Showing posts with label 300. Show all posts
Showing posts with label 300. Show all posts

Friday, August 13, 2010

300) ஆண்டாள் எழுதிய உயில்! கடைசிக் கவிதை!

கவிதையிலேயே யாராச்சும் உயில் எழுதி வச்சி இருக்காங்களா? :) கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!

தோழி கோதைக்கு நேற்று பிறந்தநாள் அல்லவா? (12-Aug-2010)! ஆடிப் பூரம்!
எனக்கும் அவளுக்கு மூன்றே நாள் தான் வித்தியாசம்! அதான் அவ்ளோ நெருக்கம் போல! :)

கண்டிப்பா அவ பிறந்தநாள் அன்னிக்கி, ஒவ்வொரு ஆண்டும் பதிவு வந்துரும்! ஆனால் இந்த ஆண்டு தான், ஆரம்பம் முதலே ஏதோ ஒன்னு தட்டுது! பரவாயில்லை! எதுன்னாலும் என் முருகன் பார்த்துக் கொள்வான்! நாம மேட்டருக்கு வருவோம்!
Happy Birthday dee kOthai! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழீ!
ஹேய், லேட்டா வாழ்த்துறேன்-ன்னு, உயில்-ல என் பேரை எழுதாம விட்டுறாதேடீ! :)

மாதவிப் பந்தலில் இது 300ஆம் பதிவு! முந்நூறில் முருகனருள் முன்னிற்க!
இந்தப் பந்தலில் கூவு குயில்களான...வாசகர்கள்...நீங்கள்...
உங்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் + அப்புறம் நன்றி! :)
மாதவிப் பந்தல் மேல் பல் கால் அடியவர்கள் கூவின காண்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!



அப்படி என்ன தான்யா அவ எழுதிட்டுப் போயிருப்பா, கடைசிக் கவிதையில்? பார்க்கலாமா? இதோ....ஆண்டாள் எழுதிய உயில்...Last Testament!

பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!

பிரியாது என்றும் இருப்பார்களே!! பிரியாது என்றும் இருப்பார்களே!!!



என்ன, ஏதாச்சும் புரிஞ்சுதா? :)

இதுல எங்கேய்யா சொத்து விபரம் சொல்லி இருக்கு? மறைச்சு சொல்லுறாளா? வெளிப்படையாச் சொல்லுறாளா? வில்லங்கம் ஒன்னும் இல்லியே? :)

சரி, உயில்-ன்னா என்ன?

1. முதலில் சொத்து பத்து சொல்லி இருக்கணும்!
2. அதுவும் நம்ம பேருக்குச் சொல்லி இருக்கணும்!

3. அதுவும் கொடுக்கறவங்க தெளீவாக் கையெழுத்து போட்டு இருக்கணும்!
4. போதாக்குறைக்கு, சாட்சிக் கையெழுத்து வேற கரெக்ட்டா இருக்கணும்!

5. முக்கியமா..சொத்து, உடனே கைக்கு வரா மாதிரி இருக்கணும்! இன்னும் இருபது வருசம் கழிச்சி தான் பாத்தியதை-ன்னு எழுதி வச்சிட்டா நல்லாவா இருக்கும்?

6. இவ்வளவும் ஆன பின்பு, வேற மனிதர்களாலோ/வாரிசுகளாலோ எழுதின உயிலில் வில்லங்கம் ஏதும் வராம இருக்கணும்!

ஹா ஹா ஹா...
இப்போ கே.ஆர்.எஸ் உயில்-ன்னு சொல்லுறோம்-ன்னு வைங்க!
அதுல கே.ஆர்.எஸ் நல்லா இருக்கானா போன்ற தகவல்களா வேணும்? சாகறவன் என்ன எழுதி வச்சிட்டு செத்தா நமக்கு என்ன? நமக்கு வேணுங்கறதை எழுதி வச்சிட்டாப் போதும்! அதானே ஒரு உயிலின் மேல் நம்ம "நியாயமான" எதிர்பார்ப்பு? :)

அப்பறம் எதுக்கு, எழுதி வச்சவர் பேரைக் கொண்டு, "இன்னார் உயில்"-ன்னு உலகம் சொல்லுது-ன்னு தான் தெரியலை!
பேசாம "இன்னாருக்கு உயில்"-ன்னு சொல்லீறலாம்-ல்ல?
மயிலே மயிலே உன் உயிலே எங்கே?? :) முருகா!



இன்னிக்கி தேதியில் ஆண்டாள் கதை, ஒரு Fairy Tale!.....ஆனால் அன்று?

* ஏலாப் பொய்கள் உரைப்பானை-ன்னு இறைவனைத் திட்டுறா!
* மானமிலாப் பன்றி-ன்னு எம்பெருமானை வசை பாடுறா!
* பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல், வையகத்தார் மதியாரே-ன்னு சாபம் விடுறா!
இன்றைய அறிவியல் காலத்தில் கூட, லோக்கல் பாஷையில் எழுதினால், புனிதம் கெட்டு விட்டதாகப் பார்க்கும் ஆஸ்திக உலகம், எப்படி இவளை ஏற்றுக் கொண்டது?

* "எலே, கண்ணாலம், கிரிசை, கீச்-கீச், அல்குல், பெண்டாட்டி, மச்சான், புனித எருமை"-ன்னு லோக்கல் சொற்களை எல்லாம் "வேதம் அனைத்துக்கும் வித்தில்" கொண்டாந்து வைக்கிறா! :)
* ஆற்ற+அனந்தல் என்று கர்ம/ஞான கண்மூடித்தனமான பிடிப்பை, ஒரு பிடி பிடிச்சி பாக்குறா!
* பத்மநாபனை, பற்பநாபன்-ன்னு தமிழில் மாத்தி வடமொழியாளர் கோவத்தை வேற வாங்கிக்குறா! :)

திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கிறேன்!
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே
-ன்னு அவன் எச்சில் ருசிக்கு ஏங்குறாளே! - அடப் பாவிங்களா! இதையா கோயில் கருவறையில் இன்னிக்கும் பாடுறாங்க? சேச்சேச்சே! லேடீஸ் போற வர இடத்தில், இப்படியெல்லாம் பாடலாமா? இதே பாக்யராஜ் செஞ்சா சும்மா விடுவீங்களா? :) Nonsense of the stupid of the AndaaL :))


* ஆன்மீகத்தில்.....ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த ஒரு நிலையில்,
* இலக்கியத்தில்.....ஆண்கள் அல்குல்-ன்னு எல்லாம் வர்ணிச்சி எழுதினா, ஆகா ஓகோ போடும் ரசிக மணிகள் மத்தியில்,
ஒரு பெண் இப்படியெல்லாம் பாடினதா, சங்க இலக்கியத்தில் கூடச் சரித்திரமே இல்லையே!

சங்கப் பெண் புலவர்களான காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார் கூட அடக்கித் தானே வாசிச்சி இருக்காங்க? சங்க இலக்கியத்தில் பெண்கள் பங்கு மகத்தானது! ஆனால் அவர்களும் சமூக இழிவுணர்ச்சிக்கு (Social Stigma) கட்டுப்பட்டுத் தானே பாட முடிந்தது? ஆண்பாற் புலவரின் வர்ணிப்பைப் போல் பெண்பாற் புலவர்கள் வர்ணிக்கப் புகுந்தால் என்ன ஆகும்???

ஆன்மீகம் பேசிய ஒரே காரணத்துக்காக, இல்லறம் மறுக்கப்பட்ட ஒரு பேதைப் பெண்! அந்தப் புனிதா என்பவள் காரைக்கால் அம்மையாகி....சுடுகாட்டு வாய்க்கரிசியை எல்லாம் தின்று பசியாறி....ஐயோ! அவ உள்ளம் தனிமையில் எப்படி எல்லாம் துடிச்சிதோ?
பேய் மகளிர் ஆனாளே! தானே வலிந்து வேண்டி பேய் உருக் கொண்டார் என்றல்லவா ஆன்மீக உலகம் அதை மாற்றி எழுதியது? :(((

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெண்கள்! ஆனால் யாரும் தலைவி அந்தஸ்துக்கு உயர முடியவில்லை!
வேதங்களைப் பெண்கள் வாயால் ஓதக் கூடாது என்று சாஸ்திரத்தைக் காட்டும் ஆண்கள்...
இவள் எழுதியதை மட்டும் "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" என்று கொண்டாடுகிறார்களே! எப்படி?

இவள் எப்படி ஜெயிச்சிக் காட்டினா என்பது தான் ஆச்சரியமா இருக்கு! இவளை எப்படி வளர விட்டாங்க-ன்னு தான் ஆச்சரியமா இருக்கு!
வாய்ச் சொல் வீரி இல்லை இவள்!
ஆன்மீகமோ, இலக்கியமோ....இவள் "பேசுபவள்" அல்ல! "நடப்பவள்"!!



* தன்னை அவன் ஏற்றுக் கொள்வானா-ன்னு கூட இவளுக்குத் தெரியாது! = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* வீதியில் பார்த்து, புறத்து அழகில் மயங்கி, உடனே முத்தமிட்டு முயங்கி, கண்டவுடன் காதல் கொண்டு விடவில்லையே! = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* சிறுமியாய் இருக்கும் போது தோழனாய், படிப்படியாய் வளர்ந்த பின்னரோ காதலனாய்.....நட்பா? காதலா?? = இவள் காதல், எப்படிக் "காதல்" ஆகும்?
* வாய்ச் சுவைக்கும் நாற்றத்துக்கும் அப்படி என்ன பஞ்சம்? "உடல் உறவுக்கு" மட்டும் தேடினால் பல மாப்பிள்ளைகள் கிடைத்து இருப்பார்களே! "உள்ள உறவுக்கும்" அல்லவா, அவனைப் பற்றிக் கொண்டாள்!
அதுவும் யாரை? பக்கத்து வீட்டுப் பையனையா? இல்லையே! காலம் கடந்தவனை அல்லவா பற்றிக் கொண்டாள்! = இவள் காதல், "காதல்" ஆகுமா?

"ஏலோ" ரெம்பாவாய்! "ஏலோ" ரெம்பாவாய் என்று வரிக்கு வரி வரித்த...இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா? = நெஞ்சகமே கோயில்! நினைவே சுகந்தம்!

இவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாளா என்ற கேள்விக்கே இடமில்லை!
இவளே ஏற்றுக் கொண்டாள்.....இப்படி ஒரு வாழ்வினை!
தன் நெஞ்சகமே இல்லம்! அவன் நினைவே சுகந்தம்!

என் பால் நோக்காயே ஆகிலும்...........உன் பற்றல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்............அகங் குழைய மாட்டேனே!!


இவள் துணிவே எனக்குத் துணை!
ஆண்டாள், தமிழை ஆண்டாள்...திருவடிகளே சரணம்!!



ஆகா.....அந்த உயில் சமாச்சாரம் என்ன ஆச்சி? அதைச் சொல்லவே இல்லையே!
அவளோட கடைசிக் கவிதை! அந்த உயில்?
அஞ்சு குடிக்கும் அவள் ஒரே சந்ததியாமே! அப்படீன்னா அந்த உயில் எத்தனை கோடி தேறும்? ஸ்பெக்ட்ரம் புகழ் ஒரு லட்சம் கோடி கூட வேணாம்! அதுல ஒரு மூனு சைபர் கம்மி பண்ணிக் குடுத்தாக் கூட போதும்! :)

ஆண்டாள் உயிலில் என்ன தான் இருக்கு?
வழக்கம் போல, இனியது கேட்க இங்கே செல்லுங்கள்! சொத்து விபரம் தெரிந்து விடும்! :)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP