மார்கழி-25: திரு+தக்க+செல்வம்=பிள்ளை+இல்லாத+பெற்றோர்!
பேரறிஞர் அண்ணா "ஓர் இரவு" என்ற நாடகத்தை ஒரே இரவில் எழுதியதாய்ச் சொல்லுவாய்ங்க! இங்கே ஆண்டாளும் "ஓர் இரவு" எழுதறா! ஆனா இது பெற்றோர்-பாசமுள்ள ஓர் இரவு! பெற்றோர் புலம்பும் ஓர் இரவு!
இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு மனசை என்னவோ செய்கிறது! அதனால் அதிக விளக்கங்கள் கொடுக்காது, மேலோட்டமாகச் சொல்லி முடிக்கிறேன்!
* பிள்ளை இருந்தும்-இல்லாமல், பறிகொடுத்த பெற்றோர்கள், வாடும் பெத்தவங்க, இவங்க எல்லாருக்கும் - இந்தப் பாசுரத்தைக் கோதையின் பேர் சொல்லி அடியேன் காணிக்கை ஆக்குகிறேன்!
* ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் "ஒளிந்து" வளர்ந்தாலும், அவர்கள் எல்லாரின் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - என்று காணிக்கை ஆக்குகிறேன்!
பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து = பிறந்ததோ தேவகியின் மகனாய்!
ஓர் இரவில் = ஒரே ராத்திரியில்....
ஒருத்தி மகனாய் = யசோதை மகனாய் மாறி விட்டான்!
ஒளித்து வளரத் = ஊர் அறியாமல் ஒளிக்கப்பட்டு வளர்ந்த குழந்தை!

இரவு = இன்பம்! இந்த இரவு, குழந்தை உருவாக்கத்துக்கும் காரணமாய் இருக்கு! குழந்தை பிரிவாக்கத்துக்கும் காரணமா இருக்கு!
எப்படி இருக்கும் அந்தத் தேவகிக்கு? கண் முன்னே தூக்கிக் கொடுத்தாள்! தனக்கு மகிழ்ச்சி இல்லீன்னாலும், கண் காணாத இடத்தில், கம்சன் காணாத இடத்தில், நல்லபடியா வளர்ந்தாலே போதும்...
* குழந்தைக்காக, தாய் ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவளே தாய்!
* இறைவனுக்காக, மோட்ச ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவனே பக்தன்!
வடகலை-தென்கலை, சைவம்-வைணவம்-ன்னு வல்லடி செய்தால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா, இல்லை அவன் மனசு வாடுமா-ன்னு எண்ணிப் பார்க்காதவன் பக்தன் அல்ல!
வெறுமனே பஞ்சபாத்திரம் வைத்துக் கொண்டு ஜலம் விடுபவனே அவன்! அனுட்டான சீலன்! அவனுக்குத் தாய் மனது இல்லை! பக்த மனது இல்லை!!
தரிக்கிலான் ஆகித் = தாங்க மாட்டாதவன் ஆகி
தான்-தீங்கு நினைந்த = தனக்குத் தானே கெட்டது நினைத்துக் கொண்டான்! கம்சன்!
அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்றில்லை என்கிறார் ஐயன் வள்ளுவன்! சதா பொறாமை பிடித்து, தாங்க மாட்டாமல், அலைந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்?
தான்-தீங்கு நினைந்த கதையாய் முடியும்! தனக்குத் தானே தீங்கு நினைத்துக் கொண்ட கதையாய் முடியும்!
* சொ.செ.சூ (சொந்த செலவில் சூன்யம்)-ன்னு, இப்போ வலையுலக மக்கள் மாத்திட்டாய்ங்க!
* தா.தீ.நி (தான்-தீங்கு நினைந்த)-ன்னு, ஆண்டாள் அன்றே இதைச் சொல்கிறாள் பாருங்கள்! அவளும் அக்காலத்து வலைப்பதிவர் தான்! Kothai was a Blogger!:)
கருத்தைப் பிழைப்பித்துக் = கம்சனின் எண்ணத்தை, பிழை எனக் காட்டினான்! அவன் நினைத்ததை நடக்க ஒட்டாமல் செய்தான்!
கம்சன் கருத்தைப் பிழைப்பித்தான்! நம்மைப் பிழைக்க-வைத்தான்!
கஞ்சன் வயிற்றில் = கம்சனின் வயிற்றில் (கம்ஸன் என்பதைத் தமிழாக்குகிறாள் கோதை = கஞ்சன் என்று ஆகுகிறது!:)
கம்சன் கஞ்சன் தான்! பிறர்க்கும் நல்லபடியா கொடுக்க எண்ணாது, தானும் நல்லபடியா வச்சிக்க எண்ணாது, கண்ணனைப் பூட்டிப் பூட்டியே வச்சிக்கிட்ட கஞ்சன்! கண்ணனின் எண்ணங்களை (கெட்ட எண்ணமே ஆனாலும்) பூட்டி பூட்டி வச்சிக்கிட்டான்! :)
நெருப்பென்ன நின்ற நெடுமாலே = அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற பெருமாளே! என்ன அழகான சொல்லாட்சி, கருத்தாட்சி பாருங்க!
வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே-ன்னு நாட்டுப்புறத்தில் சொல்வதை, கோதை எப்படித் தமிழ் ஆக்குறா பாருங்க! வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே = நெருப்பென்ன நின்ற!
மெய்யாலுமே நல்லவங்க, "வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே"-ன்னு, மனம் நொந்து சொல்லும் போது என்ன ஆகுது?
யாரும் தீயோரை அழிக்க வேணாம்! தீயோரின் அழிவை அவங்களே விதைச்சிக்கிறாங்க! நெருப்பைத் தங்களுக்குள் தானே விதைச்சிக்கிறாங்க! அது ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும் போது, பெரும் ஜூவாலையாய் மாறி, அடங்கி, தானே ஒடுங்கி விடுகிறது!
உன்னை அருத்தித்து வந்தோம் = உன்னை (சென்ற பாசுரத்தில்) அர்ச்சனை செய்தவாறே வந்தோம்!
பறை தருதியாகில் = எங்களுக்கு நோன்புப் பொருளான பறை தரணும்-னு நீ நினைச்சீன்னா,

திருத்தக்க செல்வமும், சேவகமும் = பிள்ளையை இழந்து துடிக்கும் ஒரு பாட்டில், பணமா பெருசா கேப்பாய்ங்க? இல்லீன்னா வளமான செல்வம் கேப்பாய்ங்களா? இங்கே செல்வத்தைக் கேட்கிறாளே கோதை? என்ன இது விசித்திரம்?
திருத்தக்க செல்வம்-ன்னா என்ன? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க! ஏற்கனவே "நீங்காத செல்வம்"-ன்னு மூன்றாம் பாசுரத்திலும் பொருள் சொல்லி இருக்கேன்!
ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்", "திருத்தக்க செல்வம்"!
(இனி வருபவை ஆதவன் போல் ஒளிரும் ஆச்சார்ய விளக்கங்கள் அல்ல!
அகல் விளக்கு போல அலைபாயும் அடியேனின் விளக்கங்கள் தான்!)
எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்! ஆனால் யாருக்காக?
நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?
* குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?
தான், தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?
கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை! எப்படி இப்படி ஒரு ஆத்ம ஞானம்?
அதான் செல்வத்துள் செல்வம் = மழலைச் செல்வம்! தான் கொண்டு வந்த உயிர்...தன்னைத் தனக்கே, "நம்மை நமக்கே", உணர்த்துகிறது!
* செல்வத்துக்கே தக்க செல்வம் = "திரு"வுக்கே தக்க செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இது வரை சேர்த்து வச்ச செல்வத்துக்கே, செல்வம் என்றால் என்ன-ன்னு உணர்த்துகிறது! சம்பாதிச்சு வச்ச செல்வத்துக்கே, செல்வமாயும், செல்லமாயும் வந்து அமைகிறது = மழலைச் செல்வம்!
அது மட்டுமா? மனிதனுக்கு ஆத்மா தான் உண்மையான செல்வம்! அது தான் எப்பவும் கூட வரப் போவுது! அந்த ஆத்மாவை அறியணும்-ன்னா முதல் படி என்ன? "தான்" என்பதை நீக்கணும்! "என்னை" இழந்த நலம்-ன்னு சொல்லுவாரு அருணகிரி!
இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step செல்வம் = மழலைச் செல்வம்!
* ஃபாங்க் அக்கவுண்ட் செல்வத்துக்கும் அது தான் செல்வம்!
* ஆத்ம அக்கவுண்ட் செல்வத்துக்கும் அது தான் செல்வம்!
* செல்வத்தையே உணர வைக்கும் செல்வம் ஆகையாலே = திரு-வுக்கே தக்க செல்வம் ஆகையாலே திரு+தக்க+செல்வம்!
இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?
அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை! இந்தப் பாட்டு முழுதும் தேவகி-யசோதை-குழந்தை மனநிலை தான்! "மணநிலை"க் கோதை, "மனநிலை" பேசுகிறாள்!

*** இல்லாத குழந்தைக்கு எங்கிருந்து சேவகம் செய்வாள் தேவகி? ஆனாலும் செய்தாளாம்! எப்படி-ன்னு கேக்கறீங்களா? இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு பாடுவாளாம்! அச்சோ.......
வேணாங்க, நான் சொல்லலை! தேவகி புலம்பல்-ன்னு ஆழ்வார் தனியாகவே பாசுரம் பாடி கண் கலங்கி இருக்காரு!
அப்படித் திருத்தக்க செல்வத்துக்குத் தாலாட்டு பாடிப் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தாள்!
தேவகிக்கும், யதோதைக்கும் தக்க செல்வமாய் வந்தவன்=திரு+தக்க+செல்வம்!
தேவகிக்கும், யசோதைக்கும் செல்வத்துள் செல்வம் என்றால் என்ன என்று உணர வைத்தவன்=திரு+தக்க+செல்வம்!
அவன் சேவகத்தை, தேவகி, யசோதை இருவருமே செய்தார்கள்!
அவன் சேவகத்தை, யாமும் "பாடி"...வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
பிள்ளையைப் பறிகொடுத்து நிற்கும் பெற்றோர்கள் பலருக்கும் இந்தப் பாசுரம் ஆறுதல் தரட்டும்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
திரு என்பவள் ஸ்ரீ சப்த மாத்திரத்தாலே குறிக்கப்படுபவள்! அன்னை மகாலக்ஷ்மி! செல்வத்துக்கு எல்லாம் செல்வம் அவள்! ஆனால் அவளுக்கே செல்வம் எது?
* ஸ்ரீ-க்கே செல்வம் எது? = ஸ்ரீ-மன்-நாராயணன்!
* திருவுக்கே செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இப்படித் த்வய மந்திரமான பொருளும் இங்கே இதற்குக் கொள்ள வேணும்! அப்போ தான் முழுமை பெறும்!
நம்மை நமக்கு உணர்த்தும் 1st Step செல்வம் = மழலைச் செல்வம்!
நம்மை நமக்கு உணர்த்தும் Final Step செல்வம் = ஸ்ரீ = திருத்+தக்க+செல்வம்!

* ஸ்ரீ இல்லாத நாராயணன் = வெறும் நாராயணன்!
* நாராயணன் இல்லாத ஸ்ரீ = கற்பனை கூடப் பண்ணிப் பாக்க முடியாது! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
இப்படி இந்தச் செல்வத்துக்கு, அந்தச் செல்வம்!
அந்தச் செல்வத்துக்கு இந்தச் செல்வம்! = திரு+தக்க+செல்வம்!
திரு+தக்க+செல்வமும், சேவகமும் யாம் பாடி = இந்த இரு செல்வங்களுக்கான "சேவகமே" = கைங்கர்யம்! திருத்தொண்டு!
அதைப் பாடினால், செய்தால், வருத்தம் தீரும்! வருத்தம் தீர்ந்தால் மகிழ்ச்சி தானாய் வரும்! அதான் வருத்தமும் தீர்ந்து+மகிழ்ந்து!
1. சேவகமும் யாம் பாடி,
2. வருத்தமும் தீர்ந்து,
3. மகிழ்ந்து,
4. ஏல்-ஓர் எம் பாவாய்!
எங்கள் சேவகங்களை ஏற்றுக் கொண்டு, எங்களையும் ஏல் கொள் பெருமாளே! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
Read more »
இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு மனசை என்னவோ செய்கிறது! அதனால் அதிக விளக்கங்கள் கொடுக்காது, மேலோட்டமாகச் சொல்லி முடிக்கிறேன்!
* பிள்ளை இருந்தும்-இல்லாமல், பறிகொடுத்த பெற்றோர்கள், வாடும் பெத்தவங்க, இவங்க எல்லாருக்கும் - இந்தப் பாசுரத்தைக் கோதையின் பேர் சொல்லி அடியேன் காணிக்கை ஆக்குகிறேன்!
* ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் "ஒளிந்து" வளர்ந்தாலும், அவர்கள் எல்லாரின் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - என்று காணிக்கை ஆக்குகிறேன்!
பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,
தரிக்கிலான் ஆகித், தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,
வருத்தமும் தீர்ந்து, மகிழ்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து = பிறந்ததோ தேவகியின் மகனாய்!
ஓர் இரவில் = ஒரே ராத்திரியில்....
ஒருத்தி மகனாய் = யசோதை மகனாய் மாறி விட்டான்!
ஒளித்து வளரத் = ஊர் அறியாமல் ஒளிக்கப்பட்டு வளர்ந்த குழந்தை!

இரவு = இன்பம்! இந்த இரவு, குழந்தை உருவாக்கத்துக்கும் காரணமாய் இருக்கு! குழந்தை பிரிவாக்கத்துக்கும் காரணமா இருக்கு!
எப்படி இருக்கும் அந்தத் தேவகிக்கு? கண் முன்னே தூக்கிக் கொடுத்தாள்! தனக்கு மகிழ்ச்சி இல்லீன்னாலும், கண் காணாத இடத்தில், கம்சன் காணாத இடத்தில், நல்லபடியா வளர்ந்தாலே போதும்...
* குழந்தைக்காக, தாய் ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவளே தாய்!
* இறைவனுக்காக, மோட்ச ஸ்தானத்தையும் விட்டுக் கொடுப்பவனே பக்தன்!
வடகலை-தென்கலை, சைவம்-வைணவம்-ன்னு வல்லடி செய்தால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா, இல்லை அவன் மனசு வாடுமா-ன்னு எண்ணிப் பார்க்காதவன் பக்தன் அல்ல!
வெறுமனே பஞ்சபாத்திரம் வைத்துக் கொண்டு ஜலம் விடுபவனே அவன்! அனுட்டான சீலன்! அவனுக்குத் தாய் மனது இல்லை! பக்த மனது இல்லை!!
தரிக்கிலான் ஆகித் = தாங்க மாட்டாதவன் ஆகி
தான்-தீங்கு நினைந்த = தனக்குத் தானே கெட்டது நினைத்துக் கொண்டான்! கம்சன்!
அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்றில்லை என்கிறார் ஐயன் வள்ளுவன்! சதா பொறாமை பிடித்து, தாங்க மாட்டாமல், அலைந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்?
தான்-தீங்கு நினைந்த கதையாய் முடியும்! தனக்குத் தானே தீங்கு நினைத்துக் கொண்ட கதையாய் முடியும்!
* சொ.செ.சூ (சொந்த செலவில் சூன்யம்)-ன்னு, இப்போ வலையுலக மக்கள் மாத்திட்டாய்ங்க!
* தா.தீ.நி (தான்-தீங்கு நினைந்த)-ன்னு, ஆண்டாள் அன்றே இதைச் சொல்கிறாள் பாருங்கள்! அவளும் அக்காலத்து வலைப்பதிவர் தான்! Kothai was a Blogger!:)
கருத்தைப் பிழைப்பித்துக் = கம்சனின் எண்ணத்தை, பிழை எனக் காட்டினான்! அவன் நினைத்ததை நடக்க ஒட்டாமல் செய்தான்!
கம்சன் கருத்தைப் பிழைப்பித்தான்! நம்மைப் பிழைக்க-வைத்தான்!
கஞ்சன் வயிற்றில் = கம்சனின் வயிற்றில் (கம்ஸன் என்பதைத் தமிழாக்குகிறாள் கோதை = கஞ்சன் என்று ஆகுகிறது!:)
கம்சன் கஞ்சன் தான்! பிறர்க்கும் நல்லபடியா கொடுக்க எண்ணாது, தானும் நல்லபடியா வச்சிக்க எண்ணாது, கண்ணனைப் பூட்டிப் பூட்டியே வச்சிக்கிட்ட கஞ்சன்! கண்ணனின் எண்ணங்களை (கெட்ட எண்ணமே ஆனாலும்) பூட்டி பூட்டி வச்சிக்கிட்டான்! :)
நெருப்பென்ன நின்ற நெடுமாலே = அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற பெருமாளே! என்ன அழகான சொல்லாட்சி, கருத்தாட்சி பாருங்க!
வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே-ன்னு நாட்டுப்புறத்தில் சொல்வதை, கோதை எப்படித் தமிழ் ஆக்குறா பாருங்க! வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே = நெருப்பென்ன நின்ற!
மெய்யாலுமே நல்லவங்க, "வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே"-ன்னு, மனம் நொந்து சொல்லும் போது என்ன ஆகுது?
யாரும் தீயோரை அழிக்க வேணாம்! தீயோரின் அழிவை அவங்களே விதைச்சிக்கிறாங்க! நெருப்பைத் தங்களுக்குள் தானே விதைச்சிக்கிறாங்க! அது ஒரு குறிப்பிட்ட பக்குவம் வரும் போது, பெரும் ஜூவாலையாய் மாறி, அடங்கி, தானே ஒடுங்கி விடுகிறது!
உன்னை அருத்தித்து வந்தோம் = உன்னை (சென்ற பாசுரத்தில்) அர்ச்சனை செய்தவாறே வந்தோம்!
பறை தருதியாகில் = எங்களுக்கு நோன்புப் பொருளான பறை தரணும்-னு நீ நினைச்சீன்னா,

திருத்தக்க செல்வமும், சேவகமும் = பிள்ளையை இழந்து துடிக்கும் ஒரு பாட்டில், பணமா பெருசா கேப்பாய்ங்க? இல்லீன்னா வளமான செல்வம் கேப்பாய்ங்களா? இங்கே செல்வத்தைக் கேட்கிறாளே கோதை? என்ன இது விசித்திரம்?
திருத்தக்க செல்வம்-ன்னா என்ன? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க! ஏற்கனவே "நீங்காத செல்வம்"-ன்னு மூன்றாம் பாசுரத்திலும் பொருள் சொல்லி இருக்கேன்!
ஆண்டாள் காட்டும் செல்வம் = "நீங்காத செல்வம்", "திருத்தக்க செல்வம்"!
(இனி வருபவை ஆதவன் போல் ஒளிரும் ஆச்சார்ய விளக்கங்கள் அல்ல!
அகல் விளக்கு போல அலைபாயும் அடியேனின் விளக்கங்கள் தான்!)
எவ்வளவோ சம்பாதிக்கறோம்! பணம்-ன்னு மட்டும் இல்லை, நல்ல பேரு, புகழ், கல்வி, கலை-ன்னு எத்தனையோ செல்வங்கள்! ஆனால் யாருக்காக?
நமக்காகத் தான், நம் அபிமான-அகங்காரத்துக்காகத் தான் என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் இதெல்லாம் மாறி விடுகிறதே! எவ்ளோ சம்பாதிச்சாலும், என்ன நினைக்கிறோம்?
* குழந்தைகள் நல்லபடியா இருந்தாப் போதும்-ப்பா என்று நம்மை மறக்கடிக்கச் செய்வது யாரு?
தான், தான், தான்-ன்னு பிறந்ததில் இருந்து சுயநலமா இருந்த மனுசன், பெத்த அம்மா-அப்பா கிட்ட கூட ஓரளவு சுயநலம் காட்டும் மனுசன், தான் அம்மா-அப்பா ஆவும் போது மட்டும் எப்படி மாறுகிறான்?
கொஞ்ச நாளைக்கெல்லாம் இந்தப் புத்தி வந்து விடுகிறதே! "புள்ளைங்க நல்லா இருந்தாப் போதும்" - இந்த ஞானம் எப்படித் தானா வருது?
எந்த மரத்தின் கீழேயும் உட்காரலை! எந்த குருவும் சொல்லிக் கொடுக்கலை! எப்படி இப்படி ஒரு ஆத்ம ஞானம்?
அதான் செல்வத்துள் செல்வம் = மழலைச் செல்வம்! தான் கொண்டு வந்த உயிர்...தன்னைத் தனக்கே, "நம்மை நமக்கே", உணர்த்துகிறது!
* செல்வத்துக்கே தக்க செல்வம் = "திரு"வுக்கே தக்க செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இது வரை சேர்த்து வச்ச செல்வத்துக்கே, செல்வம் என்றால் என்ன-ன்னு உணர்த்துகிறது! சம்பாதிச்சு வச்ச செல்வத்துக்கே, செல்வமாயும், செல்லமாயும் வந்து அமைகிறது = மழலைச் செல்வம்!
அது மட்டுமா? மனிதனுக்கு ஆத்மா தான் உண்மையான செல்வம்! அது தான் எப்பவும் கூட வரப் போவுது! அந்த ஆத்மாவை அறியணும்-ன்னா முதல் படி என்ன? "தான்" என்பதை நீக்கணும்! "என்னை" இழந்த நலம்-ன்னு சொல்லுவாரு அருணகிரி!
இப்படி யாருமே சொல்லிக் கொடுக்காமல், "தான்" என்பதை, வாழ்க்கையில் தானாகவே நீக்க வைக்கும் 1st step செல்வம் = மழலைச் செல்வம்!
* ஃபாங்க் அக்கவுண்ட் செல்வத்துக்கும் அது தான் செல்வம்!
* ஆத்ம அக்கவுண்ட் செல்வத்துக்கும் அது தான் செல்வம்!
* செல்வத்தையே உணர வைக்கும் செல்வம் ஆகையாலே = திரு-வுக்கே தக்க செல்வம் ஆகையாலே திரு+தக்க+செல்வம்!
இந்த மழலைச் செல்வத்துக்கான சேவகம் செய்வதில் நாம வெட்க மானம் பார்ப்பதில்லை! மலத்தையும் துடைத்து விடுகிறோம், ஆய் கழுவி விடுகிறோம்! ரொம்பவும் அலுத்துக் கொள்வதும் இல்லை! சம்பளம் வாங்காம கூடச் சேவகம் செய்கிறோம் அல்லவா?
அதான் திரு+தக்க+செல்வமும், சேவகமும் என்கிறாள் கோதை! இந்தப் பாட்டு முழுதும் தேவகி-யசோதை-குழந்தை மனநிலை தான்! "மணநிலை"க் கோதை, "மனநிலை" பேசுகிறாள்!

*** இல்லாத குழந்தைக்கு எங்கிருந்து சேவகம் செய்வாள் தேவகி? ஆனாலும் செய்தாளாம்! எப்படி-ன்னு கேக்கறீங்களா? இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு பாடுவாளாம்! அச்சோ.......
வேணாங்க, நான் சொல்லலை! தேவகி புலம்பல்-ன்னு ஆழ்வார் தனியாகவே பாசுரம் பாடி கண் கலங்கி இருக்காரு!
அப்படித் திருத்தக்க செல்வத்துக்குத் தாலாட்டு பாடிப் பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தாள்!
தேவகிக்கும், யதோதைக்கும் தக்க செல்வமாய் வந்தவன்=திரு+தக்க+செல்வம்!
தேவகிக்கும், யசோதைக்கும் செல்வத்துள் செல்வம் என்றால் என்ன என்று உணர வைத்தவன்=திரு+தக்க+செல்வம்!
அவன் சேவகத்தை, தேவகி, யசோதை இருவருமே செய்தார்கள்!
அவன் சேவகத்தை, யாமும் "பாடி"...வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
பிள்ளையைப் பறிகொடுத்து நிற்கும் பெற்றோர்கள் பலருக்கும் இந்தப் பாசுரம் ஆறுதல் தரட்டும்! வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
திரு என்பவள் ஸ்ரீ சப்த மாத்திரத்தாலே குறிக்கப்படுபவள்! அன்னை மகாலக்ஷ்மி! செல்வத்துக்கு எல்லாம் செல்வம் அவள்! ஆனால் அவளுக்கே செல்வம் எது?
* ஸ்ரீ-க்கே செல்வம் எது? = ஸ்ரீ-மன்-நாராயணன்!
* திருவுக்கே செல்வம் = திரு+தக்க+செல்வம்!
இப்படித் த்வய மந்திரமான பொருளும் இங்கே இதற்குக் கொள்ள வேணும்! அப்போ தான் முழுமை பெறும்!
நம்மை நமக்கு உணர்த்தும் 1st Step செல்வம் = மழலைச் செல்வம்!
நம்மை நமக்கு உணர்த்தும் Final Step செல்வம் = ஸ்ரீ = திருத்+தக்க+செல்வம்!

* ஸ்ரீ இல்லாத நாராயணன் = வெறும் நாராயணன்!
* நாராயணன் இல்லாத ஸ்ரீ = கற்பனை கூடப் பண்ணிப் பாக்க முடியாது! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
இப்படி இந்தச் செல்வத்துக்கு, அந்தச் செல்வம்!
அந்தச் செல்வத்துக்கு இந்தச் செல்வம்! = திரு+தக்க+செல்வம்!
திரு+தக்க+செல்வமும், சேவகமும் யாம் பாடி = இந்த இரு செல்வங்களுக்கான "சேவகமே" = கைங்கர்யம்! திருத்தொண்டு!
அதைப் பாடினால், செய்தால், வருத்தம் தீரும்! வருத்தம் தீர்ந்தால் மகிழ்ச்சி தானாய் வரும்! அதான் வருத்தமும் தீர்ந்து+மகிழ்ந்து!
1. சேவகமும் யாம் பாடி,
2. வருத்தமும் தீர்ந்து,
3. மகிழ்ந்து,
4. ஏல்-ஓர் எம் பாவாய்!
எங்கள் சேவகங்களை ஏற்றுக் கொண்டு, எங்களையும் ஏல் கொள் பெருமாளே! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!






