட்டர் என்று இவர் அடிக்காத கொள்ளை இல்லை!

ஒரு நாள்......
801 பாடல் பெற்ற தலங்களில் முதல் ஊரான நியூயார்க்! அங்கே மாதவிப் பந்தல் பொக்கிஷத்தைக் கொள்ளை அடிக்க வராரு பா-பா! ஆனால் எதற்கும் கலங்காத ஆண்மீக அருட்கடல் KRYES இதுக்கெல்லாம் கலங்குவாரா என்ன?

"பாபா, இப்படி இத்தனை பேரின் மூளைச் சொத்தைக் கொள்ளை அடிக்கிறீங்களே? இது மகா பாவம் இல்லையா? இந்தப் பாவத்தின் பாரத்தை எப்படித் தாங்கப் போறீங்க?"

"நான் செய்யும் பாவத்தில், டோட்டல் பதிவுலகத்துக்கும் பங்கு உண்டு, கேஆரெஸ்! ஸோ, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!"

"ஆகா! யார் இப்படிச் சொன்னது உங்களுக்கு?"

"குறுக்கெழுத்து-தலையெழுத்துன்னு பதிவு போடும் பதிவுலகப் பிரம்மா! கொத்தனார்! அவர் தான் சொன்னாரு!

"கொத்தனாராவாது! நாத்தனாராவது! உங்க பாவத்தில் ஒருத்தனும் பங்கு போட்டுக்க வர மாட்டானுங்க! யாரை வேணும்னாலும் கேட்டுப் பாத்துட்டு வாங்க!"


பாபா உடனே தனது சர்வேச அவதாரம் எடுக்கிறார்! ஒரு சர்வே பதிவு போடுகிறார்! - "என் பாவத்தில் பங்கு கொள்ளும் பதிவர்கள் யார் யார்?"

ஒரு அனானிப் பின்னூட்டம் கூட வரமாட்டேங்குது! :) சரி, எல்லாருக்கும் தனியா மின்னஞ்சல் தட்டி வுட்டு, நாமினேஷன் வாங்கப் பாக்குறார் தல!
Dear Blogger,
vaNakkam from baba.com! There was a bug in the pinoota petti. Badri has fixed it.
Please visit the same link you used and cast your பாவப் பின்னூட்டம்ஸ்!

ஹூஹூம்! அப்பவும் பாவத்தைப் பங்கு போட்டுக்க எவனும் வர மாட்டேங்குறான்!
என்ன கொடுமை சரவணன்! என் சுட்டியில் பங்கு கொண்ட பதிவர்கள், என் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்களா?
இவங்களுக்கு எல்லாம் போயி, E-Tamil இல் சுட்டி கொடுத்தேனே! அப்பவே கேஆரெஸ் சொன்னாரு! நான் தான் கேட்கலை!
"சுட்டி" சுட்டதடா, கை விட்டதடா!
வெட்டி பட்டதடா! பொட்டி தட்டுதடா!


சரி....இனி நமக்குப் பதிவுகளே வேணாம், கில்லியும் வேணாம்! சற்றுமுன் வேணாம்! தேன் கூடு வேணாம்! ட்விட்டர் ஒன்னே போதும்!-ன்னு ஒரு தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ் தவத்தில் உக்காந்துட்டாரு நம்ம பா-பா!
அப்போ-ன்னு பாத்து, அங்கிட்டு வராரு விவசாய முனிவர், இளமுறுக்கு.
இவருக்கு கலகம்-ன்னா முறுக்கு சாப்பிடறா மாதிரி! அதான் இளமுறுக்கு!

"பாஸ்டன் பாலனாரே, நீங்க பல திரட்டிகளில் கட்சி சேர்ந்து ரொம்பவே பாவம் பண்ணிட்டீங்க! நான் சொல்ற மந்திரத்தை ஒன் க்ரோர் & செவன்ட்டி செவன் டைம்ஸ் சொல்லுங்க!
அவ்ளோ வாட்டிச் சொல்ல முடியலைன்னா மடிப்பாக்கத்தில் இருக்கும் அதிர்ஷ்டக் கண்ணான் என்பவர் கிட்ட உதவி கேளுங்க! அவர் ஒன் க்ரோர் அலெக்சியா பேஜ் ராங்க் போட்டு அனுப்புவாரு!"


"ஆகா! அது என்ன மந்திரம் இளமுறுக்கு முனிவரே?"

"பா-பா என்பதே அந்த புதரக மந்திரம்! எங்கே சொல்லுங்க, பா-பா!"

"ஹைய்யோ...இது என் வாயிலேயே நுழையவே மாட்டேங்குதே!"

(பின்னால் இருந்து ஒரு குரல்...)
"சார்...வேணும்னா அதைப் பின்னாடி இருந்து சொல்லிப் பாருங்களேன்!
மரா-மரா ன்னு பின்-நவீனத்துவமாச் சொன்னாங்க! அதான் அன்னிக்கே பலிச்சுது! பின்-நவீனத்துவம் தாங்க எப்பமே பலிக்கும்!"

"அட நீங்க யாருங்க, புதுசா? இளமுறுக்குக்குப் போட்டியா?"

"என் பேர் சிறில்! சி-நெடில் இல்லை! சி-குறில்! சி-றில்!"

"ஆகா...ஜெயமோகன முனிவர் உங்களைப் பத்தி ரொம்பவே சொல்லி இருக்காரே! போட்டி வச்சி போட்டி வச்சியே, பின்னூட்டத்தை உங்களுக்கும், பழியை எல்லாம் அவருக்கும் கொடுக்கற ஆளு நீங்க தானா?"

"பாஸ்டன்! இப்போ நடப்பது சிகாகோ ஆட்சி! பாத்து பேசுங்க! எங்கே, பின்-நவீனமா அந்த மந்திரத்தைச் சொல்லுங்க பார்ப்போம்"

"பா-பா! பா-பா! பா-பா!"

"பாருங்க எவ்ளோ ஈசியா வந்துரிச்சி! இதையே சொல்லிக்கிட்டு இருங்க!"

(சிறில் நகர, இளமுறுக்கு: "நல்ல வேளை வந்தீங்க சி-றில்! நீங்க சொன்னபடியே கில்லியை இவர் கிட்ட சல்லீசா விலை பேசி முடிச்சிட்டேன்!")



காவியம் எழுத உட்காருகிறார் இரவு நேரப் பட்சியான பாபா!
மிட்-நைட் மசாலா திரையில் ஓடுது! அரை மணி நேரத்தில் மொத்த காவியமும் எழுதி முடிச்சிட்டார்!

அதை வாங்கிப் பார்த்த இளமுறுக்கு முனிவரும், ஜெயமோகன முனிவரும் ஜெர்க்கோ ஜெர்க் ஆகிறார்கள்! அப்படி என்ன தாங்க இருக்கு அந்த ப்ளாகாயண காவியத்தில்?

மொத்தம் 24000 செய்யுள்கள் அல்ல! மொத்தம் 24000 சுட்டிகள்!
காவியம் ஃபுல்லா ஒரே சுட்டிகள்! சுட்டிகள்! சுட்டிகள்!

சுட்டிச் சுரங்கம் பாபா-வின் ஆதி காவியம் வீணாப் போலாமா? அதைப் பைனரி மொழியில் இருந்து புரியிற மொழியில் மொழியாக்க வருகிறார்கள் இரு பெரும் கதைச் சக்ரவர்த்திகள்! - பெனாத்தல் சக்கரவர்த்தி மற்றும் பட்டர்ஃபிளை ஸ்ரீதர் சக்கரவர்த்தி! இவிங்கள்-ல யாரு கம்பர்? யாரு ஒட்டக் கூத்தர்? :))

இதோ....
பதிவுலக ப்ளாகாயணம்! A Film by Penathal Raja! Hurry Om!
* கதை-திரைக்கதை-வசனம்-டைரக்சன்: பின்னூட்டம் போடும் பதிவர்கள்
* இசை: தேன் கிண்ணம் * ஒளிப்பதிவு: PIT * ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்
* தயாரிப்பு: SPVR சுப்பையா


Cast & Credit :
இராவணன் = கானா பிரபா
விபீஷணன் = ஜி.ராகவன்
கும்ப.கர்ணன் = கோவி.கண்ணன்

இந்திரஜித் = ரிஷான் ஷெரீப்
சூர்ப்பனகை = ??? (அப்பாவிச் சிறுமி?)
மண்டோதரி = பரிசல்காரன்

* சீதை = "கனவுக் கன்னி" பாவனா
* சீதையின் தங்கைகள் = ஜெனிலீயா, சமீரா ரெட்டி, தமன்னா
* சீதை, தங்கைகளின் ஆருயிர்த் தோழி = மைஃபிரெண்ட்
இராமன் = கேஆரெஸ்
இலக்குவன் = சீவீஆர்
பரதன் = வெட்டிப்பயல்
சத்ருக்னன் = கப்பி பய


ராமனின் மாமா = தேவ்! ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)

* அனுமன் = ஆயில்யன்
* ஜாம்பவான் = மங்களூர் சிவா
* வாலி = சென்ஷி
* சுக்ரீவன் = குசும்பன்


குகன் = கோபிநாத்
ஜடாயு = நசரேயன்
சபரி = ஷைலஜா
லவ-குசா = ச்சின்னப் பையன்

தசரதன் = குமரன்
கோசலை = ஜீவா
கைகேயி = கைப்புள்ள
சுமித்திரை = ரத்னேஷ்


கூனி = ? ஆங்..மோகன்தாஸ் :)
* அகலிகை = நாட்டாமை Syam
* இந்திரன் = சந்தோஷ் பக்கங்கள்


விஸ்வாமித்ரர் = இலவசக் கொத்தனார்
வசிட்டர் = துளசி கோபால்



மலேசிய நாட்டின் சராவக் காடுகள்!

அங்கே கேஆரெஸ்-ராமபிரானும், சீவீஆர்-இலக்குவத் தம்பியும் ஒரு குடிசையில் இருக்குறாங்க! ஒரு முக்கியமான காரியமாக பயணம்! நாடோடியாக நடந்து நடந்து, அவர்கள் நகர்வது...பெண்களூர் மாநகரம் நோக்கி! குறிப்பாச் சொல்லணும்னா BTM Layout அரண்மனையை நோக்கி!

அங்கே ஜனக-அம்பி மகாராஜா! வயசான காலத்தில், தன் மகளான பாவனாவுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்படறாரு! ஒரு அழகான பெண்ணுடைய, வயசான அப்பாவுடைய, நியாயமான ஆசை தானே! அதான் சுயம்வரம் ஏற்பாடு ஆகி இருக்கு!

ப்ளாக்கர் என்னும் கூகுள்-தனுசு! அதை வளைக்கணும்! பின்னூட்ட நாணேற்றி வளைக்கணும்!
சக்தி வாய்ந்த கூகுள் வில்லை வளைக்கவும் முடியுமா? அதுவும் எத்தனை பின்னூட்டம்-ன்னு போடுறது? எப்படி இழுத்து வளைக்கறது?
ஆனானப்பட்ட அபி அப்பாவாலேயே முன்பு முடியாமப் போச்சே!

தாடி வைத்த விஸ்வாமித்ர கொத்தனார் இதில் கில்லி! ஆயிரம், பத்தாயிரம், பத்து லட்சம், பத்து கோடி-ன்னு பார்த்த ராமலிங்க ராஜனே, இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் கொத்தன ரிஷியைத் தான் கூப்புடுவாரு!
அதான் கொத்தனார் துணையுடன், ராம-இலக்குவ சகோதரர்கள் சுயம்வரத்துக்குக் கெளம்பிட்டாய்ங்க!

ஆனால் அவிங்களுக்கும் முன்னாடியே...பெண்களூர் வந்து விட்டான் ஒரு கட்டழகன்! நெட்டழகன்! அவன் தான் இலங்கை வேந்தன் இராவணப் பிரபா....
அந்தப்புர வீதி வழியாக....பண்பலை வரிசையில் நடந்து வருகிறான் இலங்கேஸ்வரன்!

அங்கே....அந்த அந்தப்புரத்திலே...
ஆப்பிளைக் கடிக்கிறாள் ஒரு ஆப்பிள்..அவள் தான் சீதா (எ) மிஸ். பாவனா
அவள் கூடவே
* சீதையின் தங்கைகள் = மிஸ். ஜெனிலீயா, மிஸ். சமீரா ரெட்டி, மிஸ். தமன்னா!
* சீதையின் தோழி = பதிவர் மைஃபிரெண்ட் !

பாவனா என்னும் ஆப்பிள் கடித்த ஆப்பிள், அந்தப்புர உப்பரிகையில் இருந்து... வாய் தவறி....குடுகுடு என்று உருண்டோடி வருகிறது!
வழியில் வந்து கொண்டிருக்கும் இராவணப் பிரபாவின் மேல் ஆப்பிள் விழ....

ஆப்பிளின் ஆப்பிளை, அண்ணலும் நோக்கினான்....அவளும் நோக்கினாள்!

ராவணா வித் பாவனா?...அடுத்த பகுதிகள் வ.வா.சங்கத்தில் தொடரும்...
Read more »

Friday, August 22, 2008

மிஸ். பாவனா & பிரபல பதிவர்கள் நடிக்கும் "பதிவுலக ரோமாயணம்"!

தமிழ் கூறும் வலையுலகப் பெருமக்களே!
வலையுலக வரலாற்றில் முதல் முறையாக....
கனவுக் கன்னி பாவனா, கதாநாயகியாகத் தோன்ற...

அடுத்த வாரம், உங்கள் அபிமானத் திரையரங்கு,
மாதவிப் பந்தல் (Dolby Digital-A/C)-இல் காணத் தவறாதீர்கள்...
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ரிலீஸ்...


*** Blogayanam - பதிவுலக ரோமாயணம்! ***


அண்ணன் கானா பிரபாவின் பத்து தலை மாயா ஜாலக் காட்சிகள்!

உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் உலா வரப் போகும், பதிவுலக ஆதி காவியம்
BLOGAYANAM!
அதுவே பதிவர்கள் ரோமாயணம்!

* கானா பிரபா
* கோவி கண்ணன்
* சீவீயார்
* கேஆரெஸ்
* குசும்பன்

* மங்களூர் சிவா
* துர்கா தேவி
* ரிஷான் ஷெரீப்
* ச்சின்னப் பையன்

* பாஸ்டன் பாலா
* ஜீவ்ஸ் அண்ணாச்சி
* துளசி டீச்சர்
* மதுரையம்பதி

இவர்களுடன் கவுரவ வேடத்தில், கப்பி பய & வெட்டிப்பயல் & இன்னும் உங்கள் அபிமான முன்னணிப் பதிவர்கள்...

* யார் யாருக்கு என்ன ரோல்?
** யார் வேண்டுமானாலும் இப்போதே விவாதிக்கலாம்!


* கதை-திரைக்கதை: KRS
* வசனம்-டைரக்ஷன்: பின்னூட்டப் பதிவர்கள்
* தயாரிப்பு: SPVR சுப்பையா
* இசை: தேன் கிண்ணம்
* ஒளிப்பதிவு: PIT
* ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்
* சிறப்பு மாயாஜால ஸ்டண்ட் காட்சிகள்: மைஃபிரெண்டு

காணத் தவறாதீர்!!!!!!!!!!

(இந்தப் படத்தில், பாவனா பைக்கில் உள்ள ஸ்டிக்கரையும், பக்கத்தில் உள்ள பதிவரையும், நன்றாக நோட் சேஸ்கோண்டி! கதையின் திருப்பு முனை, நெருப்பு முனை புரிந்து விடும்!)

Read more »

Tuesday, July 01, 2008

வெட்டிப்பயல் ரீமேக்! சணல் கயிறு=Pointer to Pointer!

வெட்டிப்பயலின் மணல் கயிறு பதிவை ரீமேக் பண்ணா என்ன? எப்பவும் தெலுங்குப் படத்தையே தான் ரீமேக் பண்ணனுமா? ஃபார் ஏ சேஞ்ச், ஒரு தெலுங்குப் பதிவை ரீமேக் பண்ணா என்ன? :-) கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட் இதோ!

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணுங்க போடாத கண்டிஷனே இல்ல! இதுக்கு "வெட்டி"யோட அந்த வித்யாவே சாட்சி!
ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?

போட்ட கண்டிஷன்ல, அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கிப் போயி நம்ம நாரதர் நாயுடுவோட வொய்ஃப், சரோஜினி நாயுடு கிட்ட வராங்க.
அந்த பையனுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே? சரி, வித்யாவுக்கு ரைமிங்கா விக்ரம்-னு வெச்சிடுவோம்.


சரோஜினி நாயுடு: வாப்பா விக்ரம். நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா பிரியாணியே இறங்கலயாமே? எங்கே...அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லு! நானே உனக்கு நல்ல பொண்ணா பாக்கறேன்.

விக்ரம்: ஓ...அப்படியா நாயுடு ஆன்ட்டி! நான் BE Mechanical படிச்சிருக்கேன்.

ச.நா: அதுக்கென்னப்பா! அதுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்துடலாம்.

விக்ரம்: BE Mechanical படிச்சாலும், நான் கம்ப்யூட்டர் கம்பெனி-ல தான் வேலை பாக்குறேன்!

ச.நா: அடடா! கம்ப்யூட்டர் கம்பெனி-ல கியர் பாக்ஸ் ஏதாச்சும் மாத்துற வேலையா தம்பி?

விக்ரம்: அட! அது இல்லீங்க! எலெக்டிரிக்கல் படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஒயரையா புடுங்கிக்கிட்டு இருக்கான்?
எம்.எஸ்சி கணக்கு படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஃபிகரையா கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கான்?
கம்ப்யூட்டர்-க்குள்ள யாரு வேணா வரலாம் ஆன்ட்டி! ஆனா இங்கிருந்து தான் வேற எங்கேயும் போக முடியாது!

ச.நா: ஏம்பா?

விக்ரம்: ஆடுன காலும், பாடுன வாயும், தட்டுன பொட்டியும் என்னைக்காச்சும் சும்மா இருக்குமா?
வொர்க் பிரம் ஃபாக்டரில, எப்படி வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணறதாம்? டயத்துக்கு வேலை பாத்தாவணும்! வேலை பாத்தே வெளங்காமப் போயிருவானுங்க ப்சங்க!

ச.நா: ஓ, அதானா சங்கதி?
அன்டர்வேர் கம்பெனிக்காரன் கூட, சாஃப்ட்வேர் கம்பெனி மாப்பிள்ளையா ஏன் கேக்குறான்-ன்னு இப்பல்ல புரியுது!
சரி, மேட்டருக்கா வா! உனக்கு எந்த வேலை செய்யற பொண்ணைப் பாக்கட்டும்? அதைச் சொல்லு ராசா!

விக்ரம்: எனக்கும் சாப்ட்வேர்-ல வேலை பாக்குற பொண்ணு தான் வேணும்!

ச.நா: ஏன்பா, ஒரே உறையில எப்படிப்பா ரெண்டு கத்தி இருக்கும்? நல்லா யோசிச்சிச் சொல்லு! இது வாழ்க்கைப்பா வாழ்க்கை!
அப்பறம் நீ பொட்டி தட்ட மாட்ட!
வாழ்க்கை ஃபுல்லா ரொட்டி தான் தட்டுவ!

விக்ரம்: அட...இதெல்லாம் நாங்க யோசிக்காம பேசுவமா? ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக்காக, யோசனையே பண்ண மாட்டோம்-னு நெனச்சிக்காதீங்க! நான் ஒரு டெவலப்பர்...அதனால...

ச.நா: அதனால என்னா இப்போ?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 1: பொண்ணு சாப்ட்வேர்ல இருக்கணும்! ஆனா டெஸ்ட்டரா இருக்கக் கூடாது! டெவலப்பராத் தான் இருக்கணும்!

ச.நா: என்னாடா பொழைப்பு இது? ஏதோ ரியல் எஸ்டேட் டெவலப்பர் ரேஞ்சுக்குப் பேசறியே!

விக்ரம்: நல்லாக் கேட்டுக்கோங்க ஆன்ட்டி.
டெஸ்ட்டருங்களுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
யூசருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
அனலிஸ்ட்டுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
மேனேஜருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!

ச.நா: அப்ப, யாருக்குத் தான் ஆகும்?

விக்ரம்: டெவலப்பருக்குத் தான் ஆகும்!
ஒரு டெவலப்பரோட மனசு ஒரு டெவலப்பருக்குத் தான் தெரியும்!
அதுனால எனக்கு வரப் போற பொண்ணு ஒரு டெவலப்பராத் தான் இருக்கணும்!

ச.நா: என்னமா அலசி, ஆராய்ஞ்சி, முடிவு எடுத்திருக்குற? மொதல் கண்டிஷனே சூப்பர்! மேல சொல்லு!


விக்ரம்: கண்டிஷன் நம்பர் 2. எனக்கு என் கெரியர் தான் முக்கியம்!

ச.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னபா நல்லதா பார்த்து வாங்கி தரச் சொல்றேன். ஆனா மத்தியானச் சாப்பாட்டுக்கு, டிபன் கெரியர்-ல தான் சாப்பாடு கொண்டாறணும்-னு எல்லாம் கண்டிஷன் போட்டுறாத ராசா! கண்ணகியோட கசின் பிரதர் கூட, இப்பல்லாம் இப்படிக் கேக்கறது கிடையாது!

விக்ரம்: ஆன்ட்டி. நான் சொல்றது என்னோட ப்ரஃபொஷன். எந்தக் காரணத்துக்காகவும் என் வேலையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்! வொர்க் இஸ் வொர்சிப்! மத்ததெல்லாம் கர்ச்சீப்!

டெட்-லைன் போது, டேமேஜர் போட்டு நெருக்குனார்-னா வைங்க, வேலைய வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வருவேன்! அதைக் கூடமாட இருந்து அந்தப் பொண்ணு தான் முடிச்சிக் கொடுக்கணும்! என்னா சரியா?

ச.நா: அடடா! உன் ஆபீஸ் வேலையில கூட அவளுக்குச் சம உரிமை கொடுக்குறியேப்பா!

விக்ரம்: எக்ஜாக்ட்ல்லி! அப்பறம் இதுலயே ஒரு முக்கியமான சப் கண்டிசன்! 2b. நான் அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! எனக்கு என் கெரியர் தான் முக்கியம்! வேணும்னா வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!

ச.நா: அடடா! ஆம்பளைப் புள்ளன்னா இப்பிடியில்ல இருக்கணும்! அந்த மாதிரி பொண்ணையே பாத்துடறேன் ராசா! அடுத்து?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 3. அவ பாக்கறதுக்கு....ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு ஹீரோயின் மாதிரி இருந்தா தேவலாம்!
மண்டேன்னா மாளவிகா,
செவ்வாய்-னா செரீன்,
புதன்-னா பூமிகா,
வியாழன்-னா வேதிகா,
வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்!

ச.நா: ஹூம்! சனி, ஞாயிறு? அதை மட்டும் ஏன் வுட்டுட்ட?

விக்ரம்: அய்யய்யோ! வீக் என்ட் நாங்க அவுட்டிங் போவோம்-ல! என்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, அவனவன் அவளைச் சைட் அடிச்சிக்கிட்டு இருந்தானா? சேச்சே அதெல்லாம் வேலைக்காவாது! சனிக்கெழமை குஷ்பூ, சண்டே-ன்னா ராதிகா மாதிரி மேக்-அப் பண்ணிக்கிட்டாப் போதும்! நான் ரொம்பல்லாம் எதிர்பார்க்கல!

ச.நா: ரொம்ப நல்ல பையனா இருக்கியேப்பா! பொண்டாட்டியை யாருக்கும் தெரியாம, கைக்குள்ள வச்சித் தாங்கற பையன்-னா அது நீ தான்!


விக்ரம்: கண்டிஷன் நம்பர் 4. அவளுக்கு நல்லாச் சமைக்கத் தெரியணும்! அது வாய்க்கு ருசியா இருக்கணும்-னு எல்லாம் கேக்குற கொடுமைக்கார பையன் நான் இல்லீங்க!
பொண்ணுங்க என்ன பசங்களுக்கு சமைச்சிப் போடவா பொறந்து இருக்காங்க?

ச.நா: அடா! அடா! அடா! சாப்ட்வேர் தொறைல இப்படி ஒரு பாரதியார் இருக்காரா?......சரி, அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ ராசா?

விக்ரம்: வாரம் ஃபுல்லா மைக்ரோவேவ்-ல போட்டுக் கொடுத்தாப் போதும்! நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்! ஆனா என்னைப் பாத்திரம் மட்டும் கழுவச் சொல்லக் கூடாது! எனக்குத் தண்ணில கண்டம் இருக்கு-ன்னு ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க!

ச.நா: வெரி குட்! இதுல சப்-கண்டிசன், சப்பைக்-கண்டிசன் ஏதாச்சும் இருக்கா?

விக்ரம்: 4b. வீக் என்ட் ஆனா, அத்தையும் மாமாவும், எங்க வீட்டுக்கு வந்தே ஆகணும்!

ச.நா: அடடா! என்னா ஒரு மனசு! யாரு, அந்தப் பொண்ணோட அம்மா, அப்பா! அவங்க தானே?

விக்ரம்: அட, அவங்க எனக்கும் அம்மா அப்பா மாதிரி தானே!
அவங்க வரும் போது பெரிய டிபன் கேரியர்-ல சிக்கன் பிரியாணி, மட்டன் குருமா, வறுத்த எறா, பொரிச்ச மீனு-ன்னு ஏதாச்சும் லைட்டாப் பண்ணிக் கொண்டு வந்தாப் போதும். அப்படியே சாயங்காலம் டிபனுக்கு கொத்து பரோட்டா இருந்தாக் கூட ஓக்கே தான்!

ச.நா: சூப்பர் கண்டிசனா இருக்கே! அப்போ உங்க அம்மா, அப்பா?

விக்ரம்: எங்க அம்மா-அப்பா, என் பிரெண்ட்ஸ்...இவங்கெல்லாம் யாரும் வீட்டுக்கு வரவே மாட்டாங்க! நான் கியாரண்ட்டி! கவலைப்பட வேணாம்-னு பொண்ணு வீட்ல சொல்லுங்க!
அப்படியே பசங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாக் கூட, "டேய் ஓட்டலுக்கு வாடா நாயே"-ன்னு சொன்னா, பிரெண்ட்ஸ் வராமயா போயிடுவானுங்க?

ச.நா: அடடா! என்னா ஒரு ஷிப்பு!
டைட்டானிக் ஷிப்பு கவுந்தாக் கூட உங்க ஃப்ரெண்ட்ஷிப்பு மட்டும் கவுறவே கவுறாதுடா! இவ்ளோ தானா? வேற எதாச்சும் இருக்கா?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 5. எந்த காரணத்தை கொண்டும் எனக்கு ஆன்-சைட் கெடைச்சா கூடவே வருவேன்-ன்னு அடம் புடிக்கக் கூடாது!
நான் அங்க, யாரைப் பாக்கணுமோ பாத்து, நல்லாப் பேசிப் பழகி, "எல்லாத்தையும்" செட்டப் பண்ணனும்-ல? ஒரு வருசம் கூட ஆகலாம்!...அது வரைக்கும், அவ அவங்க அம்மா வீட்டிலயே கூட இருந்துக்கலாம்!
வேணும்னா ஒரு IP Phone வாங்கித் தாரேன்! அதுல டெய்லி எல்லாம் என்னைக் கூப்டாம, வாரா வாரம் என்னைக் கூப்டுறணும்!

ச.நா: என்னா பாசம்! என்னா பாசம்! போதும் ராசா!
அஞ்சு கண்டிசன் மேல போட்டீன்னா, பஞ்சாப் பறந்து, பஞ்ச்சராயிடுவ நைனா!

விக்ரம்: இருங்க! இருங்க! ரொம்ப முக்கியமான கண்டிஷன் ஒன்னு இருக்கு! எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆயிடுச்சின்னு வைங்க....

ச.நா: அட...ஏம்பா இப்படி அபசகுணமா பேசற? மொதல்ல வாயை கிங்-பிஷ்ஷர் ஊத்திக் கழுவுப்பா!

விக்ரம்: இருங்க ஆன்ட்டி.....சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனைன்னு வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவ கண்டிப்பா, ரெண்டே மாசத்துல வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

ச.நா: இது! இது! இங்க தாம்பா நீ ஒரு பெண்ணீயம் பேசும் பெருமகன்-னு நிரூபிக்குற.

விக்ரம்: அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. அதுக்கப்பறம் அவளுக்கு நான் மாசா மாசம், கப்பம் கட்ட வேணாம் பாருங்க! அதுக்குத் தான்!

சரோஜினி நாயுடு மயக்கம் போட்டு கீழே விழுகிறார்...
நாரதர் நாயுடு என்னும் வெட்டிப்பயல் ஆசை ஆசையா ஓடியாந்து சரோவுக்குக் கொஞ்சம் தண்ணி தெளிச்சி விடுகிறார்....
Read more »

Thursday, March 20, 2008

***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்! - கீதா சாரம்! - Part 2

கீதையின் துவக்கம்! மக்களே எல்லாரும் எழுந்திரிச்சி நின்னு, கன்னத்துல ஒரு தபா போட்டுக்குங்க! அப்படியே கிளாசில் ஒரு குவார்ட்டர் ஊத்திக்குங்க! இதோ பதிவர் கேஆரெஸ்-க்குப் பதிவர் ராகவன், திருவாய் மலர்ந்து அருளிய "பெகாவத்" கீதை! முந்தைய பகுதி இங்கே!

ஜிரா:
சண்டையை எண்ணிச் சலம்பிடும் சங்கரா!
சண்டையின் தன்மை சொல்வேன் கேளடா!
பதிவுகள் ஆன்மா மரணம் எய்தாது...மீள் பதிவு பிறந்திருக்கும்!
பின்னூட்டம் இடுவாய், பின்னூட்டம் இடுவாய், வீரத்தில் இதுவும் ஒன்றே!

நீ விட்டு விட்டாலும் இவர்களின் பதிவு, சூடாகி ஆவியாகும் ஓர் நாள்!

கேஆரெஸ்: உனக்கு எல்லாம் தெரியும்டீ! ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும் ஜிரா! நீயா என்னை இந்தப் பாவச் செயலைச் செய்யத் தூண்டுவது?

ஜிரா:
என்னை அறிந்தாய்! எல்லாப் பதிவும் என் போலி என்பதையும் அறிந்து கொள்வாய்!
ஜிரா மனது, ஜில்பான்ஸ் மனதோ? காண்டீபம் நழுவ விட்டாய்?
பதிவரும் நானே! போலியும் நானே! அனானியும் நானே நானே!
சொன்னவன் ஜிரா! ஜல்லி அடிப்பவன் ஜிரா! துணிந்து நில் தி(ர)ட்டி வாழ!!!

கேஆரெஸ்: சர்வமும் நீ தான், நீ தான் என்று சொல்லிக் கொள்கிறாயே எங்கள் மாதவா! உண்மையில் நீ யாரு? அதை ஒரு வாட்டியாச்சும் ஒழுங்காச் சொல்லித் தொலையேன்!

ஜிரா: அடேய்! என்னையா யாரென்று கேட்டாய்? நான் ஸ்ரீவள்ளியும் எழுதுவேன்! சில்க் ஸ்மிதாவும் எழுதுவேன்! ஆனா தேவயானையைப் பத்தி மட்டும் எழுதவே மாட்டேன்! இதோ பார் என் சுயரூபம்...ச்சே விஸ்வரூபம்..!!!
டொய்ங்க்...டொய்ங்க்...டொட்ட டொட்ட டொட்ட டொட்ட டொய்ங்க்க்க்க்க்!!!
(ஜிரா தன் சட்டை, கூலிங் கிளாஸ், கர்ச்சீப் என்று சகலமும் கழட்டி விட்டுத், தன் விஸ்வரூப ஆர்ம்ஸைக் காட்டுறாரு! ஒரு முறுக்கு முறுக்குறாரு!
"ஜீவன்டோன் சாப்பிடுங்க" என்று வெளம்பரத்தை உரக்கச் சொல்லி ஜிராவை அர்ஜூன கேஆரெஸ் கலாய்க்கிறான்!)


நான் யார்?
நானே பதிவும் பின்னூட்டமுமாய் இருக்கிறேன்!
ஆண்களில் நான் டாம் க்ரூஸ்!
பெண்களில் நான் பிரிட்னி ஸ்பியர்ஸ்!
நாடுகளில் நான் அமெரிக்கா!

நகரங்களில் நான் பாரீஸ்!

மொழிகளில் நான் பிரெஞ்ச்(கிஸ்)!
வேதங்களில் நான் காமசூத்திரம்!
தேவர்களில் நான் இந்திரன்!
அசுரர்களிலும் நானே இந்திரன்!


சாமியார்களில் நான் ஓஷோ!
மாமியார்களில் நான் இந்திரா காந்தி

நதிகளில் நான் நயாகரா!
மாத்திரையில் வயாகரா!


தீர்த்தங்களில் நான் குவார்ட்டர்
நடப்பதில் நான் கோபிநாத் வாக்கர்...ச்சே....ஜானிவாக்கர்
இசைக்கருவிகளில் நான் பேக்பைப்பர்
துறவிகளில் நான் ஓல்டுமாங்கு


சினிமாவில் டைரக்டர்ஸ் ஸ்பெஷல்
சரக்குகளில் நான் சுண்டக்கஞ்சி
பத்திரிகைகளில் நான் டெபோனேர்
புரொகிராம்களில் நான் மிட்நைட்மசாலா


மீன்களில் நான் கருவாடு!
அரிசியில் நான் புழுங்கல்!
பருப்பில் நான் முந்திரி!
மவனே போதும் எந்திரி!


கேஆரெஸ்: ஆகா...ஆகா...தன்யானேன் ஜிரா! என்ன ஒரு தரிசனம்! விஸ்வரூப தரிசனம்! என்னுடல் புல்லரிக்குது ஜிரா! இப்ப நான் ஒரு பாசுரம் பாடியே ஆகணும்!
(கேஆரெசாழ்வார் ஜிராவின் பொற்பாத கமலங்களைப் பணிந்து, தமிழ்ப் பாசுரங்களை ஓங்கிப் பாடுகிறார்...)
பச்சைமா மலைபோல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்
அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
ஆயர்தம் அன்னப் பூர்ணா


இச்சுவை தவிர யான்போய்
மெக்டொனால்ட்ஸ் ஜங்ஃபுட் உண்ணும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
ஆம்ஸ்டர்டாம் நகர் உளானே...


ஜிரா: ஆகா! கேஆரெஸ்! நான் தான் டகால்ட்டி-ன்னு நெனச்சேன்! நீ என்னைய விட டகால்ட்டியா இருக்கியேப்பா! எப்படிடா நண்பா, இப்படி எல்லாம் தமிழ்ப் பாசுரம் பாடுற?

கேஆரெஸ்: அடியேன் சீவீ ராமானுஜ தாசன்! ஹிஹி! சரி ஜிரா பரந்தாமா, கீதை இவ்வளவு தானா? இல்ல இன்னும் ஏதாச்சும் பாக்கி கீக்கி இருக்குதா?


ஜிரா:
பதிவுலகில்
எது பதிந்ததோ அது பின்னூட்டம் பெற்றது.
எது பின்னூட்டம் பெற்றதோ அது நன்றாகவே சூடானது.
எது சூடானதோ அது பேஜ்விசிட் பெற்றது.
எது பேஜ்விசிட் பெற்றதோ அது அலெக்சியா ரேட்டிங் பெற்றது.

டாப் ஃபைவ்வில் ஒருவனே, டாவடிக்கும் பார்த்தனே...
எந்த ரேட்டிங்கை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு.
எந்த ரேட்டிங்கை நீ பெற்றாயோ அது இங்கிருந்தே பெறப்பட்டது.
எந்த ரேட்டிங்கை நீ இழந்தாயோ அது இங்கேயே இழக்கப்பட்டது.

எந்தப் வலைப்பூவை கொண்டு வந்தாய்! அதை நீ இழப்பதற்கு?
எந்தப் பின்னூட்டத்தை நீ போட்டாய்! பதிவு சூடாவதற்கு?
எதை நீ பப்ளிஷ் செய்தாயோ, அது இங்கிருந்தே பப்ளிஷ் செய்யப்பட்டது.
எதை நீ ரிஜெக்ட் செய்தாயோ, அதுவும் இங்கிருந்தே ரிஜெக்ட் செய்யப்பட்டது.


எந்த பின்னூட்டம் இல்லையென்று நீ அழுகின்றாய்?
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!
பதிவினை எழுது! பின்னூட்டத்தை எதிர்பாராதே!!
குழுப் பதிவினில் எழுது! கும்மியை எதிர்பாராதே!!


எது இன்று உன்னுடைய குழுப் பதிவோ,
அது நாளை மற்றொருவர் உடையதாகிறது.
மற்றொருநாள், அது வேறோருவர் உடையாதாகும்.
Nothing Stays...Thatz what Nameethan Says!!
இதுவே பதிவுலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.

கேஆரெஸ்: ஆகா......இதுக்குப் பேர் தான் கீதாசாரமா கண்ணா? எனக்கென்னமோ இது கீதாசாரமாத் தெரியலையே! அபசாரம் மாதிரி-ல்ல தெரியுது!

ஜிரா: இது அப-சாரமும் இல்லை! அபிஅப்பா-சாரமும் இல்லை! இதுவே ஜீரா சாரம்! ஜீரா சாரம்!!

கேஆரெஸ்: தன்யன் ஆனேன் ராகவா! ஆனால்...

ஜிரா: எலே மாங்கா...என்னவே ஆனால்-னு இழுக்குற...?

கேஆரெஸ்: மை டியர் ராகவா! என்ன இருந்தாலும் பின்னூட்டத்தில் சண்டை போடப் போகிறவன் நான் அல்லவா?
ஜிரா காட்டிய வழி என்று யாரையாவது நான் எடுத்தெறிந்து பின்னூட்டி விட்டால், அந்தப் பாவம் எனக்கல்லவா?
அதற்கு நீ உடந்தை ஆவாயா ஜிரா? சொல் ஜிரா சொல்!

ஜிரா:
உள்குத்து என்றிந்த உலகம் சொன்னால் அது போகட்டும் கோவி-கண்ணனுக்கே!
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் குமரனுக்கே!
ரத்னேஷே ஆக்கினான்! டிபிசிடியே தாக்கினான்!
வவ்வாலே கொலை செய்கின்றான்!!!
பதிவுலகில் எழுக! நின் சாக்பீசும் எழுக! பதிவெலாம் சிவக்க!!!



ஆயிரம் ஆயிரம் மணிகள் ஒலிக்கின்றன. சங்க நாதம் பறக்கிறது. ஓசை செல்லா சவுண்ட் எபெக்ட்ஸ் பிச்சிக்கிட்டுப் போகுது. பதிவர்கள் மலர் மாரி பொழிகிறார்கள்!
பாஸ்டன் வியாசா Snap Judge-இல் சுட்டி கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறார்!
பெனாத்தலார் பெனாத்துவதை நிறுத்தி விட்டு, கீதாலஜி படிக்கத் துவங்குகிறார்!
அடுத்தது கீதை பற்றிய குறும்படம் தான் என்று டுபுக்கு கேஆரெஸ்ஸின் கால்ஷீட் தேடி ஓடுகிறார்!
கீதாசாரத்தின் படி, நல்ல பதிவனாய் நடந்து கொள்வது எப்படி-ன்னு டிப்ஸ் திவ்யா சிப்ஸ் போடுறாங்க!

கீதா ரகசியம் சொன்னவன் காலைக் கழுவிக் குடிங்கடே-ன்னு ஆசிப் அண்ணாச்சி அருள் வந்து ஆடுறார்!
இதுவே தமிழன் நிஜ கீதை! இதுவே கலைஞர் பெரும் பாதை! என்று லக்கி அண்ணாச்சி ஒரு சிலிர்ப்பு சிலிர்க்கிறார்!
இட்லி வடையில் ஜீரா சாரம் டாப் டென்னில் நிக்குது!
கீதைச் சார்பின்மையும் பதிவுகளின் பரிமாணங்களும் என்று நம்ம ரவிசங்கர் விக்கிபீடியாவில் ஆயிரம் பக்க வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்பிக்கிறார்!

நச்-னு ஒரு கீதைப் போட்டியை சுடச்சுட அறிவிக்கிறார் நம்ம சர்வேசன்! போட்டிக்கு விண்ணப்பங்கள் குவிகின்றன!
* வினையூக்கி எழுதிய மாயாவி மகாபாரதம்
* சிறில் அலெக்ஸ் எழுதிய முட்டத்தில் மகாபாரதம்
* தேவ் அண்ணாத்த எழுதும் விவாஜீ, கிருஷ்ணாஜீ, ஜீராஜீ
* செல்வன் எழுதும் ஜிரா புனிதாவை லவ் பண்ணுகிறாரா?
* தம்பி உமாகதிர் எழுதும் போர்க்களத்தில் ஒன்னுக்கு போகலாமா?
* காதல் மன்னன் ஜீ எழுதும் அர்ஜூன் என்ற அன்பானவன்
* அரைபிளேடு எழுதும் பாஞ்சாலியின் ஜன்னல் வச்ச ஜாக்கெட்.

என்று போட்டிக்கு பல லட்சம் பாரதக் கதைகள் வருகின்றன. அத்தனையும் சீக்ரெட்டாக எடைக்கு எடை போட்டுக் காசாக்குகிறார் சர்வேசன்! யார் இந்த சர்வேசன் என்ற சர்ச்சை பதிவுலகில் கூடவே எழுகிறது! அடுத்த ஐந்து நிமிடத்தில் யூ.எஸ்.மேப்பில் இருந்து பாஸ்டன் காணாமல் போகிறது!

கோமகன் கொத்தனார் இத்தனை களேபரத்திலும் கடமையே கண்ணாக உப்புமா கிண்டிக் கொண்டிருக்காரு! அவர் கிண்டக் கிண்டப் பின்னூட்டப் புயல் போர்க்களத்தில் சுழன்று சுழன்று அடிக்கிறது!

வெட்டிப்புயல் பதிவில் வீசிய புயல் எல்லாம், இப்போது இடம் மாறி வீசுவதைக் கண்டு, வெட்டிப்புயல் துரியோதனச் சக்ரவர்த்தி திகைத்துப் போய் நிற்கிறார். ஆல் பிகாஸ் ஆப் திஸ் ஜிரா என்று கறுவுகிறார்!

இனி வேறு வழியில்லை! சிங்கிளா இருந்தா சமாளிக்கலாம்! ஆனா இப்ப வெட்டி சிங்கிள் இல்லையே!...
சிங்கிள், ஜிராவின் பாதங்களில் மிங்கிள் ஆகிறது!
வெட்டிப்புயல், ஜிராவின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சரணாகதி செய்கிறான்!
இனி எல்லாம் சுகமே என்று கெளரவர்களின் எண்ணிக்கையும் 105ஆக உயர்கிறது! நியாயமாப் பாத்தா 106ஆக உயரணும்! ஆனால் வழக்கம் போலக் கடைசியில் எல்லாரும் கோவி கர்ணனை லூசில் விட்டுவிடுகிறார்கள்!

(இத்தனையும் சத்தம் போடாமல் ஒரு ஓரமாய் பார்த்துக் கொண்டிருந்த கீதாம்மா...
"அடப் பாவிங்களா,
"கீதா"சாரம் என்ற பெயரே என் பேரில் இருந்து தான் வந்தது! இதுக்கான ஆதாரத்தை ஒரு ஓலையில் எழுதி, சிதம்பரத்தில் சீக்ரெட்டா சீலிங்கில் தொங்க விட்டுருக்காங்க!
அதுக்குத் தான் எல்லோரும் அம்பலம் ஏறி அதைப் பறிக்குணும்-னு திட்டம் போடுறாங்க! என்னிடம் காப்புரிமை வாங்காத ஜிராவுக்கு ஆப்புரிமை கொடுத்தே ஆகணும்" என்று தீவிரமா யோசிச்சிக்கிட்டு இருக்க...அங்கே அம்பி...நல்லா விசிறி விட்டு விட்டு வந்த வேலை முடிஞ்சுது-ன்னு அப்படியே அப்பீட் ஆகிறான்!

சு! சுபா! சுபம்!!!
பதிவர்களுக்குச் சர்வ மங்களம் உண்டாகட்டும்!!!
Read more »

Monday, March 17, 2008

***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்! - 1

இடம்: ஆம்ஸட்ர்டாம் அய்யம்பேட்டை மைதானம்
ட்யூலிப்புகள் பூத்துக் குலுங்க வேண்டிய இடத்தில், டூ லிப்புகள் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றன.

பதிவுலக மாய மோகனன், பரந்தாமன் ஜி.ராகவன் மிகவும் விலை உயர்ந்த LAMBHORGHINI காரை ஓட்டிக் கொண்டு வருகிறார்! காரின் மேல் மயில் கொடி பறக்கிறது. நடு மைதானத்தில் காரை நிறுத்துகிறார்...உர் உர் என்று உறுமுகிறார். அவர் கையில் ஒரு மவுத் ஆர்கன்! முகத்திலோ மாதவப் புன்னகை!
அதே காரில் சன் ரூஃபில் எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் பதிவுலகச் செல்லப் பிள்ளையான கேஆரெஸ்! அவர் குறுகுறு மீசை துடிதுடி எனத் துடிக்கிறது! அந்தக் அர்ஜூன கேஆரெஸ் தன் பதிவெழுதும் சாக்பீசைக் கீழே போட்டு விட்டு, கண் கலங்கி நிற்கிறார்!

சுற்றிலும் பதிவுலகப் பெரும் படை திரண்டு நிற்கிறது.
தருமபுத்திரர் கப்பி, பாஞ்சாலி பாவனா கலக்கிய காப்பியை ஃபிளாஸ்க்கில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருக்கிறார்.
பீம்பாய் ராயல் ராமனும், நக்கல் நகுலன் நாமக்கல் சிபியும், சாத்வீக சகாதேவன் சீவிஆரும் அவரவர் ரதங்களில் ஏறித் தயாராக இருக்கின்றனர்.

பாண்டவர்களின் யானைப் படைக்குத் துளசி டீச்சர் தலைமை தாங்குகிறார்கள்! கெளரவர்களின் யானைப்படைக்கு பொன்ஸ் அக்கா தலைமை தாங்குகிறார்கள்! சிங்கப் படையில் வ.வா.சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம் சூழ்ந்து நிக்குறாங்க!
அந்தச் சமயத்திலும் படைகளுக்கெல்லாம் விவசாயி இளா, இளநி வித்துக்கிட்டு இருக்காரு! முதல் பதினேழு இளநி வாங்குறவங்களுக்கு விருது கொடுக்கப்படும்-ன்னு குருக்ஷேத்திரத்தில் கூவி கூவி விக்குறாரு!

பிதாமகர் குமரன், ஆச்சாரியார் VSK, குலகுரு சுப்பையா வாத்தியார், விதுர நீதிபதி ஜீவா, தளபதி கோவி கர்ணன் எல்லாரும் எதிர் அணியில் திரண்டு நிக்குறாங்க! துரியோதனச் சக்கரவர்த்தி வெட்டிப்பயலின் ஆணைக்கு அனைவரும் காத்திருக்காங்க!
ஓசைப்படை செல்லா (அதாங்க, Cheer Leading) அவ்வப்போது கண்டசாலா குரலில் போர்க் கீதங்கள் பாடிப் பலரையும் கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.



கேஆரெஸ்: "ஜிரா...பதிவுலகப் பரந்தாமா...நான் இனிமே பதிவே எழுதப் போறதில்ல! எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு! நான் எப்படி என் நண்பர்களுக்கு எதிராப் பதிவு போடுவேன்?
கண்ணன் பாட்டு பாடி என்னைத் தூங்க வைத்த பிதாமகர் குமரன் இன்னிக்கி அவங்க பக்கம் இருக்காரு!
காலத்தின் கோலம் கோவி கர்ணனும், ஆச்சாரியர் VSK-வும் அவர்கள் அணிக்குச் சென்று விட்டார்கள்!
பாடம் எடுத்த சுப்பையா வாத்தியார் இன்று சூடம் கொளுத்த வந்திருக்காரு!
என்னால் முடியாது ஜிரா, என்னால் முடியாது! என்னை விட்டு விடுங்கள்!"

ஜிரா: "கேஆரெஸ்ஸா இப்படிக் கண் கலங்குவது? ஆனானப்பட்ட தில்லைத் தீட்சிதர்களையே பதிவடித்து விரட்டிய உன் வீரம் எங்கே போனது என் ஆருயிர் நண்பா? மேலே பார்! என்ன தெரிகிறது? - மயில் கொடி! வேலுண்டு வெட்டியில்லை! மயிலுண்டு மன்னாரில்லை என்று துணிந்து நில்!
எடு சாக்பீசை! சுடு ரவாதோசை!"

கேஆரெஸ்: "ஏன் ஜிரா? துரியோதன வெட்டியின் கொட்டத்தை மட்டும் அடக்கினால் போதாதா? நாம் ஏன் அனைவரையும் வம்புக்கு இழுக்க வேண்டும்?
இதனால் பதிவுலகில் பல பிரச்சனைகள் தோன்றிப் பல பதிவுகள் சூடாகுமே! தமிழ்மணமும், தேன்கூடும், ஏன் பிளாக்கரே கூட டவுன் ஆகுமே! தக்கயாகப் பரணி பாடிய தமிழன், மொக்கையாகப் பரணி பாட நாம் துணை போகலாமா? பரந்தாமா வேண்டாம் இந்த விபரீதம்!"

ஜிரா: "ச்சீ! சுடுசொல்லே பேசாத உன் பதிவெல்லாம் எப்படிடாச் சூடாகுது? உண்டியலில் காசு போடாதே-ன்னு தானே பதிவு போட்ட! பதிவிலே சண்டை போடாதே-ன்னு எதுனாச்சும் போட்டியா இன்னா?
அப்புறம் ஏன் இந்தத் தயக்கம்? ஆகாதடா உனக்கு மயக்கம்! தமிழ்ப் பதிவனுக்கா கலக்கம்? கலங்கினால், உன்னைச் செய்திடுவேன் ஜிடாக்கில் விலக்கம்!"


அப்போது அங்கே அவசரம் அவசரமாக ஓடி வருகிறார் முக்காடு போட்ட மாரியாத்தா! மல் ஏசிய பல் ஏசி! மகா மாதா குந்தி தேவி..ஐ மீன் துர்கா தேவி!

துர்கா: "என்னருமை மகன்களே, உங்களைச் சண்டை போட வேண்டாம்-ன்னு நான் தடுக்கல! அதெல்லாம் தாராளமாகப் போடுங்க! அப்ப தான் எனக்கும் கும்மி அடிச்சிப் பொழுது போகும்! ஆனா எனக்கு ஒரே ஒரு வரம் மட்டும் கொடுங்க! எதிரணியில் இருக்கும் கோவி.கர்ணனை மட்டும் ஒன்றும் செய்யக் கூடாது. எனக்கு அவரிடம் இருந்து வரவேண்டிய IPod இன்னும் வரவில்லை! அது வரை அவரை விட்டு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்"

ஜிரா: "அத்தை துர்கா தேவி! உன் மகன் கேஆரெஸ் ஒரு கோழை! அவனை நானே கஷ்டப்பட்டுத் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்! அவனை விட்டுடு, இவனை விட்டுடுன்னு வந்து காரியத்தைக் கெடுக்கறியே! இதே பொழைப்பாப் போச்சு உனக்கு! போய் உன் மருமகள் பாவனாவிடம் சண்டை போடு! ஐ-பாடு! களத்தை விட்டு நீ ஓடு!"

கேஆரெஸ்: "பரந்தாமா, தம்பிமார்களைக் கடைசியாக ஒரு வார்த்தை கேட்டு விடுவோமே! அதுக்கப்புறம் நீ சொன்னபடி எல்லாம் செய்கிறேன்!"

ஜிரா: "சரி...யாரங்கே அந்த வெண்ணைப் பசங்களைக் கண்ணன் அழைத்தான் என்று இங்கு அழைத்து வா!
(மனசுக்குள்: ச்சே...இந்நேரம் கோகுலத்தில் (இஷா) கோபிகரோட ஜாலியா இருந்திருப்பேன். துவாரகையில் தபுவோட தப்பாட்டம் போட்டிருப்பேன். இவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்! தோள் மேல் கை போட்டுப் பேசும் நண்பனுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு! பெருமாளே நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!)"

இடைப்பட்ட நேரத்தில் ஆயுத பேர டீலர் அரை பிளேடு, வீரர்களுக்குக் கள்ளச் சந்தையில் அரை பிளேடுகளை விற்றுக் கொண்டிருக்கிறார். எல்லாம் கும்மி அடித்து ஷேவ் பண்ணிப் பாக்குறாங்களே தவிர யாரும் பிளேடைக் காசு குடுத்து வாங்குவதாகவும் தெரியவில்லை!...சகோதரர்கள் எல்லாரும் வந்து கண்ணன் இருக்கும் இடம் வந்து சேர்கிறார்கள்...



ஜிரா: "வாரீர் தருமபுத்திரா கப்பி...போர் துவங்கும் நிலையில் உன் தம்பிக்கு என்ன வந்தது திடீரென்று? நீயே கேள்!"

கப்பி: "ஜிரா, நீங்களே பாண்டவர்களின் செகு-வேரா!
உலகத் தரம் வாய்ந்த படம் 10000 BC! அதற்கு விமர்சனம் எழுதும் கடமையில் தத்தளித்துக்கிட்டு இருக்கும் என்னை வீணாகச் சோதிக்க வேண்டாம்! வேண்டுமானால் நீங்கள் மாடு மேய்க்கப் போகும் போது, இலவசமாகப் பார்த்து மகிழ சாம் ஆண்டர்சன் பிட்டு ஒன்றைத் தருகிறேன்!

இப்போதைக்கு என்னை அதிகம் குழப்பாது விட்டு விடுங்கள்! நீங்கள் என்ன செய்தாலும் சரி! ஆனால் எதிரில் இருக்கும் வெட்டியும் எனக்கு ஒரு தம்பி தான்! இதோ இருக்கும் கேஆரெஸ்ஸும் ஒரு தம்பி தான்! நான் என்னவென்று சொல்வது?"

ஜிரா: "வெண்ணைய், உன்னைப் போய்க் கேட்டேன் பாரு!
மாசா மாசம் மாசத்தின் பெயரை வைத்துப் பதிவு போடும் நீசா, செல் அந்தப் பக்கம்! அப்பனே ராயல் ராமா, மதுரையின் பீமா! தாஜ் ஹோட்டல் தாமா! உன் கருத்து என்னப்பா?"

ராம்: "கால் தடங்களை அழித்துச் செல்லும் கடல் அலையென, தன் மனதில் பதிந்த தடங்களை எல்லாம் அழித்துச் செல்லதொருவல்ல பெரும் ஆழிப் பேரலையை எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்து விட்டொழிய வேண்டுமென மனதோடு உறுதி பூண்ட...எங்கள் ஜிரா பரந்தாமா....
(மூச்சு வாங்க, கையோடு கொண்ட வந்த ஜிகிர் தண்டாவை ஒரு சிப்பு சிப்பிக் கொள்கிறான் ராமன் அலியாஸ் பீமன்)

எப்படி ஆகிலும் அந்த வெட்டி வீழ வேண்டும்! "நான் ராமை லவ்வுறேன்"- என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, அவன் கதைகளில் என் நாயகிகளை எல்லாம் கொன்ற மகாபாவி அந்த வெட்டி! அது போதாதென்று பின்னூட்டத்தில் ஆணவப் பேச்சு! முன்னூட்டத்தில் கோவணப் பேச்சு! அவனை வீழ்த்துங்கள்! அவனை வீழ்த்துங்கள்!

அடேய் தம்பி கேஆரெஸ்! தம்பீ என்ற பாசம் உன் கண்ணை மறைக்குதா? எனக்குக் கூடத் தான்...அம்மூருக்காரவுக ததா குமரன் அங்கன இருக்காகுவ! நான் எதிர்க்கலை?"

சிபி: "நக்கல் நகுலன் நாமக்கல் சிபி நான் சொல்லுறேன் கேஆரெஸ்! அந்த வெட்டியை வீழ்த்து!
அவனுக்கு அரசுரிமை கேட்டுப் பதிவு போடும் துணிச்சலை யார் கொடுத்தது? அவன் 2006-இன் சிறந்த பதிவராய் வேண்டுமானால் இருக்கலாம்! ஆனால் 2020 வரை மொக்கை கிங் பதிவர் நான் தான் என்பதை மறந்து விட்டு மாட்லாடும் தெலுங்கினத் துரோகி அவன்!
அதெயெல்லாம் கூட விட்டு விடு! வீட்டில் அவிழ்த்துப் போட்ட கூந்தலை ஹேர் ட்ரையிங் செய்யாமல் இருக்கும் பாவனாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? யோசிச்சிப் பார்த்தியா?"


சீவீஆர்: க்ளிக்...க்ளிக்...க்ளிக்-க்ளிக்-க்ளீக்...

கேஆரெஸ்: தம்பீ சகாதேவா...அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? நானும் பரந்தாமனும் இங்கிட்டூ என்ன அல்வா-வா கிண்டிக் கொண்டிருக்கிறோம்? கையில் அது என்ன கருப்பாக? தெய்வீக அஸ்திரமா?"

சீவீஆர்: "கண்ணா என்று நான் அழைக்கும் கேஆரெஸ் அண்ணா! ஆமா இது ஒரு அஸ்திரம் தான். பகல், இரவு என்று எல்லா நேரத்திலும் இதைப் பயன்படுத்த முடியும். அதனால் இதுக்கு அஹோ-ராத்ர அஸ்திரம்-ன்னு பேரு.

White Balance, ISO, F-Stop, RGB, Histogram என்று பல செட்டிங்குகளில் இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம்! இதில் இருந்து பாயும் ஒவ்வொரு கணைக்கும் ஒரு Exif உண்டு!

இதை வைத்துப் போர்க்களத்தில் நடப்பவற்றை எல்லாம் Motion Capture செய்தோம்னு வைங்க! நாளை அதர்மமாகப் போரிட்டார்கள் பாண்டவர்கள் என்று எவனும் திரிச்சி சொல்லிற முடியாது! அதான்! Gotcha?"

ஜிரா: "அடப் பாவி...போரில் நான் ஏகப்பட்ட டகால்ட்டிகளைச் செய்ய வேண்டி இருக்குமே! அதுவும் சேர்ந்து தானே படமாகும்! இப்படி நம்ம அணியில் நாமளே ஒரு ப்ளாக் ஷீப்பை வைத்துக் கொண்டு எப்படி ஜெயிக்கப் போறோம்-ன்னே தெரியலையே!
ஏண்டா கேஆரெஸ், எங்கிருந்துடா இப்படி ஒரு பாசக்காரத் தம்பிய புடிச்ச? உனக்கு இவன் தான் பெரிய ஆப்பா வைக்கப் போறான் பாரு!"

கேஆரெஸ்: "அப்படிச் சொல்லோதே பரந்தாமா! ஐவரில் அவனே கடைக்குட்டி! குணத்தில் சாத்வீகன்! சில சமயங்களில் ஒரேயடியாகச் சாத்தும் வீகனும் கூட! சகோதரா சகாதேவா, பரந்தாமன் கவலை நியாயமானது-பா! அதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?"

சீவீஆர்: "பரந்தாமன் அண்ணாச்சி...கவலைப்படாதீங்க! நீங்க என்ன டகால்ட்டி வேண்டுமானாலும் தாராளமாச் செஞ்சிக்கோங்க! எதுக்கு இருக்குது பிக்காசா? எதுக்கு இருக்குது போஸ்ட் ப்ரொடக்சன்? எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்க கிம்பளம் ஒன்னு கூட அம்பலத்தில் ஏறாது! நான் கியாரெண்டி! என்சாய் மாடி!"

ஜிரா: "என்னத்தையோ சொல்லுறான்! சரி...கேஆரெஸ்...சகோதர்கள் அனைவரும் சொல்லி விட்டார்கள்! இனியும் தயக்கம் தேவை இல்லை!
வீழட்டும் வெட்டிப்பயல்! சூழட்டும் குட்டி பிகர்! தாழட்டும் வாழையிலை! அதில் பாயட்டும் பிரியாணி!
எடு சாக்பீசை! சுடு ரவாதோசை! மவுத் ஆர்கன் முழங்கட்டுமா?"

கேஆரெஸ்: "பரந்தாமா, கதைப்படி எனக்குக் கீதை சொல்லிய பின்னர் தானே போர் ஆரம்பிக்கும்! இன்னும் நீங்க கீதை சொல்லவே இல்லியே?"

ஜிரா: "ஓ..அது வேற இருக்கா! இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் இந்தக் கேஆரெஸ்ஸை ஏமாத்தவே முடியாது போலிருக்கே! சரி....சொல்கிறேன்...
இதோ கேட்டுக் கொள்ளூங்கள்! - பதிவர் ராகவன் திருவாய் மலர்ந்து அருளும் "பெகாவத் கீதை"!....
(தொடரும்...)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP