Thursday, July 28, 2011

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? ஏன்?

கிரந்தம் தேவை தானா? = தவிர்க்கணுமா? எழுதலாமா?
- இது பற்றி இணையத்தில் ஏற்கனவே பல தளங்களில் உரையாடல் நிகழ்ந்துள்ளது!

Unicode Consortium, கிரந்தத்தைத் தமிழ்ப் பலகையில் கொண்டாந்து கலந்தோ (அ) தமிழைப் புதிய கிரந்தப் பலகையில் கொண்டு போய் வைத்தோ...
இந்தக் குழப்படி பற்றி, படம் வரைந்து முன்பு விளக்கி இருந்தேன்! இராம.கி ஐயாவும் சிறப்புப் பதிவு இட்டிருந்தார்கள்!

ஆனால்.....இந்தப் பதிவு Unicode கிரந்தம் பற்றி அல்ல!
அதையும் தாண்டி....அடிப்படையிலேயே......
1. கிரந்தம் தமிழுக்குத் தேவை தானா?
2. கிரந்த எழுத்து பற்றிப் பல்வேறு தமிழர்களின் "Mood" என்ன?-என்று பார்க்கும் பதிவே இது!

ஏன் இப்படித் திடீர்ப் பதிவு-ன்னு பாக்குறீங்களா?

Twitter-இல், அப்பப்போ இது பத்திக்கும்! காரசாரம் தூள் பறக்கும்!
அண்ணன் @tbcd தலைமையில் தமிழ் ஆர்வலர் குழுவும், குழுவல்லாத சில ட்வீட்டர்களும், பிரிச்சி மேய்ஞ்சி பந்து வீசுவாங்க! IPL போட்டிகளை விட ஆர்வத்தைத் தூண்டும்!:)
அப்படித் தான் இன்னிக்கும் தூள் பறந்தது! சில பேருக்கு, அடிப்படையே தெரியாமல், தங்கள் மனசுக்குத் தோனுவதையே வைத்து உரையாடினார்கள்! பல டமால்-டுமீல் கேள்விகளும் எழுப்பப்பட்டன!

அத்தனை பேர் ஆதங்கத்தையும் ஒன்னாத் திரட்டி.....இதோ...கிரந்தம் FAQ! @twitter மக்களுக்கு நன்றி!


1. கிரந்தம் என்பது என்ன? அது வடமொழியா?
கிரந்தம் மொழி அல்ல! அது ஒரு எழுத்துரு (Notation) மட்டுமே!
வடமொழி ஓசைகளைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட ஒரு Notation!

கீழே படத்தைப் பாருங்க......கொஞ்சம் தமிழும் இருக்கும் ('யத') ! 'ஜ'-வும் இருக்கும்! புரியாத Round Round Jilebi-யும் இருக்கும் :)
பண்பாட்டுக் கலப்பு + வடமொழி வீச்சு! இவை அதிகார/அரச மட்டத்தில் தான் முதலில் பரவத் தொடங்கியது!
அந்த அயல் ஓசைகளுக்குத் தமிழில் நேரடியான எழுத்து இல்லை...அதை எழுத ஒரு Lipi (எழுத்துரு) உருவாகியது! அது பல்லவர்கள் காலம்!
பின்பு வந்த சோழர்கள் - அந்த ஆட்சியின் பண்டிதர்களால் - அரசுமுறை, கல்வெட்டு என்று எல்லாவற்றிலும் கிரந்தம் கன்னாபின்னா-ன்னு பரவியும் விட்டது!


2. கிரந்த எழுத்தக்கள் எவை?
தமிழில் கலந்து விட்ட அடிப்படைக் கிரந்த எழுத்துக்கள்: ஜ, ஸ, ஷ, ஹ! கூடவே க்ஷ, ஸ்ரீ

ஆனா இவை ஆறு மட்டும் தான் கிரந்த எழுத்து-ன்னு நினைச்சிறாதீங்க!
மொத்தம் 16 உயிர் x 34 மெய் = 500+ எழுத்துரு உண்டு!
நல்ல வேளை, எல்லாமே தமிழ்ப் பலகையில் புகுந்து விடவில்லை!

எந்தச் சில ஓசைக்கு எழுத்து இல்லையோ, அவை மட்டுமே அடிப்படையாப் புகுந்தன!
வேறு சில ஓசை, ka, kha, ga, gha, na -ன்னு இந்தியில் வருமே, அவை எல்லாம் உள்ளாறப் புகவில்லை! வேதப் படிப்பு/கல்வெட்டோடு நின்று விட்டன:)

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்!
அது வேற "க", இது வேற "க"! ஓசைக்காக அதையும் தமிழில் புகுத்துவோம்-ன்னு, நல்ல வேளை, புகுத்தாம விட்டாங்க!
இல்லீன்னா க, ங, ச, ஞ-க்கு பதில், நாமளும் ka, kha, ga, gha, na-ன்னு படிச்சிருப்போம்!:))

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்-ன்னு சொன்னேன்-ல்ல? பொதுவா "க" என்பதே, இடத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க வல்ல Flexibility (நெகிழ்வு) தமிழில் உண்டு! ஆங்கிலத்துக்கும் இது பொருந்தும்!

யம்மாடியோவ்...தமிழ் எழுத்துக்கள் = 247-ன்னு மலைச்சிப் போகத் தேவையே இல்ல! மொத்தம் 31 எழுத்து தான் தமிழில்!
உயிர்=12, மெய்=18 & ஆய்தம்=1! மீதியெல்லாம் உயிர்-மெய் கலவை எழுத்துக்களே!


சரி, வரலாறு போதும்! அது நடந்து முடிந்த கதை! தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்!:)

3. கிரந்தம் கலந்து எழுதுவது = தப்பா? சரியா?
ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியரைப் பொறுத்த வரை = தப்பு!
"வடசொல் ஒரீஇ"-ன்னு தான் சொல்லுறாரு!

அவர் காலத்தில், பண்பாடு ரொம்பக் கலக்கவில்லை! இருந்தாலும் பக்கத்து ஊரு, அண்டை நாட்டு வாணிப முறையில், சில சொற்கள் அங்கும் இங்கும் புழங்கின! அந்தச் சொற்களைக் கையாள, அவர் வகுத்துக் குடுத்தது:
* தற்சமம்: கமலம் = அப்படியே எழுத முடிபவை
* தற்பவம்: பங்கயம் (பங்கஜம்) = தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை

தொல்காப்பியம், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையானது!

தொல்காப்பியர் மாயோன், சேயோன் (திருமால், முருகன்) என்று இருவரையுமே தமிழ்க் கடவுளாத் தான் காட்டுறாரு! = ஆனா நாம ஒத்துப்போமா? நம்ம மனசுக்குப் எது பிடிச்சி இருக்கோ அதானே "வரலாற்று உண்மை"! :)
அட போப்பா, தொல்காப்பியர் சொன்னதெல்லாம் இன்னிக்கி செல்லாது-ன்னு சொல்லீருவோம்-ல்ல? :) அதே போல் தான், அவர் சொன்ன "வடசொல் ஒரீஇ" என்பதும் செல்லாமப் போயிருச்சோ? :(

4. கிரந்தம் இல்லாம, இலக்கியத் தமிழை எழுதவே முடியாதா?
முடியும்!

சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன்-ன்னு யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!
பிராகிருத மொழி (சமஸ்கிருதம் அல்ல) விரவி வரும் சமண சமயம் கூட, அதன் தமிழ் இலக்கியத்தில் கிரந்தம் தவிர்த்து, தமிழையே தாங்கியது!

அவ்வளவு ஏன்? பின்பு வந்த எளிமையான பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது கொஞ்சம் அரிது தான்! ஆனால்...ஆனால்...


5. கிரந்தம் இல்லாம, இன்னிக்கி தமிழை எழுதவே முடியாதா?

இது ரொம்பச் சிக்கலான கேள்வி!
அதுவும்.........பல சமயங்கள், பல மொழிகள்-ன்னு கலந்து, "தமிழர்" என்னும் ஒரே குடையின் கீழ் வாழ்கிறார்கள்!
அவரவருக்குப் பேர்கள், ஊர்கள்-ன்னு அமைஞ்சிப் போச்சி! "Santosh" என்பதைச் "சந்தோசு"-ன்னு எழுதினால், அவர் கோவிச்சிப்பாரா-ன்னு தெரியாது!

என்னை "இரவிசங்கர்" என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன்! நண்பர்களிடமும் அப்படியே புழங்கச் சொல்கிறேன்! அவரவர்களே ஒத்துக்கிட்டா, அப்போ பிரச்சனையில்ல! ஆனால்.....
குஷ்பு-வுக்கு என்ன தான் வயசானாலும், கோயில் கட்டிய கொலவெறி ரசிகர்கள் இன்னும் இருக்காங்களே....குசுபு-ன்னு எழுதினா என்னைக் கொலை பண்ணவே வந்துருவாங்களோ? :))

இதுக்கு, என்ன தான் வழி?
ஆலயங்களில் தமிழை முன்னிறுத்திய இராமானு'ஜ'ர், தன்னை "இராமானுசன்" என்றே கையொப்பம் இட்டார்!
இலக்கியங்களிலும் அவரை "இராமானுசன்" என்றே குறித்து வைத்தார்கள்! இது அவரே விருப்பமுடன் செய்து கொண்டது!

ஆனாலும் எல்லாரும் இராமானுசர் ஆகி விட விரும்புவதில்லை! அதே சமயம் தமிழும் கலப்படம் இல்லாமல் இருக்கணும்! அதுக்கு என்ன வழி?

* Mr. Santosh என்பதை, அவர் விரும்பவது போல், திரு. சந்தோஷ் என்று எழுதலாம்!
* ஆனால், "எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று புழங்காமல்...."எனக்கு ரொம்ப மகிழ்ச்சி"-ன்னே புழங்கலாம்! :)

* தமிழால், தனி மனித உரிமை பாதிக்கிறது-ன்னு பேச்சும் எழாது!
* அதே சமயம், மொழிக்கு வளஞ் சேர்க்கும் தமிழ்ச் சொற்களும் தேய்ந்து போகாது!


6. இப்படியெல்லாம் மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணுமா? ஏன்?
உம்ம்ம்ம்...இது நல்ல கேள்வி!
* க'ஷ்'டம்-ன்னு எழுதினாத் தான், நான் சந்தோசமா இருக்கேன்! "துன்பம்"-ன்னு எழுதறது ரொம்ப துன்பம்-ப்பா!:)
* க'ஷ்'டத்தில் இருக்கக் கூடிய ஒரு அதிர்வு, "துன்பத்தில்" இல்லை!

- இப்படியெல்லாம் சில இலக்கியவாதிகள் பேசக் கூடும்! பேசியும் உள்ளார்கள்! தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)

தமிழுக்கு எப்போதுமே "நெகிழ்வுத் தன்மை" உண்டு!
தனி மனிதர்களின் பெயர்ச் சொற்களுக்குக் கொடுக்கப்படும் நெகிழ்வை, எல்லாவற்றுக்குமே தவறாப் பயன்படுத்த நினைச்சா எப்படி?

எப்படியோ கிரந்த எழுத்து உள்ளே வந்து விட்டது! முதலிலேயே இடம் குடுத்திருக்கக் கூடாது! குடுத்தாச்சு!........இடத்தைக் குடுத்தா மடத்தையும் புடுங்குவேன்-ன்னா எப்படி? :(


7. அதுக்காக கிரந்த எழுத்தை வெறுக்கணுமா? Is Grantham Untouchable?

Nopes! கிரந்தத்தை வெறுக்கச் சொல்லவில்லை! கிரந்தத்தை ஒழித்தால், நம்மளோட பாதி வரலாறு காணாமப் போயீரும்!
சரியோ/தவறோ...பழஞ் சுவடி, கல்வெட்டையெல்லாம் அரசர்கள் கிரந்தத்தில் எழுதி வச்சிட்டாங்க! அரசாங்கத்தை ஒட்டி வாழ்ந்த "அந்நாளைய படித்தவர்களின்" பின்புலம் அப்படி!

நாம், ஒருக்காலும் மரபியல் பதிவுகளை அழித்து விடக் கூடாது!
கல்வெட்டுப் படிப்புக்கு கிரந்தம் தேவை தான்! ஆனால் அவை துறை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே!

மற்ற தமிழர்கள், இயன்ற வரை, இயல்பான தமிழில் புழங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேணும்!
"கஷ்டம்" என்பதைக் "கடினம்"-ன்னு சொல்வதில் கடினம் இல்லை! கொஞ்சம் மெனக்கெடணும்! அவ்ளோ தான்!
"தஸ்தாவேஜ்"-ன்னு முன்பு எழுதினாங்க! ஆனா, இப்போ "ஆவணம்"-ன்னு எழுதினாத் தான் நமக்கே பிடிச்சிருக்கு, இல்லீயா?:)

நம் தலைமுறையில் மெனக்கெட்டால், அடுத்த தலைமுறையில் நல்ல தமிழ் பரவும்!
நம்மால் இயன்ற வரையில் மெனக்கெடுவோமே! ஒன்னும் கொறைஞ்சிப் போயீற மாட்டோம்!



8. Dai krs, எல்லாம் நல்லாத் தான் சொல்லுற! ஆனா அதே கேள்வியைத் தான் நான் திருப்பித் திருப்பிக் கேக்குறேன்! = ஏன் இப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணும்? அதனால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை?ங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல? அதனால் தானே அதுக்குச் சிறப்பு?

உம்ம்ம்ம்...இதுக்குப் பதிலைச் சுருக்கமாச் சொல்லுறேன்!
மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் வரும் பயன் என்ன?-ன்னு நம்ம @nchokkan சரியான நேரத்தில் கேள்வி கேட்டு, என் சிந்தனையைத் தூண்டி விட்டார்! அவருக்கு நன்றி!

a) ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல?
ஆங்கிலம் எல்லாமும் ஏற்றுக் கொள்வதில்லை!
Alphabets are now 26! You cannot change that! It only accepts punctuation, diacritical marks etc.......to spell French Names and similar stuff!
α,β,γ are all notations in Scientific English! But they dont become English Alphabets!
Even in Scientific Tamizh medium, we use only angles=α,β,γ Not angles=க,ங,ச!:)

மற்றபடி ஆங்கிலத்தின் Universal Acceptability, அந்நாட்டின் அரசியல் பரவலால் தானே தவிர, மொழித் தன்மையால் அல்ல! இது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்!

'உற்றார்' என்று ஒலிக்கும் 'ற்று' ஓசை ஆங்கிலத்தில் இல்லை! அதுக்காக ஒரு புது எழுத்தைப் புகுத்தி விடுவார்களா?
They write uppercase "R" for ற்று!
They only "adapt".....NOT "adopt"! - Gotcha?

b) வடமொழித் தாக்கம் எல்லா இந்திய மொழிகளிலும் உண்டு! தமிழால் தனித்து இயங்க இயலுமா?
இயலும்! இயலும்! இயலும்!

தமிழில் வடமொழித் தாக்கம் போல், வடமொழியிலே தமிழ்த் தாக்கமும் உண்டே! அதை ஏன் யாரும் பேசுவதில்லை?
பண்டைத் தமிழ்க் கடவுள்களான மாயோன்(திருமால்), சேயோன்(முருகன்) அல்லவா, அங்கு விஷ்ணு/ஸ்கந்தன்-ன்னு ஆனார்கள்?
பூவை-நிலை என்னும் திணை/துறை, அங்கு போய் பூ'ஜை' ஆகவில்லையா? அது வரை அங்கே பலி குடுத்த யாகம் தானே?

கொடுக்கல்-வாங்கல்.....எல்லா மொழிகளிலும் உண்டு!
தொல்காப்பியரும் ஒதுக்கவில்லை! தற்சமம்/தற்பவம்-ன்னு அவரு குடுத்த Flexibility-யை முன்பே பார்த்தோம் அல்லவா!
ஆனால் Fundamental-யே கொடுக்கல்-வாங்கல் பண்ண முடியாது! அது மொழி என்னும் தனித்த அடையாளத்துக்கே கேடு!

c) மொழி வெறும் கருவி தானே? அதுக்கு எதுக்கு இம்புட்டு.......?
மொழி கருவி தான்! ஆனால் கருவி மட்டுமே அல்ல! அதையும் தாண்டி...
* இனத்தின் அடையாளம்,
* பண்பாட்டின் அடையாளம்,
* பெரும் தொன்மத்தின் அடையாளம்!

Children are NOT born "for" you! Children are just born "through" you!-ன்னு பேசலாம்! உண்மையும் கூட!
ஆனா.....அம்மா-அப்பா உறவு just natural convenience, அவிங்க வெறும் கருவி தானே, விட்டுத் தள்ளுறா-ன்னு ஒருத்தன் சொன்னா, அவனை நாம என்ன செய்வோம்?

அம்மா-அப்பா, நம் வேர்களின் அடையாளம்! மொழியும் அப்படியே!


அண்டை வீட்டாரிடம் அன்பாப் பழகலாம்! ஆனால் அங்கு போய் புதுப் பெண்டாட்டியுடன் படுக்க முடியாது!
இல்ல, எனக்கு அங்கே படுத்தால் தான் நல்லா இருக்கு, அதிர்வா இருக்கு-ன்னு சொன்னா? :((
"சந்தோஷம்" என்பதில் உள்ள அதிர்வு, "மகிழ்ச்சியில்" இல்லை-ன்னு நாமளே சொன்னா? = குடும்பம் என்னும் இல்லம் சிதைந்து போகும்! நம் இல்லறமே நமக்கு நல்லறம்!

d) தவிர்த்து எழுதுவதால் தமிழுக்கு என்ன நன்மை?
கிரந்தச் சொற்களின் புழக்கம், தெரிந்தோ தெரியாமலோ, ஆதிக்க சாதி அரசியல் மூலமாகப் பெருத்து விட்டது! அதை இப்போது பேசிப் பயனில்லை!
ஆனால் தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் விடக் கூடாது! மொழியில் உள்ள சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து போனால், தொன்மமும் சேர்ந்தே தொலைந்து போகும்!

* பல தமிழ்ச் சொற்கள் இப்படிச் செத்து விட்டன!
ஒருபுடை உருவகம்= ஏகதேச உருவகம்,ரேழி=வெராண்டா, பாழ்=பூஜ்ஜியம், சோறு=சாதம், சாளரம்=ஜன்னல், இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்....
* இன்னும் பல தமிழ்ச் சொற்கள் செத்துக் கொண்டே இருக்கின்றன! பண்பாடு=கலாச்சாரம்! முகவரி=விலாசம்! காட்டு=உதாரணம்

எவனும் தமிழ்ப் பண்பாடு-ன்னு சொல்லுறது இல்ல! தமிழ்க் "கலாச்சாரமாம்"! அந்த அளவுக்கு கலப்படம் செய்து விட்டார்கள்!
பாடநூல்களிலேயே, "ஏக-தேச" உருவகம்-ன்னு தான் இருக்கு! ஏக்-தோ-தீன் உருவகம்-ன்னு மாத்தாம இருந்தாச் சரி!:(

இப்படி ஒவ்வொரு எழுத்தாய், சொல்லாய், பொருளாய் விட்டுக் கொண்டே இருந்தால்...
கடைசியில் துளு, செளராட்டிர மொழிகளுக்கு ஆன கதி தான், தமிழுக்கும் நேரும்!

அதனால் தான்.....கிரந்தக் கலப்பால், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லாக் காணாமல் போவதைத் தவிர்ப்போம்-ன்னு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறது! மற்றபடி இதுல அரசியல் ஒன்னுமில்லை!
தமிழ்ச் சொற்கள் செத்துருக் கூடாது = அதான் இந்த முயற்சியில் கிடைக்கும் "நன்மை"!

நல்ல வேளை, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் தொன்மத்துக்கும், பண்பாட்டுக்கும் அரணாய் இருக்கின்றன!
நாமும் ஆற்றின் கரையை அப்பப்போ வலுப்படுத்துவோம்! ஆற்றிலே மணலை அள்ளி அல்ல! :(



முடிப்பாக.....

தமிழுக்கு எப்போதும் நெகிழ்வுத் தன்மை உண்டு!
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)! - ஏன்னா அவை தமிழ் மொழிக்கு வளஞ் சேர்க்கும் சொற்கள் அல்ல!

ஆனால்...
இந்த விலக்கு தனி நபருக்கும், சில நிறுவனக் குறியீடுகளுக்கும் மட்டுமே!

ஸ்ரீரங்கம் என்ற இடத்தின் பெயரை, திருவரங்கம் என்று புழங்கலே அழகு! அவனையே எண்ணி வாழ்ந்த ஆழ்வார்கள் எங்காவது ஸ்ரீரங்கம்-ன்னு பாடி இருக்காங்களா?.........தேடினாலும் கிடைக்காது!
"ஆவியே அமுதே, திருவரங்கத்து அரவணைப் பள்ளியானே"-ன்னு தான் இருக்கும்! ஆவியே அமுதே, ஸ்ரீரங்க ஸ்ரீவத்ஸ ஸ்ரீநிவாஸா -ன்னு இருக்காது :)

* Mr. Gnana Skandan என்ற நண்பரை, ஞானக் கந்தன் என்று நான் அழைக்க முயல்கிறேன்! ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை! என்ன செய்ய?
= அவர் பெயருக்கு நான் கட்டாயம் மதிப்பளிப்பேன்! I want to respect his name! ஞானஸ்கந்தன் என்றே அழைப்பேன்!
* அதே சமயம், இராமானுசன் என்று தானே விரும்பி எழுதுபவரை, எழுந்து நின்று, கரம் கூப்பி, வரவேற்பேன்!

மற்றபடி, பெயர்ச் சொல் அல்லாத பலப்பல கிரந்தச் சொற்கள்
- தஸ்தாவேஜ், கஷ்டம், சந்தோஷம்
இவற்றையெல்லாம்
- ஆவணம், கடினம், மகிழ்ச்சி
-ன்னு ஒலிக்கப் பழகிக் கொள்வதில் தவறே இல்லை!
கொஞ்சம் ஈடுபாடு தான் தேவை!.....நான் ஈடுபடப் போகிறேன்! நீங்கள்???
யானே தவமுடையேன்!
யானே தமிழ்ச் சொல்லால் சொன்னேன்!
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!!! (ஆழ்வார் பாசுரம்)


214 comments:

  1. My spl thanks to @iamkarki for inspiring கிரந்தம் FAQ!
    Also thanks to @tbcd @nchokkan @4sn @njganesh @jsrigovind @elavasam @scanman @ksrk @tparavai - The Gangs of Twitter! :)

    ReplyDelete
  2. நீ புரியாம‌ பேசிய‌துக்குதான் இந்த‌ ப‌திவுன்ற‌த‌ இப‌ப்டியும் சொல்ல‌லாமா? ஹிஹிஹிஹி

    ஜோக்ஸ் அபார்ட், ந‌ல்ல‌ ப‌திவு

    நான் பெய‌ர்ச்சொல் விஷ‌ய‌த்தில் ம‌ட்டுமே முர‌ண்டு பிடித்தேன். பிடிப்பேன்.

    ம‌ற்ற‌ப‌டி, இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை...வேதங்கள் கிரந்தத்தில் வாசிக்கும் போதுதான் ஸ்வரமாக வரும்..ஆகையால் நடைமுறையில் நல்ல தமிழில் உரையடுங்கள்.துறை சார்ந்தவர்கள் கிரந்தத்தை பயன்படுத்தட்டும்.இதனால் தமிழ் அழிவதில்லை.கிரந்தம் பயன்படும் இடத்தில் தமிழ் ஆர்வலர்கள் அதை எதிக்காமல் இருக்க வேண்டும்.அடியேனுடைய ஆசை அதுதான்...!

    ReplyDelete
  4. சரியான பார்வையில் அமைந்துள்ளது இப்பதிவு...

    "ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...

    ஆலோசனை ஏதும் உண்டா...??

    ReplyDelete
  5. அன்பு இரவிசங்கர்:-)

    கிரந்தம் மக்களால் ஏற்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. இனி இப்படி எல்லாம் தீர்மானம் போட்டு அதை ஒழிக்க இயலாது. இதனால் தமிழுக்கு துளி நன்மை இல்லை. ஆங்கிலம் புதிய எழுத்தை ஏற்பதில்லை என்பது உண்மை அல்ல. கிரந்தம் தம்ழில் கலந்து பல நூறு ஆண்டுகள் கழிந்தா பின்னர் தான் ஆங்கில எழுத்து J, W ஆங்கில அரிச்சுவடியில் கலந்தன. மலையாளம், தெலுங்கு என்ற புதிய மொழிகள் கூட காலத்தால் தமிழில் கிரந்தம் கலந்ததுக்கு பிற்பட்டவையே.அவை இன்று செம்மொழி கூட ஆகிவிட்டன.ஆனால் நாம் இன்னும் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என விவாதிக்கிறோம்.விவாதத்தால் பொழுது போகுமே ஒழிய மொழிக்கும், மக்களுக்கும் பலன் ஏதும் ஏற்படும் என தோன்றவில்லை

    ஜெர்மனியை செருமனி என எழுதினால் தமிழ் வளர்ந்துவிடுமா? சக்கரத்தை மீள்கண்டுபிடிப்பு செய்வதுக்கு ஒப்பான விஷயம் இது.

    ReplyDelete
  6. :)

    கிரந்த ஆதரவாளர்களை சீனாவில் கொண்டு போய் விட்டு சீன மொழியில் அவர்களுடைய பெயரை எழுதச் சொல்லனும்.

    ஈழவர்கள் ஜெர்மனியை யேர்மனி என்று எழுதிபுழங்குகிறார்கள், ஜானி யைக் கூட யானி ன்னு எழுதலாம் தப்பே இல்லை.

    எனக்கு சீனா அலுவலகத்தில் ஷன்னா(ன்) ன்னு பெயர் வைத்தார்கள், ஏனென்றால் அதைத்தான் அவர்களால் சரியாக பலுக்க முடியும், எனக்கு உபர்பாக இல்லை. சிங்கப்பூர் கூட சீனர்களுக்கு

    Chinese : 新加坡
    Pinyin : xīn jiā pō
    Literal Meaning : Singapore

    ஜின்ஜியபூ தான்.

    ஒரு மொழியின் ஒலி மொழிப் பேசுபவர்களுக்கு புரிந்தால் போதும், அயலர் பலுக்குதலுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதாக எந்த இலக்கணமும் இல்லை, மொழிப்பற்றிய அறிவு குறைந்தோர்கள் மட்டுமே தேவையற்ற பரிந்துரைகளை செய்துவருகிறார்கள்

    ReplyDelete
  7. கோவியாரே...

    ஜெர்மனின்னு எழுதினால் தமிழர்கள் யாருக்கும் புரியாதா?:-)

    காய்ச்சி என்பது கிரந்தம் நீக்கபட்ட தனிதமிழ் சொல்.கிரந்தம் கலந்த தமிழில் இதன் மூலம் என்னன்னு சொல்ல முடியுமா?

    ReplyDelete
  8. நல்ல பதிவு.

    இதில் ஒரு கோணம்: எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு 1:1 என்று இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

    சந்தோசம் என்று எழுதினாலும் சந்தோஷம் என்று உச்சரிக்கலாம்.

    ராமானுசர் என்று எழுதினாலும் ராமானுஜர் என்று உச்சரிக்கலாம்.

    பழக்கத்தின் மூலமாக எங்கு எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வோம் (eg. Ghost, Rough)

    புது ஒலிகளை நம் நாக்குகளில் புழங்கவிடமாட்டோம் என்று பிடிவாதம் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்து வேண்டுமா என்பது தான் கேள்வி.
    அது சாத்தியமும் அல்ல.

    பங்கம் என்பதை bungam என்று இயல்பாகப் படிக்கிறோம். bungkam என்று உச்சரிப்பதில்லை.

    இதைப்போலவே பிற இடங்களில் ga/ka வித்தியாசங்களை நாம் பழக்கம் மூலமாகக் கற்றுக்கொள்வோம்.


    இவ்வளவு நீட்டி முழக்குகிறேன், ஆனால் என்னளவில் ஜ,ஷ பயன்படுத்துவதை எல்லாம் தவிர்ப்பேன் என்று தோன்றவில்லை. பழகிவிட்டது என்பது தான் உண்மையான காரணம். விஷயம் என்பதை 'விடயம்' என்று எழுதும்போது, அதை அப்படியே உச்சரிப்பதாக நினைப்பதால் ஒரு மனத்தடை ஏற்படுகிறது.


    என் நிலைப்பாடு: status quoவான ஜ, ஷ, ஹ அதுபாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டும். பெயர்கள் தவிர்த்து, சொற்களில் அவற்றின் பயன்பாடும் இயல்பாகவே தேய்ந்துவிடும் என்றே நினைக்கிறேன். ஸ -வை (பெயர்கள் தவிற) அனேகமாக யாரும் இப்போது பயன்படுத்துவதில்லையே.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ////ஜெர்மனின்னு எழுதினால் தமிழர்கள் யாருக்கும் புரியாதா?:-)
    //

    எம்சிஆர், பாக்கியராசு, ரசினிகாந்து ன்னு சொல்வது தமிழுக்கு நெருக்கமாக அமையும், சிறுநகர் மக்கள் அவ்வாறு தான் சொல்லுவார்கள், நாம ஆங்கிலம் படித்து பழகியதால் பிற மொழி எழுத்துகளை சொல்ல முடிகிறது, ஒரு சீனனுக்கு 'R' ல் தொடங்கும் அல்லது இருக்கும் சொற்களை பழக்கிப் பாருங்கள்.


    கிரமத்தில் குசுப்பு ன்னு சிரித்துக் கொண்டே சொல்லுவர்களே அன்றி 'குஷ்பு'ன்னு 'பஷ்ட'மாக ஒலிக்கமாட்டார்கள் கிராமத்தினர். அவங்க போகாத ஊரை ஜெர்மனி என்றால் என்ன யேர்மனி என்றால் என்ன சொல்லிவிட்டு திருப்பிக் கேட்டால் 'செருமனியோ என்னவோ' ன்னு தான் சொல்லுவாங்க. படிச்சவங்களுக்காக மொழிகளை வளைக்க அல்லது வளைக்கலாம் என்று பரிந்துரைக்க யாருக்கும் உரிமை இல்லை

    கிரந்தம் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஏன் லக்‌ஷமி யை நம்மவர்கள் இலக்குமி என்று எழுதிவந்தார்கள் அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா ?

    ReplyDelete
  11. // விஷயம் என்பதை 'விடயம்' என்று எழுதும்போது, அதை அப்படியே உச்சரிப்பதாக நினைப்பதால் ஒரு மனத்தடை ஏற்படுகிறது.//

    விஷயம், விடயம் உபரிச் சொல்லாத்தான் வழக்கில் இருக்கிறது, அது இல்லாமலே வரிகளை அமைக்க அல்லது பேசமுடியும். எ.க

    உங்களிடம் ஒரு விஷயம் பேசனும்

    உங்களிடம் ஒன்று கூறனும் அல்லது பேசனும்.

    இங்கே விஷயம் இன்றி இருக்கும் இரண்டாவது வரியின் பொருள் மாறவில்லை. இதே போன்றே அனைத்து விஷயம் நுழைக்கப்பட்ட வரிகளிலும் அவை தேவையின்றியே நுழைக்கப்பட்டு இருக்கின்றன.

    ReplyDelete
  12. //"ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...//

    ராஜா என்ற சொல்லே அரசன் என்ற சொல்லின் திரிபே,

    அரசன் > ராசன் > ராஜ அல்லது ராஜா

    ராஜா ஜெய்சிங்(கம்) - அரசன் வெற்றி அரிமா அல்லது மன்னர் வெற்றி அரிமா

    :)))))

    ReplyDelete
  13. KRS,

    நான் அவ்வபொழுது உங்களது எழத்துக்களை வாசிப்பேன். சிரமம் என்பதே ஒரு சம்ஸ்கிருத வார்த்தை. எனது நண்பன் ஒருவன் தன்னுடைய பெண் குழந்தைக்கு பெயர் தம்ழில சூட்ட விரும்பினான்... அவனுடைய பல தெரிவுகள் சம்ஸ்கிருத மூல சொற்க்கள். e.g. சந்திரா, கமலா போன்றவை. இது போல இன்றைய தமிழ்ர்களுக்கு எது தூய தமிழ் வார்த்தை என்றே தெரியவில்லை. இப்படி இருக்க க்ரந்தம் சேர்த்தல் என்ன சேர்க்க விட்டால் என்ன? தமிழை நான் நேசிக்கறேன் ஆனால் இது போன்ற பதிவுகளால் நாம் கால விரயம் தான் செய்கிறோமா?

    PS: Sanskrit verbal root śram: "to exert effort, labor or to perform austerity"
    ஆஹ்வனம் என்பது magazine என்று பொருள்...

    ReplyDelete
  14. கோவி கண்ணன்:விஷயம், விடயம் உபரிச் சொல்லாத்தான் வழக்கில் இருக்கிறது

    நஹீ.
    ஆஃப் த டாப் அஃப் மை ஹெட்:


    - அதுதானா விஷயம்?
    - அவன் விஷயன் தெரிஞ்சவன்
    - விஷயத்துக்கு வருவோமா?

    இந்த மாதிரி, உபரியா இல்லாம, நட்டநடுவாவும் வழக்குல இருக்கு.

    இதெல்லாம் வேற மாதிரி சொல்ல முடியாதான்னு கேட்டா, முடியும்தான். ஆனா அதில்ல விஷயம்!

    விஷயமோ, விசேஷமோ நான் சொல்ல வந்தது சொல்லின் தேவையைப் பத்தி இல்லை.
    இன்னிக்கு வஜ்ரம்ங்கறது புழக்கத்துல இல்லை. அதுனால வைரம்ன்னு எழுதுறதுல யாருக்கும் தயக்கம் இருக்காது.

    ஆனா விஷயம்ங்கறது தான் புழக்கத்துல இருக்குற உச்சரிப்புங்கறப்போ 'விடயம்' 'ன்னு எழுதறதுல ஒரு மனத்தடை இருக்கு ('விடயம்'னு எழுதி 'விஷயம்'னு படிக்கலாம்னாலுமே). அதைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  15. ஈடுபடப்போகிறேன் எனச் சொல்லியிருக்கீங்க ரவி! ஸந்தோஷம்! உங்க அளவுல நீங்க செய்யற எதுவுமே சரிதான். சொல்லிட்டுத்தான் செய்யணும்ன்றது இல்லை! உலகத்தைத் திருத்த முயற்சி செய்வதைவிட நம்மை நாம் மட்டுமே செம்மை செய்துகொண்டால், எல்லாமே நன்றாகவே நடக்கும்! வாழ்க உங்கள் பணி!

    ReplyDelete
  16. In Bengali, Loki=Lakshmi, Suraj=Surya, Ajoda=Ayodhya, and so on ... Are they not proud of their language? .. Even in Hindi/Punjabi there are many words like Sapna (for Swapna) that are used commonly

    ReplyDelete
  17. @கார்க்கி
    //ஜோக்ஸ் அபார்ட், ந‌ல்ல‌ ப‌திவு//
    //ம‌ற்ற‌ப‌டி, இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்//

    நன்றி கார்க்கி! உன்னிடம் இருந்தே துவங்கட்டுமா? மங்களகரமா:))

    >இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்< = இது நல்ல சேதி, இது நல்ல பொருள், இல்லீன்னா இது நல்ல விடயம்!:)

    ReplyDelete
  18. @சாரல்
    //நல்ல கட்டுரை...நடைமுறையில் நல்ல தமிழில் உரையடுங்கள்.துறை சார்ந்தவர்கள் கிரந்தத்தை பயன்படுத்தட்டும்//

    தெளிவான புரிதலுக்கு நன்றி!

    //கிரந்தம் பயன்படும் இடத்தில் தமிழ் ஆர்வலர்கள் அதை எதிக்காமல் இருக்க வேண்டும்.அடியேனுடைய ஆசை அதுதான்...!//

    தமிழ் ஆர்வலர்கள் யாரும் கிரந்தத்தைக் கண்ணை மூடிக்கிட்டு எதிர்ப்பதில்லை-ங்க!
    அது வழக்குத் தமிழில் வந்து உட்கார்ந்து கொண்டு சேட்டை பண்ணும் போது மட்டுமே எதிர்க்கிறார்கள்!

    கிரந்தச் சுவடிகள், கல்வெட்டுத் தமிழறிஞர்கள்-ன்னு எத்தனையோ பேர் இருக்காங்களே!

    ReplyDelete
  19. //அகல்விளக்கு said...
    சரியான பார்வையில் அமைந்துள்ளது இப்பதிவு...//

    நன்றி!

    //"ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...//

    தமிழ்ப்"படுத்தலாம்" = தமிழாக்கலாம்-ன்னு சொல்லுவோமா?:)

    முதலில் ராஜா ஜெய்சிங் என்ற நபர் அதுக்கு உடன்படுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!
    உடன்பட்டால், ராசா செய்சிங்-ன்னு எழுதலாம்! வெற்றிக்கோ-ன்னும் எழுதலாம்!
    ஜெய்=வெற்றி ராஜா=கோ!

    ராஜா ஜெய்சிங் என்பவர் பழங்கால மன்னர்-ன்னா, அப்போ வெற்றிக்கோ-ன்னு எல்லாம் மாத்தீற முடியாது! வரலாற்றுக் குழப்பம் வரும்! ராசா செய்சிங் என்றே பலுக்கலாம்!

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. //எம்சிஆர், பாக்கியராசு, ரசினிகாந்து ன்னு சொல்வது தமிழுக்கு நெருக்கமாக அமையும், சிறுநகர் மக்கள் அவ்வாறு தான் சொல்லுவார்கள், நாம ஆங்கிலம் படித்து பழகியதால் பிற மொழி எழுத்துகளை சொல்ல முடிகிறது, ஒரு சீனனுக்கு 'ற்' ல் தொடங்கும் அல்லது இருக்கும் சொற்களை பழக்கிப் பாருங்கள்.
    //

    எம்ஜிஆர், பாக்கியராஜ், ரஜினி என்பதும் தமிழ் தான்.எந்த கிராமத்தில் இன்னும் எம்சிஆரு, ரசினி என்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.சீனனுக்கு ஆர் வருதோ இல்லையோ, தமிழனுக்கு ஜே, ஜா எல்லாம் வருது. ஜெயலலிதா, ஜெயாடிவின்னு தான் எல்லோரும் சொல்கிறாரக்ளே ஒழிய செயா டிவின்னு சொல்லும் யாரையும் நான் பார்த்தது இல்லை.

    //கிரந்தம் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஏன் லக்‌ஷமி யை நம்மவர்கள் இலக்குமி என்று எழுதிவந்தார்கள் அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா ?//

    பேச்சு தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் இருக்கும் இடைவெளியே காரணம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நம் வலைபதிவுகள் மூலம் மட்டுமே தமிழ்நாட்டை பற்றி அறிய இயலும் பிற்கால தலைமுறையினர் "அந்த காலத்தில் தமிழர்கள் கணிணி என தான் புழங்கினார்கள்.கம்ப்யூட்டர் என யாரும் சொல்லவில்லை" என நினைத்து கொள்வார்கள்.

    சரி காய்ச்சி என்பது எதை குறிக்கும் தனிதமிழ் சொல் என கேட்டிருந்தேன்:-)பதிலை நானே போடுகிறேன்.அது ஹாஜி என்பதன் தனிதமிழாக்கம்.மக்களுக்கு ஹாஜி என்றால் புரியுமா இல்லை காய்ச்சி என்றால் புரியுமா>?

    ReplyDelete
  22. @செல்வன்
    //அன்பு இரவிசங்கர்:-)//

    சொல்லுங்க அன்புச் செல்வன் அண்ணா:)

    //கிரந்தம் மக்களால் ஏற்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது//

    மக்களிடம் கலந்து-ன்னு சொல்லுங்க! மக்களால் ஏற்கப்பட்டு-ன்னு சொல்லாதீக!
    இன்னிக்கும் தென் தமிழகத்தில், கிரந்தம் இல்லாமலே பலுக்குகிறார்கள்! = எலே ராசா, சோடிச்சிக்கிட்டு வாரியா? சில்லுனு இருக்கு...

    //இனி இப்படி எல்லாம் தீர்மானம் போட்டு அதை ஒழிக்க இயலாது//

    தீர்மானம் போட நான் என்ன திமுக-வா?:)
    யாரும் கிரந்தத்தை ஒழிக்கலை! தமிழை அதன் தன்மையில் இருக்க விடுகிறோம்! அவ்வளவே!

    //இதனால் தமிழுக்கு துளி நன்மை இல்லை//

    சும்மா அடிச்சி விடாமல்...எப்படி நன்மை இல்ல?-ன்னு சொல்லுங்க:)

    //தான் ஆங்கில எழுத்து J, W ஆங்கில அரிச்சுவடியில் கலந்தன//

    Nopes! Originally, both I and J repesented /i/, /iː/, and /j/; but Romance languages developed new sounds (from former /j/ and /ɡ/) that came to be represented as I and J
    http://en.wikipedia.org/wiki/J

    //மலையாளம், தெலுங்கு என்ற புதிய மொழிகள் கூட காலத்தால் தமிழில் கிரந்தம் கலந்ததுக்கு பிற்பட்டவையே. அவை இன்று செம்மொழி கூட ஆகிவிட்டன//

    he he! கிரந்தத்தைச் செம்மொழி ஆக்கச் சொல்லுறீயளா? :))
    தெலுங்கு, மலையாளம் போல் கிரந்தத்துக்கு மக்கள் "உணர்வு" கிடையாது! அது சும்மா ஒரு Robot! Not even Humanoid :)

    //ஆனால் நாம் இன்னும் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என விவாதிக்கிறோம்.விவாதத்தால் பொழுது போகுமே ஒழிய மொழிக்கும், மக்களுக்கும் பலன் ஏதும் ஏற்படும் என தோன்றவில்லை//

    பலன் ஏற்படாது-ன்னு என்பதை நிரூபியுங்கள்!
    நான் பதிவில் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் பறிகொடுத்து, அழிந்து போன மொழி-பண்பாடுகளைச் சொல்லி உள்ளேன்! பாக்கலையா?

    //ஜெர்மனியை செருமனி என எழுதினால் தமிழ் வளர்ந்துவிடுமா?//

    ஜெற்மனியைச் செருமனி-ன்னு எழுதினால் மக்கள் பலன் ஏற்படாமல் அழிந்து விடுவார்களா?:)

    //சக்கரத்தை மீள்கண்டுபிடிப்பு செய்வதுக்கு ஒப்பான விஷயம் இது//

    சக்கரத்தை அப்பப்போ மீள் கண்டு புடிக்கலாம்! அப்படிக் கண்டு புடிச்சது தான் Skating Wheel:)

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. கோவி அண்ணா-வுக்கு என் சிறப்பு நன்றி!
    ஆபிசில் ஆணி! இந்தப் பதிவைக் கொஞ்சம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்! ஒலிக்கட்டும் முரசு! சங்கே முழங்கு:)

    ReplyDelete
  26. @ராதா
    வணக்கம் செல்வி ராதா! நலமா?:))

    //இந்த விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு அருட்பிரகாச வள்ளலார் நிலைப்பாட்டுடன் ஒன்றிப் போகிறது//

    வள்ளலார் வடமொழி பத்திச் சொன்ன பாட்டை நான் இங்கே குடுக்கட்டுமா?:)

    //அன்னாரை, "தமிழ் உங்கள் தாய்மொழியாக இருக்க சமஸ்கிருதத்தில் எல்லாம் பாடல்கள் எழுதலாமா?" என்று சிலர் கேட்டனராம்.
    அதற்கு அவர், "தமிழ் என் தாய்மொழி என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் சமஸ்கிருதம் என் தந்தை மொழி" என்றாராம்//

    சூப்பரோ சூப்பர்!

    அப்படிச் சொன்ன வள்ளலார், எங்கே சொன்னாரு-ன்னு தரவு கேக்க மாட்டேன்! ஆனா ஒரு சங்கதியை மறக்காமப் பாருங்க! - வள்ளலார் வடமொழிப் பாட்டை எழுதுவேன்-ன்னு தான் சொன்னாரே தவிர, எங்கவாச்சும் வடமொழியைத் தமிழில் புகுத்தி எழுதுவேன்-ன்னு சொன்னாரா?

    வள்ளலார் தம் தமிழ்ப் பாடல்களில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தினாரா? அறியத் தருவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஜோதி ஜோதி ஜோதி சுயம்
      ஜோதி ஜோதி ஜோதி பரம்
      ஜோதி ஜோதி ஜோதி அருள்
      ஜோதி ஜோதி ஜோதி சிவம்
      வாம ஜோதி சோம ஜோதி
      வான ஜோதி ஞான ஜோதி
      மாக ஜோதி யோக ஜோதி
      வாத ஜோதி நாத ஜோதி
      ஏம ஜோதி வியோம ஜோதி
      ஏறு ஜோதி வீறு ஜோதி
      ஏக ஜோதி ஏக ஜோதி
      ஏக ஜோதி ஏக ஜோதி

      ஆறாந்திருமுறை

      Delete
    2. வள்ளலார் காலத்தில், முற்றிலுமான தனித் தமிழ் இயக்கம் அவ்வளவாகப் பரவவில்லை!
      அதனால் "ஜோதி" என்பதை அப்படியே கைக் கொண்டார்; அவ்வளவு தான்!

      (அட, நானே, இந்தப் பதிவில், சில கிரந்தம் கலந்து எழுதியுள்ளேனே! கலப்பின் வீச்சு அப்படி)

      ஆனா அவர் கொள்கையின் அடிநாதம் என்ன? என்பது இங்கே இருக்கு!

      This comes in Thiruvarutpaa - urai nadai! http://www.vallalar.org/BooksTamil/11056
      ஆரியம் போன்ற கடின மொழிகளில் என்னுடைய மனத்தைப் பற்றவொட்டாது தடுத்துத்
      தமிழ்போல் இனிய எளிய மொழியினில் என்னுடைய மனத்தைப் பற்றுவித்த தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. @ராதா
    //தயவு செய்து பாரதியார் கதைகளை, கட்டுரைகளைப் படிக்கவும்//

    தமிழ் இந்து பற்றி எனக்கும் தெரியும்:)
    நான் சொன்னது பாரதியார் "கவிதைகள்"! கதை/கட்டுரை அல்ல! மேலும், >பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது அரிது தான்<-ன்னு தான் சொன்னேன்! அரிது, அரிது :)

    'ஜ'ய பேரிகை கொட்டடா-ன்னு அவரு பாட்டு இருக்கு! அது தெரியாதா? அதான் "அரிது"-ன்னு குறிப்பிட்டேன்! Rare!

    ஆழ்வார்கள், கம்பன் கிட்ட காட்டுங்களேன் பார்ப்போம்!
    பதிவில் ஒரே ஒரு இடத்தில் சொன்னதை மட்டும் பிடிச்சிக்கிட்டு, தாங்கள் செய்யும் 'கிரந்த நிரூபணம்' செல்லாது செல்லாது! :)

    இன்னிக்கி கோவி அண்ணாவும் நானும் ஒரே கட்சி! பழைய திருக்குறள் பதிவில் அவரோட போட்ட சண்டையெல்லாம் எப்பவோ போச்சு-ன்னு மறந்துடாமப் பேசுங்க:)

    ReplyDelete
  29. //மக்களிடம் கலந்து-ன்னு சொல்லுங்க! மக்களால் ஏற்கப்பட்டு-ன்னு சொல்லாதீக!
    இன்னிக்கும் தென் தமிழகத்தில், கிரந்தம் இல்லாமலே பலுக்குகிறார்கள்! = எலே ராசா, சோடிச்சிக்கிட்டு வாரியா? சில்லுனு இருக்கு... //

    தென் தமிழகத்துகாரர்கள் தானே சரவணா ஸ்டோர்ஸ், நெல்லை லாலா ஸ்வீட்ஸ் எல்லாம் நடத்துகிறார்கள்? படிக்காத மேதையை பெற்றவர்கள் கூட காமராஜர் என பெயர் வைத்தார்கள்.அவர்களுக்கா கிரந்தம் வராது?:-)

    //Nopes! Originally, both I and J repesented /i/, /iː/, and /j/; but Romance languages developed new sounds (from former /j/ and /ɡ/) that came to be represented as I and J
    http://en.wikipedia.org/wiki/J//

    J originated as a swash character to end some Roman numerals in place of i. A distinctive usage emerged in Middle High German.[3] Gian Giorgio Trissino (1478–1550) was the first to explicitly distinguish I and J as representing separate sounds, in his Ɛpistola del Trissino de le lettere nuωvamente aggiunte ne la lingua italiana ("Trissino's epistle about the letters recently added in the Italian language") of 1524.[4] Originally, both I and J repesented /i/, /iː/, and /j/; but Romance languages developed new sounds (from former /j/ and /ɡ/) that came to be represented as I and J; therefore, English J, acquired from the French J, has a sound value quite different from /j/ (which represents the sound in the English word "yet").

    அதாவது ஆங்கிலம் ஜேவை பிரேஞ்சுமொழியிலிருந்து கடன் வாங்கியது..இது நடந்தது 16ம் நூற்றாண்டில்.இன்று ஜேவை ஆங்கில எழுத்து இல்லை என சொல்ல முடியுமா?அல்லது அவர்கள் தான் ஜேவை ஒழித்து தூய ஆங்கிலம் காக்க இயக்கம் நடத்துகிறார்களா?

    //பலன் ஏற்படாது-ன்னு என்பதை நிரூபியுங்கள்!
    நான் பதிவில் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் பறிகொடுத்து, அழிந்து போன மொழி-பண்பாடுகளைச் சொல்லி உள்ளேன்! பாக்கலையா?//

    இத்தனை பேர் கிரந்தம் கலக்காமல் பேசுகிறீர்கள்...எழுதுகிறீர்கள்..உங்கள் யாருக்கும் என்ன பலனும் ஏற்பட்டது போல தெரியவில்லை.அப்படி எதாவது பலன் ரகசியமா ஏற்பட்டிருந்தால் எனக்கும் சொல்லுங்க:-)

    மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழிதூய்மை பேணுவது தான்.தமிழை இதே போல சுத்திகரிக்க முனைந்தால் அப்புறம் அது சமஸ்கிருதம் மாதிரி யாராலும் பேசபடாத மொழியாகிடும்.

    ReplyDelete
  30. மற்றபடி வி.எஸ்.கே ஐயா சொல்லுவது போல ஒவ்வொருவரும் தமக்கு விருப்பபட்ட உச்சரிப்பில் பேசலாம், எழுதலாம். ஈழதமிழர்கள் டிவியை ரீவி என்கிறார்கள், டொரொண்டோவை ரொரொன்றோ என்கிறார்கள்.அதே போல நாமும் ஜெருமனியை செருமனி, ஜெர்மனி என இரு விதங்களில் எழுதலாம்.பல்வேறு நடைகள் இருப்பது ஒரு மொழிக்கு இயல்பானதே.

    ReplyDelete
  31. @கோவி அண்ணா
    //கிரந்தம் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என்றால் ஏன் லக்‌ஷமி யை நம்மவர்கள் இலக்குமி என்று எழுதிவந்தார்கள் அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா ?//

    சூப்பரு! கையைக் குடுங்க!

    இலக்குமி-ன்னு எழுதும் போது மனத்தடை ஏற்படுது-ன்னா, திருமகள்-ன்னு தெள்ளு தமிழில் எழுதலாம்! மனமிருந்தால் வழியுண்டு!!

    தமிழில் அர்ச்சனை பண்ணும் போது அதிர்வு வரல, மனத்தடை ஏற்படுது, சமஸ்கிருத அர்ச்சனையில் தான் எனக்கு லயிக்குது-ன்னா வீட்டிலேயே அர்ச்சனையை வச்சிக்கிட்டும்! :)

    பல 108 திருத்தலங்களில் மகாலக்ஷ்மித் தாயார்-ன்னே இருக்காது!
    * திருமாமகள் நாச்சியார்
    * அலர் மேல் மங்கை
    * என்னைப் பெற்ற தாயார்
    * செங் கமல வல்லி
    * பெருந் தேவித் தாயார்
    * உய்ய வந்த நாச்சியார்
    - இப்படித் தான் இருக்கு! "மனத்தடை" வருதா என்ன? சாமி குத்தம்! புத்தி போட்டுக்கோங்கோ :))

    ReplyDelete
    Replies
    1. மணிப்பவள நடை பேணியவர்கள் கூடவே தூய தமிழ்ப்பெயரையும்
      பேணினர் என்பதை ஒப்புக்கொண்டால் சரி

      Delete
    2. இங்கே "ஒப்புக் கொள்வதில்" எந்த வெட்கமும் இல்லை!
      மறைமலை அடிகளுக்கும் முன்பே... ஜாமாத்ரு முனி = மணவாள மாமுனிகள் -ன்னு தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்கள் தான், வைணவப் பெரியவர்கள்!

      ஆனால், அவர்கள், "தமிழை முன்னிறுத்தினாலும்", சமயத் துறையில் இருந்ததால், வடமொழியை விட முடியவில்லை!

      ஆனால் அந்த நிலை எங்களுக்கு இல்லை! வடமொழியை முற்றும் புறம் தள்ளி, தெய்வத் தமிழோடு இருந்தாலே போதும்!
      உலக வளர்ச்சிக்கு உடன் ஆங்கிலம் போதும்! தேவ பாஷையான செத்த மொழிகள் தேவை இல்லை!:)

      Delete
  32. // dagalti said...
    நல்ல பதிவு. இதில் ஒரு கோணம்: எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு 1:1 என்று இருக்கவேண்டும் என்று அவசியமில்லை//

    புரிதலுக்கு நன்றிங்க!
    Ga-Kha ஒலிப்பை ஒரே எழுத்தால் குறித்தாலும், மாற்றி ஒலிக்கும் தமிழ் நெகிழ்வு பற்றிப் பதிவிலும் சொல்லி உள்ளேன்!

    விஷயம்=விடயம் என்பது வேணும்-ன்னா உங்களுக்கு மனத்தடையா இருக்கலாம்! ஆனால் சங்கதி, சேதி-ன்னு சொல்லும் போது 'மனத்தடை' ஏற்படாது! புழங்கிப் பார்த்துச் சொல்லுங்க! :)

    //என் நிலைப்பாடு: status quoவான ஜ, ஷ, ஹ அதுபாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டும்//

    யாரும் ஜ,ஷ, ஸ, ஹ-வை தமிழ்ப் பலகையில் இருந்து எடுக்கச் சொல்லவில்லை! எடுக்கவும் முடியாது! Already exists in Tamizh Unicode SMP!

    //பெயர்கள் தவிர்த்து, சொற்களில் அவற்றின் பயன்பாடும் இயல்பாகவே தேய்ந்துவிடும் என்றே நினைக்கிறேன்//

    உண்மை! நல்ல சொற்கள் புழங்கப் புழங்கத் தானாத் தேயும்! தஸ்தாவேஜ்->ஆவணம் போல!

    அதான் புழங்கச் சொல்லி ஊக்குவிக்கறோம்! பரப்புரை செய்கிறோம்!:))

    ReplyDelete
  33. KRS:
    Well, I am for letting sleeping dogs lie. When the AzhwArs wrote their pAsurams either the granthic letters were not in common usage or they were sticking to earlier sangam style writing (since they were literary scholars) when the granthic letters were not available (to Thamizh). When Kamban wrote Ramayanam he deliberately used ilakkuvan, vibIDaNan, irAman etc., although granthic letters were in usage then.
    There is no need to force purity of Thamizh letters on everybody. Those who want to use granthic letters should be free to use them without any ridicule. Though Bharathi said "piRanATTu nallarignar sAttirangaL tamizh mozhiyil peyarttal vENDum" he did not insist on substituting alien phonetic letters for pure Thamizh letters.

    Now coming to phonetics, you said you write your name as "இரவிசங்கர்". Do you pronounce it as iravishankar or iravisankar, or iravichankar? Notice the different sound in each of this spellings. Just curious!

    ReplyDelete
  34. //α,β,γ are all notations in Scientific English! But they dont become English Alphabets!//
    Just one point: α,β,γ are all Greek letters which ancient Greek mathematicians used, which was carried forward.
    If you look at the nationality of Fermat, Descartes, etc. you will understand why they preferred alpha, beta, gamma to A, B, C.
    But, one point to be noted is
    1) Newton founded laws known as Newton's laws
    But also
    2) Spectrum explained by Sir C. V . Raman is Raman Spectrum
    3) Chandrashekhar limit.
    So, science is universal. It's all about conventions.
    Naalaikku, neengalum oru science discovery pannunga. Adhukku அ ஆ ... nnu list peyar vainga.
    For centuries, people will say அ ஆ ... thru science :)

    ReplyDelete
  35. @Think Tank

    //KRS,
    நான் அவ்வபொழுது உங்களது எழத்துக்களை வாசிப்பேன்//

    நன்றிங்க!

    //சிரமம் என்பதே ஒரு சம்ஸ்கிருத வார்த்தை//

    :)
    சரி, கடினம்-ன்னு சொல்லலாமே?

    ஆதி, பகவன், சிரமம் போன்ற பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் தான்!
    அங்கே போய், மீண்டும் இங்கே வந்து, வடசொல் போல் பாவ்லா காட்டுது!:)

    //e.g. சந்திரா, கமலா போன்றவை. இது போல இன்றைய தமிழ்ர்களுக்கு எது தூய தமிழ் வார்த்தை என்றே தெரியவில்லை//

    உண்மை தான்!

    //இப்படி இருக்க க்ரந்தம் சேர்த்தல் என்ன சேர்க்க விட்டால் என்ன?//

    தெரியவில்லை என்பதற்காகத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், மொழி அதன் வளப்பமான சொற்களை இழக்கும் அபாயம் உண்டு!

    //தமிழை நான் நேசிக்கறேன்//

    மிக்க நன்றி!

    //ஆனால் இது போன்ற பதிவுகளால் நாம் கால விரயம் தான் செய்கிறோமா?//

    இல்லை!
    கால வீண் அல்ல! காலத் தேவையே!

    ReplyDelete
  36. //Vithanda vaatham said...
    In Bengali, Loki=Lakshmi, Suraj=Surya, Ajoda=Ayodhya//

    சூப்பரு!

    //and so on ... Are they not proud of their language? .. //

    அதானே!

    ReplyDelete
    Replies
    1. வங்க மொழியில் Lakshmi,Surya,Ayodhya என எழுதுவற்குத் தடை
      இல்லை; அயோத்திதாசர் தமிழில் உள்ளது; அயோத்யா என
      எழுதவும் தடை கூடாது. வங்க மொழியில் 'வ’ உச்சரிப்புக்கு
      மட்டுமே குறை. அது பாலியின் அவஹத்தமாக இருக்கக்
      கூடும். மொழியியலை ஒட்டி ஆராய்ச்சி, கவன ஈர்ப்பு
      அமைதல் நல்லது

      Delete
    2. //அயோத்யா என எழுதவும் தடை கூடாது//

      அதைச் சொல்லத் தாங்கள் யார்? தொல்காப்பியரா?

      வடசொற் கிளவி, "வட எழுத்து ஒரீஇ"
      -ன்னு சிற்சில வட சொல்லுக்கு இசைவு தரும் போதும், எழுத்தை/ஓசையைத் தமிழாக்கியே கொள்ளச் சொல்கிறார்!
      -தமிழ் இலக்கணத்தை மீறிய உங்கள் "தனி இலக்கணம்", எங்களுக்குத் தேவையில்லை!

      Delete
  37. @VSK

    //ஈடுபடப்போகிறேன் எனச் சொல்லியிருக்கீங்க ரவி!ஸந்தோஷம்!// :))

    உங்க "ஸந்தோஷமே" எங்க மகிழ்ச்சி SK ஐயா:)

    //உங்க அளவுல நீங்க செய்யற எதுவுமே சரிதான். சொல்லிட்டுத்தான் செய்யணும்ன்றது இல்லை!//

    அட, தனிப்பட்ட அளவில் எது செஞ்சிக்கிட்டாலும் சரி ஆயீருமா என்ன? :) தற்கொலை? :(

    //உலகத்தைத் திருத்த முயற்சி செய்வதைவிட நம்மை நாம் மட்டுமே செம்மை செய்துகொண்டால், எல்லாமே நன்றாகவே நடக்கும்!//

    இது என்ன அருள் வாக்கு எல்லாம் குடுக்கறீக?:)

    //வாழ்க உங்கள் பணி!//

    நன்றி!

    //உங்க அளவுல நீங்க செய்யற எதுவுமே சரிதான். சொல்லிட்டுத்தான் செய்யணும்ன்றது இல்லை!//

    அப்பறம் எதுக்கு தனியா முருகனைக் கும்பிட்டுக்கறத்துக்கு கோயிலு? சொல்லிட்டு செய்யறாங்க, விழா கொண்டாடுறாங்க?

    அதே போலத் தான் இதுவும்! கூடி இருந்து குளிர்ந்தேலோ!

    ReplyDelete
  38. உள்ளேன் ஐயா! :-)

    என் கருத்துகள் என்னான்னு நிறைய பேருக்குத் தெரியும். அதனால பேச்சை மட்டும் கவனிக்கிறேன். :-)

    ReplyDelete
  39. @ILWK
    //So, science is universal. It's all about conventions//

    Totally Agreed! Thatz why I myself told in the post, even in tamizh medium science, it is α,β,γ only!

    //Naalaikku, neengalum oru science discovery pannunga. Adhukku அ ஆ ... nnu list peyar vainga.
    For centuries, people will say அ ஆ ... thru science :)//

    Thank you for this idea! இப்பவே krs theorem கண்டுபுடிக்கிறேன்! ழ, ங-ன்னு பேரு வைக்கிறேன்! தமிழ் நிலைக்கும்!:)

    ReplyDelete
  40. //குமரன் (Kumaran) said...
    உள்ளேன் ஐயா! :-)//

    பேசினால் மட்டுமே வருகை பதிவு செய்யப்படும்:)

    //என் கருத்துகள் என்னான்னு நிறைய பேருக்குத் தெரியும்//

    எனக்குத் தெரியாதே! பெயர்ச்சொல் ஆக்கங்கள் குறித்து பேசுங்களேன்!

    ReplyDelete
  41. oooops! மறந்தே போயிட்டேன்! கோவி அண்ணாவும் இருக்காரு! குமரன் கட்டாயம் பேச வேண்டும் என்பதே என்/அவர் அவா!

    ReplyDelete
  42. http://koodal1.blogspot.com/2008/06/blog-post_5471.html

    மன்னிக்கனும் இரவி. ஒரு சுட்டி மட்டும் குடுக்குறேன். படிக்கிறவங்க படிச்சுக்கட்டும்.

    ReplyDelete
  43. @nArAdA
    //When the AzhwArs wrote their pAsurams either the granthic letters were not in common usage or they were sticking to earlier sangam style writing//

    பல்லவ கிரந்தம் 6CE! அதற்குப் பின் தான் திருமங்கை ஆழ்வார்! அவரும் கிரந்தம் பயன்படுத்தவில்லையே!

    நீங்கள் சொன்ன இரண்டாம் கருத்தே சரி! சங்கத் தமிழ் வழக்கிலேயே தங்கள் பாசுரங்களை அருளிச் செய்தனர்! சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே...

    //There is no need to force purity of Thamizh letters on everybody. Those who want to use granthic letters should be free to use them without any ridicule//

    No one is ridiculing or forcing anybody! All we are creating is Awareness!

    //Do you pronounce it as iravishankar or iravisankar, or iravichankar? Notice the different sound in each of this spellings. Just curious!//

    I dont pronounce my name! others do!:))

    நீங்க எங்கே வரீங்க-ன்னு தெரியுது!:)
    ச-கரம் மொழி முதல், ஒற்றோடு வரும் போது ச் ஒலிப்போடு வரும்! இடையில் இடத்துக்கு ஏற்றவாறு வரும்!

    ReplyDelete
    Replies
    1. சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே...

      நாச்சியார் சொல்வது திரள் திரளாக அநுபவிக்க
      வேண்டிய பனுவல்களை.
      ”சங்கமிருப்பார்போல்” திரளாக நிற்பதுபோல்.
      சங்கப் பனுவல்களில் எங்குமே ’சங்கம்’ எனும்
      சொல் கிடையாது

      Delete
    2. சங்கப் பனுவல்களில் எங்குமே சங்கம் இல்லாவிட்டால் என்ன?
      சங்கம் = தமிழ்ச் சொல்லே!
      அது "ஸங்கமம்" என்ற சொல் மூலம் இல்லை!

      நெய்தலும், குவளையும், ஆம்பலும், "சங்கமும்" - என்பது பரிபாடல்! இது கடைச் சங்க இலக்கியம் தான்!

      பரிபாடலில் சங்கம் என்னும் சொல் பயிலப்பட்டாலும், அது புலவர் குழுவைக் குறிக்கும் வகையில் காணப்படவில்லை;
      ஆயின் பண்டைத் தமிழகத்தில் புலவர் குழு இல்லையா என்னும் வினா எழும். இருந்தது என்பதே அதற்கான விடை.

      "புணர்கூட்டு" என்னும் பெயரால் அது குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது.

      எட்டுத் தொகை - பத்துப் பாட்டு நூல்கள், பின்பு தொகுக்கப்பட்டவை; அதிலுள்ள கவிதைகளைத் தனித் தனியாகத் தான் கவிஞர்கள் பாடினர்;
      யாரும் சங்கத்தில் வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாடவில்லை;

      இன்று கூட, எழுத்தாளர்கள் எழுதும் புதினங்களில், பதிப்பகத்தின் பேரை, புதினத்தின் ஊடே குறிப்பிடுகிறார்களா என்ன?
      அதே போல் தான், அன்றும், எந்தக் கவிஞரும், "சங்கம்" என்று தன் கவிதையில் சொல்லாடவில்லை!

      மேலும், "சங்கம்" என்பது ஊதும் சங்கையும் குறிக்கும்; தலைச் "சங்க" நாண் மதியம் என்ற தொன்மையான ஊரே உண்டு!

      "விளக்கு" என்னும் சொல்லில் இருந்து, எப்படி "விளக்கம்" (தெளிவு) பிறந்ததோ, அப்படியே,
      "சங்கு" என்பதனின் இருந்து, "சங்கம்" பிறந்தது; சங்கு ஒலித்து ஒழுங்குறும் அவை சங்கம் எனவும் கொள்ளலாம்!

      "சங்கம்" என்ற தமிழ்ச் சொல்லும், "ஸங்கமம்" என்ற வடசொல்லும் வெவ்வேறானவை;
      பெளத்த ஸங்கம் என்பது வேறு; தமிழில் சங்கம் என்பது வேறு; தமிழில் அது "புணர்கூட்டு" அவையைக் குறிக்கும்!

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. //மன்னிக்கனும் இரவி. ஒரு சுட்டி மட்டும் குடுக்குறேன். படிக்கிறவங்க படிச்சுக்கட்டும்//

    ஓ! இது சொல்-ஒரு-சொல் சுட்டி! தெரியுமே! அப்போ நான் பதிவுலகத்துக்கு புதுசு! நீங்க, ஜிரா தான் பேரரசர், இளவரசர்கள்! இந்த ஏழைப் பேதையைக் கண்டு கொள்ள கூட மாட்டீர்கள் :)

    இந்தப் பதிவை இடும் முன்னர், இந்தச் சுட்டியில் உள்ளதையும் வாசித்தேன் குமரன் அண்ணா! இக்கால பெயர்ச் சொல் ஆக்கம் பற்றி என்ன சொல்லி இருக்கீங்க-ன்னு பார்க்கத் தான்!

    ட்விட்டரில், பல கேள்விகள், உங்கள் பதிவில் உள்ளது போலவே தான் கேட்கப்பட்டது! இன்னும் கொஞ்சம் extraவா கேட்டாங்க! எல்லாத்துக்கும் சேத்து 140 எழுத்துக்குள்ள அங்கே சொல்ல முடியலை! அதான் இங்கே கொட்டித் தீர்த்துட்டேன்! :))

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. //அந்த அயல் ஓசைகளுக்கு தமிழில் நேரடியான எழுத்து இல்லாததால்...அதை எழுத ஒரு Lipi (எழுத்துரு) உருவாகியது! அது பல்லவர்கள் காலம்!//

    இது வரலாற்றுப் பிழை உள்ளதொரு தகவல் என்று அஞ்சுகிறேன்.

    எனக்கு ஸம்ஸ்க்ருதம் சொல்லிக் கொடுத்த ஆச்சாரியார் வீட்டில் ஓர் ஓலைச் சுவடி இருந்தது. ஆச்சாரியாரிடம், "அது என்ன?" என்றேன். "வால்மீகி ராமாயணம். எடுத்துப் பார்!" என்றார். எடுத்துப் பார்த்த நான், "இது நம்ம பாஷையிலல்ல எழுதியிருக்கு?" என்றேன். "அது க்ரந்தம். வால்மீகி அதுலதான் எழுதுனாரு. அப்ப தேவநாகரி கண்டு பிடிக்கப் படலை." என்றார்.

    வாய்-செவி ஒலிவடிவ வழக்கில் இருந்த வடமொழிக்கு வரிவடிவம், தமிழ் வட்டெழுத்துகளைத் தேவைக்கு ஏற்ப மாற்றி உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதில் தமிழ் வட்டெழுத்துகள் பல அப்படியே இருக்கக் காணலாம்.

    மற்றபடி, கட்டுரையின் அக்கறையோடு ஒத்துப்போகிறேன்.

    ReplyDelete
  48. @ராதா
    //தரவு என்பது என்ன//

    காந்தி, சிக்கன் சாப்பிடச் சொன்னாரு-ன்னு தியாகி செல்வங்கராயன், ஒருத்தர் கிட்ட பேசும் போது சொன்னாரு-ன்னு ஒரு statement விட்டா...அது Impacting Statement! So needs scrutiny! அதான் தரவு! :)

    //வள்ளலார் சொன்னதாக இருக்க வேண்டாம்.
    "தமிழ் தாய்மொழி, சமஸ்கிருதம் தந்தை மொழி" என்பது என்னுடைய நிலைப்பாடாக மட்டும் இருக்கட்டும். :-)//

    ஓக்கே! இப்படிச் சொன்னாப் பிரச்சனை இல்ல பாருங்க! :))

    ஒரு பெருங் கருத்தை வள்ளலார் மேல் ஏற்றிச் சொல்லும் போது, சற்று பொறுப்பு கூடுகிறது! அதையே சுட்ட விழைந்தேன்!
    என் மேல் ஒனக்கு கோவமே வராது-ன்னு எனக்குத் தெரியும் செல்வி.ராதா:)

    ReplyDelete
  49. //Radha said...
    ரவி,
    ஒரு விஷயத்தை தெளிவு படுத்துங்க. நீங்க
    1) பாட்டு எழுதறத பத்தி பேசறீங்களா (அல்லது)
    2) நடைமுறைல பேச்சு வழக்கத்தில் இருக்கற தமிழ் பத்தி பேசறீங்களா? (அல்லது)
    3) நாம எழுதற தமிழ் உரைநடை பத்தி பேசறீங்களா?
    4) முற்றிலும் வேறு ஏதாவதா?//

    :)
    ரொம்ப சிக்கலான கேள்வி!
    குமரன், உதவிக்கு வாங்க!

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. இரவிசங்கரர் ஐயாவுக்கு,

    வணக்கம் .

    ரவிசங்கு என்றிருந்தால் தமிழில் ‘இரவிசங்கர்’ என மாற்றலாம் (பங்கு - பங்கன், பங்கர்). அப்படி இல்லாததால் ‘இரவி சங்கரன்/ர்’ சரியாக இருக்கும்

    க்ரந்த லிபி பற்றிய இப்பதிவு ஒரு நல்ல முயற்சி. தமிழ்ப் பயன்பாடு மிகவேண்டும் என்பதிலும் கருத்து வேற்றுமை இல்லை.

    எழுத்தெண்ணிக்கையைத் துல்லியமாகக் கூறியுள்ளீர்கள்; ஆனால் ஆன்மிகத்தில் தோய்ந்த உங்களுக்கு ஏனோ ”ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்” எனும் திருமூலர் திருமொழி நினைவுக்கு வராதது வியப்பளிக்கிறது.


    “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”


    க்ரந்த லிபி உருவாக்கியோருக்குத் தொல்காப்பியத்துக்கு முரணாக வலிந்து புகுத்த வேண்டும் எனும் நோக்கம் இருந்ததாகத் தெரிய வில்லை.

    வடமொழியில் அஸ்தி, ஹஸ்தி, அத்தி (உண்பதற்கான வினைமுற்று)
    எல்லாமே உள்ளன. அத்தி என எழுதினால் தெளிவிராது.
    ஜநக, ஸநக இரண்டுமே உள்ளன. ’சனகன்’ தெளிவு தராது.

    சில மடலாடற் குழுமங்களின் இழைகளைப் பார்த்தால் க்ரந்தத்தேவை புரியும் -

    http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/76e77f63b01b8850/9ab930dfcde89d1f?lnk=gst&q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+kantham#9ab930dfcde89d1f

    http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/a25a30682203eec3/4b3ec25c6badda76?lnk=gst&q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF#4b3ec25c6badda76

    http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/f773fe4acdda2c5d/b5c99999e4f5c3d1?lnk=gst&q=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D#b5c99999e4f5c3d1




    >>> பிராகிருத மொழி (சமஸ்கிருதம் அல்ல) விரவி வரும் சமண இலக்கியம் கூடக் கிரந்தம் தவிர்த்து, தமிழையே தாங்கியது! <<<


    சமணர்களே தமிழில் மணிப்ரவாள/க்ரந்தக் கலப்பைத் தாம் செய்ததாக ஒப்புக்கொள்ளும்போது நீங்கள் ஏன் அதை வலிந்து மறுத்துச் சமணத்தைத் தாங்க வேண்டும் ?

    http://groups.yahoo.com/group/jainlist/message/12206

    Those who are familiar with Manipravala (Tamil+Grantha) Sripuranam gives a
    detailed account / those who are familiar with Tamil an exallant translation is
    available that was translated by a noted Tamil scholar Prof.J.Srichandran &
    published by the famous Varthaman Publications ? Tamil Nilayam

    N.B. The above famous Manipravala Sripuranam ( an abridged form of
    Mahapurana of Sri Jinasenacharya ) was translated by me into Tamil and
    published as serial( for 17 years ) in the very famous Tamil Jain Monthly
    Mukkudai
    Jai Jinendra

    Prof. Dr. Kanaka ..AJITHADOSS


    http://www.thinakaran.lk/vaaramanjari/2010/09/05/default.asp?fn=f1009052&p=1 -
    கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே பெளத்தம் தமிழ் கழகத்துக்கு வந்துவிட்டது. திருக்கோவிலூர் ஜம்பை பிராமிக்கல் வெட்டில் ‘ஸதிய புதோ’ என்று அதியர்களைக் குறிப்பிடுகிறது.


    க்ரந்த வழக்கைப் புகுத்திய சமணமும் ,பவுத்தமும் ஆதிக்க சாதிகளா ?

    இராமாநுசருக்குப் பெருமதிப்பளிக்கும் நீங்கள் மணிப்ரவாளம் கலந்த உரைகளுக்குக் காரணமான அவரை ஆதிக்க சாதி அரசியலுக்குத் துணை போனவர் என்கிறீர்களா ?

    ‘முந்துதமிழ்’ என்று சிறப்பளித்துப்பாடியதோடு, அரிய தாளவகைகளையும் அறிமுகம் செய்த அருணகிரிநாதரும் ஆதிக்க சாதியில் சேர்ந்தவரா ?

    கிறித்தவ, இசுலாமியர்கள் க்ரந்த் ஒழிப்புச் செய்துள்ளனாரா ?


    ஒரு தரு கவடு பிரிந்து வளர்ந்தால் தான் பலருக்கும் நிழல் தரமுடியும்; அதுபோலவே மொழி வளரும்போது கவடு பிரியத்தான் செய்யும்; க்ரந்தத்தை நீக்குவது ஆய்வுத்துறைக்குப் பெரும் பின்னடைவைத் தரும்



    தேவ்

    ReplyDelete
  52. முக்கிய அறிவிப்பு:

    * அது என்னமோ தெரியல, கிரந்தம்-ன்னு பேச்சு எடுத்தாலே, ஆன்மிக/பக்தித் துறையில் ஆழ்பவர்கள் ரொம்பவே உணர்ச்சி வசப்படறாங்க!
    * பதிவில் வடமொழி (சம்ஸ்கிருதம்) பற்றி இழிவாக எங்குமே நான் சொல்லவில்லை! சமஸ்கிருதம்-கிரந்தம் = ரெண்டும் வேற வேற!
    * பேசுவதெல்லாம் கிரந்தம் பற்றி மட்டுமே! அதுவும் தமிழில் அது "கலப்பது" பற்றி மட்டும் தானே தவிர, கிரந்தம் ஒழிக-ன்னு எல்லாம் எங்குமே நான் சொல்லவில்லை!

    அப்படி இருக்க,
    * 91 வயது பெரியவர் பாருங்க - ரெண்டு மொழியுமே அவருக்கு கண்ணு
    * வள்ளலார் சமஸ்கிருதத்தை தந்தை மொழி-ன்னு சொல்றாரு பாருங்க
    * பக்தியில் பேதம் கிடையாது...
    - இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படுவது ஏன்?

    வடமொழி ஒழிக-ன்னா சொல்லி இருக்கு பதிவில்? கிரந்தம் கலந்து கலந்து எழுதும் முறை பற்றித் தானே பேச்சு?

    பாரதியார் "காக்காய் பார்லிமெண்ட்" பற்றி எழுதி இருக்காராம்! அதுக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு?
    "காக்காய் பார்லிமெண்ட்" - இதில் கிரந்த எழுத்து முறையே இல்லையே! ஒரு நல்ல நகைச்சுவைக் கட்டுரையாகப் பாரதியார் யாத்தது அது! அவ்வளவு தான்!

    இங்கே பேச்சு என்ன-ன்னா நகைச்சுவை கட்டுரையில் மட்டும் இல்லாமல், அன்றாட வாழ்விலே கூட, தமிழ்ச் சொற்கள் இருக்க, அதை விடுத்து, கிரந்த எழுத்துக்களையே புழங்கிக் கொண்டிருந்தால்.....மெல்ல அந்தத் தமிழ்ச் சொல் மறைந்து போகும் அபாயம் உள்ளது! எனவே கையில் தமிழ்ச் சொல் இருக்கும் போது, "Repeated கிரந்த பிரயோகம்" - அதைத் தவிர்க்க முனைவோம்! - இது தான் பதிவின் அடிப்படை!

    ReplyDelete
  53. ||//Radha said...
    ரவி,
    ஒரு விஷயத்தை தெளிவு படுத்துங்க. நீங்க
    1) பாட்டு எழுதறத பத்தி பேசறீங்களா (அல்லது)
    2) நடைமுறைல பேச்சு வழக்கத்தில் இருக்கற தமிழ் பத்தி பேசறீங்களா? (அல்லது)
    3) நாம எழுதற தமிழ் உரைநடை பத்தி பேசறீங்களா?
    4) முற்றிலும் வேறு ஏதாவதா?//

    :)
    ரொம்ப சிக்கலான கேள்வி!
    குமரன், உதவிக்கு வாங்க!||

    அன்பு ரவி,
    முதலில் பாராட்டுகள்,அருமையான பதிவுக்கு.

    அனைத்து கருத்துக்களையும் படித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது.தமிழின் மீது ஒரு வித கிண்டல் அல்லது காழ்ப்பு இருப்பதால் தமிழைச் சிதைப்பவர்களை விட வடமொழி மீது இருக்கும் காதல் தமிழை விட சிறிது அதிகமாக இருக்கும் போது தமிழில் வடமொழி கலந்தால் என்ன போச்சு என்று ராதா போன்று எண்ணும் நபர்கள் இருக்கிறார்கள்.

    மேலே இருக்கும் கேள்விக்குப் பதில்கள்.

    1) பாட்டு எழுதறத பத்தி பேசறீங்களா (அல்லது)
    >> தமிழின் நல்ல பாடல்களும் கவிதைகளும் சுஜாதா சொன்னது போல ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன.நம்மைப் போன்று கவிதை பயிலும் அரைவக்காடுகள் தான் கவிதைகளையும் மொழியையும் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
    ரவி சுட்டியது போல பாரதி வரையிலான தமிழ்ப் பரம்பரை வடமொழியைப் பாடல்களிலோ கவிதைகளிலோ தரவில்லை.
    2) நடைமுறைல பேச்சு வழக்கத்தில் இருக்கற தமிழ் பத்தி பேசறீங்களா? (அல்லது)
    சாதாரண வாழ்க்கையில் தமிழைப் புழங்காத பாவிக்காத இன்றைய பெரும்பான்மைத் தமிழ்சமூகத்தினால் இந்தக் கேள்வி எழுகிறது.இயன்ற வரை எதிலும் பேச்சில் உள்பட தமிழ் என்பது தான் பதில்.
    3) நாம எழுதற தமிழ் உரைநடை பத்தி பேசறீங்களா?
    நாம் எழுதும் உரைநடை பற்றியும் பேசுகிறோம்.
    'எழுதறதப் பத்திப் பேசலை'
    4) முற்றிலும் வேறு ஏதாவதா?//
    இவற்றிற்கு புறம்பாக வேறு எதுவும் இல்லை !

    ReplyDelete
  54. அறிவன் சார் பின்னூட்டம் கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்தேன்!

    ReplyDelete
  55. தேவ் சார்
    வணக்கம்!

    என்னது இது, திடீர்-ன்னு என்னையப் போயி ஐயா-ன்னுக்கிட்டு? :))
    என் பேரை 'இரவிசங்கரன்'-ன்னு திருத்தியமைக்கும் நன்றி! அம்மா-அப்பா கிட்ட சொல்லுறேன்!:)

    //க்ரந்த லிபி பற்றிய இப்பதிவு ஒரு நல்ல முயற்சி. தமிழ்ப் பயன்பாடு மிகவேண்டும் என்பதிலும் கருத்து வேற்றுமை இல்லை//

    மிக்க நன்றி!

    //”ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்”//

    அச்சச்சோ! 51 எழுத்து! நான் 500-ன்னு சொன்னது எழுத்துரு தான்! 16 + 34 அல்ல! 16*34 ஐச் சொன்னேன்!

    //ஜநக, ஸநக இரண்டுமே உள்ளன. ’சனகன்’ தெளிவு தராது//

    தங்குபெரும் புகழ்ச் "சனகன்" திருமருகா! தாசரதீ
    எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே! தாலேலோ!!

    ஆழ்வார் சனகன்-ன்னு பாடுவது தெளிவு தராதோ? ஆழ்வார் பாசுரம் தெளிவு தராதா என்ன? :)))

    //சில மடலாடற் குழுமங்களின் இழைகளைப் பார்த்தால் க்ரந்தத்தேவை புரியும்//

    மின்தமிழ் தான் என் பசி தீர்க்கும் தடாகம் ஆச்சே!
    மின்தமிழ்க் குழும உரையாடல்கள் முழுக்க வாசித்திருக்கேன் தேவ் சார்! கலந்து கொள்ள ஆசையிருந்தும் சிலபல காரணங்களுக்காகக் கலந்து கொள்ளவில்லை!

    //சமணர்களே தமிழில் மணிப்ரவாள/க்ரந்தக் கலப்பைத் தாம் செய்ததாக ஒப்புக்கொள்ளும்போது நீங்கள் ஏன் அதை வலிந்து மறுத்துச் சமணத்தைத் தாங்க வேண்டும் ?//

    ஆகா! சமண "சமயநூல்கள்" வேறு! (கோட்பாடு/போதனை)! அதில் கிரந்தம் உண்டு தான்! நான் பேசுவது இலக்கியம் மட்டுமே! சமண ஸ்ரீபுராணம் தமிழ்-இலக்கியம் அல்ல!
    மெளல்வியின் மதபோதனை நூல் தமிழ் இலக்கியம் ஆகாது! உமறுவின் சீறாப் புராணம் தான் இலக்கியம்! அதைத் தான் நாம் பேசுகிறோம்!

    //க்ரந்த வழக்கைப் புகுத்திய சமணமும் ,பவுத்தமும் ஆதிக்க சாதிகளா ?//

    வரிக்கு வரி பிடிச்சிக்கிட்டா எப்படி?:)

    பதிவின் சாரம், தமிழ்ச் சொல் அதிகம் புழங்கி, கிரந்தச் சொற்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!
    மற்றபடி கிரந்த ஒழிப்பு project-இல் எல்லாம் நான் இறங்கவில்லை!:)


    //இராமாநுசருக்குப் பெருமதிப்பளிக்கும் நீங்கள் மணிப்ரவாளம் கலந்த உரைகளுக்குக் காரணமான அவரை...//

    இராமானுசரின் நோக்கம் வேறு!
    ஆலயங்களில் சமஸ்கிருதமே கோலோச்சிய காலத்தில், தமிழை எப்படி உள்ளே நுழைப்பது? அதான் வடமொழியோடவே சென்று, தமிழுக்கு முன்னிடம் அளித்தார்!

    மணிப்பிரவாளமாய் உரை எழுதியது, தமிழும் வேதம் போல் தொனித்தால், இசைவு (அங்கீகாரம்) இன்னும் எளிதாகும்! அர்ச்சக, ஆன்மீக ஆட்கள் ஏற்றுக் கொள்ள இன்னும் ஏதுவாகும் என்பதற்காக...மணிப்பிரவாளம்!


    ஆனால் இராமானுசர் எழுதிய தனியன் பாக்களில் மணிப்பிரவாளம் உள்ளதா??? = இல்லை!
    ஆழ்வார் பாசுரங்களில் கை வைத்து மணிப்பிரவாளம் ஆக்கினாரா? = இல்லை!
    உரை நூல்களுக்கு மட்டுமே, அப்படியொரு அமைப்பு!

    அவருக்கு மிகப் பின்னால் வந்த அருணகிரியும் இதையே முயன்று பார்த்தார்! ஆனால் இராமானுசர் கண்ட வெற்றியை ஏனோ அருணகிரிப் பெருமான் காணவில்லை!
    ஏன்னா சைவ ஆலயங்களில் அப்போது அருணகிரியின் குரலுக்கு மதிப்பில்லை! அவர் மதத் தலைவரும் இல்லை! அதனால் தமிழ்க் கடவுள் முருகன் கோயிலில் தமிழ் அவ்வளவாகக் குடியேற முடியவில்லை! :((

    //க்ரந்தத்தை நீக்குவது ஆய்வுத்துறைக்குப் பெரும் பின்னடைவைத் தரும்//

    நான் கிரந்தத்தை நீக்கவே சொல்லலையே! பதிவை முழுக்க வாசித்தீர்கள் அல்லவா?
    >ஒருக்காலும் மரபியல் பதிவுகளை நாம் அழித்து விடக் கூடாது!
    கல்வெட்டுப் படிப்புகளுக்கு கிரந்தம் தேவை தான்! ஆனால் அவை துறை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே!< என்று குறிப்பிட்டுள்ளேனே!

    மறுபடியும் சொல்கிறேன்!
    பதிவின் சாரம், தமிழ்ச் சொல் அதிகம் புழங்கி, கிரந்தச் சொற்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!
    மற்றபடி கிரந்த ஒழிப்பு project-இல் எல்லாம் நான் இறங்கவில்லை!:)

    ReplyDelete
    Replies
    1. >>> சமண "சமயநூல்கள்" வேறு! (கோட்பாடு/போதனை)! அதில் கிரந்தம் உண்டு தான்! நான் பேசுவது இலக்கியம் மட்டுமே! சமண ஸ்ரீபுராணம் தமிழ்-இலக்கியம் அல்ல! <<<

      சரி
      சமண வழிபாட்டின் பஞ்ச நமஸ்காரம் பாகத மொழியில்
      அமைந்துள்ளது; தமிழ்ச் சமணர் அதைத் தனித்
      தமிழில் மாற்றியுள்ளனரா ? தனித் தமிழ்ப்
      பஞ்ச நமஸ்காரத்தை எடுத்துக்காட்ட முடியுமா ?
      அதைக் கோட்பாடு / போதனையோடு
      சேர்ப்பதா ? இலக்கியத்தோடு சேர்ப்பதா ?

      Delete
    2. பஞ்ச நமஸ்காரம் = தமிழ் இலக்கியம் அல்ல!
      அது அவர்கள் போதனை மட்டுமே!

      சமணம், தமிழ் இலக்கியத்தில், அதன் பாலி மொழிச் சொல்லையெல்லாம் அதீதமாய்க் கலக்கவும் இல்லை!
      வடநெறி: தமிழ்ப் பழங்குடிகளின் கந்தனை->ஸ்கந்தன் ஆக்கியது போல்,
      சமணம்: தமிழ்ப் பழங்குடிகளின் கந்தனை->"கந்த தீர்த்தங்கரா" ஆக்கித் தொன்மத்தைச் சிதைக்கவும் இல்லை!

      சமணத்தைச் சொன்னால், இன்னிக்கும் அப்படியே பொத்துக் கொண்டு வருகிறதே! ஏன்?????

      Delete
    3. சமணம் / பெளத்தம் வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!

      ஆனா தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; ”புது நெறி”-ன்னே அறிமுகம் செய்தார்கள்!
      கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை;
      சம்ஸ்கிருத நெறி மட்டுமே = தமிழ் மரபியல் சிதைப்பு;

      தொன்மத்தின் மேலேயே ஏற்றினால்?
      = எது இருந்தது? எது வந்தது?-ன்னே கண்டுபுடிக்க முடியாதே?:(
      = Thatz the Trick! = Ir-reversible:(

      Delete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. @ராதா
    இந்தப் பின்னூட்டம் உனக்கு மட்டும் அல்ல! பல ஆன்மீக அன்பர்களுக்கும் சேர்த்தே!

    1. முதலில் கிரந்தம் பற்றிப் பேசினாலே, ஏதோ வடமொழி மேல் கைவைத்து விட்டாற் போல் பதறுவதைக் குறைத்துக் கொள்ளவும்!

    "அதுவும் ஒரு கண்ணு தான்! பேதம் இல்லை! 91 வயசு பெரியவர்! காஞ்சிப் பெரியவா!" -அப்படி இப்படி-ன்னு சீன் போடும் சேதிகள் பதிவுக்குத் தேவையில்லை!

    யாரும் கிரந்த ஏடுகளையோ, கல்வெட்டுகளையோ, வேதப் படிப்பையோ ஒழிக்கச் சொல்லலை! சொல்வது: பொதுமக்களின் எழுத்துப் புழக்கத்தில் இருக்கும் தமிழ்ச் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதே!

    2. உங்கள் கட்சியை நிலைநாட்ட நீங்கள் வாதங்களை வைக்கலாம்! தப்பே இல்ல! ஆனால் அதற்காக வள்ளலாரின் தலையிலேயே கை வைக்கலாமா?

    வள்ளலார் சொல்லாத ஒன்றை, "செவிவழிச் செய்தி" போல் கொளுத்தி போட்டுப் போவது! படிப்பவர்கள் அதைப் பிடிச்சிப்பாங்க! நாளைக்கு வேறொரு பதிவில் அதையே சொல்லுவாங்க! இப்படிப் பரவிப் பரவி.....இதுவா "ஆன்மீக நேர்மை"?

    வள்ளலார் சமஸ்கிருத ஆதிக்கம் பற்றித் தன் கருத்தைத் திருவருட்பா உரைநடையில் பதிந்து வைத்துள்ளார்! பார்க்கிறீர்களா?
    This comes in Thiruvarutpaa - urai nadai! http://www.vallalar.org/BooksTamil/11056
    ஆரியம் போன்ற கடின மொழிகளில் என்னுடைய மனத்தைப் பற்றவொட்டாது தடுத்துத்
    தமிழ்போல் இனிய எளிய மொழியினில் என்னுடைய மனத்தைப் பற்றுவித்த தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!


    நீங்கள் சொன்ன கதை: "வள்ளலார் சமஸ்கிருதத்தை தந்தை மொழி-ன்னு சொன்னாரு"
    அது உண்மையான நிகழ்வு அல்ல! அதுக்கு தரவு கேட்டதுக்குத் தான், தரவு-ன்னா என்ன ரவி-ன்னு என் மேல பாய்ஞ்சீங்க:)

    இதோ அந்த நிகழ்வு:
    காஞ்சிப் "பெரியவா" வள்ளலாருடன் உரையாடுகையில்...சமஸ்கிருதம் தான் ஆன்மீகத்துக்குத் தாய்மொழி-ன்னு சொல்ல, அதுக்கு வள்ளலார் மறுமொழிந்தார்: "அப்படின்னா எங்கள் தமிழ் தந்தை மொழி! தந்தை தந்தால் அன்றி உயிரும் உருவாகுமோ?"

    வசதிக்கு ஏத்தாப் போல இதை மாற்றி, நீங்கள் சொல்லி விட்டீர்கள்!
    இப்போது வள்ளலாரின் திருவருட்பாவையே மேசையில் வைத்து விட்டேன்! இனி இப்படியொரு தவறான செய்தி வேறெங்கும் பரவாது-ன்னு நினைக்கிறேன்! உங்கள் அன்பான புரிதலுக்கு நன்றி!

    வள்ளலாரின் கொள்கையிலோ, நூலிலோ, நம்மை விட எழுதியவருக்கே அதிக உரிமை!
    அதனால், நம் கட்சியை நிலைநாட்ட, அவர் சொல்லாத ஒன்றை, அவர் மேல் ஏற்றிச் சொல்வது என்பது சான்றாண்மை ஆகாது!

    இதை ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்ள வேணுமாய் விண்ணப்பம்!

    கிரந்தத்தையும் நீங்கள் ஆன்மீகமாகவே பார்ப்பதால் தான் இப்படி ஒரு பார்வை உங்களுக்கு!
    ஆனால் அதையும் தாண்டி மொழி, மொழிவளம், இலக்கியம் என்று பார்ப்பவர்களும் உலகில் இருக்கத் தான் செய்கிறார்கள்!

    கிரந்தக் கலப்புச் சொற்களே புழங்கிப் புழங்கி, நாளடைவில் தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகும் என்பதே அவர்கள் நியாயமான கவலை!

    ReplyDelete
  59. //rajasundararajan said...

    எனக்கு ஸம்ஸ்க்ருதம் சொல்லிக் கொடுத்த ஆச்சாரியார் வீட்டில் ஓர் ஓலைச் சுவடி இருந்தது
    "அது க்ரந்தம். வால்மீகி அதுலதான் எழுதுனாரு. அப்ப தேவநாகரி கண்டு பிடிக்கப் படலை." என்றார்//

    இதற்கு உங்களிடம் தரவு (ஆதாரம்) இருக்கா ராஜாசுந்தர ராஜன்?

    வால்மீகி காலத்தில் கிரந்தம் தான் - சமஸ்கிருதம் எழுத தேவநாகரி (அ) வேறொரு எழுத்துரு இல்லை! - இதற்கான தரவு உள்ளதா?

    ஆண்டாளின் திருப்பாவை கூட கிரந்தத்தில் கிடைக்கிறது ஓலைச் சுவடியில்! அதற்காக அவள் கிரந்தத்தில் எழுதினாள்-ன்னு சொல்வோமா? பின்னாளில் எத்தனை சுவடிகள் இது போல் கிரந்தத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன!!!

    உங்கள் ஆசார்யரிடம் இருந்த சுவடி ஒரி'ஜி'னல் சுவடி-ன்னா, வால்மீகி கிரந்தத்தில் எழுதியது, இன்னிக்கி மாபெரும் செய்தி ஆகிவிடும்! அந்தச் சுவடியைக் காட்சிப்படுத்த, பல நூலகங்கள் போட்டி போடும்! விசாரித்து விட்டுச் சொல்லுங்களேன்!

    //மற்றபடி, கட்டுரையின் அக்கறையோடு ஒத்துப்போகிறேன்//

    மிக்க நன்றி புரிதலுக்கு!

    ReplyDelete
  60. @செல்வன்
    //தென் தமிழகத்துகாரர்கள் தானே சரவணா ஸ்டோர்ஸ், நெல்லை லாலா ஸ்வீட்ஸ் எல்லாம் நடத்துகிறார்கள்?//

    ரொம்ப சூப்பரான கேள்வி! :)
    தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலை வச்சவங்க தானே "சன்" டிவி நடத்துறாங்க-ன்னு கேக்குறாப் போல இருக்கு! :))

    ஐயன்மீர் செல்வன்,
    நான் சொன்ன எடுத்துக்காட்டு, சும்மா ஒரு பேச்சு அளவுக்கே! சோதிகா, ராசா, சில்லுனு என்றெல்லாமும் இருக்குது-ன்னு காட்டத் தான்! கிரந்தமே இல்லாத கொள்கையில் உறுதியா இருக்காங்க தென் தமிழ்நாட்டு மக்கள்-ன்னு எல்லாம் நான் சொல்லலை!:) Pl not the difference, okay?:)

    //அதாவது ஆங்கிலம் ஜேவை பிரேஞ்சுமொழியிலிருந்து கடன் வாங்கியது..இது நடந்தது 16ம் நூற்றாண்டில்.இன்று ஜேவை ஆங்கில எழுத்து இல்லை என சொல்ல முடியுமா?//

    J-வை ஆங்கிலமே ஏற்றுக் கொண்டதா இல்லை பிரஞ்சு மக்கள் அவர்கள் மீது ஆட்சி நடத்தி, J-வைத் திணித்தார்களா? சொல்லுங்க பார்ப்போம்!

    //இத்தனை பேர் கிரந்தம் கலக்காமல் பேசுகிறீர்கள்...எழுதுகிறீர்கள்..உங்கள் யாருக்கும் என்ன பலனும் ஏற்பட்டது போல தெரியவில்லை.அப்படி எதாவது பலன் ரகசியமா ஏற்பட்டிருந்தால் எனக்கும் சொல்லுங்க:-)//

    இந்த வெட்டி நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல!
    கிரந்தம் கலவாது எழுதினா Bank Balance கூடும்-ன்னு எல்லாம் இங்க யாரும் அருள்வாக்கு குடுக்கல!

    கிரந்தக் கலப்பால், தமிழ் மொழிச் சொற்கள் நாளாக நாளாக வழக்கொழியும் என்பது மட்டுமே பேசுபொருள்!

    //மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழிதூய்மை பேணுவது தான்//

    சூப்பர் கண்டுபிடிப்பு! :)))

    //தமிழை இதே போல சுத்திகரிக்க முனைந்தால் அப்புறம் அது சமஸ்கிருதம் மாதிரி யாராலும் பேசபடாத மொழியாகிடும்//

    அடா அடா அடா
    சமஸ்கிருதம் "தூய்மை" பேணியதால் தான் செத்துப் போச்சா?
    இல்லை, மேல்தட்டுக்கு மட்டும், தேவபாஷை, வேதகோஷ மொழி-ன்னு சொன்னதால்...பொது மக்கள் பேச முடியாமல் செத்துப் போச்சா? சொல்லுங்க பார்ப்போம்!

    ReplyDelete
  61. //மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழித்தூய்மை பேணுவது தான்//

    அவன் டாக்டர் கிட்ட போகாம இருந்திருந்தா இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பான்!
    மருத்துவம் பார்த்ததால் செத்துப் போயிட்டான்-ன்னு சொல்லுறாப் போல இருக்கு! :)))

    //மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழித்தூய்மை பேணுவது தான்//

    மேற்கண்ட வரிகளில் தான் என்னா ஒரு மேதாவித்தனம்! வில்லத்தனம்! :))

    //மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழித்தூய்மை பேணுவது தான்//

    மொழிச் சொற்கள் ஒவ்வொன்னாச் செத்துக்கிட்டே இருக்கட்டும்! பரவாயில்லை!

    ஜனநாயகம் = மக்களாட்சி
    சுதந்திரம் = விடுதலை

    "ஆனா எல்லாரும் ஜனநாயகம், சுதந்திர தினம்-ன்னே சொல்லிக்கிட்டே இருப்போம்! மாற்றுத் தமிழ்ச் சொல் இருக்கு-ன்னு கூட காட்ட வேணாம்! எதுக்கு-ப்பா அதெல்லாம்? அதுனால பலன் ஏற்பட்டிருந்தால் எனக்கும் ரகசியமா சொல்லுங்க! ஹி ஹி ஹி!"
    - இப்படித் தான் உங்களால் பேச முடியும்!

    நாளடைவில் விடுதலை நாள் என்பதே வழக்கொழிஞ்சி, அடுத்த தலைமுறை, சுதந்திரம் சுதந்திரம்-ன்னே கூவிக்கிட்டு இருக்கும்! தமிழில் விடுதலை என்ற சொல்லே காணாமப் போயீரும்!

    இப்படிப் போன சொற்களைப் பட்டியல் போடட்டுமா? அப்பறம் தெரியும் கிரந்தத்தின் "மேன்மை"!

    எப்படி எப்படி...//மற்றபடி ஒரு மொழியை அழிக்க மிக சிறந்த வழி மொழித்தூய்மை பேணுவது தான்// அடா அடா அடா.....தேவரீர் கண்டுபிடிப்புக்குத் தலை வணங்குகிறேன்! :((((

    ReplyDelete
  62. கொப்பம்
    சாளரம் = ஜன்னல்
    தடாகம்
    சாலிகை = கவசம்
    அங்காடி

    பொய்கை
    பொலிசை = இலாபம்
    சோறு = சாதம்
    காட்டு = உதாரணம்
    ஒருபுடை = ஏகதேச உருவகம்

    பண்பாடு = கலாச்சாரம்
    தெய்வம் = ஸ்வாமி/சாமி
    முரண் = விபரீதம்
    நூல் = புஸ்தகம்/புத்தகம்
    பாழ் = பூஜ்ஜியம்

    ரேழி = வெராண்டா
    மறுப்பு = நாஸ்தி/நாத்திகம்
    பொருள் = அர்த்தம்
    இதழ் = பத்திரிகை
    முகவரி = விலாசம்

    சும்மா, பயன்பாட்டுக்கு ஒரு இருபது தமிழ்ச் சொற்கள் கொடுத்தேன்! இதுல முக்காவாசி இன்னிக்கே செத்தே போயிருச்சி!
    1. எவனும் தமிழ்ப் பண்பாடு-ன்னு சொல்லுறதில்ல! தமிழ்க் "கலாச்சாரமாம்"! த்தூ...கிரகச்சாரம்! :(
    2. படிக்கும் போதே, ஏகதேச உருவகமாம்! பாட நூலிலேயே அப்படித் தான் இருக்கு! ஒருபுடை உருவகம்-ன்னு சொல்லு செத்தே போயிருச்சி!

    இதான் உண்மை ("நிதர்சனம்") நிலை!

    "அதுனால என்னய்யா? சாவட்டும்! ஒவ்வொரு சொல்லாச் செத்தாத் தான் மொழி வாழும்!" - என்ன செல்வன்? சரி தானே? :((

    ReplyDelete
  63. கிரந்த எழுத்தை ஒழிக்கச் சொல்லலை! கிரந்தச் சுவடியெல்லாம் கொளுத்தச் சொல்லலை! பெயர்ச் சொற்களையும் விதி விலக்கு செய்தாகி விட்டது!

    கூடுமானவரை, தமிழில் சொற்கள் இருக்கும் போது, அதையே புழங்குவோம்! வழக்கொழியாது, மொழிவளம் அழியாது இருக்கும்-ன்னு சொன்னதுக்கு...இம்புட்டு எதிர்வினை!

    SK என்னடான்னா - இதெல்லாம் எதுக்குச் சொல்லிட்டுச் செய்யறீங்க? மனசுக்குள்ளயே செஞ்சிக்கோங்க-ன்னு ஆசி குடுக்குறாரு! என் முருகனுக்கு எதுக்கு கோயில் கட்டுறீக? மனசுக்குள்ளயே நீங்களும் செஞ்சிக்கோங்களேன்? மனசாட்சி இருந்தா பதில் வருமா?

    ஆன்மீகத்துக்கு ரெண்டு கண்ணாம்! வள்ளலார் சொன்னாராம்! யப்பா! சொல்லததைக் கூடச் சொன்னா மாதிரி காட்டுற ஆன்மீக அற்புத வாதத்தை என்னன்னு சொல்ல!

    போதாக்கொறைக்கு, ஒவ்வொரு சொல்லாக் காவு குடுக்கு ஒத்துக்கணுமாம்! இல்லீன்னா தமிழ் செத்துருமாம்! அடேங்கப்பா! என்னவொரு விஞ்ஞானத் தேற்றம்!

    இதுக்கு மேலயும் பேசக் கூடிய சினம் கொப்பளிக்கிறது!
    இருந்தும்.....தோழி கோதைக்குள் அடங்கிப் போகிறேன்!
    செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
    தெளியாத (சமஸ்கிருத) மறை நிலங்கள், தெளிகின்றோமே!

    முருகா!!!

    ReplyDelete
  64. அன்பின் நண்பர் இரவிசங்கர்,

    தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் எந்த இலக்கியத்தில் அதிகம் நிற்க வேண்டுமோ அங்கு நின்று சிறந்த பணியாற்றி வருகிறீர்கள். அருமையான இந்தப் பதிவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பது போல்தான், சற்று கிரந்த விதயத்தில் இளகிக் கொடுத்தாலும், கிரந்த வடமொழி ஆதரவாளர்கள் நடந்து கொள்வார்கள். இதைத்தான் நானும் இப்பதிவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் சரவல் பயன்பாட்டுப் பிரச்சினை அல்ல. இது ஒரு வானவில் ஒத்த உளவியற் கேடு. உங்கள் தொடர் முயற்சிகள் வெல்லும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  65. //"ராஜா ஜெய்சிங்" என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்...//

    இந்தக் கேள்வியை நண்பர் அறிய வேண்டிக் கேட்டுள்ளாரா அல்லது கிரந்த நக்கலாளர் தொனியில் கேட்கிறாரா என்பது புரியவில்லை. ஆயினும், சில செய்திகளைச் சொல்ல விரும்புகின்றேன்.

    செஞ்சிக் கோட்டையை ஆண்ட தேசிங்குராசனின் இயற்பெயர்
    TEJ SINGH.
    TEJ என்ற சொல்லில் இன்று பல பேர்கள் உள்ளன. (teja, tejesh ..)

    tej singh செஞ்சியை ஆண்ட இரசபுதனத்துக்காரன். (தமிழ்நாட்டை யார் தான் ஆளவில்லை? தன் மொழியைக் கேவலப்படுத்தும் ஒரு இழிந்த குமுகத்தை யார் வேண்டுமானாலும் ஆளலாம்)

    அந்த இரசபுதனன், செஞ்சி மக்கள் உள்ளம் கவரும்படிதான் ஆண்டான். அதுமட்டுமல்ல தமிழ் மரபுக்குட்பட்டு
    அவன்பெயர் தேசிங்கு என்றே இயைந்து வழங்கினான். இந்த tej என்பது தமிழில், குறிப்பாக பத்தி இலக்கியங்களில் வெகுவாகப் புழங்கும் தேசு என்ற (=சுடர்/ஒளி) சொல்லாகும். "தேசுடைய இலங்கையர் கோன்... என்ற தேவார வரியைக் காண்க). இந்தத் தேசு வடக்கே Tejus ஆக விளங்குகிறது.

    தேசிங்கு ஒன்றும் சங்ககால அரசன் இல்லை. மொகலாயர் காலத்தின் இறுதியில் வாழ்ந்தவன். அந்த அண்மைக்காலத்தில் கூட, அதுவும் இங்கு வந்து ஆண்ட வடவன், தன்பெயர் வடமொழிப் பெயராக இருந்தாலும் அதனைத் தமிழ்ப்படுத்தி வழங்கும் மரபு இருந்தது.

    ஆனால், தற்போது தமிழன் தன்பெயரை வடமொழியில் வைத்துக் கொண்டு அதனைத் தமிழ்செய்வதற்கு ஏகப்பட்ட நக்கலடித்துத் தன் மேதைமையைக் காட்டிக் கொண்டிருக்கிறான்.

    தமிழன் தன்னுடைய தேசு வை விட்டுவிட்டு. Tej(us)esh என்றெல்லாம் பெயர் வைத்தவுடனேயே குண்டலினி எழுந்து நின்று உடலில் tejus ஐ விளங்கச் செய்யும் என்ற கனா பிடித்து ஆட்டுகிறது போலும் :(

    உண்மையில் Raja JayaSingh என்ற பெயரைத் தமிழ்செய்ய தமிழருக்குத் தெரியும்தான். ஆனால் செய்ய மாட்டார்கள்.

    அரச/அரைய என்ற சொல்லை ஆளாவிட்டாலும், இராசா செயசிங்கு என்று சொல்லிவிட்டால் ஏதோ தமிழுக்குப் பெருங்கேடு செய்துவிட்டாற்போன்ற மனநிலை தமிழனை வாட்டுகிறது.

    மீண்டும் "செய" என்ற சொல்லை, "தேசு" என்ற சொல்லை, "அரைய, அரச" என்ற சொற்களை யெல்லாம் வடமொழியில் இருந்து காத்து, இக்காலத்து மதம் பிடித்தத் தமிழருக்கில்லாவிடிலும் எதிர்காலத் தமிழர்க்குச் சேர்த்து வைத்திருப்பது பத்தி இலக்கியங்கள்தான்.

    அந்தப் பத்தி இலக்கியங்களைத் தொடர்ந்து சிரமேற்கொண்டு எழுதிவரும் நண்பர் இரவிசங்கரின் பணி போற்றத்தக்கதாகும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  66. @அறிவன்
    மிக்க நன்றி, உங்கள் உதவியான பதிலுரைக்கு!
    I was so happy at your comment help, coz fever, cudnt respond too much!

    ரெண்டு கண்ணு, ரெண்டு மூக்கு-ன்னு சொல்றவங்க எல்லாம் பெரும்பாலும் ஆன்மீகத்தில் இருந்து வரவங்க தான்! அவர்களுக்கு 'சமஸ்கிருதம்' மேல் சிறு கீறலும் படாத அளவில், தமிழ்ப் பயன்பாடு இருக்கணும்! அப்ப ஓக்கே!

    Aurangazeb போல ஒருத்தன் வந்து, இது போன்ற ஆன்மீகத்தை ஒழிச்சாத் தான் தமிழ் உருப்படுமோ என்னவோ? - இத நானே சொல்லுறேன்! வெக்கமாத் தான் இருக்கு! :((

    அருணகிரி தமிழை உள்ளே "நுழைக்க", ஏதோ செஞ்சிப் பாத்தாரு! அவரால முடியல! அவரு மேனேஜர் இல்லீயோன்னோ? பாட்டோட நின்னுருச்சி!

    அவருக்கும் முன்னாலயே இராமானுசர் செஞ்சிக் காட்டினாரு! அவரு மேனேஜர்! எப்படியோ சமாளிச்சி, உள்ளே தமிழை நுழைச்சிட்டாரு! வெ'ஷ'ம் வச்சிக் கொல்லப் பாத்தானுவ! ஆனா ஆளு தப்பிச்சிக்கிட்டாரு! இல்லீன்னா பகவானுக்கும் முன்னாடி தமிழை ஓதிக்கிட்டு வர விடுவாளோ?

    கருணாநிதி, மேற்படியாளுக்கு சம்பந்தி ஆகி, தயிர் சாதத்துக்கு ஊறுகாவா தமிழைத் தொட்டுப்பாரு! அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம் அம்போ ஆயிரும்! நம்பிப் படிச்ச குடும்பமெல்லாம் நடுத்தெருவில்!

    அதுனால என்ன?
    கொள்கை வேறு, வாழ்க்கை வேறுங்க!

    இப்படிச் சொல்றவங்க - ஒன்னு ஆன்மீகத்தில் இருந்து வராங்க (பேரின்பம்), இல்லை காம-இன்ப அன்பர்கள் வராங்க (சிற்றின்பம்) :)) பேதம் கிடையாது! ரெண்டுமே கண்ணு தான்! ரெண்டுமே உதடு தான்!

    ஆரிய உதடுகள் உன்னது,
    திராவிட உதடுகள் என்னது,
    ரெண்டும் கலக்கட்டுமே!
    ரெண்டும் கலக்கட்டுமே!
    -ன்னு பாடுவோம்! கிளுகிளுப்பா இருக்கு-ல்ல? :)

    முருகா...
    இப்படியெல்லாம் பதிவு போட்டா, நண்பர்-அண்ணா-தம்பி-ன்னு சொல்லிக்கிறவங்க கோச்சிக்கிட்டு, வெட்டிட்டு போவாங்க!
    அதனால் என்ன? நேர்மையான தமிழ்க் கருத்தை, கருத்தாச் சொல்லக் கூடவா உரிமை இல்லை?

    பயந்த "தனி" வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

    "தமிழைச் சுத்திகரிக்க முனைந்தால் செத்துரும்" - இதான் என்னை இப்படிப் பேச வைத்த விட்டது, காய்ச்சலிலும்! அன்பர்கள் மன்னிக்க!

    ReplyDelete
  67. ------------------------------
    ஆலயங்களில் தமிழை முன்னிறுத்திய இராமானு'ஜ'ர், தன்னை "இராமானுசன்" என்றே கையொப்பம் இட்டார்! இலக்கியங்களிலும் அவரை "இராமானுசன்" என்றே குறித்து வைத்தார்கள்! இது அவரே விருப்பமுடன் செய்து கொண்டது!
    ------------------------------
    இது எனக்குத் தெரியாத செய்தி. படிக்கும் போது சற்று நெகிழ்ந்து போனேன். உடையவர் ஆழ்ந்த கவனத்தோடு தான் இருந்திருக்கிறார். நாம் தான் அவரை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதிருக்கிறோம். இராமனுசர் மேல் இருக்கும் மதிப்பு இன்னும் கூடுகிறது. ஊருக்கே நாராயண வணக்கத்தைச் சொல்லிக் கொடுத்தவர் அல்லவா?

    இந்தப் பக்கம் வராது போய்விட்டேன். மன்னியுங்கள். விட்டுப் போன சொற்களை நிறைத்திருக்கிறேன்.

    கொப்பம் = யானை பிடிக்க வெட்டிய பெருங்குழி, Pit
    சாளரம் = ஜன்னல்
    தடாகம் = டாங்க்
    சாலிகை = கவசம்
    அங்காடி = மார்க்கெட்

    பொய்கை = புஷ்கரிணி
    பொலிசை = இலாபம்
    சோறு = சாதம்
    காட்டு = உதாரணம்
    ஒருபுடை = ஏகதேச உருவகம்

    பண்பாடு = கலாச்சாரம்
    தெய்வம் = ஸ்வாமி/சாமி
    முரண் = விபரீதம்
    நூல் = புஸ்தகம்/புத்தகம்
    பாழ் = பூஜ்ஜியம்

    ரேழி = வெராண்டா
    மறுப்பு = நாஸ்தி/நாத்திகம்
    பொருள் = அர்த்தம்
    இதழ் = பத்திரிகை
    முகவரி = விலாசம்

    மிகச் சரியான கருத்தைப் பதிந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் வடமொழியை ஒழிக்கச் சொல்லவில்லை. கிரந்தமே இருக்கக் கூடாது என்றும் சொல்லவில்லை. கூடியமட்டும் நம் எழுத்து நடை, பேச்சு நடைகளில் நல்ல தமிழைப் பயன்படுத்துங்கள் என்று மட்டுமே சொல்லுகிறோம். அது தவறா? நாம் பயன்படுத்தவில்லை என்றால் நம் மொழி சிதையும். அப்படி ஒரு தடவை சிதைந்து நம்மில் 1/3 பங்கினரை 400 ஆண்டுகளுக்கு முன் இழந்திருக்கிறோம். இனி இன்னொரு பங்கினரை இழக்க வேண்டாம்.

    Entropie der welt strebt einem maximum zu என்பது தமிழியலில் ஏற்படும் உள்ளுரும (information) உட்திரிப்புக்கும் (entropy) பொருந்தும். எங்கெல்லாம் சிதைவு இருக்கிறதோ அங்கு கொஞ்சமாவது ஒழுங்கு கொண்டுவரப் படவில்லையென்றால் நாம் எதிர்காலத்தில் வாழமுடியாது. ஒழுங்கு என்பது கசகில் பிறக்கிறது (order is born out of chaos). கசகே ஒழுங்கல்ல.

    அன்புடன்,
    இராம.கி..

    ReplyDelete
  68. /////// பல 108 திருத்தலங்களில் மகாலக்ஷ்மித் தாயார்-ன்னே இருக்காது!
    * திருமாமகள் நாச்சியார்
    * அலர் மேல் மங்கை
    * என்னைப் பெற்ற தாயார்
    * செங் கமல வல்லி
    * பெருந் தேவித் தாயார்
    * உய்ய வந்த நாச்சியார்
    - இப்படித் தான் இருக்கு! "மனத்தடை" வருதா என்ன? சாமி குத்தம்! புத்தி போட்டுக்கோங்கோ :)) ///////

    இராமாநுசர் நடைமுறைப்படுத்திய ஸ்ரீபாஞ்சராத்ரம் இடம் தருவதால் அப்படி உள்ளது; அவர்தம் அவதாரத்தலமான ஸ்ரீபெரும்புதூரிலோ தாயாருக்கு ‘யதிராஜநாதவல்லி’ எனும் பெயர்.
    ஊர்ப்பெயரில் ஸ்ரீ ஒழிக்கப்படவில்லை. இராமாநுச நூற்றந்தாதியும், யதிராஜ வைபவமும் ஒருசேர உடையவர் காலத்திலேயே வடிவம் பெற்று விட்டன.

    இராமாநுசர் வ மொ அர்ச்சனையைத் தடை செய்யவில்லையே !

    இரவியார் ஏன் முண்டா
    தட்டுகிறார் ?

    தமிழுக்கு வைணவத்தில் உயர்ந்த இடமுண்டு ; தனித்தமிழ் அரசியலுக்கு இடமில்லை



    தேவ்

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. >> ஒரு வேளை தமிழுக்குப் பெரும் ஏற்றம் தந்த வைணவத்தில் மணிப்பவளம் பின்பு பல்லக்கில் ஏறியதற்கு அடிப்படை காரணம்
    தேவரீர் சொன்னது போல் இராமானுசர் வடமொழியை அருச்சனையை தமிழ் அருச்சனைக்கு அடுத்து வைக்காதது தான் போலும். <<


    வருக குமரன்,

    இப்பதிவில் மணிப்பவளத்தைப் பல்லக்கில் ஏற்றியது யார் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீபுராணம்

    சமணர் வடமொழியில் மகாபுராணம் இயற்றினர். அதில்
    அறுபத்து மூவர் சரிதம் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவித் தமிழில் மணிப்பிரவாள நடையில் வடமொழியும் தென்மொழியும் ஆகிய இருமொழிச் சொற்கள் விரவி வரும் நடையில் ஸ்ரீபுராணம்
    எழுதப்பெற்றது. வடமொழியுந் தென்மொழியும் ஆகிய இருமொழிச்
    சொற்கள் விரவிவரும் உரைநடை தமிழிற்குப் புதிய போக்கு.
    தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதிய ஸ்ரீபுராணம் உரைநடை நூலின் விதையெனலாம். அதற்கு முன்னாலும் உரைநடை இருந்திருக்கிறது என்றாலும் நூல் முழுமையும் உரைநடையில்
    அமைந்தது என்பதால் ஸ்ரீபுராணத்திற்கு ஒரு தனியிடம் உண்டு எனலாம்.
    இம்மணிப்பிரவாள நடையை ஒட்டி வைணவ ஆசிரியர்களும் எழுத
    ஆரம்பித்தனர்.

    http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713l45.htm

    சமண நூலில் மணிப்பவளம் கலக்கக் காரணம் அவர்கள் அருகருக்கு
    வடமொழியில் அருச்சனை செய்ததாலா ?

    நான் சமணர்களிடமும் குறைகாணவில்லை; மூல நூல்களும் சமயக் கல்வியும்
    வடமொழியில் அமைவதாலும், வடமொழியின் ஸமாஸ அமைப்பு வரி நீளத்தையும், பட்டோலைப் படுத்துவதில் உழைப்பையும் குறைப்பதாலும் மணிப்பவளம்
    வழக்கில் வந்திருக்க வேண்டும்.

    ஒரு காரணமும் இல்லாமல் பல்லக்கேற முடியாது.

    @ இரவிசங்கரர்
    >>> அவருக்கு மிகப் பின்னால் வந்த அருணகிரியும் இதையே முயன்று பார்த்தார்! ஆனால் இராமானுசர் கண்ட வெற்றியை ஏனோ அருணகிரிப் பெருமான் காணவில்லை! <<<


    இதற்கான அகச்சான்று திருப்புகழில் உள்ளதா ? அவரது வாழ்க்கைக் குறிப்பில் இம்முயற்சி கூறப்பட்டுள்ளதா ?

    ஸ்ரீபுராணம் சமய நூல், அதில் க்ரந்த/மணிப்ரவாளம் பல்லக்கேறலாம் என்று பெருந்தன்மையாக
    அநுமதி அளிக்கும் நீங்கள் (சமணம் மறைந்து வெகுகாலத்துக்குப்பின்) வைணவத்தில்
    மணிப்பவளம் பல்லக்கேறியதற்குக் குறைப்பட்டுக் கொள்வானேன் ? அதுவும் வடமொழி அர்ச்சனை காரணமாக.

    இது மொழி அரசியல் இல்லாமல் வேறு என்ன ?


    அளவுகோல் இடத்துக்குத் தகுந்தாற்போல் மாறுபடுவதேன் ?

    வெறும் பேச்சுத் தமிழோடு நின்றிருந்தால் இந்த அளவு பின்னூட்டம் வளர்ந்திராது.

    வைணவத்துறையும் க்ரந்தத்தோடு இணைக்கப்பட்டுள்ளது தேவையில்லாமல்



    தேவ்

    ReplyDelete
  71. @KRS: i really like your article, but for one point:
    So, pls answer this:
    1) What if i translate Prabandham into English and say, it is only the meaning that matters, and i can relish Prabandham in English with the same beauty that it is found in Tamil?
    While translations are necessary to help the work reach a larger group of people, will not the beauty of Azhwar's verses be lost when i translate? Can u compare a translation to the original work??

    //தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)//
    :)
    Let's come to this...ofcourse, a translation is necessary to comprehend the meaning, but dfinitely, a translation cant compare with the original.

    One day, when i was standing in frnt of Vedavalli Thaayar sannathi in the temple, some North Indian tourist asked me about the shrine. is said "Yeh Lakshmi Mata ki mandir hain". Then, my conscience itself didn't accept altering the name, and i went on to say "Inka naam yahaan pe vedavalli hain".

    That's how it is.

    A work in Tamil will sound best in Tamil.
    A work in Sanskrit, meanwhile, can sound best in that language only.

    Otherwise, it is a case of borrowing a vessel from the neighbour, and saying it looks best in my kitchen! :)

    ReplyDelete
  72. "Inka naam yahaan pe vedavalli hain".

    ”लक्ष्मी जी” என்று சொல்லிப் பரிசயப் படுத்தியிருக்க வேண்டும்.

    வடபுலத்தில் சீதளா தேவி வழிபாடு உண்டு; வடபுலத்தில் வாழும் தமிழர் இங்கிருந்து புதிதாகப் போனவர்களுக்கு அதை மாரியம்மன்
    வழிபாட்டோடு உவமை காட்டியே அறிமுகம் செய்வர். அதுதான் எளிதாகப் புரிய வைக்கும்.
    நம்மவர்களுக்கும் சிரத்தை தரும்


    தேவ்

    ReplyDelete
  73. //நான் சொன்ன எடுத்துக்காட்டு, சும்மா ஒரு பேச்சு அளவுக்கே! சோதிகா, ராசா, சில்லுனு என்றெல்லாமும் இருக்குது-ன்னு காட்டத் தான்! கிரந்தமே இல்லாத கொள்கையில் உறுதியா இருக்காங்க தென் தமிழ்நாட்டு மக்கள்-ன்னு எல்லாம் நான் சொல்லலை!:) Pல் நொட் தெ டிffஎரென்cஎ, ஒகய்?:) //

    எடுத்துகாட்டு எல்லாத்துக்கும் தான் இருக்கு இரவிசங்கர்:-)..நமக்கு பிடிச்ச அல்லது நாம் சொல்வதுக்கு ஒத்துவரும் எடுத்துகாட்டை மட்டும் பார்க்க கூடாது.பிக் பிக்சரை பார்க்கணும்:-)

    //J-வை ஆங்கிலமே ஏற்றுக் கொண்டதா இல்லை பிரஞ்சு மக்கள் அவர்கள் மீது ஆட்சி நடத்தி, J-வைத் திணித்தார்களா? சொல்லுங்க பார்ப்போம்!//

    ஆங்கில மொழியே ப்ரிட்டிஷ் மக்கள் மேல் ஜெர்மானியர்கள் திணித்ததுதானே?அப்படி பார்த்தால் 26 ஆங்கில எழுத்தும் திணிக்கபட்டதுதான்:-)

    //கிரந்தம் கலவாது எழுதினா Bஅன்க் Bஅலன்cஎ கூடும்-ன்னு எல்லாம் இங்க யாரும் அருள்வாக்கு குடுக்கல!

    கிரந்தக் கலப்பால், தமிழ் மொழிச் சொற்கள் நாளாக நாளாக வழக்கொழியும் என்பது மட்டுமே பேசுபொருள்!//

    தமிழ் சொல் என்ன என்பதை நீங்களாக வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சனை. ஐந்தாம் நூற்றாண்டில் பேசபட்டதுதான் தமிழ் சொல் என்றால் அப்புறம் தமிழ் மட்டுமல்ல எந்த மொழியும் இன்று அழிந்துதான் போயிருக்கும்.

    //அடா அடா அடா
    சமஸ்கிருதம் "தூய்மை" பேணியதால் தான் செத்துப் போச்சா?
    இல்லை, மேல்தட்டுக்கு மட்டும், தேவபாஷை, வேதகோஷ மொழி-ன்னு சொன்னதால்...பொது மக்கள் பேச முடியாமல் செத்துப் போச்சா? சொல்லுங்க பார்ப்போம்! //

    இரண்டும் தான் காரணம்.தமிழில் ஆங்கில சொல் காபியை ஏற்றுகொண்டு அப்படியே காபி என்கிறோம்.சமஸ்கிருதத்தில் காபிக்கு ஈடாக என்ன சொல் இருக்கு?

    இப்படி மாற்று மொழி சொற்களை ஏற்றுகொள்ளாமல், மாற்றத்தை ஏற்றுகொள்ளாமல் மொழிதூய்மை பேணீயதால் தான் சமஸ்கிருதம் இன்னும் தூய்மையா பரணில் இருக்கு.எல்லா மொழி சொற்களையும் மனதடையின்றி ஏற்றுகொண்டதால் ஆங்கிலம் உயர்ந்த நிலையில் இருக்கு (அது மட்டும் தான் காரணம் இல்லை.ஆனால் அதுவும் முக்கிய காரணம்).ஆங்கிலேயர்கள் நம்மபி போல இது பிரென்ச்ஜு சொல், இது துய்ய ஆங்கில சொல், இது ஜெர்மன் சொல் என பிரித்து பார்ப்பதில்லை.ஒரு சொல் வழக்கில் ஏறினால் அப்புறம் அது ஆங்கில சொல் தான்.

    //அவன் டாக்டர் கிட்ட போகாம இருந்திருந்தா இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பான்!
    மருத்துவம் பார்த்ததால் செத்துப் போயிட்டான்-ன்னு சொல்லுறாப் போல இருக்கு! :)))//

    கத்துகுட்டி டாக்டர் கிட்ட போயி மருத்துவம் பார்த்தால் செத்துதான் போவார்கள்.இதென்ன கேள்வி?:-)

    //மொழிச் சொற்கள் ஒவ்வொன்னாச் செத்துக்கிட்டே இருக்கட்டும்! பரவாயில்லை!

    ஜனநாயகம் = மக்களாட்சி
    சுதந்திரம் = விடுதலை

    "ஆனா எல்லாரும் ஜனநாயகம், சுதந்திர தினம்-ன்னே சொல்லிக்கிட்டே இருப்போம்! மாற்றுத் தமிழ்ச் சொல் இருக்கு-ன்னு கூட காட்ட வேணாம்! எதுக்கு-ப்பா அதெல்லாம்? அதுனால பலன் ஏற்பட்டிருந்தால் எனக்கும் ரகசியமா சொல்லுங்க! ஹி ஹி ஹி!"
    - இப்படித் தான் உங்களால் பேச முடியும்!//

    மக்களாட்சி,விடுதலை என எழுதவேண்டாம் என யார் பிரச்சாரம் மேற்கொண்டாரக்ள், இயக்கம் நடத்தினார்கள்?

    ஜனநாயகம்/மக்களாட்சி இரண்டும் சினானிம்.இரண்டில் எதை வேணாலும் பயன்படுத்தலாம்..இரண்டும் தமிழ் தான்.

    //நாளடைவில் விடுதலை நாள் என்பதே வழக்கொழிஞ்சி, அடுத்த தலைமுறை, சுதந்திரம் சுதந்திரம்-ன்னே கூவிக்கிட்டு இருக்கும்! தமிழில் விடுதலை என்ற சொல்லே காணாமப் போயீரும்!

    இப்படிப் போன சொற்களைப் பட்டியல் போடட்டுமா? அப்பறம் தெரியும் கிரந்தத்தின் "மேன்மை"! //

    அடுத்த தலைமுறை இண்டிபெண்டென்ஸ் டேன்னு தான் சொல்லும்.சுதந்திர தினம்னால் என்னன்னே கொஞ்ச நாளில் யாருக்கும் புரியாது:-)

    மத்தபடி கிரந்தம் இல்லாவிட்டாலும் நாள்போக்கில் தமிழ் சொற்கள் வழக்கொழிந்தும் புது சொற்கள் புழக்கத்துக்கு வந்தும் தான் இருக்கும். கிரந்தம் இல்லைன்னே வெச்சுக்குவோம்.அப்ப ஜன்னல் என்பது சன்னல் என புழங்கியிருக்கும்.சாளரம் என சொல்லாமல் மக்கள் சன்னல் என சொல்லிகொண்டிருப்பார்கள்.

    ReplyDelete
  74. //மேற்கண்ட வரிகளில் தான் என்னா ஒரு மேதாவித்தனம்! வில்லத்தனம்! :))//

    இரவிசங்கரா வில்லன், மேதாவி எனும் வடமொழி/ஆங்கில சொற்களை பயன்படுத்துவது? எல்லாரும் வில்லன்,மேதாவின்னு சொல்லிக்கிட்டே இருந்தால் தமிழ் நாளடைவில் அழிஞ்சிடாதா?என்னவோ போங்க:-)

    ReplyDelete
  75. //”लक्ष्मी जी” என்று சொல்லிப் பரிசயப் படுத்தியிருக்க வேண்டும்.//

    @Devarajan Sir,
    //"Yeh Lakshmi Mata ki mandir hain".//
    idhai padikkaamal viteengala? :)

    ReplyDelete
  76. @ In Love With Krishna
    >>> is said "Yeh Lakshmi Mata ki mandir hain".<<<

    மன்னிக்கணும்; I said னு வாசிச்சிருக்கணும். பெரிய பிராட்டியார்
    பிழை பொறுப்பாராக


    தேவ்

    ReplyDelete
  77. @தேவ் சார்
    //இராமாநுசர் வ மொ அர்ச்சனையைத் தடை செய்யவில்லையே !//

    திருமலையில் ஒரு மாதம் முழுவதும் சுப்ரபாதம் "கட்"!
    திருப்பாவை மட்டுமே!

    சரி....திருப்பாவை பாடிட்டு, அப்பறம் சுப்ரபாதம் பாடிட்டுப் போகட்டுமே! எதுக்கு ஒட்டுமொத்தமாய் 'கட்' பண்ணனும்? சொல்லுங்க!

    //இரவியார் ஏன் முண்டா
    தட்டுகிறார் ?//

    "தமிழைச் சுத்திகரிக்க முனைந்தால் செத்துரும்" - இதான் என்னை இப்படிப் பேச வைத்த விட்டது, காய்ச்சலிலும்! அன்பர்கள் மன்னிக்க!

    //தமிழுக்கு வைணவத்தில் உயர்ந்த இடமுண்டு ; தனித்தமிழ் அரசியலுக்கு இடமில்லை//

    தனித்தமிழில் அரசியலும் இல்லை!
    அரசியலில் தனித்தமிழும் இல்லை!

    ReplyDelete
  78. @இரவிசங்கரர்
    >>> கிரந்தக் கலப்பால், தமிழ் மொழிச் சொற்கள் நாளாக நாளாக வழக்கொழியும் என்பது மட்டுமே பேசுபொருள்!<<<

    இரவி ஐயா,
    உங்கள் பழைய பதிவு ஒன்றில் பார்த்தது -


    குதிரை வாகனம் வேறு வீதிக்குத் திரும்பி ஆனால் சற்று நேரத்தில் நின்று விட்டது. வாகனத்தைச் சுமப்போர் எவ்வளவோ முயன்றும் ஹூஹூம்.

    அர்ச்சகரின் மேல் ஆவேசம் வந்து, ‘‘தெற்கு வீதியில் என் உள்ளார்ந்த பக்தன் ஒருவன், தரிசனம் செய்ய முடியாமல் துடிக்கிறானே! அவனை அழைத்து வாருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.

    உடனே கோஷ்டியில் உள்ளவர்கள் தியாகராஜரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சுவாமிக்கு அருகில் அழைத்து வந்தார்கள்.
    இதே குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;
    பின்னர் "ஓ ரங்க சாயீ" முதலான ஸ்ரீரங்க பஞ்சரத்னக் கீர்த்தனை களைத் தனியாகப் பாடி அருளினார்!

    http://madhavipanthal.blogspot.com/2007/01/5.html

    நீங்கள் இனிமேலாவது இதுபோல் க்ரந்தம் கலந்து எழுதாமல்
    சமணர்கள் தாங்கியதுபோல் தமிழ்த்தொண்டு செய்யுங்கள்



    தேவ்

    ReplyDelete
  79. @ILWK

    //1) What if i translate Prabandham into English and say, it is only the meaning that matters, and i can relish Prabandham in English with the same beauty that it is found in Tamil?//

    We are NOT talking abt translations!
    We are talking abt mixing words in tamizh! That too killing tamizh words one by one and injecting grantham words into the system!

    //A work in Tamil will sound best in Tamil.
    A work in Sanskrit, meanwhile, can sound best in that language only//

    நன்றி!
    மாற்று மொழிக்காரர்களுக்குப் புரிய வைக்க பேரை விளக்கிச் சொல்வதில் தவறில்லை!
    அவராப் பார்த்து இது யாரு-ன்னு கேட்டாரு! வேதவல்லித் தாயார்="மகாலக்ஷ்மி" என்று கேள்விக்குப் பதில் சொன்னீர்கள்! இதிலெல்லாம் யாரும் தவறு காணவில்லை!

    //Otherwise, it is a case of borrowing a vessel from the neighbour, and saying it looks best in my kitchen! :)//

    Fantastic!
    கிரந்தத்தை நம் வீட்டுக்குள் வலியப் புகுத்திக் கொண்டாந்து வைத்து, பாருங்கோ எப்படிப் பளபள-ன்னு மின்னறது-ன்னு சொல்றாங்களே! அது போலத் தான்!

    ReplyDelete
  80. @Dev Sir: Typing mistake mine, sorry...
    What i was trying to convey whas that though i could explain in His language whom we were praying to, i could not translate the beauty in "Vedavalli" thaayar's name.

    Same way while i agree that a language should not be adulterated, to say that a sloka (or archana, in my point of discussion) written in one language sounds better in a language it was translatd into is not my cup of tea.
    For example, ask Shakespeare fanatics (which i once was) what was Ceasar's famous line. Ten out of ten will say "Et tu, Brutus!" and not "You too, Brutus".
    @KRS:
    1) i agree that a language must atleast strive to be 99.9% unadulterated.
    2) To applaud that works in that language are free of external influences: well and fine.
    3) But to say that something like archana, which was originally borrowed in translation from another language, sounds best in the borrowed version, is more out of ur love for the language than anything else. :)
    p.s: reason behind my english: i dont want u starting off on Tanglish, that's y, indha padhivu-kku adakki vaasikiren :)

    ReplyDelete
  81. //சரி....திருப்பாவை பாடிட்டு, அப்பறம் சுப்ரபாதம் பாடிட்டுப் போகட்டுமே! எதுக்கு ஒட்டுமொத்தமாய் 'கட்' பண்ணனும்? சொல்லுங்க!//
    Adhu dhaan Aandal kannan-ai mattum illaamal vaasal kaavaligal-lerndhu balaraamar varaiyum eloraiyum ellipitaangale!! Inime enna second waking up?
    Aandal-idam ellam "innum 5 mins, please" kettuttu thoonga mudiyaadhu!! :))
    Mutti modhi endhirichu, Aandal-kkaga "Close up" smile ellam sirichaachu!!
    Inime enna suprabhaatam? :))

    ReplyDelete
  82. @KRS:
    //We are NOT talking abt translations!
    We are talking abt mixing words in tamizh! That too killing tamizh words one by one and injecting grantham words into the system!//
    KRS, i am with u on that (though its only my thoughts, my feeble Tamil is far from being close to ur attempt).
    My problem is with this line, and this line only:
    //தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)//
    For this only, Prabandham example :)

    ReplyDelete
  83. @தேவ் சார்
    //உங்கள் பழைய பதிவு ஒன்றில் பார்த்தது//

    ha ha ha!
    அட நானே கிரந்தம் கலந்து தான் எழுதறேன்-ன்னு உலகப் பெரும் உண்மையை நிரூபிக்க, நீங்க பழைய பதிவுகளைத் தேடிச் செல்ல வேண்டியதே இல்லை! இதே பதிவிலேயே இருக்கே! பார்க்கவில்லையோ? :))

    அது தெலுங்குக் கவிகளான தியாகரா'ஜ'ர் பற்றிய பதிவு! அதில் தெலுங்குப் பாடல் வரிகளும், இன்ன பிறவும் நடுவே விரவித் தான் வரும்!

    இந்தப் பின்னூட்டத்தில் கூடத் தியாகரா'ஜ'ர்-ன்னு தான் எழுதறேன்! இது பெயர்ச் சொற்களுக்காகவும், இன்ன பிற நண்பர்களுக்காகவும் நான் செய்து கொள்ளும் சமாதானம்!

    ஆனா அதையே முழுக்க முழுக்கச் செய்யேன்-ன்னு சொல்ல முடியாது!

    சொல்ல வருவது என்னன்னா:
    கிரந்தச் சொல் தவிர்த்தல் 100% யாராலும் உடனே செய்து விட முடியாது!
    ஆனால் இயன்றவரை, தெரியும் இடங்களில் எல்லாம், சந்தோஷம் என்பதைத் தவிர்த்து, மகிழ்ச்சி என்று புழங்குங்கள்
    - இதைத் தான் கரடியாய்க் கத்திக்கிட்டு இருக்கேன்!

    ஆனாலும் புரியாதது போல், காதிலேயே வாங்கிக் கொள்ளாது, அது மணிப்பிரவாளம் இல்லையா, இது அது இல்லையா? வடமொழி அர்ச்சனையைத் தடை செய்தாரா?-ன்னு எல்லாம் வேறு வழியில் வளர்ந்துக்கிட்டு இருக்கு :) நான் என்ன சொல்ல? இருங்க! சோறு சாப்பிட முடியாது! கொஞ்சம் ரசம் குடிச்சிட்டு வரேன்!

    ReplyDelete
  84. @இரவிசங்கரர்
    >>> சரி....திருப்பாவை பாடிட்டு, அப்பறம் சுப்ரபாதம் பாடிட்டுப் போகட்டுமே! எதுக்கு ஒட்டுமொத்தமாய் 'கட்' பண்ணனும்? சொல்லுங்க! <<<

    ஸுப்ரபாதம் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சீடரான ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
    அவர்களால் (14/15ம் நூற்0) இயற்றப்பட்டது. உடையவர் காலத்தில் இந்த ஸுப்ரபாதம் கிடையாது. திருமலை என்றில்லை; அரங்கம் தவிர எல்லாத் தென்னக விண்ணகரங்களிலும்
    மார்கழியில் பாவை மட்டுமே. அரங்கன் ஆலய வழக்கம் நீங்கள்
    நன்கு அறிந்ததே. பாவை மட்டும் எதற்காக ? மார்கழியில் தோன்றிய திருப்பாவை வேதமனைத்துக்கும்
    வித்தாக விளங்கும் காரணத்தால். மொழியைக் காட்டிலும் விஷய வைலக்ஷண்யம் முதன்மை பெறுகிறது.

    வேதார்த்த ஸங்க்ரஹம் அருளிய உடையவர் திருப்பாவையில்
    மறைகள் முழுவதையும் கண்டார்



    தேவ்

    ReplyDelete
  85. @ILWK
    நன்றி, பல கருத்துக்களோடு உடன்பட்டமைக்கு!

    பந்தல் நேயர்களே, ILWK என்னும் இச்சிறுமிக்கு தமிழ் பேச வரும் அளவுக்கு எழுத வராது! ஆனாலும் ஆர்வம்!
    ஆங்கிலத்தில் அவர்கள் எழுதுவதை இந்தப் பின்புலம் கொண்டு பார்த்து, அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்ளவும்! :)

    ILWK - I had to remove the transliteration tool at the comment section bcoz of blogger issues! However i wud suggest that you pl start using the google transliterator and cut & paste the text here!

    //But to say that something like archana, which was originally borrowed in translation from another language, sounds best in the borrowed version...//

    அர்ச்சனை என்பது பெயர் மற்றும் குணங்களின் தொகுப்பு மட்டுமே!
    பல "அஷ்டோத்திர நாமாவளிகள்" எல்லாம் மிக மிக பிற்காலத்தியவை! அவற்றுக்கு மூலம்-ன்னு எல்லாம் ஒன்னும் கிடையாது!

    வடமொழி அர்ச்சனை ஆலயங்களில் செய்வது, நம் பேரைக் கேட்டுக் கொண்டு, "சங்கல்பம்" செய்து வைக்கிறார்கள்!
    அந்தச் "சங்கல்பம்" என்னும் உறுதிமொழியில், தான் என்ன வேண்டுகிறோம் என்பதாவது, வேண்டுபவனுக்குத் தெரிய வேணாமா?

    அர்ச்சனை-சங்கல்பங்கள் இறைவனுக்கு அல்ல! மனிதனுக்கே! மனிதன் மூலமாக இறைவனுக்கு!
    எனவே மனிதனுக்குப் புரியும் மொழியில் இருப்பது இன்னும் நலம்!

    தோழி கோதை செய்யாத தமிழ் அர்ச்சனையா?
    அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி
    சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
    வென்று பகை கெடுக்கும் உன் கையில் வேல் போற்றி

    அதுக்கும் முன்னாடி "சங்கல்பமும்" செய்து வைக்கிறாள்!
    போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா
    யாம் வந்த காரியம் ஆராய்ந்து, அருளேலோ ரெம்பாவாய்!

    தமிழ் அர்ச்சனை என்பது என்னவோ, வடமொழி மூலத்தின் Translation, அதனால் முழுச் சுவையும் இருக்காது-ன்னு நீங்களா நினைச்சிக்காதீங்க!:))
    Here, Posts on Tamizh Archanai
    மாதவிப் பந்தல் பதிவு
    நமசிவாய வாழ்க - சிவன் பாட்டுப் பதிவு

    ReplyDelete
  86. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. >>>> பல "அஷ்டோத்திர நாமாவளிகள்" எல்லாம் மிக மிக பிற்காலத்தியவை!
      அவற்றுக்கு மூலம்-ன்னு எல்லாம் ஒன்னும் கிடையாது! <<<

      இதற்கு ஆதாரம் என்ன ?

      சமணர் ‘ஞமண ஞாஞண ஞாண ஞோணம்’ என்று ஓதியதாகத்
      தேவாரம் பதிவு செய்கிறது. சமண வழிபாட்டில் பிற மொழி
      இடம் பெறுவதற்குச் சலுகை உண்டு என்று எடுத்துக்கொள்ள
      வேண்டுமா ?

      ‘ஞமண ஞாஞண ஞாண ஞோணம்’ பிற்காலத்தியதா ?
      முற்காலத்தியதா ? ரிஷபதேவர் இப்படித்தான் வழிபட்டாரா ?


      தேவ்

      Delete
    2. அஷ்டோத்திர நாமாவளிக்கு ஒங்க ஆதாரம் என்ன?

      ஓம் வேம்படி விநாயகாய நம -ன்னு முடிக்குறான், புதுசாத் தொறந்த வேம்பு + அடி + விநாயகர் கோயிலில்!
      வேம்பு + அடி = இது என்ன பவிஷ்யோத்திர புராணமா?:) லட்சம் ஆண்டுகளுக்கு முன், வியாச பகவான் அருளிச் செய்தாரா?:))

      //சமண வழிபாட்டில் பிற மொழி இடம் பெறுவதற்குச் சலுகை உண்டு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா ?//

      அது உங்க பிரச்சனை!
      எங்களுக்கு அக்கறை இல்லை!

      தேவாரம் பதிவு செய்வதை வச்சி, சைவத்தைத் தான் நிர்ணயஞ் செய்ய முடியும்!
      அதில் வருவதை வச்சிச், சமணத்தை நிர்ணயம் செய்ய முடியாது!!


      Delete
  87. //செல்வன் said...
    இரவிசங்கரா வில்லன், மேதாவி எனும் வடமொழி/ஆங்கில சொற்களை பயன்படுத்துவது?//

    வில்லு வச்சிருக்கறவன் = வில்லன்!
    மேன்மையான ஆவி = மேதாவி!
    போதுமா? :)))

    தேவ் சாருக்குச் சொன்ன பதிலையே பாருங்கள்!

    ஏதோ கிரந்தக் கலப்பை 100% தவிர்த்து விட்டுத் தான், நான் இந்தப் பதிவைப் போட்டேன்-ன்னு "குத்திக்காட்ட" மட்டுமே உங்கள் "குயுக்தி" பயன்படும்!

    மற்றபடி, 100% கிரந்தம் நீக்கித் தான் நான் எழுதறேன்-ன்னு மார் தட்டிக்கலை!
    "ஒவ்வொரு தமிழ்ச் சொல்லாச் சிதைய விடாமல், இருக்கும் சொற்களை இயன்ற வரை புழங்குவோம்" என்பது தான் பதிவின் மைய நீரோட்டம்!
    அது விளங்குபவர்களுக்கு விளங்கும்!

    >நான் ஈடுபடப் போகிறேன்! நீங்கள்???< -ன்னு தான் பதிவில் சொல்லி உள்ளேனே தவிர,
    >நான் ஈடுபட்டு முடித்து விட்டேன்!நீங்கள்???< -ன்னு மார் தட்டிக்கலை!

    Hope u got the core objective & crux of the post, than all this peripheral washing & bashing!

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. //தேவ் சாருக்குச் சொன்ன பதிலையே பாருங்கள்!

    ஏதோ கிரந்தக் கலப்பை 100% தவிர்த்து விட்டுத் தான், நான் இந்தப் பதிவைப் போட்டேன்-ன்னு "குத்திக்காட்ட" மட்டுமே உங்கள் "குயுக்தி" பயன்படும்!

    மற்றபடி, 100% கிரந்தம் நீக்கித் தான் நான் எழுதறேன்-ன்னு மார் தட்டிக்கலை!
    "ஒவ்வொரு தமிழ்ச் சொல்லாச் சிதைய விடாமல், இருக்கும் சொற்களை இயன்ற வரை புழங்குவோம்" என்பது தான் பதிவின் மைய நீரோட்டம்!
    அது விளங்குபவர்களுக்கு விளங்கும்!//

    எல்லோருக்கும் தம் நிலை நடுநிலை..தம்மை விட கொள்கையில் தீவிரமா இருப்பவன் தீவிரவாதி,தன்னை விட லிபரலா இருப்பவன் மொழிப்பற்று இல்லாதவன்

    மேதாவி, வில்லன் போன்ற சொற்களை பயன்படுத்துதல் இரவிசங்கரை பொறுத்தவரை தவறு இல்லை.இதை தவறு என சொல்லகூடியவர்கள் இருப்பார்கள்.அவர்கள் உங்களை மொழிபற்று இல்லாதவர் என்பார்கள்.நீங்கள் அவர்களை தீவிரவாதிகள் என்பீர்கள்.

    மத்தபடி அந்த சொற்கள் பிறமொழி சொற்கள் என்பதை சுட்டிகாட்ட காரணம் நீங்கள் என்னை நோக்கி அதை பயன்படுத்தியதுதான். என்னதான் கருத்து மாறுபட்டாலும் வாதம் செய்யும்போது அடைமொழிகள் கொடுத்து இன்னொருவரை விளிக்கும் வழக்கம் எனக்கு இல்லை.அம்மாதிரி வாதம் செய்யவோ உங்களை எதிரியாக நினைத்து தோற்கடிக்கவோ இங்கே வரவில்லை.பொதுவாக வலைபதிவுகளில் பின்னுட்டம் இப்பல்லாம் இடுவதில்லை.அதை உங்கள் பதிவுக்காக சற்று தளர்த்தினேன்.அப்படி செய்திருக்க கூடாது என இப்போது தெரிகிறது.

    ReplyDelete
  90. @செல்வன்

    //தமிழ் சொல் என்ன என்பதை நீங்களாக வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சனை. ஐந்தாம் நூற்றாண்டில் பேசபட்டதுதான் தமிழ் சொல் என்றால் அப்புறம் தமிழ் மட்டுமல்ல எந்த மொழியும் இன்று அழிந்துதான் போயிருக்கும்//

    நன்றி இந்தப் புது கண்டுபிடிப்புக்கு!
    எப்படியெல்லாம் "டைப் டைப்பா" வராங்கப்பா :)

    பண்பாடு = 5ஆம் நூற்றாண்டுத் தமிழ் அல்ல!
    ஆனா இன்னிக்கி எவரும் "தமிழ்ப் பண்பாடு"-ன்னு எழுதறது இல்ல! "தமிழ்க் கலாச்சாரம்" தான்!

    நான் "டைப் டைப்பா"-ன்னு எழுதறது நகைச்சுவைக்காக மட்டுமே! அதுவும் இப்பதிவில் மட்டுமே!
    ஆனா ஒட்ட மொத்த தமிழகமும் "தமிழ்க் கலாச்சாரம்"-ன்னு தான் புழங்குது! இதன் வீச்சு அதிகம்!

    அதனால் ஏதோ என்னைக் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த வீச்சைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்!

    நாங்களாக எதுவும் இது தான் தமிழ்ச் சொல்-ன்னு வரையறுத்துக்கலை!
    கமலம் என்ற சொல்லும் புழக்கத்தில் தான் இருக்கு! அதை ஒழி-ன்னு கெளம்பலை! கிரந்தத்தோடு இருக்கும் பங்க'ஜ'ம்! அது பற்றித் தான் முதல் பார்வை!

    * கமலம் = தமிழ்ச் சொல் தானா-ன்னு வரையறுத்துக்கிறது இருக்கட்டும்! அப்பாலிக்கா வச்சுப்போம்!
    * ஆனா பங்க'ஜ'ம் தமிழ்ச் சொல் இல்லை-ன்னு நல்லாவே தெரியும் அண்ணாச்சி! :)))

    எதுக்கு அழகுணி ஆட்டம் ஆடுறீக?:)

    //தமிழில் ஆங்கில சொல் காபியை ஏற்றுகொண்டு அப்படியே காபி என்கிறோம்.சமஸ்கிருதத்தில் காபிக்கு ஈடாக என்ன சொல் இருக்கு?//

    இங்கே பேச்சு காபியைப் பற்றியா? இல்லை...
    சந்தோஷம், தஸ்தாவேஜ், கஷ்டம், அஸ்தமனம் போன்ற கிரந்தம் கலந்த சொற்கள் பற்றியா?

    காபி/பெப்சி-ன்னு எழுதாதீங்க-ன்னு சொல்லி இருக்கா பதிவில்?
    காபி/பெப்சி எல்லாம் ஒரு Brand Name போல புழங்கிட்டுத் தான் இருக்காக!

    சொல்றது என்னான்னா காபி பேஷா இருக்கு-ன்னு பயன்பாட்டைத் தவிர்த்து...
    காபி சுவையா இருக்கு-ன்னு புழங்கலாமே-ன்னு தான் சொல்லுறோம்!

    காபி-க்கு தமிழில் மூலம் இல்லை! அப்படியே ஏத்துக்கிட்டாச்சு!
    ஆனா சுவை என்பது தமிழில் ஏற்கனவே இருக்கு! அப்படி இருக்க பேஷ் வேணாமே-ன்னு தான் முன்வைக்கிறோம்!

    அதைக் கூட முன் வைக்காதீங்கடா-ன்னு நீங்க "ஹிதோபதேசம்" பண்ணுறீங்க:)


    //எல்லா மொழி சொற்களையும் மனதடையின்றி ஏற்றுகொண்டதால் ஆங்கிலம் உயர்ந்த நிலையில் இருக்கு (அது மட்டும் தான் காரணம் இல்லை.ஆனால் அதுவும் முக்கிய காரணம்)//

    இதுக்குப் பதிவிலேயே பதில் சொல்லியாச்சி! ஆனாலும் அடிக்கற 'ஜ'ல்லியை நீங்க அடிச்சிக்கிட்டுத் தான் இருப்பீங்க-ன்னு தெரியும்!:)

    //ஆங்கிலேயர்கள் இது துய்ய ஆங்கில சொல், இது ஜெர்மன் சொல் என பிரித்து பார்ப்பதில்லை.ஒரு சொல் வழக்கில் ஏறினால் அப்புறம் அது ஆங்கில சொல் தான்//

    சூப்பரு! எப்படித் தான் இப்படிக் காளமேகம் போலக் கொட்டுறீயளோ?

    a la carte, adieu - ன்னு எல்லாம் ஆங்கில நாவலில் எழுதறது வழக்கம் தான்! ஆனா அதெல்லாம் ஆங்கிலச் சொல் இல்ல-ன்னு எழுதறவனுக்கும் தெரியும், படிப்பவனுக்கும் தெரியும்! பிரிச்சிப் பார்ப்பதில்லை! ஒரு முறை ஏறினால் ஏறினது தான்-ன்னு சும்மா அடிச்சி விடாதீங்க! :)

    //ஜனநாயகம்/மக்களாட்சி இரண்டும் சினானிம்.இரண்டில் எதை வேணாலும் பயன்படுத்தலாம்..இரண்டும் தமிழ் தான்//

    'ஜ'னநாயகம் = தமிழ் அல்ல!
    'ஜ'லம் தமிழ் அல்ல!

    கமலாவும் பொண்டாட்டி தான்!
    விமலாவும் (அடுத்த வீட்டு) பொண்டாட்டி தான்!
    எதை வேணாலும் பயன்படுத்தலாம்! சரி தானே செல்வன்?:))

    பெண்டாட்டி என்ற சொல் பொது தானே! அதுக்கு முன்னாடி நாமா போட்டுக்கறது தானே "நம்" பெண்டாட்டி, "அடுத்த வீட்டு" பெண்டாட்டி? :))

    ReplyDelete
  91. @செல்வன்
    //மத்தபடி கிரந்தம் இல்லாவிட்டாலும் நாள் போக்கில் தமிழ் சொற்கள் வழக்கொழிந்தும் புது சொற்கள் புழக்கத்துக்கு வந்தும் தான் இருக்கு//

    புதுச் சொற்கள் தாரளமாய் வரட்டும்!
    ஆனா வருவது தமிழ்ச் சொல்லாய் இருக்கணும்-ன்னு தான் சொல்லுறது!

    மகிழ்ச்சி-க்கு புதுச் சொல் வரட்டும்!
    ஆனா 'ஸந்தோஷம்' அல்ல!

    ReplyDelete
  92. //மேதாவி, வில்லன் போன்ற சொற்களை பயன்படுத்துதல் இரவிசங்கரை பொறுத்தவரை தவறு இல்லை//

    நான் தவறு இல்லை-ன்னே சொல்லவே இல்லையே!
    ஒவ்வொன்னா தமிழில் புழங்கப் போகிறேன்-ன்னு தானே சொன்னேன்!

    //என்னதான் கருத்து மாறுபட்டாலும் வாதம் செய்யும்போது அடைமொழிகள் கொடுத்து இன்னொருவரை விளிக்கும் வழக்கம் எனக்கு இல்லை//

    அடைமொழிக்குள் அடைத்து சிறுமை செய்யத் துணிய மாட்டேன் என்பது உங்களுக்கும் நல்லாத் தெரியுமே அண்ணா!
    இருப்பினும் அப்படி நீங்கள் கருதினால், என் நிபந்தனையற்ற மன்னிப்பை, இதோ உங்கள் முன், இங்கேயே கோருகிறேன்!

    உங்கள் நகைச்சுவைப் பாணியிலேயே தான் நானும் பின் தொடர்ந்தேன்..."ரகசியமா பலன் அடைஞ்சீங்களா"?-ன்னு கேட்ட அதே உணர்வில் தான், ஆகா என்னவொரு மேதாவித்தனம்-ன்னு நகைச்சுவையாச் சொன்னது! சிரிப்பான் கூட ஒன்னுக்கு ரெண்டாப் போட்டேனே! முருகா!

    இருப்பினும் இச்சிறுவனை மன்னிக்க!

    நகைச்சுவை-ன்னு எழுதாம ஹாஸ்யம்-ன்னு எழுதினா மன்னிச்சிருவீங்க-ன்னு தெரியும் :))

    ReplyDelete
  93. //அடைமொழிக்குள் அடைத்து சிறுமை செய்யத் துணிய மாட்டேன் என்பது உங்களுக்கும் நல்லாத் தெரியுமே அண்ணா!
    இருப்பினும் அப்படி நீங்கள் கருதினால், என் நிபந்தனையற்ற மன்னிப்பை, இதோ உங்கள் முன், இங்கேயே கோருகிறேன்!

    உங்கள் நகைச்சுவைப் பாணியிலேயே தான் நானும் பின் தொடர்ந்தேன்..."ரகசியமா பலன் அடைஞ்சீங்களா"?-ன்னு கேட்ட அதே உணர்வில் தான், ஆகா என்னவொரு மேதாவித்தனம்-ன்னு நகைச்சுவையாச் சொன்னது! சிரிப்பான் கூட ஒன்னுக்கு ரெண்டாப் போட்டேனே! முருகா!//

    கோபிக்கலை இரவிசங்கர்..தவறா புரிஞ்சுகிட்டதுக்கு நான் தான் மன்னிப்பு கேட்கணும்..சரி விடுங்க..நாம சண்டையை தொட்யர்வோம்:-)

    ReplyDelete
  94. //பண்பாடு = 5ஆம் நூற்றாண்டுத் தமிழ் அல்ல!
    ஆனா இன்னிக்கி எவரும் "தமிழ்ப் பண்பாடு"-ன்னு எழுதறது இல்ல! "தமிழ்க் கலாச்சாரம்" தான்! //

    எழுதிட்டு போறாங்க.பண்பாடு,கலாசாரம் இரண்டும் சினானிம்ஸ்.காப்பியை தமிழாக ஏற்றுகொண்டேன் என்றீர்கள்.அதுக்கு குளம்பி என தனிதமிழ் சொல் இருந்தும்..அதே போல கலாசாரத்தையும் ஏற்றுகொள்ளலாம்.

    //நாங்களாக எதுவும் இது தான் தமிழ்ச் சொல்-ன்னு வரையறுத்துக்கலை!
    கமலம் என்ற சொல்லும் புழக்கத்தில் தான் இருக்கு! அதை ஒழி-ன்னு கெளம்பலை! கிரந்தத்தோடு இருக்கும் பங்க'ஜ'ம்! அது பற்றித் தான் முதல் பார்வை!//

    இன்றைக்கு கமலம், பங்கஜம்னு யாராச்சும் சொல்றாங்களா?தாமரைன்னு தான் சொல்றாங்க.பேரு வேணால் கமலஹாசன், பங்கஜம்னு வெச்சுக்குவாங்க.ஆனால் பொருள் என்னன்னு பலருக்கு தெரியாது.லோட்டஸ்னு சொன்னால் கூட நிறைய பேருக்கு தெரியும்:-)

    //இங்கே பேச்சு காபியைப் பற்றியா? இல்லை...
    சந்தோஷம், தஸ்தாவேஜ், கஷ்டம், அஸ்தமனம் போன்ற கிரந்தம் கலந்த சொற்கள் பற்றியா?//

    காப்பி..கலாசாரம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

    இரண்டிலும் கிரந்த சொல் இல்லை.இரண்டுக்கும் ஈடான தனிதமிழ் சொல் இருக்கு.அப்ப காப்பி என்பது சரி.கலாசாரம் என்பது தவறு என்பது எந்த அடிப்படையில்?

    ///சொல்றது என்னான்னா காபி பேஷா இருக்கு-ன்னு பயன்பாட்டைத் தவிர்த்து...
    காபி சுவையா இருக்கு-ன்னு புழங்கலாமே-ன்னு தான் சொல்லுறோம்! //

    பேஷா இருக்கு என்பது நான் நரசுஸ் காப்பி விளம்பரத்தில் தான் கேட்டிருக்கிறேன்.பொதுமக்கள் "காப்பி நலலருக்கு" என தான் சொல்லுவார்கள்.காப்பி சூப்பரா இருக்கு எனவேண்டுமானலும் சொல்லுவார்களே ஒழிய பேஷா இருக்கு என 99% பேர் சொல்வதில்லை.

    நீங்கள் பேச்சுதமிழை பற்றி பேசினால் அதில் கிரந்தம் மட்டுமல்ல, எக்ஸ்,ஒய், எஃப் என தமிழில் இல்லாத எல்லா எழுத்துக்களும் வரும்...இந்த மூவி ரொம்ப ஃபன்னா இருக்குபா, டாக்டர் எக்ஸ்ரே எடுக்க சொன்னார் என பேச்சுதமிழில் சொல்லும்போது எல்லா அதில் எக்ஸ் ஒய் எல்லாமே வருது.எழுத்துதமிழில் கிரந்தம் கூடாது என்றால் எக்ஸ் ரே என்பதுக்கு பதில் என எழுதுவார்கள்.

    //a la carte, adieu - ன்னு எல்லாம் ஆங்கில நாவலில் எழுதறது வழக்கம் தான்! ஆனா அதெல்லாம் ஆங்கிலச் சொல் இல்ல-ன்னு எழுதறவனுக்கும் தெரியும், படிப்பவனுக்கும் தெரியும்! பிரிச்சிப் பார்ப்பதில்லை! ஒரு முறை ஏறினால் ஏறினது தான்-ன்னு சும்மா அடிச்சி விடாதீங்க! :)//

    இல்லையே? ஹேம்பர்கர், கிண்டர்கார்டன் என ஆங்கில நாவல்களில் எழுதுகிறார்கள்.அவை எல்லாம் ஆங்கில சொற்கள் அல்ல.மாற்றுமொழி சொற்கள்.அது ஆங்கிலம் இல்லைன்னு ஆங்கிலேயர் பலருக்கே தெரியாது.ஆலா கார்ட்டே, அடியூ எல்லாம் அதே போல இப்ப எல்லா ஆங்கிலேயருக்கும் புரியும். அவை ஆங்கில அகராதியில் கூட ஏறிவிட்டன.இன்னும் ஒரு நூறுவருடம் கடந்தால் அவை பிரெஞ்சு சொற்கள் என்பதையே அவர்கள் மறந்துவிடுவார்கள்.

    //'ஜ'னநாயகம் = தமிழ் அல்ல!
    'ஜ'லம் தமிழ் அல்ல!//

    இதைதான் தமிழை வரையறை செய்வது என்றேன்..இப்படி நாமாக தமிழை வரையறை செய்தால் அப்புறம் தமிழ் அழியுது என சொல்லதான் செய்வோம்.அழிவது தமிழ் இல்லை.நம் வரையறைதான் அழிகிறது.

    //கமலாவும் பொண்டாட்டி தான்!
    விமலாவும் (அடுத்த வீட்டு) பொண்டாட்டி தான்!
    எதை வேணாலும் பயன்படுத்தலாம்! சரி தானே செல்வன்?:)) //

    விமலாவை பயன்படுத்த ஆரம்பிச்சு ஆயிரம் வருசத்துக்கு மேல ஆச்சு இரவிசங்கர்.சொல்,கவிதை,இலக்கிய குழந்தைகளும் பிறந்தாச்சு.ஆயிரம் வருசம் குடும்பம் நடத்தி பிள்லைகளையும் பெற்ற பின்னர் நீ என் பெண்டாட்டி இல்லை,அடுத்த வீட்டு பெண்டாட்டி என்பதில் என்ன அர்த்தம்?:-)..அதெல்லாம் கைவஎச்சு பிள்ளை பெறுவதுக்கு முந்தி யோசிச்சிருக்கணும்:-)

    ReplyDelete
  95. Correction:

    எழுத்துதமிழில் கிரந்தம் கூடாது என்றால் எக்ஸ் ரே என்பதுக்கு பதில் X-ray என எழுதுவார்கள்.

    ReplyDelete
  96. @இரவி
    >>> கிரந்தச் சொற்களின் புழக்கம், தெரிந்தோ தெரியாமலோ, ஆதிக்க சாதி அரசியல் மூலமாகப் பெருத்து விட்டது! அதை இப்போது பேசிப் பயனில்லை!<<<

    இந்த வரியைத் தவிர்த்திருக்கலாம். ஆதிக்கசாதி அரசியல் கம்பர் காலத்தில் இருந்ததா? இல்லையா ? அவரால் எப்படி க்ரந்தம் நீக்கி எழுத முடிந்தது ?

    நம்போல்வரின் பதிவிற்கே ஹா, ஹூ, ஜூ எல்லாம் தேவை என்றால்
    மத மரபுத்துறை சார்ந்த உரைகளுக்கு க்ரந்தத்தேவை இன்னும் மிகுதி.

    (பல்லவி
    ராஜு வெட3லெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க3 (ரா)

    அனுபல்லவி
    3தேஜினெக்கி ஸமஸ்த ராஜுலூடி3க3மு ஸேய
    தேஜரில்லு 4நவ ரத்னபு தி3வ்ய பூ4ஷணமுலிடி3 ரங்க3 (ரா))
    ***************************
    என்னாள்ளூரகேயுந்து3வோ ஜூதாமு

    ஜூதாமு - பார்க்கலாம்

    http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/03/1-4-ennaallurake-raga-subha-pantuvarali.html)



    திருவாய்மொழியில் வரும் ‘முனியே’ வெறும் மூன்றெழுத்து நுடி; அதற்குப் பொருள் சொல்ல
    எத்தனை பரிசிரமப்படுகிறார்கள் !! அப்பப்பா. அத்தனை விரிவாகச் சொன்னால்தான் ஆழ்வார்தம்
    உள்ளக்கிடக்கை ஓரளவாவது பிடிபடும். மறைகளிலிருந்தும், புராணங்களிலிருந்தும் விழும் மேற்கோள்களால் பெரும் பாழாக இருக்கும் மஹாப்ரளயச் சூழல் மனக்கண் முன் கொணரப்படுகிறது. ’ஒன்றி, ஒன்றி உலகு படைக்கும்’ மஹாஸங்கல்பம் உருவாகும் சூழல் சித்திரிக்கப்படுகிறது. ஜீவகோடிகள் பால் அவன் கொள்ளும் பெருங் கருணை புரியத் தொடங்குகிறது.

    ஏன் கிரந்தம் கலப்பு ? ஆதிக்க அரசியல் எதற்கு என்றால் என்ன விடை கூறுவது ? வைணவம் பற்றி அதிகம் எழுதும் இரவியார் இப்படி எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. ஆதங்கத்தால் எழுதுகிறேன்; அடியேனிடம் எள்ளளவும் ஆக்ரஹம் இல்லை


    >>> தோழி கோதை செய்யாத தமிழ் அர்ச்சனையா? <<<

    ’தேவோ நாம ஸஹஸ்ரவாந்’ என ப்ரமாணங்கள் புகழா நிற்கும் பேராயிரமுடைய தேவனின்
    ஆயிரநாமங்களுக்கும் ஸ்ரீ பராசர பட்டர் மாய்ந்து மாய்ந்து உரை செய்தார். பேராயிரத்தின் பெருமை சொல்லும் இடங்கள் அருளிச்செயலில் பலப்பல. ஆலயங்களிலும் ஸஹஸ்ர நாம அர்ச்சனை உண்டு.

    ’கோதை செய்யாத அர்ச்சனையா’ என ஸ்ரீ பட்டருக்கு உபதேசம் செய்ய அக்காலத்தில் ஓர் இரவிசங்கரர் இல்லை. ஸ்ரீ பட்டர் பாக்யஹீநர்



    தேவ்

    ReplyDelete
  97. @தேவ் சார்
    //வைணவம் பற்றி அதிகம் எழுதும் இரவியார் இப்படி எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது.
    ஆதங்கத்தால் எழுதுகிறேன்; அடியேனிடம் எள்ளளவும் ஆக்ரஹம் இல்லை//

    :)
    இதுக்கு நான் என்னத்த சொல்லுவேன்?
    த்யை கூர்ந்து, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் தேவ் ஐயா!

    அறிவொன்று மில்லாத ஆய்க்குலம்!
    "சிறுபேர்" அழைத்தனவும் சீறி அருளாதே
    இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!

    ReplyDelete
  98. //இந்த வரியைத் தவிர்த்திருக்கலாம்//

    ஒவ்வொரு வரியும் பதிவிலே தவிர்த்து இருக்கலாம்-ன்னா, பதிவு எழுதுவதே மிகவும் கடினமாகி விடும்! ஒட்டு மொத்த பதிவின் நோக்கத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    //ஆதிக்கசாதி - க்ரந்தம்//

    இதைக் குறிப்பிட்டது - இலக்கிய அளவில் இல்லை! இலக்கியத்தில் தான் கிரந்தம் ஏறவே இல்லையே!
    பதிவை இன்னொரு முறை பாருங்கள்! சோழர்கள் ஆட்சியில், படித்த பண்டிதர்கள், கல்வெட்டு முதலான அனைத்து அரசு முறைகளையும் கிரந்தத்தில் எழுதி வைத்தார்கள்! அதையே குறிப்பிட்டேன்!

    சமயம் குறித்த நூல்கள் - சமணம், வியாக்யான/உரைகள், தெலுங்கு மொழிபெயர்ப்புகள் - இதுக்கெல்லாம் கிரந்தம் தேவை தான்! இல்லை-ன்னு சொல்லலையே!
    ஆனா பொதுமக்கள்-அரசு குறித்த அன்றாட முறைகள்-அரசு அறிவிப்புகள் = இதுக்கெல்லாம் கிரந்தம் எதுக்கு? பொது மக்கள் மொழியில் அல்லவா இருக்க வேண்டும்!

    ஆனால் அப்படிச் செய்யாமல், தங்கள் "விசுவாசம்" எங்கே என்பதைக் காட்டி, கிரந்தத்திலேயே எழுதிய பண்டித சிகாமணிகள், அவர்களுக்கு ஆதரவு குடுத்த சோழச் சக்ரவர்த்திகள் பற்றி மட்டுமே அப்படிச் சொன்னேன்! ஆதிக்க சாதி அரசியலால் தான், கிரந்தம் கன்னா பின்னாவென்று, அரசு அமைப்புகளில் பரவியது! - இதையே பதிவில் சொன்னது!

    //ஜூதாமு - பார்க்கலாம்
    http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/03/1-4-ennaallurake-raga-subha-pantuvarali.html)//

    இதையும் விளக்கி விட்டேன்! தெலுங்கு பெயர்ப்புகள், வியாக்யானங்கள், வேதப் படிப்புக்கெல்லாம் கிரந்தம் தேவை தான்! "துறை சார்ந்த"-ன்னு பதிவிலும் சொல்லி உள்ளேனே! பின், ஏன் இந்தக் குழப்பம் + ஆற்றாமை? :(

    //’கோதை செய்யாத அர்ச்சனையா’ என ஸ்ரீ பட்டருக்கு உபதேசம் செய்ய அக்காலத்தில் ஓர் இரவிசங்கரர் இல்லை. ஸ்ரீ பட்டர் பாக்யஹீநர்//

    முருகா!
    இது என்ன சோதனை? பராசர பட்டர் எங்கே? நான் எங்கே? கும்புட்டுக்கறேன்! மன்னிச்சிக்கோங்க!

    வடமொழி அர்ச்சனையோ, சகஸ்ரநாமத்தையோ நான் தப்பு சொல்லலை!
    ஆனா, கோதைத் தமிழ் அர்ச்சனையும் இருக்கு! அர்ச்சனை-ன்னாலே ஏதோ வடமொழி Translation! அதன் நேர்த்தி தமிழில் வராது-ன்னு நினைச்சிறாதீக-ன்னு தான் சொன்னேன்! அதுக்குத் தான் கோதைத் தமிழ் அர்ச்சனையை எடுத்துக்காட்டாகக் காட்டினேன்!

    ஏன் பதிவு, இத்தனை தெளிவாய் இருந்தாலும், என் மீது ஆன்மீக வல்லுநர்கள் வருத்தம் கொள்கிறார்கள்-ன்னு தான் தெரியலை!

    உம்...முருகா, எதுன்னாலும் என் கூடவே இருடா! எனக்கு நீ, உனக்கு நான்!

    ReplyDelete
  99. எனக்கு ஒரு பக்கம் சிரிப்பும் வருகிறது! தோழன் இராகவன் பார்த்தா என்னை இன்னும் ஓட்டுவான்! :)

    முன்பு பெரியபுராண மிகை களைந்து எழுதும் போது சைவ அன்பர்கள் கோபித்துக் கொண்டார்கள்! தீவிர சைவர்களுக்கு என் மேல் இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் கோபம் இருக்கு! அதென்ன வைணவத்தை 'ஒஸ்தியா' எழுதறே?-ன்னே கேட்டுட்டாங்க :)

    இப்போ வைணவர்களும் வருத்தப்படறாங்க!
    இதைக் கண்டு நான் சிரிப்பதா, அழுவதா-ன்னே தெரியலை:)

    பொதுவா, எதற்குள்ளும் அடைத்துக் கொள்ளும் பழக்கம், சின்ன வயசில் இருந்தே எனக்குக் கிடையாது! நிறுவனப்படுத்தல்-ன்னாலே ஆகாது!

    1. மானுடம் சார்ந்த ஆன்மீகம்,
    2. தமிழுக்குச் "செயல் அளவில்" மதிப்பு குடுக்கும் ஆன்மீகம்
    - இந்த இரண்டை ஒட்டி மட்டுமே எழுதுவது வழக்கம்!
    மத்தபடி எந்த அடையாளமும் - சைவம்/வைணவம் etc etc- என்னளவில் எனக்கில்லை!


    நாயன்மார் வரிசை தான் ஆழ்வார் வரிசையைக் காட்டிலும் பிடிச்சிருக்கு! ஏன்-ன்னா பாட்டு எழுதணும்-ன்னு அவசியம் இல்லாம, சாதாரணவங்களும் நாயன்மார் வரிசையில் இருக்காங்க-ன்னு பொதுவில் துணிவாகச் சொல்லவும் தயங்குவதில்லை!

    அதே சமயம், சைவம், சொல் அளவில் தமிழ் போற்றியதே தவிர, செயல் அளவில், ஆலயங்களில் தமிழைத் தள்ளியே வைத்து விட்டது-காரைக்கால் அம்மை என்னும் புனிதாவுக்கு நேர்ந்த கொடுமை பற்றிச் சொல்லவும் எனக்குப் பயமில்லை!

    நல்லன சொல்லிட நடுக்கம் இல்லை
    அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை
    அன்பர்கள், வருத்தப்பட்டிருந்தால், இந்தப் பின்புலம் கொண்டு பார்த்து, என்னை மன்னிக்கவும்!!

    ReplyDelete
  100. @செல்வன்
    காபி=குழம்பி என்று ஆக்குவது புதிய சொல்லாக்கம்! ஆனால் பண்பாடு அப்படி அல்ல! ஏற்கனவே இருக்கும் தமிழ்ச் சொல்லை, கலாச்சாரம்-ன்னு வேணும்-ன்னே எழுதி எழுதி, அழிப்பது! காபி என்று சொல்வதால் எந்தத் தமிழ்ச் சொல்லும் அழியவில்லை!

    //ஆலா கார்ட்டே, அடியூ எல்லாம் அதே போல இப்ப எல்லா ஆங்கிலேயருக்கும் புரியும். அவை ஆங்கில அகராதியில் கூட ஏறிவிட்டன//

    அகராதியில் ஏறினாலும், அடைப்புக் குறிக்குள் French Word என்று போடத் தவறுவதில்லை!
    மேலும் adieu என்ற சொல் பயன்பாடு மிகக் குறைவு! See you, Bye என்பதே அதிகம்! adieu என்ற சொல் Bye-யை அழித்து விட வில்லை! ஆனால் இங்கு அப்படி அல்ல!

    மேலும், French Words in English திணிப்பினால் ஏறவில்லை!
    ஆனால் இங்கு வடசொற்களும், கிரந்தச் சொற்கள் பலவும், திணிப்பினால் மட்டுமே ஏறின! We detest and hate such aggression!

    இதை ஒரே புள்ளியில் முடிக்கிறேன்! ஆங்கிலம் ஏற்றுக் கொண்டதே என்பதற்காக, தமிழும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை!
    ஆங்கில ஆட்சி, பல நாடுகளில் பரவிய போது, அங்குள்ள சொற்கள் கொஞ்சம் கொஞ்சம் ஏறி இருக்கலாம்!
    அதே போல் தமிழ் ஆட்சி, உலகெலாம் பரவும் காலத்தில், ஏற்றுக் கொள்கிறோம்!
    இப்போது எதையும் இழக்காது, தமிழ்ச் சொற்கள் உயிரோடு இருந்தாலே போதும் என்ற நிலையில் தான் இருக்கிறோம்!


    அஞ்சா நெஞ்சன் அழகிரியோ, கனிமொழியோ நாளைக்கு உலக முதலமைச்சராக வலம் வருவாங்க! அப்போ பார்த்துக் கொள்ளலாம்! :)

    //'ஜ'னநாயகம் = தமிழ் அல்ல!
    'ஜ'லம் தமிழ் அல்ல!//

    இது வரையறை அல்ல! உலகறிந்த உண்மை! வேத பண்டிதர்களும் ஒத்துக் கொள்வார்கள் 'ஜலம்' தமிழ் அல்ல! இதுக்கு நீங்க இம்புட்டுக் கடினப்பட்டு 'ஜலம்' தமிழ் தான் என்று நிரூபிக்க வேணாம்!
    'ஜலம்' தமிழ் அல்ல என்று நான் சொல்வதால் தமிழ் அழிந்து விடாது! ஆனால் தண்ணீர் என்பதற்குப் பதிலாக ஜலம் ஜலம்-ன்னே எழுதிக்கிட்டு இருந்தா...பண்பாடு-க்குப் பதிலா கலாச்சாரம்-ன்னே எழுதிக்கிட்டு இருந்தா...தமிழ்ச் சொல் அழியும்! அம்புட்டு தான்!

    This is so common sense! Dunno why common sense is not common! இதுக்கு ஒரு வாக்கெடுப்பு வைக்கட்டுமா பந்தலில்?

    //ஆயிரம் வருசம் குடும்பம் நடத்தி பிள்லைகளையும் பெற்ற பின்னர் நீ என் பெண்டாட்டி இல்லை,அடுத்த வீட்டு பெண்டாட்டி என்பதில் என்ன அர்த்தம்//

    இங்கே யாரும் மனமுவந்து ஏத்துக்கிடலை! அவளா வந்து "ஈஷிண்டு" இருந்து, கொல்லைப்புற வழியாக நுழைஞ்சி, நாட்டாமை பண்ணா, நறுக்கத் தான் செய்வாங்க!
    விருந்தினர் என்ற அளவிலோடு நின்று கொண்டால் மதிப்பு! ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்ட முனையும் போது, ஊர்ப் பிடாரியைக் காக்கும் முயற்சிகள் எடுக்கத் தான் படும்!

    ReplyDelete
  101. @ இரவி
    >> இப்போ வைணவர்களும் வருத்தப்படறாங்க! <<

    அடியேன் வைணவ மரபினன் அல்லேன்; முன்னோர் பஞ்சாக்ஷர ஜப நிஷ்டாபரர்கள்.

    அழகியல் நிரம்பிய வைணவம் வெகுவாக ஈர்த்தது. அச்சுதன் அடி தொழுது ஆயிர நாமம் சொல்லியாயிற்று; ஆனால் தொண்டக்குலத்தினுள் புகும் தகுதி வாய்க்கவில்லை.

    ஸப்ஜெக்டுக்கு வருவோம் -

    மிகவும் முக்கியமான விஷ்ணு புராணத்திற்குக்கூட வைணவ மரபில் எங்களாழ்வானின்(விஷ்ணு சித்தர்) உரை ஒன்று மட்டுமே உள்ளது. வேறு யாரும் அதன்பால்
    கண் செலுத்தவில்லை. நாலாயிரமே வைணவ அடியார்களின்
    ஜீவநாடியாக இருந்தது.

    பெரிய ஜீயர் மணவாள மாமுனிகளும் நாலாயிர உரைகளுக்கு வளம் சேர்த்து அவற்றை ஏடுபடுத்திக் காப்பதிலேயே ஆயுளைக் கழித்தார்,
    தம் ஆசார்யனின் கட்டளைப்படி. ’ஈட்டுப்பெருக்கர்’ என்றே வைணவ மரபு அவரைப் போற்றுகிறது.

    அவர் வடமொழியில் நூல் யாதொன்றையும் இயற்றினார் இல்லை; தம் தமிழ்ப்பற்றைப் பறை சாற்றிக்கொள்ளவும் இல்லை,
    ‘விசத வாக் சிகாமணி’ என்று பட்டம் பெற்றிருந்தும்.

    ஆனால் வைணவத்தில் மொழி முக்கியம் இல்லை;
    ‘பசுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே து வைஷ்ணவம் ஆச்ரிதா:’
    என மனித மொழி அறியாத விலங்கு , பறவைகளுக்கும்
    வைணவத்தில் இடம் உண்டு.

    பெரிய பிராட்டியார் முதலான பல தேவிமார்கள் இருந்தும்
    அரங்கத்தில் அழகிய மணவாளனுக்கு அருகிலிருந்து கொண்டு கோலோச்சுவது
    பீவி நாச்சியார் மட்டுமே



    தேவ்

    ReplyDelete
  102. //@செல்வன்
    காபி=குழம்பி என்று ஆக்குவது புதிய சொல்லாக்கம்! ஆனால் பண்பாடு அப்படி அல்ல! ஏற்கனவே இருக்கும் தமிழ்ச் சொல்லை, கலாச்சாரம்-ன்னு வேணும்-ன்னே எழுதி எழுதி, அழிப்பது! காபி என்று சொல்வதால் எந்தத் தமிழ்ச் சொல்லும் அழியவில்லை! //

    பேருந்து, கணிணி,வலைபதிவு, வலைபூ,பின்னூட்டம் எல்லாமே புது சொல்லாக்கம் தான்.இதுக்கு பதில் ஆங்கில பெயர்களை பயன்படுத்துவது உங்களுக்கு ஏற்புடையதா?:-)

    மத்தபடி கலாசாரம் என்பது பண்பாடு என்பதற்கான சினானிம்.ஒரு சொல்லுக்கு பல சினானிம்கள் இருப்பது மொழிக்கு வளத்தையே சேர்க்கும்.காப்பிக்கு குளம்பி,. இலைவடிநீர் என பல சினானிம்கள் இருப்பது தமிழுக்கு நல்லதுதான்.பண்பாடு என்ற சொல் "வேண்டுமென்றோ" அல்லது "வேண்டாம்" என்றோ அழிக்கபடவில்லை..இன்னும் அது பயன்பாட்டில் தான் இருக்கு.கலாசாரமும் பயன்பாட்டில் இருக்கு.

    பண்பாட்டை விட கலாசாரம் அதிக அளவில் பயன்படுகிறது.அதே சமயம் கமலம்,பங்கஜம் போன்றவற்றை விட தாமரை அதிகம் பயன்படுத்தபடுகிறது.புஷ்பம் என்பதை விட மலர்,பூ போன்ற சொற்கள் அதிகம் பயன்படுகின்றன.சதிதிட்டம், வேண்டுமென்ரே செய்வது என நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இன்று தமிழர்கள் பெருமளவில் புஷ்பம்,ஜலம்,பங்கஜம்,நேத்ரம், என தான் சொல்லிகொண்டிருக்கவேண்டும்.ஆனால் அப்படி நடக்கவில்லை.

    தமிழ் சொல் அழிகிறது என்பது வீணான கவலை.சொற்கள் நாள்போக்கில் அழியதான் செய்யும். புறநானூறு,அகநானூறு போன்றவற்றை எடுத்து பார்த்தால் அதில் உள்ல சொற்கள் எதாவது இன்று நமக்கு புரிகிறதா?அப்படியனாஅல் அந்த சொற்கள் காலபோக்கில் அழிந்துவிட்டன என தானே பொருள்? உலகில் எல்லா மொழியிலும் இப்படிதான்.ஆயிரம் வருடத்துக்கு முந்தைய சொற்பிரயோகங்கள் இன்று யாருக்கும் புரியாது.

    தமிழ் சொல் அழிந்தாலும் அதுக்கு பதில் பயன்பாட்டுக்கு வரும் சொல் தமிழ் சொல்லாக்வே இருக்கணும் என்பது பேராசை...இது எப்படி இருக்கு என்றால் சங்ககாலத்தில் பிரேக்பாஸ்டுக்கு புட்டு தின்றார்கள்.இன்று நாம் புட்டு தின்னலை என்றாலும் அதுக்கு பதில் தோசை சாப்பிடணுமே ஒழிய சீரியல் சாப்பிட கூடாது என எதிர்பார்ப்பது போல இருக்கிறது:-)..என்ன தான் வலிந்து திணித்தாலும் மக்கள் ஏற்காமல் ஒரு சொல் பிரபலமாகாது. பண்பாடு என்ற சொல்லை விட ஏதோ காரணத்தால் கலாசாரம் என்ற சொல் மக்களுக்கு பிடித்துவிட்டது.நாளை அது கல்ச்சர் என்ற சொல்லால் ரீப்ளேஸ் செய்யபடலாம்.

    இதில் பிரச்சனை வருவது நான் முன்னம் சொன்னதுபோல வரையறை செய்வதில் தான். "தமிழ் இதுதான்" என நாமாக ஒரு வரையரை செய்துகொண்டு "இந்த வரையறைக்கு ஏற்ப தான் மக்கள் பேச வேண்டும். அப்போதுதான் அது தமிழ்" என முடிவு செய்துகொள்கிறோம். அப்புறம் மக்களை நம் விருப்பத்துக்கு ஏற்ப பேச வைக்க முயல்கிறோம். இதுபோன்ற 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" முயற்சிகள் வெற்றியடையாததுக்கு காரணம் இதுதான்.நீங்கள் சொன்னதுபோல மக்களுக்கு "திணிப்பு பிடிப்பதில்லை":-)

    தமிழ் இதுதான் என பண்டிதர்கள் வரையறை செய்வதை விட மக்கள் வரையரை செய்வதுதான் சரி. மக்கள் பேசுவதுதான் மொழி. தமிழ்மக்கள் ரைஸ்,கலாசாரம்,பஸ்,சைக்கிள் என்பதையெல்லாம் பரவலாக புழக்கத்தில் ஏற்றபின்னர் பண்டிதர்கள் அது தமிழ் சொல் இல்லை என தீர்மானம் போடுவதில் என்ன பலன் இருக்க போகிறது?

    ஆங்கிலத்தை எடுத்து கொண்டால் அங்கே ஒரு சொல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து,பரவலாக பயன்படுத்தபட்டு அப்புறம் அது பண்டிதர்களால் ஏற்கப்பட்டு அகராதியில் ஏறி ஆங்கில சொல்லாக மாறுவது வாடிக்கை.இப்படி மக்களால் மாற்றங்கள் வருவதால் தான் அது மகக்ளின் மொழியாக இருக்கிறது.தமிழில் நிலை தலைகீழ்.நாலு வித்வான்கள் ஒன்றுகூடி "இதுதான் தமிழ் சொல்.இதை தான் இனி எல்லோரும் புழங்கவேண்டும்" என தீர்மானம் போட்டு சொற்களை அகராதியில் ஏற்றி சொற்களை மக்களிடம் திணிக்கிறார்கள். இம்மாதிரி முயற்சிகள் அப்புறம் வெற்றி அடையாததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

    ReplyDelete
  103. //தமிழ் இதுதான் என பண்டிதர்கள் வரையறை செய்வதை விட மக்கள் வரையரை செய்வதுதான் சரி. மக்கள் பேசுவதுதான் மொழி. தமிழ்மக்கள் ரைஸ்,கலாசாரம்,பஸ்,சைக்கிள் என்பதையெல்லாம் பரவலாக புழக்கத்தில் ஏற்றபின்னர் பண்டிதர்கள் அது தமிழ் சொல் இல்லை என தீர்மானம் போடுவதில் என்ன பலன் இருக்க போகிறது?
    //

    மக்கள் பேசுவது தான் மொழி என்பது தெரியும், ஆனால் அந்த மக்களை குழப்பி அடிப்பது யார் ? செய்தித்தாள்கள் மற்றும் தொலைகாட்சிப் பெட்டி, அவற்றில் 'பண்ணி'த் தமிழ் பேசினால் மக்கள் அதைத்தான் திரும்பிப் பேசுவார்கள், பேசுவது என்ற வழக்கை பார்பனர்கள் பேஷுவது என்று ஊடகங்களில் பேசும் போது இது தான் வழக்கோ என்று பாமரரையும் அவ்வழக்கிற்கு மாறச் சொல்கிறது, நமக்கெல்லாம் நன்கு தெரியும் வேட்டியை பார்பனர்கள் வேஷ்டியாக்கினார்கள், ஆனால் தற்போது வேட்டி என்ற சொல் மறைந்து வேஷ்டி என்று சொல்வது தான் நாகரீகமான சொல்லாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    எனக்கு தெரிந்து முற்றிலும் ஆங்கில எழுத்து (ரோமன்) 26 ஐ தங்கள் மொழியில் பயன்படுத்தும் மலாய் காரர்கள் கூட ஆங்கிலச் சொல்லை எடுத்தாளும் போது எதே ஒலிப்பைத் தரும்படி அமைப்பது கிடையாது, அவர்களுடைய மக்களுக்கு எது எளிதாகச் சொல்ல வருமோ அப்படித்தான் மாற்றி எழுதிக் கொள்கிறார்கள். எடுத்துக்காடு

    Taxi - Teksi
    Clinic - Klinik
    Police - Polis


    ஏன் எங்கேயோ போக வேண்டும், ஆங்கில எழுத்துகளை வைத்து கொல்கத்தா என்றோ தூத்துக்குடி என்றோ எழுத முடியாதா ? பிறகு ஏன் அவன் காலிகெட் என்றும் டுட்டுக்கொரின் என்று எதோ உணவு பண்டம் போன்று எழுதிக் கொண்டான் ? ஏனென்றால் அவனுடைய பலுக்குதலுக்கு மேற்கண்டவை சரி வராது.

    தமிழ் பூசை - வடமொழி பூஜையாகிதுக் கூட இவ்வாறு பலுக்குதல் அவர்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்வதால் தான். தமிழில் மட்டும் அவ்வாறு செய்வது கூடாது என்பதற்கு ஒன்று தமிழ் மீது அளவுகடந்த வெறுப்பும், பிறமொழி மீது அளவு கடந்த ஈர்ப்பும் இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

    தேம்பாவனி எழுதிய டச்சுக்காரர் கூட

    ஜீஸஸ் என்பதை நம்மால் சொல்லும் வகையில் ஏசு என்று மாற்றித்தான் எழுதினார். வெள்ளைக்காரனுக்கு உள்ள அக்கரை இங்குள்ளவர்களுக்கு இல்லை. இல்லை. இல்லை.

    ரவிசங்கர், இதை அளவளாவுப் பொருளாக்குவதைவிட நம் நடைமுறைக்குக் கொண்டு செல்வது தான் நல்லது, தனித்தமிழ் ஆர்வளர்கள் தொடர்ந்து எழுதியதன் மூலம் தான் தமிழ் ஓரளவு பிறமொழிக்கலப்பு களைந்து தெளிவு பெற்றது, அதையே நாமும் செய்வோம்.

    ReplyDelete
  104. ////எல்லா மொழி சொற்களையும் மனதடையின்றி ஏற்றுகொண்டதால் ஆங்கிலம் உயர்ந்த நிலையில் இருக்கு (அது மட்டும் தான் காரணம் இல்லை.ஆனால் அதுவும் முக்கிய காரணம்)//
    //

    இன்னொரு ஆங்கிலம் உருவாக்கும் முயற்சியாக தமிழில் அனைத்து மொழிகளையும் கொண்டு வந்து கலக்கனுமா ?

    என்ன தான் தமிழ் தமிழ் என்று பேசினாலும் எதிர்த்தாலும் கூட தமிழ் தமிழனைத் தாண்டி எவனும் பயன்படுத்தப் போவதில்லை, தமிழ் பற்றிய அக்கரை தமிழனுக்கு இருந்தாலே போதும்.

    புதிய உதிரிபாகங்களுக்கும், நுண்ணியிரிகளுக்கும் தமிழில் பெயர் இருக்கிறதா போன்ற குதர்கமான கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக் கொள்ளும் தமிழனைப் போல் கேவலமான பிறவிகளகா பிறமொழிக்காரன் எவனும் இல்லை.

    நாம இங்கே கரடியாகக் கத்துவதே, அன்றாடம் புழங்கும் சொற்களை ஏன் தமிழிலேயே பயன்படுத்தக் கூடாது என்பது பற்றித்தான்.

    ஆங்கிலம் எல்லாச் சொல்லையும் ஏற்றுக் கொண்டுள்ளதா என்று பார்த்தால் ஏமாற்றமே.

    மயில் அகவுகிறது
    குயில் கூவுகிறது
    யானை பிளிறுகிறது
    குதிரை கனைக்கிறது
    மாடு கத்துகிறது
    பன்றி உறுமுகிறது
    காக்கை கரைகிறது
    எலி கீச்சிடுகிறது
    ஆந்தை அலறுகிறது

    இது போல் பல்வேறு தனித் தன்மை வாய்ந்த வினைச் சொற்கள், பெயர் சொற்கள், பண்புப் பெயர்கள் சொல்லிக் கொண்டே இருக்க முடியும் இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் பொருள் மாறாமல் எழுதித்தரச் சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  105. //மக்கள் பேசுவது தான் மொழி என்பது தெரியும், ஆனால் அந்த மக்களை குழப்பி அடிப்பது யார் ? செய்தித்தாள்கள் மற்றும் தொலைகாட்சிப் பெட்டி, அவற்றில் 'பண்ணி'த் தமிழ் பேசினால் மக்கள் அதைத்தான் திரும்பிப் பேசுவார்கள், பேசுவது என்ற வழக்கை பார்பனர்கள் பேஷுவது என்று ஊடகங்களில் பேசும் போது இது தான் வழக்கோ என்று பாமரரையும் அவ்வழக்கிற்கு மாறச் சொல்கிறது.//

    தொலைகாட்சியில் வருவது மிடில்க்ளாஸ் பேசும் தமிழ்.கான்வென்டு தமிழ் என்றும் வைத்து கொள்ளலாம்.மிடில்க்ளாஸ் மக்கள் என்ன நடையில் பேசுகிறார்களோ அது தொலைகாட்சியில் பிரதிபலிக்கிறதே ஒழிய அஜெண்டா வைத்துகொண்டு தமிழை தொலைகாட்சிகளில் அழிக்கவில்லை.

    //ஏன் எங்கேயோ போக வேண்டும், ஆங்கில எழுத்துகளை வைத்து கொல்கத்தா என்றோ தூத்துக்குடி என்றோ எழுத முடியாதா ? பிறகு ஏன் அவன் காலிகெட் என்றும் டுட்டுக்கொரின் என்று எதோ உணவு பண்டம் போன்று எழுதிக் கொண்டான் ? ஏனென்றால் அவனுடைய பலுக்குதலுக்கு மேற்கண்டவை சரி வராது. //

    சரியே.நம்மாலும் தமிழ் எழுத்துக்க்ளை வைத்து கொண்டு இங்கிலாண்ட்,இங்கிலீஷ் என எழுதமுடியாதா?நாம் நம் பழக்கத்துக்கு ஏற்ப இங்கிலாந்து, ஆங்கிலம் என அச்சொற்களை மாற்றினோம்.அதேபோல அவனும் அவன் பழக்கத்துக்கு ஏற்ப டுடிகோரின்,டேஞ்சூர் என மாற்றினான்.

    //தமிழ் பூசை - வடமொழி பூஜையாகிதுக் கூட இவ்வாறு பலுக்குதல் அவர்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்வதால் தான். தமிழில் மட்டும் அவ்வாறு செய்வது கூடாது என்பதற்கு ஒன்று தமிழ் மீது அளவுகடந்த வெறுப்பும், பிறமொழி மீது அளவு கடந்த ஈர்ப்பும் இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.//

    பூஜையை பூசை என்று மக்களாக இயல்பாக மாற்றினால் பிரச்சனை இல்லை.நாமாக வலிந்து அப்படி எழுதிவிட்டு மக்கள் அப்படி உச்சரிக்கவில்லை என்றதும் "தமிழ் அழிகிறது, மாற்றுமொழி திணிப்பு, சதி" என புலம்புவதில் பொருள் இல்லை.

    கம்பன் உள்ளிட்ட புலவர்கள் பலகாலமாக கிருஷ்ணனை கிருட்டினன் என எழுதினார்கள்...விஷ்ணுவை விட்டுணுவாக்கினார்கள், ..மக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. அப்ப மக்கள் எல்லாம் தமிழ்பற்று இல்லாதவர்களா? என்னவோ போங்க:-)

    ReplyDelete
  106. //இன்னொரு ஆங்கிலம் உருவாக்கும் முயற்சியாக தமிழில் அனைத்து மொழிகளையும் கொண்டு வந்து கலக்கனுமா ? //

    படித்த தமிழன் பிரவுன் ஆங்கிலேயனாக மாறி பல வருடங்கள் ஆகிறது.காலையில் காப்பி குடிப்பதில் இருந்து இரவில் நைட் டிரஸ் அணிந்து படுப்பதில் இருந்து அனைத்திலும் வெள்லையர்களை படித்த தமிழ் வர்க்கம் காப்பி அடிக்கிறது.தமிழ் அறிஞர்களே இப்பல்லாம் பேண்டு சட்டையில் தான் காட்சியளிக்கின்றனர்.இப்படி அனைத்தும் மாறியபின்னர் மொழியில் மட்டும் மாற்றம் வரகூடாது என்றால் சாத்தியமா?

    //நாம இங்கே கரடியாகக் கத்துவதே, அன்றாடம் புழங்கும் சொற்களை ஏன் தமிழிலேயே பயன்படுத்தக் கூடாது என்பது பற்றித்தான்.//

    அன்றாடம் மக்கள் என்ன சொற்களை புழங்குகிறார்களோ அதுதான் *தமிழ்*

    ReplyDelete
  107. //தொலைகாட்சியில் வருவது மிடில்க்ளாஸ் பேசும் தமிழ்.கான்வென்டு தமிழ் என்றும் வைத்து கொள்ளலாம்.மிடில்க்ளாஸ் மக்கள் என்ன நடையில் பேசுகிறார்களோ அது தொலைகாட்சியில் பிரதிபலிக்கிறதே ஒழிய அஜெண்டா வைத்துகொண்டு தமிழை தொலைகாட்சிகளில் அழிக்கவில்லை.//

    அஜெண்டா வைக்கவில்லை என்றால் எல்லோரா வைக்கிறாங்களோ ?

    நாங்கள் இங்கே சிங்கையில் 'கால்' பண்ணுவதாகச் சொல்லவே மாட்டோம், 'அழைப்பு' என்று தான் சொல்லுவோம், 'தாங்கள் அழைத்த வாடிக்கையாளர் தற்போது வேறொரு அழைப்பில் உள்ளார், சிறுது நேரம் கழித்து அழைக்கவும்' என்றே தானியங்கி தொலைபேசிச் சேவை சொல்லும். ஆனால் 'ட'மிழகத்தை அழைத்தால் 'தாங்கள் கால் செய்த நபர் வேறு காலில் பிசியாக உள்ளார்' என்று சொல்லுகிறது. சொந்த காலில் பிசியாக உள்ளாரா வாடகைக் காலில் பிசியாக உள்ளாரா ? இந்த அலைபேசிச் சேவை ஊடகங்களை நடத்துபவர்கள் மிடில் கிளாஸ் மாதவன்களா ? போங்க சார், சப்பைக்கு பேசு பேசுகிறீரக்ள், தெரிந்தே தானே தொலைகாட்சி ஊடகங்கள் 'தமிழ் பேச்சு' பற்றி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் ? அந்த ஊடகத்தில் பணிபுரிபவர்க்களில் ஒருவர் கூட அதைப்பார்ப்பது இல்லையா ?

    //கம்பன் உள்ளிட்ட புலவர்கள் பலகாலமாக கிருஷ்ணனை கிருட்டினன் என எழுதினார்கள்...விஷ்ணுவை விட்டுணுவாக்கினார்கள், ..மக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. அப்ப மக்கள் எல்லாம் தமிழ்பற்று இல்லாதவர்களா? என்னவோ போங்க:-)//

    கருணனை - கிருஷ்ண ஆக்கி வைத்தது வடமொழியாளர், தமிழில் கிருட்டினன்கல் இல்லாவிட்டாலும் கருணன் பொருளில் ஒத்து ஒலிக்கும் கண்ணன்கள் எண்ணற்றோர் உண்டு.
    :)

    விண்ணவனை விஷ்ணு என்று எழுதி அது தான் சரியான உச்சரிப்பு என்று சொன்னால் அது சரியோ ?

    சொல்ல எளிதாக இருப்பதற்காக சித்தியையும் ஏன் பெரியம்மாவையும் கூட நாம் ஆங்கிலேயர்களைப் போல் 'ஆன்டி' என்றே அழைப்போமா ?
    :)

    ReplyDelete
  108. //படித்த தமிழன் பிரவுன் ஆங்கிலேயனாக மாறி பல வருடங்கள் ஆகிறது.காலையில் காப்பி குடிப்பதில் இருந்து இரவில் நைட் டிரஸ் அணிந்து படுப்பதில் இருந்து அனைத்திலும் வெள்லையர்களை படித்த தமிழ் வர்க்கம் காப்பி அடிக்கிறது.தமிழ் அறிஞர்களே இப்பல்லாம் பேண்டு சட்டையில் தான் காட்சியளிக்கின்றனர்.இப்படி அனைத்தும் மாறியபின்னர் மொழியில் மட்டும் மாற்றம் வரகூடாது என்றால் சாத்தியமா?
    //

    கேட்பதே அதுதான், ஆங்கிலம் இருக்கும் பொழுது ஏன் ஆங்கிலத்தைப் போல் பல மொழிகளைக் கலந்து தமிழை உருக்குலைக்க நினைக்கிறீர்கள், அதற்கு ஆங்கிலத்தையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு செல்லலாமே.

    உங்களைப் போல் எதுவும் மாறவே கூடாது என்று 'தனித்தமிழார்வளர்கள் நினைத்திருந்தால்' நாம 'நினைப்பதற்கு' பதில் 'யோஜனை' செய்து கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கும்.

    கம்பனை விடுங்கள், இந்த யோஜனை, சுவிகாரம், விவாஹம் இவையெலலம் வழக்கில் இருந்து ஓடியது எப்படி ?
    :)

    ReplyDelete
  109. //அஜெண்டா வைக்கவில்லை என்றால் எல்லோரா வைக்கிறாங்களோ ?//

    அஜெண்டாவும் இல்லை எல்லோராவும் இல்லை.படித்த மிடில்க்ளாஸ் தமிழன் "செல்போனில் லாங்க் டிஸ்டன்ஸ் கால் அட்டண்ட் தான் செய்கிறானே" ஒழிய "அலைபேசியில் தொலைதூர அழைப்பை ஏற்பதில்லை"

    இதை அறிய தொலைகாட்சி வேண்டியதில்லை.


    //சொல்ல எளிதாக இருப்பதற்காக சித்தியையும் ஏன் பெரியம்மாவையும் கூட நாம் ஆங்கிலேயர்களைப் போல் 'ஆன்டி' என்றே அழைப்போமா ?
    :)//

    எளிதாக இருப்பதால் ஒரு சொல் பரவுவதில்லை.தாள் என்பது பேப்பர் என்பதை விட எளிமையானதுதான்.அதனால் தாள் பரவிவிட்டதா?

    ///கேட்பதே அதுதான், ஆங்கிலம் இருக்கும் பொழுது ஏன் ஆங்கிலத்தைப் போல் பல மொழிகளைக் கலந்து தமிழை உருக்குலைக்க நினைக்கிறீர்கள், அதற்கு ஆங்கிலத்தையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு செல்லலாமே.///

    தமிழ் எப்போதும் பலமொழிசொற்கள் கலந்ததாக தான் இருந்திருக்கிறது.அப்புறம் புதிதாக உருகுலைப்பது எங்கே?

    //கம்பனை விடுங்கள், இந்த யோஜனை, சுவிகாரம், விவாஹம் இவையெலலம் வழக்கில் இருந்து ஓடியது எப்படி ?
    :)//

    தமிழர்கள் யோசனை செய்வதுக்கு பதில் திங்க் செய்ய ஆரம்பித்ததாலும், விவாஹம் செய்வதுக்கு பதில் மேரேஜ் செய்துகொள்ள ஆரம்பித்ததாலும் தான்:-)

    ReplyDelete
  110. செல்வன் சார்,

    இந்த வாதங்களுக்கு முடிவில்லை.

    தனித்தமிழ் விரகர்களை இரு பிரிவாகப் பார்க்கலாம்.
    உண்மையாகவே தமிழ் மட்டுமே வேண்டும் என்று பாடுபடுவோர் முதல் வகை; தமிழ் இணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்னும் நோக்கில் வேஷம் போடுவோர் இரண்டாம் வகை.

    முதல் வகையினரை இங்கு விமர்சிக்கவில்லை; அது தனிப்பட்ட விருப்பம். அது வெற்றி பெற்றால் உகப்புடன் வரவேற்கவே செய்வோம்.

    2ம் வகையினரின் தனிப்பட்ட மின்னரட்டையில் பிற மொழிக்கலப்பே மிகுந்திருக்கும். இவர்களது பொது மடலாடல் ஓலங்களுக்கும், தனி மடலாடலுக்கும் தொடர்பிராது. இதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய இயலும்.

    பீட்டர் ஜோஸஃப்களிடமும், ஸ்டாலினிடமும், ஜனாப் ஹாஜி அஹமதுகளிடமும் இந்த கிரந்த நீக்க உபதேசம் செல்லுபடியாகாது என்பதையும் இவர்கள் நன்கு அறிவர்.

    க்ரந்தம் கலந்து எழுதுவோரின் தமிழில் பிழைகள் அறவே இல்லாமல் இருப்பதையும்
    நிரூபிக்க முடியும்



    தேவ்

    ReplyDelete
    Replies
    1. //பீட்டர் ஜோஸஃப்களிடமும், ஜனாப் ஹாஜி அஹமதுகளிடமும் இந்த கிரந்த நீக்க உபதேசம் செல்லுபடியாகாது//

      ஜோஸப்பும், ஜனாப்பும் = தமிழில் ஊடாடிச் சிதைக்கவில்லை!
      அவர்கள் மத நூல் வேறு! தமிழ் இலக்கியம் வேறு!

      தமிழ் இலக்கணத்தில் = "ஏகதேஸ" உருவகம் போல், உருது மொழியைப் புகுத்தி அவர்கள் சிதைக்கவில்லை!

      அவர்கள் ஹிஜ்ரி ஆண்டை, "தமிழ்" வருடப் பிறப்பு -ன்னு மாற்றிச் சிதைக்கவில்லை!
      ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி-ன்னு தானே "தமிழ்ப்" புத்தாண்டு இருக்கு? ஹிஜ்ரி-ன்னா இருக்கு?

      பேச வந்துட்டாங்க..
      ஆனா ஊன்னா... "இந்துக்களிடம் தான் செல்லுபடியாகும், இஸ்லாமியர்களிடம் இவனுங்க தனித்தமிழ் செல்லுபடி ஆவுமா?" -ன்னு மகா மகோபாத்யாய ஜல்லி வேற!:(((

      Delete
  111. //தமிழர்கள் யோசனை செய்வதுக்கு பதில் திங்க் செய்ய ஆரம்பித்ததாலும், விவாஹம் செய்வதுக்கு பதில் மேரேஜ் செய்துகொள்ள ஆரம்பித்ததாலும் தான்:-)//

    யோஜனை, திங்க் இது எல்லாத்தையும் தூக்கனும் 'நினைத்து' செயல்படுங்கள் என்பது தான் இங்கே பேச்சு.

    ReplyDelete
  112. தேவ் ஜி,

    "முகத்தை பழிவாங்க மூக்கை அறுத்து கொள்ளல்" என்ற வழக்கு ஆங்கிலத்தில் உண்டு.அதுபோல கிரந்தம் மேல் கோபம் கொண்டு ஆயிரத்தைநூனூறு ஆண்டுகால வரலாற்றையும் தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் மறுக்க, துறக்க சிலர் கங்கணம் கட்டிகொண்டு இருக்கிறார்கள்.அமெரிக்காவில், ஐரோப்பாவில் நூராண்டு பழமை,முன்னூறாண்டு பழமையாக ஏதேனும் நினைவு சின்னம் இருந்தால் அதை நாடே கொண்டாடி போற்றும்.நம் ஊரில் 1500 வருடத்துக்கு முன் நிகழ்ந்ததை மறுத்து, அழிக்கும் போக்கு காணபடுகிறது.

    கிரந்தம் தமிழில் நுழைந்தபின்னர் தான் ஆங்கில மொழி உருவானது.மலையாளம்,தெலுங்கு முதலிய மொழிகள் புதிதாக பிறந்தன. உலகெங்கும் மொழியியலில் இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்துக்கு முன் தமிழில் நிகழ்ந்த மாற்றத்தை மறுத்துரைப்பவர்கள் தமிழுக்கு ஒரு வரையறையை விதித்து "இதுதான் தமிழ்.இதன்படி தான் மக்கள் பேசவேண்டும்" என எதிர்பார்க்க துவங்கி விட்டனர். அதை மக்கள் கேட்பதாக இல்லை என்றவுடன் உடனே கான்ஸ்பைரசி தியரிகள் (மக்களை டிவிகாரன் கெடுத்துவிட்டான்,பத்திரிக்கைகள் கெடுக்கின்ரன) பிறந்துவிட்டன:-)

    இந்த நகைச்சுவை காட்சிகளை ரசிக்க கூடிய காலகட்டத்தில் நாம் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியே அடையவேண்டும்:-)

    ReplyDelete
  113. //யோஜனை, திங்க் இது எல்லாத்தையும் தூக்கனும் 'நினைத்து' செயல்படுங்கள் என்பது தான் இங்கே பேச்சு.//

    பொருள் பொருந்தலை. திங்க் என்பதுக்கு சிந்தன் எனும் வடமொழி சொல் பொருந்தும்.நினைப்பது என்பது அந்த பொருளை அளிக்கவில்லை (சிந்தனையாளர் = நினைப்பாளர்) என கூற இயலுமா?

    நம் முன்னோர்கள் அதனால் சிந்தன் எனும் வடமொழி சொல்லை சிந்தனை என தமிழ் படுத்தி சிந்தனையாளர்கள், சிந்தித்தல் என கிளை சொற்களை உருவாக்கினர்.

    இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளால் அவர்கள் தமிழை வளபடுத்தினரே ஒழிய இருக்கும் சொற்களை சுத்திகரிக்க முயன்று தமிழை அழிக்க அவர்கள் முனையவில்லை.ஆனால் நாம்?

    ReplyDelete
  114. >>> நம் முன்னோர்கள் அதனால் சிந்தன் எனும் வடமொழி சொல்லை சிந்தனை என தமிழ் படுத்தி சிந்தனையாளர்கள், சிந்தித்தல் என கிளை சொற்களை உருவாக்கினர். இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளால் அவர்கள் தமிழை வளபடுத்தினரே ஒழிய......<<<


    ஆம், ஐயா

    ‘அலம் புரிதல்’ எனும் சொல்லாட்சியை நாலாயிரத்தில்
    காண்கிறோம். அலம் ‘போதும்’ என்பதற்கான வடசொல்.

    இதனால் தமிழ் வளம் பெற்றது என மகிழ்தல் ஒரு கோணம்;
    தமிழ் வலிமை குன்றிவிட்டது எனச் சோர்வடைதல் மற்றொரு கோணம்.


    பின்வந்தோர் ஆழ்வார்கள் தம் பனுவல்களைத் தொகுத்ததோடன்றி
    அப்பிரபந்தங்களுக்கு ‘திவ்ய’ எனும் அடைமொழி கொடுத்து, அவற்றை வேறொரு தளத்திற்கு உயர்த்தினர்.

    அநத்யயநம், உரை போன்ற சிறப்புகளைச் சேர்த்து அவற்றை மறைகளுக்கு நிகராக்கி மகிழ்ந்தனர். வேத விண்ணப்பத்தோடு அப்பனுவல்களும் இன்றளவும் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டன.

    ஒரு வயது முதிர்ந்த பறவையான ஜடாயுவிற்குப் ’பெரிய உடையார்’ எனும் அழகிய தமிழ்ப்பெயரை
    வழங்கியது வைணவம்.

    இவை ஆக்கபூர்வமான முயற்சிகள்.

    தமிழ், வடமொழி, மணிப்பவளம் என்று தட்டையாகப் பிரித்துப் பார்த்தால் மொழி அரசியலே முன்னிற்கும்



    தேவ்

    ReplyDelete
  115. காய்ச்சல் இப்போ தான் கொஞ்சம் சரியாகியது! வந்து பார்த்தா செல்வன் அண்ணா ரொம்பவே அடிச்சி விட்டிருக்காரு! :)) மாலையில் பைய வாரேன்!

    ReplyDelete
  116. //நம் முன்னோர்கள் அதனால் சிந்தன் எனும் வடமொழி சொல்லை சிந்தனை என தமிழ் படுத்தி சிந்தனையாளர்கள், சிந்தித்தல் என கிளை சொற்களை உருவாக்கினர்//

    ஓ...சிந்தனை வடமொழிச் சொல்லு..அதைத் தமிழுக்குக் கடனாக் குடுத்து...அதிலிருந்து ஒவ்வொரு சொல்லா, தமிழ்ல புள்ளை பெத்தாங்க! அப்படித் தானே? அடப் பாதகமே! இதுக்குத் தான் இம்புட்டு நேரம் கும்மி அடிச்சிக்கிட்டு இருந்தீங்களா? :)

    //இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளால் அவர்கள் தமிழை வளபடுத்தினரே ஒழிய//

    எப்படி எப்படி எப்படி...? "ஆக்கப் பூர்வம்"!
    சிந்தனை = வடமொழிச் சொல்லு! அதிலிருந்து தமிழ்ச் சொல்லு "கிளை"!

    சூப்ப்ப்ப்பரப்பு!
    இதுவல்லவோ "ஆக்கப் பூர்வம்"? கிரந்தம் கலந்து கலந்து ஆக்கிட்டீங்களே ராசா...ஆக்கிட்டீங்களே!

    கிரந்தம், தமிழ் கூடவே இருக்கணும், தவிர்க்கக் கூடாது, தவிர்த்தா பிற்போக்குத்தனம்...அப்படி இப்படி-ன்னு வேப்பிலை அடிச்சி, அப்பாலிக்கா கொஞ்சம் கொஞ்சமா ஒட்டகம் கூடாரத்துக்குள்ள நுழைஞ்சாப் போல, சிந்தனை என்பதே சமஸ்கிருதம் தமிழுக்கு கடனாக் குடுத்து, அதிலிருந்து தமிழ் "கிளை" விட்டுச்சி....

    எப்படி இருக்கு பாத்தீங்களா கிரந்த ஆட்டம்! ஆக்கப் பூர்வ ஆட்டம்! வாயில் சினம் கொப்பளிக்கிறது! தேவ் ஐயா இருக்காரே-ன்னு பாக்குறேன்!
    --------------------------------

    சிந்தனை, சிந்தி, சிந்தித்தல், சிந்தை - இதெல்லாம் தமிழ்ச் சொல்லு! இன்னிக்கி நேத்தல்ல! சங்க காலம், சிலப்பதிகார-மணிமேகலை காலத்தில் இருந்து....

    "சிந்தை" இன்றியும் செய் வினை உறும்! - மணிமேகலை
    "சிந்தை" நோய் கூரும்என் சிறுமை நோக்கி - சிலப்பதிகாரம்

    வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
    உண்ணாது உயங்கும் மா "சிந்தித்தும்" - பத்துப்பாட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு

    சிந்து, சிந்தி என்று தலையில் சூடும் அணிகலனும் உண்டு!
    தலை - நினைத்தல் - "சிந்தை" - இதில் இருந்து வரும் சொல்லை.....எம்புட்டு ஈசியா, ஒரே வினாடியில் வடமொழிச் சொல்லு தான் மூலம்-ன்னு ஆக்கிட்டீங்க?

    மக்களே, இப்போ புரியுதா? இது தான் கிரந்தக் கலப்பின் நோக்கம்! = உறவாடிக் கெடுத்தல்!
    பரந்த மனப்பான்மையா இருக்கணும், பேதம் பாக்கக் கூடாது, பகவானுக்கு அடுத்து தான் மொழி, ஒன்னாக் கலந்தா தான் முற்போக்குத்தனம்....

    கலந்தாப் பொறவு, குடுத்ததே சமஸ்கிருதம், கிளை விட்டதே தமிழ்...
    ரொம்ப நல்லா இருக்குடி ஆட்டம்!!

    "வாஸக தோஷம் ஷந்தவ்ய"
    எல்லாரும் க்ஷேமமா இருங்கோ!

    ReplyDelete
  117. //பின்வந்தோர் ஆழ்வார்கள் தம் பனுவல்களைத் தொகுத்ததோடன்றி

    அப்பிரபந்தங்களுக்கு ‘திவ்ய’ எனும் அடைமொழி கொடுத்து,

    அவற்றை வேறொரு தளத்திற்கு உயர்த்தினர்//

    மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்!

    ஆழ்வார்களை "உயர்த்தும்" அளவுக்கு, இங்கே யாரும் உயர்ந்து விடவில்லை!
    அத்தனை பேர்களும் ஆழ்வாரின் காலடியில் = சடகோபன் பொன்னடி!

    இராமானுசரின் உள்ளத்துக்கு உவப்பற்ற இந்த "உயர்த்தினர்" என்னும் கூற்றைத் தள்ளுகிறேன்!

    "உயர்வு" அற-"உயர்" நலம்-உடையவன்-எவனவன்
    அவனையா 'உயர்த்தினார்கள்' பின்வந்தவர்கள்?

    காரேய்க் கருணை இராமானுசா...
    யாரே அறிவர் நின் அருளாம் தன்மை?

    ReplyDelete
  118. This comment has been removed by the author.

    ReplyDelete
  119. தேவ் ஐயா,

    அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் என்னும் போது 'ஹலம்' என்ற கிரந்தம் கலந்த சொல்லை 'அலம்' என்று சொல்லி அதனால் ஹலாதரனான பலராமனைக் குறிப்பதாகவும் ஒரு பொருள் பெரியோர் தருவார்கள் அல்லவா?

    இதில் கிரந்தம் தவிர்த்து எழுதி தமிழை வளப்படுத்தினர் என்ற கோணத்தில் மகிழ்வதா? கிரந்தம் தவிர்த்து எழுதியிருந்தாலும் வடசொல் வடசொல்லே; அதனால் தமிழ் வலிமை குன்றியது என்று கவல்வதா? இதில் எது ஆக்கம் தரும் முயற்சி?!

    ReplyDelete
  120. //
    சிந்தனை, சிந்தி, சிந்தித்தல், சிந்தை - இதெல்லாம் தமிழ்ச் சொல்லு! இன்னிக்கி நேத்தல்ல! சங்க காலம், சிலப்பதிகார-மணிமேகலை காலத்தில் இருந்து....//

    ஆமாம். சங்க காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட சொல் தான். கீதையிலும் பயன்படுத்தபடுகிறது. (அனன்யா சிந்த்ய யாதோ மாம்).

    இந்திய மொழிகள் பலவற்றிலும் சிந்தனா என்றால் சிந்திப்பது என தான் பொருள்.

    ReplyDelete
  121. //நம் முன்னோர்கள் அதனால் சிந்தன் எனும் வடமொழி சொல்லை சிந்தனை என தமிழ் படுத்தி சிந்தனையாளர்கள், சிந்தித்தல் என கிளை சொற்களை உருவாக்கினர்.//

    நம் முன்னோர்கள் என்றால் யார் ? வடமொழியைக் கலந்து கட்டியவர்களா ?
    நம்முன்னோர்கள் என்ற சொல் எனக்கு உவர்ப்பானது, ஏனெனில் நான் முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்று நம்புபவன். :)

    சிந்தன் - என்ற சொல் உண்மையிலேயே வடமொழிச் சொல் என்று உங்களுக்கு யார் சொன்னது ? அதற்கான தரவுகள் உண்டா ?

    சிந்து - சிறிது சிறிதாக விழுவது அல்லது விழுதல், இரைத்தல் எண்ணங்களை சிந்துவது சிந்தனை. சீந்து - எடுத்தெறி. தமிழ்சொல்லில் பின்னொட்டை மாற்றிவிட்டால் அது வடமொழியில் இருந்து வந்தது என்று சொல்லிவிடமுடியுமோ.

    சிந்தன் - வடமொழி என்றால் அதற்கான வேர்சொல்லைக் காட்டிவிட்டு பிறகு சொல்லுங்கள்.

    //இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளால் அவர்கள் தமிழை வளபடுத்தினரே ஒழிய இருக்கும் சொற்களை சுத்திகரிக்க முயன்று தமிழை அழிக்க அவர்கள் முனையவில்லை.ஆனால் நாம்?//

    ஆக்கம் தமிழ் சொல்லு. பூர்வம் என்றால் என்ன ? முழுமை. ஆனால் அந்த பூர்வம் - பருத்த என்ற சொல்லில் இருந்து கிளைத்தச் சொல்லே. இன்றைக்கும் கூட அம்மாவாசை, முழுநிலவை பருவம் என்றே சொல்லுபவர்கள் உண்டு, பருவம் தான் பூர்வமாகியது.

    ReplyDelete
  122. //அதுபோல கிரந்தம் மேல் கோபம் கொண்டு ஆயிரத்தைநூனூறு ஆண்டுகால வரலாற்றையும் தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் மறுக்க, துறக்க சிலர் கங்கணம் கட்டிகொண்டு இருக்கிறார்கள்//

    இஸ்ரேல்காரன் 1500 ஆண்டுகளுக்கு முன்பு செத்துப் போன இப்ரு மொழிக்கு உயிர்கொடுத்து பேசுகிறான், அது அவர்களது மொழிப்பற்று எனப்படுகிறது, இங்கு தமிழில் இருக்கும் தூய்மையற்றதை ('அசுத்தத்தை') அப்புறப்படுத்தவே கூச்சல்.
    :)

    நம்ம வீட்டு தோட்டத்தை தூய்மைப்படுத்தும் போது அதில் பறந்து வந்து, அல்லது ஆள் இல்லாதபோது தூக்கி எரிந்த, அல்லது அன்போடு வைத்துக் கொள்ளச் சொல்லி சேர்ந்திருக்கும் பக்கத்து தோட்டத்துக்காரன் குப்பைகளை கண்டு கொள்ளாதே என்று கூறுவது நகைச்சுவை அன்றோ.

    ReplyDelete
  123. //இந்திய மொழிகள் பலவற்றிலும் சிந்தனா என்றால் சிந்திப்பது என தான் பொருள்.//

    ரவிசங்கர் கேட்டது ஒப்புதல் அல்ல, அது வடமொழிச் சொல் தான் என்பதற்கான தரவுகளே. இந்திய மொழிகளில் கலந்திருந்தால் அது வடமொழியாகிடுமா ? இன்றைக்கு நூற்றுக்கணக்கான உருது செற்கள் கூடத்தான் பலமொழிகளில் கலந்திருக்கிறது, அதற்காக அவையும் வடமொழிச் சொல் என்றாகிவிடுமா ?

    ReplyDelete
  124. @செல்வன்

    //ஆமாம். சங்க காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட சொல் தான்//

    தரவு காட்டிய பின் ஒப்புக்கிட்டமைக்கு நன்றி!

    //கீதையிலும் பயன்படுத்தபடுகிறது. (அனன்யா சிந்த்ய யாதோ மாம்)//

    கீதையில் சிந்தயந்தோ-ன்னு சொல்வதற்கும், இந்தியில் சிந்தானா மத் கீஜீயே என்பதற்கும் வேறுபாடு இருக்கா?
    இங்கே சிந்த்ய என்றால் தமிழிற் சிந்தனை என்பது போலா பொருள்?

    எதை வைத்துக் கொண்டு, சிந்தன் என்பது தான் "கிளை விட்டு" தமிழில் சிந்தனை ஆயிற்று என்றீர்கள்?
    என்ன தரவு? ஆதாரம் காட்டுங்கள்!

    சிந்தை, எந்தை, விந்தை-ன்னு வரும் சொற்கள்!
    சிந்து என்ற தலையணி! தலைச்சுட்டி!
    சிந்தை எப்படிச் சிந்தன் ஆகும்? சொல்லுங்க பார்ப்போம்!

    சிற்றம்பலம் = சிறு + அம்பலம்!
    அதைச் சிதம்பரம்-ன்னு ஆக்கி
    அப்பறம் சித் + அம்பரம் -ன்னு ஆக்கிய கதை எங்களுக்கும் தெரியும்!

    நீங்களோ (அல்லது தேவ் ஐயா விளக்கினால் கூடச் சரி தான்)...
    "சிந்தன்" என்னும் வடமொழிச் சொல் தான் முல்லைப் பாட்டு "சிந்தை" ஆகியது என்பதற்கு ஆதாரத்தை அவையில் முன் வையுங்கள்!

    ReplyDelete
  125. யாரோ ஒரு அன்பர் - "ஸம்பத் ரங்கநாதன்" - அவரே பின்னூட்டம் இட்டு அவரே அழித்து விட்டார்!:)

    அவர் கூறியதுக்கு சரியான பதிலுரை குடுக்கலாம்-ன்னு வந்தேன்! ஆனா...அதுக்குள்ள... :))

    அதாச்சும் "இந்து மதம்" அல்லது சமயம் தொடர்புடைய எந்தச் சொல்லுன்னாலும், அது வடமொழியில் இருந்து வந்ததாக, safe side-இல் எடுத்துக் கொள்ளலாமாம்! :))

    ஆழ்வார், நாயன்மார், கோபுரம், கருவறை, திருமால், மாயோன், முருகன் - இதெல்லாம் வடமொழி தான்! ஏன்-ன்னா இப்போ "இந்து"வா ஆயிருச்ச்சே! :)

    ReplyDelete
  126. @தேவ் ஐயா

    //வைணவத்தில் ஆக்கபூர்வமான முயற்சிகள்// என்று சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்!
    ஆனால் ஆழ்வார்களை இன்னொரு தளத்துக்கு 'உயர்த்தினர்' என்று சொல்வதை இராமானுசர் முதற்கொண்டு, மாமுனிகள் முன்னிலையில் உங்களால் சொல்லீற முடியுமா-ன்னு யோசித்துப் பாருங்கள்! அப்படி அவர்கள் முன்னிலையில் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமல்லவா? :))

    ஆழ்வார் பாசுரங்களுக்கு தானே உரை எழுத மாட்டேன்! அப்படி எழுதினால், அந்தக் கடலுக்கு இவ்வளவே ஆழம்-ன்னு என்னை வைத்து நிர்ணயித்து விடுவார்கள் மந்தமதிகள் என்று தானே இராமானுசர் சொன்னார்?

    ஆழ்வார்களை "திவ்ய"-ன்னு பட்டம் குடுத்து "உயர்த்தும்" அளவுக்கு, கிரந்தம் துணை நின்றது-ன்னு சொல்லும் உங்கள் கூற்றை, "மொழி அரசியல்"-ன்னு சொல்ல, எங்களுக்கும் எவ்வளவு நேரம் பிடிக்கும்? யோசித்துப் பாருங்கள்!

    பதிவில் அத்தனை தெளிவாக, கிரந்தம் is not untouchable-ன்னு சொல்லி இருந்தும், மீண்டும் மீண்டும், இந்த "மொழி அரசியல்" என்ற சொல்லை, இங்கே பலுக்கிக் கொண்டுள்ளீர்கள்! இது நியாயமா?

    சிறியேன் கேள்விகளுக்கு என்னை மன்னிக்கவும்!

    ReplyDelete
  127. @செல்வன்...

    ஏரணமில்லா வாதம் என்ற உங்கள் கடைசித் தூணில் நீங்களே முட்டிக் கொண்டீர்கள் (நன்றி: ஜெயமோகன்) :))

    //சொற்கள் நாள்போக்கில் அழியதான் செய்யும். புறநானூறு,அகநானூறு போன்றவற்றை எடுத்து பார்த்தால் அதில் உள்ல சொற்கள் எதாவது இன்று நமக்கு புரிகிறதா?//

    பழையன கழிதல், புதியன புகுதல்-ன்னு சொல்லியதே தமிழ் தான்!
    ஆனா அந்தப் புதியன புகுதலில்...வேற்று மொழிப் புகுதல் இல்லை!

    வாழை அடியில் கழிஞ்சி, வாழை தான் முளைக்கும்!
    இல்லை, வாழைக்குப் பதில் கள்ளிச் செடி வந்தாக் கூட நல்லது தான்-ன்னு சொல்லாதீக!

    வாழைத் தோப்பில் வாழை தான்!
    கள்ளி வேலியோடு மட்டும் இருத்தல் நலம்!

    ReplyDelete
  128. @ இரவி
    >>>>ஆழ்வார்களை "உயர்த்தும்" அளவுக்கு, இங்கே யாரும் உயர்ந்து விடவில்லை! அத்தனை பேர்களும் ஆழ்வாரின் காலடியில் = சடகோபன் பொன்னடி!<<<<

    உளமாற உடன்படுகிறேன், ஐயா.
    ஆழ்வார்கள் மண்ணுளார் என்ன, விண்ணுளாரினும் சீரியர்.
    திவ்ய ஸூரிகள் என்றது அதனால்தான்.

    இரவியாருக்கு ரௌத்திரம் வேண்டாம். தமிழகத்தின் திவ்ய தேசங்களை மறை புகழ்கிறது;
    ஆழ்வார்களின் அவதார சூசனை பாகவதத்தில் உள்ளது. இரவியார் அறியாததா?

    ஆன்மிகம் பிராந்திய, மொழி எல்லை கடந்தது என்பதைத்தானே நிறுவி வருகிறோம்.

    அருளிச்செயல்களை உயர்த்தித் தனித் தளம் அமைத்திராவிட்டால்
    அவை பிற இலக்கியங்களுக்கு நிகராக ஆகியிருக்கும்.
    விண்ணகர உள்துறைப் பயன்பாடு தொடர்ந்து இருந்து வருவதால்தான்
    நாமே இந்த அளவு முதன்மை தந்து அவை பற்றிப் பேசி மகிழ்கிறோம்;
    பெருமிதம் கொள்கிறோம்.

    தேவாரப் பகுதிகள் அசட்டையால் மறைந்தன; கிடைத்திருக்கும்
    பதிகங்கள் சிலவற்றில் சில பாடல்கள் இல்லை. பின்னாளில் அவை ஆலய மரபோடு இணைக்கப்பட்டதால் ஏட்டளவிலாவது பாதுகாப்பு ஏற்பட்டது.அந்நிலை அருளிச் செயலுக்கு ஏற்படவில்லை என்பதே உட்கருத்து.

    பரிபாடலை ஓர் அருமையான சமய இலக்கியம் என்றே சொல்லலாம்;
    அதை விளக்க வெறும் மொழியறிவு மட்டும் போதாது. அதுபற்றிப் பரக்கப் பேசுவார் இல்லை. அதை மற்ற இலக்கியங்களிலிருந்து
    வேறுபடுத்திக் காட்டும் முயற்சிகள் வேண்டும் என்பதே அடியேனின் அவா.

    *******************

    சிந்தநா - ‘சிந்த்’ வேர்

    ஆராய்தல், எண்ணுதல், கவல்தல் ஆகிய பொருள்களில்,
    தமிழிலும் அதே பொருளில் கையாள்வர்.

    தமிழில் சகர முதல் சொற்கள் பல வடமொழி மூலம் என்று
    சொல்லும் அறிஞர்கள் பலர்.

    சிந்த், பந்த்,வந்த், க்ரந்த் என்பன போன்ற வேர்கள் உள.
    இரவியார் ’வந்தநா’ வும் தமிழ்தான் என்று கருதுவார் போலும்.
    சிந்த், வந்த் - கிளைச்சொற்கள் மிகுதி



    தேவ்

    ReplyDelete
  129. //கம்பன் உள்ளிட்ட புலவர்கள் பலகாலமாக கிருஷ்ணனை கிருட்டினன் என எழுதினார்கள்...விஷ்ணுவை விட்டுணுவாக்கினார்கள், ..மக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. அப்ப மக்கள் எல்லாம் தமிழ்பற்று இல்லாதவர்களா? என்னவோ போங்க:-)//

    புல்லரிக்குதே! :))

    கம்பன் மக்கள் கிட்ட செல்லுபடியா ஆகலையாம்! கிரந்தம் கிருஷ்ணமாச்சாரி தான் செல்லுபடி ஆகுறாராம்! அடேங்கப்பா!

    அது விஷ்ணுவோ, குஷ்ணுவோ...
    எந்தத் தமிழனும் விஷ்ணு கோயில்-ன்னு சொல்லுறது இல்ல, ஸ்கந்தன் கோயில்-ன்னு சொல்லுறது இல்ல! அதெல்லாம் உங்க லெட்டர் பேடில் தான்!
    பெருமாள் கோயில், முருகன் கோயில் என்பதே மக்கள் வழக்கு! தமிழ் வழக்கு!


    //நம் பழக்கத்துக்கு ஏற்ப இங்கிலாந்து, ஆங்கிலம் என அச்சொற்களை மாற்றினோம்.அதேபோல அவனும் அவன் பழக்கத்துக்கு ஏற்ப டுடிகோரின்,டேஞ்சூர் என மாற்றினான்//

    சூப்பரு!
    ஆனா...அவிங்க ஊரு மக்கள், இங்கிலாந்து, ஆங்கிலம்-ன்னு மத்தவன் மாத்தி வச்சதைச் சொல்லுறதில்ல!
    ஆனா நாம ட்ரிப்ளிக்கேன், டேஞ்சூர்-ன்னு தான் சொல்லுவோம்! சொல்லணும்! ஏன்னா "மக்கள்" சொல்லுறது தான் தமிழ்! எப்படி ஆட்டம்? :))

    மக்களே, ட்ரிப்ளிக்கேன் வேண்டாமே, திருவல்லிக்கேணி-ன்னு சொல்லுங்க-ன்னு பதிவு போட்டா, அது "மொழி அரசியல்", "பண்டிதத்தனம்", "பிற்போக்குத்தனம்"....டொட்டடொய்ங்ங்...நல்லா இருக்கா ஆட்டம்?

    கிரந்தம் 100% நீக்கி எழுதலை, ஆனா நல்லத் தமிழ்ச் சொற்களைப் புழங்கத் துவங்கறோம்-ன்னு துவங்கினாக் கூட...பழைய இடத்தில் எழுதி இருக்கீயளே-ன்னு காட்டி நக்கல் ஓட்டுவாங்க! சிரிச்சிக்க வேண்டியது தான்!

    //பீட்டர் ஜோஸஃப்களிடமும், ஸ்டாலினிடமும், ஜனாப் ஹாஜி அஹமதுகளிடமும்// செல்லுமா-ன்னு வழக்கமான "மத அரசியல்" பண்ணுவாங்க! சிரிச்சிக்க வேண்டியது தான்!
    என்னமோ இந்து மதச் சொற்களை மட்டும் அடிக்கிறா மாதிரி பாவ்லா! கிரந்தம் என்ன இந்து மதமா?

    சகஜம்-ன்னு யாரு எழுதினாலும் சகஜம் தான்! அதை வழக்கம்-ன்னு எழுத முயல்வோம்-ன்னு தான் சொல்லுறோம்!

    மத்தபடி, திவ்ய சக்ஷூ, ஸ்ரீவத்ஸாங்கித ஸ்தோத்ரம், பிஸ்மில்லா, சுவிசேஷம் போன்ற மதச்சொற்களையோ, நூல்களையோ, நாம் ஒன்னும் சொல்லலை!


    துறை சார்ந்த கிரந்தம்-ன்னு பதிவில் சொல்லி இருந்தும் கூட...
    நான் "இணையத் தமிழ் அரசியல்" செய்கிறேன் என்று சொல்கிறார் தேவ் ஐயா! என்ன செய்ய! என் போகூழ் அப்படி! :((( முருகா!

    ReplyDelete
  130. @செல்வன்

    //தமிழ் சொல் அழிந்தாலும் அதுக்கு பதில் பயன்பாட்டுக்கு வரும் சொல் தமிழ் சொல்லாக்வே இருக்கணும் என்பது பேராசை//

    உம்....அப்பறம்? கிரந்தச் சொல்லு வருவது தான் நியாயமான ஆசை! அடா அடா அடா!

    //இது எப்படி இருக்கு என்றால் சங்ககாலத்தில் பிரேக்பாஸ்டுக்கு புட்டு தின்றார்கள்.இன்று நாம் புட்டு தின்னலை என்றாலும் அதுக்கு பதில் தோசை சாப்பிடணுமே ஒழிய சீரியல் சாப்பிட கூடாது என எதிர்பார்ப்பது போல இருக்கிறது:-)//

    யாரும் சீரியலைத் திங்கக் கூடாது-ன்னு சட்டம் போடலை!
    ஆனா...கேவுரு/களியும் இப்பல்லாம் சுலபமாப் பாக்கெட்டில் அடைச்சி விக்குது! சீரியலை விடச் சத்து-ன்னு நாங்க சொல்லக் கூடக் கூடாது-ன்னு மெரட்டறீங்க பாருங்க! அதான் தப்பு! மொழி அரசியலா? அப்போ நீங்க பண்ணுறது என்ன?

    // "தமிழ் இதுதான்" என நாமாக ஒரு வரையரை செய்துகொண்டு "இந்த வரையறைக்கு ஏற்ப தான் மக்கள் பேச வேண்டும். மக்களுக்கு "திணிப்பு பிடிப்பதில்லை":-)//

    தோடா, மக்களாட்சி அரிஸ்டாட்டில் பேசறாரு!
    உங்க எடுக்கு வாதத்தையே நான் திருப்பிக் கேக்குறேன்!

    கோயில்ல வரையறை செய்யறதுக்கு நீங்க யாருய்யா?
    நான் சாமிமலையில் கெடா வெட்டிக் கும்புடுவேன்! இன்னும் நூறு பேரு எங்க சமூகத்துல அப்படியே பண்ணி, பூசை போட ஆசைப்படறாங்க!

    நீங்க ஒங்க வழியில் கும்பிட்டுக்கோங்க! நாங்க எங்க வழியில் கும்புட்டக்கறோம்!-ன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்! அப்போ "ஆகமம்"-ன்னு கொண்டாந்து நீட்ட மாட்டீங்க? அப்போ எங்கே போச்சி மக்கள் மேல் திணிப்பு?

    கலாச்சாரமும் தமிழ் தான், பண்பாடும் தமிழ் தான்-ன்னா...
    கெடா வெட்டும் பூசை தான், தயிர் சாதமும் பூசை தான்!
    இதுக்கு எங்கே போச்சி ஒங்க நியாயம்?


    ஆகமமாவது, அப்பளக் கட்டையாவது! பண்டிதர்கள், நீங்க யாருய்யா தீர்மானிக்கறது எது பூசை-ன்னு? மக்கள் சொல்லட்டும்-யா!
    என்ன செல்வனாரே? சொல்லுங்கோ!:))
    --------------------------------

    இங்கே எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன்...
    1. கலாச்சாரம்-ன்னு எழுதறவனைத் தள்ளி வைக்கலை! தமிழன் இல்லை-ன்னு 'மதப் பிரஷ்டம்' பண்ணலை
    2. அவனுக்கும் புரிவது போல், "பண்பாடு"-ன்னு எழுதினா, மொழி வளம் குன்றாது இருக்கும்-ன்னு வேண்டுகோள் தான் வைக்கிறோம்!

    ஆனா...
    சன்னிதியில கெடா வெட்டுனா, ஆகமம்-ன்னு அடிச்சித் தொரத்த மாட்டாங்க?
    அங்கே ஒரு நியாயம், இங்கே ஒரு நியாயம்!
    ஏன்னா...அது அவா சாம்ராஜ்ஜியம்! அது குலையாமல் அப்படியே இருக்கணும்! இது மொழி தானே! அழிஞ்சி புதுசா உருவாவறது தான்-யா அழகு! டொட்டடொய்ங்ங்....

    சும்மா நாலு அறிஞர்கள் கூடி இதான் தமிழ்-ன்னு வரையறுக்கலை! மக்கள் மீது திணிக்கலை!
    மக்களுக்குப் புரியும் படி, இது தமிழ், இது தமிழ் அல்ல, புதியன புகலாம், ஆனால் மனிதநேயம் போன்ற அடிப்படைகள் அழியக் கூடாது-ன்னு எடுத்துச் சொல்லுறோம்!

    அதைக் கூடச் சொல்லக் கூடாது, பிற்போக்குத்தனம், மொழி அரசியல்-ன்னு எள்ளல், கேலி, எகத்தாளம்...

    தஸ்தாவேஜ், கஜானா எல்லாம் போயி, இன்னிக்கி ஆவணம், கருவூலம்-ன்னு மக்களே பேசுற நிலையில் தான் இருக்காங்க!

    அதனால் இந்த எகத்தாளம் எல்லாம் ஒரு பொருட்டல்ல! உங்க 'அரசியலையும்' மீறி, இந்த 'மொழி அழகியல்' தானா வளர்ந்து, மக்கள் கிட்ட சென்றுகிட்டுத் தான் இருக்கும்!

    அனைவருக்கும் நன்றி!!!

    ReplyDelete
  131. //உம்....அப்பறம்? கிரந்தச் சொல்லு வருவது தான் நியாயமான ஆசை! அடா அடா அடா!//

    அப்படின்னு நான் சொல்லலை.போட்டியில் ஜெயிக்கும் எந்த சொல்லும் வரலாம்:-)

    //யாரும் சீரியலைத் திங்கக் கூடாது-ன்னு சட்டம் போடலை!
    ஆனா...கேவுரு/களியும் இப்பல்லாம் சுலபமாப் பாக்கெட்டில் அடைச்சி விக்குது! சீரியலை விடச் சத்து-ன்னு நாங்க சொல்லக் கூடக் கூடாது-ன்னு மெரட்டறீங்க பாருங்க! அதான் தப்பு! மொழி அரசியலா? அப்போ நீங்க பண்ணுறது என்ன?//

    சீரியலை திங்க கூடாதுன்னு சட்டம் போடலை என்றால் அப்புறம் இங்கே விவாதமே இல்லையே?:-)

    கேவுரு/களி சாப்பிட விரும்பினால் தாராளமா சாப்பிடலாம். விற்கலாம்..விளம்பரபடுத்தலாம். சந்தையில் சீரியலும் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

    //தோடா, மக்களாட்சி அரிஸ்டாட்டில் பேசறாரு!
    உங்க எடுக்கு வாதத்தையே நான் திருப்பிக் கேக்குறேன்!

    கோயில்ல வரையறை செய்யறதுக்கு நீங்க யாருய்யா?
    நான் சாமிமலையில் கெடா வெட்டிக் கும்புடுவேன்! இன்னும் நூறு பேரு எங்க சமூகத்துல அப்படியே பண்ணி, பூசை போட ஆசைப்படறாங்க!//

    தாராளமா பண்ணுங்க...நான் எப்ப உங்களை கெடா வெட்ட வேண்டாம் என்றேன்?

    //கலாச்சாரமும் தமிழ் தான், பண்பாடும் தமிழ் தான்-ன்னா...
    கெடா வெட்டும் பூசை தான், தயிர் சாதமும் பூசை தான்!
    இதுக்கு எங்கே போச்சி ஒங்க நியாயம்? //

    கெடாவெட்டு பூசை பண்பாடு இல்லை என நான் எங்கே எப்போது சொன்னேன்?

    நீங்க இங்கே கேட்பது எனக்கு சற்று குழப்பத்தை அளிக்கிறது.

    பாரம்பரியமாக மாமிசம் படைக்கும் கோயில்கள் உண்டு.மாமிசம் படைக்காமல் வழிபடும் கோயில்கள் உண்டு.கெடா வெட்டி நடக்கும் கோயில்களில் அது தாராளமாக தொடரலாம். கெடா வெட்டாத கோயில்களிலும் கெடா வெட்டுவது உங்கள் உரிமை என கேட்கிறீர்களா என தெரியவில்லை.அது தான் குழப்பத்தை அளிக்கிறது என்றேன்.அது தான் உங்கள் கேள்வி என்றால் அடுத்த பின்னூட்டத்தில் விளக்கம் அளிக்கிறேன்.

    ReplyDelete
  132. //புல்லரிக்குதே! :))

    கம்பன் மக்கள் கிட்ட செல்லுபடியா ஆகலையாம்! கிரந்தம் கிருஷ்ணமாச்சாரி தான் செல்லுபடி ஆகுறாராம்! அடேங்கப்பா!//

    கம்பன் எழுதியதுபோல சடாயு,வீடணன் என மக்கள் இப்போது எழுதுவதில்லை. ஜடாயு, விபீஷணன் என தான் சொல்கிறார்கள்/எழுதுகிறார்கள். இதில் புல்லரிக்க என்ன இருக்கு?:-)


    //அது விஷ்ணுவோ, குஷ்ணுவோ...
    எந்தத் தமிழனும் விஷ்ணு கோயில்-ன்னு சொல்லுறது இல்ல, ஸ்கந்தன் கோயில்-ன்னு சொல்லுறது இல்ல! அதெல்லாம் உங்க லெட்டர் பேடில் தான்!
    பெருமாள் கோயில், முருகன் கோயில் என்பதே மக்கள் வழக்கு! தமிழ் வழக்கு!//

    வெறுமனே பெருமாள் கோயில் என்றா சொல்கிறார்கள்?

    ஜலகண்டேஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரினிவாச பெருமாள் கோயில் என ஸ்பெசிபிக்கா சொல்வதில்லையா?அதெல்லாம் தமிழ் வழக்கு இல்லையா?:-)

    (சிந்தனைக்கு தேவ் ஐயா அவர்கள் விளக்கம் அளித்துவிட்டார்.மத்தபடிக்கு உதாரணமா சொல்லபட்ட ஒரு சொல்லை ரொம்ப பிடித்துகொண்டு தொங்கும் தேவை இல்லை.மெயின் பாயிண்டை விவாதிப்போம்)

    ReplyDelete
  133. //சூப்பரு!
    ஆனா...அவிங்க ஊரு மக்கள், இங்கிலாந்து, ஆங்கிலம்-ன்னு மத்தவன் மாத்தி வச்சதைச் சொல்லுறதில்ல!
    ஆனா நாம ட்ரிப்ளிக்கேன், டேஞ்சூர்-ன்னு தான் சொல்லுவோம்! சொல்லணும்! ஏன்னா "மக்கள்" சொல்லுறது தான் தமிழ்! எப்படி ஆட்டம்? :))//

    அப்படி யாரும் சொல்லவில்லையே?அவனுக்கு தஞ்சாவூர் என்பது வராது.அவன் தேஞ்சூர் எனட்டும்.நமக்கு வரும்.நாம் தஞ்சாவூர் என்றே சொல்லலாம்.மக்கள் தஞ்சாவூர் என தான் கூறுகிறார்கள்.இன்னும் தேஞ்சுர் என்பவர்கள் யாரவாது தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன?.

    ReplyDelete
  134. @குமரன்
    >>> அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் என்னும் போது 'ஹலம்' என்ற கிரந்தம் கலந்த சொல்லை 'அலம்' என்று சொல்லி அதனால் ஹலாதரனான பலராமனைக் குறிப்பதாகவும் ஒரு பொருள் பெரியோர் தருவார்கள் அல்லவா?

    இதில் கிரந்தம் தவிர்த்து எழுதி தமிழை வளப்படுத்தினர் என்ற கோணத்தில் மகிழ்வதா? கிரந்தம் தவிர்த்து எழுதியிருந்தாலும் வடசொல் வடசொல்லே; அதனால் தமிழ் வலிமை குன்றியது என்று கவல்வதா? இதில் எது ஆக்கம் தரும் முயற்சி?!<<<


    நன்றி, குமரன் ஐயா

    நாலுகவிப்பெருமாள் ஆலிநாடரின் இம்முயற்சியை அடியார்கள் ஆக்கமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்; சமயத்துறையில் மொழிக்கலப்பை இரவியாரும் ஆதரிக்கவே செய்கிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கவல்வது மொழிஅரசியலோடு சேரும்.

    அர்ச்சனை ஆலயங்களில் இருக்கலாம் என இப்போது அவர் அநுமதி அளிப்பதாகவும் தோன்றுகிறது


    தேவ்

    ReplyDelete
  135. //பழையன கழிதல், புதியன புகுதல்-ன்னு சொல்லியதே தமிழ் தான்!
    ஆனா அந்தப் புதியன புகுதலில்...வேற்று மொழிப் புகுதல் இல்லை!//

    வேற்றுமொழி புகுதல் இல்லைன்னு அந்த பழமொழியில் இல்லையே? இருந்திருந்தால் நானே கிரந்தம் வேண்டாம் என சொல்லியிருப்பேன்:-)

    //வாழை அடியில் கழிஞ்சி, வாழை தான் முளைக்கும்!
    இல்லை, வாழைக்குப் பதில் கள்ளிச் செடி வந்தாக் கூட நல்லது தான்-ன்னு சொல்லாதீக!//

    ஒட்டு வாழை கன்றை வைத்து ஹைப்ரிட் பனானாவை உருவாக்கலாம்.அதுவும் வாழைதான்.கள்ளி அல்ல:-)

    ReplyDelete
  136. இரவியாரின் பதிவில் சமணமே தமிழைத் தாங்கியது என்று
    சொன்னது மத அரசியல் சிந்தனைக்கு இடமளித்தது;
    பவுத்தம், சைவம் ஆகியனவும் வளம் சேர்த்துள்ளன.

    அருச்சனை இல்லங்களோடு நிற்கட்டும், ஆலயத்தில்
    வேண்டா என்றது மொழி அரசியலுக்கு இடமளித்தது.

    ’குணங்களின் தொகுப்பே அர்ச்சனை’ என்று அவர் கூறியது மிகவும் சரியான கருத்து. ஸ்ரீ பட்டர் தமது ஆயிர நாம உரைக்கு
    ‘பகவத் குண த(da)ர்ப்பணம்’ என்றே பெயரிட்டார்.

    நாலாயிரத்துக்கும் ப்ரணவம் போன்றதான திருப்பல்லாண்டில் ஆயிர நாமங்களையும் ஓதுமாறு ஆழ்வார் கூறியுள்ளார்.

    அன்பர்கள் அனைவருக்கும் அவர்கள் எந்த நாட்டில்
    வாழ்ந்தாலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

    பாராயணம் செய்யாவிடினும் cd, pod casting ஏதாவது ஒன்றின் மூலம் இல்லங்களில் நாளில் ஒருமுறையாவது ஒலிக்கச் செய்ய வேண்டும் என அன்பர் ரவிசங்கரின் அனுமதியுடன் அனைவரையும் தாள் பணிந்து வேண்டுகிறேன்; இது அனைவருக்கும் எல்லாவித நன்மைகளையும் வழங்க வல்லது. அருள்கூர்ந்து இக்கோரிக்கைக்கு எவ்விதச் சாயமும் இட வேண்டா.

    அன்பர் குமரன், அன்பர் கண்ணபிரான் ஆகியோரின் தனித்தன்மை மிக்க பதிவுகளில் எப்போதும் ஆர்வம் காட்டுபவன் அடியேன்.

    மனம் வருந்துமாறு ஏதாவது கூறியிருந்தால் மன்னித்தருள்க


    || நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் ||


    தேவ்

    ReplyDelete
  137. ஒட்டு வாழைக் கன்றே ஆனாலும் வாழையைத் தான் ஈனும்!
    கிரந்தம் என்னும் கள்ளியை ஈனாது! கள்ளி வேலியோடு சரி!

    தேவ் ஐயா
    எதுக்கு மன்னிப்பு-ன்னு பெரிய சொல் எல்லாம் சொல்றீங்க?

    //இரவியாரின் பதிவில் சமணமே தமிழைத் தாங்கியது என்று
    சொன்னது மத அரசியல் சிந்தனைக்கு இடமளித்தது//

    சமண"மே" தமிழைத் தாங்கியது-ன்னு சொல்லலை!
    சமணமும் தமிழை"யே" தாங்கியது-ன்னு இருக்கு பதிவில்! பாருங்க!

    சங்கப் புலவர்கள், நாயன்மார், ஆழ்வார்-ன்னு ஒரு வரிசை சொல்லிட்டு, கூடவே சமணமும் சொன்னேன்!
    சமணம் தமிழ்ப் பணி செய்தது-ன்னு சொன்னா, சைவம் செய்யலை-ன்னு பொருள் எடுத்துக்கிட்டா எப்படி? ஒன்றைச் சொல்லும் போது, கூடவே எல்லாத்தையும் List போடணும்-ன்னு எதிர்பார்க்கக் கூடாது!

    //அருச்சனை இல்லங்களோடு நிற்கட்டும், ஆலயத்தில்
    வேண்டா என்றது மொழி அரசியலுக்கு இடமளித்தது//

    வடமொழி அர்ச்சனைக்கு தடை-ன்னு சொல்லலை!
    தமிழ்-ல்ல பண்ணும் போது மனத்தடை ஏற்படுது-ன்னு சொல்றவங்களுக்கு மட்டும் சொன்னது! இதோ, கீழே பாருங்க..சொன்ன வரிகளை

    >தமிழில் அர்ச்சனை பண்ணும் போது அதிர்வு வரல, மனத்தடை ஏற்படுது, சமஸ்கிருத அர்ச்சனையில் தான் எனக்கு லயிக்குது-ன்னா வீட்டிலேயே அர்ச்சனையை வச்சிக்கிட்டும்! :)<

    இது தான் உண்மை நிலவரம்! ஆனா பதிவைப் பதிவில் இருந்து படிக்காமல், அவரவர் மனத்தில் இருந்து படித்தால், இப்படித் தான் ஆகும்!
    விடுங்க! வருந்தற்க! நன்றி!!

    ReplyDelete
  138. //ஒட்டு வாழை கன்றை வைத்து ஹைப்ரிட் பனானாவை உருவாக்கலாம்.அதுவும் வாழைதான்.கள்ளி அல்ல:-)//

    குதிரையும் கழுதையும் சேர்ந்து ஒரு விலங்கு உருவாகிற்று, ஆனால் அது குதிரை அல்ல கோவேறு'கழுதை'
    :)

    ReplyDelete
  139. ரவிசங்கர்,

    வேற்றுமொழி புகுத்திக் கொள்ள மேலும் மேலும் வாய்ப்பளிக்காததால் தான் வடமொழி வழக்கொழிந்து அழிந்தது என்று எவரும் வாய்த்திருக்கக் காணூமே.
    :)

    ReplyDelete
  140. This comment has been removed by the author.

    ReplyDelete
  141. //ஜலகண்டேஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரினிவாச பெருமாள் கோயில் என ஸ்பெசிபிக்கா சொல்வதில்லையா?அதெல்லாம் தமிழ் வழக்கு இல்லையா?:-)//

    மீனாக்‌ஷி காமாக்க்ஷி ன்னு ஸ்ப(க)ஷ்டமாக ஒலிச்சாலும் எங்கவா வாய்க்கு வந்தபடி மீனாச்சி காமாச்சின்னு தான் சொல்லுவா. இதெல்லாம் தமிழ் இல்லேம்பேளா
    :)

    ReplyDelete
  142. //குதிரையும் கழுதையும் சேர்ந்து ஒரு விலங்கு உருவாகிற்று, ஆனால் அது குதிரை அல்ல கோவேறு'கழுதை:)//

    பொதி சுமக்க கோவேறு கழுதை தேவை என்பதால் தானே அதை உருவாக்கினார்கள்? குதிரை, கழுதை, கோவேறு கழுதை எல்லாமே ஒரு பண்ணையில் இருப்பதுதான் நல்லது:-)

    //மீனாக்‌ஷி காமாக்க்ஷி ன்னு ஸ்ப(க)ஷ்டமாக ஒலிச்சாலும் எங்கவா வாய்க்கு வந்தபடி மீனாச்சி காமாச்சின்னு தான் சொல்லுவா. இதெல்லாம் தமிழ் இல்லேம்பேளா
    :)//

    கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரிரங்கம் கோயில், ஜெயா டிவி, எம்ஜிஆர், முக ஸ்டாலின்னு இப்பல்லாம் யாரும் சொல்றதில்லையோ என்னவோ?:-)

    ReplyDelete
  143. அன்பர்களே,

    இந்த விவாதம் போதுமானது.
    அவரவர் தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
    அடியேனும் பதிவைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் மிகையாகச் சிலவற்றைச் சொல்லியிருக்கக் கூடாது. மன்னிக்க வேண்டும்.

    ஆன்மிகத்தில் இன, மொழிகள் இரண்டாம் பக்ஷம்.

    பெரும்புலியூர் அடிகள் பாகவத மஹிமை தெரிந்தவராய்
    இருந்ததால் திருமழிசைப் பிரானை வேள்விச்சாலைக்கு அழைத்து
    மரியாதை செய்தார்.

    மஹா பண்டிதர்கள் பலர் சுற்றிலும் இருந்தபோதிலும் மஹாத்மா
    வ்யாஸராயர் ஆடு மேய்த்த கனக தாஸரையே மதித்தார்; நேரம்
    வாய்த்தபோது அவரோடு உரையாடி மகிழ்ந்தார்.

    படானியரான ரஸகானைப்போல் க்ருஷ்ண பக்தியில் தோய்ந்து
    பாடல் எழுதியவர் யாரும் இல்லை. கோஸ்வாமிகள் அவருக்கு மிகுந்த
    மரியாதை அளித்து வந்தனர்.

    வடமொழியில் அருச்சனை செய்தால்தான் வீடுபேறு என்று எங்கும் கூறப்படவில்லை. நாம் மதிக்கும் பெரியவர்கள் ஆதரித்து வந்துள்ளதால் அதற்குரிய மரியாதை வேண்டும் எனக் கூறப்பட்டது.

    " என்பிலெள்கி நெஞ்சுருகி யுள்கனிந்தெ ழுந்ததோர்
    அன்பிலன்றி யாழியானை யாவர்காண வல்லரே "



    தேவ்

    ReplyDelete
  144. //பொதி சுமக்க கோவேறு கழுதை தேவை என்பதால் தானே அதை உருவாக்கினார்கள்? குதிரை, கழுதை, கோவேறு கழுதை எல்லாமே ஒரு பண்ணையில் இருப்பதுதான் நல்லது:-)//

    கோவேறு கழுதையை கொண்டாடுங்க, அழுக்கு துணி பொதி சுமக்க வையுங்க அது உங்கப்பாடு, ஆனால் நாங்களெல்லம சலவை எந்திரத்திற்கு மாறியது சரி என்கிறோம். நீங்கள் கழுதையை கட்டிக் கொண்டும், அழுக்குத்துணியை சலவை தொழிலாளி மட்டும் தான் துவைக்க வேண்டும் என்று அனைவருக்கு அறிவுரை வழங்காதீர்கள்.

    //கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரிரங்கம் கோயில், ஜெயா டிவி, எம்ஜிஆர், முக ஸ்டாலின்னு இப்பல்லாம் யாரும் சொல்றதில்லையோ என்னவோ?:-)//

    சென்னையில் கபாலிகோவில்னு தான் கைவண்டிக்காரன் சொல்லுவான், சீறீரங்கம், செயாடிவி, எம்சிஆர், முக ஸ்டாலின் செல்ல வராதவங்க கருணாநிதி மவன் என்று சொல்லுவதை தவறு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை

    ReplyDelete
  145. //ஆன்மிகத்தில் இன, மொழிகள் இரண்டாம் பக்ஷம்.
    //

    இதெல்லாம் உங்களைப் போன்று ஒரு சிலர் நம்பிக் கொண்டிருப்பதாகும், எந்த ஒரு சமூக அரசியலிலும் மதங்கள் இல்லாமல் இல்லை, அப்படியான மதங்களில் சாதி, மொழி அரசியல் இல்லாமல் இல்லை. மதம்சாராத ஆன்மிகவாதிகள் என்று எவருமே இல்லை, பிறகு ஆன்மிகத்தை பொதுவான ஒன்றாகக் காட்டுவீர்கள் ? ஆன்மிகத்தையும் மதத்தையும் பிரிக்க முடிந்தால் உங்கள் கூற்று உண்மையாக வாய்ப்புண்டு, ஆனால் அவற்றிற்கான நடைமுறை சாத்தியம் இல்லை, ஏனெனில் மதம் அரசியலையும், அரசியல் மதத்தையும் தான் உருவாக்கிறது அல்லது வளர்க்கிறது. அதிலிருந்து அறியப்படும் ஆன்மிகம் மட்டும் மதச் சார்பற்றோ அரசியல் சார்பற்றோ இருக்குமா ?
    :)

    ReplyDelete
  146. //நீங்கள் கழுதையை கட்டிக் கொண்டும், அழுக்குத்துணியை சலவை தொழிலாளி மட்டும் தான் துவைக்க வேண்டும் என்று அனைவருக்கு அறிவுரை வழங்காதீர்கள்.//

    இதுமாதிரிதான் விவாதிப்பீர்கள் என்றால் அதை தொடர்வதில் அர்த்தம் இல்லை.

    குட் பை

    ReplyDelete
  147. தேவ் ஐயா,
    வணக்கம். உங்கள் கருத்துகளைப் படித்து மிகவும் மகிழ்வுற்றேன்.

    ReplyDelete
    Replies
    1. இனம் இனத்தைப் பார்த்து மகிழ்வுறுவதில் "ஆச்சர்யம்" ஒன்னுமில்லையே!:)))

      Delete
  148. ரவி,
    கொஞ்ச காலம் கழித்து வந்து எனது சில எண்ணங்களைத் தெரிவிக்கலாம் என்று காத்து இருந்தேன். :-)
    விவாதம் செய்ய விருப்பமில்லை. :-)

    1) சங்ககாலப் பாடல்கள்/பாசுரங்கள்/பதிகங்கள்
    இவை ஒரு கட்டமைப்பிற்குள் அமைபவை. பாடல் ஆசிரியர்கள் காவிய இலக்கணக் கட்டமைப்புடன் விதிகளை மீறாமல் எழுதியிருப்பார்கள். இலக்கண விதிகளின்படி அமைந்துள்ள இவற்றுள் கிரந்த எழுத்துகளைக் காண்பது அரிது.

    இன்றையத் தேதியில் பாடல் ஆசிரியர்கள் மரபினை ஒட்டி கிரந்தம் கலக்காமல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது மிகவும் நன்றாகப் புரிகிறது.

    ஆனால் உரைநடையில், பேச்சுத் தமிழில் இத்தகைய விதிகளை பயில்வோம் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    சமீப காலத்தில் வாழ்ந்த பாரதி, புதுமைப் பித்தன், கல்கி, முதல் இன்றைக்கு இலக்கிய ரசனையுடன் தன் கதை, கட்டுரைகளுக்குத் தலைப்பிடும் நாஞ்சில் நாடன் வரை உரைநடை எழுத்தாளர்கள் விதிமுறைகளைத் தளர்த்திக் கொண்டு எழுதியிருக்கிறார்கள்/எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    (continued)

    ReplyDelete
  149. (continued)
    2) பாடல்களில் வடமொழிப் பயன்பாடு.
    ஆழ்வார்கள், நாயன்மார்கள் கம்பன், பாரதி அனைவரும் வடமொழிப் பயன்பாட்டை அறவே தவிர்த்தார்கள் என்றில்லை.
    சனகன், பரமபுருடன், புருடோத்தமன், இலக்குவன், வீடணன் என்று பொதுவாக நம் அனைவருக்கும் தெரிந்த பெயர்ச்சொல் எடுத்துக்காட்டுகளை விட்டுவிடுவோம்.

    பரமேஷ்டின் - 'பரமேட்டி' என்று வரும். (திவ்ய பிரபந்தம், திருப்பல்லாண்டு)
    அவப்ருத: - 'அவபிரதம்' (திருப்பள்ளி எழுச்சி)

    ReplyDelete
  150. (continued)
    கஷ்டம் - 'கட்டம்' என்றாகிவிடும்.

    "இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
    எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்;
    கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்;
    'கடல்வண்ணா ! கடியைகாண்' என்னும்;
    'வட்டவாய் நேமி வலங்கையா!' என்னும்
    'வந்திடாய்' என்றென்றே மயங்கும்,
    சிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய்...."
    (திருவாய்மொழி 7-2-4)

    இங்கே ஆழ்வார் கட்டம் என்பதற்கு பதிலாக துன்பம் என்று பிரயோகம் செய்திருந்தால் பாடல் இலக்கண விதிகளை மீறிவிடும் என்பது கண்கூடு.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம் -ன்னு பயன்படுத்தவில்லை அல்லவா?
      கட்டம் -ன்னு தானே எழுதறாரு! ஒப்புக் கொண்டமைக்கு நன்றி!

      தொல்காப்பிய இலக்கணம் தான்!
      வடசொற் கிளவி, "வட எழுத்து ஒரீஇ"

      அதை ஆழ்வார் மதிக்கறாரு! ஆழ்வார் பேரைச் சொல்லிக்கிட்டுத் திரியும் நீங்க தான் மதிப்பதில்லை!:((

      Delete
  151. (continued)
    விஷம் - விடம்
    "கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன நாளும்
    கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்;
    விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
    தடமுடை வயல்சூழ் அனந்த புரநகர் புகுதும் இன்றே." (திருவாய்மொழி - 10.2.1)

    இங்கே விடமுடை என்பதற்கு பதிலாக நஞ்சுடை அரவில் என்று இருந்திருக்கலாம். இலக்கண விதிகளை மீறிவிடும் என்பது கண்கூடு.

    ReplyDelete
  152. (continued)
    சிற்சில இடங்களில் எதுகை மோனை விதிகளுக்கு அல்லாமல் வேறு ஏதோ காரணம் பற்றிக் கூட வடமொழிப் பயன்பாட்டினைக் காணலாம். ஒரு உதாரணம்:

    "அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
    ....
    எம்மை சன்ம சன்மாந்தரம் காப்பரே."
    (திருவாய்மொழி - 3-7-6)
    இங்கே "பிறவிதொறும் காப்பரே" என்றோ, வேறு சொற்றொடர் அமைத்தோ ஆழ்வார் அருளியிருக்கலாம்.

    ஆழ்வார்கள் "ஸ்ரீநிவாசா", "ஹ்ருஷீகேசா" என்று பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் "சிரீதரன்" (திருவாய்மொழி 2-7-9), "இருடீகேசனே" (திருவாய்மொழி 2-7-9) என்று பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    கம்பனிலும் ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன.

    ReplyDelete
  153. (continued)
    சரி. இந்த மாதிரியான பயன்பாடுகளில், சொற்கள் வடமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு வந்தனவா அல்லது தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்றனவா என்பது ஆய்விற்கு உரிய விஷயம்.தீவிர தமிழ் ஆதரவாளர்கள் அனைத்தும் தமிழில் இருந்து வடமொழிக்கு சென்றது என்று பேசுவர். தீவிர வடமொழி ஆதரவாளர்கள் வடமொழியில் இருந்து தான் தமிழ் உருவானது என்று பேசுவர். இதனுள் செல்ல விருப்பமில்லை.

    மேலே காட்டியுள்ள சொற்கள் வடமொழி இல்லை என்று வைத்துக் கொண்டாலும் வடமொழிச் சாயல் இருப்பதை மறுக்க முடியாது. எனக்கு தெரிந்த தூயத் தமிழ் கட்சி நண்பர்கள் இவ்வாறான பயன்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் என்பர்.

    இது போன்ற பயன்பாடுகளை, பாசுரங்கள், பதிகங்கள் என்றில்லை...சமீப காலத்து பாரதி வரை தங்கள் பாடல்களில் பாடலாசிரியர்கள் தயங்காமல் வழங்கியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  154. ஆக இவ்விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு என்னவெனில்:
    1) பாடல்களில் கிரந்தம் கலவாமல் இருப்பது (நான் பாடல் என்று ஏதாவது எழுதினால்... :-))
    2) உரைநடையில் பாரதியைப் பின்பற்றுவதில் தவறில்லை. (கிரந்தம் கலப்பதில் தடையில்லை)
    3) பேசும்போது யதார்த்தமாகப் பேசுவது.
    "கந்தர் சஷ்டி கவசம்" என்று சொல்வேனேயொழிய "கந்தர் சட்டி கவசம்" என்று சொல்ல விருப்பமில்லை. :-)
    4) கிரந்தம் கலப்பதால் அல்லது வடமொழி சாயல் இருக்கும் தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்று நம்பவில்லை.
    முற்றும். :-)))

    ReplyDelete
    Replies
    1. ஒங்களுக்குத் தான் ரெண்டுமே "கண்ணு" ஆச்சே!

      தன் வீட்டுப் பெண்டாட்டியும் = ஒரு கண்ணு
      அடுத்தவன் வீட்டுப் பெண்டாட்டியும் = ஒரு கண்ணு

      அடுத்தவன் வீட்டுப் பெண்டாட்டி, சொந்தப் பெண்டாட்டியிடம் "தன் சம்பிரதாயங்களைத்" திணிக்கலாம்!
      ஆனா, சொந்தப் பெண்டாட்டி, அடுத்தவன் பெண்டாட்டி வீட்டில், ஒன்னும் பேச முடியாது; அடக்கி வாசிக்கணும்!

      (சம்ஸ்கிருத மொழி இலக்கணத்தில் நிரல்-நிறை அலங்கரணம் -ன்னு இருக்கா என்ன?
      இங்கு மட்டுமே ஏகதேஸ உருவகம்-ன்னு இருக்கணும்! ஒருபுடை உருவகம்-ன்னு சொல்லக் கூடாது)

      //ஆக இவ்விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு என்னவெனில்://

      தங்கள் "மஹா நியாயத்துக்கும்", நிலைப்பாட்டுக்கும்.. என் வந்தனம்! தன்யோஸ்மி! நன்றி!

      Delete
  155. //செல்வன் said...
    //நீங்கள் கழுதையை கட்டிக் கொண்டும், அழுக்குத்துணியை சலவை தொழிலாளி மட்டும் தான் துவைக்க வேண்டும் என்று அனைவருக்கு அறிவுரை வழங்காதீர்கள்.//

    இதுமாதிரிதான் விவாதிப்பீர்கள் என்றால் அதை தொடர்வதில் அர்த்தம் இல்லை.

    குட் பை//

    நல்லது, கே ஆர் எஸ் விடாக்கண்டன்களுக்காக இந்த பதிவை இட வில்லை என்றே நான் நினைக்கிறேன், வடமொழி மந்திரம் தான் 'அதிரும்' என்று நினைப்புடையவர்கள் பலர் தமிழுக்கு மாறி இருக்கிறார்கள், காரணம் எடுத்துச் சொல்லுவோர் இருந்ததால் தான், மாற்றிக் கொள்ளாதவர்கள் பற்றிக்கவலை இல்லை.

    எனெக்கென்ன கவலையும் வியப்பும் என்னவென்றால் 'தமிழ் தூய்மை பற்றிய அக்கறையற்றோர்' தங்கள் கருத்துகளை தமிழில் வந்து சொல்லுகிறார்களே என்று தான்.

    ReplyDelete
  156. அனைவருக்கு நன்றி!!!

    முடிப்பாக....
    இந்தப் பதிவை இட்டதால் எனக்கு விளைந்த "அறிவு" இதோ:)

    1. ஆன்மீகம் "பேசுபவர்கள்" தான், தமிழிலே கிரந்தம் கலக்க, பெரிதும் உதவுகின்றனர்!

    2. ஏன்னா, அவர்களுக்கு வடமொழி மேல ஒரு லேசான கீறல் கூட வரக்கூடாது! அப்படி வராத அளவில், தமிழை"யும்" ஆதரிப்பார்கள்!

    3. இவர்களுக்கு, ஆன்மிகம் மட்டும் தான் துறை! ஆனால் இந்தத் துறைக்கு வெளியே பல துறைகள் இருப்பது பற்றிக் கவலையில்லை!
    மொழி வளத் துறை, பண்பாட்டுத் தொன்மம், மக்கள் ஆளுமை வளர்ச்சி, பசிப் பிணி போக்கல்-ன்னு நிறைய இருக்கு!
    ஆனா அது எல்லாம், "ஆன்மீகத்தோடு" ஒட்டி அமைஞ்சா மட்டுமே, இவர்களுக்கு ஏலும்!

    4. ஸ்ரீரங்கம் கோயில்ல, பெருமாள் பக்கத்துல புத்தரையோ, இயேசு பிரானையோ வைங்க! அப்போ பதறுவாங்க! சர்வ சமயப் பிரார்த்தனை எல்லாம் ஓக்கே தான்! நாங்களும் பண்ணறோம்! ஆனா அது அது, அதனதன் இடத்திலே இருக்கட்டுமே-ன்னு இதே வாய் பேசும்!
    ஆனா கிரந்தம்-ன்னு வரும் போது மட்டும், ரெண்டுமே ரெண்டு கண்ணு!ஒன்னா இருக்கலாம், தப்பே இல்ல-ன்னு சாதிக்கும்!:)

    5. "புதிய சொற்கள் வருவது இயற்கையே! அந்தச் சொற்கள் தமிழ்ச் சொல்லாவே இருக்கணும்-ன்னு அவசியம் இல்ல! தமிழ்ச் சொல் அழிஞ்சி, கிரந்தம் அந்த இடத்தைப் பிடிச்சிக்கிட்டாலும், அதுவும் தமிழ் தான்"-ன்னு பேசுவாங்க!
    ஆனால்...ஒருத்தர் தன் பிள்ளைக்கு 'ஆயுஸ்'-ன்னு பேரு வச்சா, அப்போ மட்டும் 'ஆயுஷ்'-ன்னு திருத்த ஓடியாருவாங்க! அட அவருக்கு அப்படித் தான் எழுதப் பிடிச்சிருக்கு-மக்கள் விருப்பம்-ப்பா!

    என்னுடன் சாட்டில் உரையாடும் கல்லூரிப் பெண்கள் சிலர்...ore kashtam என்பதை ஸ்டைலாக ore kushtam-ன்னு எழுதுவார்கள்!
    அப்போ மட்டும் மக்கள் ஸ்டைல் கண்ணுக்குத் தெரியது! ஹைய்யோ, குஷ்டம்-ன்னு எழுதிக் கெடுக்கறா-ன்னு அதே வாய் பேசும்!:))

    இப்படியாக...இது போன்ற சொல்லொன்று செயலொன்று ஆட்களையும் மீறித் தான், மொழிவள மேம்பாட்டுக்கு, முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கு! இவர்கட்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்!

    ReplyDelete
  157. பதிவின் சாரம், மறுபடியும் ஓரிரு வரிகளில்!

    1. கிரந்தம் is not untouchable! It is needed for research and specific areas!
    துறை சார்ந்த வேதப் படிப்பு, கல்வெட்டு, வியாக்யான மரபு, இஸ்லாமிய சமயநூல் ஆய்வு - இதற்கெல்லாம் தேவையே!

    2. ஆனால் துறை சார்ந்தது, அத்துறையில் மட்டுமே! பொதுப் பயன்பாட்டில், தமிழர்கள், அதிக அளவில் தமிழ்ச் சொற்களைப் புழங்குதல் நலம் தரும்!

    கஷ்டம் என்ற சொல் ஒரு நூற்றாண்டு காலமாகப் பழக்கமாகி விட்டு இருக்கலாம்! அதை உடனே விட்டுவிட முடியாது! சரியே!
    ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, நாம் கடினம், கடினம் என்று பலர் முன்னிலையில் புழங்கிக் கொண்டே இருந்தால், அடுத்த நூற்றாண்டில், இதே கடினம் பழக்கமாகி விடும்! நம்ம "கஷ்டம்" போய்விடும்!:)

    3. கந்தர் சஷ்டியை, கந்த சட்டி-ன்னு உச்சரிக்கச் சொல்லலை!
    => சஷ்டி=சட்டி & ஜட்டி=சட்டி
    => So சஷ்டி=ஜட்டி
    -ன்னு இங்கே யாரும் Formula போடலை:)

    சஷ்டி=துறை சார்ந்த சொல்! = ஆறாம் நாள்-ன்னு பொருள்!
    அதுல கை வைக்கலை! அதை அப்படியே "ஜாதகத்தில்" சொல்லிக்கோங்க!

    ஆனா, பொதுப் பயன்பாட்டில், தமிழ்ச் சொல்லு ஒன்னு ஏற்கனவே இருக்கு=ஆவணம்-ன்னு! அது இருக்க, தஸ்தாவேஜ்-ன்னு சொல்வதைக் "குறைத்து" கொள்வோம் என்பது மட்டுமே இங்கே பதிவில் முன்மொழிந்தது!


    4. ஆனா "லந்து" அடிப்பதையே வாடிக்கையாகக் கொண்ட சில "கிரந்தான்மீக" உள்ளங்கள்...
    * இசுடாலின்-ன்னு எழுதச் சொல்றாங்கோ
    * சஷ்டியை, சட்டி-ன்னு எப்படிச் சொல்றது?
    -ன்னு விதம் விதமாக் கெளப்பிக்கிட்டே இருக்கும்! குட்டை குழம்பி இருந்தால் தானே வசதி?

    "துறை சார்ந்த"-ன்னு சொல்லிய பிறகும் கூட, "பெயர்ச் சொல்"-ன்னு சொல்லிய பிறகும் கூட...
    வேணும்-ன்னே, இசுடாலின்-ன்னு எழுதச் சொல்றாங்க தமிழ் ஆர்வலர்கள்-ன்னு ஒரு Hype உருவாக்குதிலேயே குறியாக இருப்பார்கள்!

    இப்படி Hype உருவாக்கினா, தமிழ் ஆர்வலர்கள் சொல்லுற மத்த நல்ல சேதியெல்லாம் தானா அடிபட்டுப் போயீரும் பாருங்க! இது காலங்காலமா சமயப் போர்வை போர்த்திக்கிட்டு, பெரியவா பண்ணுற டெக்னீக் :))

    5. உரைநடை, பேச்சுத் தமிழில் எல்லாம் "இலக்கணம்" புகுத்தச் சொல்லவில்லை!
    கிரந்தத் தவிர்ப்பு <> இலக்கணம்!

    பொதுப் பயன்பாட்டில் கிரந்தம் தவிர் என்பது, ஏதோ இலக்கண விதிக்காக அல்ல! மொழிவளமும் சொல்லும் குன்றாது இருக்க வேண்டும் என்பதற்காகவே!


    கஷ்டம் கஷ்டம்-ன்னே எழுதிக்கிட்டு இருந்தா தமிழ் செத்துறாது! ஒத்துக்கறேன்!
    ஆனா, கடினம் கடினம்-ன்னு பழகப் பழக, மொழிவளம், அந்த மொழிக்குச் சொந்தமான மக்களிடத்திலேயே காக்கப்படும்!

    மதறாஸ் மதறாஸ்-ன்னு ஒருகாலம் முழுக்கச் சொல்லிக்கிட்டுத் தான் இருந்தோம்! உடனே விட்டுற முடியாது தான்!
    ஆனா இன்னிக்கி 95% மக்கள் அதை விட்டு, சென்னை-ன்னு புழங்கத் துவங்கியாச்சு!


    இதுல என்ன பெருசா லாபம்? பேரு மாத்தின ஒடனே பசி, பிணி எல்லாம் போயிருச்சா? இல்லை!
    ஆனால் ஒரு இனம் வாழும் ஊர், அந்த இனத்துக்கான விழுமியத்தில் இருப்பதே சிறப்பு!

    அதே போல், பொதுப் பயன்பாட்டுச் சொற்களை, முடிந்த அளவில், "பலர் அறிய" புழங்கிக் கொண்டே இருப்போம்! மதறாஸ் போனது போல், கஷ்டமும்-சந்தோஷமும் போய், "மகிழ்ச்சி" நிலைபெறும்!

    ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ரா போன்ற எழுத்தாளர்களும் அவ்வப்போது இப்படித் தமிழ்ச் சொல் பேணுகிறார்கள்! அவர்கள் கிரந்தம் கலந்து எழுதினாலும், நல்ல தமிழ்ச் சொற்களும் கூடவே பேணுகிறார்கள்!
    பொதுப் பயன்பாட்டில், சென்னை-ன்னு புழங்கப் புழங்க, நாளடைவில் எழுத்தாளர்களும் மாறிக் கொள்வார்கள்! நாம் புழங்கிக் கொண்டே இருப்போம்!

    "பலர் அறிய" புழங்குவோம்! = "நாடும் நகரமும் நன்கறிய" நமோ நாராயணாய என்று-ன்னு தான் அதே ஆழ்வாரும் சொல்லுகிறார்!

    கிரந்தம், அதன் துறைகளில் வாழ்க!
    தமிழ்நாட்டில், தமிழ் வாழ்க!

    ReplyDelete
  158. //ஸ்ரீரங்கம் கோயில்ல, பெருமாள் பக்கத்துல புத்தரையோ, இயேசு பிரானையோ வைங்க!
    //
    மிகவும் வரவேற்பேன். :-)

    ReplyDelete
  159. ////ஸ்ரீரங்கம் கோயில்ல, பெருமாள் பக்கத்துல புத்தரையோ, இயேசு பிரானையோ வைங்க!
    //

    பெருமாளுக்கு பதிலாவே வெக்கலாம். அதனால் பெருமாளுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை:-)

    ReplyDelete
  160. //பெருமாளுக்கு பதிலாவே வெக்கலாம். அதனால் பெருமாளுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை:-)//

    பெருமாளுக்கு ஏது இழப்பு? அவர் பல்லாண்டு பல்லாண்டு!

    ஆனா, இதை இங்கிட்டு பேசிய கிரந்தக் கட்சிக்காரா ஒத்துப்பாங்களா?
    சும்மாச் சிரிப்பான் பின்னூட்டம் வேணா நீங்க போடலாம்!
    ஆனா அது என்னிக்கும் நடவாது! அதுக்கு ஒரு இராமானுசர் தான் வரணும் = துலுக்கா நாச்சியாரைக் கண்ணன் காலடியில் வைக்க!

    அரங்கனையே எடுத்துட்டு இயேசுநாதரை வைங்க-ன்னு சொல்லிப் பாருங்களேன்! இல்ல பக்கத்துச் சன்னிதியில் வைங்க-ன்னாச்சும் சொல்லுங்க!
    அப்போ வரும், நீங்க எங்களுக்குச் சொன்ன = கிரந்தப் பழமை (கோயில் தொன்மம்), ஆகம விதி (இலக்கண விதி) :))

    அப்போ விதியின் பக்கமும், இலக்கணம் பக்கமும் நின்று உரையாடுவீர்கள்!:))

    ReplyDelete
  161. //3. கந்தர் சஷ்டியை, கந்த சட்டி-ன்னு உச்சரிக்கச் சொல்லலை! //

    நீங்கள் சொன்னாலும் சொல்லாவிடிலும் ஈழவர்கள் 'கந்த சட்டி' என்றே சொல்லுகிறார்கள், எனக்கு தெரிந்து யோகன் பாரிஸ் ஐயா கூட இப்படித்தான் சொல்லுவார்.
    :)

    ReplyDelete
  162. //பெருமாளுக்கு ஏது இழப்பு? அவர் பல்லாண்டு பல்லாண்டு!//

    நிறைய இடங்களில் பெருமாள் படுத்திருக்கும் கோலமும் புத்தர் படுத்திருக்கும் கோலமும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

    புத்தர் சிலை இருந்த இடங்களில் தானே இப்ப பிள்ளையார் மற்றும் :)

    ReplyDelete
  163. //அரங்கனையே எடுத்துட்டு இயேசுநாதரை வைங்க-ன்னு சொல்லிப் பாருங்களேன்! இல்ல பக்கத்துச் சன்னிதியில் வைங்க-ன்னாச்சும் சொல்லுங்க!
    அப்போ வரும், நீங்க எங்களுக்குச் சொன்ன = கிரந்தப் பழமை (கோயில் தொன்மம்), ஆகம விதி (இலக்கண விதி) :)) //

    பெத்லகேம் நேடிவிட்டி சர்ச்சில் திருவரங்கன் சிலையை வைக்க அனுமதித்தால், திருவரங்கத்தில் ஏசு சிலையை நாங்கள் எல்லோரும் சேர்ந்து பிரதிஷ்டை செய்கிறோம்.

    அதே போல ஆங்கிலத்தில் சொற்கலப்பும், எழுத்து கலப்பும் நடந்ததால் தமிழிலும் நடக்கலாம் என நீங்கள் அனுமதி தருவீர்களா?:-)

    ReplyDelete
  164. //* சஷ்டியை, சட்டி-ன்னு எப்படிச் சொல்றது?//

    வேட்டியை வேஷ்டியாக்கியப் பிறகு நிறைய பேர் வேஷ்டி தான் சரி என்று நினைக்கிறார்கள்.
    :)

    ReplyDelete
  165. //அதே போல ஆங்கிலத்தில் சொற்கலப்பும், எழுத்து கலப்பும் நடந்ததால் தமிழிலும் நடக்கலாம் என நீங்கள் அனுமதி தருவீர்களா?:-)//

    திசைச் சொற்கலப்பு, குறிப்பாக பெயர், இடம் குறித்த பெயர்ச் சொற்கள் காலம் காலமாக தமிழில் பின்பற்றப்பட்டுதான் வருகிறது. ஆனால் அவற்றில் கிருந்தக் கலப்பு கிடையாது.

    இங்கிலாண்ட் - இங்கிலாந்து
    ஜெர்மனி - செருமானி
    ஆஸ்த்ரேலியா - ஆசுரேலியா

    ReplyDelete
  166. கோவி.கண்ணன் ஐயா,
    நான் ஈழத்தில் வாழ்ந்து இருந்தால், கந்த சட்டி கவசம் என்றே சொல்லுவேன். நான் வாழும் பகுதியில் "சஷ்டி கவசம்" என்றே சொல்கிறார்கள். அதனால் நானும் அப்படியே சொல்ல விரும்புகிறேன். இதைத் தான் 'யதார்த்தமாகப் பேசுவேன்' என்று குறிப்பிட்டேன்.
    திடீரென எங்கள் ஊரில் எல்லோரும் "சஷ்டி கவசம்" என்பதில் கிரந்த நீக்கம் செய்து பேச ஆரம்பித்தால் நானும் அவ்வாறு பேச ஆரம்பித்துவிடுவேன். நான் பேசுவது அடுத்தவருக்கு எளிதாகப் புரிய வேண்டும். அவ்வளவு தான் என்னுடைய நிலைப்பாடு.
    எனக்கு தமிழ் அல்லது வடமொழி அல்லது எந்த ஒரு மொழி மீதும் தனிப்பட்ட விருப்போ வெறுப்போ இல்லை.

    ரவி,
    ஆயுஸ் என்று யாராவது தங்கள் குழந்தைக்கு பேர் வைத்தால் அதில் எல்லாம் குற்றம் குறை கண்டுபிடிக்க மாட்டேன். :-)
    அப்புறம், எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. தமிழ் உரைநடை என்று பார்த்தால் பாரதி, கல்கி போன்றோர் நடையை பின்பற்ற விரும்புகிறேன். இரண்டையும் இணைத்து என் நண்பர்கள் சிலர் என்னை ஆன்மீகவாதி என்று நினைத்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். :-)

    ReplyDelete
  167. //பெத்லகேம் நேடிவிட்டி சர்ச்சில் திருவரங்கன் சிலையை வைக்க அனுமதித்தால், திருவரங்கத்தில் ஏசு சிலையை நாங்கள் எல்லோரும் சேர்ந்து பிரதிஷ்டை செய்கிறோம்.

    அதே போல ஆங்கிலத்தில் சொற்கலப்பும், எழுத்து கலப்பும் நடந்ததால் தமிழிலும் நடக்கலாம் என நீங்கள் அனுமதி தருவீர்களா?:-)//

    நீ அவல் கொண்டு வா
    நான் உமி கொண்டு வரேன்
    ரெண்டு பேரும் ஊதி ஊதித் திங்கலாம்! :)) Nice Deal! :)

    ReplyDelete
  168. //நீ அவல் கொண்டு வா
    நான் உமி கொண்டு வரேன்
    ரெண்டு பேரும் ஊதி ஊதித் திங்கலாம்! :)) Nice Deal! :)//

    யார் உமி? யார் நெல்? பெருமாளா புத்தரா ஏசுவா?:-)

    ReplyDelete
  169. //ரவி,
    ஆயுஸ் என்று யாராவது தங்கள் குழந்தைக்கு பேர் வைத்தால் அதில் எல்லாம் குற்றம் குறை கண்டுபிடிக்க மாட்டேன். :-)//

    ராதா, நீ நல்லவன் :)
    ஆனா எல்லாருமே உன்னைப் போலவே இருப்பதில்லையே! மொழிவள உணர்வாளர்கள், ஒருத்தரை மட்டும் கணக்கில் எடுத்துக்கிட்டு செயல்பட முடியாதே! அதான் "பெரும்பான்மை" வழிமுறை! :)
    -----------------------

    ஒரு சுவையான கதை:
    ஒரு கிரந்த-சமஸ்கிருத நிபுணரிடம், ஆழ்வார் பாடிய தமிழ் அருளிச் செயலைப் பாடிக் காட்டினாள் ஒருத்தி! = "பத்தர் ஆவியை, நித்திலத் தொத்தினை..."

    "என்ன பேரு இது, பத்தர் ஆவி, பரிசுத்த ஆவி-ன்னுக்கிட்டு? பக்தர்-ங்கிறதே சமஸ்கிருத வார்த்தை தான்! அதைப் பத்தர்-ன்னு மாத்திட்டா தமிழ் ஆயிருமா?"

    "ஐயா, அப்படிச் சொல்லாதீக! இது ஆழ்வாரின் ஈரத் தமிழ்! அவர் பாடியதால், கோயில்-ல பேரையே = பத்தராவிப் பெருமாள்-ன்னு மாத்தி வச்சிக்கிட்டான்!"

    "அதெல்லாம் கதை! தென்னாட்டில் இருந்து சொன்னா நாங்க நம்பீருவோமா? அது பத்தர் ஆவி அல்ல! = பக்தஜீவனன்!
    பக்தாளை உஜ்ஜீவிக்கிறவன்! அதனால் பக்தஜீவனன் என்பதே சிரேஷ்டமா இருக்கும்!"

    என்ன பேசறது இவரு கிட்ட போயி? கோயில்/மட/கலாச்சார அதிகாரம் அவரு கிட்ட தானே இருக்கு?
    அந்தப் பெண்...ஆழ்வாரின் ஈரத் தமிழிலே அழத் துவங்கினாள் = பத்தர் ஆவியை, நித்திலத் தொத்தினை...

    ReplyDelete
    Replies
    1. இக்கதை ஈடு விரிவுரைகளில் உள்ளதா ?
      எந்த இடத்தில் ?

      Delete
    2. ஈட்டில் இல்லை!
      முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் பொழிவுகளில் கேட்கவும்/ காணவும்

      Delete
  170. கிரந்தப் பெரியவா...க்ஷேத்திராடனாமாப் பொறப்பட்டு...தென்னகம் வருகிறார்...

    திருவேங்கட மாமலை! சுவாமி புஷ்கரிணி என்னும் கோனேரி! எவனோ ஒரு ஏழை விவசாயி குளிச்சிக்கிட்டு இருக்கான்! இவரு சற்று ஓரமாத் தள்ளிப் போயி, மூக்கைப் பிடிச்சி, சந்தியாவந்தனம் பண்ணத் தொடங்கறாரு!

    அந்த வெவசாயி திடீர்-ன்னு கத்தறான்! = கோயிந்தா, கோயிந்தா!

    "யப்பா, போன முறை வந்து கோயிந்தா-ன்னு கத்தி உன்னைப் பாத்துட்டு போனேன்! இன்னி வரைக்கும் என் குடும்பமும் நானும் நல்லா இருக்கோம்!
    அதே போல இப்பவும் பாத்துட்டுப் போறேன்! கோயிந்தா! அடுத்த முறை வர வரைக்கும், அதே போல நல்லபடியா வச்சிக்கோப்பா..."

    அச்சுதாய நம
    அனந்தாய நம
    கோவிந்தாய நம
    -ன்னு சொல்றவருக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சி! ஓடனே, ஓடியே போனாரு! "அடேய் பயலே...அது கோயிந்தா இல்லை! கோ+விந்தா = பசுக்களைக் காப்பவன்-ன்னு தேவ பாஷையான சம்ஸ்கிருதத்திலே பொருள்! அதை இப்படிச் சீரழிச்சிட்டியே! கோவிந்தா-ன்னு சொல்லுறா"-ன்னு "திருத்தி" வுட்டாரு!

    அவன் பயந்தே போயிட்டான்! பெரியவா, பண்டிதராச்சே! கோவிந்தா-ன்னு திருத்திச் சொல்லிட்டு, ஓடியே போயிட்டான்...பெருமாளைப் பார்க்க!

    இவரு சந்தி எல்லாம் முடிச்சிட்டு போறத்துக்குள்ள, மதியம் கதவைச் சாத்திட்டாங்க! (அந்தக் காலம்)
    அவனோ தரிசனம் முடிஞ்சி ஆனந்தம் பொங்க வெளிய வரான்! எதோ புதையல் கண்ட திருப்தி அவன் மூஞ்சில! நம்ம கிரந்தப் பெரியவாளும் அதைப் பார்க்கத் தவறவில்லை!

    மடத்துக்கு வந்து குட்டித் தூக்கம் போட்டா...ஒரு கனவு!
    "டேய் கிரந்தப் பயலே! அவன் சரியாத் தானடாச் சொன்னான், ஒன்னை எவன் திருத்தச் சொன்னது? ரொம்ப சமஸ்கிருதப் புலி-ன்னு நினைப்போ?

    அவன் சொன்னது தேவ பாஷையில்ல ஓய்! தேனினும் இனிய மாத்ரு பாஷை! தாய் மொழி! தமிழ் மொழி!
    கோ+இந்தா = கடவுள்+இதோ

    உம்ம வேதத்தில் கடவுளைப் பார்க்க முடியாது, கேட்க முடியாது-ன்னு சொல்லி வச்சிருக்கே...(மாம்து வேதா-ந கஷ்சன)
    இவனோ கடவுள்+இந்தா-ன்னு காட்டியே குடுக்கிறான்! அதைப் போயி கெடுத்தீரே! என்ன புண்ணியம் ஐயா உமக்கு?

    அன்று...பத்தர்-ஆவிப் பெருமாளையே திருத்திய சம்ஸ்கிருதப் புலியே...
    இன்னிக்கு நீரும் பத்தராவியே கோயிந்தா-ன்னு சொல்லும்! அப்போ தான் உமக்குத் தரிசனம்!
    இல்லீன்னா வேதம் சொன்ன வழியில், ந-கஷ்சன-ன்னு என்னைப் பார்க்காமலேயே போம்!"

    அலறி அடிச்சிக்கிட்டு எழுந்தாரு நம்ம கிரந்தப் பெரியவா...அவர் வாயாலேயே...ஏதோ மந்திரிச்சி விட்டாப் போல...
    பத்தர் ஆவியே கோ+இந்தா
    பத்தர் ஆவியே கோ+இந்தா

    ReplyDelete
  171. You posted this on July 28 2011.....

    ட்விட்டருக்கு வர்ற வரைக்கும் இந்த கிரந்தம் பத்தி தெரியாம எம்பாட்டுக்கு எழுதிக்கிட்டு தான் இருந்தேன் கிரந்தம் தவிர்த்து....,

    ஆனா ஒரு சந்தேகத்தை கொளுத்தி விட்டது பாருங்க...!! இதோ இன்னிக்கி சற்றேறக்குறைய 300 நாள் கழிச்சி ஒரு கமெண்ட்டு போட வேண்டிய நிலைமை..!

    நானு பன்னாண்டாப்புத்தேன்.., அதுக்கு மேல படிக்க வசதியில்லே.. கிடைச்ச வேலைக்கி வந்து சேந்தாச்சி.

    இங்கே வந்த பினாலேதேன் தெரிது நாம எழுதாத எழுத்தெல்லாம் எழுதிக்கிட்டு அப்புறம் அது வேணாம்னு சொல்லிக்கிட்டு பண்றேகூத்தேல்லாம்.

    மொழி என்கிறதே.., ஒர்த்தன் சொல்றத மத்தவன் புரிஞ்சிக்கணும்னு தான்.. ! புரிஞ்சிக்கிற மாதிரி எழுதினா மொழி அழிஞசுருமா..!! அடப்போங்கையா...!

    ReplyDelete
  172. ட்விட்டருக்கு வர்ற வரைக்கும் இந்த கிரந்தம் பத்தி தெரியாம எம்பாட்டுக்கு எழுதிக்கிட்டு தான் இருந்தேன் கிரந்தம் தவிர்த்து...., ஆனா ஒரு சந்தேகத்தை கொளுத்தி விட்டது பாருங்க...!! இதோ இன்னிக்கி சற்றேறக்குறைய 300 நாள் கழிச்சி ஒரு கமெண்ட்டு போட வேண்டிய நிலைமை..!

    நானு பன்னாண்டாப்புத்தேன்.., அதுக்கு மேல படிக்க வசதியில்லே.. கிடைச்ச வேலைக்கி வந்து சேந்தாச்சி. இங்கே வந்த பினாலேதேன் தெரிது நாம எழுதாத எழுத்தெல்லாம் எழுதிக்கிட்டு அப்புறம் அது வேணாம்னு சொல்லிக்கிட்டு பண்றேகூத்தேல்லாம்.

    மொழி என்கிறதே.., ஒர்த்தன் சொல்றத மத்தவன் புரிஞ்சிக்கணும்னு தான்.. ! புரிஞ்சிக்கிற மாதிரி எழுதினா மொழி அழிஞசுருமா..!! அடப்போங்கையா...!

    ReplyDelete
  173. அருமையான நறுக் பதிவு! அறிவுள்ளவர்களுக்குக் கண்டிப்பாகப் புரியும்! ஆனால், நீங்கள் தொடர்ந்து எழுதாமல் இருக்கிறீர்களே ஏன்? நான் அவ்வப்பொழுது வந்து ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஞானப்பிரகாசன் ஐயா
      முன்பு போல் பந்தலில் எழுத முடியாத வண்ணம் முருகன் வைத்துள்ளான்;
      அதனால் என்ன?
      தினம் ஒரு சங்கத் தமிழ் (Dosa) -ன்னு இங்கிட்டு எழுதிக்கிட்டுத் தான் இருக்கேன்;
      http://dosa365.wordpress.com

      Delete
  174. >>>ஆங்கிலம் எல்லாமும் ஏற்றுக் கொள்வதில்லை! <<<

    IPA
    http://www.langsci.ucl.ac.uk/ipa/ipachart.html

    ITRANS,IAST,Harvard - Kyoto, ISO

    இவற்றில் ஆங்கில எழுத்துரு இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. தேவ் ஐயா
      முடிப்பாக ஒன்று சொல்லிக் கொள்ளட்டுமா?
      தங்களை மதிப்பவன் என்ற முறையில்...

      தங்கள் இருமொழிப் புலமை அனைவரும் அறிந்ததே!
      ஆயின், சம்ஸ்கிருதத்துக்கு முட்டுக் குடுக்க, இத்தனை ஆர்வமுடன் எழுதி உள்ளீர்கள்! நன்று!

      காப்பியம் = தமிழே!
      காவ்யா (எ) சம்ஸ்கிருதச் சொல் மூலம் அன்று!
      விட்டால் இலக்கணம் = இலக்ஷணம்
      ..என்று பழைய காஞ்சிப் பெரியவர் சொன்னது போல் சொல்வீர்கள் போல இருக்கே:)

      எனக்கும் வடமொழிப் பனுவல்கள் மீது ஆர்வம் உண்டு/ வாசிப்பு உண்டு என்பதையும் அறிவீர்கள்! வடமொழியை வெறுப்பவன் அல்லன்;

      சம்ஸ்கிருதம், தனித்து வளர்ந்து கொள்வதில், "ஆட்சேபணை" ஏதும் இல்லை!
      ஆனால், இன்னொன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு, வளர நினைப்பது தான் பெரும் தவறு! Parasite!

      மொழிகளுக்கு இடையில் குடுக்கல்-வாங்கல் தப்பே இல்லை!
      ஆனால் அது மரியாதையுடன் கூடிய குடுக்கல்-வாங்கலாக இருக்கணும்; ஒன்றின் தொன்மச் சொல்லையெல்லாம் அழித்து/சிதைத்து அல்ல!

      பாலி மொழி, போர்த்துகீசியம், உருது, யவனச் சொல்லெல்லாம் கூடத் தமிழில் இருக்கு!
      ஆனால் அவை யாவும் புறத்தளவில் தான், மரியாதையுடன்!
      அடிப்படைத் தமிழைச் சிதைக்கவும் இல்லை! தமிழ் இலக்கணத்திலேயே ஏறி உட்கார்ந்து கொள்ளவும் இல்லை!

      *வடமொழி இலக்கணத்தில் நிரல்-நிறை அலங்கரணம் -ன்னு இருக்கா என்ன?
      *தமிழில் மட்டும் ஏன் "ஏகதேஸ" உருவக அணி?
      சாதாரண குடுக்கல் வாங்கல் போய், அடிப்படை இலக்கணத்திலேயே கை வைக்கும் துணிவு யார் குடுத்தது? தமிழிலக்கணத்திலேயே ஏக்-தோ-தீன்?

      இவ்வளவு பேசுகிறீர்களே...
      * வடமொழி ஓசைகளை, தமிழிலும் அப்படியே புழங்க வேண்டும், அதற்கு கிரந்தம் உதவும்/ மொழி வளர்ச்சி-ன்னு!
      * தமிழ் ஓசைகளை, ஏன் சம்ஸ்கிருதத்தில் அப்படியே புழங்கக் கூடாது? எதுக்கு தமிழை->த்ரமிட (திராவிட) -ன்னு ஆக்கியது வடமொழி?

      நெஞ்சில் உள்ள எம்பெருமான் மீது கை வைத்துச் சொல்லுங்கள்!
      -----------

      * ழ/ற -ஓசைகளுக்குத் "கிரந்தத்-தமிழி" ன்னு ஒன்னை புதுசா உருவாக்குவோம்!
      * அதைச் சம்ஸ்கிருதத்தில் நுழைத்து, அங்கு இலக்கணத்திலும் நுழைத்து வைப்போம்!
      * ஆங்கிலத்திலும் ழ ஓசை தேவை! Letz create a new alphabet in English too!
      என்ன சொல்றீங்க?

      மொழி வளர்ச்சி - தேங்கீறக் கூடாது, சரி தான்!
      * ஆனா அதுக்கு, உலகெங்கும் பரவி விட்ட ஆங்கிலத்தோடு மட்டும் உடன்பாடு போதும், தமிழுக்கு!
      * செத்த மொழியான சம்ஸ்கிருதத்தோடு உடன்பாடு தேவையில்லை தமிழுக்கு; பிணத்தைக் கூடி என்ன? கூடாவிட்டால் தான் என்ன?

      மன்னிக்கவும் கடுமையான சொற்களுக்கு!
      ஞானத் தமிழ் புரிந்த நான்!

      Delete
  175. தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தின் வழிநூல்.

    >>> * தமிழ் ஓசைகளை, ஏன் சம்ஸ்கிருதத்தில் அப்படியே புழங்கக் கூடாது? எதுக்கு தமிழை->த்ரமிட (திராவிட) -ன்னு ஆக்கியது வடமொழி? <<<

    நாகர எழுத்துருவில் ’எ, ஒ, ழ’ சேர்க்கப்பட்டன. Damila எனும் பயன்பாடும்
    இருந்துள்ளது. நாமும் பாகதம்,சங்கதம்னுதான் சொல்லி வருகிறோம்.ஏன்
    அப்படி ஆக்கினீர்கள்னு யாரும் கேட்கவில்லை.

    >>> ஆங்கிலத்திலும் ழ ஓசை தேவை! Letz create a new alphabet in English too!
    என்ன சொல்றீங்க? <<<

    ISO இடமளித்துள்ளது.

    சென்னை அகராதியில் சொற்கள் பலவற்றின் மூலம்
    சங்கதமன்று என்று சொல்லிவருகிறேன்.
    புலமையை வெளிக்காட்டுவது நோக்கமன்று.

    ’திவ்ய’ தமிழா ?

    திருப்பாவை ஆலயத்தில் முதன்மை பெற்றதால்தானே
    நீங்களே இந்த அளவு பேசமுடிகிறது? ரகசிய நூல்களிலும்
    முக்கியமான இடங்களில் அதை முன்னிறுத்திப்
    பேசுவதைக் காண்கிறோம். இதைத்தானே
    வேறொரு தளத்துக்கு உயர்த்தும் முயற்சி எனக்
    கூறினேன். உங்கள் கருத்தை ஒட்டிப்பேசினாலும்
    ஏன் மறுக்க வேண்டும் ?

    ReplyDelete
    Replies
    1. //நாகர எழுத்துருவில் ’எ, ஒ, ழ’ சேர்க்கப்பட்டன//

      சும்மா ஒப்புக்கு?? எப்படிச் சமாளிக்கிறீர்கள்! நேரடி பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
      மூலமான தமிழில் கை வைத்தது போல்,
      மூலமான தேவநாகரியில் "ழ" உண்டா? இல்லை தானே!
      http://en.wikipedia.org/wiki/Devanagari

      இங்கு மக்கள் மேல், கிரந்தம் கலந்தது போல்
      வடக்கில், மக்கள் மேல், "ழ" கலந்ததா? ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்!

      //நாமும் பாகதம்,சங்கதம்னுதான் சொல்லி வருகிறோம்.ஏன் அப்படி ஆக்கினீர்கள்னு யாரும் கேட்கவில்லை//

      அடாடா..
      சங்கதம் -ன்னு சொல்லுறதெல்லாம் அறிஞராகிய நீங்க தான்; பொதுமக்கள் வழக்கிலே சமஸ்கிருதம் தான்! பூஜைக்குரிய மஹா மொழி-ன்னு மதத்தைக் கொண்டல்லவா பரப்பப்பட்டது?
      இன்றும் தமிழக ஆலயங்களில் அதுவே முதல் மொழி; தமிழ் சற்றுப் பிந்தியே!

      உடனே வைணவத்தில் அப்படி இல்லையே என்று சொல்லாதீர்கள்! சைவத்தில் அப்படித் தானே இருக்கு?
      தில்லையில், அம்பலத்துக்கும் கீழே நின்று, விதியே என்று சடங்கு நேரத்தில் மட்டுமே ஓதுவார் ஓத முடியும்! அதுவும் அரசாணையால்! மனம் உவந்து அல்ல!

      //ISO இடமளித்துள்ளது//

      ISO ஒரு Standards நிறுவனம்! அதனால் எல்லாம் ஆங்கில எழுத்து வரிசையில் ழ போய் உட்கார்ந்து விட முடியாது!
      ஆனால், இங்கு, தமிழில், ஜ, ஷ, ஸ, ஹ உட்கார்ந்து கொண்டு தானே இருக்கு, பள்ளிப் பாடப் புத்தகத்திலேயே?

      //திவ்ய’ தமிழா ?//

      திவ்வியப் பிரபந்தம் தமிழ் அன்று!
      ஆழ்வார் அருளிச் செயல் என்பதே தமிழ்!

      தமிழைப் பரப்ப வேண்டுமே என்று, அதற்கு "திவ்ய" முன்னொட்டு கொடுத்து, ஆலயத்துள்ளே வெற்றிகரமாக நுழைத்தார்கள் வைணவப் பெரியவர்கள்!
      வெறுமனே தமிழ் என்றால் உள்ளே விட்டு விடுவீர்களா? சம்ஸ்கிருதப் போர்வை போர்த்தி அல்லவா நுழைக்க முடிந்தது??

      //திருப்பாவை ஆலயத்தில் முதன்மை பெற்றதால்தானே நீங்களே இந்த அளவு பேசமுடிகிறது?//

      ஆம்!
      ஆனால், அதற்கு வடமொழியின் உதவி ஒன்றும் இல்லை!
      அது, ஒரு சாராரின் (வைணவச் சான்றோரின்), தந்திரமான உழைப்பு மட்டுமே! அதனால் தமிழ் உள்ளே நுழைய முடிந்தது! கிரந்தத்தின் "தயாள குணத்தால்" அல்ல!

      //உங்கள் கருத்தை ஒட்டிப்பேசினாலும் ஏன் மறுக்க வேண்டும் ?//

      நீங்கள் என் கருத்தை ஒட்டிப் பேசவில்லை!
      வெட்டிப் பேசினாலும் தவறில்லை!

      உங்கள் நிலைப்பாடு: சம்ஸ்கிருதத்தோடு கூடிய தமிழ்!
      என் நிலைப்பாடு: சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்கிருதம்! தமிழில் தமிழ் மட்டுமே!
      No Parasites eating away the wealth of Tamizh, like a slow poison!

      Delete
  176. ஹரே க்ருஷ்ண இயக்க வெளியீடுகள் ஆங்கில எழுத்துக்களைச்
    சங்கத வழியில் பதிப்பிக்கின்றனர்; அதற்கு மறுப்பில்லை.
    திருமுறை தற்போது கிரந்தம் உள்ளிட்ட எல்லா எழுத்துருக்களிலும்
    வாசித்தறியும் நிலை பெற்றுள்ளது.வளர்ச்சி எனும் கண்ணோட்டமே
    முக்கியம்.செத்த மொழியென்று சங்கதத்தை ஒதுக்கினால் திருமந்திரத்தின்
    நுட்பமான பகுதியையும் ஒதுக்க நேரும்.ஆன்மிக ஈர்ப்புடைய நீங்கள்
    இவ்வாறு சொல்வது வியப்பளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //ஹரே க்ருஷ்ண இயக்க வெளியீடுகள் ஆங்கில எழுத்துக்களைச் சங்கத வழியில் பதிப்பிக்கின்றனர்//

      பதிப்பிக்கட்டுமே! அவர்கள் மூலமான ஆங்கிலத்தில் கை வைக்கவில்லையே! ஆங்கிலக் குழந்தைகள் எல்லாம் சங்கதம் கலந்த ஆங்கிலத்தைப் பாடப் புத்தகத்தில் வச்சிப் படிக்கறாங்களா என்ன?
      ஆனா தமிழில்? கிரந்தம் கலந்து Official ஆக்கி, வெற்றியும் பெற்று விட்டீர்களே? அப்பறம் என்ன?

      //சங்கதத்தை ஒதுக்கினால் திருமந்திரத்தின் நுட்பமான பகுதியையும் ஒதுக்க நேரும்//

      பரவாயில்லை! ஒதுங்கட்டும்!
      திருமந்திரத்தில் உள்ள கருத்துக்காக, மொத்த தமிழையும் அடகு வைக்க முடியாது!

      மேலும், நீங்கள் சொன்னது போல், திருமந்திரம் படிக்கச் சங்கத அறிவு தேவையில்லை!
      Only Sanskrit "concepts" may be needed, not Sanskrit "language"!

      //ஆன்மிக ஈர்ப்புடைய நீங்கள்
      இவ்வாறு சொல்வது வியப்பளிக்கிறது//

      ஆன்மீகமாவது, கோன்மீகமாவது?
      அத்தனையும் தமிழுக்கு அடுத்தே!

      எந்தை திருமாலோ, என்னவன் முருகனோ = முக்கியமல்ல!
      தமிழ்க் குடிகளின் தமிழ்த் தொன்மமே முக்கியம் = தமிழ் நலமே "பிரதானம்"!
      -------------------

      Delete

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP