சிங்கம் ஊதிய புல்லாங்குழல்
கண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்!5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்! ***முன் நரசிங்கமதாகி அவுணன்முக்கியத்தை முடிப்பான்* மூவுலகில்மன்னரஞ்ச(சும்)* மதுசூதனன் வாயில்குழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*நன் நரம்புடைய தும்புருவோடு*நாரதனும் தம்...