Thursday, January 27, 2011

விவாகரத்து செய்து வைப்பாரா சிதம்பரம் சிவபெருமான்?

நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராண மிகைப்படுத்தல் இல்லாமல், மூல நூலில் உள்ளது உள்ள படி சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...இன்று திருநீலகண்ட நாயனாரின் குருபூசை (நினைவு நாள்) - தை விசாகம் (Jan-27-2011)!கதையைப் பார்க்கலாமா? தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்! :)இவர் வாழ்க்கை சாதாரணப்பட்டது இல்லை! பல குடும்பச் சிக்கல்கள் கொண்டது!காரைக்கால் அம்மையார் என்னும் தோழி புனிதாவின் கதையைப் பந்தலில் படித்து...
Read more »

Thursday, January 20, 2011

முருகன் வீட்டு விசேடம்! முருகனருளில் 200 பதிவுகள்!

இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,அவன் பாடல்களுக்காகவே அமைந்து,இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!இங்கே சென்று வாழ்த்தி அருளுங்கள்!இனிமையான பித்துக்குளி முருகதாஸ் குரலில்....அழகான காவடிச் சிந்துப் பாடல் உங்களுக்குக் காத்துள்ளது!கூடவே பழனி மலை அழகனைத் தள்ளு முள்ளு இல்லாமல் தரிசனம் + பஞ்சாமிர்தம்! :)பின்னூட்டங்களை, இங்கல்ல,...
Read more »

Saturday, January 15, 2011

தை-01: வழி பிறந்தது! கோதைத் திருமணம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திப்பான தமிழ்த் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக! :)என்னாங்க? பொங்கல் பொங்கிச்சா? இன்பம் பொங்கிச்சா? கரும்பைக் கடிச்சாச்சா? தொலைக்காட்சியில் மூழ்கிட்டீங்களா?பதிவிலோ, தொலைக்காட்சியிலோ ரொம்ப மூழ்குறவங்களுக்கு, நாளைக்குச் சிறப்புப் பூசை உண்டு! உங்கள் கொம்புகளுக்கு சிறப்பு வர்ணம் அடிக்கப்படும்-ன்னு உங்க வீட்டுல சொல்றது...
Read more »

Thursday, January 13, 2011

மார்கழி-30: வங்கக் கடல் கடைந்த சங்கத் தமிழ்!

வாங்க வாங்க! இனிய தைத் திருநாள் - பொங்கல் வாழ்த்துக்கள்!மஞ்சள் கொத்துடனும், கரும்புடனும், நாளைக் காலையில் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்பதற்கு முன்னாடியே, இன்னிக்கு வங்கக் கடலைக் கடைஞ்சிருவோம்! :)இந்த ஆண்டு மார்கழியில் 30 நாட்கள்! அதனால் 30 பாசுரங்களும் முழுக்கப் பார்த்து விடலாம்! திருப்பாவைப் பதிவுகளின் க்ளைமாக்ஸ்-க்குப் போகலாமா? :)பொதுவா எந்த பெரும் ஆன்மீக நூலாக இருந்தாலும், அதற்கு* கடவுள்...
Read more »

Wednesday, January 12, 2011

மார்கழி-29: சிற்றஞ் சிறுகாலே! காமமா? மோட்சமா?

மார்கழியின் முக்கியமான நாள் என்பதால், சென்ற ஆண்டுகளின் மீள் பதிவை இடுகிறேன்!வாங்க! வாங்க! ஆட்ட இறுதிக்கு வந்துட்டோம்! போகி அதுவுமா என்ன கொளுத்துனீங்க? டயரை எல்லாம் கொளுத்தலை தானே?சரி, பறை அடிச்சீங்களா? ஆண்டாளும் பறை, பறை-ன்னு கேக்குறாளே! நீங்க கொஞ்சம் அவளுக்குப் பறையறது? :)இன்றைய பாட்டு மிக மிக விசேடமான பாட்டு! எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு! திருப்பாவை முப்பதின் சாரமும் இந்த ஒரே பாட்டு தான்!தினமுமே...
Read more »

Tuesday, January 11, 2011

மார்கழி-28: கடவுளாலும் முடியாத காரியம்...DNA!

முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான்! அன்பினால் சிறுபேர் அழைத்தனமும் சீறி-"அருளுவான்"! = எதுக்கு திட்டியவனைப் போய் வாழ வைக்கணும்?இது திருப்பாவை - மீள்பதிவு தான்! 2008 இல் எழுதியது! இந்த மார்கழியில் சில பல காரணங்களுக்காக, ஒன்னும் எழுதலை! அதான் இப்படி!பொங்கலுக்கு முன்னுள்ள மூன்று நாளும், மார்கழி முத்துக்கள்! அன்று வரும் பாசுரங்களில் ஒரு காதல் வேள்வியே அடங்கி இருக்கு! சும்மா வாசிச்சிப் பாருங்க,...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP