Friday, August 22, 2008

மிஸ். பாவனா & பிரபல பதிவர்கள் நடிக்கும் "பதிவுலக ரோமாயணம்"!

தமிழ் கூறும் வலையுலகப் பெருமக்களே!வலையுலக வரலாற்றில் முதல் முறையாக....கனவுக் கன்னி பாவனா, கதாநாயகியாகத் தோன்ற...அடுத்த வாரம், உங்கள் அபிமானத் திரையரங்கு,மாதவிப் பந்தல் (Dolby Digital-A/C)-இல் காணத் தவறாதீர்கள்...கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ரிலீஸ்...*** Blogayanam - பதிவுலக ரோமாயணம்! ***அண்ணன் கானா பிரபாவின் பத்து தலை மாயா ஜாலக் காட்சிகள்!உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் உலா வரப் போகும், பதிவுலக ஆதி காவியம்...
Read more »

Wednesday, August 20, 2008

புதிரா? புனிதமா?? - நட்சத்திரப் பதிவர் குமரனின் கிசு கிசுக்கள்!!!

மக்கள்ஸ்! இந்தப் புதிரா புனிதமா-வில் அஞ்சா நெஞ்சுடன், வீரமாகப் பதில் சொன்னது ரெண்டே பேரு தான்! சிவமுருகன் & ஸ்ரீதர் அண்ணாச்சி!மற்ற அத்தனை பேரையும் நட்சத்திரப் பதிவர் குமரன் திரைமறைவில் மிரட்டியுள்ளதாக, திரைமறைவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன!இருப்பினும், இதில் அதிக கிசுகிசு கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சாதனை படைச்ச சிவாவைப் பாராட்டி, குமரன், இந்தப் பரிசை வழங்குகிறார்!சிவாவுக்கு வெகு விரைவில், இதே போன்று மாலை சூடி, திருமணம் நடைபெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்(றோம்)! :)விடைகள் கீழே...
Read more »

Thursday, August 14, 2008

நெல்லைச் சீமை! சங்கரன் கோயில்! ஆடித் தபசு! கோமதி அம்மன்! புற்று மண்ணு!

என்னலே என்று ஒருவர் பேசினாலே அவர் தின்னலே(Tinneley)-ன்னு ஈசியாச் சொல்லிறலாம்! உலகத் தமிழர்களில் பரந்து கிடப்பது Tins & Tans! Tins=Tinnevely & Tans=Tanjore! :)நெல்லுக்கு இறைவனே வேலி வேய்ந்த சீமை தான் நெல்லைச் சீமை! ஊரும், பேரும், ஆறும், சீரும் சொல்லி மாளாது! இருந்தாலும் நெல்லை-ன்னாலே இரண்டு மறக்க முடியாத விஷயங்கள் என்ன-லே? ஒன்னு அல்வா! இன்னொன்னு ஆடித் தபசு!இப்போ பலரும் அல்வா குடுக்கறாங்க! ஆனா...
Read more »

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்!அறுபத்தோரு ஆண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன என்று பார்க்கலாம் வாங்க! அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!அதற்கு முன், தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நேர்காணலை Rediff.com...
Read more »

Tuesday, August 05, 2008

ஆடிப்பூரம்: ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்? - 2

மூனு பேரும் இங்கிட்டு வந்து நில்லுங்க! பார்த்து விடலாம், யார் தேறுகிறீர்கள் என்று! - சென்ற பதிவு இங்கே! * திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், * மனம் மயக்கும் மதுரைக் கள்ளழகர், * எம்பெருமான், திருவேங்கடமுடையான் 105) உலகளந்த பெருமாள், திருக்கோவிலூர் பராக்-பராக்-பராக்! "என்ன கோதை? நான் தானே உனக்குப் பிடித்தமானவன்? ஓங்கி உலகளந்த "உத்தமன்"-ன்னு என்னைத் தானே பாடினாய்?" "வாருங்கள், அளந்தவரே! வாருங்கள்!...
Read more »

Monday, August 04, 2008

ஆடிப்பூரம்: ஆண்டாளைக் கட்டிக்க 108 பேர் போட்டா போட்டி! - 1

கோதை பிறந்த நாள் அன்று ஒரு சுவையான நாடகம் பார்ப்போமா? அவளைக் கல்யாணம் கட்டிக்க, நீ...நான்-ன்னு ஒரே போட்டா போட்டி! யாரு போட்டி போடறாங்க? மொத்தம் 108 பேரு போட்டி போடறாங்க! அவனவன் பெருமையை, அவனவன் அளந்து விடுறான்! ஸ்டைல் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறான்! ஆனால் இவ யாருக்கு மாலை சூட்டப் போகிறாளோ?...வாங்க மக்களே வாங்க! இன்னிக்கு Aug-04; ஆடிப் பூரம்! நம் கோதைக்குப் பிறந்த நாள்!ஹேப்பி பர்த்டே சொல்லிருவமா? கேக்குக்குப்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP