Tuesday, August 31, 2010

நான்மணிக் கடிகையில் தமிழ்க் கடவுள்!

நான்மணிக் கடிகைஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது!நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன!ஒரு ஆரம் (necklace) போல இருக்கு!ஆகவே = நான்கு + மணிக் + கடிகை = நான்கு மணிகள் கோர்த்த மாலை! Four Stone Necklace!இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்! இவர் காலம் கி.பி 5-6 நூற்றாண்டு!மிக அருமையாகக் கருத்துக்களைக் கோர்க்கிறார்!மொத்தம் 106 பாடல்கள்!துவக்கப் பாடல்கள் இரண்டைத் திருமாலுக்கே ஆக்குகிறார் கவிஞர்!மதிமன்னு...
Read more »

திரிகடுகத்தில் தமிழ்க் கடவுள்!

திரிகடுகம்திரிகடுகம்-ன்னு ஆறாங் கிளாஸ் தமிழ்ப் புத்தகத்தில் செய்யுளை உருப்போட்ட ஞாபகம் இருக்கா? :))இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று! திருக்குறள் போலவே பல அறங்களைச் செப்புவது! ஆனால் இரண்டடிக் குறள் வெண்பா இல்லை, நாலடி வெண்பாவால் ஆனது!ஒவ்வொரு பாட்டிலும் மூன்று கருத்துக்கள்! ஒவ்வொரு மருந்திலும் மூன்று பொருட்கள் போல்!(சுக்கு,மிளகு,திப்பிலி)!மூன்று மருந்துகள் உடலுக்குச் செய்யும் நன்மை போல்,இதன்...
Read more »

சீவக சிந்தாமணியில் தமிழ்க் கடவுள்!

சீவக சிந்தாமணி:சீவக சிந்தாமணி அருங் காப்பியம்! பெருங் காப்பியம்!சமணம் சார்ந்த கப்பியம் என்று சமய முத்திரை குத்தி ஒதுக்கிட முடியாதபடி, தமிழ் நிறைந்து இருக்கும் அழகிய காப்பியம்!எழுதிய திருத்தக்க தேவரும் ஒரு சமண முனிவர்!சமணர்கள் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் ஆற்றிய தொண்டுகள் மிகப் பெரிது!ஆனால் சில சமயப் போர்களாலும், சமயவாதிகளாலும், நல்ல பல நூல்கள் தீக்கும், நீருக்கும் இரையாகியது,...
Read more »

மணிமேகலையில் தமிழ்க் கடவுள்!

மணிமேகலை:சிலம்பில் திருமாலைப் பற்றிய பல நுண்ணிய, அடுக்கடுக்கான தகவல்களைப் பார்த்தோம்! இப்போது மணிமேகலைக்கு வருவோம்!இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலை!ஒன்றின் கதைக் களன் இன்னொன்றின் தொடர்ச்சி!சிலப்பதிகாரக் கதையினை இளங்கோ எழுதினாலும், அதை அவருக்கு முதலில் சொன்னவரே சீத்தலைச் சாத்தனார் தான்! இதைச் சிலம்பின் பாயிரத்திலேயே குணவாயிற் கோட்ட நிகழ்வில் நாம் காணலாம்!சிலம்பைச் "சொன்னவர்", மணிமேகலையை...
Read more »

சிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

சிலப்பதிகாரம்: * நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்! * யாம் அறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்.... இதெல்லாம் சிலம்பின் பெருமைகள்! சிலம்பு பேதைப் பெண் கண்ணகியை மட்டுமா காட்டுகிறது? மேதைப் பெண் கண்ணகியையும் அல்லவா காட்டுகிறது! ஊரு விட்டு ஊரு வந்து, புது மாநிலத்தில் ஒரு பொண்ணு, அந்தூரு முதலமைச்சரை....நேரடியாகத் "தேரா மன்னா"-ன்னு கேட்க முடியுமா? நம்ம பெண் எம்.பி.க்கள் கூட இலங்கைக்...
Read more »

முல்லைப் பாட்டில் தமிழ்க் கடவுள்!

முல்லைப்பாட்டு:பத்துப் பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான நூல்! இயற்கை வாழ்வும், மக்கள் வளமும், முல்லை நிலக் காடும் கழனியும் என்று பலவும் பேசும்!தனித்தமிழ் அறிஞரான மறைமலை அடிகள், இதற்கென்றே, முல்லைப் பாட்டு - ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்!அத்தனை இயற்கை வளம், கணவன் மனைவி மன உணர்வுகளைச் சொல்லும் நூல்!* முல்லைத் திணை = இருத்தலும் இருத்தல் நிமித்தமும்* குறிஞ்சித் திணை = புணர்தலும் புணர்தல் நிமித்தமும்குறிஞ்சியில்...
Read more »

திருமுருகாற்றுப்படையில் தமிழ்க் கடவுள் பெருமாள்!

திருமுருகாற்றுப்படை:அருளியவர்: நக்கீரர்.இவரே தமிழில் முதல் ஆன்மீகப் பதிவர்!பின்னே..... எல்லாப் புலவர்களும் அகத்துறை, புறத்துறை-ன்னு பாட...இவர் மட்டும் தான் ஆன்மீகத்துக்குன்னே, தனியாக ஒரு ஆற்றுப்படை பாடினார்! எல்லாப் புலவர்களும் மன்னனை நோக்கி ஆற்றுப்படுத்த,இவர் தான் முதன் முதலில், இறைவனை நோக்கி ஆற்றுப்படுத்தினார்!மாயோனையும் பாடும் வாயோன் என்று தன்னை அறிவித்து, நமக்கும் அதை அறிவிக்கிறார் நக்கீரர்! திருமால்,...
Read more »

மதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்!

மதுரைக் காஞ்சிமதுரைக் காஞ்சி-ன்னா என்ன?காஞ்சிப் போன மதுரையா? :)இல்லை மதுரையும் காஞ்சிபுரமுமா?இரண்டுமே இல்லை! காஞ்சி என்பது காஞ்சித் திணை! வஞ்சி x காஞ்சி, உழிஞை x நொச்சி-ன்னு எல்லாம் சின்ன வயசில் உருப்போட்டு இருப்பீங்களே! :)இவையெல்லாம் போர்த் திணைகள்! வஞ்சிப்பூ சூடி வரும் எதிரிப் படைகளை, நாட்டின் எல்லையில் தடுத்து நிறுத்தி, அந்த நாட்டு வீரர்கள் காஞ்சிப்பூ சூடி, எதிர்ப்பது!ஆனால் இந்த நூலுக்கு அதுவும்...
Read more »

பெரும்பாண் ஆற்றுப்படையில் பெருமாள்!

பெரும்பாண் ஆற்றுப்படை ஆற்றுப்படை-ன்னா? ஆறுபடைவீடு-ன்னு சொல்றாங்களே, அதுவா?இல்லை!பண்டைக் காலத்தில் ஆர்க்குட், முகப் புத்தகமான ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இல்லை-ல்ல? எப்படி ஒத்த சிந்தனை, ஒத்த குழுவில் உள்ளவர்கள் சமூக இணைப்பாக்கம் (Social Networking) செய்ய முடியும்? தான் பெற்ற பயனை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வது எப்படி? = அதான் ஆற்றுப்படை! :)வறுமை அல்லது வேறு காரணங்களுக்காக வாட்டமுற்று இருக்கும் சில கவிஞர்கள்,...
Read more »

பரிபாடலில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

பரிபாடல்:பரிபாடல் போல் இறைவனை "மட்டுமே" அதிகமாகப் பேசும் சங்க நூலைக் காண்பது அரிது! அப்போதே ஆன்மீகப் பதிவுகள்! :)முருகனைப் பற்றியும், திருமாலைப் பற்றியுமான சங்கத் தமிழ்க் குறிப்புகள் தேடுவோர்க்குப் பரிபாடல் என்பது ஒரு களஞ்சியம்! அத்தனையும் இசைப் பாடல்கள்!அகம், புறம் இரண்டும் சார்ந்தது! ஆனால் புறத் திணையே அதிகம்! இன்றைக்கு கிடைக்கும் 22 பாடல்களில்...* வைகை/மதுரை மேல் 8 பாடல்கள்* முருகன் மேல் 8 பாடல்கள்*...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP