Friday, April 23, 2010

பித்துக்குளி ஹிட்ஸ் கேட்போமா? பால் வடியும் முகம்!

பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!இதனால் தான், இந்தக் காலத்திலும்,...
Read more »

Tuesday, April 20, 2010

பிறந்தநாள்: இராமானுசர் தவறு? சுட்டிக் காட்டியது யார்?

ஆகா! இராமானுசர் தவறு செய்வாரா? அடப்பாவி! அங்க வச்சி, இங்க வச்சி, கடேசீல இவர் மேலேயே கைய வச்சிட்டியா?-ன்னு ஒரு சிலர் பொங்கி எழுவது எனக்குத் தெரிகிறது!அவர்களுக்கு இராமானுசர் மேல அன்பு இருக்கோ இல்லீயோ...அடியேன் மேல் "பாஆஆசம்"...இருப்பதென்னவோ உண்மை! :)வணக்கம் மக்களே! இன்று சித்திரைத் திருவாதிரை (Apr 20, 2010)!உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும்.....காரேய்க் கருணை, இராமானுசரின் பிறந்த நாள்!Happy...
Read more »

Sunday, April 18, 2010

பிறந்தநாள்: ஆதி சங்கரர்! ஹே சண்டாள, விலகு விலகு!

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!இப்போ தான், ரங்கன் அண்ணா, ஆண்டாளின் வைதீக திருமண வைபவத்தையும், ஆளரிப் பெருமாளான நரசிம்ம வைபவத்தையும் எடுத்துக் காட்டி நிறுத்தியுள்ளார்!அவர் அடுத்த பனுவலான, இரண்டாம் ஆயிரத்துக்குச் செல்லும் முன், இதோ இடையில் சிக்கெனப் புகுந்து, சில இதர பதிவுகள்! :)* நாளை சங்கரர் பிறந்த நாள்! = சித்திரைத் திருவாதிரை! (Apr, 20, 2010)ஆதி சங்கரர் தோன்றிய நாள்! வேத தர்மம் அழியாது காக்கப்பட்ட...
Read more »

Sunday, April 11, 2010

ஆண்டாள் கல்யாண வைபோகம் - விருந்து சாப்புடலாம் வாங்க!!

(பாவை தன் கல்யாண வைபவத்தைத் தொடர்கிறாள் ...)பாவை: என்ன! இப்போதாவது, நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்னன்னு புரிஞ்சதா, இல்லே, இப்பவும் தூங்கிட்டயா?தோழி: ம்ம்! மேலே சொல்லு!பாவை: புரோகிதர்கள், கோவிந்தனை, என் வலது கால் கட்டை விரலைப் பிடிக்கச் சொல்லினர். உடனே கோவிந்தனின் உறவினர்கள், 'பெண்ணின் காலைப் பிடிக்காதே' என்றனர்! என் உறவினர்களோ, 'காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அவள் காலைப் பிடித்தே தீரவேண்டும்'...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP