Wednesday, May 07, 2014

கல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்?

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ?:)

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதிவெழுதணும்-னு நினைச்சேன்; அது கூட என்னால் முடியலை!
--
இணைய வெளியில் தமிழ் இலக்கணம் = அறிவியல் பார்வை | இது குறித்து நானும் எழுத்தாளர் ஜெமோவும்,அகத் திறப்பு உரையாடல்! அதற்கான நன்றி!


சரி, நாம இன்றைய காட்சிக்கு வருவோம்:)
நிறையப் பேரு மேடையில் பேசக் கேட்டிருப்பீங்க,Very Famous Punch Dialogue!
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, 
வாளோடு... முன் தோன்றிய மூத்த குடி!

அது எப்படிய்யா, கல்லு தோன்றி, மண்ணு தோன்றா முன்னரே, தமிழ் தோன்றும்?
பூமி-ன்னு ஒன்னு தோன்றி, மக்கள் தோன்றி, அப்பறம் தானே-ய்யா மொழியே தோன்றும்? என்னய்யா "பகுத்தறிவு"?

தமிழ் -ன்னாலே, "ஓவர்" உணர்ச்சி வசப்படறவங்க-ய்யா!
எப்படி அடிச்சி விட்டிருக்கானுங்க பாரேன்!
இரும்பு தோன்றி, அப்பறம் தானே வாள் தோன்றும்?

எப்படி-ய்யா, மண் தோன்றும் முன்னரே... "வாளோடு" நீங்கெல்லாம் தோனுவீங்க?
ஒரு வேளை, "வாலோடு" முன் தோன்றிய மூத்த குடியா?:) குரங்குப் பய குடிகளோ?:) சுவடி Mistakeuuu பாட பேதமா?

இப்படித் தான் போல, மொத்த தமிழ் இலக்கியமும் = "கப்சா" ஓய்! Dubakoor of Tamizh..


என்னடா இது? மாதவிப் பந்தலில், தமிழைப் பற்றி இப்படியொரு பதிவா?-ன்னு பாக்குறீங்களா?:)

ஒன்னுமில்ல!
Twitter-ல, சில அதி மேதாவிப் "பண்டிதாள்" இருக்காளோ-ன்னோ?

* ஆதாரம்/ தரவே தர மாட்டாங்களே?
* சும்மானா அடிச்சி விட்டுட்டு, Group சேர்ந்து பரப்புவாங்களே?
* தமிழை "டுமீல்" -ன்னு எள்ளி விட்டு, அதே தமிழ் இலக்கணத்தில் பாடம் நடத்துவாங்களே?
* தமிழைக் கொண்டே, தமிழின் கண்ணைக் குத்துவாங்களே?

இது போல ஒருத்தரு, இன்னிக்கி துவங்கி வச்ச "கைங்கர்யம்" = "கல் தோன்றி, மண் தோன்றா":)
= ஆனா, உண்மை என்ன???


அதுக்கு முன்னாடி, 
ஒரு சின்ன நியாய/தர்மம் = உங்க மனசாட்சிக்கு!

கல் தோன்றி, மண் தோன்றா = தமிழ் "கப்சா" -ன்னே வச்சிக்குவோம்:)
ஆனா...
"கப்சா"லயே ஊறினவங்க, அதைக் குத்திக் காட்டி "எள்ளுவது" தான் மிகப் பெரிய வேடிக்கை:)

*கல் தோன்றி, கால் பட்டு, பொண்ணு ஆகுமாம் = இராமாயண "உண்மை"!
*கல் தோன்றி, மண் தோன்றா மட்டும் = தமிழ் "கப்சா"
= எப்பிடி இருக்கு ஓய் நம்ம நியாயம்?:)

வானத்தை, ஒத்தைக் காலால் அளப்பாராம்!
3D Volume (m^3) விண் வெளி = எப்படிய்யா 2D Length (m) -ஆல் அளக்க முடியும்?

அப்படி அளந்துட்டு, கீழே தள்ளினவன் தான்.. மஹாபலி
வருசா வருசம், சேரளம்-கேரளத்துக்கு வரானாம்!
= இதெல்லாம் கப்சா இல்ல! தமிழ் மட்டும் தான் கப்சா?:)

Yes Yes! நாம சொன்னா= "குறியீடு" ஓய்!
Vedas, Vibration in Mantra ன்னு மாத்தீருவோம்ல?:)


சரி,
கல் தோன்றி, மண் தோன்றா = உண்மைகளைப் பார்ப்போமா?
இந்தப் பாடல் முழுக்கத் தெரியுமா?
"முழுமை" அறிந்தால் தானே "உண்மை"யும் அறிய முடியும்? நுனிப்புல் இணைய "மேதை"களாச்சே நாம தான்:)

பாட்டைப் பாருங்க:
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

புறப்பொருள் வெண்பா மாலை -ன்னு ஒரு இலக்கண நூல்; 9th CE!
சங்கத் தமிழ்-ல்லாம் இல்ல.. ரொம்ப பிந்தி!
*முன் தோன்றி மூத்த குடி= தமிழ் தான் உலகில் முதல் குடி!
*கல்/மண் தோன்றும் முன்னரே, தமிழ் தோன்றி விட்டது!
அப்படியா சொல்கிறது இந்தப் பாடல்?

கல் = மலை என்ற பொருளும் உண்டு!
*கல் உயர் தோள், கிள்ளி பரி = மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்
*கல் இயங்கு கருங் குற மங்கையர் = மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்

மண் = வயல் என்ற பொருளும் உண்டு!
மணிநீரும் "மண்ணும்" மலையும் அணிநீழற்
காடும் உடையது அரண் (குறள்)
மண் வளம் -ன்னு சொல்றோம்-ல்ல? பச்சை மண்ணு!
----

இப்போ, கூட்டிக் கழிச்சிப் பாருங்க!
*கல் தோன்றி = மலை தோன்றி
*மண் தோன்றா = வயல் தோன்றா

முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வேல்-வில்-வாளோடு, முன்பு இருந்த = ஆதி குடிகள்!

வயல் வெளி நாகரிகம் தோன்றாக் காலத்தே..
*காடும்/மலையும் தானே = ஆதி மனிதன்?
*அவன் கையில் = கல்/ எஃகு/ இரும்பால் ஆன வேலும் வாளும்!
Natural Evolution Process!

வாளோடு முன் "தோன்றி": 
"தோன்றுதல்" -னா பிறத்தல்-னு மட்டும் பொருள் அல்ல! கையில் வாளைப் புடிச்சிக்கிட்டே, தமிழ்க் குழந்தை பொறக்குமா என்ன?:)

தோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (குறள்)
பொறக்கும் போதே, குழந்தை புகழோட பொறக்குமா? அப்படிப் பொறக்காத குழந்தை சாவட்டும்-ன்னா சொல்றாரு ஐயன்?:)
தோன்றிற் புகழொடு தோன்றுக= Appear on the Stage, with Glory!

தோன்றல்= Appearance!
*முல்லை/குறிஞ்சி தோன்றி,
*மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வாளோடு Appear ஆன ஆதி குடிகள்!

இப்போ சொல்லுங்க!
இதுல என்னய்யா "கப்சா"? பகுத்தறிவு கெட்டுப் போயிருச்சி??



இவ்ளோ தான் இந்தப் பாடல்!
எதுக்கு முல்லை/குறிஞ்சியைத் திடீர்-ன்னு சொல்லணும்?
அடேய் ரவி, தெரியும் டா ஒன்னைய பத்தி;
நீயா Meaning மாத்திச் சொல்லுறியா?:)))

Never!
உண்மையே = பெரிது!
முருகனே வந்தாலும், தமிழே எனக்கு முதல்!
மதத்தில், மொழியை அடகு வைக்க மாட்டேன்!
= மெய்த் தரவுகளே முதல்!

அதாச்சும், புறப்பொருள் வெண்பா மாலை -னு சொன்னேன்-ல?
அதில் வருது இப்பாடல்!

எழுதனவரும், ஒரு சைவ சமய ஆளு தான்! = ஐயனாரிதனார்
தமிழ் இலக்கண நூலுக்கு, விநாயகர் காப்பு-ல்லாம் எழுதி இருப்பாரு:)
இதே....
MBBS FRCS மருத்துவ நூலுக்கு, கணபதிக் காப்பு எழுதினா சும்மா விடுவீங்களா?:)

இப்படிச் சமய ஆளுங்க, தமிழில் செஞ்ச குழப்படிக்கும், நாம தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு! என் தலையெழுத்து:(

1. சிவபெருமான் உடுக்கை அடிச்சி, ஒரு பக்கம் தமிழ் மொழி, இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம் தோனிச்சி -னு எழுதி வைப்பானுங்க!

2. சிவபெருமானே, தமிழ்ச் சங்கத்தில் உட்காந்தாராம்!
முருகன் பேரு= உருத்திர "சர்மா"வாம்!
= யோவ் எங்க முருகன் நடுகல்லு! சர்மா/ குர்மா இல்ல:)

3. திருவிளையாடற் புராணம் எழுதி, அ முதல் ஹ வரை 51 Sanskrit Letters became 51 Tamizh Poets -ன்னு எழுதி வைப்பானுங்க, "மதம்" புடிச்ச பண்டிதாள்!

இவை அத்தனையும், தமிழில், "மதம்" செய்த கப்சா!
*கல் தோன்றி, மண் தோன்றா = கப்சா இல்ல!
*இயற்கையே உருவான சங்கத் தமிழும் = கப்சா இல்ல!

தொல்காப்பியர் அருமையா வகுத்துக் குடுத்த
*அகத் திணை = 7
*புறத் திணை  = 7

கைக்கிளையும் = அகத் திணையில் தான் வைப்பாரு தொல்காப்பியர்;
ஒருதலை-ன்னாலும் = அதுவும் மனசு (அகம்) தானடா?
அதையெல்லாம் மாத்தி, புறத் திணையில் கொண்டாந்து வைச்ச நூல் இது:(
= புறப்பொருள் வெண்பா மாலை, 9th CE


புறப் பொருளில், முதல் திணை= வெட்சி X கரந்தை!
போருக்கு முன்
*வெட்சி=  எதிரிப் படை, ஆநிரை (மாட்டுக் கூட்டம்) கவர்தல்
*கரந்தை= அந்த ஆநிரைகளை, இழக்காது காத்தல்

இந்த ஆநிரைகள்-ல்லாம் எங்கே? = முல்லை/குறிஞ்சியில் தானே!
அதில், கரந்தையில் வருவதே இந்தப் பாட்டு!

புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

மேலோட்டமான பொருள்:
அடேங்கப்பா, என்னமா ஆநிரை காக்குறாங்க, இந்த ஆதிகுடிகள்?
பொய் அகல, புகழ் விளைக்குறாங்க.. என்ன வியப்பு!

வையகம், நீர் போர்த்தி இருந்து, பின்பு வாழ்வு துவங்கிற்று!
அப்போ, மலை வாழ்வு/ காட்டு வாழ்வு தான் முதல்!
*கல் தோன்றி = மலை தோன்றி
*மண் தோன்றா = வயல்கள் தோன்றா

முல்லை/ குறிஞ்சி தோன்றி, மருதம் தோன்றாக் காலத்தே...
கையில், வாளோடு, Appear ஆகி,
இப்படி வீரமாகப் போர் செய்து, ஆநிரை காக்கிறார்களே, இந்தக் கரந்தைத் திணையில்! வாழ்க ஆதி குடிகள்!

இவ்ளோ தான் பொருள்; வெறுமனே கரந்தைத் திணை
Stone Age, Bronze Age, Iron Age = Natural Evolution of Mankind!
--

இதுக்குத் தான், பாட்டை முழுக்கப் படிக்கணும், "தரவு, தரவு" -ன்னு அடிச்சிக்குறது!
இப்பல்லாம், ஒங்க பொழுது போகாமைக்கு, தமிழ் இலக்கணம் -ங்கிற பந்து கிடைச்சிருச்சி அவனவனுக்கு! கால் போன போக்கில் எட்டி உதை?:(

இனி, எவனா இருந்தாலும், எவன் சொன்னாலும், தரவு கேளுங்க!
(நானே ஆயினும்..)
எப்பொருள், யார் யார் வாய்க் கேட்பினும்..

@r_inba என்கிற "மகான்" = இவருக்கே இப்பதிவு காணிக்கை!
*கல் தோன்றி மண் தோன்றா என்று தமிழை எள்ளல் செய்தது இவரே!

அதுவும், என் அன்புக்குரிய இசைஞானி இளையராஜாவின் தளத்திலே:((
இசைஞானி மேல் பிறர் அபாண்டம் சொல்லும் போது வரும் அறக்கோபம்
தமிழின் மேல், பிறர் "எள்ளல்" செய்யும் போது வரக் காணோமே?? Hypocrisy!

கல் தோன்றி, மண் தோன்றா = கப்சா அல்ல!
சங்கத் தமிழ் நெறி! Natural Evolution! அறிவீர், அறிவீர்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP