Saturday, January 14, 2012

கோதைத்தமிழ்30: தமிழில் 12 வித மாலை @raama.ki.ayya

மக்களே வணக்கம்! இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்! கடந்த ஒரு மாதமாய், ஆடி ஆடி, அசைந்து அசைந்து... துண்டெழுத்து வீதியான ட்விட்டரில்... சிறப்புடன் வலம் வந்த தமிழ்த் தேர்... இதோ நிலைக்கு வந்து விட்டது! * நற்றமிழ் அறிஞர், நுட்பியல் பொறியாளர், * SPIC நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர்... * துறை சார் தமிழ் - அறிவியல் தமிழ் - சங்கத் தமிழ் என முழு வட்டம் சுழல் வல்லார்... * இணையத் தமிழில் இணையிலா ஈடுபாடு...
Read more »

கோதைத்தமிழ்29: What Time is சிற்றஞ்சிறுகாலே? @kryes

வணக்கம் மக்கா! இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிறைவுறப் போகிறது.....நிலைக்கு வரப் போகிறது.....நாளை க்கு.....தைப்பொங்கல் நாளிலே! அதுக்கு முன்னால, சின்னதா ஒரு warm down exercise:) யாரு பேசுறா இன்னிக்கி? நீங்களே கேளுங்க!:) சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ, குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! இற்றைப்...
Read more »

Thursday, January 12, 2012

கோதைத்தமிழ்28: ஓம் என்றால் என்ன? @FamousLadyTwitter

மக்கா வணக்கம்! இன்னிக்கி பேசப் போவது பிரபல பெண் ட்வீட்டர்! ஆனாப் பேரைச் சொல்லக் கூடாது-ன்னு எனக்கு உத்தரவு!:) விடிய விடியக் கதை கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா-ன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா சின்னம்மா-ன்னு சொல்லலாமா? உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன்:)) ஆனா கடினமான Clue குடுக்கலாமாம்! என்னத்த குடுக்க? * இவிங்க நல்லவுக, வல்லவுக, சேவல் பண்ணைச் சண்டை போடுபவக! * துரைமாருங்க புத்தகமாவே படிச்சி, Status...
Read more »

கோதைத்தமிழ்27: கூடாரை வெல்லும்!

இன்று பேச வேண்டியது ஒரு பிரபல எழுத்தாளர்! அவரின் நேரமின்மையால், ஒலித் துண்டு இல்லாத ஒரு பதிவு இது! Konjam Adjust Maadi:) இந்த 27ஆம் நாளுக்கு கூடாரவல்லி என்று பெயர்! பல வீடுகளிலும் இந்தக் காட்சி உண்டு! எங்கள் வீட்டுக் காட்சி இதோ....அம்மா காலையில் செஞ்ச சர்க்கரைப் பொங்கல்:) ஆனா நான் தான் ரொம்பச் சாப்பிட முடியாம, என்னமோ யோசனையாவே இருக்கேன்! ஒரு குரலைக் கேட்டா, அது இந்தப் பொங்கலை விட இனிப்பா இருக்கும்!...
Read more »

Tuesday, January 10, 2012

கோதைத்தமிழ்26: மாலே மணிவண்ணா @kanapraba

மக்கா, இன்று பேசப் போவது, என்றும் 16, எங்கள் @kanapraba!:) கா.பி என்று நான் செல்லமாக அழைத்தாலும், கானா என்பது தான் உலகப் புகழ்!:) இசையின் பால் மாறாத காதல் கொண்ட இந்த உள்ளம், அந்த இசையின் வடிவாகவே தன்னை விதம் விதமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.... அது றேடியோஸ்பதி ஆகட்டும், ATBC வானொலி ஆகட்டும், கானா FM ஆகட்டும்...இந்த Podcastயே ஆகட்டும்.... ஆனா, அந்த இசையினூடே, ஆழ்ந்த தமிழ்ப் பற்று ஒளிந்திருப்பதை,...
Read more »

Monday, January 09, 2012

கோதைத்தமிழ்25: திருமதி.செல்வம் @anandraaj04

மக்கா...இன்று பேசுவது, ட்விட்டரின் கப்பல் தளபதி, நாலடியார் நாயகர், நம்ம @anandraaj04 (எ) மகிழ்வரசு....பாட்டிலும் மகிழ்-ந்தேலோ ன்னு வருது!:) இசை விரும்பி, தமிழ் விரும்பி, தத்துவ விரும்பி.....என்ன சொல்றாரு-ன்னு நீங்களே கேளுங்க:) நன்றி ஆனந்த் (எ) மகிழ்:) உங்கள் சேவை #365பா-க்கு இன்னும் தேவை:) ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத், தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த, கருத்தைப்...
Read more »

Sunday, January 08, 2012

கோதைத்தமிழ்24: தமிழ் அர்ச்சனை தேவையா? @kryes

மக்கா, வணக்கம்! இன்னிக்கிப் பேசப் போவது நானு! நானே நானு:) @kryes So, No Intro! Just listen & Have Fun:) கோதை 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்யும் தமிழ் அர்ச்சனை - நாம எல்லாரும் தெரிஞ்சிக்கலாமா? நன்றிடா @kryes :)) நன்றியை @dagalti க்கு தான் சொல்லணும்! "எல்லாரையும் பேச வைக்கறீக, நீங்களும் பேசுங்களேன்"-ன்னு சொன்னது அவரு தான்:) அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! சென்று அங்கு தென் இலங்கை செற்றாய்...
Read more »

Saturday, January 07, 2012

கோதைத்தமிழ்23: கிரந்தம் தவிர் of ஆண்டாள் @lalitharam

மக்கா, இன்னிக்கி பேச வேண்டியவரு -  நம் இசையாளர், இசை விமர்சகர், இசை எழுத்தாளர் - லலிதாராம் (எ) @lalitharam  திடீர் வெளிநாட்டுப் பயணத்தால், அவர் ஒலிக்கோப்பு இயலவில்லை! மன்னிக்க! பதிவின் ஒலியை, இந்த ஆளரிப் பெருமாள் என்னும் சிங்கம் முழங்குவதில் கேட்டுக் கொண்டே படிங்க!:) மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும், சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து, வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து...
Read more »

Friday, January 06, 2012

கோதைத்தமிழ்22: பள்ளிக்கட்டு @mSathia

மக்கா, இன்று பேசப் போவது = தமிழ்க் கணிமையாளர்! தமிழ்த் தொழில்நுட்பவியலர்! தமிழ் ஆர்வலர்! இவர் மட்டுமல்ல! இவர் மொத்த குடும்பமும் கூட!:) கதை, கதாபாத்திரங்களை அலசுவதில் வல்லவர்! மாபாரதக் கதைமாந்தர்கள் பற்றிய ஒரு iPhone/Android App (செயலியும்) செய்துள்ளார்! சத்தியா (எ) @msathia என்ன சொல்லுறாரு கேளுங்கோ... நன்றி சத்தியா, அழகிய விளக்கம்! இதைச் சிங்கை வானொலியில் ஒலிபரப்பி விடலாமா?:) அங் கண் மா ஞாலத்து...
Read more »

கோதைத்தமிழ்21: வள்ளல் @SeSenthilkumar

மக்கா, வணக்கம்! இன்றைய தாமதத்துக்கு மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன்! நேற்று அதிகாலை கிளம்பி.......இப்ப தான் வீடு வந்து சேர்ந்தேன்.....இதோ பதிப்பித்து விட்டுத் தூங்கச் செல்கிறேன்! இன்னிக்கி பேசுறவரு =  ஒவ்வொரு நாளும் ட்விட்டரில் இடையறாது Good Morning சொல்பவர்! பலரையும் தம்பி என்று அரவணைத்து அழைப்பவர்! பிள்ளைப் பாசம் மிக்கவர்! தமிழுணர்வு கொண்டவர் = யாரு? = செந்தில்குமார் (எ) @SeSenthilkumar தான்!...
Read more »

Wednesday, January 04, 2012

கோதைத்தமிழ்20: உக்கம்-தட்டொளி @arutperungo

மக்கா, வைகுந்த ஏகாதசி வாழ்த்துக்கள்! இன்று பேசப் போவது = கவிக்கோ, காதல்கோ, தமிழ்க்கோ! யாரு? = நான் "கோ" என்று அழைக்கும்....கவிஞரு @arutperungo தான்:) கோ-வின் காமத்துப்பால் கவிதைகளுக்கு நான் பெரும் ரசிகன்:) இதோ அந்தக் காமம் செப்பாது கண்டது மொழிமோ!:) அமெரிக்கா விஸ்கான்சினில் வில்லு வண்டியோட்டினாலும், பையனின் வீதி என்னமோ பெங்களூரில் தான்!:) கோதைத்தமிழில் என்ன சொல்லுறாரு கவிஞரு? நீங்களே கேளுங்க! நன்றி...
Read more »

Tuesday, January 03, 2012

கோதைத்தமிழ்19: கொங்கை @Bala_Bose

மக்கா, வணக்கம்! நேற்றைய காதல்குளிர்/ காய்ச்சல் குறைந்து விட்டது:) அதனால் இன்று தாமதமின்றி, சரியான நேரத்தில் பதிக்கிறேன்:) இன்றைய பேச்சாளர்-பையன். பாலசுந்தரம் (எ) @Bala_Bose :) தமிழ் பால் மிக்க ஆர்வம் கொண்ட பாலா, #365பா-வில் கொட்டும் எழிலான பின்னூட்டங்களே சொல்லி விடும்....இவன் தமிழ் வல்லமையை! இவனை என்னால் கடிந்து கொள்ளவே முடியாது! ஏன்-ன்னா தில்லியில் உள்ள வடக்குச் சாமிமலைக்கு நெருக்கத்தில் இருப்பவன்!...
Read more »

கோதைத்தமிழ்18: மாதவிப் பந்தல் @OruPakkam

மக்கா, இன்றைய தாமதத்துக்கு மன்னிக்க! நேற்றிரவு தூக்கமில்லை! அதான்:) இன்று பேசுபவர் யாரு? = இலக்கியவாதி, எழுத்தாளர், மாற்றுச் சிந்தனையாளர், பின் நவீனத்துவ நிபுணர்...பல சிறுகதைப் போட்டிகளின் நடுவர் = ஸ்ரீதர் நாராயணன் என்னும் @OruPakkam எனக்குப் பெரும் உற்சாக ஊட்டி! கோர்வையான பேச்சாளர்! நல்ல நண்பர்... என்னைக் கலாய்ப்பதில் அன்னாருக்கு அளவிலா ஆனந்தம்...இதோ உங்கள் முன்னே! நன்றி ஸ்ரீதர் அண்ணாச்சி!...
Read more »

Sunday, January 01, 2012

கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?

மக்கா, இன்னைக்கு பேசுபவருக்குத் தொண்டை கட்டி விட்டது! நேற்றைய New Year Party அப்படி:) அதனால் இன்றைய Podcast-இல் நீங்களே வாய் விட்டுப் பேசிக் கொள்ளவும்:)) முக்கியமா ஒன்னு சொல்லணும்! இந்தப் பொண்ணுங்க, நேற்றைய பாட்டில் = வாயில் காப்போனைப் பாடினாங்களா? (அ) எழுப்பினாங்களா? "எழுப்பினாங்க"-ன்னு சொன்னா, அப்பவே காவல்காரர்கள் பணியில் தூங்குற வழக்கம் இருந்திருக்கோ?:) எதுக்கும் பழைய பாட்டை ஒரு தபா, look...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP