Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts

Thursday, August 01, 2013

ஒர் ஈழத் தமிழனே= உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை!

Xavier தனிநாயகம் அடிகள்!
= இந்த "ஈழத் தமிழரின்" நூற்றாண்டு விழா.. நாளை (Aug 2 - 2013)

யாருய்யா இவரு?
= நமக்குத் தெரியுமா?
= தெரியலீன்னாலும் பரவாயில்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? - நல்ல தமிழுக்கு உழைத்த நல்லோர் பற்றி?
மறைந்த நடிகை மஞ்சுளா அவர்களின் மருமகன் = "இயக்குநர் ஹரி" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறோம்!
கலைஞரைப் பிடிக்காதவர்கள் கூட, அவர் பேரன் பேரு = "ஆதித்யா" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறாங்க;
ஆனால்,  Xavier தனிநாயகம் அடிகள்??

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் - பாரதி

2000+ ஆண்டுக்கு முன்னுள்ள தொல்காப்பியத்  தமிழ் /  ஓசை நுட்பம் -ன்னுல்லாம் நாமளே பேசிக்கறோமே?  ஆனால் உலகம் பேசுமா???

பக்கத்தில் இருக்குற "தெலுங்கானா" நண்பன் கூட ஒத்துக்க மாட்டான் = தமிழ் 2000+ yrs முன்னுள்ள மொழி-ன்னு:)
ஆனா, "வேதம்" -ன்னு ஒசத்தியாப் பேசுவான்;
Vedas -ன்னு வெள்ளைக்காரனும் பேசுவான்! Power of Religious Marketing:)

ஆனால், தமிழையும், அப்படிப் பேச வைத்தவர் = ஒர் "ஈழத் தமிழர்"!



தமிழைத், தமிழகத்துக்கு வெளியேயும் பரவச் செய்ததில் பெரும் பங்கு! = Xavier Thanai Nayagam AdigaLar!
கிறிஸ்துவர் என்பதால், "அயல் நாட்டவர்" -ன்னு முடிவு கட்டிறாதீக! இவர் தாய் மண் = தமிழ் ஈழம் தான்!


* இராபர்ட் நொபிலி (Robert De Nobile - Italy)
* சீகன் பால்க் (Ziegenbalg - Germany)
* வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi - Italy)
* கால்டுவெல் (Robert Caldwell - Ireland)
* ஜி.யு. போப் (G.U. Pope - Canada/ England)
* ழான் பில்லியொசா (Jean Filliozat - France) (திருமுருகாற்றுப்படை & திருப்பாவை அறிஞர்)
-ன்னு பல பேரு, தமிழகத்துக்கு வெளியே, தமிழ் ஆய்வு செய்துள்ளார்கள்!

அண்மைய அறிஞர்கள்
* கமில் சுவலெபில் (Kamil Zvelebil - Praha, Czechoslovakia)
* ஜார்ஜ் ஹார்ட் (George Hart, California, USA)
-ன்னு, அந்தத் தமிழ் ஆய்வு தொடர்ந்தது/ தொடர்கிறது...

Young Xavier Thaninayagam
ஆனால்...
தனிப்பட்ட ஆய்வில் மட்டும் நிற்காமல்,
பலரையும் திரட்டியவர் = தனிநாயகம் அடிகளார்!

இப்படித் திரட்டியதால் தான், மேலும் பலருக்கு வெளிச்சம் பரவி, "தமிழ்" என்ற வெண்கொற்றக் குடையின் கீழ், பிற நாட்டு நல்லறிஞர் ஒருங்கிணைந்தார்கள்

அப்படி, அவர், திரட்ட உருவாக்கிய ஆயுதம் = "உலகத் தமிழ் மாநாடு"


Ulaga Tamizh Maanaadu - Chennai, 1968
Arignar Anna with President Zakir Hussain, Kalaignar at the back

IATR - International Assocation of Tamil Research (உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுமம்) என்பதை உருவாக்கி...
பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில், Tamil Chair என்று உருவாக வழி வகுத்து...

"உலகத் தமிழ் மாநாடு" என்றொரு நிகழ்வைத் தோற்றுவித்தவரே
= சேவியர் தனிநாயகம் அடிகளார் தான்!

1966 = 1st Word Tamil Conference = மலேசியா
2nd = Chennai
3rd = Paris
4th = Yaazh paaNam (Jaffna) - துயரம் கலந்த தமிழ் மாநாடு!

அடிகளார் இறந்து விட்டார்...

5th = Madurai
6th = Kuala Lumpur
7th = Mauritius
8th = Thanjavur

{இப்படி வழி வழி வந்த வாழையடி வாழை...
அதைத் தான் கலைஞர். கருணாநிதி, தன் வசதிக்கு வரலை-ன்னு உடைச்சாரு:(
உலகத் தமிழ் மாநாடு -> உலகச் செம்மொழி மாநாடு -ன்னு புது "அவதாரம்" எடுத்தது, 2010-இல்!

"தன் வழிக்கு வரவில்லை என்றால், தன் குடியையே பிரித்தாளு"
= இதென்ன வள்ளுவர் அறமா?
= "சாணக்கியத்" தந்திரம் அல்லவா!
வடநெறிக் காவலர் ஆகி விட்டார் போலும் கலைஞர்!

தமிழினும் காமமே பெரிது என்று "மவுண்ட் ரோடு மகா விஷ்ணுக்களோடு" சம்பந்தி ஆகி விட்டவர், வேறென்ன செய்ய முடியும்?:)
நம் பதிவுக்குத் தேவையற்ற ஒன்று; அடிகளாரைப் பற்றி மட்டும் காண்போம்!}



ஈழத்திலுள்ள காவலூர் (Kayts - ஊர்க்காவற் துறை)
யாழ்ப்பாண உச்சித் தீவுகளில் -  ஹென்றி & இராசம்மா - இவர்களின் பிள்ளையாகப் பிறந்தார் சேவியர்; (Aug 2, 1913)

யாழ்ப்பாணம், கொழும்பு என்று கல்லூரிகளில் படித்தவர்..
திருவனந்தபுரம் (இந்தியா) மூலமாக, இறையியல் (Religion) படிக்க, வெளிநாடு சென்றார்;
மீண்டு வந்து, வ.உ.சி (எ) மறத் தமிழ் அறிஞனைத் தந்த, தூத்துக்குடியில் தங்கிப் பணியாற்றினார்;

அண்ணாமலைப் பல்கலையில், தமிழறிஞர் தெ.பொ.மீ உந்துதலால், தமிழிலும் பட்டம் பெற்றார்;
அப்போது எழுந்த ஆராய்ச்சிக் கட்டுரை தான் = A study of Nature in Sanga Tamizh! (சங்கத் தமிழிலே இயற்கை)

இது, amazon.com இலும் கிடைக்கிறது;  "List of English Books on சங்கத் தமிழ்" - dosa365 தளத்திலும் கொடுத்துள்ளேன் (தினமொரு சங்கத் தமிழ்);

இலங்கைக்கே மீண்டும் சென்று, பின்பு இங்கிலாந்து, மலேசியா என்று Academic Circles - சுற்றிக் கொண்டே இருந்தார் அடிகளார்;
மலேசியப் பல்கலையில், தமிழ்ப் பேராசிரியராகவும் ஆனார்;
Academic Circles எனப்படும் கல்விக் குழுமங்களில், "தமிழ், தமிழ்" என்று புதிதாக ஒலிக்கத் துவங்கியது;

அப்படி என்னய்யா இருக்கு தமிழ்ல? 
அதுவும் வெள்ளைக்காரன் கல்லூரியில் = தமிழுக்கு எதுக்குய்யா மெனக் கெடணும்?
அடிகளார் வாயாலேயே கேட்போமா?


Nobody knows Tamizh!:(

"If Latin = is the Language of Law & Medicine
French = the Language of the Diplomacy
German = the Language of Science
And English = the Language of Commerce
Then Tamil = is the Language of Bhakti & Innate Devotion

தமிழ் மொழி = இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று! 
குறிப்பாகச் சைவர்களுக்கு மட்டுமே உரியதன்று! அப்படியொரு தோற்றம், வழி வழி வந்த பண்டிதர்களால் கொடுக்கப்பட்டு விட்டது;

தமிழ் மொழி = வைணவர், சமணர், பௌத்தர், இசுலாமியர், கிறித்துவர் என சிறுபான்மைச் சமயத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி!"
என்று வீறுடன் உரைத்தவர் அடிகளார்!

தமிழ்த் திறனாய்வு (Tamil Research) என்பதில், அடிகளார், முற்றிலுமாய்த் தலை-கீழ் மாற்றங்கள் செய்தார்;
அது வரை வ.வே.சு ஐயர், டி.கே.சி போன்றவர்கள் = 1) மதம் 2) ரசனை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து, திறனாய்வுக்கு வித்திட்டனர்;

ஆனால், அடிகளார், பல நாடுகளிலும் பயின்றவர் அல்லவா? "அறிவியல் பார்வை" அவருக்கு இயல்பிலேயே இருந்தது!

சமய வெளியைத் தாண்டி வந்து... 
"அறிவியல் பார்வையில்" தமிழ்
என்று அணுகும் முறையைப் பெரிதும் ஊக்குவித்தார்; அதனால் தான், பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில், தமிழ்க் கொடியும் பறக்க முடிந்தது;




"உலகத் தமிழ்" என்பதற்கும் வித்தினை நட்டார்!
எங்கே? = காங்கிரஸ் கோலோச்சும் தில்லி மாநகரில்! 1964!

தனியொரு ஆளாக, மத்திய அரசிடம், நேரில் சென்று வாதாடக் கூடிய மேலாண்மை பெற்ற அறிஞர்! (தன் "குடும்ப மந்திரிசபைக்கு" அல்ல)

தன் முன்னாள் ஆசிரியர் தெ.பொ.மீ,  டாக்டர் மு.வ  அவர்களுடன் சேர்ந்து..
Professor Filliozat (Paris), Prof. Burrow (Oxford),  Prof. Kuiper (Hague)
- என்று பன்னாட்டு அறிஞர்களையும், அரசின் முன் நிறுத்தி, தமிழ்த் திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார்!

அப்படி உருவானதே! = முதல் உலகத் தமிழ் மாநாடு! (கோலாலம்பூர் - 1966)


பின்பு, அறிஞர் அண்ணா நடத்திய = இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் (சென்னை - 1968)...
"தனிநாயகம் அடிகளார் (எ) ஈழத் தமிழ்க் கொழுந்து" -என்று,
அண்ணா, அவரையே மாநாட்டுக்கு முன்னோடியாய் அறிவித்தார்; தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை:)

ஒரு செயல் வீரர் போல, ஓடியாடி உழைத்துச், சென்னை மாநாட்டை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, Academic என்று வெற்றி பெறச் செய்தார்!

அதே சமயம், "அறிஞர்" என்று அடைப்புக்குறிக்குள் தங்கி விடாமல்...
 "தமிழ்ப் பெருமை" மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்று = ரசனை மிக்கதாகவும் மாநாடு ஆக்கப்பட்டது!

சென்னைக் கடற்கரையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு, திறந்து வைத்த தமிழ்ச் சான்றோர் சிலைகள், இன்றும் உள்ளன!

Some Research Papers during World Tamil Conferences:

* 1st உலகத் தமிழ் மாநாடு (கோலாலம்பூர்) = http://tamilnation.co/conferences/cnfMA66/index.htm

* 2nd உலகத் தமிழ் மாநாடு (சென்னை)
http://tamilnation.co/conferences/cnfTN68/index.htm
(ஓவியக் கலை - சங்க காலம் முதல் கம்பன் வரை - இதைத் தேடிப் படிங்க:))

* 4th உலகத் தமிழ் மாநாடு (யாழ்ப்பாணம்) = http://tamilnation.co/conferences/cnfJA74/index.htm
(தமிழ் - சிங்கள அரசர்கள் கலப்புத் திருமணம் பற்றிய கட்டுரையும் உண்டு)


தமிழ் = உலக மொழி ஆகணும்; 
(meaning: people of the world should atleast know the name of Tamizh - like Greek or Latin
They should realize, Humanity had a great culture existed & existing! = Not a Culture of Rituals, But a Culture of Heart)
அதற்கான தகுதி தமிழுக்கு உள்ளது; தமிழின் வளங்களை உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டும் - என்பதே அடிகளார் நோக்கம்!

ஜப்பானிய/ சீன மொழிக்கும் - தமிழுக்கும் இடையில் சில ஒற்றுமை நிலவுவதைக் கூடச் சுட்டிக் காட்டியுள்ளார்;

தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்
= இவையே, தமிழில் முக்கியமான நூல்கள், என்று குறிப்பிடுவார்;

தமிழைப் பற்றிக் குறிப்பிடும் = 1335 பிறமொழி நூல்கள்; "Reference Guide to Tamil Studies" என்ற நூலாக வெளியிட்டார்; Also available on Amazon.com
------------------------------

1974 - யாழ்ப்பாண உலகத் தமிழ் மாநாட்டில் வெடித்த வன்முறை, அடிகளாரை மிகவும் பாதித்து விட்டது!
ஒடுங்கிய நிலையில், பணிகளைத் தொடர்ந்தவர் = Sep 1 1980, யாழ்ப்பாண மண்ணிலேயே மறைந்து போனார்:(
------------------------------

எனக்குத், தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் /  தமிழ்ப் "பண்டிதர்கள்" மீது, மிகப் பெரிய வருத்தம் ஒன்னு இருக்கு!
= ஈழத் தமிழ் இலக்கியங்கள், தமிழகத்தில் அறியப்படுவதே இல்லை!:(

1) பொதுவா, "சமயம் சார்ந்த", தமிழையே ரொம்பப் பரப்புவாங்க! அறிவியல் ஒத்த திறனாய்வு? = மிக அரிது! 

அதிலும், "சிறுபான்மைச் சமய" இலக்கியங்கள் அடக்கியே வாசிக்கப்படும்;
சங்க இலக்கியம்/ சிலம்பை விடக்...
"கம்பன்" என்றே தலையில் வைத்து ஆடும் "துதி" மனப்பான்மை கூட உண்டு!

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் போன்ற துதி மொழிகள் இளங்கோவுக்கு வாய்க்கவில்லை!
இளங்கோ வீட்டு இட்லித் தட்டும் இசை பாடும் -ன்னு பரப்பி இருக்கணுமோ?:))

கல்வியிற் பெரியவன் கம்பன்; அவனைக் குறை சொல்லவே முடியாது;
அவனை முன்வைத்து எழும்பும் குழு மனப்பான்மை/ துதி மனப்பான்மை மேல் தான் நம் வருத்தம்:(
= கம்பன் கழகம், கம்பன் விழா, கம்பன் தொலைக்காட்சி பட்டிமன்றப் பகடிகள்;
= ஆனா இளங்கோ மன்றம்? அப்பிடியொன்னு இருக்கா என்ன?

தேவாரம்/ அருளிச்செயல் ஏதோ ஒப்புக்கு இருக்கு!
அருணகிரியின் சந்தத் தமிழ்? = ஊகும்! அதெல்லாம் இலக்கியத்துக்குள்ளேயே வராது:(
சமணத் தமிழ் = ஊத்தி மூடியாச்சு:( மக்கள் கிட்ட போய்ச் சேராது;

2) சம்ஸ்கிருதம் (எ) வடமொழி மேல், ஒரு கீறலும் படாதவாறு செய்யும் தமிழ் முயற்சிகள் = இதை மட்டுமே, "பண்டிதர் குழு" வரவேற்கும்!

தனித் தமிழ்/ தூய தமிழ் எல்லாம், ஏதோ மறைமலையடிகள் காலத்தில் கொஞ்சம் முளைச்சி வந்தாலும்...

இன்று இணையத்தில், "திராவிட அரசியல் ஏளனம்" என்கிற பேரில், மெய்யான தமிழ் முயற்சிகளும் ஏளனமே செய்யப்படுகின்றன!:(

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை;
பண்டிதர்களே நிரம்பியுள்ள பதிப்புலகில்/ மீடியாவில், பாவாணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்கள் அறியப்படுவது அரிதே!:(

தொ. பரமசிவன் அய்யா (தொ.ப) போன்றவர்களின் தமிழ்ப் பூர்வகுடிகளின் ஆய்வு?
= நம்ம சமயத்துக்கு ஒத்து வரலை-ன்னு "தீண்டத் தகாதவர்களா" ஆக்கி வச்சிருக்கோம்:(

3) இது எல்லாத்தையும் விடக் கொடுமை 
= ஈழத் தமிழ் இலக்கியங்கள்... என்னான்னே பல பேருக்குத் தெரியாது!:(((
ஒரு நூலின் பேரைச் சொல்லுங்க பார்ப்போம்?




* சங்கத் தமிழில் = ஈழத்துப் பூதன் தேவனார் முதல்...
* நேற்றைய தமிழில் = ஈழத்து யாழிசை - விபுலானந்த அடிகள் வரை...

பொது மக்களிடம், இவர்களைக் கொண்டு சேர்ப்பதே இல்லை:(
* உ.வே. சா = பல பேருக்குத் தெரியும்;
* சி.வை. தாமோதரம் பிள்ளை? = தெரியுமா??? ஈழத் தமிழர்!

உ.வே.சா = இலக்கியம் திரட்டினாரு-ன்னா
சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் / நன்னூல் -ன்னு, இன்னிக்கு இருக்குற எல்லா இலக்கண நூல்களையும் திரட்டியவர் இவரே;
"உரை நூல்கள்" கூடச், சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பிச்சாரு!

ஆனா, நம்மில் எத்தனை பேருக்கு...
சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியும்??? = உ.வே.சாமிநாத ஐயர் மட்டும் தெரியும்!

{இப்படிச் சொன்னதுக்காக, ஒடனே சிலர், என்னிடம் கோபிக்க வரலாம்/ வந்துள்ளனர் = "பாப்பானைத் திட்டியாச்சா? You go... so Low"

ஆனா.. முருகனுக்கும், என் மனசாட்சிக்கும் தெரியும்; என் அந்தண நண்பர்கள் பலருக்கும் என்னை "மானசீகமாகத்" தெரியும் = How Low I am:))
ஒரு சொல்லு மேலே விழுந்துறாம, அவரவர் சொந்தப் பிடித்தங்களை யெல்லாம் , நான் பாத்துப் பாத்து எழுதணும்-ன்னா.... ரொம்பவே கஷ்டம்}

தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
தமிழுக்கு, மனதார நல்லது நினைப்போர் யாவரும்...
= பிராமணர்கள் உட்பட = அனைவரும் தமிழர்களே!

* உ.வே.சா = தமிழ்த் தாத்தா! அவர் காலடியில், என்றென்றும் நான் வீழ்ந்து வணங்குவேன்!
* சொல்ல வருவது என்ன-ன்னா.. அதே பாடுபட்ட, சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு மட்டும் "இருட்டடிப்பு" ஏனோ?
All you need is, "networking" of samasthana vidwans & tamil pundits??? Lobbying is the best!:(
உ.வே சா & சி.வை.தா

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= இது பற்றிப் பொது மக்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ்ப் பண்டிதர்கள்/ ஊடகங்கள் மிகவும் குறைவு
= அப்பறம் எப்படி, ஒரு தலைமுறைக்கு, "ஈழம் = தொப்புள் கொடி உறவு" -ன்னு உணர்வு மட்டும் வரும்??

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= செய்யாததை விதந்தோதச் சொல்லலை!
= ஆனா, உ.வே.சா  தெரிந்து, சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியலை-ன்னு இருக்கலாமா?

"உலகத் தமிழ் மாநாடு" -ன்னு
தமிழ்க் கொடி பறக்க விட்டதே = ஓர் "ஈழத் தமிழன்" தான்டா!

அவர் நூற்றாண்டு அடக்கி வாசிக்கப்படுகிறது;
அவர் விழாவில், கிறிஸ்துவர்கள் தென்படும் அளவுக்கு, "தமிழ்ப் பண்டிதர்கள்" தென்படுவதில்லை:((
வெளிநாட்டு விழாக்களை விடத் தமிழ் நாட்டு விழாக்கள் மிக மிகக் குறைவு:(

அதான், ஆத்தாமையில் எழுதினேன்!
சேவியர் தனிநாயகம் அடிகளார் வாழ்க! = அவர் நூற்றாண்டு வாழ்க!
http://thaninayagamadigalar.com
Read more »

Thursday, July 07, 2011

கா.சிவத்தம்பி! ஈழத்-தமிழகம்!

மறைந்த ஈழத் தமிழறிஞர், பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இன்னுயிர், இறைவன் திருவடி நீழலில் இளைப்பாற, என் கரங் கூப்பிய அஞ்சலி!

அன்னாரைப் பற்றிய முக்கியமான தோட்டாப் புள்ளிகள் (Bullet Points):

1. பொதுவாக, தமிழ் இலக்கிய வரலாற்றில், தமிழகம் மட்டுமே பெரிதும் பேசப்படும்! ஈழம் சார்ந்த இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கிய வரலாற்றில் கொண்டு வந்து இணைத்த பெருமகனார்=சிவத்தம்பி!

2. இயல்=ஆய்வுக் கட்டுரைகள், இசை=விபுலானந்த அடிகள் பற்றிய ஆய்வு, நாடகம்=வசனங்கள், என்று முத்தமிழிலும் கோலோச்சியவர்!

3. முருகனைப் போலவே, "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்ற தமிழ்த் தொன்ம ஆய்விலே இவரும் முக்கியமான அறிஞர்!
இவரின் முல்லை நில ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் சங்கத் தமிழ்த் திருமால், எங்ஙனம் வடக்கே சென்ற போது, 'விஷ்ணு'வாகக் கலந்து முதல்வன் ஆனான் போன்ற குறிப்புகள் மிக நுண்ணியவை!

இவரை ஒட்டி, டாக்டர் மு.வ, மற்றும் நீதியரசர் மு.மு இஸ்மாயில் போன்றவர்கள், தமிழ் இலக்கிய வரலாற்றை, பெரும்பான்மைச் சமய அரசியல் பூச்சில் இருந்து விடுவித்து, நல்ல பல ஆய்வுகளை நிகழ்த்தினர்!
சமணர் என்ற ஒரே காரணத்துக்காக, களப்பிரர் காலம்=இருண்ட காலம் என்று முத்திரை குத்தி, "தாங்கள் எழுதியதே வரலாறு" என்னும் சைவ ஆதிக்கச் சாதியினரின் போக்கும் ஒழியத் துவங்கியது!


4. கா.சிவத்தம்பி குறித்து, தமிழறிஞர்கள் பேசும் வானொலி ஒலிக் கோப்புகள் - கா.பி அண்ணாச்சியின் பதிவில்...இங்கே கேட்கலாம்!

5. இன்று, எத்தனை தமிழகப் பாடநூல்களில் ஈழ இலக்கியம் வைக்கப்படுகிறது? ஈழப் பாடங்களில் தமிழக இலக்கியம் உண்டு! ஆனால் தமிழகப் பாடங்களில் ஈழ இலக்கியம் இல்லையே!:(

6. மொழித் துறையில், தமிழகம்-ஈழம் 'இயைந்து'ருந்தால், இன்று தமிழக மக்கள் "உணர்வு"ப் பூர்வமாக ஈழத்தோடு இயைய, எளிதாக இருந்திருக்கும்! ஆனால் இன்னிக்கும் ஒட்டு மொத்த ஈழ உணர்வுக்கு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்!

7. >மொழித் துறையில் தமிழகம் Vs ஈழம் பாகுபாடு< இதைத் தான் பேரா. கா.சிவத்தம்பி ஓரளவு நேர் செய்ய முனைந்தார்!

8. அன்னாருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி, மொழித் துறையில் இந்த "ஒருங்கிணைப்பு" வேண்டும்!
தமிழ் வரலாறு-ன்னாலே, ஏதோ சோழர்களோடு அனைத்தும் நிறைந்தது என்றில்லாமல், ஈழத்துக்கும் நம் வரலாற்றுக் கைகள் நீள வேண்டும்!

9. ஈழம் சார் சொற்கள்=அவதானிப்பு, கதைத்தல், பகடி போன்றவை! இவை தமிழகத் தமிழ்ப் பதிவுகளிலெல்லாம், இப்போது புழங்கத் துவங்கி இருப்பது, மகிழ்வான சேதி!

10. பேரா. சிவத்தம்பி நினைவாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஒரு தமிழ் விருதினையும், ஆய்வு மையத்தையும் நிறுவி, தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ள வேணும்! தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஈழப் படைப்பிலக்கியங்கள், தமிழகத்தின் தமிழ் ஆக்கங்களோடு, ஒருங்கிணைந்து செயல்பட, இது போன்ற மையம் பேருதவியாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து!


கட்டுரைகள் மட்டுமல்லாது, சிவத்தம்பியின் இசை-நாடகப் பங்களிப்புகளும், தமிழ்த் தாயின் திருவடிக்கு தீஞ்சிலம்பு!
வாழ்க சிவத்தம்பி! வாழ்க சிவத்தம்பியின் தமிழ்!!

மேலும் வாசிக்க:
1. Prof. Sivathambi's Ebook: பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி...
2. ஜெயமோகன் - சிவத்தம்பி குறித்த மதிப்பீடு - எனக்கு இதில் கிஞ்சித்தும் ஒப்புதல் இல்லை!
3. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்: சிவத்தம்பி - தொகுப்புப் பதிவு!

* தற்சமயம், வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதால், பதிவாக எழுத நேரமில்லாமல், புள்ளிகளாகத் தொகுத்து விட்டேன்!
* பேரா. கா. சிவத்தம்பியோடு, கல்லூரி மலருக்காக உரையாடி, பதிவிட்டது...என் வாழ்நாளில் மறக்க முடியாத தமிழ் நிகழ்வு!

ஐயாவுக்கு எனது கண்ணீர்-மலர் அஞ்சலி!
Read more »

Sunday, February 20, 2011

பிரபாகரன் தாயே! பார்வதியே! தாலேலோ!

இனிய குடும்பத்தில் ஒரு நொடிந்த சமூகம் எட்டிப் பார்த்தால்?
சமூகத்தை, உதய சூரியக் குடும்பமே எட்டிப் பார்க்கலாம்!
ஆனால் ஒரு குடும்பத்துக்குள் சமூகம் எட்டிப் பார்த்தால்? = உன் கதி தான்! நிர்க் கதி தான்!

பிள்ளையோ போராளி!
கணவரோ உழைப்பாளி!
இருவருக்கும் இடையே
பெண்ணோ பெரும் தவிப்பாளி!


ஈழத்தில் தொலைத்த முகவரிகளை
இதர கண்டங்களிலாச்சும் கண்ட எம் மக்கள்!
முகத்தில் தொலைந்த முக வரிகளை
இவள் எந்தக் கண்டத்திலும் காணாது போனாளே!

விமானத்தில் வந்து இறங்கியது எங்களுக்குத் தெரியவே தெரியாது,
SpiceJet விமானத்து வர்த்தகங்கள் மட்டுமே பேசிடத் தெரியும்!

இறங்காது போனதற்கு இரங்கற்பா!
இருக்கவே இருக்கிறது இன்தமிழ்!
நீங்களா நம்பி வந்தீங்க-அது "ஒருதலை"!
அதற்கு நாங்கள் தரமுடியுமா ஆறுதலை?

தாயே, இந்தப் பாவத்துக்கு நாங்கள் மெளன சாட்சிகள்!
மண்ணுக்குள் போகும் முன்
எங்களை மன்னித்து விடு அம்மா!
எங்களின் தமிழ், கண்ணகிக்கு அல்ல! அவள் சிலைக்கு மட்டுமே!!




மகனுக்கு நீ தாய் இல்லை
மணாளன் அருகில் இல்லை
பெற்ற மக்கள்....இருந்தும் இல்லை
ஊர்ப் பழி ஏற்றாய் அம்மா - பார்வதீ
உன் பழி கொண்டோம் அம்மா!
உன் பழி கொண்டோம் அம்மா!

புருஷன் அறியாது பிள்ளைக்குச் சோறிட்டாய் - கண்ணுறங்கு!
பிள்ளையின் திருமணத்துக்கு நீ வரவில்லை - கண்ணுறங்கு!
வீடின்றி போனாலும் நாடின்றிப் போகாதென
நம்பியே காடின்றிப் போவாயோ கண்ணுறங்கு!

பிள்ளையே ஒளிந்திருக்க, முகாமுக்கு வந்தனையோ?
பிள்ளையின் சவத்துக்கு, உன் டி.என்.ஏ தந்தனையோ?
எங்கு சென்றும் உன்னை ஏலாது, ஈழமே சென்றனையோ?
தாய் மடியில் தாயாக, தாயே நீ கண்ணுறங்கு!

அஞ்சுகத் தாய் போலுனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றாலும்
தமிழ்த் தாயின் கையிருக்கு, வருடிவிடத் தாலேலோ!
உன்னை மறுதலித்தார் எத்திவிட்டார், என்பதை நீ மறந்து விடு
தமிழுக்குச் சாபமிடா ஈழத் தாயவளே தாலேலோ!

சீகாழிக் குளக்கரையில் பார்வதியின் ஞானப் பால்
ஈழத்தின் கரையினிலே பார்வதிக்கு? கள்ளியிலும் பால்?

கண்ணன் அவன் மயிலிறகால் கண்வருடத் தாலேலோ!
முருகன் அவன் முத்தமிழால் தாலாட்டத் தாலேலோ!
கேள்விகள் ஏதுமின்றி, பேதையே நீ தாலேலோ!
கேள்விகள் எங்களுக்கே, பார்வதியே தாலேலோ!


கடந்த கால் பரந்த காவிரிக் கரை குடந்தையுள்,
ஆரா அமுதப் பெருமாளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,
சொந்த பந்தம் யாரும் இன்றி, இயற்கை எய்திய ஒரு தொண்டனுக்கு...

இன்றளவும் ஈர ஆடை புனைந்து, நீத்தார் கடன் அளிக்கும் இறைவனே,
இவள் கடனையும் நீயே தீர்த்து வைக்குமாறு...
எம்பெருமானைத் தாழ்மையுடன் இறைஞ்சுகிறேன், இவளின் மறுதலிக்கப்பட்ட மனநிலையை எண்ணிப் பார்க்கவும் சக்தியற்ற அடியேன்.....

Read more »

Monday, May 25, 2009

தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

கால் நூற்றாண்டுப் போராட்டம், கணப் பொழுதில் முடிவுக்கு வந்து விட்டது! கோபம், வெறி, போர், உரிமை, நியாயம் என்ற பல உணர்ச்சிகளும், துரோகம் என்ற ஒரே உணர்ச்சியில் அத்தனையும் மங்கிப் போய் முடிந்து விட்டன! தமிழினம் வாங்கி வந்திருக்கும் பிரத்யேகமான வரம்/சாபம் இது! :(((
செம்மொழி செம்மொழி-ன்னு சொன்னாங்க! ஆனா இம்புட்டுச் சிவப்பா இரத்தம் தோய்ந்து இருக்கும் இந்தச் "செம்"மொழி-ன்னு அப்ப யாருக்கும் தெரியாமப் போனது தான் கொடுமை!!


இந்த இருபத்தைந்தாண்டு ஈழப் போரிலிருந்து வருங்காலத் தமிழ்ச் சந்ததியாகிய நாம் என்ன பாடம் படிக்கப் போகிறோம்?

* இன்றைய முதிய தமிழ்த் தலைமுறை, தமிழ்த் தலைவர்கள் நடந்து காட்டிய வழி தான் நமக்குமா?
* இல்லை...இளைய தமிழ்த் தலைமுறைக்கு, தானே சிந்தித்து எடுக்கும் ஆக்கப்பூர்வமான தனி வழியா?

ஆனால் இவை அத்தனைக்கும் முன்னதாக.....ஒரு நிமிடம்...
வன்முறையோ, மென்முறையோ,
அதைத் தனிப்பட்ட காரணத்துக்காகச் செய்யாமல், தன் குடும்ப முன்னேற்றத்துக்காகச் செய்யாமல்...
தன் இனத்தின் பொருட்டே களம் கண்ட ஒரு மனிதரின் மரணம்...புலிகள் இயக்கத்தாலேயே உறுதி செய்யப்பட்ட பின்பும், நம்பச் சற்றுக் கடினமாகத் தான் உள்ளது! :(

பேரம் பேசவே தெரியாத ஒரு "தீவிரத்" தமிழன்,
தலைவர். திருவேங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரனுக்கு வீர வணக்கம்! இதய அஞ்சலி!

உயர்ந்தோர்/ சான்றோர்/ நல்லோர்/ தலைவர்கள் இவர்களின் மறைவின் போது ஏற்றப்படும் மோட்ச தீபம் ஏற்றுவோம்!
இன்று வரை இறந்து பட்ட எம்முடை அனைத்து ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்த மோட்ச தீபம் ஏற்றுவோம்!

பிரபாகரன் மரணிக்கவில்லை என்று இன்னமும் நம்பும் சிலரும், அவர் மரணித்து விட்டார் என்று ஒப்புக் கொள்ளும் பலரும்...எது எப்படியோ போகட்டும்!
ஆனால், நீ இன்னமும் உயிருடன் இருந்தால்...அங்கேயே இருந்து கொள்! வெளியில் இப்போதைக்கு வந்து விடாதே! நீ மரணித்ததாகவே இருக்கட்டும்!

தமிழர் மீண்டும் உரிமை பெறுவார்கள் என்று இலங்கை அரசு "அறிவித்து" உள்ளது! இது பொய்யாகும் பட்சத்தில், தமிழகத் தலைவர்களும் அவர்கள் வாரிசுகளுமா களத்தில் இறங்கப் போகிறார்கள்?
அப்போது களத்தில் இறங்கத் தமிழருக்கென்று ஒருவன் தேவையில்லையா? நீ அப்போது வந்தால் போதும்! அது வரை.....உறக்கம் கொள்!



இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில், 30 லட்சம் பேர் தமிழர்கள்! இன்னொரு பத்து லட்சம் பேர் உலகின் பல தேசங்களில் வாழ்கிறார்கள்!
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று உலக நாடுகளை நம்ப வைத்து, வேலையும் முடித்துக் கொண்டாகி விட்டது! இனி மிஞ்சியிருப்பது தமிழர்களே! தீவிரவாதிகள் அல்ல அல்லவா? இனியாவது உலக நாடுகள் முன்னணிக்கு வந்து குரல் கொடுக்க வேண்டும்!

அதான் பேச்சுவார்த்தைக்கென்று போராளிகள் எவரும் இல்லையே! அரசாங்கத்திடம் தானே இனி நேரடிப் பேச்சு? அதனால் அரசாங்க-அரசாங்க அளவிலாவது இனி தாராளமாக முன் வரலாமே? முன் வர வேண்டும்! இந்தியா.....முன் வந்தே ஆக வேண்டும்!

ஈராக் மறு சீரமைப்பு என்று விதம் விதமாகப் பேசுபவர்கள், போர் முடிந்த பின், பொதுத் தொண்டு நிறுவனங்களை ஈராக்கில் அனுமதித்தார்களே! நட்பு நாடுகளை அனுமதித்தார்களே! அதே போலத் தானே ஈழமும்? தமிழக அரசும், இனி இது பற்றி "பேசவாவது" செய்ய வேண்டும்!


தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

1. தமிழக அரசு, இலங்கைத் தமிழர்களுக்கென்று ஒரு தனி அமைச்சகமோ, அட்லீஸ்ட் ஒரு வாரியமாவது ஏற்படுத்தி, கண்காணிப்புக் குழுவை உடனே உருவாக்க வேண்டும்!

இனி ஈழத் தமிழர்கள் சார்பாகப் பேச ஒருவர் கூட இல்லை! அதனால் இலங்கை அரசு அல்லாத இன்னொரு அதிகாரப் பூர்வ அமைப்பு தேவை!

இவர்கள் இலங்கையில் போய் பெருசா எதுவும் செய்திடப் போவதில்லை தான்! சட்டம் இயற்றப் போவதில்லை தான்! ஆனால் இலங்கை அரசுக்கு தமிழர்கள் சார்பாக ஆலோசனை சொல்லும் அமைப்பாக வாச்சும் செயல்படலாம்!
இலங்கை அரசின் நடவடிக்கைகளைச் சீர் தூக்கிப் பார்க்கும் அமைப்பாக இது இருக்க வேண்டும்! மாதம் ஒரு முறை, சட்டப் பேரவைக்கு, இதன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்! இதை இந்திய அரசுக்கும் சமர்பிக்க வேண்டும்!

சும்மா வெறுமனே "காப்பாத்துங்க காப்பாத்துங்க"-ன்னு தந்தி கொடுப்பதற்குப் பதில், இது தான் பிரச்சனை நம்பர் #10. அதுக்கு இது தான் தீர்வு, ஆனால் அதை இலங்கை அரசு நைசாக கண்டு கொள்ளவில்லை-ன்னு சொல்லக் கூடிய ஆக்கப்பூர்வமான வாரியமாக இயங்குவது எவ்வளவோ மேல்!

இதே அமைச்சகம் இலங்கையிலும் தேவை!
இவ்வளவு வாய் கிழியப் பேசும் இலங்கை அரசு, தமிழில் உரையாற்றும் ராஜபட்சே - இதெல்லாம் இப்போதைக்கு வெறும் பேச்சு தானே!
தமிழர் புனர் நிர்மாணத்துக்கென்றே ஒரு தனி அமைச்சகம் உருவாக்குமா இலங்கை அரசு?


2. Internally Displaced People-ஆம்! என்னமோ பேர் கொடுத்துக்கிட்டு போங்க! ஆனால் முகாம்களில் உள்ள அவங்க பேர், ஊர், குடும்பம், இதர விவரங்கள் அனைத்தும் ஐ.நா-விடமும், செஞ்சிலுவைச் சங்கத்திடமும் பகிரப் பட வேண்டும்! நாளை முகாமை விட்டு வெளியே போகும் போது கணக்கெடுக்க எளிதாக இருக்கும்! இலங்கை அரசின் மேலும் குறைந்தபட்ச நம்பகத்தன்மை வரும்!

3. இவர்கள் எத்தனை நாள் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பர் என்று முன் கூட்டியே சொல்லி, அந்த நாள் முடிவதற்கு முன்பாக இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பப்பட வேண்டும்! இதற்கு அரசிடம் உடன்படிக்கையோ, உறுதிமொழியோ வாங்க வேண்டும்!

4. ஒவ்வொரு பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்துக்கும் நிவாரணத் தொகை கொடுத்தே ஆக வேண்டும்!

நம்மூரில் வெள்ளம்/புயல் வந்தாலே, குடும்பத்துக்கு பத்தாயிரம் நிவாரணம், அது இது-ன்னு சொல்வாய்ங்க! இறந்தவர்க்கு ஒரு லட்சம்-ன்னு எல்லாம் நிர்ணயம் பண்ணுவாங்க! ஆனால் ஈழத் தமிழர்கள் பட்டது நூறு புயலைக் காட்டிலும் கொடுமையானது!

இந்தப் பணம், முகாம்களை விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்களுக்கு முதல் ஆதாரமாக இருக்கும்! இதற்கு உலக வங்கியிடம் முயற்சித்துப் பணம் பெற வேண்டும்! இந்தியாவும் இதைத் தூண்ட வேண்டும்! பொருளாதார மேதை மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் போன்றவர்கள் இதைக் கூடச் செய்யலைன்னா எப்படி? :((



5. பாழடைந்த தமிழ் நகரங்களைப் புனர் நிர்மாணிக்கும் பணியில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தினால் வேலை விரைவாக முடியும்!

இதை எல்லாம் தான் ஐ.நா-வில் எழுப்பலாமே? பாதுகாப்பு கவுன்சிலில் தான் அரசியல் எழுப்ப முடியாது! சீனாவும் ரஷ்யாவும் தடுக்கும்! இது போன்ற விஷயங்களை எழுப்பலாமே! அதான் UN-Rehab ன்னு அதுக்குன்னு கவுன்சில் இருக்கே!

6. ஈழத் தமிழருக்கு அவர்கள் குரலை எடுத்து ஒலிக்க அரசியல் கட்சிகள் தேவை! தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்-ன்னு வாய் கிழியப் பேசும் தமிழகக் கட்சிகள், ஈழத்தில் இப்போ போய் ஒரு பிராஞ்ச் ஓப்பன் பண்ண முன் வருவாங்களா? :))

சொல்ல வந்தது என்னவென்றால், புனர் நிர்மாணப் பணிகளுக்கு இடையில், மக்கள் தேர்ந்தெடுத்து நடத்தும் மாநில அரசாங்கத்தை அமைக்க, தேர்தல் திட்டங்கள் உடனடியாகத் தேவை!



7. ஈழத் தமிழர்கள் முகாமை விட்டு போன பிறகு என்ன பண்ணுவாங்க? எங்கிட்டு வேலை பார்ப்பாங்க? வேலை வாய்ப்பு? வெறுமனே சாஃப்ட்வேர் கம்பேனியா அவிங்களுக்கு ஆரம்பிக்க முடியும்?

சத்யம் கம்ப்யூட்டர்ஸ்-இல் எப்படி அரசு தலையிட்டதோ, அதே போல் இங்கும் தலையிட வேண்டும்! இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களும், தமிழகத் தொழிலதிபர்களும் கை கோர்க்க வேண்டும்! நாராயண மூர்த்தி போன்ற முன்னோடிகள் முன் ஓடி வர வேண்டும்!

ஒரு திட்டம் உருவாக்கிக் கொடுத்து, பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறு சிறு நிறுவனங்கள் துவங்க முன் வர வேண்டும்! கால் சென்ட்டர் துவங்கலாமே? காற்றாலைகள், அசெம்ப்ளி ப்ளாண்ட் என்று பலவற்றைச் செய்யலாம்! செய்ய முடியும்! மனம் தான் வேண்டும்!


8. மருத்துவத் தேவை இப்போது ஈழத்தில் அதிகம்! உடல் ஊனமுற்றோர், செத்தும் சாகாமால் இருப்போர், இவர்களை பொதுத் தொண்டு நிறுவனங்கள் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும்! சத்ய சாயி அமைப்பு, அன்னை தெரேசாவின் அமைப்பு போன்றவர்களிடம் இவர்களை அடையாளம் கண்டு ஒப்புவியுங்கள்! திருப்பதியில் இருக்கும் தேவஸ்தானத்தின் ஊனமுற்ற குழந்தைகள் நடைபயில் நிலையத்தில் (BIRRD) கொண்டு ஒப்புவியுங்கள்! கட்டைக் கால்களை விட்டு, மெல்லிய கால்-கருவி கொண்டு, நடக்கச் செய்து வருகிறார்களே!

9. பல லட்சம் ஈழக் குழந்தைகளின் கல்வி?

இவர்கள் எல்லாரும் வருங்காலத்தில் புலம் பெயரத் தான் வேணுமா? அது தான் அவர்கள் விதியா? இவர்கள் எதிர்காலம் தான் என்ன? பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம்? எரிந்து போன நூலகம்?
UNICEF, இதற்கென்றே ஈழத்தில் தனியாக ஒரு முகாம் அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் ஈழப் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடே செய்யலாம்!

10. ஈழத்தின் தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் சீரமைக்கும் பணியை World Heritage Foundation-இடம் கொடுத்து விடலாம்!
மக்களுக்கும் ஒரு பிடிமானம் வேண்டுமல்லவா? அவர்களுக்கு அரசியல் நம்பிக்கையில் அமைதி கிடைக்கிறதோ இல்லையோ, ஆண்டவன் நம்பிக்கையில் அமைதி கிடைக்கட்டும்!


இறுதியாக,
தமிழகத்தில்.....தலைநகரில்....ஈழத்துப் போராளிகள், உயிர் துறந்த தமிழ் மக்கள் என்று அத்தனை பேருக்கும் பொதுவான நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புங்கள்!
மாமன், மச்சான், மச்சினிக்கெல்லாம் நினைவுச் சின்னம் இருக்கு! உலகின் பல திசைக்கும் பரவித் துடித்த இந்த வரலாற்றுத் தியாகங்களுக்கு தக்க மரியாதை செய்யவாவது தமிழக அரசு இனி முன் வரட்டும்! நாளைய தலைமுறைக்கு, ஈழத்துக்கு இது வரை கொடுத்த பலியும் வலியும் தெரியட்டும்!

வாழ்வின் அடிப்படையே மானமுள்ள வாழ்வுரிமை தாங்க!
வாடகை வீட்டில் குடி இருக்கும் போதே வீட்டுக்காரரின் சின்னச் சின்ன அடாவடிகளைக் கூட தாங்கிக் கொள்ள மறுக்கிறோம்! Rent Control-ன்னு சட்டம் பேசறோம்!

வாழ்வின் அடிப்படையே மானமுள்ள வாழ்வுரிமை!
* அதற்காக இன்னொரு நான்கு லட்சம் தமிழர்களைக் காவு கொடுத்து,
* ஐந்தாம் ஈழப் போரை நடக்க விட்டு,
அந்த வாழ்வுரிமையை வாங்கும் அளவுக்கு இனி போக விட மாட்டோம்
என்ற சிந்தனை......இங்குள்ள தமிழினத் தலைவர்களுக்கு வரட்டும்! தமிழனுக்கும் கொஞ்சம் வரட்டும்!


மக்களே, பதிவில் சொல்லாது விட்ட இன்ன பிற யோசனைகளையும் சொல்லி உதவுங்கள்!
Read more »

Friday, April 24, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்- தமிழ் ஈழம்- கடைசி நேர முயற்சிகள் என்ன?

அலுவல் வேலையா லண்டன் சென்று, நேற்று இரவு தான் ஊர் திரும்பினேன்! லண்டனில் சக அலுவலகத் தோழி ஒருத்தி (ஈழத்துப் பெண்)! அவளிடம் பேசும் போது சில ஈழ விஷயங்கள் பார்வைக்கு வந்தன! அவள் சொன்னது: "90% வரை ஒளித்தல் மறைத்தல் இல்லாது, அனைத்து தரப்பு நியாயங்களோடே, பி.பி.சி-யின் ஈழச் செய்தி வழங்கல் நல்லதொரு விஷயம்!" - இதோ மொத்த ஈழ விவகாரங்களுக்கான பி.பி.சி சுட்டி!

ஆனால் இந்தப் பதிவை, வழியில் எழுதிக்கிட்டு வரும் போதே, அந்தக் "கடைசி நேரம்" ஈழத்தில் வந்து விட்டு இருக்குமோ? வந்து விட்டு இருக்குமோ?-ன்னு பயந்து பயந்து எழுத வேண்டிய ஒரு அவல நிலை! :(


ஈழத் தமிழர்களுக்கு கீழ்க்கண்ட பேச்சுகள் எவ்வளவு உதவிகரமா இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

* எம்.ஜி.ஆர், பிரபாகரனுக்கு தம் வீட்டில் விருந்து அளித்து, மஜ்ஜை எலும்பு கடிக்கக் கொடுத்தார்!
* கருணாநிதி சபாரத்தினத்துக்கு மட்டுமே நண்பர்! பிரபாகரனுக்கு அல்ல!
* ஜெயலலிதாவின் திடீர் ஈழ அக்கறைக்குக் காரணம் என்ன?
* வைகோ ஒரு தனி மனிதருக்காக ரத்த ஆறு ஓடும்-ன்னு சொன்னது சரியா?
* காவி வருண் காந்திக்கு ஒரு நியாயம், கருப்பு வைகோவுக்கு இன்னொரு நியாயமா?

* திருமா இப்படிச் சோடை போய் விட்டாரே!
* மருத்துவர் ராமதாஸ் செய்யும் சித்து மருத்துவ ஈழ லேகியம்!
* விஜய்காந்துக்கு உண்மையான ஈழ அக்கறை உண்டா?
* பத்ம ஸ்ரீ பட்டத்தைப் பாரதிராஜா திருப்பிக் கொடுக்கட்டும்!
* சீமான், அமீர் செய்வது அடாவடியா? அக்கறையா?

* இந்த நேரத்தில், 20-Twenty கிரிக்கெட் போட்டிகள் தேவையா?
* இங்கு ஸ்டிரைக் நடத்தினா, அங்கு சீஸ் ஃபையர் வருமா? ஃபாரஸ்ட் ஃபையர் வருமா?
* உண்ணாவிரதம் இருக்கும் மகளிரைப் பார்த்து கனிமொழி கலங்கியது நீலிக் கண்ணீரா? போலிக் கண்ணீரா?
* இத்தாலியின் பெண் எத்தாலியும் அறுக்கிறாளே!
***
***
***
இப்படி அவரவர் வசதிக்கேற்ப, எதுகை மோனையாப் போட்டு, வருஷக் கணக்கா "பேசிக்கிட்டே" இருக்கலாம்! ஏன் தலைமுறை தலைமுறையாவும் கூடப் பேசலாம்!

ஈழம் என்னும் இழவு வீட்டில் கூட "நான் அப்பவே தீர்மானம் போட்டேனே"-ன்னு சுயம் பேசுவது = மூவேந்தர் காலத்தில் இருந்து, இன்று வரை, தமிழ் இனம் மட்டுமே தவம் இருந்து வாங்கி வந்திருக்கும் ஒரு பிரத்யேக சாபம்!

அதனால் இது போன்று "பயன் தரும்" பேச்சுக்களை வேணாம்-ன்னு சொல்லலை! ஆனால் அதையெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிச்சி வச்சிக்கிட்டா என்ன? அப்போ அக்கு வேறு ஆணி வேறு அலசி ஆராய்ந்து வரலாற்றுப் புத்தகத்தில் இதெயெல்லாம் ஒவ்வொன்னா ஏற்றுவோம்! ஆனால் இப்போது???

இந்தப் பதிவின் நோக்கம்:
யார் யார், ஈழத் தமிழர்களை, எப்போது எல்லாம், எப்படி எல்லாம் கைவிட்டார்கள் என்பது பற்றிய அலசல் அல்ல! அந்த அலசல் செய்ய எண்ணுபவர்கள் தயவு செய்து இந்தப் பதிவிற்குள் வர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

இந்தப் பதிவின் நோக்கம்:
இப்போதைய உருப்படாத நேரத்திலும், உருப்படியா ஒன்னு ரெண்டாவது தேறுமா-ன்னு பார்க்கத் தான் இந்தப் பதிவு!
கடைசிக் கட்டத்தில் என்னென்ன சிறு முயற்சிகள் சாத்தியம் என்பதைப் பற்றிய ஆலோசனைகளை வாங்கி, "தகுந்தவர்களிடம்" சேர்ப்பிப்பதே!

யார் இந்தத் "தகுந்தவர்கள்"?
* நார்வே ஏற்கனவே கையைச் சுட்டுக் கொண்டு ஒதுங்கிருச்சி!
* ஐ. நா. சபை சொல்லியே கேக்க மாட்டேங்குறானுங்க!
* அமெரிக்கா பேச்சு கூட எடுபடாது போல இருக்கே!

அம்புட்டு விடாப்பிடித்தனம் இருக்கும் சூழலில்....பெருசா என்ன தான் செய்ய முடியும்-ன்னு கேக்கறீங்களா?



செய்ய முடியும்!

மக்களுக்காக கொள்கையா? கொள்கைகளுக்காக மக்களா?

வாழும் கலை அமைப்பின் ஆன்மீகத் தலைவர் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்பவர் - இவரை நம்மில் பல பேருக்கும் தெரியும்-ன்னே நினைக்கிறேன்! எனக்கும் இவர் பற்றிய விபரங்கள் கேள்வி ஞானம் தான்!
இவர் சென்ற வாரம் இலங்கை சென்று வந்திருக்கிறார்! மூனு நாள் பயணம்! (Apr 20,21,22)

பெருசா எல்லாம் ஒன்னும் சாதிச்சிடலை அவரு! ஆனா ஈழ அரசியல், ஈழ வரலாறு, ஈழ இயக்கம்-ன்னு சாகும் நேரத்திலும் "பேசிக்" கொண்டு இருக்காமல்...
கொஞ்சம் தைரியமாகவே இலங்கைக்குள் காலடி எடுத்து வச்சிருக்காரு மனுசன்!

அவர் பயணத்தின் காணொளிப் (வீடியோ) படங்களைப் பார்த்தேன்!
* கொழும்பில் புத்த மதத் துறவிகள் கிட்ட பேச்சு!
* மகா "கனம்" பொருந்திய ராஜபக்சே "ஐயா" கிட்ட போயி சந்திப்பு!
* எல்லாத்த விட முக்கியமா, வவுனியா ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நம்ம தமிழர்களை நேரில் போயி பார்த்து, ஆறுதல்!

அவர்களுக்கு Trauma/மனச்சிதைவுக்கு சில மாற்று முயற்சிகள்-ன்னு ஏதோ தம்மால முடிஞ்சதை ஏற்பாடு பண்ணிட்டு வந்திருக்காரு!
பெருசா எல்லாம் ஒன்னும் பண்ணிடலை! ஆனா இந்த ஸ்ரீ ஸ்ரீ சொன்ன ஒரே ஒரு வாசகம் மட்டும், இன்னும் என் மனசுக்குள்ளாற ஓடிக்கிட்டு இருக்கு:

"துன்பத்தில் இருக்கும் போது உதவிக்கு வராத ஆன்மீகம்-ன்னா, எதுக்கு அந்த ஆன்மீகம்?"

நீங்களும் அசைபடங்களைப் பாருங்கள்!






சரி, இவரை வச்சிக்கிட்டு கடைசி நேர முயற்சியா, ஏதாச்சும் குறைஞ்ச பட்சமாவது செய்ய முடியுமா?
இந்த நேரத்திலும் ராஜபக்சேவைப் போயி நேராப் பாக்க முடியும்-ன்னு இருக்கும் இவர் போன்றோரை வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்?

1. தப்பி வந்து இராணுவ முகாம்களில் இருக்கும் தமிழர்களை இலங்கை அரசு பட்டியல் எடுத்து அடையாள அட்டை கொடுக்கிறது!
அந்தப் பட்டியலை ஐ.நா-விடமோ, செஞ்சிலுவைச் சங்கத்திடமோ, இல்லை பொதுவான நிறுவனத்திடமோ பகிரச் சொல்ல வேண்டும்!

நாளை இந்த அகதிகளுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுனா? யார் யாருக்கு என்னென்ன ஆச்சு என்பதை அவர்கள் குடும்பங்கள் அறிய இது உதவிகரமா இருக்கும்! உலகமே அறிய உதவியா இருக்கும்!

இத்தனை பேர் தப்பிச்சி வந்தாங்க! இத்தனை பேர் இன்னும் உயிரோடு தான் இருக்காங்க! - என்ற தகவலால், இலங்கை அரசாங்கம் மீது குறைந்தபட்ச நம்பிக்கை வர வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இதைப் பெற்றுக் கொடுக்க வேணும்! அரசாங்கத்திடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து வலியுறுத்த எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும்!

இராணுவ ரகசியம் தானே வெளியே சொல்லக் கூடாது! தப்பி வந்து மக்களின் பேரைக் கூடவாச் சொல்லக் கூடாது?
அவர்களில் யாரேனும் புலிகள்-ன்னு சந்தேகப்பட்டால், அதையும் தனிக் கலரில் அடையாளம் இட்டே கொடுக்கட்டுமே? கொடுங்கய்யா! அது போதும்!

2. இரண்டு லட்சம் தமிழர்கள் சாவதற்குப் பதில் ரெண்டாயிரம் தமிழர்கள் செத்தால் போதுமானது! அதுக்கு ஏதாச்சும் பண்ண முடியுமா? இப்படி எழுத எனக்கே வெட்கமா இருக்கு! :((

மண் அணை உடைக்கப்பட்ட பின் வெளியேறிய தமிழர்கள் ஐம்பாதாயிரம்-ன்னு ஒரு பேச்சுக்கு வச்சிப்போம்! இன்னும் வன்னிப் பகுதியில் மாட்டிக் கொண்டிருக்கும் மற்ற மக்களின் உயிர்களை முடிந்த மட்டும் எப்படிக் காப்பாற்றலாம்?

பெளத்த மற்றும் இதர சமயத் துறவிகளையோ, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இயக்கத்தினரையோ வன்னிக் காட்டுக்குள் அனுப்பினால், தமிழர்களை மீட்டுக் கொண்டு வர முடியுமா? சாத்தியமா? வர நினைப்பவர்கள் வந்து விடட்டும்! அப்பறம் உங்க "ஒண்டிக்கு ஒண்டிகளை" வைத்துக் கொள்ளுங்களேன்!


3. முகாம் மாறி, இப்போது "அதி"காரத்தில் இருக்கும் கருணா போன்ற தமிழர்களின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் அறிந்து வைத்திருக்கும் ரகசிய வழி, காட்டின் வேறு வழிகளைத் திறந்து விட முடியுமா? மேலும் மக்கள் வெளியேற ஏதாச்சும் செய்ய முடியுமா?

4. உணவுப் பொட்டலம் மற்றும் மருந்துகளை முகாம்களுக்கு மட்டும் கொடுக்காமல், வன்னிக் காட்டில் அடைபட்டிருக்கும் மற்றவர்களுக்கும் ஓரிரு முறையாச்சும் "வீசச்" செய்ய முடியுமா? குறிப்பாக குழந்தைகள் பசியால் சாகாமல் இருக்க இது உதவியா இருக்கும்!

5. பன்னாட்டுப் பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்க வேணாம்! அவர்கள் எடுக்கும் படத்தை எல்லாம் பாத்துத் தான் பாவப்பட்ட ஜீவன்களின் நிலைமையை அறியணும்-ன்னு அவசியமில்லை! மருத்துவர்களையாவது அனுமதிக்க வழி வகை செய்து தர முடியுமா? அட் லீஸ்ட் பெண் மருத்துவர்கள்?

இது போன்ற சின்ன சின்ன முயற்சிகள்! இப்படி எதை எதையெல்லாம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுப் பெற முடியும்-ன்னு நினைக்கறீங்க? யோசிச்சிச் சொல்லுங்களேன்!
அவர்களுக்கே தோனாதது, ஸ்ரீ ஸ்ரீ-க்கே தோனாதது கூட உங்களுக்கு ஒரு வேளை தோனலாம்! அதை ஒன்னாத் திரட்டி அவருக்கு அனுப்பி வைச்சா.....

அவரால் முடிந்த வரை, அவரும் கடைசி நேர முயற்சியாய் முயற்சிக்கட்டும்!
சில சமயம், பெரிய உலக்கைகளை விட,
இவரைப் போன்ற சிறிய துரும்பு தான் பல் குத்தவும் உதவுகிறது!

அதற்கப்புறம் தமிழனின் தலை விதி! :(((

அது புத்தரோ, பெருமாளோ, இல்லை வேறு எதுவோ...
ஈழத்து மக்களுக்கு இறுதி நேரச் சிறு உதவிகள் எது கிடைச்சாலும்...
புத்தம் சரணம் கச்சாமி-ன்னு சொல்ல அடியேனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை!
மக்களுக்காகத் தான் கொள்கை! கொள்கைக்காக மக்களைக் காவு கொடுத்தல் கூடவே கூடாது!

புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP