Wednesday, October 22, 2008

சீடனின் மனைவிக்கு விவாகரத்து செய்து வைப்பாரா?

சரி போகட்டும், உன் மனைவியை எனக்குத் தந்து விடுகிறாயா சீடனே? - ச்ச்சீய்...என்ன கேள்வி இது? கேவலமாக இல்லை? அதுவும் கேட்பது யார்? கோபுரம் ஏறி மட்டுமே கூவத் தெரிந்த ஒரு குரு!இந்த இப்பிறவிக்கு மட்டும் வழிகாட்டும் மந்திரம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா? அடுத்தவன் பெண்டாட்டியைத் தனக்குத் தந்து விடுகிறாயா என்று கேட்கிறார் இராமானுசர்!இந்தக் காலத்துப் துறவிகள் பலர் சொல்கிறார்களே....இகத்தைப் பார்த்தாலே...
Read more »

Sunday, October 19, 2008

சினிமா சினிமா! - எந்தப் பதிவர்களை வைத்துப் பக்திப் படம் எடுக்கலாம்?

இந்தப் பதிவைப் படிச்ச பின் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள், பாவங்கள் எல்லாமே கா.பி. அண்ணாச்சி, என் தம்பி வெட்டி பாலாஜி, இவர்களையே போய்ச் சேர வேண்டும் என்று சொல்லிக்கிட்டு என்னோட திருவிளையாடலை ஆரம்பிக்கிறேன்!1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த அடுத்த ரெண்டு வாரத்திலேயே Break The Rules பண்ணி,* நண்பனோடு...
Read more »

Wednesday, October 08, 2008

கோயிலில் முதல் மரியாதை யாருக்கு? - அபராதச் சக்கரவர்த்திக்கு!

அன்றும் அங்கே அதே பிரச்சனை தான்! கோயில் திருவிழாவில் முதல் முரியாதை யாருக்கு? இந்த முதல் மரியாதை, குடும்ப மரியாதை - சென்ட்டிமென்ட் சீனை எல்லாம் வைத்து எத்தனையோ கேப்டன் படங்கள், சரத்குமார் படங்கள் வந்து விட்டன! பெரிய தாம்பாளத் தட்டில் மாலையெல்லாம் வச்சி, பரிவட்டம் கட்டி, பல பேர் அருவா வீசி, முட்டி மோதிய பின்னர், முதல் மரியாதையை நம்ம ஹீரோவுக்குப் பூசாரி பண்ணி வைப்பாரு!ஆனால் அவர்கள் எல்லாம் சினிமா கதாநாயகர்கள்!...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP