Sunday, August 30, 2009

ஓம் நமோ Dash!-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை!-4

கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே! அதானே பகுத்தறிவு? = ஆமா! உண்மை தான்!
கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!

* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?
* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?
ஏன் கேஆரெஸ் எப்பமே இப்பிடி டகால்ட்டி பண்ணுற? கெட்ட பேரு வாங்கிக்குற? சாஸ்திர விரோதி பட்டமெல்லாம் ஒனக்குத் தேவையா? :)))

அட, "நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை"-ன்னு சொல்லுறது நான் இல்லீங்க! ஆழ்வார் தான் அப்படிச் சொல்றாரு! :) மேலப் படிங்க.....


சென்ற பதிவில் "நாரணம்" என்பது சங்கத் தமிழ்ச் சொல்லே-ன்னு பார்த்தோம் அல்லவா?

அதை மேலும் சான்றளித்துச் செவ்வியாக்கும் வண்ணம், நம் இராம.கி ஐயா, அருமையான ஆய்வுப் பதிவு ஒன்றை இட்டிருக்கார்! இதோ! தட்டாது வாசித்துப் பாருங்கள்! Very Analytical & Unbiased!

தொல்காப்பியர் காலம் தொட்டே...
* சேயோனாகிய முருகனும்
* மாயானோகிய திருமாலும்

தமிழ்க் கடவுள் என்னும் சிறப்பு பெறுகின்றனர்
என்று சில, பல, பலப் பல பதிவுகளில், அவ்வப்போது பார்த்து வந்துள்ளோம்! மெல்லிய எதிர்ப்புகளுக்கு இடையிலும்! :)

தமிழகத்தில், வேறு சில அவைகளில்,
டாக்டர் மு.வ, இராசமாணிக்கனார், அரங்கண்ணல், மு.மு. இஸ்மாயில் போன்றவர்களால், மாலவனும் தமிழ்க் கடவுளே என்று இதே கருத்து எழும்பிய போது,
சில ஏக போக போங்காளர்களும், "பகுத்தறிவாளர்களும்" கூட அதற்கு எதிர்ப்பு காட்டியுள்ளனர்!
இந்த எதிர்ப்புகள் பகுத்தறிவின் பாற்பட்டதா? = இல்லை! "பகூத்" அறிவின் பாற்பட்டது! :)
"பகூத் அறிவு" என்றால் இந்தியில் "நிறைய அறிவு"-ன்னு பொருளாம் :)))

தமிழ் இலக்கியங்களையும், தமிழர் நாகரிகத்தையும், சங்க கால இறை இயலையும்,
"உள்ளது உள்ளபடி" வாசித்தால், இந்த "பகூத்" அறிவு கொறைஞ்சி, பகுத்தறிவு வளரும்! :)

தொல்காப்பியர், இன்னும் இரண்டு நிலத்துத் தெய்வங்களான வேந்தனையும், வருணனையும், கூடவே காட்டினாலும், அவர்களை வெறுமனே நிலத்தின் அடையாளமாகத் தான் காட்டுகிறார்! மக்கள் அடையாளமாகக் காட்டவில்லை!
அவர்கள் இருவரும் அடையாளமாகவே நின்று விடுகின்றனர்! மக்களோடு கலக்கவில்லை! ஆனால் மாயோனும் சேயோனும் அப்படி அல்ல!

வீங்குநீர் அருவி வேங்கடமும், சீர்கெழு செந்திலும்


திருவேங்கடம், திருவரங்கம், திருவேரகம் (சுவாமிமலை), செந்தில் (திருச்செந்தூர்) என்று மாயோன்/சேயோன் ஆலயங்கள் சங்கத் தமிழில் காட்டப்படுகின்றன!
அவை இன்றளவும் உள்ளன! மாயோனுக்கும் சேயோனுக்கும் பண்டைத் தமிழ் மக்கள் எழுப்பிய இந்த ஆலயங்களைப் போல், வேந்தனுக்கும் வருணனுக்கும் எங்குமே இல்லை!

வேந்தனும் வருணனும் வெறும் நில அடையாளமாகவே நின்று விடுகின்றனர்! மக்கள் தெய்வமாக இல்லை!
பூவை நிலை, குரவைக் கூத்து, வேலன் வெறியாடல் என்று மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து, இயைந்து விட்ட இரு பெரும் தமிழ்க் கடவுளரைப் போல், மற்ற இருவரும் கலக்கவில்லை!

அதனால் தான், மக்களோடு ஒன்றிய
* சேயோன்=முருகனும்,
* மாயோன்=திருமாலும்,
"தமிழ்க் கடவுள்" என்று போற்றப்படுகின்றனர்!
அன்றில் இருந்து இன்றளவும், தமிழ் இறை இயல் நெறிக்குப் பான்மையாய், ஆதாரமாய் விளங்குகின்றனர்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சி மீமீசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திய
செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமாய் -

நம்ம சிலப்பதிகாரமே வேங்கடவனைச் சங்கு சக்கரங்களுடன் தான் காட்டுகிறது! உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு அது தெரியும்! ஏக போக போங்காளர்கள் கண்ணை வசதியாக மூடிக் கொள்வர்! பூனை கண்ணை மூடிக் கொண்டால், பூலோகம்...??? :))

மாயோனின் திருவேங்கடம்/ திருவரங்கமும்,
சேயோனின் திருவேரகம்/ சீர்கெழு செந்திலும்
அன்றும் இருந்தது! இன்றும் இருக்கு! என்றும் இருக்கும்!


* "நாரணம்" தமிழ்ச் சொல்!
* "நாராயணம்" வடமொழிச் சொல்!
இரண்டுமே நீர்-மையைக் குறிக்க வந்தவை-ன்னு பார்த்தோம் அல்லவா?

நாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகாமை
"நீர்மைக்கு வழி"-ன்னு தெரிஞ்சிக் கிட்டோம்! அது என்ன "நீர்"-மை?
கடவுள் மேட்டர்-ல, எதுக்குய்யா "தண்ணி" கூட ஒப்பிடறாங்க? நல்லா, கிக்-ஏறும்-ன்னா? ஹா ஹா ஹா!

சரி...அதெல்லாம் போகட்டும்!
* நீரின் முக்கிய குணம் என்ன? = "கீழ்" நோக்கியே ஓடுவது!

நீரைப் பிடிச்சி அடைச்சி வைக்கலாம்! குளம், ஏரி-ன்னு ஓடாமல் அடைச்சி வைக்கலாம்! ஆனால் அதில் உடைப்பு எடுத்துக்கிட்டா, அதுவும் கீழ் நோக்கித் தான் ஓடத் துவங்கும்!

* அதே போல் இறைவனின் முக்கிய "குணம்" = "கீழ்மை"யில் இருக்கும் நம்மை நோக்கியே ஓடி வருவது!
அவனைப் பிடிச்சி சாஸ்திரம், மதம்-ன்னு அடைச்சி வைக்கலாம்! ஆனால் அவன் இயல்பே கீழ் நோக்கி ஓடி வருவது தான்!

நாம் அவனைக் கண்டுக்கிடலை-ன்னா கூட, அவன் மேலே உட்கார்ந்து கொண்டு ரூல்ஸ் பேச மாட்டான்! கீழ் நோக்கியே ஓடி வருவான்!
மீன்-ஆமை-கேழலாய், ஆளரியாய், குள்ளனாய், கள்ளனாய், தனக்கும் கூட பிறவிகள் ஏற்படுத்திக் கொள்வான்! "அவதாரங்கள்" = "இறங்கி வருதல்" என்பது இவனுக்கு மட்டுமே!

* இனி பிறவியே வேணாம்-ன்னு அவனவன் கேட்கும் போது, இவன் என்ன லூசா?
* எதுக்கு வலிய வந்து பிறவி எடுக்கணும்? உழன்று கஷ்டப் படணும்?
* பிறந்து, நமக்கு நல்லதும் பண்ணிக் காட்டணும், கெட்டதும் பண்ணிக் காட்டணும்?
* பண்ணின கெட்டதுக்கு, பலனை, இன்முகமா ஏத்துக்கறது எப்படி?-ன்னு வாழ்ந்து காட்டணும்?

மறைந்திருந்து இராமன்- வாலியின் வதம்! மறைந்திருந்து ஜரா செய்த கண்ணனின் வதம்! Every action has, an equal, but opposite reaction!


நாளைக்கு Cheap-ஆப் போயிருமே? இவன் "பிறந்தனன்", அவன் "உதித்தனன்"-ன்னு எல்லாம் கேலி பேசுவாங்களே?
அவன் வாழ்வை, அக்கு வேறா ஆணி வேறா அலசி, தோய்ச்சி தொங்கப் போடுவாய்ங்களே?

போடட்டும்! போடட்டும்! அதுக்குத் தானே "இறங்கி வருதல்"! :)
நமக்கென்று, நமக்காக, நம்மிடம் இறங்கி வருதல் = மேட்டில் இருந்து பள்ளத்துக்குப் பாய்தல்! = அதான் "நீர்"-மை! அதற்கு காரணம் = இயல்பு! காரேய்க் கருணை!


இறைவா, நீ எதுக்குய்யா ராசா என் கிட்ட கருணை காட்டுறே? அன்பா இருக்கே? நான் என்ன உனக்கு மாமனா? மச்சானா? உனக்கும் எனக்கும் என்னா உறவு?
= உன்தன்னோடு (அ) + உறவேல் (உ) + நமக்கு (ம்)
= அ+உ+ம்
= அதான் உறவு! அது ஒழிக்க ஒழியாது! DNA!

அப்போ கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே! அதானே பகுத்தறிவு?
ஆமா! ஆமா! உண்மை தான்!
கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!

* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?
* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?

ஹிஹி! அடியேன் சொல்லவில்லை! ஆழ்வார் சொல்கிறார்! நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லையாம்! எப்படி இருக்கு கதை? ஹா ஹா ஹா!

இன்றாக, நாளையே ஆக, இனிச் சிறிதும்
நின்றாக, நின் அருள் என்பால்! அதே - நன்றாக,
நான் உன்னை அன்றி இலேன்! கண்டாய், நாரணனே!
நீ என்னை அன்றி இலை!

* மனிதன் இல்லையேல் மாதவன் இல்லையாம்!
* சமூகம் இல்லையேல் சரவணன் இல்லையாம்!
* அடியார்கள் இல்லையேல் அவனே இல்லையாம்!

அவனை "நீ இல்லாமல் போ"-ன்னு சொல்ல நமக்கு மனசு வருமா?
"இல்லை" என்ற சொல்லிலும் அவன் உளன் அல்லவா!

உறவை மறந்து வாழும் மனிதர்களை, அவனிடம் மீண்டும் ஆட்படுத்துவது யார்? = அடியவர்கள் தானே?
* கண்ணன், தன்னைப் பற்றித் தானே சொன்னால்? = தம்பட்டம்! :)
* கண்ணனைப் பற்றி, தோழி கோதையும் அவள் பட்டாளமும் சொன்னால்? = தமிழ்ப் பட்டம்!

இப்படி அவன் குணங்களை அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லி,
பிரிந்த குழந்தைகளை மீண்டும் தாயிடம் சேர்ப்பிப்பது போல்,
மனிதரை அவனிடம் சேர்பிக்கும் அடியார்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பாசம்!
அதான் பகவத் கைங்கர்யத்தை விட பாகவத கைங்கர்யத்துக்கு இன்னும் அதிக ஏற்றம்! மானுட சேவையே மாதவ சேவை!

* நான் உன்னை அன்றி இல்லேன்! கண்டாய் நாரணனே!
* நீ என்னை அன்றி இல்லை!
எனக்கு நீ! உனக்கு நான்! = Made For Each Other :))


இடம்: திருக்கோட்டியூர் (சிவகங்கையில் இருந்து இருபது மைல்...)

பதினெட்டு முறை கால் தேய நடந்தாச்சி! ஓம் நமோ Dash-ன்னா என்ன-ன்னு, இன்னைக்காச்சும் இவரு சொல்லுவாரா மாட்டாரா?

என்ன அதிசயம்...இன்னிக்கி சொல்லிட்டாரே! இப்பிடி மொத்தமாப் பிரவாகமாச் சொல்லிட்டாரே! ஆகா! ஆகா! இதுவா பொருள்?
ஹைய்யோ! என் ஜென்மம் இன்னிக்கு-ன்னு பார்த்து இப்படி இனிக்கிறதே! இதுவா பொருள்? இதுவா பொருள்?

* இவ்வளவு எளிமையான பொருளா? இவ்வளவு எளிமையா வழியா?
* இம்புட்டு நாள் தெரியாமப் போச்சே! ஹைய்யோ!
* எல்லாரும் ரொம்ப கஷ்டம், ரொம்ப கஷ்டம்-ன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்களே! இது மட்டும் அவிங்க எல்லாருக்கும் தெரிஞ்சா...??

நம்பி: "இராமானுஜா! இது பரம ரகஸ்யம்!"

உடையவர்: (தயக்கத்துடன்) "சுவாமி! அப்படி என்றால்.........?"

நம்பி: "இந்த மந்திரப் பொருள் சூட்சுமமானது! அற்பர்களுக்கும், நான்காம் வருணத்தார்க்கும், பெண்களுக்கும் இதை மறந்தும் உபதேசித்து விடாதே!
மற்றவர்களுக்கும், அவரவர் தகுதி அறிந்து, நன்கு பரிசோதித்த பின்னரே உபதேசிக்க வேண்டும்! இது என் ஆக்ஞை!"

உடையவர்: (சுவாமி, நம்மாழ்வார் நான்காம் வருணமாச்சே! அவருக்கு எப்படி மந்திரம், ரகசியம்.....? வாய் வரை வந்த கேள்வியை, உடையவர் விழுங்கிக் கொள்கிறார்)
"சுவாமிகள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது! பாவம், ஏன் இவர்களுக்கெல்லாம் மந்திரத்தில் அதிகாரம் இல்லை?"

நம்பி: "அப்படித் தான் சாஸ்திரம் விதித்துள்ளது! இனி இப்படிக் கேட்காதே!
இந்த மந்திரப் பொருள் சகல தடைகளையும் நீக்கி, கேட்பவர் "எவராயினும்", அவர்கட்கு மோட்சம் "காட்ட" வல்லது!
* இந்தப் பிறவியை மட்டும் கடைத்தேற்றுவது அல்ல!
* பிறவியே இல்லாமல் பண்ணக் கூடியது! = பெரிய திருமந்திரம் என்று இதற்குப் பெயர்!

இது கண்டவர் கைக்கு போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேணும்!"

உடையவர்: "உம்ம்ம்ம்...சுவாமி, இன்னொரு கேள்வி! அப்போ தியானம், யோகம், தவம் எல்லாம் செய்கிறார்களே! அதெல்லாம் எதற்கு?
மிகவும் எளிதான இந்தப் பொருளை "உணர்ந்து", அதன்படி நடக்கலாமே? ஏன் அவ்வளவு கடினமான மற்ற வழிமுறைகள்?"

நம்பி: "நல்ல கேள்வி! இதுக்காகத் தான் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் போய் உட்கார்ந்து...அவரவருக்குப் பிடித்தமான முறையில்...அவரவர் அறிந்து...வழி தேடப் பார்க்கிறார்கள்!
ஆனால் வழியை "வழி"யாகத் தேடாமல், அவரவருக்குப் "பிடித்தமான முறை"யாகத் தேடுவதால் தான் இத்தனை குழப்பம்! ஊருக்குப் போகும் வழியை, வழியாகத் தானே பார்க்கணும்? தங்களுக்குப் பிடித்த மாதிரி வழி இருக்கணும்-ன்னு பார்த்தால் முடியுமா?

ஆனால் இந்தப் பெரிய திருமந்திரம் அப்படி அல்ல!
= இது "வழி/முறை" அல்ல!
= இது "உபாயம்" அல்ல!
= இது "உறவு"! இது உறவைக் காட்டிக் கொடுப்பது!"

உடையவர்: "குருவே! தங்களுக்கு மிக்க நன்றியுடையவன் ஆனேன்! இன்னொன்றும் தங்களிடம் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!
இது நம்முடைய உறவைக் காட்டுவது என்று சொல்கிறீர்கள்! உறவு தானே? உறவைச் சொல்வதில் என்ன ரகஸ்யம் வேண்டி இருக்கு? ஏன் இப்படி?"

நம்பி: "போதும் கேள்விகள்! ரகஸ்யம் என்றால் ரகஸ்யம் தான்! சாஸ்திர விதி! பாத்திரம் அறிந்தே பிச்சை இடணும்!
ஆளவந்தார் நியமித்து அனுப்பிய உனக்கே, பதினெட்டு முறை நடக்க விட்டு, இன்று தான் உபதேசம் செய்தேன்!

உன்னைத் தண்டும் பவித்திரமும் ஏந்தித் தனியாகத் தானே வரச் சொன்னேன்? நீயோ உன் சீடர்கள் இருவரைக் கூட்டிக் கொண்டு வந்து,
அவர்கள் தான் தண்டு, பவித்திரம் என்று புது வியாக்யானம் வேறு செய்தாய்! ஆனால் அவர்களுக்கு நான் உபதேசம் செய்தேனா?

இளைஞனாக இருக்கிறாய்! இளையாழ்வார் என்று வேறு உனக்கு சிறு வயதுப் பெயர்!
புரிந்து கொள் இராமானுஜா! இது பரம ரகஸ்யம்! இது முது சொத்து!
இந்தச் சொத்தைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்வது, இனி உன் பொறுப்பு!"

உடையவர்: "ஆகட்டும் குருவே! அடியேன், ஆளவந்தாரைப் பார்த்து உபதேசம் பெறலாம்-ன்னு நான் வந்து கொண்டிருக்கும் போதே, அவர் விண்ணுலகம் ஏகி விட்டார்!
அந்த இயலாமையும் மன உளைச்சலும் தீருமாறு இன்று என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்! உங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்!"

நம்பி: "சரி, இன்று ஊர்த் திருவிழா! மடத்தில் சாப்பிட்டு விட்டு, அப்புறம் திருவரங்கம் செல்! சொன்னது நினைவிருக்கட்டும்! மந்திரம் பரம ரகஸ்யம்! ஜாக்கிரதை!"

உடையவர்: "அடியேன்!"


உம்ம்ம்.....உறவைக் காட்டுவது! உறவைக் காட்டுவது!
பெற்ற தாயினும் ஆயின செய்யும்...நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-ன்னு பாடி இருக்காரு-ல்ல?

உறவைக் காட்டுவது தானே? உறவைச் சொல்ல என்ன "ரகஸ்யம்" வேண்டி இருக்கு?
ஏன் அப்படி நம்ம குரு சொன்னாரு? ஒரு வேளை, எல்லாராலும் இந்த உறவைப் புரிந்து கொள்ள முடியாதோ?
உறவைத் தப்பா புரிஞ்சிக்கிட்டா, விபரீதமாப் போய் விடுமோ? அதான் தயங்குறாங்களோ?

இது போன்ற சந்தர்ப்பங்களில், "ரகஸ்யம்" என்றால் நுட்பம் என்று தானே பொருள்? வெற்றியின் "ரகசியம்"-ன்னா, வெற்றியின் நுட்பம் என்ன-ன்னு தானே கேட்கிறார்கள்?
அதான் மாறிப் போய், ரகஸ்யம் = யாருக்கும் சொல்லீறக் கூடாது என்று திரிந்து விட்டதோ?

சரி, எது எப்படியோ போகட்டும்.....பதினெட்டு முறை காவிரிக் கரையோரம் நடந்து வந்ததில், ஒன்றை மட்டும் நன்றாகப் பார்த்து விட்டேன்!
எத்தனை எத்தனை எளிமையான மக்கள்! எத்தனை அன்பு இவர்கள் உள்ளங்களில்?
என்னை யாரென்றே தெரியாமல், தங்கள் வீட்டுச் சிறுவனைப் போல் அல்லவா, அதே சமயம், எட்ட இருந்தே, பார்த்துக் கொண்டார்கள்?

நான் வெய்யிலால் மயங்கிச் சுருண்ட போது, பனையோலைகளைக் கூடாரம் போல் கட்டிக் கொண்டு, கூடவே பிடித்துக் கொண்டு வந்தார்களே!
சூழ்ந்து சூழ்ந்து கண்ணனைப் பற்றிக் கேட்டார்களே! நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது ஏன்? என்று இவர்கள் கேட்க, அது இறைவன் திருவடி என்று நான் சொல்ல.......
அப்போ "கண்ணன் நெற்றியில் நாமம் இருக்கே! அவன் பாதங்களை அவனே ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்?" - என்று என்னமாக் கேட்டாள் அந்தக் கோனார் வீட்டுச் சுட்டிப் பெண்?

இவர்கள் எல்லாரும் மந்திரப் பொருளை எங்கு போய் அறிந்து கொள்ளப் போகிறார்கள்?
உழன்றும் உழவே தலை-ன்னு குறள் பாடியிருக்காரே! இவர்கள் எல்லாம் கடைசி வரை உழன்று கொண்டே இருக்க வேண்டியது தானா?

* இவர்களுக்கு குரு என்றோ, ஆசார்யன் என்றோ யாரும் இல்லையே! யாரிடம் போய்க் கேட்பார்கள்?
* இல்லை, விவசாயத்தை விட்டுவிட்டு, மலை குகைகளுக்குச் சென்று, தியானம்/தவம்-ன்னு செய்வார்களா?

* இவர்களுக்கு சாஸ்திரமோ வேதமோ தெரியாதே! எப்போது படித்து, எப்போது அறிந்து கொள்வார்கள்? வேதமெல்லாம் இவர்களைப் படிக்கத் தான் மற்றவர்கள் விடுவார்களா?
* இவர்களுக்கு-ன்னு தான் தமிழ் வேதம் செய்தார் அந்த வேளாளர் குல முதல்வர், நம்மாழ்வார்! ஆனால் அந்தத் தமிழைத் தேடிப் போய் படிக்க இவர்களுக்குத் தெரியணுமே?

ஹைய்யோ! இவ்வளவு எளிமையான பொருளைச் சொல்லாமல், "மறைத்துப்" போக எனக்கு மனசு வரலையே! இவர்களைப் பார்க்கும் போது...
"பரவாயில்லை! இந்தப் பிறவியில் கொஞ்சம் கஷ்டப் படட்டும்! பிராப்தம்-ன்னு ஒன்னு இருந்தா, அடுத்த பிறவியில் தெரிஞ்சிக் கிடட்டும்" என்றா சொல்லுவது?

மந்திரத்தை "அறிந்து" விட்டால் மட்டும் போதாது! "உணர" வேணும்! - என்று வேறு சொன்னாரே! மந்திரப் பொருளில் நர சமூகோ நார: நாரா ஜாதானி தத்வானி என்று வருகிறதே! "அனைத்தும் அவனில் தஞ்சம்! அவனும் இவர்களில் தஞ்சம்" என்றல்லவா வருகிறது?

அவனே இவர்களை அடையும் போது, மந்திரம் இவர்களை அடையக் கூடாதா?
அதை "உணர்ந்ததால்" தானே இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? ஏன் நம் குரு மட்டும் "உணர" மறுக்கிறார்?

ஹூம்ம்ம்....
# குருவின் ஆணையும் ஒரு தர்மம்!
# இவர்களை எம்பெருமானுக்கு ஆட்படுத்துவதும் ஒரு தர்மம்!
= இப்படி இரண்டு முரண்பாடான தர்மங்களுக்கு இடையே, தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டேனே!

(உடையவர் மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்க.......)
* ஒரு மணி நேரம் ஒருவருக்காக வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது!
* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, இவர்களிடம் வாய் கூசாமல் எப்படிச் சொல்லமுடியும்?

ஐயகோ! இதுவா "நீர்"-மை? இதுவா "நீரா"யணம்? இதுவா "நாரா"யணம்?

(தொடரும்.....அடுத்த பகுதியில் நிறையும்)
Read more »

Friday, August 28, 2009

தமிழ்மணம் வழங்கும் "காசி" அல்வா! :)

தமிழ்மணம் காசி அண்ணாச்சி துவங்கி வச்ச சங்கிலிப் பதிவு சுமாரா எத்தினி நாள் ஓடும்-ன்னு நினைக்கறீங்க? 100-வது நாள்? 365-வது நாள்?? இரட்டைத் தீபாவளி???
* காசு மாலை தெரியும்? சுமார் பத்து பவுன்-ல பண்ணீறலாம்!
* ஆனா காசிச் சங்கிலி? எவ்வளவு பவுன் தேறும்-ன்னு தோராயமாச் சொல்லுங்களேன்! :) அவ்ளோ பவுன்-ல அண்ணாச்சிக்கு செஞ்சி போட்டுறலாம்! :)) இளா, மொய்ப் புத்தகத்தைக் கையில் எடுங்க! :))

சங்கிலி பாக்கத் தான் சிறுசா இருக்கு! ஆனா அதன் ஆழம்?..........சதா தங்கச் சங்கிலிகளை ஆழம் பார்க்கும் பெண்களால் கூடச் சொல்லீற முடியாது! :)

காசி அண்ணனை நட்சத்திரமாகப் பார்ப்பது, எனக்கு, இதான் முதல் முறை! :)
பின்னே, திருவிளையாடல் பட ஸ்டைலில், "நாடகத்தையே நடத்துபவன், நடிக்க முடியுமா அப்பா?" :))

* அவரோட நட்சத்திர வாரம் முடியும் தறுவாயில்,
* காசிச் சங்கிலியில்,
* என் பங்குக்கு கொஞ்சம்,
* குண்டு மணிகளைக் (வெடி-குண்டு மணிகளைக்) கோர்க்கிறேன்!
* உபயதாரர்: ஸ்ரீலஸ்ரீ கோவி. கண்ணன்!:)

இதோ அண்ணாச்சியின் கேள்விகளுக்குப் பதில்! ஆனால் வெறும் பதில்களா இல்லாம, அவருக்கே எதிர்க் கேள்விகளாக... :)))))))


1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

அண்ணாச்சி,
"தேவையான அளவு" உள்ளதா-ன்னு பார்ப்பது ஒரு வகை!
"நம்ம தேவைக்கு உள்ளதா"-ன்னு பார்ப்பது இன்னொரு வகை!

எப்பமே ஒரு இயக்கம், முதலில் பரவும் போது, "தேவையான அளவை" நோக்கித் தான் பரவும்! பரந்து விரிதல் என்பது இன்றியமையாத ஒன்று!
ஆனால் ஓரளவு முத்திரை பதித்து விட்ட பின்...? = "தேவைக்கு ஏற்றவாறும்" பரவுதலும் வேண்டும்!

தற்கால இணையத் தமிழரின் "தேவைகள்" என்ன? என்னிக்காச்சும் ஆய்வு செய்திருக்கோமா? அவர்களையே கேட்டிருக்கோமா?

தொண்டு செய்வாய் தமிழுக்கு - துறை தோறும், துறை தோறும், துடித்தெழுந்தே!-ன்னு சொல்லுவாரு பாவேந்தர் பாரதிதாசன்!
இணையத் தமிழ் இன்னும் "அதிகமாக" புழங்க என்ன செய்ய வேண்டும்? - என்பதை நிறுத்தக் கூடாது! ஆடிப் பட்டம் விதைச்சிக்கிட்டே தான் இருக்கணும்! ஆனா அது மட்டுமே போதுமா? ஐப்பசி-லயும் பயிரு வைக்கணும்-ல? அப்போ தானே தைப்பொங்கல் பாக்க முடியும்?

மீண்டும் அதே கேள்வி!
இணையத் தமிழரின் "தேவைகள்" என்ன? என்னிக்காச்சும் ஆய்வு செய்திருக்கோமா? அவர்களையே கேட்டிருக்கோமா?
அந்தத் "தேவை அறிந்து", தமிழ்ச் சேவை கொடுப்பது எப்படி? - வலையுலக முன்னோடியான நீங்க தான் சொல்லணும்!

என்னெல்லாம் இக்காலத் தமிழனுக்குத் தேவையா இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

* அரசியல்? - தமிழகச் சட்டப் பேரவை மாதிரி வலைத் தமிழகச் சட்டப் பேரவை-ன்னு ஒன்னு இருக்கா? மக்கள் அரசை, வலையில் இருந்து வழி காட்ட, இணையான ஒரு வலையரசு சாத்தியம் இல்லையா?

* வேலை வாய்ப்பு - தமிழில் ஒரு வேலை வாய்ப்புத் தளமாச்சும் இருக்கா? மொழிக் குறுகல்-ன்னு சொல்லீருவாய்ங்க! ஆனால் தமிழ் தொடர்பான வேலைகளுக்கு மட்டுமாச்சுமாவது ஒரு தமிழ்த் தளம் இருக்கா?

* திருமணத் தளம் - எத்தனை தமிழர்கள், தமிழில், திருமணத் தளம் தேடுகிறார்கள்? :) அட, சாதி லிஸ்ட்டு கூட வாயில் நுழையாத மாதிரி ஆங்கிலத்தில் தான் போடுறான், ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட!
சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன்! பருநாகக் கண்ணரையர்-ன்னு ஒரு சாதி இருக்குன்னு வச்சிக்குவோம்! இதைத் தமிழில் வரன் தேடுவது எளிதா இல்லை Matrimony.comஆ? :))

தமிழ் முறைப்படியான திருமணங்கள், தமிழ் மக்கட் பெயர்கள், தமிழ் ஆர்வலர் குடும்பங்களுக்கு இடையேயான வரன் தேடல்-ன்னு ஒருங்கிணைந்த தமிழ்த் திருமணத் தளங்கள் முடியாதா?
அட, அல்காநந்தா மடம்-ன்னு பேரு வச்சிக்கிட்டு, சைட் பாரில், "நம்மவர் வரன் தேடல்"-ன்னு வச்சிக்கறாங்களே! தமிழுக்கு மட்டும் முடியாதா என்ன?

* குடும்ப நலம் - எத்தனை தமிழர்கள், தமிழில், இணைய ஆலோசனை பெறுகிறார்கள்?
அட ஒரு கிராமத்துத் தமிழ்ப் பொண்ணுங்க! மாறி வரும் சமூகச் சூழ்நிலையில், "லிவிங் டுகெதர்" சாத்தியமா-ன்னு தெரிஞ்சிக்க ஆசைப்படுறா!

ஆனா அவளுக்கு ரொம்ப ஆங்கிலம் தெரியாது! என்ன பண்ணுவா? நட்பு வட்டத்திலோ, ஆலோசனை மையத்திலோ முகம் கொடுத்து கேட்கும் அளவுக்கு தெகிரியம் இல்ல!
இணையத் தமிழ், இணையத் தமிழ்-ன்னு ரொம்ப பேசறோமே! இணையத்தில், தமிழில், அப்படியான ஒரு தனிப்பட்ட முறையிலான ஆலோசனைத் தளம் இருக்கா?

* ஆன்மீகம் - தமிழ் வளர்ச்சி = பல பேரு ஆன்மீகம்-ன்னு கண்டதையும் தனித்தனியா எழுதிக் குவிக்கிறோம்! :)
ஆனா ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களிலோ, இல்லை திருமுருகு ஆற்றுப்படையிலோ, "கேழல்"-ன்னு ஒரு சொல்லு வருதா?, "நாரணம்" என்பது மெய்யாலுமே ஒரு தமிழ்ச் சொல்லு தானா?-ன்னு தேடு தேடு-ன்னு தேட வேண்டிக் கிடக்கு! தேடு பொறி, அரிசிப் பொரி-ன்னு ஒன்னும் கிடையாது! :)

ஒருங்குறிப் படுத்தி வச்சிட்டோம்! மகிழ்ச்சி! ஆனால் தேடுபொறி தேவையா-ன்னு கூட இது வரைக்கும் யாரும் தேடலை!
ஆங்கில இலக்கிய இணைய நூலகங்கள் பல இருக்கு! ஒரு சொல்லைப் பிடித்தே, மொத்த ஆங்கில இலக்கியத்திலும் அச் சொல்லின் வீச்சைப் பிடித்து விடலாம்! இதையெல்லாம் இணையத் தமிழ்-ல முடியாதா?

தனித் தனியா, தீவு தீவா, தமிழ் முயற்சிகள் நிறைய வலையுலகில் உள்ளன! ஆனால் இவை அனைத்தும் "அறிவு" சார்ந்த தனிப்பட்ட முயற்சிகள்!
வணிக அளவில், அதுவும் லாபகரமான தமிழ் முயற்சிகள், எத்தனை இருக்கு? = விரல் விட்டு எண்ணீறலாம்! :)

காரணம்: தற்காலத் தமிழர்களின் தேவை என்ன-ன்னு அறிந்து, அதைத் தமிழில் வழங்கு சேவைகள், மிகவும் குறைவு!
அனைத்தும் "அறிவு சார்" முயற்சிகளே! "தேவை சார்" முயற்சிகளை நோக்கிச் செல்லும் காலம் வந்தே விட்டது!

பின்னூட்டம் திரட்டல் என்பது காலத்தின் தேவை-ன்னு, அன்னிக்கி நீங்க தான் முதலில் உணர்ந்தீங்க? இன்னிக்கி இம்புட்டு தூரம் வெற்றிகரமா வந்து நிக்குறோம்!
அது போல், தற்காலத் தமிழர்களுக்கு என்னென்ன தமிழில் தேவை?-ன்னு திரட்டப் போவது யாரு? எந்தக் காசி அவரு? தென்-காசியில் இருக்காரா? வட-காசியில் இருக்காரா? :)


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

முந்தைய கேள்வி-பதிலின் நீட்சியே இது!
ஊடக வளர்ச்சி இணையத் தமிழில் மிக நல்ல நிலையில் தான் இருக்கு! ஆனா தமிழில் உள்ள ஒரு விண்ணப்பப் படிவத்தை, அரசு தளத்தில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்! அந்த அளவில் தான் இருக்கோம்!

நான் நெதர்லாந்து போகணும்! ஐரோப்பிய ஷென்ஜென் விசா (அ) டச்சு விசா வாங்க, இணையத்துக்குப் போனா, முழுக்க முழுக்க டச்சு மொழியிலேயே, நேர்காணல் சந்திப்பை நாமே குறித்துக் கொள்ளும்படி வச்சிருக்காக! மேலே உள்ள ஆங்கிலக் கொடியை அழுத்தினா தான், ஆங்கில Appointment Scheduler-ரே வருது!
தமிழில் இப்படி வழங்கிச் சேவைகள்? அட விசா, பாஸ்போர்ட், ரயில் டிக்கெட் எல்லாம் மத்திய அரசு! விட்டுருங்க! அரசுப் பேருந்து டிக்கெட் - தமிழ் வழங்கிச் சேவை இருக்கா?

தேவை என்ன என்று அறிந்து, Need Based Services, தமிழில் வழங்கு காலம் என்றோ?


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

* தமிழ் விக்கிப்பீடியா = தனி மனித/குழு சார்ந்தது! இணைய நம்பகத் தன்மை அது/இது-ன்னு பேசத் துவங்குவார்கள்!
* தமிழ்ப் பல்கலைக் கழக நூலகம் = அரசு சார்ந்தது! நம்பகத் தன்மை அதிகம் என்று ஒரு கருத்து!

தமிழ் விக்கிப்பீடியா + தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம், ஒருங்கே செயலாற்ற முடியாதா?
முடியாது என்றால், அதற்குத் தடையாய் இருப்பன யாவை?


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

முதல்வன் ஸ்டைல்-ல சொல்லணுமா? :)

ஒவ்வொரு பொறுப்புள்ள/பொறுப்பில்லாத/எழுதி மட்டுமே குவிக்கும் வலைப்பதிவரை,
அரசின், அந்தந்தத் துறை, தமிழ்ப் பயன்பாட்டுக் குழுவில் இடம் பெறச் செய்வேன்! :)
இவிங்க எல்லாரும் "அறிவு சார்"-இல் இருந்து,
"தேவை சார்"-க்கு திட்டம் வகுத்துக் கிட்டே இருக்கணும்!

* மருத்துவமா? = போடு டாக்டர் ப்ரூனோவை!
* கிராம வங்கிச் சேவையா? = போடு தமிழ் சசியை!
* அரசு அறிக்கைகள் ரொம்ப போரடிக்குதா? = போடு கோவி. கண்ணனை!

* பொதுவான குறை அறிதல் திரட்டியா? = போடு காசி ஆறுமுகத்தை!
* திருமணம்/காதல் தளங்கள், தமிழில் வேணுமா? = போடு வெட்டிப் பயலை!

* கோயிலில் தமிழ் அர்ச்சனை சரியில்லையா? சிதம்பரத்தில் மல்லு கட்டணுமா? = போடு கேஆரெஸ்-ஐ! :) ஆச்சார சீலர்கள் கிட்ட கேஆரெஸ்-ஆல தனியா அடி வாங்க முடியாதா? கூட அனுப்பு ஜிரா-வை! :)
* இவனுங்க அத்தினி பேருக்கும் அட்டென்ட்ஸ் எடுக்கணுமா? = போடு பாஸ்டன் பாலாவை!

இவனுங்க எவனுக்கும் சம்பளம் கிடையாது! பின்னூட்டம் மட்டுமே! :)
அதுவும் வழங்கிச் சேவைகள் சரியில்லை-ன்னு கருதினா,
அறிவுக் குழுவில் இருக்கும் அந்தப் பதிவரை,
"என்னய்யா கிழிச்ச?"-ன்னு திட்டி வரும் பின்னூட்டங்களுக்கு, ஸ்பெசலா அரசு மானியம்/ஊக்கத் தொகை வழங்கப்படும்! :)


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

* தமிழ் வலைப்பதிவுகள் = செல் பேசிகள் போல! சரி/சங்கடம் என்றே சொல்ல முடியாத படிக்கு, தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது!
* புதிதாக வலைப்பதிக்க வருவோர் = எழுத்துக் குப்பை-மலைகளுக்கு நடுவே, "வித்தியாசமாக" என்ன பதியலாம் என்று மட்டும் யோசித்துப் பதிந்தால், அடுத்த நாளே நீங்க = தமிழ்மண நட்சத்திரம்! :)


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

* இந்த ஐந்து ஆண்டு தமிழ்மணத்தின் சேவைகளுக்கு - வந்தாய், வென்றாய், இனிய வாழ்த்துக்கள்! அவ்ளோ தாங்க! அதுக்கு மேல எல்லாம் புகழ மாட்டேன்! :))
* ஆனா கேள்வி கேட்பேன் :)) = அடுத்த ஐந்து ஆண்டு, தமிழ்மணத்தின் சேவைகள் என்னென்ன?

மற்ற திரட்டிகளைக் காட்டிலும் உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டப் போவது எது?
தமிழ்மணம் தமிழ்நாட்டில் கட்சி தொடங்குமா? :) - அப்படீன்னா ஒங்க கொடி, சின்னம், கொள்கை என்ன்ன? :))) - பழைய நட்சத்திரப் பதிவர்களுக்கு எல்லாம் தேர்தல் டிக்கெட் கொடுப்பீங்களா? இல்லை புதிய தலைமுறைக்கா? :)))

Jokes Apart...
* இது வரை, தமிழ்ப் பதிவுகளைத் திரட்டிய தமிழ்மணம்,
* இனி கூடவே, தமிழர்களையும், தமிழர் முயற்சிகளையும் திரட்டுமா?
* ஊருக்கு ஊர் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்குன்னா,
* ஒட்டு மொத்த இணையத்துக்கும் ஒரு தமிழ்ச் சங்கமாய், தமிழ்மணம் செயல்படுமா?
* "அறிவு ஜீவிகளின் திரட்டி"-ன்னு மட்டும் இல்லாம, ஆக்கப் பூர்வமான "தமிழ் முயற்சிகளின் சக்தி வாய்ந்த திரட்டி"-ன்னு ஆக முடியுமா? (ஈழ விடயத்தில் இது நிகழவில்லை என்பது என் தனிப்பட்ட வருத்தம் - "தனிப்பட்ட" வருத்தம் மட்டுமே!)

இந்தக் கேள்விக்கான விரிவான பதில் இங்கே! = http://madhavipanthal.blogspot.com/2009/05/5000.html


இந்த இருவரையும் சங்கிலிக்கு அழைக்கிறேன்!
1. கா.பி. அண்ணாச்சி என்று நான் அழைக்கும் கானா பிரபா! தன்னோட சொந்த போக்குக்கு மட்டும் இசை வழங்காது, வாசகர்கள் "தேவையைக் கேட்டு" வழங்குவதால்!

2. நம் அனைவர் வாயிலும், உள்ளத்திலும், அன்புடன் கலந்து விட்ட, திரு. செந்தில் நாதன்

* நன்கு உடல் நலம் தேறிய பின்...
* பிற்பாடு மெல்லவே வந்து, காசி அண்ணனுக்கு பதில் உரையுங்கள்!
* திரட்டிகளின் உள்ளார்ந்த "திரட்டும் சக்தியை" உலகத்துக்குக் காட்டியவர் நீங்கள்!
* உங்களை ஒட்டிய அனுபவங்களின் அடிப்படையில், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, உங்களை விடப் பொருத்தமானவர் கிடையாது என்பது அடியேன் எண்ணம்!

வாங்க செந்தில் நாதன்! வாங்க! மீண்டு, தேறி, நன்கு, எழுந்து, எழுத, வாங்க!
Read more »

Thursday, August 27, 2009

செந்தில்நாதன் - அர்ச்சனை - அறுவை சிகிச்சை!

அன்பு நண்பர்களே,
VAD என்னும் Ventricular Assist Device - இதயக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை,
27.08.2009 வியாழன் அன்று காலை,
சிங்கப்பூர் நேரம் 8:00 மணிக்கு
செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி,
10:00 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும்.
இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

மகிழ்ச்சியான செந்தில்நாதன், ஒரு சந்திப்பில் - படம்: கோவி.கண்ணன்


எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது தான்.
இனம், மொழி, மதம் என எந்த வித்தியாசமுமின்றி 10 நாட்களுக்குள் 75 சதவீத தொகையை அடைய உதவிய நல்ல உள்ளங்கள் அத்தனைக்கும் நன்றிகளை தெரிவிக்கும் அதே வேளையில்...

* மீண்டும் உங்களிடம் ஒரு உதவியை வேண்டுகிறோம்.
* இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து,
* செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளைத் தாருங்கள்.

* வியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக் கொள்ளுங்கள்.
* முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள்.
* இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.

அண்ணண் சிங்கை நாதனுக்காக, இன்று 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக, பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
* முழுப் பெயர் : செந்தில் நாதன்
* நட்சத்திரம் : பூராடம்
* இராசி : தனுசு

இதுவரை சேர்ந்துள்ள தொகை விவரங்கள்.
இந்திய ரூபாய்

4,63,753.68

13,345 SGD

அமெரிக்க டாலர்

5204.65

7,440 SGD

சவுதி ரியால்

6301.00

2,396 SGD

கருணாநிதி SG Acc-

9,970 SGD

சிங்கைப் பதிவர்கள்/நண்பர்கள்-

26,526 SGD

அமீரகப் பதிவர்கள்/நண்பர்கள்-

2,000 SGD

அமெரிக்க நண்பர்கள்

9546.22

13512 SGD

மொத்த தொகை-

75,189 SGD


உதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் பிரார்த்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.

நட்புக்குழுவினர் சார்பாக
- ஜோசப் பால்ராஜ்

மேலும் விபரங்களுக்கு http://www.helpsenthil.com



பந்தல் வாசகர்கள் பலர், பதிவு கண்டு, அதிலும் ஒருவர் நிறைந்த தொகை அளித்து உதவியதாக நண்பர் இளா சொன்னார்!
அடியேன் அவர்களின் பெயரையோ, தொகையையோ கேட்டுக் கொள்ளவில்லை!
ஆனால் அவ் அனைவருக்கும் - தலை அல்லால் கைம் மாறு இலனே! வாழி! வாழி!

இதோ, பிரார்த்தனைகள் துவங்கட்டும்! பந்தல் வாசகர்கள் முதலான அனைவரும் சங்கல்பித்துக் கொள்ளுங்கள்!

* ஸ்ரீமான் கோத்ரஸ்ய
* தனுர் ராசீனாம்
* பூர்வ ஆஷாட நக்ஷத்ரே
* செந்தில் நாதன் நாம்யாஹா

* சக குடும்ப க்ஷேமானாம்
* அஸ்ய யஜமானஸ்ய

* தைர்ய, ஸ்தைர்ய, வீர்ய, விஜய
* ஆயுள் ஆரோக்ய
* ஐஸ்வர்யாதி அபிவிருத்தி யர்த்தம்
* இஷ்ட காம்யார்த்த சித்தயர்த்தம்
* பாகவத ஜனானாம் ப்ரீத யர்த்தம்
* சமஸ்த லோக சாந்த யர்த்தம்
(*** செந்தில் நாதன் தேகாரோக்ய அபிவிருத்தியர்த்தம் *** )

* ஸ்ரீ ரங்க நாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி,
* திவ்ய சரணார விந்தயோஹோ
* துளசீ தள,
* குங்குமார்ச்சன,
* அஷ்டோத்திர சத நாம பூஜாம் கரிஷ்யே!
ஹரி ஓம்!


பலருக்கும் புரியும் வண்ணம், அவ்வண்ணமே, தமிழில்..........(இந்தப் பதிவைப் படிக்கும் போது, கூடவே வாய் விட்டுச் சொல்லுங்கள்)


* ஸ்ரீயப் பதி கோத்திரம்
* தனுசு ராசி
*
பூராட நட்சத்திரத்தில் வந்துதித்த
* செந்தில் நாதன் என்னும் திருப்பெயர் கொண்ட

* இன்னாரின் நலம் வேண்டி, உடன் குடும்ப நலம் வேண்டி...................

* துணிவும் நல்லுறுதியும் வேண்டி
* உயிர்ப்பும் வெற்றியும் வேண்டி
* உடல் நலமும் நீண்ட ஆயுளும் வேண்டி
* நீங்காத செல்வம் நிறைய வேண்டி
* எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டி...............

* அடியார்கள் மனங் குளிர வேண்டி
* உலகம் அமைதியில் மகிழ வேண்டி
(*** செந்தில் நாதன் உடல்நலம் தேற வேண்டி ***)

* அரங்க நாச்சியார் என்னும் பெரிய பிராட்டியார் உடனுறை
* அரங்க நாதன் என்னும் பெரிய பெருமாள்
* திவ்ய மங்களத் திருவடிகளில் சரணம் புகுந்தே...................

* துளசி தள
* குங்குமார்ச்சனை
* நூற்றெட்டு போற்றிகள்
* அடியோங்கள் செய்கின்றோமே!
ஹரி ஓம்!

(அர்ச்சனை)

அன்று இவ் வுலகம் அளந்தாய் - அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் - திறல் போற்றி!

பொன்றச் சகடம் உதைத்தாய் - புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் - கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய் - குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் - வேல் போற்றி!

என்றென்றும் உன் சேவகமே ஏந்திப் பறை கொள்வாம்
இன்று யாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்!

இன்று யாம் செந்தில் நாதனுக்காக வந்தோம்...இரங்கேலோ ரெம்பாவாய்!

ஹரி ஓம்!

Read more »

Tuesday, August 25, 2009

Copy Cat KRS! பொறந்த குழந்தை குளிப்பாட்டுவது எப்படி?

என்ன மக்கா, யாராச்சும் பச்சைக் குழந்தையை, பெரியவங்க பக்கத்தில் இல்லாம, மொத மொதலா, தானாத் தூக்கி இருக்கீங்களா? :)
வீராதி வீரனுக்கும் பயம்-ல்ல? பிஞ்சுப் பூவை பார்க்கப் பிடிக்கும்! ஆனா தூக்க?

குழந்தைகள் உலகில் பிறக்கும் போது, தங்களுக்கு-ன்னு ப்ளான் போட்டு எதுவும் கையோடு கொண்டு வருவதில்லை! ஏதோ ஒரு தைரியத்தில், நம்மள பாத்துப்பாங்க-ன்னு வெளீல வருது-ல்ல? :))

* புதுசா வரப் போகும் நோக்கியா லேப் டாப்புக்கு பயனர் குறிப்பு (User Manual) கொடுப்பாய்ங்க!
* புதுசா பொறக்கும் குழந்தைக்கு என்ன Manual கொடுத்து அனுப்புவாரு கடவுள்? :)

நோக்கியாவில் பாட மாட்டேங்குதே-ன்னு எத்தை எத்தையோ அழுத்த,
திடீர்-ன்னு மொத்த ஆபீசுக்கும் கேக்குறாப் போல....
"ஹே...எலந்தப் பயம், எலந்தப் பயம்"-ன்னு எதிர்பாராம நோக்கியா கூவினா எப்படி இருக்கும்? :)

அதே போல் பிச்சிப்பூ=பிஞ்சுப்பூ! அதை இயக்கத் தெரியாமல் இயக்கும் போது,
* திடீர்-ன்னு நம்மள பாத்து,
* பொக்கை வாய் திறந்து,
* ஹா ஹா-ன்னு சிரிக்கும் முதல் சிரிப்பூபூபூ! அன்று முதல், குழந்தையை இயக்கத் தெரிந்து விடும்! :))


சரீ...
பச்சைக் கொழந்தையைக் கூட Spa-வுக்கு கூட்டிப் போயிக் குளிப்பாட்டும் காலம் இது! :))
நம்ம ஊரு இஷ்டைல்-ல, ஃபிரஷ்ஷா குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி? பார்க்கலாமா?

"அட, ஆம்பிளைப் பசங்க இப்படியெல்லாம் பதிவு போட்டாச் செல்லுமா? அதுக்கெல்லாம் நக்கலா, நறுவிசா, பொம்பளைங்க தான் பதிவு போடணும் கேஆரெஸ்! :)"

"அட, இந்தப் பதிவை நான் போடலீங்க!
பெரியாழ்வார் என்னும் பொம்மனாட்டி தான் இந்தப் பதிவு போடறாரு!" :)

"அடப் பாவி! டகால்ட்டி ரவி! அங்க கை வச்சி, இங்க கை வச்சி, இப்ப ஆழ்வார் மேலயே கை வச்சிட்டியா நீயி?" :)

"ஹிஹி! அட, சத்தியமாச் சொல்லுறேன்! பொறந்த குழந்தையைக் குளிப்பாட்டுறது எப்படி?-ன்னு பெரியாழ்வார் தாங்க சொல்லிக் குடுக்கறாரு!" :))"

* பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே-ன்னு, பெண்ணை மட்டுமா "பெற்று, எடுத்தாரு"?
* பெரியாழ்வார் என்றிட்ட பெண் மணியும் வாழியே-என்னும் படிக்கு, ஒரு பெண்ணை விடவும் அக்கறையாச் சொல்லிக் குடுக்கறாரு, குழந்தை வளர்ப்பை!

சேச்சே! என்ன இருந்தாலும் பொண்ணுங்க பாத்துக்குறா மாதிரி வருமா? ஆம்பிளைக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்?


உலக நடைமுறைக்கு ஆண்-பெண் வேறுபாடுகள் உண்டு! உலகத்துக்காக அந்த வேறுபாடுகளை மீற முடியாது! உண்மை தான்!

* ஆனால் உங்கள் ஆன்மா = ஆணா? பெண்ணா?

ஆன்மாவின் உணர்ச்சிகளை ஆண் என்பதா? பெண் என்பதா? ஆணாகட்டும், பெண்ணாகட்டும், அனைவரும் விழைவது = "நிறைவு"!
ஆணுக்கொரு நிறைவு, பெண்ணுக்கொரு நிறைவு என்ற பேதமில்லை! அனைவர்க்கும் "நிறைவு" வேணும்! நீங்காத செல்வம் "நிறைந்து"...!

* எம்பெருமான் குழந்தையாய் முன்னே வந்தால் = ஆன்மா "தாய்" ஆகிறது!
* எம்பெருமான் காதலனாய் முன்னே வந்தால் = ஆன்மா "காதலி" ஆகிறது!

தோடா, போங்கா இருக்கே? ஏம்ப்பா ஒங்க கடவுள் காதலியாய் எல்லாம் வர மாட்டாரா(ளா)? எப்பமே அவரு ஆண் தானா? ........ஹிஹி! வருவான்(ள்)!

*** எம்பெருமான் காதலியாய் முன்னே வந்தால் = ஆன்மா காதலன் ஆகிறது!
கோதை அப்பப்போ இப்படிக் காதலனாக மாறுவாள்!
ஆணைப் போல் அடாவடி செய்வாள்! அவனோ அப்பாவிக் காதலியாக மாறுவான்! :)

அதெல்லாம் இந்தப் பதிவில் சொன்னால், என் தலை உருளும்! "நாயகி பாவம்" கொஞ்சம் டேஞ்சரான டாபிக்! :)
ஆனா ஆழமான டாபிக்! உண்மையான டாபிக்! இது பற்றி இன்னொரு நாள் விரிவாச் சொல்லுறேன்! :)

இன்னிக்கு முக்கியமா கவனிக்க வேண்டியது...பெரியாழ்வார் தாய் ஆனார்(ள்)! இதோ, பச்சைக் குழந்தையைக் குளிப்பாட்டும் டிப்ஸ்! :)


மாதவிப் பந்தலில் முதன் முறையாக, இன்னொரு வலைப்பூவில் இருந்து, காப்பி அடிக்கப்பட்ட வரிகள்....இனி.......

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது,
* உடலை நன்றாக உருவிவிட்டு,
* கைகளை முன்னும் பின்னும் மடக்கி,
* கால்கள் வளைந்துவிடாது இருப்பதற்காக,
* அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்து வெந்நீரை ஊற்றுவர்.

* குழந்தையின் உடலுக்கு உறுதி தரும் வண்ணம்
* குளிப்பாட்டும் பொழுது இயன்ற வகைகளில் கை காலை மடக்கி,
* சில உடற்பயிற்சிகளைச் செய்வர்
* இதனால், குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும்.

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே!


கையும் காலும் நிமிர்த்துக் - குழந்தையின் கை, கால்களை நன்கு உருவி விட்டு, கால்கள் வளைந்து விடாது இருப்பதற்கு, அதனை நிமிர்த்தி விடுவதற்காக,

கடார நீர் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி

பைய வாட்டிப் - அதை தள புளா ன்னு ல்லாம் கொதிக்க விடாம, நல்ல வெதுவெதுப்பாக சுடவைத்து, மிதமான வெண்ணீராக்கி, பைய - மெதுவாக, மெல்ல; வாட்டி - சூடு செய்து;

பசுஞ் சிறு மஞ்சளால் - பசுமையான பிஞ்சு மஞ்சளை, மைய அரைத்து

ஐய நா வழித்தாளுக்கு, அங்காந்திட - தலைவனின் நாவினை வழிப்பதற்காக, குழந்தையின் வாயைத் திறந்திட்ட போது, (ஐய - தலைவன்; அங்காத்தல் - வாய்திறத்தல்)

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே - ஏழு உலகத்தையும் குழந்தை கண்ணனின் வாயினுள் யசோதை கண்டாளே.

காப்பி அடிப் படலம் முடிந்தது! :))



அருமையா விளக்கம் கொடுத்திருக்காங்க-ல்ல? யாரோட வலைப்பூ-ங்க இது?
இவங்க ஆம்பிளைப் பதிவரா? பொம்பளைப் பதிவரா? Keep Guessing! :)

அந்தப் பதிவுக்கு, என்னோட பின்னூட்டம்...
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட =
ஹைய்யோ....அந்தச் சின்னக் கண்ணனின் தேனமுத வழிசல் அடிசனை,
அமிழ்தினை... எனக்கே தர வேணுமாய்
இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் கண்ணா! மணிவண்ணா! என்றன் மனச்சுடரே! :))

என்ன அழகான தமிழ்ச் சொல்லாட்சி பாருங்க!
* பைய வாட்டி = மெல்லிசா....வெது வெதுப்பா....தண்ணி விளாவி
* அங்காந்திட = ங்ங்ங்..ஆந்திட-ன்னு சொல்லும் போதே "ங்ஆஆ"-ன்னு வாய் தொறந்து காட்டுறது தெரியுதுல்ல? அடடா! எழுத்துல ஒரு ஓவியமா?

கண்ணன் வளர்ந்த பின், மண்ணை உண்ணும் போது தான் யசோதைக்கு உலகம் காட்டுவான்-ன்னு சொல்வாங்க!
ஆனால் இங்கு ஆழ்வாருக்கு அது வரை வெயிட் பண்ண பொறுமை இல்லை போல! :) பொறந்த கொழந்தை நாக்கு வழிக்கும் போதே, வாய்க்குள் உலகம் பாத்துடறாரு! நமக்கும் காட்டிடறாரு! :)



And here we go...Baby Bathing For Dummies...Tips by krs baby :))

1. குழந்தையைக் குளிப்பாட்ட, தொப்புள் கொடி காய்ந்து உதிர வேண்டும்-ன்னு பொதுவாச் சொல்லுவாய்ங்க! ஆனா இப்பல்லாம் அதுக்கு முன்னயே குளிப்பாட்டுறாங்க!

2. தண்ணி இளஞ் சூட்டுல இருக்கணும்! கையை விட்டு விளாவுங்க! Mug-ல விளவாதீங்க! உங்க கைக்குச் சூடு தெரியணும்!

3. ரெண்டு/மூனு குடம் தண்ணியை முன்னாடியே எடுத்து பக்கத்துல வச்சிக்குங்க! அப்பாலிக்கா எடுத்துக்கலாம்-ங்கிற போக்கு வேலைக்காவாது!
புதுசா குளிப்பாட்டறவங்களுக்கு, இன்னொரு ஆளு, பக்கத் துணைக்கு இருந்தா, இன்னும் வசதி!

4. சின்ன டப்பில் வைத்தும் குளிப்பாட்டலாம். ஆனா கால்-ல கவிழ்த்து போட்டுக் குளிப்பாட்டுற மாதிரி வராது! ஒன்னும் பயமே இல்லை! ஈசி தான்!

காலை நல்லா நீட்டி, ரெண்டு காலுக்கும் கேப் கொடுக்காம, குழந்தையின் தலையை, கால் இடுக்கில் தங்குறாப் போல வச்சிக்கிடணும்! அம்புட்டு தான்!
(குறிப்பு: ஆனா, அதுக்கப்பறம் எக்காரணம் கொண்டும், அந்தக் கால் Position-ஐ மாத்தக் கூடாது! உங்க காலை விரிக்கப்படாது! குழந்தை மேலயே ஒரு கண்ணு இருக்கணும்)

5. குளியலுக்குப் பயந்து குழந்தை அழுதா பேச்சு குடுங்க! பாடுங்க! அது கண்ணைப் பாத்துச் சிரிங்க! பேச்சு குடுத்துக்கிட்டே குளிப்பாட்டுங்க! அழுகை ஓரளவு நிக்கும்! :)



6. பேபி சோப்பு போடலாம் தான்! ஆனா துளசி கலந்த பச்சைப் பருப்பு மாவு! அதை பால்/வெண்ணையில் கலந்து, தேய்ச்சிக் குளிப்பாட்டினா, இன்னும் ப்ரெஷ்!
பள பள! மொழு மொழு! :) ஆனா மூஞ்சில, கண்ணு கிட்ட ரொம்ப தேய்க்காதீக!

7. மொதல்ல உடம்பில் தண்ணி ஊத்தி, அப்புறமா தலையில் தண்ணி ஊத்தணும்! அப்போ தான் ஏலும்! ஓக்கேவா?
நல்லா வேகம் வேகமா ஊத்தணும்! விட்டு விட்டு ஊத்தினா குளிரும்! கோயில்ல தீர்த்தம் கொடுக்குறாப்பல, பவ்யமா, பம்மி பம்மி எல்லாம் ஊத்தக் கூடாது! நல்லா சரக் சரக்-ன்னு ஊத்தணும்! :)

8. கை-காலை உருவி விடுங்க! கை-கால்களை முன்னும் பின்னும் லேசா மடக்கி, உடற் பயிற்சி மாதிரி உருவி விட்டுக்கிட்டே தண்ணி ஊத்துங்க!

9. அப்படியே குழந்தையைக் காலில் கவுத்துப் போடுங்க! முதுகில் வேகமாத் தண்ணி ஊத்தி, பிட்டத்தில் வேகாமத் தண்ணி ஊத்தி சுத்தப்படுத்திறணும்! கொழந்தய உடனே நிமித்திருங்க! ரொம்ப நேரம் கவுந்தடிக்கக் கூடாது! அவ்ளோ தான் குளியல்!

10. நல்லாத் தெரிஞ்சவங்க, குளிப்பாட்டும் போதே, சுண்டு விரலையோ, காய்ஞ்ச மஞ்சள் துண்டையோ வச்சி, நாக்கை வழிக்கலாம்! பயமா இருந்தா பண்ண வேணாம்! :)



11. பாத்திரம்/Mug-இல் உள்ள கடைசித் தண்ணியை, மூனு சுத்து சுத்தி, குழந்தைக்குத் திருஷ்டி கழிச்சி, காலுக்கு கீழே ஊத்துங்க! திருவந்திக் காப்பு-ன்னு இதுக்குப் பேரு!

12. தரையில் உள்ள மெத்தையிலோ (அ) கட்டிலிலோ கிடத்தி, மென்மையாப் பூ துவாலையால் நல்லாத் துவட்டுங்க - தலை, ஒடம்பு, எல்லாத்தையும்!
கண்ணுல ஊளை இருந்தா லைட்டா எடுத்து விடுங்க! பிறப்பு உறுப்புகளையும் சுத்தமாத் தொடைச்சி விடணும்!

13. அப்பறம் உடம்பு முழுக்க பவுடர் பூசி, முடிஞ்சா கண்ணில் மை பூசி, கன்னத்தில் ஒரு மைப் பொட்டு வைங்க! மாறி மாறி வைக்கணும்! ஒரு முறை வலக்கன்னம்! அடுத்த தபா இடக் கன்னம்! அப்படியே இச்-ன்னு ஒரு உம்மா கொடுங்க! :)
ஒங்க கண்ணே படப் போவுது! விரல்களால் தலையைச் சுத்தி நெட்டி முறிங்க! :)

14. உடனே சட்டை, ஜட்டி, டயாப்பர்-ன்னு மாட்டி விட வேணாம்! கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டுமே!
நீங்களும் கீழ் அழகைப் பாத்து ரசிக்கலாம்-ல்ல? இப்பவே பாத்துக்கிட்டா தான் ஆச்சி! அப்பறமெல்லாம் முடியவே முடியாது! :)))

15. கூடைக்குக் கீழ் சாம்பிராணிப் புகை போட்டு, குழந்தையைக் கூடை இடுக்கில் காட்டிப் புடிச்சா, நாளெல்லாம் வாசம் தான்!
ஆனா இப்பல்லாம் யாராச்சும் சாம்பிராணிப் புகை போடறாங்களா என்ன? சரியான மட சாம்பிராணிங்க! இத போயி மிஸ் பண்ணலாமா?......சொர்க்கம்! :)



சரி, சரி.....என்னாது? கேஆரெஸ் காப்பியடிச்ச அந்தப் பெரியாழ்வார் பாசுர வலைப்பூ எது-ன்னு கேக்கறீயளா? :)

ஹிஹி! பந்தலில் தினுசு தினுசா கேள்வி கேட்டுப் பின்னூட்டம் இடும் தம்பதிகள்!
- முகிலரசி & தமிழரசன் - அவிங்க குட்டிப் பையன் இளமாறன்! இவர்களுடன், முகவை மைந்தன் மற்றும் நம்ம சத்தியா...இவிங்க எல்லாரும் சேர்ந்து,

* ஆழ்வார் அருளிச் செயல்கள் மொத்த நாலாயிரத்துக்கும்,
* கொஞ்சம் கொஞ்சமா விளக்கம் சொல்லத் துவங்கி இருக்காய்ங்க!
* அதில் ஒன்று தான், இந்த "ங்ங்ங்..ஆந்திட, நா வழித்தாள்"!
* அனைவரும் அவசியம், வாசித்துப் பாருங்கள்!

இதோ http://aazhvarmozhi.blogspot.com
நான்காயிரம் அமுதத் திரட்டு!
மதம் சார்ந்ததல்ல... தமிழ் சார்ந்தது...


** பந்தலில், உங்க எல்லாருக்கும், இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்துவதில் - அரிமுகப் படுத்துவதில், அடியேன் சாலவும் மகிழ்கிறேன்!
** மாதவிப் பந்தல் மேல்...பல் கால் குயில் இனங்கள்...கூவின காண்!

சரி சரி, பேசுனது போதும்!
சேயோன் என்னும் மீசை வழிச்ச ஒரு பெரீய்ய்ய புள்ளையாண்டானைக் குளிப்பாட்டணும்!
ஸோ, வர்ட்டா ஸ்டைலில் வர்ட்டா?
டேய் முருகா, வெக்கம் இல்லாதவனே! ஒழுங்கா பாத் டப்புல போயி நில்லுடா! தோ வாரேன்! :)))
Read more »

Sunday, August 23, 2009

சிதம்பரத்தில் தமிழை நுழைத்த பிள்ளையார்!

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மக்கா! இன்னிக்கி ஒரு நாளாச்சும் வீட்டுல, அண்ணி கையால் பூரிக்கட்டை பறக்காம, கொழுக்கட்டை பறக்க வாழ்த்துக்கள்! :))

விநாயகரைப் பற்றிப் பேசாமல் இந்திய மதங்களின் தத்துவத்தை முழுக்கப் பேச முடியாது!
அப்படி அனைத்திலும் "கலந்து" இருப்பவர் விநாயகர் = லோக்கல் பாஷையில் சொன்னாப் "பிள்ளையார்"! :)

பிள்ளைகளின் மனம் கவர்ந்த எளிமையான பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு செய்து விட்டார்? அதுவும் சிதம்பரத்தில்-ன்னு கேட்கறீங்களா? ஹிஹி! படிங்க படிங்க! :)


* வரலாற்றில் பிள்ளையார் உண்டா, தமிழ் இலக்கியத்தில் பிள்ளையார் சொல்லப்பட்டு இருக்காரா என்ற ஆராய்ச்சி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!
* வாதாபியில் இருந்து வந்தாரா? பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் தான் விநாயகரைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்ததா? என்பதெல்லாம் இன்னொரு பக்கம் இருக்கட்டும்!
ஆனால் இன்று, தெருவுக்குத் தெரு, குளத்துக்குக் குளம், தமிழகத்தில், பிள்ளையார் தான் இருக்காரு என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை! :)

* அது சாஸ்திரம் படித்த பண்டித சிகாமணிகளாக இருக்கட்டும்! அவர்களும் பிள்ளையாரில் துவங்கியே துவங்குகிறார்கள்!
* சாஸ்திரம்-ன்னா என்னான்னே அறியாத சாமான்யனாக இருக்கட்டும்! அவனும் பிள்ளையார் குட்டு குட்டிக்கிட்டுத் தான் வேலையைத் துவங்கறான்! - ஏன்?


பிள்ளையார் ஓம்கார சொரூபம்! பிரணவ சொரூபம்!
எப்படி, எல்லாம் மந்திரங்களின் முன்னும் "ஓம்" சேர்க்கிறோமோ...
அப்படி, எல்லாம் வழிபாடுகளிலும் "பிள்ளையார்" சேர்க்கப்படுகிறார்!

அவரைச் சுற்றிலும் பல புராணக் கதைகள்! பல வரலாற்று நிகழ்வுகள்!
ஒரு தாய் தந்தையரின் திருமணத்தின் போது, அவர்களின் பிள்ளை இருக்க முடியுமா? = ஆனால் பிள்ளையார் சிவ-பார்வதி திருக்கல்யாணத்தில் இருந்தார்! அவர் ஆதி விநாயகர் என்று வாரியார் அடிக்கடி சொல்லுவார்!
பிள்ளையார் = அது புராணமோ, கதையோ, இல்லை குறியீடோ, எதுவாகிலும் பிள்ளையார் இல்லாமல் ஒரு விழாவோ, பூசனையோ இல்லை!

ரொம்பவும் புறம் தொழாமை பேசும் சில ஸ்ட்ரிக்ட்டான வைணவர்கள் கூட, "தும்பிக்கை ஆழ்வார்" பற்றிப் பேசுவார்கள்! :)
விஷ்வக்சேன கணங்களில் ஒருவராய், கஜமுகர் என்னும் கணநாதரும் அங்கு உண்டு :)

இப்படிப்பட்ட பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு செய்து விட்டார்? அதுவும் சிதம்பரத்தில்? இனி கதையை மேலப் படிங்க! :)


திருநாரையூர் என்னும் ஊர்! வீராணம்/காட்டுமன்னார் கோயில்-க்கு கிட்டக்க! இந்தப் பக்கம், தில்லை-சிதம்பரத்துக்கும் கிட்டக்க தான்!

அங்கிட்டு அனந்தேசர், கல்யாணி என்னும் அன்பான பெற்றோருக்கு ஒரே மகன் நம்பி! பின்னாளில் நம்பியாண்டார் நம்பி!
அப்பா கோயில்ல வேலை பாக்குறவரு! அம்மா தினமும் பிரசாதம் பண்ணிக் கொடுத்து அனுப்புவாங்க! அதை நைவேத்தியம் பண்ணி, திரளும் மக்களுக்குக் கொடுக்கும் அனந்தேசன், பெரும்பாலும் வீட்டுக்கு வருவது வெறுங்கையுடன் தான்!

அப்பாவின் வருகையை விட, தின்பண்டம் வரும் என்று எதிர்நோக்கி இருக்கும் என்னையப் போல சின்னப் பிள்ளை நம்பி! அந்த நம்பி-கைக்கு பண்டம் வரும் என்ற நம்பிக்கை!

ஆனால் பண்டம் வராது! அப்பா என்ன சொல்ல முடியும்? "பிள்ளையார் சாப்ட்டாரு-ப்பா" என்று சொல்லிச் சமாளித்தார் அந்த அப்பாவிப் பிள்ளையின் அப்பா!
தும்பிக்கையால், நம்பி-கைக்கு வராமல் போனது நம்பிக்கை! :))

இன்னொன்னும் நல்லா கவனிச்சிக்கோங்க! திருநாரையூர் வேற! திருநறையூர் வேற!
அது பறவையான நாரையின் ஊர்! இது நறை=தேன், ஈக்களின் ஊர்!
முன்னது சைவத் தலம்! பின்னது விண்ணவத் தலம்!
அது சிதம்பரம் கிட்ட! இது குடந்தை-திருவாரூர் கிட்ட!
அது சம்பந்தரும் அப்பரும் பாடியது! இது திருமங்கை மன்னன் பாடியது!

திருநாரையூரில் உள்ள இறைவன் = செளந்திரநாதர் (எ) அழகப்பர்!
இறைவி = திரிபுர சுந்தரி (எ) முப்புரத்து எழிலி!
இங்கு இருக்கும் பிள்ளையாரின் பெயர் தான் பொள்ளாப் பிள்ளையார்! ஆனா இவரைப் "பொல்லாப்" பிள்ளையார்-ன்னு நம்ம மக்கள் பொல்லாதவர் ஆக்கீட்டாங்க! :))


பொள்ளுதல் = செதுக்குதல்! கல்லை உளியால் பொள்ளுவாய்ங்க! வீட்டில் கூட அம்மி பழசாயிருச்சுன்னா, ஆள் அனுப்பி அம்மியைக் கொஞ்சம் பொள்ளுவாய்ங்க!
இப்பல்லாம் மம்மியே வீட்டில் இருப்பதில்லை! அப்பறம் தானே அம்மி எல்லாம்? :)

பொள்ளாத பிள்ளையார் = உளியால் பொள்ளப்படாத பிள்ளையார்! அதாச்சும் முழுமையாகச் செதுக்கப்படாது, ஓரளவு வடிவம் மட்டுமே வடிக்கப்பட்ட பிள்ளையார்!

அதைத் தான் நம்ம தமிழ் "கூறும்" நல்லுலகம், கூறு கூறாக்கி, "பொள்ளாப்" பிள்ளையாரைப் "பொல்லாப்" பிள்ளையார்-ன்னு ஆக்கீருச்சி! நல்ல வேளை, பொல்லாதவர் என்பதுக்கு ஏதாச்சும் தல புராணக் கதை கட்டாம இருந்தாங்களே! சந்தோசம்! :)
பிள்ளையாரும் "பொல்லாத" பிள்ளையார் ஆயிட்டாரு! இவரு பண்ண ஒரே பொல்லாத செயல் = தமிழைத் தில்லைக்குள் நுழைக்க உதவியது தான்! :)) ஆகா! அப்படியா சேதி?! நாம மேக்கொண்டு கதையைப் பார்ப்போம், வாங்க!

ஒரு முறை, அப்பா வெளியூர் போக, சின்னப் பிள்ளை பூசைக்குப் போகிறான்!
பிள்ளையார் பூஜை தானே! ரொம்ப ஆச்சார அனுட்டானம் எல்லாம் இல்லையே! யாரு வேணும்-ன்னாலும் பண்ணலாமே!
அம்மா கட்டிக் கொடுத்த கொழுக்கட்டையை ரொம்ப சிரத்தையா நிவேதனம் பண்ணுது புள்ளை! இதே, நானா இருந்தாக்கா?...... லபக் லபக் :))



அப்பா இவ்வளவு நாள் சொல்லியதைக் கேட்டு, பிள்ளையார் நெசமாலுமே சாப்பிடுவாரு-ன்னு நினைச்சிக்கிட்டு, நம்பியாண்டான், பொள்ளாப் பிள்ளை கிட்ட மல்லு கட்டுது! :)
ஆனா அவரு இம்மி கூட அசையலை! பிள்ளைக்குப் பயம் வந்துருச்சி! அப்பா சொல்லிக் கொடுத்த படி, சாஸ்திரப் பிரகாரம் பூஜை பண்ணத் தவறிட்டோமோ? அதான் இப்படி ஆயிரிச்சோ? இப்போ ஊரே பார்க்க, ச்சே....நம்ம அம்மா-அப்பாவுக்குத் தானே அசிங்கம்?

பிள்ளையாரின் காலடியில் தன் தலையை வைத்து உருண்டு பிறண்டு, நம்பி தேம்பித் தேம்பி அழுகிறான்!
தனிமையில் சிந்தும் கண்ணீர் தூய்மையானது! ஆழ்ந்து அழுத ஆழ்-வார்களைப் போல ஆழமானது!

குழந்தைகள் எல்லார் முன்னாடியும் அழும் போது கூடப் பாருங்க! பலர் பார்க்க அழுகைச் சத்தம் மட்டுமே இருக்கும்! ஆனால் கண்களில் நீர் ரொம்பத் தளும்பாது! ஆனால் தனிமைக் கண்ணீரோ தனிமையானது! சத்தம் இல்லாதது! சித்தம் இரங்கியது!

* சாஸ்திரத்துக்கு வராத பிள்ளையார், கண்ணீருக்கு வருகிறார்!
* அன்று காதலுக்கு வந்த பிள்ளையார், இன்று கண்ணீருக்கு வருகிறார்!
* தும்பிக்கையால் நம்பி-கைக்கு ஆங்கே வந்தது நம்பிக்கை!

பிள்ளையார் சிலையில் தும்பிக்கை மட்டும் உயிர்ப்புடன் நிவேதனத்தை உண்ண, சிறுவன் நம்பியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! இந்தக் காலத்தில் பிள்ளையார் பால் குடித்த உடான்ஸ் கதை போல் இல்லாமல், திடப் பொருளும் உள்ளே செல்கின்றதே! இது என்ன விந்தை!

அப்பா அம்மாவிடம்......போய் சொன்ன பிள்ளையை, பொய் சொன்ன பிள்ளை என்றார்கள்! ஆனால் அப்பா மறுநாள் மறைந்திருந்து பார்க்க, தும்பிக்கை மட்டும் நீள்வதைக் கண்டார்! "சர்வ பூஜா நிபுணரான" அவருக்கு அன்று தான் நம்பிக்கையே வந்தது! கடவுள் நம்பிக்கையே வந்தது! :)



தமிழகத்தின் விடிவெள்ளி! மாமன்னன் இராஜராஜ சோழன்!
அருண்மொழி வர்மனாய் அரசுப் பட்டம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம்! ஊரெங்கும் உத்தம சோழனின் ஆட்சி!
அது சிதம்பரத்தில் மலைநாட்டு தீட்சிதர்கள் கூட்டமாகக் குடியேறிய கால கட்டம்! உடையார்குடி என்னும் தில்லைக்குப் பக்கத்து ஊரில்! சைவ சித்தாந்த பூசைகளாக இல்லாமல், தாந்த்ரீக பூஜைகளாகச் செய்வது இவர் தம் வழக்கம்!
சைவ சித்தாந்த சிவாச்சாரியார்களான தில்லை வாழ் அந்தணர்களுடன் நயந்து சேர்ந்து கொண்டு, பின்பு தாங்கள் தான் மெய்யான தில்லை வாழ் அந்தணர்கள் என்று மாறிப் போனதாகவும் சில குறிப்புகள் வரலாற்று ஆய்வுகளில் உள்ளன!

இராஜராஜனுக்கு நெடுநாளைய ஆசை! தமிழ்த் திருமுறைகளான தேவாரங்களை ஒன்று திரட்டிப் படிக்க வேண்டும் என்று! அதன் செந்தமிழும், இசையும், சந்தமும் தான் எத்துணை இனிமை! எத்தனை கனிவு!
* வேத சப்தங்களுக்கு அதிர்வு என்றால்.....தேவாரச் சத்தங்களுக்கு அன்பு! கனிவு! குழைவு!
* வேத சப்தங்கள் மண்டையில் என்றால்.....தேவாரச் சத்தங்கள் இதயத்தில்!


ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் தேவாரப் பாடல்கள் கிடைக்கிறதே தவிர, முழுமையாகக் கிடைத்த பாடில்லை!
முதல் பத்தி கிடைக்கிறது! ஆனால் அடுத்த பத்தி இல்லாமல், வேறேதோ வருகிறது! இது இராஜராஜனுக்கு நெடுநாளைய உறுத்தல்!

பஞ்சவன் மாதேவி என்னும் தேவரடியார் தளிச்சேரிப் பெண்! தில்லையில் நடனம் பயில்பவள்! பின்னாளில் இராஜராஜன் மனைவியாகப் போகிறவள்! அவள் மூலமாகவே நம்பியாண்டார் நம்பியை அறிகிறான் இராஜராஜன்!

நம்பியாண்டார் நம்பியோ வளர்ந்து வாலிபனாகி விட்டார்! ஆனால் இன்றும் பொள்ளாப் பிள்ளையாரின் தும்பிக்கை அவர் தரும் உணவை மட்டும் வாங்கிக் கொள்கிறது!

நம்பியும் ஊர் ஊராகச் சென்று, கிடைக்கும் தேவாரச் சுவடிகளைத் திரட்டுவார்! அதைப் பிரதி எடுத்து, இசை அமைத்து, விருப்பம் உள்ளோர்க்கு ஆலயங்களில் படிக்கத் தருவார்! இதனால் அப்பவே தீட்சிதர்களுக்கும் நம்பிக்கும் கொஞ்சம் முட்டிக் கொண்டது! :)

அந்தப் பாடல்களுக்கு பஞ்சவன் மாதேவி ஆடவும் செய்வாள்! அவள் செய்த அறிமுகத்தால் இராஜராஜன் திருநாரையூர் வருகிறான்! மன்னன் அல்ல என்றாலும் அரச குலத்தவன் அல்லவா? படோபடங்கள் கூடவே வருகிறது!
பிள்ளையாருக்குப் பிடித்தமான பழங்கள், கரும்பு, தேன், அப்பம், அவல், பொரி, எள்ளுருண்டை ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வருகிறான்!

நம்பியாண்டார் நம்பி அவை அத்தனையும் பொள்ளாப் பிள்ளைக்குக் காணிக்கை ஆக்குகிறார்!

இராஜராஜன் தன் நெடுநாளைய தேவாரத் தேடலைப் பற்றி அவரிடம் மனம் விட்டுப் பேசுகிறான்! அவரும் ஊர் ஊராகப் போய்த் தான் தேடியதை எல்லாம் அவனிடம் எடுத்துச் சொல்கிறார்! இருவருக்கும் நட்பு பூக்கிறது! அவன் அறியாத சில பதிகங்களையும் அவனுக்குப் பாடிக் காட்டுகிறார்! இராஜராஜன் மனம் கரைந்து போகிறான்! தேடல் தீவிரம் ஆகிறது!


அன்றிரவு நம்பிக்கும் உறக்கம் வரவில்லை! தன்னைப் போல் ஆர்வமுள்ள இன்னொருவனைக் கண்ட இன்பம்! இவ்வளவு நாள் பொள்ளாப் பிள்ளையாரிடம் தனக்கென்று எதுவும் வாய் விட்டுக் கேட்டதில்லை! அன்று கேட்டே விட்டார்!

நம்பீ......"தில்லையில், கை முத்திரை கூடிய அடையாளத்துடன் இருக்கும் ஓர் அறையில், தேவாரச் சுவடிகள் உள்ளன!"

கனவில் வந்து விழுகிறது பொள்ளா வார்த்தைகள்! பொங்குகிறது நம்பிக்கு! பொள்ளாப் பிள்ளையார் அன்று காட்டிக் கொடுத்தது தான்!
அன்று "பொள்ளாதவர்" காட்டிக் கொடுத்த வழி தான், தமிழ்ப் பதிகங்கள் அம்பலம் ஏறும் முயற்சியில், முதல் முயற்சி!

நம்பியாண்டார் நம்பி தில்லைக் கோயிலையே சுற்றிச் சுற்றி வருகிறார்! அவ்வளவு பெரிய கோயிலில் எங்கென்று போய்த் தேடுவது? அதுவும் அதிகார பலத்தை மீறி?
பல நாள் ஆலயத்தை வெறுமனே சுற்றச் சுற்ற, ஒரு நாள் கண்டே விட்டார்! ஒரு அறையில் புற்று எறும்புகள் சாரி சாரியாக ஓடுகின்றன! கணக்கில்லாமல் ஆயிரக் கணக்கில் ஓடுகின்றன! ஆகா!

பொள்ளாப் பிள்ளை சொன்ன கை முத்திரை அடையாளத்துடன் கூடிய அறை இது தானோ? அருகே சென்று ஒதுக்குப்புறமான அந்த அறையைப் பார்க்கிறார்!
அதே கை முத்திரை! - அய்யோ! புற்று எறும்புகள் ஓடுகின்றனவே!
கரையான் அரித்து விட்டதோ! வேதங்கள் எழுதாக் கிளவி என்றால் திருமுறைகள் எழுதிய கிளவி ஆயிற்றே! அதன் கதி இது தானா?

நம்பிகள், அந்த அறையைத் திறக்குமாறு தீட்சிதர்களை வேண்ட, உடனே மறுக்கப்படுகிறது! விரட்டப்படுகிறார்!
எங்கு பேச்சு நடக்கிறதோ, அது சாத்வீகமான பேச்சாக இருந்தாலும், அதான் பேச்சு-ன்னாலே பிடிக்கவே பிடிக்காதே! நம்பியாண்டார் நம்பி விரட்டப்படுகிறார்!

நம்பியாண்டார், பஞ்சவன் மாதேவிக்குச் சொல்லி, இராஜராஜனிடம் விஷயத்தைச் சொல்ல, அவன் அலறி அடித்துக் கொண்டு கிளம்பி வருகிறான்!
அவனுக்கும் மறுக்கப்படுகிறது! ஆனால் சற்றுப் பணிவாக! அரச பதவியில் இல்லையே! இருப்பினும் அரச குல வீரனைப் பகைத்துக் கொள்ள முடியுமா?

அரசன் அறையை உடைத்து உள்ளே நுழைந்தால்? அய்யோ! அது அபச்சாரம் என்றல்லவா ஆகி விடும்? நாளை ஊரில் மழை பொழியாவிட்டாலும், அதுக்கு இராஜராஜன் தான் காரணம் என்று சொல்லி விடுவார்களே!
கை முத்திரையுடன் கூடிய அடையாளத்தை முறிக்க வேண்டும் என்றால், எப்பவோ சமாதியான, தேவார மூவரே, முன் வர வேண்டும் என்று சாதுர்யம் பேசப்படுகிறது! மிகவும் "சமத்காரமான" தலைமைத் தீட்சிதர்! :)

* வேதங்களை ஒலிக்க யாக்ஞவல்கியரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* சூத்திரங்களை விளக்க பதஞ்சலியே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* பாஷ்யத்தைப் பிரஸ்தாபிக்க சங்கரரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* ஆனால் தேவார மூவர் வர வேண்டும் என்று அதே வாய் பேசியது!

தேவாரம் மூவரின் சொத்தாம்! சொத்துக்கு உரியவர் வர வேண்டும் என்று சட்டத்தைத் திட்டத்துடன், எட்ட நின்று பேசினர்!
மூவருக்கு மதிப்பு குறையக் கூடாது-ன்னு தான் இப்படிக் கெடுபிடி...என்றெல்லாம் வெல்லம் பூசிக் கள்ளம் பேசிய பான்மை!



மூவர் வந்தனரா? அறை திறந்ததா? தமிழ் பிறந்ததா?
இங்கே படித்துக் கொள்ளுங்கள்! என்னுடை நண்பன் முன்பிட்ட பதிவு!

மூவர் சிலையாகிச் சிலையாக வந்தனர்! அறை திறந்தது! சிறை திறந்தது! தமிழ் பிறந்தது! அருள் சுரந்தது!

நம்பியாண்டார் நம்பிகளின் கைவண்ணத்தில் தூசு தட்டப்பட்டு, திருமுறைகள் முதல் முறையாக வகைப்படுத்தப்பட்டன!
பதினெட்டாயிரம் பாடல்கள், முதன் முதலில் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டன!
* சம்பந்தர் = 1,2,3 = திருக்கடைக்காப்பு
* அப்பர் = 4,5,6 = தேவாரம்
* சுந்தரர் = 7 = திருப்பாட்டு

பின்னாளில் இன்னும் பல அடியவர்களின் பதிகங்களைச் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன! ஆனால், ஆலயத்தில் தீட்சிதர்களே தேவாரத்தைப் பாடுவார்களா, கருவறையில்? உம்ம்ம்ம்...இராசராசனும் ரொம்ப நெருக்கவில்லை!

பிடிக்காதவர்களிடம் வற்புறுத்தி என்ன பயன்? என்று நினைத்து விட்டான் போலும்!
தேவாரத்தை ஆலயத்தில் பாட "பிடாரர்கள்" என்பவர்களைத் தனியாகவே நியமித்து விட்டான்! இவர்களே அந்நாளைய ஓதுவார்கள்!
இன்றும் ஓரமாய் இருந்து ஓதுகிறார்கள்! அம்மட்டில் மகிழ்ச்சியே! ஆனால் எங்கள் ஈசனின் கருவறைக்குள் தே-ஆரம் செல்லும் நாள் எந்த நாளோ? நாலயிரப் பாசுரம் போல், தென் தமிழ் ஓதி முன்னே வர, தென் நாடுடைய சிவன் பின் வரும் நாள் எந்த நாளோ??

இதில் வியப்பு என்னவென்றால்.....
* தொலைந்த சைவத் திருமுறைகளை மீட்டெடுத்த நம்பியாண்டார் நம்பியும் அதே ஊர் தான்!
* தொலைந்த ஆழ்வார் அருளிச் செயல்களை மீட்டெடுத்த நாதமுனிகளும் அதே ஊர் தான்!

இன்றும் தில்லையில் "திருமுறை காட்டிய விநாயகர்" என்று சின்னூண்டு சன்னிதி உண்டு! :)
இராசராசனும் "திருமுறை கண்ட சோழன்" ஆனான்! அவர் காட்டிய சோழன்! இவன் கண்ட சோழன்! திருமுறை கண்ட சோழன்!

தில்லை அம்பலத்தில்.....
தமிழை ஏற்ற.....
முதலில் வழிகாட்டிய "முதல்வன்" - பொள்ளாப் பிள்ளையார் திருவடிகளே சரணம்!
நம்பியாண்டார் நம்பிகள் திருவடிகளே சரணம்!
Read more »

Monday, August 17, 2009

செந்தில் நாதன்!!! இன்னும் வேகமான உதவி ப்ளீஸ்!

இந்தப் பதிவு, இன்னும் சேர வேண்டிய தொகைக்கான ஒரு முனைப்புப் பதிவு!

நிர்ணயத் தொகை = SGD 100,000 (இந்திய ரூபாய் 33 இலட்சம்)

இது வரை சேர்ந்துள்ளது = பார்க்க!
Total: Rs 207,201 + SGD 3600+ USD 2,790 + SR 4,200 + Singapore Bloggers Contribution + அமீரகப்பதிவர்கள்
= (approx) இந்திய ரூபாய் 514,521.00 மட்டுமே!

இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!
இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!


சிங்கையில், சக பதிவர்/வாசகர் திரு. செந்தில் நாதன் அவர்களின் நிலை பலருக்கும் தெரிந்திருக்கும்!
அதிகம் திரட்டி பக்கம் வாராமல், ரீடரில் படிக்கும் மற்ற ஆன்மீகப் பதிவர்களுக்கும், இந்த வேண்டுதல் போய்ச் சேரவே இப்பதிவு!


சக பதிவரும், சிங்கப்பூரில் வசிக்கும் நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று பலரும் அறிந்த ஒன்று!

ஆனால் அதிகம் அறியாத இன்னொன்று:
* நான்கு மாதங்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், தொடர்பில் இல்லாமலும், எதிர்ப்புச் சக்தியை முழுதும் இழந்து போராடும் செந்தில்நாதன்!
* ஐந்து வயதுக் குழந்தையுடன், கணவருக்காக, வேற்று மண்ணில் போராடிக் கொண்டிருக்கும் சாந்தி செந்தில் நாதன்!

ஒரு பெண் வேற்றூரில் எதை வேண்டுமானாலும் தனியாகச் சமாளிக்கலாம்!
ஆனால் துணைக்கும், ஆறுதலுக்கும் நெருங்கிய உறவுகள் ஏதுமின்றி...
* தன்னந் தனியாக,
* குழந்தையை வைத்துக் கொண்டு,
* அன்றாட குடும்ப அலுவல்களுக்கும்,
* கணவரின் மருத்துவத்துக்கும், செலவுகளுக்கும்,
* அவர் மீண்டு வர வேண்டுதல்களுக்கும்,
* கணவர் இருக்கும் மருத்துவமனையே கதி என்று இருக்கவும்.....

அசாத்திய மன உறுதி வேண்டும்!
அசாத்திய மன உறுதி வேண்டும்!

KVR-இன் உதவி அறிவிப்பு இங்கே!


மகிழ்ச்சியான செந்தில்நாதன், ஒரு சந்திப்பில் - படம்: கோவி.கண்ணன்


பதிவர்கள் குடும்பமாக பல முறை பதிவர் சந்திப்புகளில் சேர்ந்துள்ளார்கள்!
ஆனால் குடும்பத்தில் ஒன்று என்றாலும் ஓடி வரும் பொறுப்புள்ள குடும்பம் = பதிவர் குடும்பம், என்பது இன்னிக்கி இன்னும் மெய்யாகி உள்ளது!

நீங்களும் ஓடி வாருங்கள்!

திருச்செந்தூரில் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
- என்பார்கள்!

இந்தச் செந்தில் நாதனுக்குத் தருவது
அந்தச் செந்தில் நாதனுக்கே தருவது
என்று நீங்களும் ஓடி வாருங்கள்!

இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!
இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!


Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால்
குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள்
மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம்.
அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன்.
நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அமெரிக்கா:
இளா: (இளா, எனக்குத் தனிப்பட்ட முறையிலும், இதர ஆன்மீகப் பதிவர்களுக்கும் நன்கு அறிமுகமான நண்பர் தான்)
+1 609.977.7767
ilamurugu@gmail.com

சிங்கப்பூர்:
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775 (joseph.paulraj@gmail.com)
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

Europe:
S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா:
நர்சிம் - +91 9841888663

அமீரகம்:
ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா:
ராஜா - +966 508296293

நேரடியான வங்கிக் கணக்குத் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்!


சிங்கையிலோ, சென்னையிலோ,
நகரத்தார் தர்ம சங்கம், தமிழர் அறக் கட்டளை, ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளை அறிந்தவர்கள், இதனை இன்னும் முன்னே கொண்ட செல்ல உதவுமாறு வேண்டுகிறேன்!
Professional Help would be more speedy & needy!
சத்ய சாயி நிறுவன உதவிகள் பற்றி யாரேனும் அறிவீர்களா?

சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks
Regards,
Santhi Senthil Nathan.


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!


செந்தில்நாதன் அன்பு அரசாங்கத்தில் = அவர் குடும்பத்தில்

கொஞ்சமே நம்பிக்கையும் புன்னகையும் பூக்க

எம்பெருமான் திருவேங்கடமுடையான் திருவடிகளில் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!


ஹரி ஓம்!
Read more »

Sunday, August 16, 2009

ஓம் நமோ Dash! "நாரணம்" என்பது தமிழ்ச் சொல்லா?-3

இன்னிக்கி டாபிக் கொஞ்சம் வெவகாரமானது! வித்தியாசமானது! ஆனா ரொம்ப உண்மையானது! :)
* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம்
(வடமொழியில்)
-ன்னு சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்! இன்னிக்கி அதைக் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம்! அவரவர் சார்பு நிலைகளைக் கழற்றி வச்சிட்டு, "மெய்ப் பொருள்" காண்பதாகவும் பார்க்கலாம்! என்ன வாரீங்களா? :))

அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு!
பதிவின் நோக்கம்: எல்லாம் கடந்த இறைவனை, வெறுமனே மொழிக் குறுகலுக்குள் அடைப்பது இல்லை!
ஆனால் ஆன்மீகம் எப்படி முக்கியமோ, அதே போல் மொழியும், அதைச் சார்ந்த இனமும், அங்கு இறையியல் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதும் முக்கியம்!
நம் தமிழில், நம் இறையியல் என்ன? என்பதான வேர்களைத் தேடும் முயற்சியே இது! இனி மேலப் படிங்க! :)



"நாரணம்" என்ற பெயரே கொஞ்சம் சிக்கலானது தான்!
பல உண்மைகளை உள்ளடக்கியது! ஒரு நல்ல அழகான தொன்மையான தமிழ்ச் சொல்லைப் பார்த்து, "இது தமிழ்ச் சொல் தானா?" என்று கூட கேட்க வைப்பது! ஹா ஹா ஹா :))

என் முருகப் பெருமானுக்கு இந்தக் கஷ்டமே இல்லை! முருகன்=அழகன்-ன்னு ஈசியா சொல்லிட்டுப் போயீரலாம்! அம்புட்டு எளிமையானவன்! செல்லமானவன்! :)
ஆனா இவரு "ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்" ஆச்சே! அதான் பதிலுக்கு இவரையும் ஆராயும் படி வச்சிட்டாங்க போல! நல்லா வேணும்-ப்பா ராசா உனக்கு! :)


தமிழ்-வட பண்பாட்டுக் கலப்பின் போது, இரண்டு பக்கமும் பரிமாற்றங்கள் நடந்து கொண்டன! மாயோனும் சேயோனும் தமிழ்க் கடவுளர்கள்! இதோ அதற்கான விவரணப் பதிவு!
மாயோன்-சேயோன் = நாட்டு வழக்காக பெருமாள்-முருகன்!
மாயோன்-சேயோன் = விஷ்ணு-ஸ்கந்தன் என்று ஆகி வடக்கே சென்றனர்!

* ஆனால் போன இடத்தில், மாயோன் என்ற விஷ்ணுவைக் கொண்டாடிய அளவுக்கு, ஏனோ சேயோன் என்னும் ஸ்கந்தனை அதிகம் கொண்டாடவில்லை!
* முல்லை நில முதல்வனை, மும்மூர்த்திக்குள் ஒருவராய் வைக்க முடிந்த அளவுக்கு, குறிஞ்சி நில முதல்வனை ஏனோ வைக்கவில்லை!


இத்தனைக்கும் முல்லையின் கண்ணன் கருப்பு! குறிஞ்சியின் முருகன் தான் வெள்ளை! :)

ஒரு வேளை, கண்ணனை ஒத்திருந்த கதைகள் அங்கு ஏற்கனவே இருந்ததோ என்னவோ, இயல்புக்கும் இணைப்புக்கும் ஈசியாய் இருந்தது போலும்!
ஆனால் ஸ்கந்தனுக்கு "முதன்மை" காட்டவில்லையே தவிர, ஸ்கந்த புராணம், தேவர் படைத் தலைவன், பிரணவம் சொன்னவன் என்று அவர்களும் ஏற்றுக் கொண்டு போற்றத் தான் போற்றினர்!

இங்கிருந்த போது, இயற்கை முறைப்படி இருவருக்குமே இயல்பான மனித உருவம் தான்!
அங்கு சென்றவுடன், நான்கு கரம்/பன்னிரு கரம், ஒரு முகம்/ஆறு முகம் என்று வேறு விதமான பரிணாம வளர்ச்சி! :)

இங்கிருந்து சென்ற இரு குழந்தைகள்! அங்கு ஒரு குழந்தை மாநிலத்துக்கே முதல்வராகி விட்டது! இன்னொரு குழந்தை மாநகரத்துக்கு மட்டும் கமிஷனர் ஆகி விட்டது! :)
* அவர்கள் ரொம்பவும் ஏற்றுக் கொள்ளாத குழந்தை "மட்டுமே", இனிமேல் என் குழந்தை!
* அவர்கள் அதிகம் ஏற்றுக் கொண்ட குழந்தை, இனிமேல் என் குழந்தை அல்ல! - என்று தமிழ்த் தாய் சொல்வாளா?


அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க ப்ளீஸ்! :))))))
நினைவில் வையுங்கள்: எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும், மாயோனும் சேயோனும் என்றென்றும் தமிழ்க் கடவுளரே!


* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்)

சரிப்பா, இலக்கியத்தில் மாயோன் = இன்றளவும் திருமால் = நாட்டு வழக்காய் பெருமாள்! தமிழ்க் கடவுள் தான்! ஒப்புத்துக்கறோம்!
ஆனால் "நாரணம்" எப்படி தமிழ்ச் சொல் ஆகும்? அதைப் "பார்த்தாலே" வடமொழி மாதிரி-ல்ல இருக்கு? :)))))
அதுக்கு பதில் சொல்லு கேஆரெஸ்! அதை விட்டுட்டு, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற? :)

நாரணம் என்பது தமிழ்ச் சொல்லே! வட சொல் அல்ல!
அது மாயோனின் பெயர் என்பதை விட, அவன் தத்துவத்தைக் குறிக்க வந்த சொல் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்!

அவன் பெயர்களான "மாயோன்", "திருமால்" என்ற சொற்களே தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்களில் எல்லாம் மிக அதிகமாகப் புழங்குமே தவிர,
தத்துவமான "நாரணம்" என்னும் சொல் அதிகம் புழங்காது! இருப்பினும் அதுவும் சங்க இலக்கியத்தில் ஆங்காங்கே குறிக்கப்பட்டுத் தான் உள்ளது!

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
"நாராயணா" என்னாத நா என்ன நாவே?
- என்பது சிலப்பதிகார வரிகள்!

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் "நாரணன் காப்பு" என்று உரைத்தனன்
- என்பது மணிமேகலை வரிகள்!

இப்படி தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் "நாரணம்" என்பதற்குப் பொருள் தான் என்ன?



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ


முதலில், தமிழ்-ல அணம்-ன்னா என்ன? = வழி/அருகில் சேர்த்தல் என்று பொருள்!
* இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar
* காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason
* ஏரணம் (Logic) = ஏர்(ஏல்) + அணம் = ஏற்றுக் கொள்ளலுக்கு "வழி" சொல்வது = Logic
* நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு "வழி" சொல்வது!

அணம் = அண்மை என்பதின் வேர்ச்சொல்! அண்மை = அருகில்!
சில சமயம் தொழிற்பெயர் விகுதியாகவும் இது வரும்!
கட்டணம், பொக்கணம், தக்கணம் (தக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்-ன்னு வருது இல்லையா? அதைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்)

அணம் என்றால் வழி (அ) அருகில் இட்டுச் செல்வது-ன்னு பார்த்தோம்! அப்போ, நாரம் என்றால் என்ன?


* நாரம் = நீரம் = நீர்மை = நீர்
* ஆனால் நாரம் = நாளம் = கருமை என்று கொள்வாரும் உண்டு!

நாளம் என்பதே நாரம் ஆனது என்று சில தமிழ் அறிஞர்கள் கருதுவர்!
காளி=காரி ஆவது போல் நாளம்=நாரம் ஆகிறது! நாள் = இரவு = கருமை!

சங்கத் தமிழில் நாள்-ன்னா இரவு! நாள்->நள்! நள்ளிரவு-ன்னு சொல்றோம்-ல்ல?
இன்னிக்குப் பேச்சு வழக்கில் வேணும்-ன்னா, நாள் என்பது பகலும் இரவும் சேர்ந்த ஒன்று-ன்னு இருக்கலாம்!
ஆனால் பண்டைத் தமிழில், நாள் = இரவு! அந்த இரவால் "பகு"க்கப்படுவது பகல்!

* கருமையான தமிழ்க் கடவுள் மாயோன் = நாள்!
* அவன் அண்மையில் செல்வது = அணம்!
* நாரம் + அணம் = நாரணம்!
ஆனால் நாரம் என்பதற்கு "நீர்மை" என்ற பொருள் தான் தமிழில் மிகவும் பொருந்தி வருகிறது!

= "நாரம்" உண்டு எழுந்தன மேகங்காள்
= நதியின் பெருவலி "நார்" வலி தானே
= நளிர் கடல் "நாரம்" நா உற வேட்கையின் பருகிய மேகம்
= நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன "நாரம்"
= கடிகொண்ட "நாரம்" அனையன் கொணர்ந்து கரம் உய்ப்ப நுங்கி யெழுவான்
(கந்த புராணம்)
என்று இலக்கியங்களில் எல்லாம் "நாரம்" வருகிறது! நாரம் = நீரம் என்பதே நீர் தொடர்புடைய ஒன்று தான்!

* "நாரத்தை" செடி தெரியும் தானே? மிகுந்த சாறு(நீர்மை) உள்ள பழம் இந்த நாரத்தை!
* "நாரை" என்பதும் நீர் வாழ் பறவை தான்!
* "நார்"ச் சத்து-ன்னு சொல்வாங்களே! அதாச்சும் Dietary Fibre! செடிகளில் நீரை உறிஞ்சிச் சேர்க்கப்படும் சத்துக்கு நார்ச்சத்து என்றே பெயர்! பழமும் ஈரமா, நார் நாரா இருக்கும்! Fibre சத்து "கரைக்க" வல்லது! ஜீரணம் (அ) உணவுக் கரைசலுக்கு உகந்தது!


இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை (அ) நீர்த் தன்மை!
* அணம் = அருகில் செல்லல் (அ) அப்படிச் செல்லும் வழி!

ஏன் இந்த நீர்மை? = பரிணாமக் கொள்கையின் படி, முதல் உயிரினம், நீரில் தான் தோன்றியது! பின்பு தான் ஒவ்வொன்றாகப் பரிணாம வளர்ச்சி!
எவ்வளவு பரிணமித்தாலும், எல்லா உயிர்களுக்கும் நீர் கட்டாயம் தேவை! இன்றும் மனித உயிர்கள் கர்ப்பத்து "நீரில்" மிதந்து விட்டுத் தான் பிறக்கின்றன!

நீர் இன்றி அமையாது உலகு என்பது குறள்!
அது போல் அவன் இன்றி அமையாது உலகு என்பதால் நீரணன்! நாரணன்!

ஊழி என்பது இயற்கைச் சுழற்சிப் பரிணாமம்! அதைப் பரிபாடல் காட்டுகிறது!
1. ஆகாய ஊழி = Big Bang
2. காற்று ஊழி = ஆகாயத்தில் இருந்து காற்று
3. நெருப்பு ஊழி = காற்றில் இருந்து நெருப்பு
4. நீர் ஊழி = நெருப்பில் இருந்து நீர்
5. மண் ஊழி = "நீரில்" இருந்து உயிர்கள்!

...பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
ஊள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்

...
ஊழி யாவரும் உணரா
"ஆழி முதல்வ" நிற் பேணுதும் தொழுதும்

என்று ஊழி முதல்வனாய், ஆழி முதல்வனைக் காட்டுகிறது பரிபாடல் செய்யுள்!

தானோர் உருவே தனிவித்தாய்த்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் "பெருநீர்" தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா"மாயோன்"


இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை! அணம் = அருகில் செல்லும் வழி!
* நீர்-மையுள்ள மாயோனுக்கு அருகில் செல்வது = நாரணம்!


மேலே உள்ள "நீர்"-மைக் கருத்துக்கள் பற்றித் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் பின்னூட்டத்தில் உரையாடுங்கள்! இதற்கு செம்மை சேர்க்க உதவுங்கள்!

இப்போ வடமொழியில் "நாராயணம்" பற்றியும் கொஞ்சம் லேசுமாசா பாத்துருவோம்!

அட, அப்படிப் பார்க்கலீன்னா என் கதி அதோ கதி தாங்க! பந்தல் சாஸ்திர விரோதமானது-ன்னு சில ஆன்மீக அன்பர்கள் என்னைய ஒதுக்கியே வச்சிருவாங்க! :))
இராமானுசன் என்று தான் நாலாயிரப் பாட்டில் கூட வருது!
ஆனா, ஏதோ நான் தான் வேணும்-ன்னே, இராமானு"ஜ"ன் என்று எழுதாம, இராமானு"ச"ன்-ன்னு எழுதறேன்-ன்னு ஏற்கனவே கோப தாபங்கள் வேற இருக்கு! :)

அது என்னமோ தெரியலை, மத்தவங்க என்ன வேணும்-ன்னாலும் சொல்லலாம்! ஆனா கேஆரெஸ்-ன்னா மட்டும் எல்லாருக்கும் நல்ல பிள்ளையா நடந்துக்கணும்-ன்னு ஒரு "எதிர்பார்ப்பு"! அப்படி நடந்துக்கலீன்னா "மனக்கசப்பு"! என்ன கசப்போ போங்க! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே! :))
எது-ன்னாலும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், "மெய்ப்" பொருளை
1. அறிய விழைவதும்,
2. அறியத் தருவதும்,
3. அறியக் கேள்வி கேட்டு, ஐயம் நீங்க உரையாடுவதும் கூட "பகவத் கைங்கர்யமே"!



நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் = நீரை இடமாகக் கொண்டவன் (வடமொழியில்)
-> நாரம் = அனைத்துக்கும் மூலமான நீர்! பிரளய ஜலம் முதற்கொண்டு அனைத்து நீர் ஆதாரங்களுக்குமான ஆதாரம்! ஆபோ "நாரா" இதி ப்ரோக்தா...பூர்வம் தேன "நாராயண" ஸ்மிருதா:
-> அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)! இராமாயணம், உத்தராயணம், தக்ஷிணாயணம்-ன்னு எல்லாம் சொல்றாங்க-ல்ல?

கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!

இது போல் தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட வடமொழிச் சொற்களை இராம.கி ஐயா பல பதிவுகளில் சொல்லி இருக்கார்! ஆதி, பகவன் போன்ற பல தமிழ்ச் சொற்களைப் போலவே நாரணம் என்பதும் ஒன்று!


வடமொழியில் இன்னொரு பொருளும் "நாராயணம்" என்பதற்குச் சொல்லப்படுவது உண்டு! இதை மகான் ஆதி சங்கரரும் தனது சங்கர பாஷ்யம் என்னும் உரை நூலில் உறுதிப் படுத்துகிறார்!

* நரம் = மனிதன்/உயிர் "தான்" என்னும் செருக்கு/உணர்வு உள்ள உயிர்!
* நாரம் = உயிர்கள்! ஒட்டு மொத்த நரமும் சேர்ந்தால் நாரம்!
* அயணம் = இடம் புகல்-இடம்/தஞ்சம்

மொத்த நரத்துக்கும் புகல்-"இடமாய்" இருப்பது எதுவோ, அதுவே நாராயணம்! அதுவே பரம்!
நாராயண பரோ ஜோதிர், ஆத்மா நாராயண பரோ!
நாராயண பரப் பிரும்ம, விஸ்வ ஆத்மனம் பராயணம்!
- என்பது வேதம்!

சைவக் குடும்பத்தில் வந்துதித்த ஆதி சங்கரரும், வேதங்களுக்கு உரை நூலான தன்னுடைய பாஷ்யத்தில், "நாராயண" பரம் என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்!
நாராயண பரோ வக்யாத், அண்டம் அவ்யக்த சம்பவம்! என்று தான் சங்கர பாஷ்யமே தொடக்கம்!


இப்படி, நம் செந்தமிழிலும், வடமொழியிலும் "நாரணம்" என்பது நீர்-மையை ஒட்டியே பேசப்படுகிறது! ஏன்?

Water is colorless, odourless, tasteless, formless!
Yet will take color, odour, taste, form!
* நீர், கொள்ளும் கலத்துக்கு ஏற்ற வடிவம் பெறுவது போல்,
* நாராயணன், நாம் எப்படிக் கொள்கிறோமோ, அப்படி வடிவம் கொள்கிறான்!

ஆவியான மேகத்தின் நீர்,
கடலில் இருந்து வந்த உப்பு நீரா? ஆற்றில் இருந்து வந்த நல்ல நீரா?
குட்டை நீரா? கூவம் நீரா? என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி இருப்பது போல்...

இறைவனின் நீர்-மையில் சேரும் உயிர்களை,
நல்லவர்-தீயவர், தேவர்-அசுரர், ஆண்-பெண், சாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவே முடியாது!
அனைவரும் அடியார்களே! பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

அதான் ஆலயங்களிலும் தீர்த்தமாக, அவனையே பருகத் தருகிறார்கள்! = நீர்-மையான அவனை, நம்முள், உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்! விளக்கப் பதிவு இங்கே!

இப்படி நீர் இன்றி அமையாது உலகு என்னும் படிக்கு,
நீராகப் பரவி நிற்கும்...நீர்-மையான்...
"நீராயணன்-நாராயணன்" திருவடிகளே சரணம்!


கோபுரத்தின் மேல் இருந்து, குருவையும் மீறி, ஊருக்கே அப்படி என்ன தான் சொன்னாரு? ஓம் நமோ Dash கேட்டு ஊரே திருந்திருச்சா? :).....அடுத்த பதிவில்...(தொடரும்)
Read more »

Wednesday, August 12, 2009

ஓம் நமோ "Dash"! துன்பத்தில் கடவுளைக் கூப்பிடாதே!-2

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு மட்டும் கூப்புட்டுறவே கூப்புட்டுறாதீங்க! அவரு ஆராய்ஞ்சி தான் அருளுவாரு! உங்க வேலை ஒன்னுமே நடக்காது! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-ன்னு அவரைப் பற்றிப் பதிவுகளில் சொல்லிச் சிலாகிச்சவங்க கிட்டயே அவரோட வேலையக் காட்டீருவாரு! :))

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்!-ன்னு சென்ற பதிவில் முடிச்சி இருந்தேன்!
அதை நான் டகால்ட்டி பண்ணுவதற்காகச் சொல்லலை, ஆழ்வாரே சொல்றாரு-ன்னும் சொல்லி இருந்தேன்! துன்பம் வரும் போது இறைவனைக் கூப்பிடக் கூடாதா? வித்தியாசமா-ல்ல இருக்கு? ஏன்-னு பார்க்கலாமா?


துஞ்சும் போது அழைமின், துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!

* தூங்கும் போது கூப்பிடுங்கள்! = இது எப்படி-ப்பா? குறட்டையிலா கூப்பிட முடியும்? :)
* துயர் வந்தால் வாய் விட்டுக் கூப்பிடாதீர்கள்! நினைச்சாப் போதும்! = ஹா ஹா ஹா!
* துயரமே இல்லாதவங்க = இவிங்க வாய் விட்டுத் தாராளமாக் கூப்பிட்டுக்கலாம்! நன்றாம்!
* நாம சேர்த்து வச்சிருக்கும் வினைகளுக்கு விஷம் போல கசக்கும்! நமக்கோ இனிக்கும்! = நாராயணா என்னும் நாமம்!

இப்படிப் பாடுவது ராபின்ஹூட் ஆழ்வார் என்னும் என்னோட இலக்கிய ஹீரோவான திருமங்கை மன்னன்! :)
* துஞ்சும் போது = "நினைமின்"! துயர் வரில் = "அழைமின்"!-ன்னு சொன்னா ஓக்கே!
* துஞ்சும் போது = "அழைமின்"! துயர் வரில் = "நினைமின்"!-ன்னு மாத்திச் சொல்றாரே? ஏன்?


வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்! மருத்துவமனை, கால்கட்டு, அது, இது-ன்னு ஏக களேபரம்! ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை! ஏன்?

இது நிறைய பசங்க பண்றது தான்! அம்மா அப்பா பக்கத்துல-யும் இல்லை! எங்கேயோ இருக்காங்க! எதுக்கு அவிங்களுக்கு வீண் டென்சன்?-ன்னு சொல்லிக்க மாட்டானுங்க! கமுக்கமா இருந்துருவானுங்க! ஆனா உள்ளுக்குள்ள மட்டும் ஓரமா ஒன்னு ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!

* ஜூரம் வந்து வாயெல்லாம் கசப்பா இருக்கு! இந்நேரம் அம்மா இருந்திருந்தா, சூடா இடியாப்பம் பண்ணிக் கொடுத்து இருப்பாங்க! பாத்து பாத்து கவனிச்சி இருப்பாங்க-ல்ல?
* முன்ன ஒரு நாள், கால் வலியில் துடிச்ச போது, அப்பா எனக்குக் கால் அமுக்கி விட்டாரே? எங்கே தடுக்கப் போறேனோ-ன்னு, நான் தூங்கிட்டாப் பிறகு, மெல்ல எழுந்து வந்தாரு! எவ்ளோ நேரம் பிடிச்சி விட்டாரோ? பாத்ரூம் போக எழும் போது தான் தெரியவே தெரிஞ்சிச்சி!

இப்படியெல்லாம் உள்ளுக்குள் ஒளிஞ்சி இருந்தாலும், பசங்க வெளீல சொல்றதில்லையே! ஏன்?
* துயர் வரில், அம்மா-அப்பாவைப் பசங்க அழைக்கறதில்லையே? - ஒன்லி நினைமின் தான்! ஏன்?
* துஞ்சும் போது மட்டும் "அம்மா"-ன்னு அனத்தறாங்களே! அழைமின்! ஏன்? :)


அதே தான் ஆழ்வாரும் சொல்றாரு! = துஞ்சும் போது "அழைமின்"! துயர் வரில் "நினைமின்"! புரியுதா மக்கா?
எம்பெருமான் நமக்கு சாஸ்வதமான அம்மா அப்பா ஆச்சே!
ஆனா நாமளோ வாலிப மிடுக்குல, சுய சம்பாத்தியத்துல, சுய கெளரவம் எல்லாம் இப்போ நமக்கு வந்தாச்சி! எனக்கு முளைச்சி மூனே மூக்கா இலை விட்டாச்சி! :)

* குழந்தையா இருந்த போது = துஞ்சும் போது நினைச்சோம்! துயர் வரில் அழைச்சோம்!
* ஆனா இப்போ அப்படி இல்ல! உல்ட்டாவா பண்ணுறோம்! = துயர் வரில் நினைக்கிறோம்! துஞ்சும் போது அழைக்கிறோம்! :)

அதே தான் இறைவனிடத்திலும்! மூனு இலை விட்டாச்சி!
நமக்கு-ன்னு பதிவு போடும் அளவுக்கு "அறிவு", "ஞானம்"-ன்னு பலதும் வந்துரிச்சி-ல்ல?
எத்தனை பின்னூட்டம் பார்க்கறோம்? எத்தனை மனுசங்களைப் பாக்குறோம்? எத்தனை சண்டை போடறோம்? எக்ஸ்பீரியன்ஸ் மாமே எக்ஸ்பீரியன்ஸ்! :)


* ஞான யோகம் = நிறைய படிச்சி வச்சிருக்கேன்! பல விஷயம் "அறிந்தேன்"! ஆனால் "உணர்ந்தேனா"?
* கர்ம யோகம் = நிறைய கர்மா பண்ணுவேன்! சடங்கு தெரியும்! நானே கை போட்டு பல வேலை பண்ணுவேன்! "செய்தேன்" ஆனால் ஒழுங்கா "நெய்தேனா"?



இப்படி நாமளே முயன்று, நாமளே சுயமா அறிவைத் தேடி, ஞான/கர்ம வளர்ச்சி அடைஞ்சிட்டதனால, அம்மா அப்பாவான எம்பெருமானை வாய் விட்டுக் கூப்பிட ஏதோ ஒன்னு லேசாத் தடுக்குது! :)
- முருகாஆஆஆ-ன்னு சத்தமா எப்படிக் கூப்புடுறதாம்? சேச்சே! ஷேம்! ஷேம்! :)
- கோவிந்தாஆஆஆ-ன்னு வாய் விட்டு எப்படி அழைக்கறதாம்? அதெல்லாம் பஜனை கோஷ்டிக் காரங்க வேணும்-ன்னா பண்ணுவாங்க! :)

* நாமளோ ஞான/கர்ம யோகத்துல-ல்ல இருக்கோம்? தீர்வை "நாமளே" தேடிப்போம்! ஏதாச்சும் பரிகாரம், பிலாஸபி, பிரம்ம சத்யம் ஜகன் மித்யா-ன்னு இருக்கும்! அதைச் செய்வோம்!
* நேதி நேதி, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு, தத்துவக் கடல்-ல விழுந்து குளிப்போம்! சூப்பராப் பதிவுல கூடிக் கூடிப் பேசுவோம்!
* ஆனால் "கோவிந்தா"-ன்னு கூச்சம் இல்லாம பப்ளிக்கா அழைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம்! நாலு பேரு ஒரு மாதிரி நினைச்சிப்பாங்க!
* அவன் உள்ள உகப்புக்கு எல்லாம் நடந்துக்க முடியாது! மெஜாரிட்டி ஆளுங்களோட ஒத்துப் போகணும்-ல்ல? ஒதுக்கி வச்சீருவாங்களே! கோயில்-ல மாலை மரியாதை பரிவட்டம் எல்லாம் கெடைக்க வேணாமா? :)

அதுக்காகப் பிள்ளைகளுக்குப் பாசமில்லாம எல்லாம் இல்ல! ஜஸ்ட் மூனே முக்கா இலை படுத்தும் பாடு! அதான் ஆழ்வார் சொல்கிறார்......
பரவாயில்லை! துயர் வரில் கூப்பிடக் கூச்சமா இருக்கா? சரி, கூப்பிட வேணாம்! "நினைத்துக் கொள்ளுங்கள்"! துஞ்சும் போது "அழைத்துக் கொள்ளுங்கள்"!
- ஆனால் தயவு பண்ணி, அது அழைத்தோ இல்லை நினைத்தோ, அவனைக் "கொள்ளுங்கள்"! அவனைக் "கொள்ளுங்கள்"!

உலகம் அளந்தானை "அளக்க" முடியாது! "கொள்ளத்" தான் முடியும்! அதனால்
* உளமாறக் கொள்ளுங்கள்!
* உளம் ஆறக் கொள்ளுங்கள்!
* உளம் மாறக் கொள்ளுங்கள்!

அவன் எங்கோ இருக்கும் பரமாத்மா = இறைவன் என்று சாஸ்திர பூஜையோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுக்கும் அவனுக்கும் உறவு என்று அவனுடன் கொள்ளுங்கள்! "உறவு கொள்ளுங்கள்"!

* அவன் = அ
* நீங்கள் = ம்
* "உ"றவு கொண்டால் வருவது உ!
=> அவன்-உறவு-நீங்கள்! => அ-உ-ம்! => ஓம்!

உன் தன்னோடு-உறவேல்-நமக்கு.....இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்!


துயர் இலீர், சொல்லிலும் நன்றாம் = துயரம் இல்லாதவர்கள், "நாம தான் ஜாலியா இருக்கோமே? இப்ப எதுக்கு இறைவனைப் போய் நினைக்கணும்? எல்லாம் வயசான காலத்தில் பாத்துக்கலாம்! இப்போ ஜஸ்ட் என்ஜாய் மாடி"-ன்னு **மட்டும்** இல்லாம, அவன் பேரைச் சொல்லிப் பழகுங்கள்! துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!

துயர் வரில் "நினைமின்" = துயரம் வந்துருச்சே! அய்யோ அய்யோ-ன்னு குதிக்காம, நாம என்ன தப்பு பண்ணோம்-ன்னும் கொஞ்சம் "நினைமின்"! கூடவே அவனையும் "நினைமின்"!

* அன்பன் ஆஞ்சநேயன்! வாலில் நெருப்பு வைத்த போது, "அய்யோ நெருப்பு, நெருப்பு! உன் வேலையாத் தானே வந்தேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!
* ஆசைப் பிரகலாதன்! மலையில் உருட்டித் தள்ளிய போது, "அய்யோ அய்யோ, உன் பேரைத் தானே சொன்னேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!

இப்படி "நினைத்தால்"....அவன் "நினைப்பாக" இருந்தால்....

துஞ்சும் போது "அழைமின்" = தூங்கும் போதும் உங்களை அறியாமல் அவனை அழைப்பீர்கள்! :)
பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))

துயர் வரில் "நினைமின்"! துஞ்சும் போது "அழைமின்"! நாராயணா என்னும் நாமம்!


"நாராயணாய" என்றால் என்ன? - இன்னிக்கி பார்க்கத் துவங்கி விடலாமா?

இதோ துவங்கி விடுகிறேன்! அதற்கு முன்.......
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன்
***நற்றாள்*** தொழாஅர் எனின்!
------------------------------------------------------------------------------------

* நாரணம் (தமிழில்)
= நாரம் + அணம்
= நீர் + அருகில் = நீர்மைக்கு அருகில்


* நாராயணம் (வடமொழியில்)
= நாரம் + அயணம்
= உயிர்கள் + இடம் = உயிர்கள் தஞ்சமாகும் இடம்

------------------------------------------------------------------------------------

1.
நீர் இன்றி அமையாது உலகு! = நாரணம்!
அதே போல் நீர்வண்ணன்-இறைவன் இன்றி அமையாது உலகு!!
------------------------------------------------------------------------------------
2.
நீர், தானே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவுகளையும் அது தான் விளைவிக்கிறது!
துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்பது குறள்!

* தானே உணவாகி = துப்பு ஆய
* மற்ற உணவுக்கும் காரணமாகி = துப்பு ஆக்கி

அதைப் போலவே இறைவன்-எம்பெருமான், தானே உலகுக்குக்
* காரணமாகவும் இருக்கிறான்!
* காரியமாகவும் இருக்கிறான்!
தானே வழியும் சீவனுமாய் இருக்கிறான்! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
3.
நீருக்கு ஒரு முக்கியமான குணம் இருக்கு!
* அதுக்கு வடிவம் என்று எதைச் சொல்வது? = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
* அதே போல் நீர் வண்ணனாகிய நாரணனும் = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தைப் பெற்று விடுவான்!

அது மீனா, ஆமையா, பன்றியா, மிருகமா, குள்ளனா, கண்ணனா-காதலனா? எதில் ஊற்றுகிறீர்களோ அது!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
4.
நீர் எதிலும் அடங்கி விடும்! நீருக்குள்ளும் எதுவும் அடங்கி விடும்!
Water is an Universal Solvent!
Proteins, DNA, Polysaccharides என்று அணுக் கூறுகள் கூட கரைந்து விடும்!

அதே போல் புண்யாத்மா/பாபாத்மா என்று பேதமும் இல்லாமல்...
சாதி, மத, ஆண், பெண், என்று எந்தப் பேதமும் இல்லாமல்...
அனைவரும் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வணங்கியவன்/வணங்காதவன் என்ற தடையே இல்லை! அவனை அண்டினார்க்கு மோட்சம்! அவனை ஸ்வீகரிக்காதவர்கள் எல்லாருக்கும் வெறும் நரகமே போன்ற பேச்சுக்களே இல்லை! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

இப்படி அனைத்தும் எம்பெருமானின் அநுபூதிக்குள் கரைய வல்லவை = நாரணம்!
Coz, Narayanan is an universal solvent!
------------------------------------------------------------------------------------
5.
நீர் = திடப்பொருளாகவும்(Solid), நீர்மைப் பொருளாகவும்(Liquid), வளிப் பொருளாகவும்(Gas), நம் கண் முன்னாலேயே பார்க்கலாம்!
Water exists in all states! Narayanan exists in all states!

மற்ற வேதிப் பொருட்கள் State Change ஆக, அதிக வெப்பம்/குறைந்த அழுத்தம் என்று பலதும் தேவைப்படும்! ஆனால் நீர் மட்டும் எளிதில் ஆவியாகும், கட்டியாகும்! மீண்டும் நீராகவும் ஆகும்!
அது போல் எம்பெருமானும் அடியவர்கள் வெப்பத்துக்கு/நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதாக மாற்றிக் கொள்வான்! அப்படி மாறினாலும், அவன் அவனாகவும் இருப்பான்!

நீரைப் போலவே எல்லா நிலைகளிலும் இருப்பதால் = நாரணம்!


நாரம் என்பது அனைத்துக்கும் மூலமான நீர்!
அண்ட நீர் (பிரளய ஜலம்) முதற்கொண்டு அண்டத்தின் அனைத்து நீர் ஆதாரங்களும் ஆதாரம் என்பதே நாரம்!

H2O என்று இன்று சொல்கிறோம்!
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணு என்று கூறு பிரித்துக் காட்டுகிறோம்! ஆனால் வேதங்கள் அன்றே இப்படிக் கூறு பிரித்துக் காட்டுகின்றன!
பிராணம் (O) ஏவம், அன்யத் (H2) த்வயம் என்று வேதமும் சொல்கிறது!
பிராணம் (O) ஏவம் = உயிர் வளி ஒன்று!
அன்யத் (H2) த்வயம் = மறு வளி இரண்டு!
"ஆபோ நாரா" என்று நாரம்-நீர் பற்றிய வேத சூக்தமும் உண்டு = நாராயண சூக்தம்!

* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்!
அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!
* ஏன் அவனை நீரான், நீர்மையான், "நாரா"-யணன், நீர்-வண்ணப் பெருமாள்-ன்னு, எல்லாம் நீராகவே காட்ட வேண்டும்?
* எதற்குப் பிரசாதமாக தீர்த்தம் என்னும் "நீர்" கொடுக்க வேணும்?
* ஏன் பெருமாளுக்கு எல்லாமே நீராகவே அமைந்துள்ளது?

* தமிழில் நாரம் என்பதன் விளக்கம் என்ன?
சங்கத் தமிழில் "நாராயணா என்னாத நா என்ன நாவே?" - என்று இளங்கோ அடிகள் கேட்கிறாரே! வேறு எங்கெல்லாம் "நாரணம்" என்ற சங்கத் தமிழ்ச் சொல் வருகிறது? (தொடரும்......)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP