Showing posts with label Saivam. Show all posts
Showing posts with label Saivam. Show all posts

Wednesday, March 27, 2013

சங்கத் தமிழில் காவடி இருக்கா?

பங்குனி உத்திரம் (Mar 27, 2013)
அவன் திருமண நாள் -ன்னு "புராணம்"

புராணம் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை;
எது-ன்னாலும், அவனுக்கும் அவளுக்கும் = திருமணம்! Happy 1st Night, Muruga:)

இன்று, பழனி மலை முழுதும், பலப்பல காவடிகள்;
* சாஸ்திரம் அறியாத எளிய மக்களுக்கும்-முருகனுக்கும் உள்ள நேரடித் தொடர்பு = "காவடி"!
* காவடியை, ஆச்சாரக்காராள் தூக்குவதில்லை; எளிய அன்பர்கள் மட்டுமே தூக்குறாங்க!

வாங்க, இன்னிக்கி... காவடியின் "உண்மையான" கதையைப் பார்க்கலாமா? = சங்கத் தமிழில் காவடி!
* என்னாது, சங்கத் தமிழ்-லயே காவடி இருக்கா?
* அதியமானை எதிர்த்து, ஒளவை காவடி தூக்கினாளா?:)


ஆமாம்!
இலங்கை அரசாங்கத்துக்கு, இந்தியா "காவடி தூக்குது" -ன்னு பொருளே -veஆ மாறிப் போச்சி, இன்னிக்கி;
ஆனா, அன்று?
தன் எதிர்ப்பைக் காட்டவே, ஒரு தமிழச்சி, காவடி தூக்கினாள்!

எதிர்ப்பைக் காட்ட, மாணவர்கள், தங்கள் மனசாட்சிக் கொந்தளிப்பை இன்று தூக்குகிறார்கள்;
முருகா, எத்தனை நாள்...? நான் மடிவதற்குள், ஈழத்தின் மானத்தை ஒரு துளியேனும் காண்பேனோ?

ஈழத் தவிப்பு = உலகம் அறிஞ்ச உண்மை; ஆனாலும் நிலை நாட்ட முடியலையே;
வெளித் தேசம் கூட வேணாம்; சொந்த பாரத தேசத்திலேயே நிலைநாட்ட முடியலையே!

*"சமயப் பொய்"-யெல்லாம் நிலை நாட்ட முடியுது; ஆனா ஒரு உண்மையை நிலைநாட்ட இத்தனை பாடா?
*ஆயிரம் தரவுகள் இருந்தும், நிலைநாட்ட இத்தனை மெனக் கெடணுமா?

= இதுவொரு மனத் தோல்வி-இனத் தோல்வி... தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும்!
= கந்தனுக்குப் பதிலாக, கண்டுகொள்ளாமைக்கு நாம் "காவடி தூக்கி" விட்டோமோ?:(

("காவடி" பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை, murugan.org -இல், ஆசிரியர் Patrick Harrigan கேட்டுக் கொள்ள எழுதியது; அங்கே பதிப்பித்து உள்ளார்கள்)


அரும்பெறல் "மரபின்" = பெரும்பெயர் முருக!
அந்த "மரபின்" தனித்த அடையாளம் = காவடி!


* மொட்டை போடுதல் = திருப்பதியிலும் உண்டு; சமணக் குடும்பங்களில் கூட உண்டு;
* அலகு குத்தல் = அம்மன் கோயில்களில் உண்டு; வெறியாடலும் உண்டு!
* ஆனா காவடி??? = வேற எங்காச்சும் இருக்கா?

நீங்களே யோசிச்சிப் பாருங்க!
இந்த நாட்டார் வழக்கம் = முருகனோடு மட்டும் உறவாடுவது ஏனோ?

இடும்பன் (எ) அசுரன், அகஸ்திய மகரிஷியின் இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான்; 
பாதி வழியில் கீழே வச்சிட்டுத் தூங்கும் போது...
அது மேல மாம்பழச் சுப்பிரமணியன் aka முருகன், ஏறி நின்னுக்கிட்டான்;

தூங்கி எழுந்த அசுரனோ, மறுபடியும் தூக்க முடியாமல், முருகனை இறங்கச் சொல்ல, Caretaker of the Mountain = ஆளு "க்ளோஸ்";
இன்னொருத்தர் சொத்து மேல முருகன் ஏறி நின்னதும் இல்லாம, அவனைச் சாவடித்தலே = "தர்மம்"":)
அசுரன் சாகும் போது, தன்னைப் போலவே, பக்தர்களும் காவடி தூக்கிட்டு வரணும்-ன்னு வேண்டிக்கிட்டான்; டொட்ட டொய்ங்க்... End of Puranam:)


இதனால் தான் முருகனுக்குக் காவடியா???

= எத்தனை சுலபமா, பூர்வகுடி மக்களின் வாழ்வியல் - தொன்மவியல், அடிபட்டுப் போயிருச்சே???:(
= பண்டைத் தமிழ் மக்களின்/ குறிஞ்சி நில மக்களின் தொன்மம் = காவடி; தமிழ்க் கடவுளின் முருகவியல்!
நினைவில் நிறுத்துங்க: 
"புராணம்" -ன்னு கதையைக் கட்டினா, தமிழ்த் தொன்மம் அழிஞ்சீரும்!:(

போதாக் குறைக்கு, ஒளவை (எ) பெருமை மிக்க சங்கத் தமிழ்ப் பெண்;
ஆனா அவ மேலயும் "புராணக்" கப்சா;

மொத்தம் 6 ஒளவையார்கள், தமிழ் இலக்கியத்தில் (Refer here)
அதிலே, முதலாம் ஒளவை = அதியமான் காலம் (3rd BCE - 2nd CE);

அதியமான் காலத்தில், எப்படி ஒருவர் கைலாஸத்துக்குப் போய், "பழம் நீ அப்பா" பாட முடியும்? அப்படீன்னா...
...இயேசு பிறந்து, கிபி 2 க்குப் பிறகு தான், முருகனே வளர்ந்தான்; பெரியவன் ஆனான்-ன்னு ஆயீருமே?:))

ha ha ha; "புராணத்துக்கு" அம்புட்டு Continuity போதாதுங்க:))

தப்பில்லை! புராணம், புராணமா இருக்கட்டும் (Mythology)! ஆனா, அதை, வாழும் தமிழ்ச் சான்றோர் மேல், "இட்டுக் கட்டக்" கூடாது;
Will you include Great English Poet, Shakespeare in Harry Potter "story" & make him do pooja for Potter?:)
நக்கீரர், ஒளவை = சங்கத் தமிழ் மாண்பு; அதை நாம மதிச்சி நடக்கணும்! "மனசில்" ஓரமா இருத்துவோம்;

(Pl Note: Only the movie is based on such "puranams"; We cannot blame KBS amma for this; She just 'acted' in the movie; She is so immaculate; Her life repeats in my life)
-----
= (திருவிளையாடற் புராணம்);
அ to ஹ = 48 சம்ஸ்கிருத எழுத்தும் 48 சங்கப் புலவரா ஆச்சி; கூடவே 49ஆவதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு;
= Are all my great tamizh poets formed from Sanskrit??

இப்படியெல்லாம், தமிழைப் பின்னுக்குத் தள்ளும் "சமயக் கதைகள்"?
அதுவும் கருணை வள்ளலான ஈசனின் பேரைச் சொல்லி? இந்தச் சமயப் போக்கு, மனசுல ஒட்டவே மாட்டேங்குது முருகா...
ஈசனா? மதமா? = எனக்கு ஈசனே போதும்;

= Sorry da Muruga, Even if it is You or Your dubakoor stories, Not at the cost of Tamizh Dignity! அன்றில் இருந்து இன்று வரை, இப்பிடியே இருக்கேனே:( எதுக்கு ஊரார் பகை? என்னை மாத்திறக் கூடாதா, முருகய்யா?
-----
அப்போ, "காவடி" -ன்னா என்னய்யா?
அது எப்படி, தமிழ்த் தொன்மமான முருகனுக்கே உரியதாச்சு? பார்க்கலாமா?


புறநானூற்றில் காவடி?

தமிழ் அகராதியில் சும்மா போயி, பொருள் பாருங்க; காவுதல் = தூக்குதல்;
காவு + அடி = காவடி!
அதாச்சும், தூக்கும் தண்டு = "காவும்" தடி!
மலையில் பாரம் சுமக்க, பூர்வ குடி மக்களுக்கு, இது ஓர் எளிய கருவி (Simple Machine)

Physics-ல படிச்சிருப்பீங்களே? Fulcrum, Lever -ன்னுல்லாம் நெட்டுரு போட்ட ஞாபகம் இருக்கா?:)
A lever is a beam connected to a hinge, called a fulcrum;
Human Fulcrum ஆகும் போது = அதே Lever காவடி ஆகின்றது! இரு புறமும் (எடை) சமன் செய்தல் = Balancing!

Mechanical Advantage of a lever (MA) = Balance of Torque, about the fulcrum = m1/m2 = a2/a1
பயந்துறாதீக; ஒங்கொப்பராண, ஒங்கள 8th Std கூட்டிப் போவ மாட்டேன்:)

இப்படி, எடையைச் சமன் செய்யும், பூர்வ குடிகளின் கருவியே = காவடி!

குறிஞ்சி மக்கள், பாரம் தூக்கிக்கிட்டு, மலை ஏறுவது கடினம்; அதான் எடையைப் பரவி, பின்பு சுமந்து செல்லுதல்!
(மலைப் பிரதேசங்களில், ரெண்டு ஆளுங்களையே இரு புறமும் உட்கார வச்சி, எளிதாகச் சுமந்து விடலாம், காவடியின் உதவியால்)

சரி புரிஞ்சுது; ஆனா காவடி = ஏன் முருகனுக்கு மட்டுமே ஆனது?

* ஏன்னா, முருகன்= குறிஞ்சிக் கடவுள் = மலையும் மலை சார்ந்த இடமும்!
* திருமால்= முல்லைக் கடவுள் = காடும் காடு சார்ந்த இடமும்!

மலைப் பாதையில், இம்புட்டு நீளமாத் தூக்கிச் செல்லலாம்;
ஆனா அடர்ந்த காட்டிலே? =  அந்த நீளத்துக்கு வழியெல்லாம் செடிகொடியில் முட்டும்:)
(#jokeonly: காதலன் முருகன் முட்ட மாட்டான்; அப்பா திருமால் முட்டுவாரு:))

செங்குத்தான மலை; நடந்தாலே மூச்சு வாங்கும்; அதில் பாரம் சுமக்க, எளிய வழி!
அந்த மரபே, அந்த மக்களின் கடவுள் = சேயோன் (எ) முருகனுக்கும் ஆனது;

மற்ற இரண்டு தமிழ்க் கடவுளான திருமாலுக்கோ/ கொற்றவைக்கோ, காவடி ஆகவில்லை! "மலைத்" தெய்வத்துக்கு மட்டுமே ஆனது!

காவடியின் பல்வேறு பெயர்கள், தமிழ் இலக்கியத்தில்!
* காமரம்,
* காத் தண்டு, காவடித் தண்டு,
* காவணப் பத்தி
* காவுப் பொருட்டு

புறநானூற்றிலும் காவடி வருகிறது; தூக்குறது யாரு? = ஒளவை-யாரு!:)


அதியமான் நாடு = தகடூர் (மலை நாடு); 
அதனால், ஒளவையாரும் காவடி எடுக்கின்றார்!

ஒளவையைத் தன் நாட்டிலேயே இன்னும் கொஞ்சம் நாள் வச்சிக்கிடணும்-ன்னு அதியனுக்கு ஆசை;
So, அவளுக்கு மட்டும் இன்னும் பரிசில் குடுக்கலை:)

இது தெரியாமல், ஒளவைக்கோ கோவம்; "போடா, உன் பரிசிலே வேணாம்; நீயாச்சி, நானாச்சி;
கெளம்புறேன்" -ன்னு மூட்டை கட்டுறா, தன் Luggage-ஐ! எதில்? = ஒரு காவடியில்:)

வாயி லோயே வாயி லோயே
பரிசிலர்க்(கு) அடையா வாயி லோயே
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! 

(புறநானூறு 206; வாயில் நீட்டித்த அதியமான் நெடுமான் அஞ்சியை, ஒளவை பாடியது)

* எத்திசை செலினும் அத்திசைச் சோறே = நான் எங்கிட்டு போனாலும் சோறு கெடைக்கும்டா; ஒன்னைய நம்பி என் தமிழ் இல்லை!
* காவினம் கலனே = என் பொருட்களையெல்லாம் காவுகிறேன் (தூக்குகிறேன்); காவு தடியில் (காவடியில்) இதோ தூக்குறேன்; Tata; Bye:)

என்ன வீறாப்பு பாருங்க, செந்தமிழ்க் கிழவிக்கு:)

* இன்னிக்கி "காவடி தூக்குறான்" -ன்னா பொருளே வேற:(  டில்லிக்குக் காவடி எடுக்கும் அமைச்சர் -ன்னா, குனிந்து குனிந்து கெஞ்சுதல்!
* ஆனா, அன்னிக்கி பாருங்க... "காவடி எடுக்கறேன்" -ன்னா, ஒன்னை நம்பி நான் இல்ல, கெளம்பறேன் -ன்னு மான உணர்ச்சி!

ஒளவை மட்டுமா காவடி? பின்னாளில், கம்பனும் காவடி எடுக்குறான்!

அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடு
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே

(பால காண்டம் - எழுச்சிப் படலம் 768; தயரதன், திருமணத்துக்கு வரும் வழியிலே கண்ட மலைக் காட்சிகள்)

* "பரித்த கா"வினர் = காவடித் தண்டைச் சுமந்து சென்றார்கள்;
* யார்? = பப்பரர் என்னும் மலைவாழ் மக்கள்;
* அரத்த நோக்கினர் = சிவந்த கண்கள்;
* அல் திரள் மேனியர் = கருத்த உடம்பு;
காவடியில் பாரம் தூக்கிக்கிட்டு மலையேறுகின்றனர்;

இது தாங்க, "புராணம் கலவாத", தமிழ்க் காவடியின் கதை!
வாங்க, நாம காவடிச் சிந்துக்குப் போவோம்! 
அங்கே தானே என் மனசுக்குப் பிடிச்ச = இசை = இருக்கு?:)


மொத்தம் எத்தனை விதமான காவடிகள்?

"பால் மணக்குது, பழம் மணக்குது" -என்னும் பாட்டில், ரமணி அம்மாள், பல காவடிகளின் பேரைப் பட்டியல் போடுவாங்க; செம குத்துப் பாட்டு:)

பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்!
சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!

இது இல்லாம...
பூங் காவடி, காசுக் காவடி, அன்னக் காவடி, விபூதிக் காவடி -ன்னு சுமந்து செல்வார்கள், அவரவர் மனசு வேண்டுதலின் படி!
இப்பல்லாம் பறவைக் காவடி-ன்னு ஒன்னு பிரபலம் ஆயிருச்சி, குறிப்பா மலேசிய - சிங்கையில்;
அதாச்சும் தான் எதுவும் சுமக்காமல், முழுக்கக் குத்திக் கொண்டு, அவரை Crane (அ) Machine சுமக்கும்; பறவை போல் இவர் ஊசலாடுவதால், பறவைக் காவடி!

இப்படியான "அதீத உடல் வருத்திக் கொள்ளல்" பற்றி நான் ஒன்னும் தப்பாச் சொல்லலை;
ஆனா இதிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமாச்சும் விலக்கு அளித்து விடுங்கள், Please...

முருகனை, மனசால் எண்ணியெண்ணிச் "சுமக்கும்" இன்பத்தை விட, பேரின்பம் வேறு இல்லை!
மனசால் "சுமந்து" செல்லுதலே நலம்; மெஷின் நம்மைச் சுமத்தல் அத்தனை நலம் அன்று; (என் தனிப்பட்ட கருத்து மட்டுமே; மன்னிக்க)

காவடியாட்டம் இரண்டு வகை:
1) பக்திக் காவடி
2) ஆட்டக் காவடி

பக்திக் காவடி பற்றி மேலே பேசினோம்;
ஆட்டக் காவடி அப்படியல்ல! அது ஒரு நாட்டுப்புறக் கலை!

ஒரு தண்டிலே, அலங்காரமாக் கூடு கட்டியிருக்கும்; மயில் இறகுகள் சொருகியிருக்கும்; விதம் விதமாய் ஆட்டம்!
* தலை, நெற்றி, தோள்
* முதுகு, கழுத்து, வயிறு
இப்படிப் பல உறுப்பிலும் வச்சி வச்சி, முன்னும் பின்னும் ஆட்டும் கலை!

நாதசுரம்-தவில் இசை!
சில சமயம்... பம்பை, கிடுகிட்டி, தமுக்கும் அடிப்பாங்க; ஆனா மெட்டு எப்பமே அந்தப் புகழ் பெற்ற மெட்டு தான் = காவடிச் சிந்து;

தோளில் தான் காவடியை நிறுத்துவாங்க;
கையால அடவு செஞ்சிக்கிட்டே, காவடியைத் தலைக்குக் கொண்டாந்து, சுழற்று சுழற்று -ன்னு சுழற்றுவாங்க;
கையில் பிடிக்காமலேயே, இத்தினி சுத்து சுத்தினாலும், அது கீழே விழாது!

என்னால இப்பிடியெல்லாம் ஆட முடியாது:)
கிராமத்துப் பூசையில், ஆயா(பாட்டி) பாடி, ஊருக்கே எடுத்துக் குடுப்பாங்க போல;
ஒவ்வொருத்தராச் சுமந்து போறதோட சரி;

தோழனோடு எப்பவாச்சும் ஒரு முறை போகும் போது, முருகனுக்குக் காவடி எடுக்கணும்-ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை!


* பின்னாளில் வந்த சிற்றிலக்கியங்கள் = ஒன்னுல கூடக் காவடி பற்றிப் பேச்சில்லை!
* சந்தம் செய்யவே வந்த நம் சொந்தக் கவி = அருணகிரியும், ஏனோ காவடி பற்றி ஒன்னுமே பாடலை;

அதனால் என்ன?
19th CE-இல் புண்ணியம் கட்டிக் கொண்டார் ஒரு "தெலுங்கர்" = தமிழ்க் கடவுளை!
அவர் பேரு = அண்ணாமலை ரெட்டியார்;
காவடிச் சிந்தைப் பாடிப் பாடிப், பிரபலம் ஆக்கினார்;
* அதுக்காக, காவடி பிறந்ததே = 19th CE-இல் தான்-ன்னு அவசரப்பட்டு முடிவு கட்டீறக் கூடாது;
* அதற்கும் முன்பே, எளிய மக்கள் - நாட்டார் வழக்கில் இருந்தது தான்; ஆனா இலக்கிய எல்லைக்குள் வரலை;

திருமங்கை என்ற முன்னாள் கள்வன் - பின்னாள் ஆழ்வார் (7th-9th CE); இதை இலக்கியத்துக்குள் கொண்டு வந்து கொடுத்தார்;
நந்திபுர விண்ணகரம் என்னும் ஊருக்குப் போவும் போது, வழியில் அலுப்பு தட்டாம இருக்க, எசப்பாட்டாய், பெருமாள் மேல் பாடிய "சிந்துப் பாடல்கள்"!

= இதுக்குப் பேரு வழிநடைச் சிந்து!
= இதையே, காவடி தூக்கிக்கிட்டு பாடினா, காவடிச் சிந்து!

"சிந்து" என்றால்  3x3  சீராய், அடுக்கும்!
= குறளடி, சிந்தடி, அளவடி, நெடில் அடி, கழிநெடில் அடி -ன்னு தமிழிசைக் கூறுகள்; யாப்பு இலக்கணமும் கூட;

செந்திலில் பொங்கிடும் அலைகள்  (3) - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் (3) - கந்த
வேல் ஆனது  சூரா திபன்  (4),
மேல் ஆனதைக்  கூறா க்கிய (4)

வீரா அதி தீரா (3)

பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) -ன்னு "சாஸ்த்ரீயமா" இருக்காது; நேரடியாச் சரணம்; முருகனே சரணம்:)

இந்த மெட்டு பிரபலமாகி விட்டதால், இன்று கர்நாடக இசையிலும் பாடுறாங்க; ஆனா, உன்னி கிருஷ்ணன் முதலான பல பேரும் "இழுத்து இழுத்து"ப் பாடுறாங்க; அந்தோ!
காவடிச் சிந்தின் அடிநாதமே அந்த "வேகம்" தான்; சும்மாக் குத்துப் பாட்டு கணக்கா, காலு தானாவே ஆடணும்!:)
கழுகுமலைக் கோயிலின் முன்பு...
சென்னிக் குளநகர் வாசன் - புகழ்
தேறும் அண்ணாமலைத் தாசன் - செப்பும்
செகம் மெச்சிய மதுரக்கவி
அதனைப்புது வரையில் புனை 
தீரன் அயில் வீரன்!

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழி போதினில்
அமராவதி இமையோர் செவி 
அடைக்கும் அண்டம் உடைக்கும்!

"உடைக்கும்" -ன்னு உடைக்குறா மாதிரிப் பாடணும்; இழுக்கக் கூடாது:)
ரெட்டியார், அப்படித் தான் மெட்டு போட்டாரு!
கழுகுமலை முருகன் மீதும், சென்னிக்குள முருகன் மீதும், அவரு போட்டுள்ள பாடல்கள், சும்மா "கும்"-ன்னு இருக்கும்!

பின்னால் வந்த தமிழ்த்-தேசியக் கவி, நம்ம சுப்பிரமணிய பாரதியும், இந்த மெட்டில் சில கண்ணிகளைச் செஞ்சிருக்கான்;
எல, ரெட்டியாரு-பாரதியாரு எல்லாரும் ஒரே ஊர்க்காருவக தானே-ல்ல?:)

பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கெளமாரன்
பணிசுப்பிர,  மணியற் கருள் அணிமிக் குயர், தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் ...


தூக்கு மேடையில் ஒரு காவடிச் சிந்து:

"ஆர்மோனியம்" காதர் பாட்சா -ன்னு ஓர் இசைக் கலைஞர்;
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாட்டிலே அவருக்கு ஓர் ஈர்ப்பு;

இசுலாமியர் தான்; ஆனாலும், கழுகுமலை முருகன் மீது ஈடுபாடு;
"காதர்" பாட்சா = "காவடிச் சிந்து" பாட்சா ஆகிவிட்டார்:)

ஆனா, பாவம் ஏதோவொரு வழக்கில் சிக்கிக்கிட்டாரு போல; அப்பாவிக்குத் தூக்குத் தண்டனை;
"உன் கடைசி விருப்பம் என்ன?" = தூக்கு மேடையில் அதிகாரி கேட்ட போது,
"காவடிச் சிந்தை ஆர்மோனியத்தில் ஆசை தீரப் பாடணும்" என்றார் பாட்சா;

சுருளிமலை மேவும் சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா - பசுந்
தோகை மயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா!

கேட்டார்கள், மனம் மயக்கும் தமிழிசையை; ஒரு தாள வாத்தியமும் இல்லாம, தானாவே இசை கூட்டும் சந்தம்!
நேரம் கடந்து போனதே தெரியாமல், அதிகாரிகள் ரசித்துக் கொண்டிருக்க... முடிவில் தூக்கு மேடை ஏறினார் காதர் பாட்சா!

ஆனால், உடன் இருந்த வழக்கறிஞர், ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பினாரு...

"காதர் பாட்சா என்னும் இவரை, மாலை சரியாக 6:00 மணிக்குக், உயிர் பிரியும் வரை, தூக்கில் தொங்க விடுங்கள்" - இதுவே நீதிபதியின் தீர்ப்பு;

ஆனால் காலம் கடந்து விட்டது; 6:45 pm
"தண்டனை உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால், ஒன்று ரத்து செய்ய வேண்டும், இல்லை அப்பீல் செய்ய வேண்டும்"
- விதிகளை அந்த அலுவலர் சுட்டிக் காட்ட... அன்று "தலை" தப்பிய பாட்சா, பின்பு நீதிமன்றத்திலும் "தலை" தப்பினார்!

என் "தலை" வைத்து... உன் இணையடி காக்க!
முருகா, என் தலையை வைத்தாச்சும், உன்னை நான் காப்பேன்-டா, நீ என்னைக் காக்காவிடினும்...


பங்குனி உத்திரக் காவடிப் பதிவு இதுவே;
காவும் = (தூக்கும்)
காவு + தடி = காவடி!

அந்தக் காவடிக்கு நாயகனே! என் காதலுக்கும் நாயகனே!


* அரும் பெறல் மரபின் பெரும் பெயர் =  காவடி!
* பூர்வ குடிகளின் தமிழ்த் தொன்மம் = காவடி!

சங்கத் தமிழ்க் கடவுளாம் முருகனின்,
சங்கத் தமிழ்க் காவடி வாழி!
Read more »

Friday, August 10, 2012

முருகனின் கடைசி "வகுப்பு"!

(ஆடிக் கிருத்திகைப் பதிவு: Aug-10)

"அருணகிரி" = இது, முருகனைப் பாடவே பொறந்த ஒரு பேரு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய் -ன்னு... தானே குடுக்கும் வாக்குமூலம்!

* முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு = திருப்புகழ்
* கடைசியில் பாடி நிறைந்தது = சிவ லோகமே = திருவகுப்பு

திருப்புகழில் சந்தம் கொஞ்சும்;
ஊர் ஊராகச் சென்று பாடின அனுபவம் தெரியும்;
பழசை மறக்க மாட்டாது கணிகையரைத் திட்டும் கோபம் புரியும்;
தன் நூலைத் தான் பாடிப், பிறரும் பாடுகிறார்கள் என்று பெருமை கூடத் தொனிக்கும்...

ஆனால் திருவகுப்பிலோ, இவை ஒன்றுமே இராது!
தான் பாடியது என்று சொல்லாமல், ஒரு பக்தன் முற் பிறவியில் பாடிய திருப்புகழ் -ன்னு, யாரோ பாடியது போல் சொல்லுவார் - ஏன்?

ஏன்-ன்னா, அருணகிரி, திருவகுப்பை...
 "கிளியாய் இருந்து பாடினார்"
என்பது வழக்கு! = இது ஒரு கதை! பார்ப்போமா?

சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகனுக்கு அருணகிரியைக் கண்டாலே ஆகாது; ஏன்?

காரணம் தெரியாது! கருத்துக்கள் பிடிக்காது!
மனசிலே இனம் புரியாத அசூயை!
இப்படி முருக உள்ளம் கொண்டார்களுக்கு எதிரிகள் தானே அமைந்து விடுவது ஒரு வாடிக்கை! வேடிக்கை!

* மாற்று சமயத்தவர் = வில்லிபுத்தூரார் திருத்திக் கொண்டார்!
* ஒரே சமயத்தவர் = சம்பந்தாண்டான் திருத்திக் கொள்ளவில்லை!

நோயுற்ற மன்னனின் பிணி தீர்க்க, பாரிஜாத மலரை, அருணகிரியால் கொண்டு வர முடியும் -ன்னு மன்னனிடம் போட்டுக் கொடுத்தான் சம்பந்தாண்டான்;

வேறு வழியின்றி அருணகிரியும் செல்ல வேண்டிய நிலைமை;
ஆனால் தேவர் உலகுக்கு உடலோடு செல்ல முடியாதே;
தன் உடலை அண்ணாமலைக் கோபுரத்தில் கிடத்திவிட்டு, உயிர் ரூபத்தில் சென்று, மலர் கொண்டு வந்தார் அருணகிரி!

ஆனால் அதற்குள், சம்பந்தாண்டான் கூட்டம், கோபுரத்தில் கிடத்திய உடலை இறக்கி, மண்ணிலே புதைத்து விட்டது;
மீண்டு வந்தவருக்கு மறுபடி உடல் கிடைக்கவில்லை; எத்தனையோ சுகித்த உடல், சுகித்துப் பின்பு சகித்த உடல்!

அருகே இருந்த மாண்ட கிளி ஒன்றின் உடலில் புகுந்து, மலரை ஈய,
மன்னன் பிணி தீர,
அருணகிரிக்குப் பிறவிப் பிணியும் தீர்ந்தது! = "உத்தமக்" கிளி!

ஆம், கிளியாய் இருந்து, அருணகிரி பாடிய கடைசிப் பாடல்களே = திரு வகுப்பு!
கிளி உருவிலேயே, களி கொண்டார்!
அதன் பின்னர், கந்தனின் கைத்தலத்தில் போய்க் கிளியாய் அமர்ந்து விட்டார் அடிகள்! "சிவலோகமே" என்று அவரே சொல்லி முடிக்கிறார்!


சேவலும் - மயிலும் மட்டுமே அவன் பறவைகள் என்னாது, தோழி கோதையின் கிளியும், அவனுடைய பறவையே ஆகி விட்டது!
ஆடும் பரி - வேல் - அணி சேவல் என
பாடும் கிளியே, நானாய் அருள்வாய்!


"முருகு" என்னும் பொருளைப் பலவிதமாக வகுத்துச் சொல்லுதல் = வகுப்பு!

* வேல் வகுப்பு
* மயில் வகுப்பு
* சேவல் வகுப்பு
* வேடிச்சி வகுப்பு (வள்ளி)
* சீர் பாத வகுப்பு
* ஆலய வகுப்பு

-ன்னு மொத்தம் 18 வகுப்புகள்!
நமக்கும் இந்தக் காலத்தில் 18 வகுப்புகள் இருக்கு-ல்ல? 12 ஆண்டுகள் பள்ளியில், 4 ஆண்டுகள் கல்லூரியில், 2 ஆண்டுகள் முதுகலையில்
= மொத்தம் 18 வகுப்புகள் நமக்கும் வருகிறது அல்லவா?:)

திருவகுப்பில் இன்னும் சில வகுப்புகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பட்டதாகச் சொல்லுவார்கள், 25 வகுப்புகளாக!
ஆனால், இறுதி வகுப்பு = சிவலோக வகுப்பு!
"அரு-உரு கெட, இரு வினை கெட, இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமே" என்று சேர்ந்து விட்டார் அருணகிரி!

இன்று நாம் பார்க்கப் போவது, திருப்பழனி வகுப்பு!
* எந்த வினையும் அணுகாமலே -ன்னு தொடங்கி
* தென் பழனி முருகேசனே -ன்னு முடிவுபெறும்


இந்தப் பாடல், பசும்பொன் தேவர் திருமகனின் விருப்பப் பாடல்;
பல மேடைகளில் இதைப் பாடி விட்டே, தன் உரையைத் துவங்குவார் முத்துராமலிங்கர்!
அவருடைய கணீர் குரலுக்கும், ஏற்ற இறக்கங்களுக்கும், இந்தத் திருவகுப்பு ஒரு பெருவகுப்பு!

இதற்குப் பொருள் சொல்ல வேணும் என்பது...
தில்லி வாழ் நண்பர் பாலசுந்தரம் (@bala_bose) அவர்களின் நெடுநாள் கோரிக்கை!
இன்று ஆடிக் கிருத்திகையின் போது, கை கூடியது! இதோ:


எந்த வினையும் பவமும் ; எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் ; எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வும் கொடிய ; எந்த வசியும் சிறிதும் - அணுகாமலே

வினை = செயல்
அடுத்தவர் நமக்குச் செய்யும் செயல், நாம் அடுத்தவருக்குச் செய்யும் செயல் = நல்ல செயல் செய்யுறோமா? கெட்ட செயல் செய்யுறோமா?

பவம் = பிறப்பு
அனு-பவம் = பிரதியாக, ஞானம் பிறப்பது

வினை செஞ்சாத் தான், பிறப்பு வரும்; வினை இல்லையேல் பிறப்பும் இல்லை!
ஆனா, வினை செய்யாம இருக்க முடியுதா?
"சும்மா" இருங்களேன் பார்ப்போம் ஒரு அஞ்சு நிமிசம்:)

சும்மா இருக்கும் திறம் அறியேம்!
அப்போ என்ன தான்யா வழி? = என்னால சும்மா இருக்கவும் முடியாது; ஆனா பிறக்கவும் கூடாது:))
தன் வினை தவிர்த்து, உன் வினை போதும் முருகா!
இந்த வினையால், கந்த வினையால், பிறப்பு வாராது.....

எந்த வினையும், எந்தப் பிறப்பும் வேணாம்!
எந்த விடமும், எந்த இடரும் வேணாம்!
எந்தச் சண்டையும் (இகல்), எந்தப் பழியும் வேணாம்!
எந்த வழுவும் (குற்றமும்), எந்தப் பிணியும் வேணாம்!
எந்த இகழ்ச்சியும், எந்த வசியும் (பிளவும்) வேணாம்!

= முருகா, இவை யாவும் என்னை அணுகாமலே...


எந்த இரவும் தனிமை ; எந்த வழியும் புகுத
எந்த இடமும் சபையில் ; எந்த முகமும் புகலும்
எந்த மொழியும் தமிழும் ; எந்த இசையும் பெருமை - சிதறாமலே

இரவில் தனிமை = ரொம்ப கொடியது!
அனுபவித்தவன் சொல்லும் போது தெரியும்! இந்த வரியை அப்படித் தான் எழுதுகிறேன்! (3:30 am)

எது தனிமை? 
= உடன் இருக்க வேண்டியவர்கள் இல்லாமல் போவது;
இருக்கிறேன் -ன்னு சத்தியம் செய்து குடுத்தவர்கள், இல்லாமல் போவது!

இப்படித் தனிமை புகுந்து வாடினாலும்...
எந்த மொழியிலும், என் சொந்த மொழியிலும் (தமிழிலும்)..
இசை = மானம்/ புகழ்; "ஈதல் - இசைபட வாழ்தல்"
எந்த இடத்திலும், எந்தச் சபையிலும்..
என் மானம் சிதறாமல்...

வந்தனை செய்து ; உன்சரண - நம்புதல் புரிந்த அருள்
வந்து அநுதினம் தனிலும் ; நெஞ்சில் நினைவின் படி
வரம் தர உவந்தருள் ; இதம் பெறுவது அன்றி நெடு - வலைவீசியே

கந்தனை வந்தனை செய்து
உன் சரணமே சரணம் என்று நம்புதல் புரிந்து, நெஞ்சிலே அவனையே தேக்கி
நான் இப்படியே வாழ்ந்து விட...
வரம் குடு முருகா! வரம் குடு முருகா! = இதுவே எனக்கு இதம்!

வஞ்ச விழி சண்டன் ; உறுகின்ற பொழுதும், "குமர
கந்த" என நன்கு அறையவும் ; தெளிவு தந்து உயிர்
வருந்து பயமும் தனிமை-யும் தவிர, அஞ்சல் என வரவேணுமே!!

பெரிய வலை (பாசக் கயிற்றை) வீசி, கோபப் பார்வை பார்க்கும் எமன் (சண்டன்)..
அவனைச் சொல்லித் தப்பில்லை; பண்ணது நானு! அவன் என்னை வாட்டும் போது கூட,
"ஐயோ" என அலறாமல், "ஐயா" என அழைக்கணும்!
குமரா, கந்தா -ன்னு உன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடும் இன்பம்!

முருகா, இனி ஒரு கணம், என்னைத் "தனிமையில்" இருக்க விடாதே! அஞ்சல் என வர வேணுமே!
நீ வா முருகா, என் தனிமை போயீரும்!
நீ வா முருகா, அஞ்சல் என வர வேணுமே!



தந் -தனன தந் -தனன ; டிண் -டிகுடி டிண் -டிகுடி

குண்ட மட குண்ட மட ; மண்டம் என நின்றும் உர
சந்தி மிலை பம்பை துடி ; திண்டிமம் முழங்கும் ஒலி - திசை வீறவே

தந் தனன, டின் டிகுடி -ன்னு தாளம் இசைக்க, ஆடி வா முருகா!
அணையில் ஓடி வரும் நீர் போல்,
சந்தி, பம்பை, துடி (உடுக்கை), திண்டிமம் (முரசு) -ன்னு பல ஒலிகள் கொட்ட, ஓடி வா முருகா!

தண்ட அமர் மண்ட அசுரர் ; மண்டை நிணம் என்று அலகை
உண்டு உமிழ்தல் கண்டு அமரர் ;  இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி ; பலம்பிட வரும்பவனி - மயில்வாகனா

மாண்ட அசுர சக்திகளின் கொழுப்பை, அலகால் உண்டு உமிழும் உன் மயில்!
அது கண்டு, அமரர்கள் பலரும் வணங்க..
உன் பாதங்களில்...
தண்டை, கிங்கிணி, சதங்கைகள் பலம்பிட, பவனி வா, மயில் வாகனா!


செந் தளிரை முந்து படம் ; என்றுள மருண்டு நிறை

சந்தன வனம் குலவு ; மந்தி குதி கொண்டு அயல்
செறிந்த கமுகின் புடைப ; துங்கிட வளைந்து நிமிர் - மடல்சாடவே

குளத்தில் உள்ள தாமரைத் தண்டுகள்; அதைப் பாம்பு -ன்னு நினைத்துப் பயந்து...
குரங்குகள் குதிக்கின்றன சந்தன வனத்திலே!
அருகிருந்த பாக்கு மரத்தில் தாவி, பாம்பு தானா? என்று நிமிர்ந்து பார்க்க, அந்தக் குதியலில் பாக்கு மடல் எல்லாம் சிதறி வீழ..

சிந்திய அரம்பை ; பல-வின் கனியில் வந்துவிழ
மென் கனி உடைந்த சுளை ; விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் ; தென்பழனி அம்பதியின் - முருகேசனே!!

* இளங் கமுகு (மெல்லிய பாக்கு), மரத்தின் மேலே இருக்கு!
* வெடித்த பலா, மரத்தின் கீழே இருக்கு!
* செண்பகப் பூக்களின் தேன், கொடிக்கும் கீழே இருக்கு!

குரங்குக் குதியலில் பாக்கு சிதறி, வெடித்த வேர்ப்பலாவில் வீழ,
பாக்கும் பலாவும் சேர்ந்து செண்பகப் பூந்தேனில் வீழ
சுவை கூட்டும் காடு! அப்படியான காடுகள் நிறை பழனி மலை!
என் அய்யா முருகா! அந்தக் காட்டிலே தொம் தொம் என்று ஆடி வா! என் முன்னே ஓடி வா!

என்னை இனியொரு கால்...
தனிமையில் வைக்காமல், தனிமயில் கொண்டு,
என் ஆவிக்குத் துணைவனாய்...
என் கூடவே இரு முருகா! - திரு முருகா, இரு முருகா!!


madhavipanthal.podbean.com
Read more »

Saturday, May 26, 2012

திருப்புகழ் Geographic Atlas!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
இந்த இனிய செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்!

Thirupugazh Geographic Atlas என்ற அடியேனின் சிறு பணியை,
முருகனின் தனிப்பெரும் தளமான, murugan.org இல் பதிப்பித்துள்ளார்கள்!

மேலே வாசிங்க:)

திருப்புகழ் = தமிழ்க் கடவுளாம், காதல் முருகன் மீதுள்ள தமிழ் மாலை!
* "முத்தைத் தரு" ன்னு துவங்கி....
* "ஏறு மயில் ஏறி" ன்னு நிறையும்!

இந்த ரெண்டு பாடலையும் விட்டுட்டுப் பார்த்தால்....
மீதமுள்ள பாடல்கள் பெரும்பாலும், Murugan Atlas or Murugan Map என்றே சொல்லிவிடலாம்!
ஒவ்வொரு ஊராக, அந்தந்த முருகன் மேல் பாடப்பட்டவை!

திருப்புகழ் தோன்றிய இடம்:
* திருவண்ணாமலை (அருணகிரி) = 79
* வயலூர் = 18

அறுபடை:
* திருப்பரங்குன்றம் = 14
* திருச்செந்தூர் = 83
* திரு-ஆவி-நன்-குடி (பழனி) = 97
* திரு-ஏர்-அகம் (சாமிமலை) = 38
* திருத்தணிகை = 64
* பழமுதிர்சோலை = 16

* வள்ளிமலை = 10
* தமிழ் ஈழம் = 15
.....இன்னும் பலப்பலச் சிற்றூர்கள்/ பேரூர்கள்


Hey, அங்கே வா, இங்கே வா ன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, பல ஊர்களைக் காட்டினான்!
அருணகிரியும், அவன் கூப்பிட்ட ஊருக்கெல்லாம் போய், தலம் தலமாகப் பாடியுள்ளார்!

ஒவ்வொரு பாட்டிலும், அந்த ஊரின் கதையோ, வரலாறோ கூட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!
= தமிழக ஊர் ஆய்வாளர்களுக்கு இது ஒரு ஆய்வுச் சுரங்கம்!

பல பதிப்பகங்கள், திருப்புகழைப் பதிப்பித்துள்ளன!
அவை சமய அளவில் மட்டும் இருக்கும்!
ஆனா இன்னும் துழாவினால், தமிழக ஊர்ப் பெயர் ஆய்வுகள், இசைக் குறிப்பு ஆய்வுகள் ன்னு....திருப்புகழ் = ஒரு கருவூலம்! புதையல்!!





அத்தனை திருப்புகழ் ஊர்களையும், ஒரே வரைபடத்தில் (Map), ஒன்னாத் திரட்டி...
* அந்தந்தப் புள்ளிகளின் மீது உலாவினால் = ஊர்ப்பெயரும்
* அந்தந்தப் புள்ளிகளைச் சொடுக்கினால் = அந்தந்தத் திருப்புகழும்
வருமாறு, ஒரு சின்ன பணியை - பலநாள் ஆசையைச் செய்த நிறைவு! இதோ உங்கள் Murugan Atlas:))
------------------------------------------------------------------------------------------------------------

இதை, தோழன் இராகவன் பிறந்தநாளான இன்று (May-27-2012).....
திருமுருகனின் மயில் கழுத்தில்...
மாலையாக அணிவித்துப் பணிகிறேன்!
Happy Birthday Ragava!:)



குறிப்பு:
1. காதல் முருகனின் இடுப்பு = Hairpin Bend! Plz drive with caution:)

2. திருப்புகழை வெறுமனே படிச்சாப் பிடிபடாது;
பாடணும் (அ) வாய்விட்டுப் படிக்கணும்! அப்போ தான் அந்தச் சந்தம் கொஞ்சும்!

3. திருப்புகழ், எனக்கு முதல் அறிமுகம், அம்மாவின் தங்கையான சுகுணாச் சித்தியின் வீட்டில்!
May be 4th-5th std! சும்மா பத்தோட பதினொன்னா, ஏதோவொரு சாமிப் புத்தகமா இறைஞ்சிக் கிடந்தது....
ஓவியத்தில் அன்பு மிக ஊறி
ஓம் எழுத்தில் அந்தம் அருள்வாயே!
படித்தவுடன் என்னமோ செய்ய....அவர்கள் வீட்டில் இருந்து திருடிக் கொண்டு வந்தது!:) Lifco பதிப்பக, Blue Color Book is still there, torn & ottufied with tape:))



இந்த Murugan Atlas முயற்சிக்கு நன்றி:
1. murugan.org editor, Mr. Patrick Harrigan
2. kaumaram.com, for their pdf links
3. VTS = VT சுப்ரமணியப் பிள்ளை

VTS = திருப்புகழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று சேகரித்தவர்,.... உவேசா வின் சேகரிப்புக்கெல்லாம் முன்னாலேயே...
இன்றும், திருத்தணிக் கோபுரத்தைப் பார்த்தவாறு மண்ணில் உறங்கும் எளிய மனிதர் = VTS!
மொத்தம் 16000 பாடல்கள் என்பார்கள்! கிடைத்தது = 1328 பாடல்களே!



பின்னூட்டம் (Feedback):
இந்த Thirupugazh Geographic Atlas இல் வேறேதேனும் Idea, Suggestion, Improvement - உங்களுக்குத் தோன்றினால்....
பின்னூட்டமாகவோ, மின்னஞ்சலிலோ சொல்லவும்! (shravan.ravi@gmail.com)
----------------------

இராகவனுக்கு இனிப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Read more »

Tuesday, February 07, 2012

தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!

(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan.orgஅதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan கேட்க...அதற்கான பதிவு இது!

Murugan.org -இல் இன்று பதிப்பித்து உள்ளார்கள்! அதன் சுட்டி இதோ)


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
...இப்படி பல விழாக்கள்!
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் ஏந்திய நாளே = தைப்பூசம்! -ன்னு "புராணம்" சொல்லும்

ஆனா, இட்டுக் கட்டிய புராணமா இல்லாம, இயற்கைத் தமிழாக...
 "வேல்" என்றால் என்ன? -ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!


1. வேல் - பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் - தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு!
திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

3. வேலின் அமைப்பு:

வேல் எப்படி இருக்கும்?
அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
எஃகு ஒரு கலப்பு உலோகம்!
இரும்பு + கரிமம் (Carbon) குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!

ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க,
வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் - இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!



4. வேலின் தோற்றம்!

வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)
எறிந்தால், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லக்கூடிய லேசான பளுவில் தான் வேல் செய்யப்படும்!
* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடு அற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்!:))
ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும்!
ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே!
சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

5. வேலும் ஈட்டியும் ஒன்றா?

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!
வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது 
என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு= அம்பு, யானைக்கு= வேல்!

6. வேலின் சிறப்புப் பெயர்கள்:
கூர் வேல், நெடு வேல்
சுடர் வேல், கொற்ற வேல்
வீர வேல், வெற்றி வேல்...
-ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

- இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா!

வேல் வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
-ன்னு அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே
(ஐங்குறுநூறு, கபிலர்)

* அதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து,
அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி
அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!
வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறி புடிச்சி ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன், என்னைத் திடீரென்று ஒதுக்கும் போக்கிலே துடிச்சிப் போய் நானே நொந்து போய் வாழுறேன்!
இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"
-ன்னு...இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி....

இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!


அவன் வேடத்தில் அவள்!

முருகன் வேடத்தில், வேலொடு வள்ளி!

இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது என்று அறிந்தோம்!
இன்றும், தமிழ்க் குடியினர்/கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

சிலப்பதிகாரத்தில் வேல்:
பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொல்லுவாரு; அதை ஈடுகட்டவோ என்னவோ....
சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக விரிவாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
-ன்னு முருக பக்தரான நக்கீரரே, இரண்டு அடிகள் மட்டுமே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?
- என்று வேல் விருத்தத்தை, அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே!
-ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, நம்ம அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
....
இணை இன்றி, தான் உடையான் - ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் - திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்!

வேல் பற்றிய பக்தி-இலக்கிய நூல்கள்:

பின்னாளில், வேல் பற்றிய பல பக்தி-இலக்கிய நூல்கள் வந்துள்ளன!
* இதற்கு முக்கிய காரணம் = அருணகிரி!
தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி செய்த முயற்சிகள் சொல்லில் அடங்கா!

ஆலயங்களில், வடமொழி அதிகம் புழங்கத் துவங்கி விட்ட காலத்தில், வடமொழியைப் பகைத்துக் கொள்ள விரும்பாது,
அதனொடு கூடவே சென்று, சிறுகச் சிறுகத் தமிழை நுழைக்க, அவர் செய்த முயற்சிகள் பலப்பல!

இதற்கு, அவருக்கு முக்கிய ஊக்க சக்தி = இன்னொரு தமிழ்த் தெய்வமான திருமாலின் ஆலயங்களில், சில நூற்றாண்டுக்கு முன்பு தான், தமிழ் பரவலாகத் தழைக்கத் தொடங்கியிருந்த புரட்சியைக் கண்டார்!

வேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளில் ஓதுதல்!உற்சவங்களில் வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆழ்வார்களின் தமிழை முன்னே ஓதிச் செல்ல....
இறைவனே தமிழின் பின்னால் வரும் காட்சிகளைக் கண்ட அருணகிரி, அதிலே மனம் பறிகொடுத்து,

திருமால் "வண்டமிழ் பயில்வார் பின்னே திரிகின்றவன்"-ன்னு பாடினார்!
இதே நிலை முருகன் ஆலயங்களிலும் வர வேண்டி, அவர் செய்த ஆரம்ப வேலைகள் பலப்பல!

அதில் ஒன்று தான், வேல் வழிபாடு!
* வேல் வகுப்பு
* வேல் விருத்தம்
= இவை வேல் வழிபாட்டை முன்னிறுத்த அருணகிரியார் செய்த பனுவல்கள்!
தனித்து வழி நடக்கும் என 
திடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணை அதாகும் 


திருத்தணியில் உதித்தருளும் 
ஒருத்தன்மலை விருத்தன் என 
உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே !!
(- வேல் வகுப்பு, அருணகிரிநாதர்)

அந்த வழியில் பின்னர் பாம்பன் சுவாமிகளும், வள்ளிமலை சுவாமிகளும், "வேல் மாறல்", "வேற் பதிகம்" போன்ற பனுவல்களை, வேலின் மீது செய்துள்ளனர்!

பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்!
பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!!


சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

"புராணப்படி" முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று கிளப்பிச் சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!
எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கிளப்பிக் கூறுவர்!:)

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு! பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா....பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்....நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!
என்னவனைப் போலவே, உயரமும் - நெடிதும் - அழகும் - அறிவுமான = வேல்!
தழுவ இனியது வேல்!
அவனைத் தழுவும் போது அவன் நழுவினால்.. போடா-ன்னு..
அவன் அந்தரங்க வேலைத் தழுவிக் கொள்வதில், இன்னும் சுகம்!:)

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து.....முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என "வேல்" தோன்றும்...
முருகா என்று ஓதுவார் முன்!

உசாத் துணை (References):

1. தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
2. முருகன் (அ) அழகு - திரு.வி.க
3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை (கழக வெளியீடு)
4. சிலப்பதிகாரம் - நாவலர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்
5. வேல் விருத்தம், வேல் வகுப்பு - அருணகிரிநாதர் (kaumaram.com) & Reforms of Arunagiri - Pongi Publications, Vallimalai
6. Tamil Traditions on Murugan - Dr.Kamil Zvelebil
Read more »

Sunday, July 10, 2011

நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார்: இளையராஜா!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பணி நிமித்தமாக Rio de Janeiro பயணம்! ஓர் இரவு, சற்று நலமின்மை! அதனால் ஒரு முக்கியமான பதிவு miss ஆயிருச்சி!

அப்படியென்ன நாளு-ன்னு கேக்கறீங்களா? = Jul-05-2011 (ஆனி மகம்)! ஒரு பெரும் தமிழ்ச் சான்றோரின் குரு பூசை (நினைவு நாள்)!
= யாரு? நாயன்மாரா? அல்ல!
= நாயன்மார் அல்லாத நாயன்மார்! யார் அவர்?


இசைஞானி இளையராஜா செய்த Thiruvaachaga Oratorio அருமையானதொரு படைப்பு!
ஒரு பழந் தமிழ்ப் பதிகத்தை, மேற்கத்திய இசை முறையில் தருவதற்கு நுண்ணிய இசைப் புலமை வேண்டும்! ஆனால்.....

இளையராஜா செய்தது Symphony-ஆ அல்லது Oratorio-வா? என்பதில் சர்ச்சைகள் எழுந்து,.......இன்றும் பேசப்படுகின்றன!
இளையராஜாவே அது Oratorio என்று சொல்லி விட்ட பின்பும்....விளம்பரப் பேரலை எழுப்பக் கருதி, ஒரு சிலர் பரப்பிய Symphony என்ற வணிக முயற்சிகளால், சர்ச்சையாகிப் போனது!
ஆனால் இந்தச் சர்ச்சைகளாலெல்லாம், தமிழ் உலகம் தந்த இசை ஞானியான, இளையராஜாவின் புகழுக்கு, ஒரு போதும் மாசு கற்பித்து விட முடியாது!

List of symphony composers என்று இங்கே Wiki-இல் பார்த்தால், ராஜாவின் பெயர் இருக்காது! ராஜாவே ஒப்புக் கொண்டதும் கூட!
அது வெறும் Oratorio, அவ்வளவே! இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

* Oratorio = நீண்ட இசைக் கோர்வை! புனிதப் பொருட்கள் மீதான இசை! பொதுவாகத் தேவாலயங்களில் பாடவல்லவை! நாடக மேடைகளுக்கு அல்லாமல், இசை மேடைகளுக்கு மட்டுமே உரித்தானது!
* Symphony = அதனினும் நுட்பமான இசைக் கோர்வை! கடினமான இலக்கணங்கள் கொண்டது! நான்கு அசை வடிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்!
1. opening sonata or allegro
2. slow movement, such as adagio
3. minuet with trio or solo sonata
4. and... allegro, rondo, or sonata

Symphony=பாடல் வரிகள் முக்கியம் அல்ல! இசை வடிவம் தான் முக்கியம்!
ஒரு முறை வடிவமைத்து விட்டால், பின்னர், திறமையுள்ள யார் வேண்டுமானாலும், அதை மீள் நடத்தி இசைக்கலாம்!
Beethoven, Schubert, Mendelssohn, Schumann போன்றவர்களின் சிம்பனிக்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன! பீத்தோவன் 5th Symphony புகழ், உலகம் அறிந்த ஒன்று!

இந்தியர் ஒருவர் எழுதிய சிம்பனி என்று பார்த்தால்...
இது வரை ஒருவரே! KS Sorabji! ஆனால் இதன் கடினத்தால், இன்று வரை இசைக்கப்படாமலேயே இருக்கிறது! :(

நம்ம இசைப் பொக்கிஷமான ராஜா செய்தது என்ன?
* தான் அமைத்த ஒரு Oratorio இசைக் கோர்வைக்கு ஏற்றவாறு, வரிகளைத் தேடியது! திருவாசகத்தில் எல்லா வரிகளும் அப்படியே பொருந்தி விடுமா?
* அதனால் தன் இசைக்கு/மெட்டுக்குப் பொருந்தி வரக் கூடிய திருவாசகப் பாடல்களை மட்டுமே தேடி, இசையூடே அமைத்து, மாலையாய்க் கட்டினார்!
= அதுவே அழகிய திருவாசக ஓரட்டோரியோ!


இந்நேரம் கண்டு புடிச்சிட்டு இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்! :)
யார் அந்த "நாயன்மார் அல்லாத நாயன்மார்"?

தெய்வத் தமிழிசைக்கு வந்து வாய்த்த பெருமகனார் = திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும்படியான...
*** திருவாதவூரர் (எ) மாணிக்கவாசகர்!

சைவ சமயக் குரவர் நால்வருள் மூத்தவர் என்றாலும்...
ஏனோ 63 நாயன்மார்களில், மாணிக்க வாசகரை வைக்கவில்லை! :(((
என்னளவில் இது பெருங்குறையே!

நாயன்மார் கதைகளில் இவர் வரலாறு வராததால், இளந் தலைமுறைக்கு, இவர் கதையைத் தனியே தான் சொல்ல வேண்டும்!:(

சைவத் திருமடங்கள், காலத்துக்கு ஏற்றவாறு மாறி....
மாணிக்கவாசகப் பெருமானின் கதையை, பெரிய புராணத்தோடு சேர்த்து, மற்ற அடியவர் கதைகளோடு ஒன்றாக்கி விட வேணும் என்பது என் பேரவா! சிவ சிவ! துணை நின்றருள்!


மாணிக்கவாசகரின் தெள்ளு தமிழ்த் திருவாசகத்தை,
* இளையராஜாவின் இசையிலும்,
* மரபு வழியிலான ஓதுவார் திருமுறையிலும்
ஒருமுறை கேட்போமா? வாங்க! வாங்க! கேட்டுக்கிட்டே வாசகத்தை வாசிங்க!

8ஆம் திருமுறை - திருவாசகம் 35 - அச்சப் பத்து:
(மாணிக்க வாசகர் அரசாங்கப் பணத்தைக் "களவாடியவர்" என்று கிளம்பிய போது, அவர் மனம் அச்சப்பட்டதா? என்ன சொல்லிற்று? அதுவே இந்த அச்சப் பத்து!)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்!
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றை வார் சடை எம் அண்ணல்
கண் நுதல் பாதம் நண்ணி....

புற்றில் இருக்கும் கொடும் பாம்பு? = அஞ்ச மாட்டேன்!
பொய்....இன்று பலருக்கு, மெய் போல் தோன்றினாலும் = அஞ்ச மாட்டேன்!
கட்டிய சடையான், நெற்றியிலே கண் உடையவன்,
என் அண்ணல்...அவன் பாதங்களை அடைந்து விட்டு...

மற்றும் ஓர் தெய்வம் தன்னை
உண்டென நினைந்து-எம் பெம்மாற்(கு)
அற்றிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

ஈசனை அடைந்த பின்னர், "மற்ற தெய்வங்களும் உண்டு" என்று...என் பெருமானிடத்திலே அற்று இல்லாதவர்கள் (உறுதியான பற்று இல்லாதவர்கள்)...
இவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!

ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில்...அதே பாடல்...

வன் புலால் வேலும் அஞ்சேன்!
வளைக் கையார் கடைக்கண் அஞ்சேன்!
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத்து ஆடு கின்ற

மாமிச வேடர்களின் வேல் = அஞ்ச மாட்டேன்!
வளையல் பெண்களின் காமப் பார்வை = அஞ்ச மாட்டேன்!
எலும்பும் உருகுமாறு பார்த்துக் கொண்டே இருப்பேன்! யாரை?

என் பொலா மணியை ஏத்தி
இனிது அருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

தில்லைச் சிறு அம்பலத்தில் ஆடுகின்றான்! துளையற்ற மணி = ஈசன்!
அவனைப் போற்றி, அவன் அருளைப் பருகாமல் இருப்பவர்கள்...
அன்பே இல்லாத அவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!


என்ன மக்கா, பாடலைப் படித்தும் + கேட்டும் இன்புற்றீர்களா?

'மற்ற தெய்வங்கள்' என்று சில கருத்துகள் வந்தாலும்...மொத்த திருவாசகத்தையும், இதைக் கொண்டே, அவசரப்பட்டு எடை போட்டு விடாதீர்கள்! :)
இது ராஜா, அவர் இசைக்குப் பொருந்தி வந்ததால் மட்டுமே எடுத்துக் கொண்டது! அதுவும் தீவிரமான மன உளைச்சலில் இருக்கும் போது, மாணிக்க வாசகர் பாடியது! அந்தச் சூழலையும் நோக்க வேணும்!

என்னமாச் சொல்லாட்சி பாருங்கள்! பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
* பொய் உரைக்கும் அரசியல்வாதிகள், மெய் போல் காட்டும் வித்தைகளை அஞ்ச மாட்டேன்-ன்னும் கொள்ளலாம்!
* நாம் நம்பிய ஒரு உள்ளமே, பொய்யை, மெய்யோ? என்று எண்ணி, என்னை மறுதலித்து விட்டால்? = அப்போதும் அஞ்ச மாட்டேன்-என்கிறார்!

கோபம் வேறு வருகிறது! இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே ஈசன்!
அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் அமைத்து விட்டேன் என்று பேசுகிறார்களே! ஐயோ...........
அன்பில்லாத அவரின் மனப்போக்கைக் கண்டே அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!.....என்று மொத்தம் 10 பாடல்கள்=அச்சப் பத்து!

மாணிக்கவாசகரின் கதை?

பொதுவாக, எல்லா நாயன்மார்களின் நினைவுநாள் போதும், பெரிய புராண புனிதப் பூச்சுக்கள்/ மிகைகளைக் களைந்து, மூலநூலில் உள்ளது உள்ளவாறு, இக்காலத்துக்கும் ஏற்றாற் போல் சொல்வேனே!
இன்று எங்கே அந்தக் கதை? மாணிக்கவாசகரின் கதை?

= நாயன்மார் அல்லாத நாயன்மார் திருவடிகளே சரணம்!
எங்கள் தமிழிசை வாழ வந்த, மாணிக்க வாசகப் பெருமான் திருவடிகளே சரணம்!


தொடர்புடைய பதிவு: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP