Friday, September 09, 2011

SatelliteCity=தமிழ்ப் "படுத்தல்கள்" & வேப்பிலை!

இந்தச் சுருக்கமான பதிவு, இரண்டு கோள்களின் பாற்பட்டது! 1. தமிழாக்க முயற்சிகள்2. பிழையான ஆக்கத்தை எதிர்க்கிறேன்-ங்கிற போர்வையில்...தமிழ் முயற்சிகளை எப்பமே கும்மியடித்து நகையாடும் பழக்கம்:( அண்மையில்.....தமிழக அரசின், திருமழிசைத் திட்டம்! சென்னைக்கு வெளியே ஒரு Satellite City = துணைக்கோள் நகர்! இன்று ட்விட்டரில்... அது என்ன "துணைக்கோள்" நகர்? இன்னுமா இந்தப் "படுத்தல்"? "உப நகரம்"-ன்னு சொன்னா என்ன? ஊசியாப் போகும் நகரம்? .......என்று துவங்கிற்று! கூடவே...தமிழ் ஆர்வலர்கள்-ன்னாலே, "படுத்தல்-ப்பா;...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP