Saturday, November 28, 2009

சிங்கம் ஊதிய புல்லாங்குழல்

கண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்!5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்! ***முன் நரசிங்கமதாகி அவுணன்முக்கியத்தை முடிப்பான்* மூவுலகில்மன்னரஞ்ச(சும்)* மதுசூதனன் வாயில்குழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*நன் நரம்புடைய தும்புருவோடு*நாரதனும் தம்...
Read more »

Monday, November 23, 2009

குடமாடும் கூத்தன்

கண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை! அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும்! வா!' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில். இதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.***குடங்கள் எடுத்தேற விட்டு* கூத்தாடவல்ல எம் கோவே!*மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன்...
Read more »

Friday, November 13, 2009

வளர்ந்த சிங்கம்

குழந்தை, சுவரைப் பிடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தவுடன், மகிழ்ச்சியுடன் கைகொட்டிச் சிரிக்கும். இதைப் பார்க்கும் தாயும் சேர்ந்து, கை கொட்டி மகிழ்வாள். இந்தப் பருவத்தை, பிள்ளைத் தமிழில், சப்பாணிப் பருவம் என்பர்.பெரியாழ்வார், கண்ணன் கைகொட்டிச் சிரிப்பதை அனுபவித்து, மாணிக்கக் கிண்கிணி எனும் (1-7) இயற்றியுள்ளார்.இதில் 9-ம் பாசுரத்தில் நரசிம்மனை அழைக்கிறார்.***அளந்திட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கேவளர்ந்திட்டு*...
Read more »

Thursday, November 05, 2009

ஆளரிநாதன்

செங்கீரைப் பாசுரங்களைச் சொன்னால், நமக்கு என்ன கிடைக்கும்?****'அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!*என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுக' என்று*அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு*ஆன புகழ் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.உய்ய உலகு - 1-6-11'அன்னமாகவும், மீன் உருவாகவும்,...
Read more »

Monday, November 02, 2009

கோவிந்த கோளரி - நரசிம்ம அவதாரமா அல்லது ”சிம்ம” அவதாரமா ?

பெரியாழ்வாருக்கு யசோதை நினைவுகள் தொடர்கின்றன ...தவழ ஆரம்பித்த கண்ணன், தனது இரண்டு கைகளையும், முழந்தாள்களையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்திக் கொண்டு ஆடுகின்றான்.கண்ணனின் இந்த விளையாட்டை, கற்பனை யசோதை ரசிக்கின்றாள்!(பிள்ளைத் தமிழில், குழந்தையின் இந்த விளையாட்டுக்கு, 'கீரை' எனும் பதம் உண்டு. பெரியவர்கள் தாலாட்டுப் பாட, குழந்தை இவ்வாறு ஆடுவதற்கு, 'செங்கீரை ஆடுதல்' என்ற பெயரும் உண்டு. சிலர் இதை, 'கீரைக்குத்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP