Wednesday, January 28, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா, பதிவர்கள், பிளாக்-காயணம் Part 1

சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!
(பிரபல பதிவர்களின் கீமாயணம் - Part 1 - Take 1!)


கலியுகத்தில், கப்சா கண்டத்தில், முதலாம் பேரக் மன்னன் ஆட்சி புரிந்த O-பாமா தேசத்தில், தர்மம் தழைத்தோங்குது! மாதம் முவ்வங்கி திவாலாகுது!
அங்கே பாஸ்டன் என்னும் வெள்ளையர் நகரிலே ஒரு கொள்ளையன்!
பாஸ்டன் பாலா என்ற திருநாமம்! = பா-பா என்று இவரைப் பாடி, ப்ளாக் ஷீப்பை இவருக்குப் பலி கொடுப்பாய்ங்க!
பா-பா ஒரு பெரிய கொள்ளைக் கூட்ட பாஸ்! சுட்டித் திருடன்! பலரின் பதிவுகளைத் திருடித் திருடி, சுட்டி இட்டுக் கொள்வார்!
இவரே திருடன்! இவரே நீதிபதி! இவரே கில்லி! இவரே ஸ்நாப் ஜட்ஜ்!
இட்லி-வடை தான் இவருக்குப் பிடித்தமான படையல்! ப்ளாக்கர், வோர்ட் பிரெஸ், மை ஸ்பேஸ், ட்விட்டர் என்று இவர் அடிக்காத கொள்ளை இல்லை!

ஒரு நாள்......
801 பாடல் பெற்ற தலங்களில் முதல் ஊரான நியூயார்க்! அங்கே மாதவிப் பந்தல் பொக்கிஷத்தைக் கொள்ளை அடிக்க வராரு பா-பா! ஆனால் எதற்கும் கலங்காத ஆண்மீக அருட்கடல் KRYES இதுக்கெல்லாம் கலங்குவாரா என்ன?

"பாபா, இப்படி இத்தனை பேரின் மூளைச் சொத்தைக் கொள்ளை அடிக்கிறீங்களே? இது மகா பாவம் இல்லையா? இந்தப் பாவத்தின் பாரத்தை எப்படித் தாங்கப் போறீங்க?"

"நான் செய்யும் பாவத்தில், டோட்டல் பதிவுலகத்துக்கும் பங்கு உண்டு, கேஆரெஸ்! ஸோ, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!"

"ஆகா! யார் இப்படிச் சொன்னது உங்களுக்கு?"

"குறுக்கெழுத்து-தலையெழுத்துன்னு பதிவு போடும் பதிவுலகப் பிரம்மா! கொத்தனார்! அவர் தான் சொன்னாரு!

"கொத்தனாராவாது! நாத்தனாராவது! உங்க பாவத்தில் ஒருத்தனும் பங்கு போட்டுக்க வர மாட்டானுங்க! யாரை வேணும்னாலும் கேட்டுப் பாத்துட்டு வாங்க!"


பாபா உடனே தனது சர்வேச அவதாரம் எடுக்கிறார்! ஒரு சர்வே பதிவு போடுகிறார்! - "என் பாவத்தில் பங்கு கொள்ளும் பதிவர்கள் யார் யார்?"

ஒரு அனானிப் பின்னூட்டம் கூட வரமாட்டேங்குது! :) சரி, எல்லாருக்கும் தனியா மின்னஞ்சல் தட்டி வுட்டு, நாமினேஷன் வாங்கப் பாக்குறார் தல!
Dear Blogger,
vaNakkam from baba.com! There was a bug in the pinoota petti. Badri has fixed it.
Please visit the same link you used and cast your பாவப் பின்னூட்டம்ஸ்!

ஹூஹூம்! அப்பவும் பாவத்தைப் பங்கு போட்டுக்க எவனும் வர மாட்டேங்குறான்!
என்ன கொடுமை சரவணன்! என் சுட்டியில் பங்கு கொண்ட பதிவர்கள், என் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்களா?
இவங்களுக்கு எல்லாம் போயி, E-Tamil இல் சுட்டி கொடுத்தேனே! அப்பவே கேஆரெஸ் சொன்னாரு! நான் தான் கேட்கலை!
"சுட்டி" சுட்டதடா, கை விட்டதடா!
வெட்டி பட்டதடா! பொட்டி தட்டுதடா!


சரி....இனி நமக்குப் பதிவுகளே வேணாம், கில்லியும் வேணாம்! சற்றுமுன் வேணாம்! தேன் கூடு வேணாம்! ட்விட்டர் ஒன்னே போதும்!-ன்னு ஒரு தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ் தவத்தில் உக்காந்துட்டாரு நம்ம பா-பா!
அப்போ-ன்னு பாத்து, அங்கிட்டு வராரு விவசாய முனிவர், இளமுறுக்கு.
இவருக்கு கலகம்-ன்னா முறுக்கு சாப்பிடறா மாதிரி! அதான் இளமுறுக்கு!

"பாஸ்டன் பாலனாரே, நீங்க பல திரட்டிகளில் கட்சி சேர்ந்து ரொம்பவே பாவம் பண்ணிட்டீங்க! நான் சொல்ற மந்திரத்தை ஒன் க்ரோர் & செவன்ட்டி செவன் டைம்ஸ் சொல்லுங்க!
அவ்ளோ வாட்டிச் சொல்ல முடியலைன்னா மடிப்பாக்கத்தில் இருக்கும் அதிர்ஷ்டக் கண்ணான் என்பவர் கிட்ட உதவி கேளுங்க! அவர் ஒன் க்ரோர் அலெக்சியா பேஜ் ராங்க் போட்டு அனுப்புவாரு!"


"ஆகா! அது என்ன மந்திரம் இளமுறுக்கு முனிவரே?"

"பா-பா என்பதே அந்த புதரக மந்திரம்! எங்கே சொல்லுங்க, பா-பா!"

"ஹைய்யோ...இது என் வாயிலேயே நுழையவே மாட்டேங்குதே!"

(பின்னால் இருந்து ஒரு குரல்...)
"சார்...வேணும்னா அதைப் பின்னாடி இருந்து சொல்லிப் பாருங்களேன்!
மரா-மரா ன்னு பின்-நவீனத்துவமாச் சொன்னாங்க! அதான் அன்னிக்கே பலிச்சுது! பின்-நவீனத்துவம் தாங்க எப்பமே பலிக்கும்!"

"அட நீங்க யாருங்க, புதுசா? இளமுறுக்குக்குப் போட்டியா?"

"என் பேர் சிறில்! சி-நெடில் இல்லை! சி-குறில்! சி-றில்!"

"ஆகா...ஜெயமோகன முனிவர் உங்களைப் பத்தி ரொம்பவே சொல்லி இருக்காரே! போட்டி வச்சி போட்டி வச்சியே, பின்னூட்டத்தை உங்களுக்கும், பழியை எல்லாம் அவருக்கும் கொடுக்கற ஆளு நீங்க தானா?"

"பாஸ்டன்! இப்போ நடப்பது சிகாகோ ஆட்சி! பாத்து பேசுங்க! எங்கே, பின்-நவீனமா அந்த மந்திரத்தைச் சொல்லுங்க பார்ப்போம்"

"பா-பா! பா-பா! பா-பா!"

"பாருங்க எவ்ளோ ஈசியா வந்துரிச்சி! இதையே சொல்லிக்கிட்டு இருங்க!"

(சிறில் நகர, இளமுறுக்கு: "நல்ல வேளை வந்தீங்க சி-றில்! நீங்க சொன்னபடியே கில்லியை இவர் கிட்ட சல்லீசா விலை பேசி முடிச்சிட்டேன்!")



காவியம் எழுத உட்காருகிறார் இரவு நேரப் பட்சியான பாபா!
மிட்-நைட் மசாலா திரையில் ஓடுது! அரை மணி நேரத்தில் மொத்த காவியமும் எழுதி முடிச்சிட்டார்!

அதை வாங்கிப் பார்த்த இளமுறுக்கு முனிவரும், ஜெயமோகன முனிவரும் ஜெர்க்கோ ஜெர்க் ஆகிறார்கள்! அப்படி என்ன தாங்க இருக்கு அந்த ப்ளாகாயண காவியத்தில்?

மொத்தம் 24000 செய்யுள்கள் அல்ல! மொத்தம் 24000 சுட்டிகள்!
காவியம் ஃபுல்லா ஒரே சுட்டிகள்! சுட்டிகள்! சுட்டிகள்!

சுட்டிச் சுரங்கம் பாபா-வின் ஆதி காவியம் வீணாப் போலாமா? அதைப் பைனரி மொழியில் இருந்து புரியிற மொழியில் மொழியாக்க வருகிறார்கள் இரு பெரும் கதைச் சக்ரவர்த்திகள்! - பெனாத்தல் சக்கரவர்த்தி மற்றும் பட்டர்ஃபிளை ஸ்ரீதர் சக்கரவர்த்தி! இவிங்கள்-ல யாரு கம்பர்? யாரு ஒட்டக் கூத்தர்? :))

இதோ....
பதிவுலக ப்ளாகாயணம்! A Film by Penathal Raja! Hurry Om!
* கதை-திரைக்கதை-வசனம்-டைரக்சன்: பின்னூட்டம் போடும் பதிவர்கள்
* இசை: தேன் கிண்ணம் * ஒளிப்பதிவு: PIT * ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்
* தயாரிப்பு: SPVR சுப்பையா


Cast & Credit :
இராவணன் = கானா பிரபா
விபீஷணன் = ஜி.ராகவன்
கும்ப.கர்ணன் = கோவி.கண்ணன்

இந்திரஜித் = ரிஷான் ஷெரீப்
சூர்ப்பனகை = ??? (அப்பாவிச் சிறுமி?)
மண்டோதரி = பரிசல்காரன்

* சீதை = "கனவுக் கன்னி" பாவனா
* சீதையின் தங்கைகள் = ஜெனிலீயா, சமீரா ரெட்டி, தமன்னா
* சீதை, தங்கைகளின் ஆருயிர்த் தோழி = மைஃபிரெண்ட்
இராமன் = கேஆரெஸ்
இலக்குவன் = சீவீஆர்
பரதன் = வெட்டிப்பயல்
சத்ருக்னன் = கப்பி பய


ராமனின் மாமா = தேவ்! ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)

* அனுமன் = ஆயில்யன்
* ஜாம்பவான் = மங்களூர் சிவா
* வாலி = சென்ஷி
* சுக்ரீவன் = குசும்பன்


குகன் = கோபிநாத்
ஜடாயு = நசரேயன்
சபரி = ஷைலஜா
லவ-குசா = ச்சின்னப் பையன்

தசரதன் = குமரன்
கோசலை = ஜீவா
கைகேயி = கைப்புள்ள
சுமித்திரை = ரத்னேஷ்


கூனி = ? ஆங்..மோகன்தாஸ் :)
* அகலிகை = நாட்டாமை Syam
* இந்திரன் = சந்தோஷ் பக்கங்கள்


விஸ்வாமித்ரர் = இலவசக் கொத்தனார்
வசிட்டர் = துளசி கோபால்



மலேசிய நாட்டின் சராவக் காடுகள்!

அங்கே கேஆரெஸ்-ராமபிரானும், சீவீஆர்-இலக்குவத் தம்பியும் ஒரு குடிசையில் இருக்குறாங்க! ஒரு முக்கியமான காரியமாக பயணம்! நாடோடியாக நடந்து நடந்து, அவர்கள் நகர்வது...பெண்களூர் மாநகரம் நோக்கி! குறிப்பாச் சொல்லணும்னா BTM Layout அரண்மனையை நோக்கி!

அங்கே ஜனக-அம்பி மகாராஜா! வயசான காலத்தில், தன் மகளான பாவனாவுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்படறாரு! ஒரு அழகான பெண்ணுடைய, வயசான அப்பாவுடைய, நியாயமான ஆசை தானே! அதான் சுயம்வரம் ஏற்பாடு ஆகி இருக்கு!

ப்ளாக்கர் என்னும் கூகுள்-தனுசு! அதை வளைக்கணும்! பின்னூட்ட நாணேற்றி வளைக்கணும்!
சக்தி வாய்ந்த கூகுள் வில்லை வளைக்கவும் முடியுமா? அதுவும் எத்தனை பின்னூட்டம்-ன்னு போடுறது? எப்படி இழுத்து வளைக்கறது?
ஆனானப்பட்ட அபி அப்பாவாலேயே முன்பு முடியாமப் போச்சே!

தாடி வைத்த விஸ்வாமித்ர கொத்தனார் இதில் கில்லி! ஆயிரம், பத்தாயிரம், பத்து லட்சம், பத்து கோடி-ன்னு பார்த்த ராமலிங்க ராஜனே, இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் கொத்தன ரிஷியைத் தான் கூப்புடுவாரு!
அதான் கொத்தனார் துணையுடன், ராம-இலக்குவ சகோதரர்கள் சுயம்வரத்துக்குக் கெளம்பிட்டாய்ங்க!

ஆனால் அவிங்களுக்கும் முன்னாடியே...பெண்களூர் வந்து விட்டான் ஒரு கட்டழகன்! நெட்டழகன்! அவன் தான் இலங்கை வேந்தன் இராவணப் பிரபா....
அந்தப்புர வீதி வழியாக....பண்பலை வரிசையில் நடந்து வருகிறான் இலங்கேஸ்வரன்!

அங்கே....அந்த அந்தப்புரத்திலே...
ஆப்பிளைக் கடிக்கிறாள் ஒரு ஆப்பிள்..அவள் தான் சீதா (எ) மிஸ். பாவனா
அவள் கூடவே
* சீதையின் தங்கைகள் = மிஸ். ஜெனிலீயா, மிஸ். சமீரா ரெட்டி, மிஸ். தமன்னா!
* சீதையின் தோழி = பதிவர் மைஃபிரெண்ட் !

பாவனா என்னும் ஆப்பிள் கடித்த ஆப்பிள், அந்தப்புர உப்பரிகையில் இருந்து... வாய் தவறி....குடுகுடு என்று உருண்டோடி வருகிறது!
வழியில் வந்து கொண்டிருக்கும் இராவணப் பிரபாவின் மேல் ஆப்பிள் விழ....

ஆப்பிளின் ஆப்பிளை, அண்ணலும் நோக்கினான்....அவளும் நோக்கினாள்!

ராவணா வித் பாவனா?...அடுத்த பகுதிகள் வ.வா.சங்கத்தில் தொடரும்...

149 comments:

  1. awwww..let me escape to malaysia

    ReplyDelete
  2. sema damage aagum pola irruku.inimel intha blog pakkam 2 years ku naan varala...

    ReplyDelete
  3. //ராவணா வித் பாவனா?...அடுத்த பகுதிகள் வ.வா.சங்கத்தில் தொடரும்..//

    satiyama illai.Neegathaana Raaman?appadina Bhavana vithu koduka mattinga.

    ReplyDelete
  4. //ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)//

    Raam perulaye raam but yean MR KRS Raamei rama-na podala?
    this is called as POLITICS!
    Real life Raman endral raam anna mattumthaan :D

    KRS anna is real life kannan ;)

    ReplyDelete
  5. பிரம்ம ரிஷின்னு நான் யார்யாரைச் சொல்லணும்?

    சீக்கிரம் என் ஸ்க்ரிப்டை அனுப்புங்க.

    ReplyDelete
  6. துளசி கோபால் said...
    பிரம்ம ரிஷின்னு நான் யார்யாரைச் சொல்லணும்?

    சீக்கிரம் என் ஸ்க்ரிப்டை அனுப்புங்க.

    12:49 AM, January
    >>>>>>>>>>>சபரிக்கு உபரியா வேற பணி உண்டா ராமா?:):):)

    ReplyDelete
  7. முதல்ல வில்லன், அப்புறம் ஹீரோ, எம்.எல்.ஏ,சீஎம்னு படிப்படியாவே போயிடுறேன் ;)

    avvvv

    ReplyDelete
  8. அங்கே ஜனக-அம்பி மகாராஜா, வயசான காலத்தில், தன் மகளான பாவனாவுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்படறாரு! ஒரு அழகான பெண்ணின் அப்பாவுடைய நியாயமான ஆசை தானே இது! அதான் சுயம்வரம் ஏற்பாடு பண்ணி இருக்காரு!
    <<<<<<<<<<<<<<<< ் கேஆரெஸ் ராமாவாம் , பாவனா சீதாவாம்! ரிஷான் சீக்கிரம் வாங்கப்பா இந்த அநியாயத்தைக்கேளுங்க!”:):):)

    ReplyDelete
  9. அப்பவே கேஆரெஸ் சொன்னாரு! நான் தான் கேட்கலை!
    சுட்டி சுட்டதடா, கை விட்டதடா!
    வெட்டி பட்டதடா! பொட்டி தட்டுதடா
    >>>>>>>>>>>:):):)

    ReplyDelete
  10. இராம பிரபுவே..என்னோட கேரக்டர என்னாலயே புரிஞ்சுக்க முடியலையே..எனக்கு ஜோடி யாருங்க..? சமீரா ரெட்டி பாவனாவுக்குத் தங்கச்சியா? என்ன கொடுமை ராமா இது? அவங்களுக்கு 32 ஆகுது..பாவனாவுக்கு 24 தான்..பேசாம சீதாவா சமீராவ வச்சுட்டு பாவனாவ எனக்கு ஜோடியாக்கிடுங்க ராமா. :)

    ReplyDelete
  11. காவியம் படைக்கப் போகும் காவி(ய)த் தலைவரே.. கலக்குங்கள்..

    ReplyDelete
  12. எனக்கு ஸ்கிரிப்ட் உடனே அனுப்பிவைங்க..நீள நீளமான வசனங்கள் ஓகே..டப்பிங் ஆர்டிஸ்ட் பார்த்துப்பாங்கள்ல ? அப்புறம் என்னோட costumesல ஒரிஜினல் வைரம், முத்து, பவளம் எல்லாம் பதிச்சிடுங்க.. குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கு மினரல் வாட்டர் ரெடி பண்ணிடுங்க..அப்புறம் ஸ்பாட்ல ரெஸ்ட் எடுக்க ஒரு குளு குளு கேரவன் ஏற்பாடு பண்ணிடுங்க..ம்ம்..
    இன்னும் சில கண்டிஷன்ஸ் இருக்கு..அத என்னோட அசிஸ்டென்ட் த்ரிஷா சொல்வாங்க..அப்புறமா :)

    ReplyDelete
  13. எம்.ரிஷான் ஷெரீப் said...
    எனக்கு ஸ்கிரிப்ட் உடனே அனுப்பிவைங்க..நீள நீளமான வசனங்கள் ஓகே..டப்பிங் ஆர்டிஸ்ட் பார்த்துப்பாங்கள்ல ? அப்புறம் என்னோட costumesல ஒரிஜினல் வைரம், முத்து, பவளம் எல்லாம் பதிச்சிடுங்க.. குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கு மினரல் வாட்டர் ரெடி பண்ணிடுங்க..அப்புறம் ஸ்பாட்ல ரெஸ்ட் எடுக்க ஒரு குளு குளு கேரவன் ஏற்பாடு பண்ணிடுங்க..ம்ம்..
    இன்னும் சில கண்டிஷன்ஸ் இருக்கு..அத என்னோட அசிஸ்டென்ட் த்ரிஷா சொல்வாங்க..அப்புறமா :)

    1:31 AM, January 28, 2009
    >>>>>>>>>>>>>>ரிஷு
    குழந்தையா லட்சணமா ஓரமா இரும்மா... பாவ்னா த்ரிஷான்னு எதுக்கு பேராசை?:):)

    ReplyDelete
  14. Raghav said...
    காவியம் படைக்கப் போகும் காவி(ய)த் தலைவரே.. கலக்குங்கள்..

    1:30 AM
    >>>>>>>>>>>>>>

    காவி(ய)த் தலைவரா ! ராகவ்!!!! ரசிச்சேன்!!! எப்டி ராகவ் இப்படி?:)

    ReplyDelete
  15. //ஆப்பிள் கடிக்கும் ஒரு ஆப்பிள்....அவள் தான் சீதா (எ) மிஸ். பாவனா //

    அற்புதம் அற்புதம்.. இந்த ஒரு வரிக்கே இப்பதிவிற்கு பரிசு கொடுக்கலாம்..

    அன்புச் செல்வி அருமை பாவனா வாழ்க வாழ்க..

    ReplyDelete
  16. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    எனக்கு ஸ்கிரிப்ட் உடனே அனுப்பிவைங்க..//

    ஜாவா ஸ்கிரிப்ட்டா, விபி ஸ்கிரிப்ட்டா? :)

    //என்னோட costumesல ஒரிஜினல் வைரம், முத்து, பவளம் எல்லாம் பதிச்சிடுங்க..//
    உன்னையே பதிக்கத் தான் போறாங்க! இருடீ இந்திரஜித்து! :)

    //குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கு மினரல் வாட்டர் ரெடி பண்ணிடுங்க..//
    கண்டிப்பா! கூவம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிக்கும் மினரல் வாட்டர் பாட்டில்கள் தொட்டி தொட்டியாக உங்களுக்கு!

    //கேரவன் ஏற்பாடு பண்ணிடுங்க..ம்ம்..//
    ஒட்டகம் தானே! செஞ்சீருவோம்! :)

    //அத என்னோட அசிஸ்டென்ட் த்ரிஷா சொல்வாங்க..அப்புறமா :)//

    த்ரிஷா-வா? அந்த ஆன்ட்டி இப்போ எங்கே இருக்காங்க ரிஷான் அங்கிள்?

    ReplyDelete
  17. :-))))))))))) ஆனாலும் ஷைலுவை கிழவி ஆக்கிய பாவம் உம்மை சும்மா விடாது. அம்பி ஜனக மகாராஜனா ? சுப்பர் :-)

    ReplyDelete
  18. //Raghav said...
    காவியம் படைக்கப் போகும் காவி(ய)த் தலைவரே.. கலக்குங்கள்..//

    சரிங்க பாவி(ய)த் தலைவா! :))

    பார்க்கும் பறவை எல்லாம் - எந்தன்
    பாவனா தெரியுதடா நந்த-லாலா! :)

    ReplyDelete
  19. ramachandranusha(உஷா) said...
    :-))))))))))) ஆனாலும் ஷைலுவை கிழவி ஆக்கிய பாவம் உம்மை சும்மா விடாது. )

    1:37 AM, January 28, 2009
    >>>>>கேளுங்க உஷா நல்லா கேளுங்க......ஒரு ராகவ் ஒரு ரிஷான் இதைக்கேட்டாங்களா இனம் தான் இனமறியும்:):)

    ReplyDelete
  20. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Raghav said...
    காவியம் படைக்கப் போகும் காவி(ய)த் தலைவரே.. கலக்குங்கள்..//

    சரிங்க பாவி(ய)த் தலைவா! :))

    பார்க்கும் பறவை எல்லாம் - எந்தன்
    பாவனா தெரியுதடா நந்த-லாலா! :)

    1:39 AM, January 28, 2009

    >>>>>>>>>>>>>>>>

    ஓஒ :) அப்படியா புதியபாரதி கேஆர் எஸ்ஸூ?:)

    ReplyDelete
  21. //ஆனாலும் ஷைலுவை கிழவி ஆக்கிய பாவம் உம்மை சும்மா விடாது. //

    ஐயோ..நிஜமாவா? நம்ம ஷை அக்காவைக் கிழவி ஆக்கிட்டாங்களா ?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அவங்களுக்கு ஹீரோயின் வேஷத்தைக் கொடுத்தாக் கூடத் தப்பில்ல.
    ஆனாலும் நம்ம ஷை அக்காவுக்கு மேக்கப் போடும் வாய்ப்பை அளிக்காத கேயாரெஸ் அங்கிளுக்கு எனது வன்மையான கண்டிப்பைத் தெரிவித்துக் கொல்கிறேன்..

    ReplyDelete
  22. //ramachandranusha(உஷா) said...
    :-))))))))))) ஆனாலும் ஷைலுவை கிழவி ஆக்கிய பாவம் உம்மை சும்மா விடாது. )//

    வாட்? கிழவியா?
    எங்க ஷைல்ஸ் அக்காவைத் தப்பாச் சொன்னீங்க டென்ஜன் ஆயிருவேன்!

    இது கீமாயாணம்! இதில் சபரி ஒரு இளம் Bartender! ராமனுக்கு wine ஊற்றிக் கொடுப்பாங்க! Gotcha? :)

    ReplyDelete
  23. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஆனாலும் நம்ம ஷை அக்காவுக்கு மேக்கப் போடும் வாய்ப்பை அளிக்காத கேயாரெஸ் அங்கிளுக்கு எனது வன்மையான கண்டிப்பைத் தெரிவித்துக் கொல்கிறேன்..//

    எலே இந்திர சித்து! உன் பல்லைப் பாத்துக் குத்து!
    உன்னைப் போர்க்களத்தில் எங்கள் மங்களூர் மாணிக்கம் பாத்துக்குவான்! வெயிட் மாடி! :)

    வாட்...அக்காவுக்கு மேக்கப்பா? என்ன ஆணவம் ரிஷான் ஒனக்கு! அக்கா மேக்கப் போடவே வேணாம்! அப்படியான இளம் பார்-டென்டர் தெரிஞ்சிக்கோங்க!
    மொதல்ல உங்க மீசையை நீங்க ஒழுங்கா ட்ரிம் பண்ணுங்க!

    ReplyDelete
  24. // அனுமன் = ஆயில்யன்
    * ஜாம்பவான் = மங்களூர் சிவா
    * வாலி = சென்ஷி
    * சுக்ரீவன் = குசும்பன்

    குகன் = கோபிநாத்//

    intha characters ellame poruthamana characters than, athu eppadi porukki eduthinga? theriyalai, maththathu ellam avvalavu poruthama theriyalai! sorry! athilum Ambi, Janaka Maharaja???? haa haa haa haa haa haa!

    ReplyDelete
  25. //வாட்...அக்காவுக்கு மேக்கப்பா? என்ன ஆணவம் ரிஷான் ஒனக்கு! அக்கா மேக்கப் போடவே வேணாம்! அப்படியான இளம் பார்-டென்டர் தெரிஞ்சிக்கோங்க!//

    ஒரு அழகான, குடும்பக் குத்துவிளக்கை பார்-டென்டர் ஆக்கியது குறித்து எனது கண்டனங்களை இங்கு பதிகிறேன்.

    //மொதல்ல உங்க மீசையை நீங்க ஒழுங்கா ட்ரிம் பண்ணுங்க!//

    நானா மாட்டேங்குறேன் ?அசின், தமன்னா, பூஜாவை மேக்கப் ஆர்டிஸ்டா அனுப்பிவையுங்க டைரக்டர் அங்கிள் :)

    ReplyDelete
  26. //>>>>>>>>>>>>>>ரிஷு
    குழந்தையா லட்சணமா ஓரமா இரும்மா... பாவ்னா த்ரிஷான்னு எதுக்கு பேராசை?:):)//

    யூ டூ ஷை அக்கா..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  27. //த்ரிஷா-வா? அந்த ஆன்ட்டி இப்போ எங்கே இருக்காங்க ரிஷான் அங்கிள்?//

    ஆன்ட்டியா? அங்கிளா? ஐயகோ..என்ன கொடுமை சரவணா இது ? :(

    அவுக 'அபியும் நானும்'க்கு ஆஸ்கார் விருது வாங்கப் போயிருக்காக.. :)

    ReplyDelete
  28. // எம்.ரிஷான் ஷெரீப் said...
    அவுக 'அபியும் நானும்'க்கு ஆஸ்கார் விருது வாங்கப் போயிருக்காக.. :)//

    அபியும் நானும் தானே?
    நீங்க ஏதோ த்ரிஷாவும் நானும் ரேஞ்சுக்கு அளப்பற விடுறீங்க? :)

    ReplyDelete
  29. இதுக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை!!

    ரீச்சர், என்னை பிரம்ம ரிஷின்னு சீக்கிரமா சொல்லிடுங்க. அட்லீஸ்ட் ஒரு கதையாவது முடியும். நன்னி!

    ReplyDelete
  30. //கைகேயி = கைப்புள்ள//

    :)))))

    //அந்தப்புர உப்பரிகையில் இருந்து வாய் தவறி....குடுகுடு என்று உருண்டோடி வருகிறது!//

    வாய் தவறியா...

    ஏன் அந்த ஆப்பிள் ஆப்பிளை கையால் எடுத்து வாய்யால் கடிக்க மாட்டாங்களா? ;)

    ReplyDelete
  31. எனக்கு டபுள் ஆக்டா???? சூப்பர்......

    கண்டிப்பா 'கொலம்பஸ்... கொலம்பஸ்'' மாதிரி ஒரு பாட்டு சீன் வேணும் எனக்கு.... :-))))

    ReplyDelete
  32. // υnĸnown вlogger™ said...
    //ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)//
    //

    அவருதான் 'தெய்வ மச்சானா'???????? ஆஆஆஆ

    ReplyDelete
  33. அவ்வ்வ்வ்வ், நான் ஜனக மஹாராஜாவா? பாவனா, இல்லியானாவுக்கும் அப்பாவா? துக்கம் தொண்டைய அடைக்குது. :((

    சரி ஆனது ஆகி போச்சு, ஜனக மஹாராஜாவின் மகாராணியா நயன் தாராவை புக் செய்யவும். இல்லனா பாவனாவ ரிஷானுக்கே கட்டி குடுத்த்ருவேன். எப்படி வசதி..? :))

    ஏம்பா, இந்த ஜனகருக்கு செட்டப்ஸ் எல்லாம் கிடையாதா? எதுக்கும் புராணத்தை கொஞ்சம் புரட்டி பாக்கறேன். :)))

    ReplyDelete
  34. //பாவனாவ ரிஷானுக்கே கட்டி குடுத்த்ருவேன் //

    ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்க அம்பி மாமா.. :)

    ReplyDelete
  35. // எம்.ரிஷான் ஷெரீப் said...
    //பாவனாவ ரிஷானுக்கே கட்டி குடுத்த்ருவேன் //

    ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்க அம்பி மாமா.. :)
    //

    எப்படியும் எனக்கில்லேன்னு ஆயிப்போச்சு!!! யாருக்கு போனால் எனக்கென்ன!!!!!!!!!!

    :-(((((((((((((

    ReplyDelete
  36. அண்ணா கேஆரெஸ் அண்ணா...

    நான் வாலியா.. இதுக்கு கீதாம்மா வேற ஆமோதிப்பா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    அப்பவே நினைச்சேன். வெறுமனே போட்ட ரிப்பீட்டேக்கும் எதிர்வினை பதிவுக்கும் இப்படி ஒரு பதவியா..

    இந்த லட்சணத்துல நான் மீராயணம்னு ஒரு பதிவு எழுதி வச்சிருக்கேன். இப்ப நான் அதை எப்படி பப்ளிஷ் செய்ய
    :-(

    ReplyDelete
  37. ஏண்ணா. வாலிக்கு ஜோடியா தாரை தாரைன்னு ஒருத்தவங்க வருவாங்களே. அதுக்கு மீரா ஜாஸ்மின் சரியா இருப்பாங்களே. கொஞ்சம் கன்சிடர் பண்றது.. :-))

    மத்தபடி வாலி கதை ஸ்கிரிப்ட் பின்னூட்டத்துல அனுப்பறேன்

    ReplyDelete
  38. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    //பாவனாவ ரிஷானுக்கே கட்டி குடுத்த்ருவேன் //

    ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்க அம்பி மாமா.. :)//

    அலோ...
    அம்பி மாமா போடும் பொடியைக் கவனிக்கலையா?
    ..\\ஜனக மஹாராஜாவின் மகாராணியா நயன் தாராவை புக் செய்யவும்........இல்லனா பாவனாவ ரிஷானுக்கே கட்டி குடுத்த்ருவேன்\\

    இனி நாமக்கல் சிபியே தடுத்தாலும், நயன்ஸ் ஆன்ட்டி அம்பி மாமாவுக்கு தான்டே! :)

    ReplyDelete
  39. //இனி நாமக்கல் சிபியே தடுத்தாலும், நயன்ஸ் ஆன்ட்டி அம்பி மாமாவுக்கு தான்டே! :)//

    ரிஷானு...இப்ப என்ன பண்ணுவீங்க? அம்பி மாமாவுக்கு குடுக்க வேண்டியதைக் குடுத்து...சரி கட்டியாச்சி! உனக்குப் பாவனா நஹி! :)

    ReplyDelete
  40. //சென்ஷி said...
    அண்ணா கேஆரெஸ் அண்ணா...
    நான் வாலியா..//

    அட, வாலி படம், நம்ம அஜீத் இல்லீங்களா? அது போல நீங்கண்ணே! காதல் இளவரசன்!

    //இந்த லட்சணத்துல நான் மீராயணம்னு ஒரு பதிவு எழுதி வச்சிருக்கேன். இப்ப நான் அதை எப்படி பப்ளிஷ் செய்ய//

    ஸ்கிரிப்ட்டை அனுப்புங்கோ! சோதியில சேத்துருவோம்!
    வாலி = சென்ஷி
    தாரா = மீரா

    சுக்ரீவன் ஃபிகரா யாரை அப்பாயிண்ட்டு-ன்னும் நீங்களே சொல்லிருங்க வாலி! :)

    ReplyDelete
  41. //ச்சின்னப் பையன் said...
    எப்படியும் எனக்கில்லேன்னு ஆயிப்போச்சு!!! யாருக்கு போனால் எனக்கென்ன!!!!!!!!!!
    :-(((((((((((((//

    ஆகா...இம்புட்டு பெரிய அழுவான் போடறீங்களே!
    இப்படி எல்லாம் மனசு தளர விடக் கூடாது ச்ச்சின்னப் பையன்!
    பாவனா எப்படியும் ஒங்கள் மடியில் வைச்சி கொஞ்சி...முத்தம் கொடுப்பாங்க! நோட் தட் பாயின்ட்! :)

    ReplyDelete
  42. //ரிஷானு...இப்ப என்ன பண்ணுவீங்க? அம்பி மாமாவுக்கு குடுக்க வேண்டியதைக் குடுத்து...சரி கட்டியாச்சி! உனக்குப் பாவனா நஹி! :)//

    கிர்ர்ர்ர்ர்ர்..அதுக்குள்ளேயா? அப்போ பாவனா உங்களுக்கா ராமா..பாவ(ம்)னா .:)

    சரி ..போனாப் போகட்டும்..அம்பி மாமாவுக்கும் நயன் ஆன்ட்டிக்கும் இலியானா, தமன்னான்னு இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காக..

    ரெண்டையும் எனக்கே கட்டி வச்சிடுங்க அம்பி மாமா.. :)

    ReplyDelete
  43. என் அன்புத்தம்பி குசும்ப சுக்ரீவனுக்கு என் நெஞ்சுல இடம் கொடுத்து வச்சிருக்கறதால அவருக்கு தனியா ஜோடி தேட போறதில்லை

    ஆனாலும் அவருக்கும் ஒரு ஜோடி வேணும்னு அழுது அடம்பிடிச்சார்ன்னா இங்க துபாய்ல குசும்பன் மூலமா எனக்கு போன்ல அறிமுகம் ஆன ஒரு பிலிப்பைனி பொண்ணு இருக்குது. அது ஓக்கேவா...

    ஆனா அத்துக்கிட்ட போய் அய்யனாருன்னு மாத்திரம் ஜொல்லிடக்கூடாது. இப்பவே ஜொல்லிட்டேன் ;-)

    ReplyDelete
  44. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ச்சின்னப் பையன் said...
    எப்படியும் எனக்கில்லேன்னு ஆயிப்போச்சு!!! யாருக்கு போனால் எனக்கென்ன!!!!!!!!!!
    :-(((((((((((((//

    ஆகா...இம்புட்டு பெரிய அழுவான் போடறீங்களே!
    இப்படி எல்லாம் மனசு தளர விடக் கூடாது ச்ச்சின்னப் பையன்!
    பாவனா எப்படியும் ஒங்கள் மடியில் வைச்சி கொஞ்சி...முத்தம் கொடுப்பாங்க! நோட் தட் பாயின்ட்! :)
    //

    ஆஹா.. இதுல இப்படியெல்லாம்கூட உள்குத்து இருக்குதா.. எனக்கு தெரியாம போச்சே ;-)))

    ReplyDelete
  45. //கானா பிரபா said...
    முதல்ல வில்லன்,//

    யாரு சொன்னா!
    இந்தக் கதைப்படி இராவணன் தான் ஹீரோ!
    நீங்க தான் காபி அண்ணாச்சி! நீங்க தான் காபிய நாயகன்! ஐ மீன் காவிய நாயகன்! :)

    ReplyDelete
  46. //υnĸnown вlogger™ said...
    awwww..let me escape to malaysia//

    மூக்கறுப்பே அங்க தான் தங்கச்சி! பதிவை நல்லாப் பாரு!
    //மலேசிய நாட்டின் சராவக் காடுகள்!//

    :))

    ReplyDelete
  47. //υnĸnown вlogger™ said...
    sema damage aagum pola irruku.inimel intha blog pakkam 2 years ku naan varala...//

    நீ வரலைன்னாலும்...வெறி பிடித்த, உன் பத்தாயிரம் ரசிகர்கள் கண்டிப்பா வருவாங்க! சர் தானே மாப்பி கோப்பி? :)

    ReplyDelete
  48. //υnĸnown вlogger™ said...
    satiyama illai.Neegathaana Raaman?appadina Bhavana vithu koduka mattinga//

    சேச்சே
    நான் ஏகப்பட்ட பத்தினி விரதன்!
    ரிஷான் தான் ஏக-பத்தினி விரதன்!
    :)

    ReplyDelete
  49. மீ த 50 ;-)

    (எங்க போனாலும் இந்த புத்தி போக மாட்டேங்குது)

    ReplyDelete
  50. //υnĸnown вlogger™ said...
    Real life Raman endral raam anna mattumthaan :D//

    ஓ...ராம் அவ்ளோ ஒரு பழமா? :)

    //KRS anna is real life kannan ;)//

    டாங்க் யூ! டாங்க் யூ! :)

    ReplyDelete
  51. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கானா பிரபா said...
    முதல்ல வில்லன்,//

    யாரு சொன்னா!
    இந்தக் கதைப்படி இராவணன் தான் ஹீரோ!
    நீங்க தான் காபி அண்ணாச்சி! நீங்க தான் காபிய நாயகன்! ஐ மீன் காவிய நாயகன்! :)
    //

    அதானே.. உடனே இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டை போட்டு விடுங்க.. :-)

    ReplyDelete
  52. அங்கிள்,

    உங்களுக்கு நாலு பேரு சோடியா...??? இராமன்'னு பேரு வைச்சிட்டு நாலா...??? என்னான்னு சொல்லி சாபம் விடறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  53. //துளசி கோபால் said...
    பிரம்ம ரிஷின்னு நான் யார்யாரைச் சொல்லணும்?//
    கண்டிப்பா கொத்தன் விஸ்வா-வைச் சொல்ல மாட்டீங்க தானே டீச்சர்? :))

    //சீக்கிரம் என் ஸ்க்ரிப்டை அனுப்புங்க//
    நீங்க சொல்றது தான் ஸ்க்ரிப்ட் டீச்சர்! உங்களுக்கு ஃபுல் ஃப்ரீடம் & கிரீடம்!

    ReplyDelete
  54. //ஜெகதீசன் said...
    :))//

    ஜெகா...கோவி.கும்ப.கர்ணனை எங்கிருந்தாலும் எட்டிப் பாக்கச் சொல்லவும்! :)

    ReplyDelete
  55. //ஷைலஜா said...
    சபரிக்கு உபரியா வேற பணி உண்டா ராமா?:):):)//

    Bartender!
    Bartender!
    Bartender!
    for raam aur lakshman
    :)

    ReplyDelete
  56. // υnĸnown вlogger™ said...
    //ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)//

    Raam perulaye raam but yean MR KRS Raamei rama-na podala?
    this is called as POLITICS!
    Real life Raman endral raam anna mattumthaan :D
    //

    நம்ம தங்காச்சி வாங்கின காசு'க்கு மேலே கூவிட்டு போயிருக்காளே... :))

    ReplyDelete
  57. //இராம்/Raam said...
    அங்கிள்,

    உங்களுக்கு நாலு பேரு சோடியா...??? இராமன்'னு பேரு வைச்சிட்டு நாலா...??? என்னான்னு சொல்லி சாபம் விடறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...
    //

    அதுங்ண்னா..

    ஜானகி ராமன், சீதாராமன், கோசலராமன் இப்படி மூணு கேரக்டரை கிரியேட் பண்ணி விட்டுடுவோம். டூயட்டுக்கு பஞ்சம் இருக்காதுல்ல :-))

    ReplyDelete
  58. //இராம்/Raam said...
    // υnĸnown вlogger™ said...
    //ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)//

    Raam perulaye raam but yean MR KRS Raamei rama-na podala?
    this is called as POLITICS!
    Real life Raman endral raam anna mattumthaan :D
    //

    நம்ம தங்காச்சி வாங்கின காசு'க்கு மேலே கூவிட்டு போயிருக்காளே... :))
    //

    ரிப்பீட்டே :-))

    (விட முடியாத பழக்கத்துல இதுவும் ஒண்ணு)

    ReplyDelete
  59. /கானா பிரபா said...
    முதல்ல வில்லன், அப்புறம் ஹீரோ, எம்.எல்.ஏ,சீஎம்னு படிப்படியாவே போயிடுறேன் ;)//

    இந்த ஆளை பாருங்க... கலவர பூமியிலே வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரு... :) கானா'ண்ணே KRS அங்கிளை மட்டும் நம்பவே நம்பாதீங்க... கடைசி வரை உங்களை வில்லனாவே ஆக்கி வைச்சிருவாரு.... :)

    ReplyDelete
  60. //சென்ஷி said...
    அதுங்ண்னா..
    ஜானகி ராமன், சீதாராமன், கோசலராமன் இப்படி மூணு கேரக்டரை கிரியேட் பண்ணி விட்டுடுவோம். டூயட்டுக்கு பஞ்சம் இருக்காதுல்ல :-))//

    காலைக் காட்டுங்கண்ணே!
    நீங்க சென்ஷி இல்ல! தெய்வம்! :)

    நான் இந்த வாலியைக் கொல்ல மாட்டேன்! கொல்ல மாட்டேன்! வேணும்னா சுக்ரீயைக் கொல்லுறேன்! :)

    ReplyDelete
  61. //ஷைலஜா said...
    கேஆரெஸ் ராமாவாம் , பாவனா சீதாவாம்! ரிஷான் சீக்கிரம் வாங்கப்பா இந்த அநியாயத்தைக் கேளுங்க!”:):):)//

    பாருங்க...இப்போ ரிஷானே பாவனாவை எனக்குக் கொடுத்துட்டு, சீதா சிஸ்டர்ஸ் பக்கம் தாவிட்டான்! :)
    இவனை எல்லாம் போயி நம்பறீங்களே-க்கா! :)

    ReplyDelete
  62. //சென்ஷி said...
    அதானே.. உடனே இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டை போட்டு விடுங்க.. :-)//

    ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
    எனக்கு ஒரு கவலை இல்லை!
    நீ தான் என் பாவனா புள்ள!

    ஓக்கேவா சென்ஷிண்ணே? மீதியை நீங்க முடிங்க! அந்தாதி டைப் பாட்டு! :)

    ReplyDelete
  63. //அவ்வ்வ்வ்வ், நான் ஜனக மஹாராஜாவா? பாவனா, இல்லியானாவுக்கும் அப்பாவா? துக்கம் தொண்டைய அடைக்குது. :((

    //

    ஜனகராஜ் (அம்பி) அங்கிள்,

    அந்த வயசு கேரக்டருக்கு உங்களுக்கு சோடியா மனோராமா தான் சரியா வருவாங்க.... :))


    //சரி ஆனது ஆகி போச்சு, ஜனக மஹாராஜாவின் மகாராணியா நயன் தாராவை புக் செய்யவும். இல்லனா பாவனாவ ரிஷானுக்கே கட்டி குடுத்த்ருவேன். எப்படி வசதி..? :))//

    அப்போ சொம்பு கதி... :))

    //ஏம்பா, இந்த ஜனகருக்கு செட்டப்ஸ் எல்லாம் கிடையாதா? எதுக்கும் புராணத்தை கொஞ்சம் புரட்டி பாக்கறேன். :)))//

    ஹிம் அவருக்கு ஆயிரத்துக்கு மேலே இருந்தாலும் இருப்பாங்க... :) நிறைய‌ ரிட்ட‌ய‌ர்ட் ந‌டிகைஸ் இருக்காருங்க‌.... என்ஜாய் மாடி... :))

    ReplyDelete
  64. /ச்சின்னப் பையன் said...
    // υnĸnown вlogger™ said...
    //ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)//
    //

    அவருதான் 'தெய்வ மச்சானா'???????? ஆஆஆஆ
    //

    இச் சின்னப் பையன்,

    ஹிஹிஹிஹி

    ReplyDelete
  65. //இராம்/Raam said...
    ஜனகராஜ் (அம்பி) அங்கிள்,
    அந்த வயசு கேரக்டருக்கு உங்களுக்கு சோடியா மனோராமா தான் சரியா வருவாங்க.... :))//

    ஹா ஹா ஹா
    குபீர்-ன்னு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் ஆபீஸ்-ல!
    கலக்கிட்ட ராமேய்! கலக்கிட்ட! :)

    உன்னை ஸ்பெசலா கவனிக்கறேன்! டிவிலைட் பெல்லா கூட பாலே டான்ஸ் உனக்குத் தான்! :)

    ReplyDelete
  66. //ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
    எனக்கு ஒரு கவலை இல்லை!
    நீ தான் என் பாவனா புள்ள! //
    போடடிம்மா என் கழுத்துல மாலை

    நான்ன்ன் கேட்ட ஜோடிய கொடுக்கும்
    கேஆரெஸ் வாழ்க வாழ்கவென்பேன்

    ReplyDelete
  67. //ஷைலஜா said...
    "சுட்டி" சுட்டதடா, கை விட்டதடா!
    வெட்டி பட்டதடா! பொட்டி தட்டுதடா
    >>>>>>>>>>>:):):)//

    ஹா ஹா ஹா!
    பாபாவின் சுட்டி எல்லாம் சூடான சுட்டி! சுடும், சுடும், சுடும்! :)

    ReplyDelete
  68. //* அனுமன் = ஆயில்யன்
    * ஜாம்பவான் = மங்களூர் சிவா
    * வாலி = சென்ஷி
    * சுக்ரீவன் = குசும்பன்

    குகன் = கோபிநாத்
    //

    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))

    ReplyDelete
  69. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    இராம பிரபுவே..என்னோட கேரக்டர என்னாலயே புரிஞ்சுக்க முடியலையே..//

    கேரக்டரே இல்லாத கேரக்டர் - அசுர ரிஷானே! :)

    //சமீரா ரெட்டி பாவனாவுக்குத் தங்கச்சியா? என்ன கொடுமை ராமா இது? அவங்களுக்கு 32 ஆகுது..பாவனாவுக்கு 24 தான்..//

    வலையுலக தங்கச்சி இலக்கணப் படி இது சரி தான்! சந்தேகம் இருந்தா υnĸnown вlogger™ஐ கேளுங்க! :)

    ReplyDelete
  70. தல

    இப்போதைக்கு வருகை பின்னூட்டம் ;))

    நான் வந்துட்டேன் வந்துட்டேன் ;))

    ReplyDelete
  71. //சென்ஷி said...
    //* அனுமன் = ஆயில்யன்
    * ஜாம்பவான் = மங்களூர் சிவா
    * வாலி = சென்ஷி
    * சுக்ரீவன் = குசும்பன்

    குகன் = கோபிநாத்
    //

    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))
    //

    மாப்பிய தனியா விட மனசில்ல.. அதான்.. :)))

    ReplyDelete
  72. \\ கானா பிரபா said...
    முதல்ல வில்லன், அப்புறம் ஹீரோ, எம்.எல்.ஏ,சீஎம்னு படிப்படியாவே போயிடுறேன் ;)

    avvvv
    \\

    கானா தல நீங்க நல்லா வருவிங்க...;))

    ReplyDelete
  73. //ஹா ஹா ஹா
    குபீர்-ன்னு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் ஆபீஸ்-ல!
    கலக்கிட்ட ராமேய்! கலக்கிட்ட! :)

    //

    he he he :))

    //உன்னை ஸ்பெசலா கவனிக்கறேன்! டிவிலைட் பெல்லா கூட பாலே டான்ஸ் உனக்குத் தான்! :)
    //

    அங்கிள்,

    பெல்லா எனக்கு மட்டுந்தான்... எல்லாருக்கும் இல்ல... என்னோட நீயூ இயர் ரெசல்யூசன் என்னான்னு தெரியுமில்ல... :)

    ReplyDelete
  74. //சென்ஷி said...
    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))//

    பாசமா? வாய்-ல பந்தல் போட்டா போதாது! இது மாதவிப் பந்தல்! ஞாபகம் வச்சிக்குங்க! ஒன்லி ஆக்சன்!:)

    குகனுக்கு ஆரு ஜோடி? அதைச் சொல்லிட்டு அப்பாலிக்கா பாசம் காட்டுங்க! :)

    ReplyDelete
  75. /சென்ஷி said...
    //இராம்/Raam said...
    அங்கிள்,

    உங்களுக்கு நாலு பேரு சோடியா...??? இராமன்'னு பேரு வைச்சிட்டு நாலா...??? என்னான்னு சொல்லி சாபம் விடறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...
    //

    அதுங்ண்னா..

    ஜானகி ராமன், சீதாராமன், கோசலராமன் இப்படி மூணு கேரக்டரை கிரியேட் பண்ணி விட்டுடுவோம். டூயட்டுக்கு பஞ்சம் இருக்காதுல்ல :-))
    //

    சும்மா இருக்கிற ஆளுக்கு கரகம் ஏத்தி விடுறீயே மாப்பி... இந்த பேரை வைச்சிக்கிட்டு நம்ம KRS அங்கிள் எம்புட்டு நேரம் ஆடப்போறார்'ன்னு தான் தெரியல... :)

    ReplyDelete
  76. ////சென்ஷி said...
    //* அனுமன் = ஆயில்யன்
    * ஜாம்பவான் = மங்களூர் சிவா
    * வாலி = சென்ஷி
    * சுக்ரீவன் = குசும்பன்

    குகன் = கோபிநாத்
    //

    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))
    //

    மாப்பிய தனியா விட மனசில்ல.. அதான்.. :)))

    //

    வானார கூட்டமானோம்'னு சொல்லியிருக்கனுமோ... :)

    ReplyDelete
  77. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //சென்ஷி said...
    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))//

    பாசமா? வாய்-ல பந்தல் போட்டா போதாது! இது மாதவிப் பந்தல்! ஞாபகம் வச்சிக்குங்க! ஒன்லி ஆக்சன்!:)

    குகனுக்கு ஆரு ஜோடி? அதைச் சொல்லிட்டு அப்பாலிக்கா பாசம் காட்டுங்க! :)
    //

    சாரி தலைவா! எதுக்கேட்டாலும் கொடுக்கற மனசு மாப்பிக்கு ஜோடி கொடுக்க மறுக்குது..

    ங்கொய்யால அவனும் மீரா பின்னாலதான்யா சுத்துறான் ;-(

    ReplyDelete
  78. \\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //சென்ஷி said...
    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))//

    பாசமா? வாய்-ல பந்தல் போட்டா போதாது! இது மாதவிப் பந்தல்! ஞாபகம் வச்சிக்குங்க! ஒன்லி ஆக்சன்!:)

    குகனுக்கு ஆரு ஜோடி? அதைச் சொல்லிட்டு அப்பாலிக்கா பாசம் காட்டுங்க! :)

    12:08 PM, January
    \\

    எலேய் மாப்பி நல்லா பிகராக சொல்லுடா பீலிஸ் டா மாப்பி ;)))

    ReplyDelete
  79. // இராம்/Raam said...

    சும்மா இருக்கிற ஆளுக்கு கரகம் ஏத்தி விடுறீயே மாப்பி... இந்த பேரை வைச்சிக்கிட்டு நம்ம KRS அங்கிள் எம்புட்டு நேரம் ஆடப்போறார்'ன்னு தான் தெரியல... :)
    //

    இன்னா ராமூ.. நீயும் மேட்டர் தெரியாம மெர்சல் ஆவுற.. ஆக்சுவலி வாலிக்கு எதிராளியோட பாதி பலம் ஆட்டோமேட்டிக்கா அப்சர்வ் ஆகிடும். அப்படி இருக்கச்சொல்ல ஹீரோயின மாத்திரம் தனிய்யா விட்டுடுவோமா.. நாலுல ரெண்டு எனக்குத்தானே ;-)

    ReplyDelete
  80. \\ சென்ஷி said...
    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //சென்ஷி said...
    குகனொடு நாங்கள் ஐவரானோம் ;-))//

    பாசமா? வாய்-ல பந்தல் போட்டா போதாது! இது மாதவிப் பந்தல்! ஞாபகம் வச்சிக்குங்க! ஒன்லி ஆக்சன்!:)

    குகனுக்கு ஆரு ஜோடி? அதைச் சொல்லிட்டு அப்பாலிக்கா பாசம் காட்டுங்க! :)
    //

    சாரி தலைவா! எதுக்கேட்டாலும் கொடுக்கற மனசு மாப்பிக்கு ஜோடி கொடுக்க மறுக்குது..

    ங்கொய்யால அவனும் மீரா பின்னாலதான்யா சுத்துறான் ;-(
    \\

    அட கிரகம் பிடிச்ச மாப்பி நான் என்ன எப்பாவுமா கேட்டேன் இந்த காயணம்த்துக்கு மட்டும் கொடுடேன் ;))

    ReplyDelete
  81. //இராம்/Raam said...

    வானார கூட்டமானோம்'னு சொல்லியிருக்கனுமோ... :)
    //

    உன்னைய தனியா விட்டுட்டு எங்களை மாத்திரம் அப்படி வடை மொழி போட மனசு வரலையே.. நான் என்ன செய்ய.... :-))

    ReplyDelete
  82. //கோபிநாத் said...


    எலேய் மாப்பி நல்லா பிகராக சொல்லுடா பீலிஸ் டா மாப்பி ;)))
    //

    பரவை முனியம்மா உனக்கு ஓக்கேவா மச்சி.. அப்படி இல்லாங்காட்டி முதல் மரியாதை ராதா கூட வேசங்கட்ட வச்சுடலாம்.. :-)

    அவங்களும் நல்லா பரிசல் ஓட்டுவாங்க

    ReplyDelete
  83. //கோபிநாத் said...

    அட கிரகம் பிடிச்ச மாப்பி நான் என்ன எப்பாவுமா கேட்டேன் இந்த காயணம்த்துக்கு மட்டும் கொடுடேன் ;))
    //

    வாலிங்கற தூக்குப்பாத்திரத்த எனக்கு கொடுக்கும்போதே தெரியும் இந்த மாதிரி ஏதாச்சும் கலவரத்த உண்டு பண்ணுவீங்கன்னு... டேய் வேணாம்டா இது உனக்கே அடுக்காது :-)

    ReplyDelete
  84. \\ சென்ஷி said...
    //கோபிநாத் said...

    அட கிரகம் பிடிச்ச மாப்பி நான் என்ன எப்பாவுமா கேட்டேன் இந்த காயணம்த்துக்கு மட்டும் கொடுடேன் ;))
    //

    வாலிங்கற தூக்குப்பாத்திரத்த எனக்கு கொடுக்கும்போதே தெரியும் இந்த மாதிரி ஏதாச்சும் கலவரத்த உண்டு பண்ணுவீங்கன்னு... டேய் வேணாம்டா இது உனக்கே அடுக்காது :-)
    \\

    யப்பா நீ தான் வாலியா...அப்போ நீ காலியா!!!! ;))

    சந்தோஷம் மகிழ்ச்சி ;))

    ReplyDelete
  85. //சென்ஷி said...
    //இராம்/Raam said...

    வானார கூட்டமானோம்'னு சொல்லியிருக்கனுமோ... :)
    //

    உன்னைய தனியா விட்டுட்டு எங்களை மாத்திரம் அப்படி வடை மொழி போட மனசு வரலையே.. நான் என்ன செய்ய.... :-))
    //


    இந்த அங்கிள் என்னை பாவனா,இலியானா,சமிரா,ஜெனிலீயா'னு எல்லாருக்கும் அண்ணனா ஆக்கிட்டாரு... நீ வேணுமின்னாலும் சொல்லிக்கோ மேன்.... :(

    KRS அங்கிள் இதுக்கே தனி ரிவெஞ்ச் எடுக்கிறேன்...

    ReplyDelete
  86. மாப்பி ராம்..மாப்பி சென்ஷி...இன்னிக்கு டர்கெட் எம்புட்டு ;)))

    ReplyDelete
  87. //இராம்/Raam said...
    //சென்ஷி said...
    //இராம்/Raam said...

    வானார கூட்டமானோம்'னு சொல்லியிருக்கனுமோ... :)
    //

    உன்னைய தனியா விட்டுட்டு எங்களை மாத்திரம் அப்படி வடை மொழி போட மனசு வரலையே.. நான் என்ன செய்ய.... :-))
    //


    இந்த அங்கிள் என்னை பாவனா,இலியானா,சமிரா,ஜெனிலீயா'னு எல்லாருக்கும் அண்ணனா ஆக்கிட்டாரு... நீ வேணுமின்னாலும் சொல்லிக்கோ மேன்.... :(

    KRS அங்கிள் இதுக்கே தனி ரிவெஞ்ச் எடுக்கிறேன்...
    //

    கில் பில் மாதிரி இதுக்கும் பார்ட்1 பார்ட் 2 இருக்குதா ராம் மச்சான் :-)

    ReplyDelete
  88. \\ கீதா சாம்பசிவம் said...
    // அனுமன் = ஆயில்யன்
    * ஜாம்பவான் = மங்களூர் சிவா
    * வாலி = சென்ஷி
    * சுக்ரீவன் = குசும்பன்

    குகன் = கோபிநாத்//

    intha characters ellame poruthamana characters than, athu eppadi porukki eduthinga? theriyalai, maththathu ellam avvalavu poruthama theriyalai! sorry! athilum Ambi, Janaka Maharaja???? haa haa haa haa haa haa!
    \\

    தலைவி இதுல ஏதவாது உள்குத்து வெளிகுத்து இருக்கா!!?? ;)

    ReplyDelete
  89. //சென்ஷி said...
    வாலிக்கு எதிராளியோட பாதி பலம் ஆட்டோமேட்டிக்கா அப்சர்வ் ஆகிடும். அப்படி இருக்கச்சொல்ல ஹீரோயின மாத்திரம் தனிய்யா விட்டுடுவோமா.. நாலுல ரெண்டு எனக்குத்தானே ;-)//

    அடங் கொய்....
    ஒரு ஆன்மீகப் பதிவனை என்ன மாதிரி வார்த்தை எல்லாம் பேச வைக்கறாங்கப்பா! :)))

    ReplyDelete
  90. // கோபிநாத் said...
    \\ கீதா சாம்பசிவம் said...
    // அனுமன் = ஆயில்யன்
    * ஜாம்பவான் = மங்களூர் சிவா
    * வாலி = சென்ஷி
    * சுக்ரீவன் = குசும்பன்

    குகன் = கோபிநாத்//

    intha characters ellame poruthamana characters than, athu eppadi porukki eduthinga? theriyalai, maththathu ellam avvalavu poruthama theriyalai! sorry! athilum Ambi, Janaka Maharaja???? haa haa haa haa haa haa!
    \\

    தலைவி இதுல ஏதவாது உள்குத்து வெளிகுத்து இருக்கா!!?? ;)
    //

    என்ன கேள்வி மச்சி இது.. அவங்கதான் டைரக்டா முகறையிலயே குத்திட்டு போயிட்டாங்க.. நீ வேற வெந்த சேமியாவுல வெங்காயத்த போடுறியே :-(

    ReplyDelete
  91. //சென்ஷி said...
    வாலிக்கு எதிராளியோட பாதி பலம் ஆட்டோமேட்டிக்கா அப்சர்வ் ஆகிடும். அப்படி இருக்கச்சொல்ல ஹீரோயின மாத்திரம் தனிய்யா விட்டுடுவோமா.. நாலுல ரெண்டு எனக்குத்தானே ;-)//

    பலம் தான் ட்ரான்ஸ்பர் ஆவும்!
    பாவனா எல்லாம் ட்ரான்ஸ்பர் ஆவாது! :)

    நான் சுக்ரீவனைத் தானே மறைஞ்சிருந்து கொல்லப் போறேன்!
    ராமா & வாலி = பிரெண்ட்ஸ்! :)

    ReplyDelete
  92. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //சென்ஷி said...
    வாலிக்கு எதிராளியோட பாதி பலம் ஆட்டோமேட்டிக்கா அப்சர்வ் ஆகிடும். அப்படி இருக்கச்சொல்ல ஹீரோயின மாத்திரம் தனிய்யா விட்டுடுவோமா.. நாலுல ரெண்டு எனக்குத்தானே ;-)//

    பலம் தான் ட்ரான்ஸ்பர் ஆவும்!
    பாவனா எல்லாம் ட்ரான்ஸ்பர் ஆவாது! :)

    //

    எது எப்படியோ.. மீராவ யாரும் கேக்காம இருந்தா போதும் ;-)

    வாலியின் மீரா வாலியிடமே

    ReplyDelete
  93. //ஷைலஜா said...
    ரிஷு
    குழந்தையா லட்சணமா ஓரமா இரும்மா... பாவ்னா த்ரிஷான்னு எதுக்கு பேராசை?:):)//

    ஹா ஹா ஹா!
    ஷைல்ஸ் அக்கா கலக்கிங்க்ஸ்ஸ்!

    யாரங்கே, இந்தப் பார்டென்டர் கைக்கு, வைர வளையல் போடுங்கள்!

    ReplyDelete
  94. \\சென்ஷி said...
    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //சென்ஷி said...
    வாலிக்கு எதிராளியோட பாதி பலம் ஆட்டோமேட்டிக்கா அப்சர்வ் ஆகிடும். அப்படி இருக்கச்சொல்ல ஹீரோயின மாத்திரம் தனிய்யா விட்டுடுவோமா.. நாலுல ரெண்டு எனக்குத்தானே ;-)//

    பலம் தான் ட்ரான்ஸ்பர் ஆவும்!
    பாவனா எல்லாம் ட்ரான்ஸ்பர் ஆவாது! :)

    //

    எது எப்படியோ.. மீராவ யாரும் கேக்காம இருந்தா போதும் ;-)

    வாலியின் மீரா வாலியிடமே
    \\

    மாப்பி இப்படி பேசிக்கிட்டே இருந்த...மகனே நானே உன்னை கொன்னுடுவேன்...;))

    மீரா உனக்கு இல்ல எனக்கு தான் ;)

    ReplyDelete
  95. காவியத் தலைவன் கே ஆர் எஸ்.. கலக்குங்க.. வாழ்த்துக்கள்

    அன்புடன், கி.பாலு

    ReplyDelete
  96. //கில் பில் மாதிரி இதுக்கும் பார்ட்1 பார்ட் 2 இருக்குதா ராம் மச்சான் :-)//

    Yessu...

    ReplyDelete
  97. /நீ வேற வெந்த சேமியாவுல வெங்காயத்த போடுறியே :-(
    //

    attempting rhyming dialogue... huh??

    ReplyDelete
  98. இன்னும் பதிவை படிக்கல...;))

    ReplyDelete
  99. //கோபிநாத் said...
    இன்னும் பதிவை படிக்கல...;))//

    ஹிஹி!
    நீ தான்டா பச்சைத் தமிழன்! ச்சே பச்சைப் பதிவன்!
    பச்சைப் பதிவன் மாப்பி கோப்பி வாழ்க வாழ்க! :)

    பதிவை எல்லாம் நாம என்னிக்கி படிச்சிருக்கோம் தல? அதுவும்
    ஆன்மீகப் பதிவை? :))

    ReplyDelete
  100. \\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோபிநாத் said...
    இன்னும் பதிவை படிக்கல...;))//

    ஹிஹி!
    நீ தான்டா பச்சைத் தமிழன்! ச்சே பச்சைப் பதிவன்!
    பச்சைப் பதிவன் மாப்பி கோப்பி வாழ்க வாழ்க! :)

    பதிவை எல்லாம் நாம என்னிக்கி படிச்சிருக்கோம் தல? அதுவும்
    ஆன்மீகப் பதிவை? :))
    \\

    கிகிகி...தல இது என்ன சைக்கிள் கேப்புல ஆப்பு அடிக்கிறிங்க போல...பதிவை இன்னும் படிக்கலைன்னு தானே சொன்னேன் படிக்கவே மாட்டேனா சொன்னேன்.

    ரொம்ப நாள் கழிச்சி கும்மி ...பழக்க தோஷம் அதான் கும்மியில கலந்துக்கிட்டே பதிவை படிச்சிட்டு வந்தேன். ;))

    ReplyDelete
  101. //கோபிநாத் said...
    கிகிகி...தல இது என்ன சைக்கிள் கேப்புல ஆப்பு அடிக்கிறிங்க போல...//

    ஹிஹி! ச்ச்ச்ச்ச்ச்சும்மா மாப்பி சும்மா!

    உன் சோடி யாரு-ன்னு நான் முடிவு கட்டிட்டேன்! இந்த முறை இந்த ராமன் உன்னை தம்பி-ன்னு மட்டும் சொல்லிட்டு போயீற மாட்டான்! குகனுக்கு சோடி சேத்து வச்சிட்டுத் தான் போவான்! இது சத்தியம்! :))

    ReplyDelete
  102. \kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //υnĸnown вlogger™ said...
    sema damage aagum pola irruku.inimel intha blog pakkam 2 years ku naan varala...//

    நீ வரலைன்னாலும்...வெறி பிடித்த, உன் பத்தாயிரம் ரசிகர்கள் கண்டிப்பா வருவாங்க! சர் தானே மாப்பி கோப்பி? :)
    \\

    ஏன் தல என்னை வம்புல மாட்டிவிடுறிங்க...ஏற்கனவே அப்பாவிச் சிறுமி பார்த்தலே பயம்..இதுல இப்போ சூர்ப்பனகையாக கற்பனை பார்க்கவே கலவரமாக இருக்கு...;))

    ReplyDelete
  103. \\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோபிநாத் said...
    கிகிகி...தல இது என்ன சைக்கிள் கேப்புல ஆப்பு அடிக்கிறிங்க போல...//

    ஹிஹி! ச்ச்ச்ச்ச்ச்சும்மா மாப்பி சும்மா!

    உன் சோடி யாரு-ன்னு நான் முடிவு கட்டிட்டேன்! இந்த முறை இந்த ராமன் உன்னை தம்பி-ன்னு மட்டும் சொல்லிட்டு போயீற மாட்டான்! குகனுக்கு சோடி சேத்து வச்சிட்டுத் தான் போவான்! இது சத்தியம்! :))
    \\

    என் ராசா...
    என் எசமான்...
    என் தங்கம்...
    என் தல...
    என் மாமா..ச்சீ..அண்ணன்... ;)

    நல்லா சோடியாக பார்த்து சேர்த்து வையுங்கள் ;))

    ReplyDelete
  104. //சென்ஷி said...
    முதல் மரியாதை ராதா கூட வேசங்கட்ட வச்சுடலாம்.. :-)
    அவங்களும் நல்லா பரிசல் ஓட்டுவாங்க//

    "பரிசலை" ராதா ஓட்டும் காட்சி! ஹா ஹா ஹா! :))

    ReplyDelete
  105. //ambi said...
    ஏம்பா, இந்த ஜனகருக்கு செட்டப்ஸ் எல்லாம் கிடையாதா? எதுக்கும் புராணத்தை கொஞ்சம் புரட்டி பாக்கறேன். :)))//

    எவ்வளவு புரட்டினாலும் ஒன்னும் தேறாது! செட்டப்ஸ் எல்லாம் தசரதன்-குமரனுக்குத் தான்!
    ஜனகன்-அம்பி ஒரு ராஜ யோகி! கர்ம யோகி! ரொம்பபபபபபப நல்லவரு! :)

    ReplyDelete
  106. //Raghav said...
    //ஆப்பிள் கடிக்கும் ஒரு ஆப்பிள்....அவள் தான் சீதா (எ) மிஸ். பாவனா //
    அற்புதம் அற்புதம்.. இந்த ஒரு வரிக்கே இப்பதிவிற்கு பரிசு கொடுக்கலாம்..//

    ராகவ் இருக்க அடியேனுக்குப் பரிசுக்கு பஞ்சமே இல்ல! :)

    //அன்புச் செல்வி அருமை பாவனா வாழ்க வாழ்க..//

    தப்பு ராகவ் தப்பு! நோ செல்வி! இப்போ அவங்க உன் அண்ணி! :)

    ReplyDelete
  107. //கீதா சாம்பசிவம் said...
    ntha characters ellame poruthamana characters than, athu eppadi porukki eduthinga?//

    :)
    என்ன ஒரு பாசம் உங்களுக்கு இந்த நால்வர் அணி மேல?

    //athilum Ambi, Janaka Maharaja???? haa haa haa haa haa haa!//

    சீதைக்கு அப்பான்னா சும்மாவா? உங்கள சூளாமணியை வச்சி ஓட்டின பாவம் சும்மா வுடுமா? கணக்கு புக்குல குறிச்சி வச்சீங்க-ல்ல! அதான் இப்போ கர்ம பலன்! :)

    ReplyDelete
  108. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    //மொதல்ல உங்க மீசையை நீங்க ஒழுங்கா ட்ரிம் பண்ணுங்க!//

    நானா மாட்டேங்குறேன் ?அசின், தமன்னா, பூஜாவை மேக்கப் ஆர்டிஸ்டா அனுப்பிவையுங்க டைரக்டர் அங்கிள் :)//

    அசின், தமன்னா, பூஜா எல்லாம் முளைச்சு மூனு மீசை விடாதவங்களுக்கு மேக்கப் போடுறது இல்லீயாம்! :)

    மேலும் அவிங்க எல்லாம் கலைச் சேவை புரியும் ஹீரோயின்கள்! அவங்களை மேக்கப் ஆர்டிஸ்டா டீ-புரமோட் பண்றது தப்பு ரிஷான் அங்கிள்!

    ReplyDelete
  109. மக்கள்ஸ்
    கும்மி அடிச்சதோட உங்க கடமை முடியலை! இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு!

    பதிவில் ஒன்னு சொல்லி இருக்கேனே!
    //ஆனானப்பட்ட அபி அப்பாவாலேயே முன்பு முடியாமப் போச்சே!//

    இதுக்கு என்ன அர்த்தம்?
    அபி அப்பா, முந்தின ஜென்மத்தில், பாவனா & சிஸ்டர்ஸ் கூட என்ன பண்ணாரு? ஏது பண்ணாரு?

    இதை ஜனக மகாராஜா சபையில் நீங்க பேசியே ஆகணும்! :)

    ReplyDelete
  110. ரவுண்ட் கட்டி கலக்கிங்க்ஸ் :)))

    ReplyDelete
  111. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Raghav said...
    ..//


    //அன்புச் செல்வி அருமை பாவனா வாழ்க வாழ்க..//

    தப்பு ராகவ் தப்பு! நோ செல்வி! இப்போ அவங்க உன் அண்ணி! :)>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    :):) 100much இது!!!!!!

    ReplyDelete
  112. என்னது? அன்பு தங்கைக்கு சூர்பனகையா? அடுக்காது. :-)

    ReplyDelete
  113. hahahaah...soooper choice for sooorpnagai :D :D kalakiputel pongo...royalaraye ramoda maachaan aakiteley...avaruku apo bavna and co sistersa... :D :D royalar sabichira poraru :D

    ReplyDelete
  114. semma ravusa irukum polraukay :D :D adutha partai seekrama postavum

    ReplyDelete
  115. //அனுமன் = ஆயில்யன்//


    avvvvvvvvvvvvvvvv


    ooruku pona gapla :(((

    ReplyDelete
  116. //இராம்/Raam said...

    //ஹா ஹா ஹா
    குபீர்-ன்னு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் ஆபீஸ்-ல!
    கலக்கிட்ட ராமேய்! கலக்கிட்ட! :)

    //

    he he he :))

    //உன்னை ஸ்பெசலா கவனிக்கறேன்! டிவிலைட் பெல்லா கூட பாலே டான்ஸ் உனக்குத் தான்! :)
    //

    அங்கிள்,

    பெல்லா எனக்கு மட்டுந்தான்... எல்லாருக்கும் இல்ல... என்னோட நீயூ இயர் ரெசல்யூசன் என்னான்னு தெரியுமில்ல... :)//


    பேர் போடும்போது முழுசா போடுங்கய்ய்யா... பசங்க தப்பா நினைக்கப் போறாய்ங்க

    ReplyDelete
  117. இதப்பாருடா... மீ தெ 121

    ReplyDelete
  118. ஆயில்யன் said...
    //அனுமன் = ஆயில்யன்//
    avvvvvvvvvvvvvvvv
    ooruku pona gapla :(((//

    ஊருக்குப் போய் இருந்தீங்களா ஆயில்ஸ் அண்ணாச்ச்சி?
    சரி சரி...கடலைத் தாவிப் போனீங்களா? இல்லை பாலம் கட்டிப் போனீங்களா?
    வால் கருகியிருக்கே! என்ன விசயம்? :)))

    ReplyDelete
  119. //Jeeves said...
    பேர் போடும்போது முழுசா போடுங்கய்ய்யா...
    பசங்க தப்பா நினைக்கப் போறாய்ங்க//

    ஹிஹி!
    யோவ் அண்ணாச்சி! உம்ம குசும்பு இன்னுமா அடங்கலை?
    இருங்க! ஒழிப்பதிவு டிப்பார்ட்மென்ட் நீங்க தானே? இருக்கு உமக்கு! :)

    ReplyDelete
  120. //நிஜமா நல்லவன் said...
    மீ தெ 122!//

    நீங்க தான் சத்யம் கம்பேனி கணக்காளரா அண்ணாச்சி? :)

    ReplyDelete
  121. பாபா வைத் தேர்ந்தெடுத்த நுண்ணரசியலுக்கு காரணம் என்ன ரவி. பாவம்யா இந்தப்பாடா படுத்துறீரு.

    ராமருக்கு ஒரு இல் ஒரு சொல் ஒரு வில் ஆச்சே. நம்ம வசனம் பகுதியை மறந்துட்டீரே ராம் ராம். அவுட் ஆப் ஸைட் இஸ் அவுட் ஆப் மைண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?????

    ///
    * சீதை = "கனவுக் கன்னி" பாவனா
    * சீதையின் தங்கைகள் = ஜெனிலீயா, சமீரா ரெட்டி, தமன்னா///

    மெள்ள மெள்ள..... ஜொள்ளாயனம் ஆயிரப்போவுது.

    ReplyDelete
  122. உங்க மார்கழி பதிவு முழுக்க நான் என்னைக்கு வாசிக்கறது KRS.


    கொஞ்சம் நேரம் குடுங்கப்பு.....

    ReplyDelete
  123. சபரி = ஷைலஜா
    அசத்துங்க கனிகளை சுவை பாத்து சேமித்து வைத்து ஷைலு

    விஸ்வாமித்ரர் = இலவசக் கொத்தனார்
    கொத்ஸ். நிதானம்... சபிச்சுறாதீரு.

    வசிட்டர் = துளசி கோபால்
    துள்சி எங்கிருந்தாலும் முக்கியமான வெயிட்டான கதாபாத்திரம் உங்களுக்கு.

    கூனி = ? ஆங்..மோகன்தாஸ் :) (செப்புப் பட்டயமா???)
    இன்னும் அவரு பாக்கலியா இதை என்னுடைய‌ தம்பி. ஆனாலும் இராமாயணம் வரணும் என்கிறதுல அதீத அக்கறை கூனிக்குதான். ஸோ முக்கியமான கதாபாத்திரம் தம்பிக்குன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  124. மது,

    //வசிட்டர் = துளசி கோபால்
    துள்சி எங்கிருந்தாலும் முக்கியமான வெயிட்டான கதாபாத்திரம் உங்களுக்கு.//

    இதுக்குத்தான் பதிவர் சந்திப்புக்கெல்லாம் வரக்கூடாதுன்றது.

    குண்டு என்ற சொல் பயமா இல்லையா?

    ReplyDelete
  125. துளசி கோபால் said...
    மது,

    //வசிட்டர் = துளசி கோபால்
    துள்சி எங்கிருந்தாலும் முக்கியமான வெயிட்டான கதாபாத்திரம் உங்களுக்கு.//

    இதுக்குத்தான் பதிவர் சந்திப்புக்கெல்லாம் வரக்கூடாதுன்றது.

    குண்டு என்ற சொல்
    <<<<<<<<<<<<<<<<<<<<<< hahaa!!துளசிமேடம் குறும்புதான் ரொம்ப:)

    ReplyDelete
  126. மதுமிதா said...
    ///
    * சீதை = "கனவுக் கன்னி" பாவனா
    * சீதையின் தங்கைகள் = ஜெனிலீயா, சமீரா ரெட்டி, தமன்னா///

    மெள்ள மெள்ள..... ஜொள்ளாயனம் ஆயிரப்போவுது.\\\

    என்ன சந்தேகம் மது?:) நம்ம கேஆர் எஸ் ஜொள்ளின் செல்வன் ஆச்சே:):)

    9:38 PM

    ReplyDelete
  127. yo brother where is the part 2 :)
    sis kasta pattu wireless ellam "borrow" panni blog check pannina onnume kaanome :)
    Nose ku enna aachunu theriyanum illa.Seekiram podunga ;)

    ReplyDelete
  128. //
    என்ன சந்தேகம் மது?:) நம்ம கேஆர் எஸ் ஜொள்ளின் செல்வன் ஆச்சே:):)//

    ithu eppo irunthu :O

    ReplyDelete
  129. @raam
    ada paavi.etho paavam annavache.athuvum bhavana,thamana ippadi beautiful actress ku annavache nu paava pattu support pannina ennai ippadi insult pannitinga illa.Bella aka Kristen Steward kuda ungaluku thangachi ah varuva.Pudinga en sabathai ;)

    ReplyDelete
  130. I am so tired bro.so ithu varaikumthaan kummi adika mudiyum.2nd part publish karo ;)

    ReplyDelete
  131. υnĸnown вlogger™ said...
    @raam
    ada paavi.etho paavam bhavana,thamana ippadi beautiful actress ku annavache nu//

    ஹிஹி! இதுக்குப் பேரு தான் எரியற ஃபயர்-ல எயிட் லிட்டர் பெட்ரோல் ஊத்துறது-ன்னு பேரு! :)

    //Bella aka Kristen Steward kuda ungaluku thangachi ah varuva//

    சேச்சே! வாயைக் கழுவுங்க ஜிஸ்டர்! ராம் & பெல்லா - டும் டும் டும்! :)

    ReplyDelete
  132. //மதுமிதா said...
    பாபா வைத் தேர்ந்தெடுத்த நுண்ணரசியலுக்கு காரணம் என்ன ரவி. பாவம்யா இந்தப்பாடா படுத்துறீரு//

    ஹா ஹா ஹா
    வாங்கக்கா! வால்மீகி-பாபாவுக்கு நீங்க ஒருத்தராச்சும் சப்போர்ட் பண்ணீங்களே! சந்தோசம்! :)

    //ராமருக்கு ஒரு இல் ஒரு சொல் ஒரு வில் ஆச்சே. நம்ம வசனம் பகுதியை மறந்துட்டீரே//

    Part2 பாருங்க! உங்க ஸ்பெஷல் வசனம் வந்தாச்சே! :)

    //அவுட் ஆப் ஸைட் இஸ் அவுட் ஆப் மைண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?????//

    ஆகா! அக்காவை மறக்க முடியுமா? பாவனாவை உங்க கிட்ட தானே முதலில் அறிமுகப்படுத்தணும்! அதுக்காகவாச்சும் மறக்க மாட்டோம்-க்கா! :))

    ReplyDelete
  133. //மதுமிதா said...
    உங்க மார்கழி பதிவு முழுக்க நான் என்னைக்கு வாசிக்கறது KRS.
    கொஞ்சம் நேரம் குடுங்கப்பு.....
    //

    தைப்பூசமே வரப் போவுது! :)
    நீங்க மின்-புத்தகம் தரவிறக்கி வாசிங்க-க்கா! புத்தகத்தில் தப்பா சொல்லியிருந்தேன்-ன்னா அடுத்த முறை பாண்டி பஜார்-ல என்னைய போட்டுத் தாக்கிருங்க! :)

    ReplyDelete
  134. //மதுமிதா said...
    சபரி = ஷைலஜா
    அசத்துங்க கனிகளை சுவை பாத்து சேமித்து வைத்து ஷைலு//

    நோ கனிஸ்! ஒன்லி வைன்ஸ்! சுவை பாத்து சேமிச்சி வைப்பாங்க பார் டென்டர்! :)

    //(செப்புப் பட்டயமா???)
    இன்னும் அவரு பாக்கலியா இதை என்னுடைய‌ தம்ப//

    :)

    //ஆனாலும் இராமாயணம் வரணும் என்கிறதுல அதீத அக்கறை கூனிக்குதான். ஸோ முக்கியமான கதாபாத்திரம் தம்பிக்குன்னு சொல்லுங்க//

    சேம் சைட் கோல் போட்ட மதுக்கா வாழ்க! வாழ்க! :)
    செப்பு, ஏமி செப்பு? :)

    ReplyDelete
  135. //ஷைலஜா said...
    என்ன சந்தேகம் மது?:) நம்ம கேஆர் எஸ் ஜொள்ளின் செல்வன் ஆச்சே:):)//

    வாவ்! மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி-க்கா! :))

    ReplyDelete
  136. //கைகேயி = கைப்புள்ள//

    என்னய்யா இது மானங்கெட்ட பொழப்பு? இது நல்ல கதையா இருக்கே? கூட ஃபிகர் இருக்கற கேரக்டர் எல்லாம் நீங்க வச்சிக்குவீங்களாம்...நாங்க மட்டும் வில்லியா இருக்கணுமாம்...என்னய்யா நியாயம் இது? செல்லாது...செல்லாது.

    நாட்டாமை ராமாயணத்தை மாத்தி சொல்லு.

    ReplyDelete
  137. //கைப்புள்ள said...
    கூட ஃபிகர் இருக்கற கேரக்டர் எல்லாம் நீங்க வச்சிக்குவீங்களாம்...நாங்க மட்டும் வில்லியா இருக்கணுமாம்...//

    என்ன தல இப்படிப் பொங்கறாரு? ஓ கைகேயி வேசம்-ல்ல! அதான்! :)

    //நாட்டாமை ராமாயணத்தை மாத்தி சொல்லு//

    அதைத் தானே தல பண்ணிக்கிட்டு இருக்கேன்! :)))

    ReplyDelete
  138. யோவ் சின்னப்பய புள்ளைகளா..?

    யாருய்யா ஆர்ட்டிஸ்ட்டை செலக்ட் பண்ணினது..?

    பாவனாவுக்கு அக்காவா இலியானா, ஜெனலியா, தமன்னா..? எவனாவது ஒத்துக்குவானா..?

    யாரைக் கேட்டு புக் பண்ணுனீங்க..

    மொதல்ல அபிஅப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கினீங்களா..?

    முக்கால்வாசி படம் முடியும்போது கோர்ட்ல கேஸ் போட்டு படத்தை நிப்பாட்டுறாரா இல்லையான்னு பாருங்க..

    ReplyDelete
  139. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    யோவ் சின்னப்பய புள்ளைகளா..?//

    சொல்லுங்க அண்ணாச்சி! :)

    //யாருய்யா ஆர்ட்டிஸ்ட்டை செலக்ட் பண்ணினது..?//

    ஹிஹி! அடியேன்! :)

    //பாவனாவுக்கு அக்காவா இலியானா, ஜெனலியா, தமன்னா..? எவனாவது ஒத்துக்குவானா..?//

    அலோ, பாவனாவுக்கு இளைய சகோதரிகள்! ஜிஸ்டர்ஸ்! இராமனின் தம்பிகள் கட்டிக்கப் போற பெண்கள்! பதிவைப் படிங்க படிங்க படிங்க! :)

    //மொதல்ல அபிஅப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கினீங்களா..?//

    நாங்க பழம்பெரும் பரசுராமன் கிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கிங் நஹி! :)

    //முக்கால்வாசி படம் முடியும்போது கோர்ட்ல கேஸ் போட்டு படத்தை நிப்பாட்டுறாரா இல்லையான்னு பாருங்க..//

    வெளம்பரச் செலவு மிச்சம்-ன்னு சொல்லுங்க! வாவ்! :)

    ReplyDelete
  140. வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

    ReplyDelete
  141. //நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே! //

    தமிழ்மணம் பட்டையவே காணோமே! தமிளிஷ் ல வோட் போட்டுட்டேன்

    ReplyDelete
  142. ஹி ஹி அதிலையும் வோட் போட்டுட்டேன்

    ReplyDelete
  143. pavana parka ippadiuma.

    ReplyDelete
  144. bavana m elaa erukum assiku ramayanam. bagavatham eduthala yarrnu .........

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP