Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Wednesday, June 05, 2013

கருணாநிதியின் "English" புத்தகம் - Tale of the Anklet!

அதாகப்பட்டது.... கலைஞருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் -ன்னு Blogger Draft-இல் எழுதி வச்சேன்; ஆனா...

"குமரி நீ; இமயம் நீ - மூன்று குமரி மணந்த சமயம் நீ" -ன்னுல்லாம் என்னால "கிவியரங்கம்" பாட முடியாது:)
காதல் முருகனையே, நான் அப்பிடியெல்லாம் புகழ்ந்து பாடினது கிடையாது; என் இரத்தத்துல அப்பிடியொரு haemoglobin இல்லை:)
அதனால்... ஒரு நாள் கழிச்சி, இந்த வாழ்த்துப் பதிவு;

"என்னாது? கலைஞர் English-லல்லாம் புத்தகம் எழுதுனாரா"? -ன்னு ஒங்க மூக்கு மேல Mouse வைக்காதீக;
= Tale of the Anklet & One Act Plays - Muthuvel Karunanithi - Macmillan Publishers (1968)

இந்த நூலுக்கு, அறிஞர் அண்ணா அளித்த, அழகான ஆங்கில அணிந்துரை; அதன் ஒரு பகுதி கீழே: (படம் புடிச்சித் தான் போட முடிந்தது; Image, not text)



சென்னை - 2 ஆம் உலகத் தமிழ் மாநாடு (1968) ....


கலைஞர் தமிழில் எழுதிய "பூம்புகார்" நூலின் ஆங்கில ஆக்கத்தை, வெளிநாட்டு விருந்தினர்க்கு அளிக்க ஒரு முயற்சி நடந்தது;
அப்போ வெளி வந்ததே, இந்தப் புத்தகம் = Tale of the Anklet, translated by டாக்டர். ந. சஞ்சீவி.

இதெல்லாம் நடந்தது, நான் பொறப்பதுக்கும் முன்னால..
ஆனா... டாக்டர் சஞ்சீவியின் பேரன், நான் படிச்ச பள்ளியில் தான் படிச்சான்;
வகுப்பில் என் தமிழ் உரையாடல்களைக் கண்டு பயந்துட்டானோ என்னமோ?:) என் மேல கொஞ்சம் அதிக பாசம் அவனுக்கு:)

கலைஞர், நினைவொப்பம் (autograph) இட்டு... அவன் தாத்தாவுக்கு அளித்த நூல்!
= அதைக் கொண்டாந்து, எனக்குப் பரிசாக் குடுத்துட்டான்;


இன்னும் நல்லா நினைவிருக்கு; அந்தப் புத்தகத்தின் Layout & Print Aesthetics!
அருமையான சிலப்பதிகார ஓவியங்கள்...
Export Quality என்ற அளவுக்குச் செஞ்சிருப்பாங்க!

அதில் இருந்து தான், இன்றைய பதிவின் கருப்பொருள்
= இளங்கோவின் சிலப்பதிகாரத்திலே, மு.கருணாநிதி செய்த "மாற்றங்கள்"!


kovalan - madhavi
1. கிரேக்க வாணிகன்: Kalaignar's Dagaldi:)

கோவலன், "அந்தச்" சுகம் வேண்டி, மாதவியின் இல்லத்துக்குப் போகலையாம் = சொல்வது கலைஞர்:)

மன்னன் கொடுத்த மாலையை, 1008 கழஞ்சுக்கு, வயதான ஒரு கிரேக்க வாணிகன், ஏலம் பேசுகிறான்;
இனி, மாதவி அக் கிழவனின் கையில்! மாதவி அழுகிறாள்!
அந்தக் கிரேக்க வணிகனிடம் இருந்து காக்கவே, அதை விட அதிகமான தொகை கூறி, மாதவிக்கு "விடுதலை" பெற்றுத் தருகிறான் கோவலன்;

மற்றபடி, கோவலனுக்கு ஆசையெல்லாம் இல்லை:)
= இதுவே கலைஞரின் சித்திரம்;

ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
மாதவி ஏலத்துக்கே வரவில்லை; அவள் தாய் சித்திராபதி தான், ஒரு கூனியிடம் மாலையைக் குடுத்து அனுப்புறா; No Greek Merchant at all;
வீதியில் இதைக் கண்ட கோவலன், மாதவியின் ஆடல் மயக்கத்திலே, தானே வலிந்து 1008 கழஞ்சு குடுக்கிறான்; கூனியோடு, மாதவி இல்லம் புகுகின்றான்;

இந்த “முன்-ஏற்பாடு”ல்லாம் அறியாத மாதவி, வீட்டுக்கு வந்த "பெருமகன்" கோவலனின் இசையிலே, உடனேயே "காதல்" கொண்டு விடுகிறாள்;
மாதவியின் குணநலன் = உயர்வே!
பரத்தையே ஆயினும், இவள் கற்பு நெறியுள்ள "இல்-பரத்தையே";

* கற்பு = உடல் சார்ந்தது அல்ல!
* கற்பு = மனம் சார்ந்தது, ஆண், பெண் இருவருக்கும்!

அதான், தமிழின் தலைக் காப்பியங்கள் இரண்டுமே,"பரத்தை"யைத் தலைவியாக வைக்கும் "துணிவு"
* சிலம்பிலே: பரத்தை= கதையின் 2ஆம் தலைவி
* மணிமேகலையில்:  Illegitimate Child= தலைவி

இளங்கோவே, இயல்பை, இயல்பாத் தான் சொல்லி இருக்காரு; அதை எதுக்குக் கலைஞர் மாத்தி, கோவலன் மேல் "புனிதம்" ஏத்தினாரோ? "ஆண்டவனுக்குத்" தான் வெளிச்சம்:)


kovalan-kaNNagi
2. கண்ணகி தான், கோவலனை, மாதவி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்: Kalaignar's Dagaldi:)

கலைஞர் சொல்வது:
 "விடுதலை" பெற்றுத் தந்த பின், கோவலன் விடை பெற்றுக் கொள்ள...
மாதவி, கோவலன் நினைவாகவே இருக்கிறாள்; (மணமானவன் என்று அறியாள் போலும்)

அதனால், கண்ணகியே - "நல்லாள் ; கலை வல்லாள் - அவளுக்குப் புரியும் படிச் சொல்லி விட்டு வாருங்களேன்"  -ன்னு அனுப்புகிறாள்;
"அறிவுரை" கூறச் சென்றவன், தெரியாமல் "கலையுரை"யில் கரைந்து விட்டான்:)

ஆனால், இளங்கோ சொல்வது என்ன?
கோவலனே ஆசையில் வலிந்து செல்கிறான்; பின்பு வலிந்து பிரிகிறான்;

விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
... மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
....
கோவலன் வாங்கி, கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி - தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன்

மாதவி (எ) நங்கை நல்லாள்;
அவ பாடும் காவேரிப் பாட்டில் கூட ”உள்ளர்த்தம்” தேடினால், பாவம், அவ என்ன தான் பண்ணுவா? அன்பைப் புரிந்து கொள்ள இயலாத ஆணாதிக்கம்:(


3. பொற்கொல்லன் = நல்லவன்: Kalaignar's Dagaldi:)

பொற்கொல்லன் ஒருவனின் செய்கையால், மொத்த பொற்கொல்லர் சமுதாயமே பழியைச் சுமக்கணுமா?
தற்கால நோக்கில்... பொற்கொல்லர் சாதி (விசுவகர்மா) என்று குறிப்பு கலைஞரின் கண்ணுக்குப் படுகிறது போலும்;

ஆதலால், யாரோ ஓர் அரண்மனைக் காவலாளி, சிலம்பு திருடினான்-ன்னு மாற்றம் செய்யறாரு கலைஞர்; பரவாயில்லை, இதை மன்னிச்சி விட்டுறலாம்:)

ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
வஞ்சிப் பத்தனான பொற்கொல்லனே வஞ்ச மனத்தான்;
(பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி..
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்)

இன்னொரு "கொடுமை" பிற்பாடு நடக்கிறது;
இறந்த பாண்டியனின் தம்பி, வெற்றிவேற் செழியன் மன்னன் ஆகிறான்;
நாட்டில் மழை இல்லை;
"பத்தினித் தெய்வ சாபம்"-ன்னு, அந்தண மறையோர் சொல்லச் "சாந்தி" செய்கிறான்; என்ன சடங்கு? = 1000 பொற்கொல்லரைப் பலி குடுத்தல்:(

இதை இளங்கோவடிகள் சொல்லலை;
யாரோ சாஸ்திர/ சம்பிரதாயக்காராள், இப்படிச் "சாந்தி ஹோமம்" -ன்னு எழுதி, "உரைபெறு கட்டுரை" -ன்னு பேரு கொடுத்து, சிலம்புக்கு முன்னுரை போல் "சொருகி" விட்டார்கள்:(

அடப் பாவிங்களா! அதான் கண்ணகியே, "தென்னவன் தீதிலன்; என் தந்தை போல்" -ன்னு பிற்பாடு சொல்லுறாளே; அப்பறம் என்னய்யா பரிகாரம்/ ஹோமம்?
இதைத் துடைக்கத் தானோ என்னவோ, "பொற்கொல்லன் நல்லவன்" -ன்னு கலைஞர் மாத்தினாரோ? நான் அறியேன்;


4. சிலம்பிலே = முத்தா? மாணிக்கமா?

இளங்கோ காட்டும் காட்சி:
அரசியின் சிலம்பைக் கொணரச் செய்து,  தருக எனத் தந்து, அத்தனை பேரின் முன்னேயும் உடைக்க...
முதல் உடைப்பிலேயே மாணிக்கப் பரல்கள் தெறிக்கின்றன; Instant! தலை கவிழ்ந்த மன்னன், தலை நிமிரவே இல்லை:(

"தருக எனத் தந்து, தன் முன் வைப்ப, 
கண்ணகி அணி மணிக் , காற்சிலம்பு உடைப்ப 
மன்னவன் வாய் முதல், தெறித்தது மணியே...
யானோ அரசன்? யானே கள்வன்!

கலைஞர் சொல்வதோ: முத்துப் பரல்கள் முதலில் தெறிக்க.. "பார்த்தாயா, என்னமோ பெருசா பேசினியே"? என்று பாண்டியன் பரிகாசம் செய்ய....
பாவம் கண்ணகி; "ஒன் பொண்டாட்டியின் அடுத்த சிலம்பையும் உடை" -ன்னு விடாப்பிடியா வாதாடுறா; அடுத்த உடைப்பில் தான் மாணிக்கம் தெறிக்குது!

"இன்னும் உன் சந்தேகம் தீரலையா? இதோ பார், என் கையிலிருக்கும் இன்னொரு சிலம்பும் உடைக்கிறேன்"
-ன்னு ”கலைஞரின் கண்ணகி” உடைக்க, அதிலும், மாணிக்கமே தெறிக்கிறது!
------------

பாண்டியன், இப்படியெல்லாம் வாதாடுறவனா? = அல்லவே! அப்படி வாதாடி இருந்தா, தன்னை Easy-ஆ காப்பாத்திக்கிட்டு இருக்கலாம்;
கலைஞரைப் போல்... மலிவு விலை மதுவுக்கு, பக்கத்து மாநிலப் புள்ளி விவரமெல்லாம் குடுத்து escape ஆவது போல்:)

கன்றிய கள்வன் கையது ஆகின், 
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ என

Pls to Note: ஆகின் is the keyword! "கள்வனா இருந்தான் **ஆகில்**, "கொன்று கொணர்க" -ன்னு தான் சொன்னேன்;
என் படைவீரன் சரியா விசாரிக்கலை; அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"
- இப்படியெல்லாம் பாண்டியன் வாதாடலை;
- மாணிக்கம் தெறிச்ச மாத்திரத்தில் மானமும் தெறிச்சிப் போயிருச்சி அவனுக்கு:(

(On the spot killing = Not in Justice!
விசாரிப்பது அரசவையின் வேலை; படைவீரன் வேலையல்ல -ன்னு பாண்டியன் மனசாட்சிக்குத் தெரியும், இளங்கோவுக்கும் தெரியும்; கலைஞருக்கு?:))
------------

* ஆக, இளங்கோ உடைத்தது = ஒரு சிலம்பே! (Instant)
* ஆனால் கலைஞர் உடைத்தது = மூன்று சிலம்பு:)

அப்போ, நாலாவது சிலம்பு எங்கே?
= அது பொற் கொல்லன் வீட்டில் இருக்கலாம்; யாருக்குத் தெரியும்? நாடகக் காப்பியம் போற வேகத்தில், அதையெல்லாம் இளங்கோ காட்டலை;

ஆனால், கலைஞர், அந்த நாலாவது சிலம்பையும் விட்டு வைக்கலை;
கணக்கு வழக்குல கெட்டிகாரரு ஆச்சே!:)
அரண்மனைக் காவலன் மேல் பழி போட்டவரு, அரண்மனை எரியும் போது, அவன் மாட்டிக் கொள்ள..அவனோடு, அவன் களவாடிய சிலம்பும் எரிந்து விடுவதாகக் காட்டுறாரு!




5. முலை:
ஆற்றொணாத் துயரத்தால், முலை மேல் அடிச்சி, திருகினாள் -ன்னு இளங்கோவின் சித்திரம்;

அந்த முலையைக் காட்டித் தானே, முதல் இரவில், அவள் வெட்கம் போக்கினான் அவன்?
அவளையும் மீறி விடைத்த இன்பப் பொதிகள்; நாணத்தில் தயங்கினாலும், மனசுக்குள் "அடர்த்தியான" ஆசைகள் அவளுக்கும்! (தயங்கு-"இணர்க்  "கோதை)

But, முலையை எறிந்ததால் தான், தீ பரவியது-ன்னு "பகுத்தறிவு அற்ற” தோற்றம் வந்துறக் கூடாது-ன்னு ...
கண்ணகியின் கையில், தீப் பந்தம் குடுத்து, பத்த வச்சிட்டார் கலைஞர்:)

ஆனா, அந்தப் பேதை, அரசியலில் Bus-க்கு தீ வைப்பது போலெல்லாம் வைக்கலை:)
ஐயோ பாவம், கண்ணகி! மெய்த்தமிழ் "தரவு" இல்லாம கலைஞர் பண்ணின கூத்து இது:(

பெரும் துன்பத்தில் மாரில் அடிச்சிக்கிட்டு அழுவது வழக்கம் தான்;
அப்படித் தான் அவ முலையை விட்டா-திருகுறா!
ஆனா, அதனாலெல்லாம் தீ பரவலை! இளங்கோ சொல்வது என்ன?

இட முலை கையால் திருகி, மதுரை...
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி, 
பாய் எரி இந்தப் பதி ஊட்ட, பண்டே ஓர் 
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு? என்ன-

"வானவன்" தோன்றி, பண்டை ஊழ் காரணமாகத்... தீ பரவுகிறது;
அட! யார்  இந்த "வானவன்"?
= அது வானில் இருந்து மண்ணில் விழுந்த எரி நட்சத்திரமோ/வேற ஏதோ...
= அதுவொரு நாடக உத்தி; "அறம் பாடும்" இயற்கைச் சீற்றம்! அம்புட்டு தான்;

அப்போ கூட, பித்து ஏறிய கண்ணகி...
"நன் மகளிர், சான்றோர், பிள்ளைகள், வாயில்லா விலங்குகள் தவிர்த்து,
இந்த அரசியலின் தீமைக்கு உடன்பட்டோர் மட்டுமே அழியட்டும்"-ன்னு,
ஆற்றாமையால், வெறுமனே "சூளுரை" தான் செய்யுறா = "தீத் திறத்தார் பக்கமே சேர்க"

அவ பத்தவும் வைக்கல; மதுரை நகரமும், ஒரேயடியா சாம்பல் ஆயிடலை!
அறவோர் இடங்கள் தவிர்த்து,
அரண்மனை/ மறவர் பகுதி மட்டுமே எரிந்தது! (வான் நிகழ்வு)

அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது, 
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட

*முலையில் அடிச்சது வேறு (ஆற்றாமையால்)
*வானம் மூலமாத் தீ பரவியது வேறு;

இதை இளங்கோவே தெளிவாக் காட்டும் போது... கலைஞர் ஏன் தான் = public property damage, அவ கையில் தீப்பந்தம் குடுத்தாரோ? ஐயகோ!:(

Anna has rightly said in his preface = //some, may look like even "unwanted"//


கலைஞரே,
கடைசீல, ஒம்ம கிட்டேயும் "தரவு" கேக்க வச்சிட்டீயளே என்னைய?:)
இதே, மகா வித்துவான் சாம்பசிவ ஐயர், இப்படியெல்லாம் சிலப்பதிகாரத்தை மாத்தினாச் சும்மா விடுவோமா?
அதே நியாயம் தானே நமக்கும்?? முருகா!

ஈழத்தில் ஆடிய நாடகம் போதாதென்று,
சிலம்பு (எ) நாடகத்திலேயே, நாடகம் ஆடினா எப்படி?:(

அது சமயப் பிடிப்போ (அ) பகுத்தறிவோ...
சுய பிடித்தங்களைக் கடந்து...
தரவு மட்டுமே கைக்கொண்டு..
"தமிழைத் தமிழாய் அணுகும்" பழக்கம் என்று தான் நமக்கு வருமோ?

இருப்பினும்...
தமிழுக்கு ஓரளவேனும் உழைத்த கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)

References:1. A Concise History of South India - Dr. Naboru Karshima, President - IATR (International Association of Tamizh Research)
2. சிலப்பதிகாரம்: அடியார்க்கு நல்லார் உரைநூல்
3. சிலப்பதிகாரம்: அரங்கேற்றுக் காதை ஆராய்ச்சி, Dr. ஷாஜகான் கனி
Read more »

Sunday, October 21, 2007

புதிரா? புனிதமா?? - சிலப்பதிகாரம்!

வடைகளைச் சுட்டுடலாமா? :-) கீழே விடைகள் Bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள் பின்னூட்டங்களில்!
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

நமக்கே உரிய நம் தமிழக இலக்கியங்களில் நாம் ஆர்வம் காட்டினால் தான், அடுத்த தலைமுறைக்கு தமிழ் நயம் பாராட்டல் கொஞ்சமாவது மிஞ்சும்!
நாக இளங்கோவன், அவருடைய சிலம்பு மடல்கள் பற்றிப் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்! நன்றாக இருக்கு! உரை நடையில் இருப்பதால், படிக்க எளிதாகவும் இருக்கு! ஆங்காங்கே முக்கியமான பாடல்களை கொடுத்து, உரைநடையும் செய்யுளுமாய் வளைய வருகிறது! தவறாமல் படிங்க!! இதோ சுட்டி!

வெற்றியாளர்கள் யாவர்? (முதலிலேயே சரியாகச் சொன்னவர்கள் வரிசையில்.....)
வரலாறு.காம் - கமல், கெக்கேபிக்குணி, குமரன், ஜி.ராகவன், அனந்த லோகநாதன்


பரிசு? - சிலம்பு?
கழட்டிக் கொடுத்து கட்டுப்படியாவாது!
சுழட்டிச் சுழட்டிச் சிலம்பாட்டம் ஆட வேணும்னா சொல்லிக் கொடுக்கலாம் :-) வூட்டாண்ட வாங்க! சொல்லித் தாரேன்!

இதோ...முழு சிலப்பதிகாரக் கதையும்...ஈசியா புரியற மாதிரி...சிற்பங்களில் வடித்து வைத்துள்ளார்கள்! சிற்பத்தின் புகைப்படம் - பக்கத்திலேயே அதன் கதை! இது எங்கு இருக்கு? பூம்புகார் கூடத்தில் தான்!
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆர்வம் மற்றும் முயற்சியால் உருவான கலைக் கூடம்! நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தளத்தில் உள்ள சுட்டி இது! இதோ பரிசு! க்ளிக்கோங்க!!

அடுத்த புதிரா புனிதமாவில் - வழக்கம் போல் கேள்விகளா இல்லாமல், ஒரு மாற்றம் இருக்கப் போவுது!




ஆதி காவியம்-னு இராமாயணத்தை வடமொழியில் குறிப்பிடுவாங்க! ஆனா நம் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை முதற் காப்பியம் என்று அறியப் பெறுவது சிலப்பதிகாரம் தான்!

மற்ற கதைகளை எல்லாம் அறிந்துள்ள நாம், நம் பண்பாட்டுக் காப்பியமான
சிலப்பதிகாரத்தை அதே அளவுக்கு அறிந்துள்ளோமா? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு அதில் ஏதாச்சும் கதைகள் இருக்கா? அப்படியே இருந்தாலும், நமக்குத் தெரிஞ்சா தானே குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதற்கு!

மூச்சுக்கு முந்நூறு முறை, தமிழ் தழைக்க வேண்டும் என்று குரல் கொடுக்குறோம். ஆனா நம்முடைய தமிழ்க் காப்பியங்களை நாமே முழுதும் அறிந்து வைத்துள்ளோமா? இல்லை அறியத் தான் முயற்சிகள் செய்துள்ளோமா?......
இல்லை, அறிந்த பின், அதன் கதையைத் தமிழுலகுக்கு மேலும் எடுத்துச் சொல்ல எண்ணியுள்ளோமா?

எனக்கு சிலப்பதிகாரத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியதே கல்லூரியில் தான். சக மாணவர் ஒருவர் அதைச் சிலப்பதி"ஹாரம்" என்று சொல்லி கொஞ்சம் டகால்டி பண்ண, அப்போது கோபம் வந்து படிக்கத் துவங்கினேன் :-)

வள்ளுவர் அறம்-அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்!
ஆனால் எளிய மக்களும் அதைத் தொடர்புபடுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர் இளங்கோ!

கண்ணகியைப் பொழைக்கத் தெரியாதவள், "புனித பிம்பம்" என்று இக்காலத்தில் ஒரு சொல்லில் அடக்கி, கேலி பேசலாம் சிலர்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?


இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்?
1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்.

2. அதுவும் ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் சாதாரண குடிமக்கள்.
அரசனைப் பாடாது, அன்புடையாரையும் அடியவரையும் பாடும் பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.

3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்! குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண்,
நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" வேண்டும்! அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து! எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது!

4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம். ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்.

கேள்வி கேட்டாலே போதும், வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! :-)
அது ராமாயணம் ஆகட்டும் சரி, சிலப்பதிகாரம் ஆகட்டும் சரி... நெறிகளைத் தாங்கிப் பிடிக்காது, ஆட்களை மட்டுமே தாங்கிப் பிடிப்பது என்பதில் ஆத்திகம்-நாத்திகம் கூட கை கோர்த்துக் கொள்வது தான் வேடிக்கை!

5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று இளங்கோ, மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன?
குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!

காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்;
கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள்.(அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க :-)

6. இளங்கோ, தான் சமணர் ஆக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய வளம் பற்றியும் மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்". அதனால் தான் போலும், பாரதி "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான்.

நெஞ்சை அள்ளும் சிலம்பில் எத்தனை முத்துக்கள், மாணிக்கங்கள் நமக்குத் தெரியும்-னு பாக்கலாம், வாரீங்களா?
இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-) சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு இளங்கோவடிகள்!

1

பாண்டியனிடம், தன் தந்தையார் பெயரைக் குறிப்பிடாமல், கணவனின் தந்தையார் பெயரைத் தான் குறிப்பிட்டுச் சொல்கிறாள் கண்ணகி. ஆனால் அவள் தந்தையாரின் பெயர் என்ன?

1


அ) மாசாத்துவான்
ஆ) அப்பூதியடிகள்
இ) மாநாய்க்கன்
ஈ) மாடலன்

2

மாதவியும் கோவலனும் பிரியக் காரணமாக இருந்த பாடல் எது?

2


அ) கானல் வரி
ஆ) குன்றக் குரவை
இ) ஆய்ச்சியர் குரவை
ஈ) இந்திர விழா எடுத்த காதை

3

இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?

3


அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள்
ஆ) கூல வாணிகன் சாத்தனார்
இ) கவுந்தி அடிகள்
ஈ) சமண குரு

4கோவலனை ஏமாற்றிய பொற்கொல்லனின் பெயர் என்ன?

4


அ) மதுரைப் பொன்னான்

ஆ) மாநகர் வழுதி
இ) குறிப்பிடவில்லை
ஈ) சித்திரக் கொல்லன்

5மாதவி, கோவலனிடம் தூது அனுப்பும் ஆட்களின் பெயர் என்ன?

5


அ) மாதரி/கோசிகன்
ஆ) மாடலன்/மாதரி
இ) வசந்தமாலை/கோசிகன்
ஈ) சித்ராபதி/வசந்தமாலை

6மாதவிக்கு அரசன் கொடுத்த மாலையைப் பொருள் கொடுத்து வாங்க வல்லவரே, மாதவியின் கணவர் என்று மாதவியின் தாயார் அறிவிக்கின்றாள். கோவலன் எவ்வளவு பொன் கொடுத்து மாலையைப் பெறுகிறான்?

6


அ) 1,008 பொன்
ஆ) 1,000 கழஞ்சு
இ) 1,008 கழஞ்சு
ஈ) 11,000 பொன்

7கோவலனையும் கண்ணகியையும், மதுரைக்கு வெளியே உள்ள ஒர் இடைச்சேரியில், இரு பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் கவுந்தியடிகள்! அவர்கள் யார்?

7


அ) மாதரி/ஐயை
ஆ) குரல்/துத்தம்
இ) விளிரி/ஐயை
ஈ) கைக்கிளை/ஐயை
8

சிலப்பதிகாரத்தில் சுவாமிமலை எனப்படும் திருவேரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இளங்கோவால் வர்ணிக்கப்படும் வைணவத் தலங்கள் எவை?

8


அ) திருவரங்கம்/காஞ்சி
ஆ) திருவரங்கம்/அழகர் கோவில்
இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்

9மணிமேகலை என்று குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள் மாதவியும் கோவலனும். யார் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டுகிறார்கள்?

9


அ) கோவலன் குலதெய்வம்

ஆ) மாதவியின் ஆபரணம்
இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
ஈ) மாதவியின் தாயார்

10கண்ணகிக்கு கோவில் எடுக்க, இமயத்தில் இருந்து கல்லெடுக்க விரும்பினான் செங்குட்டுவன். அப்போது ஏற்பட்ட வடதிசைப் போரில் எந்த வடநாட்டு மன்னர்களைப் போரிட்டு வென்றான்?

10


அ) கனகன்/சஞ்சயன்
ஆ) கனகன்/அழும்பில்வேள்
இ) கனகன்/விசயன்
ஈ) விசயன்/கங்கன்

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மாசாத்துவான் ஆ) அப்பூதியடிகள் இ) மாநாய்க்கன் ஈ) மாடலன்

2 அ) கானல் வரி ஆ) குன்றக் குரவை இ) ஆய்ச்சியர் குரவை ஈ) இந்திர விழா எடுத்த காதை

3 அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள் ஆ) கூல வாணிகன் சாத்தனார் இ) கவுந்தி அடிகள் ஈ) சமண குரு
4 அ) மதுரைப் பொன்னான் ஆ) மாநகர் வழுதி இ) குறிப்பிடவில்லை ஈ) சித்திரக் கொல்லன்
5 அ) மாதரி/கோசிகன் ஆ) மாடலன்/மாதரி இ) வசந்தமாலை/கோசிகன் ஈ) சித்ராபதி/வசந்தமாலை
6 அ) 1,008 பொன் ஆ) 1,000 கழஞ்சு இ) 1,008 கழஞ்சு ஈ) 11,000 பொன்
7 அ) மாதரி/ஐயை ஆ) குரல்/துத்தம் இ) விளிரி/ஐயை ஈ) கைக்கிளை/ஐயை
8 அ) திருவரங்கம்/காஞ்சி ஆ) திருவரங்கம்/அழகர் கோவில் இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்
9 அ) கோவலன் குலதெய்வம் ஆ) மாதவியின் ஆபரணம் இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம் ஈ) மாதவியின் தாயார்
10 அ) கனகன்/சஞ்சயன் ஆ) கனகன்/அழும்பில்வேள் இ) கனகன்/விசயன் ஈ) விசயன்/கங்கன்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP