கோதைத்தமிழ்08: சேவித்து @balaramanL
மக்கா, இன்றைய #PaavaiPodcast பேசப் போறது, ட்விட்டரில் பெரும் தமிழ் ஆர்வலர்! தமிழ்க் கவிதைகளில் மாறுபட்ட வடிவங்களைப் படைத்துப் பார்ப்பவர்!
யாருய்யா அது? = எறுழ்வலி பலராமன் @balaramanL
ஆகா! அது என்னா எறுழ்வலி? அப்படின்னா?
அவரோட வலைப்பூவின் பேரு அது! என்னா பொருள்-ன்னு அவரு வந்து சொல்லட்டும்! இல்லீன்னா அங்கே போய் கட்டாயம் பாருங்க:)
இதோ...உங்கள் முன்னால் நற்றமிழ் நவில...
நன்றி பலராமா! பேருக்கேத்தபடி, பலமான பேச்சு!:) என்ன மக்களே, ஐயா-வைப் பெண்கள் கல்லூரி விரிவுரையாளரா அனுப்பிச்சீறலாமா?:)

கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய
பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: கிழக்கு வானம் வெளுத்துருச்சி! எருமை மாடுகளைச் சிறுவீட்டில் (கொல்லைப் புல்வெளி) மேய விட்டாச்சி!
கோயிலுக்குப் போற பொண்ணுங்களையெல்லாம் புடிச்சி வச்சிக்கிட்டு, "இருடீ, இவளும் வரட்டும்"-ன்னு உனக்காகத் தான்டீ காத்துக்கிட்டு இருக்கோம்!
துள்ளலான பொண்ணே, எழுந்துருடீ, பறையடிச்சி நோன்பு கொண்டாடும் நேரம் வந்துருச்சி!
முன்பு குதிரை அரக்கனின் வாயைப் பிளந்தவன், கொல்ல வந்த மல்லரை மடக்கியவன் - நம்ம கண்ணன்...
அவனை இங்க இருந்தே சோம்பேறித்தனமாக் கும்பிடாம, அங்கு மற்ற அடியவர்களோடு....சென்று + சேவிப்போம்!
அவன் நம்மைப் பார்த்தவுடனேயே, ஆ-வா ன்னு வியப்பும் அன்புமாக் கூப்புடுவான்!
நம் விருப்பங்களை ஆராய்ந்து அருள் செய்வான்! ஓடியா! போவோம்ம்ம்ம்ம்!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சேவித்தல்!
பொதுவா, திருமால் கோயில்களில் மட்டுமே...பெருமாளைச் சேவிச்சிக்கோ-ன்னு சொல்லுறது வழக்கம்!
முருகனைச் சேவிச்சிக்கோ, சிவபெருமானைச் சேவிச்சிக்கோ, அம்பாளைச் சேவிச்சிக்கோ-ன்னு யாரும் அவ்வளவா சொல்லுறது இல்லை! ஏன்?
இவ்விடங்களில், "தரிசனம்"-ன்னு வடமொழியில் சொல்வதே பெரும்பாலும் வழக்கம்!
ஆனால் கிறித்துவம் - புனித விவிலிய (Holy Bible) - தமிழாக்கத்தில், "கர்த்தரைச் சேவித்து அவர் நிழலில் இளைப்பாறி இருப்பாய்"-ன்னு வரும்!
ஆக...இந்தச் "சேவித்தல்", சில பேரு மட்டுமே நுணுக்கமாய்க் கையாளுறாங்க! சேவித்தல்-ன்னா என்ன?
செய்தல் -> செய்வை -> சேவை -> சேவி
* சும்மா போய், இறைவனை 'லுக்கு' விட்டுட்டு வராம...
* தன்னைப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் = சேவித்தல்!
வெறுமனே 'தரிசனம்' என்பது வைணவத்தில் அவ்வளவாக இல்லை! அடியார் தொண்டு 'செய்'யணும்! அடியவர் தொண்டே ஆண்டவன் தொண்டு!
மாலை தொடுத்தலோ, கோயில் ஒழுகலோ, உணவு இடலோ, பாசுரம் சேவித்தலோ...ஏதாச்சும் ஒன்னு...
= "செஞ்சாத்" தான், 'சேவித்த' பலன் கிடைக்கும்!
செய்வை-ன்னு கலித்தொகை, புறநானூறு பேசும்!
பரிசிலர் இடத்தே இனியவை "செய்வை" -ன்னு, பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுவாங்க!
இந்தச் செய்வை தான் -> சேவை ஆச்சு!
"சேவா" தள் (Seva Dal)-ன்னு வடமொழியில் இருப்பதெல்லாம், இங்கிருந்து போனது தான்! அதன் மூலம் = செய்வை-சேவை!
இப்படி, இறைக் காட்சியை, அடியவர் தொண்டோடு சேர்த்துவிட்டு, செய்வை->சேவை! சேவி...என்று ஆனது!
* பெருமாளைச் சேவி-ன்னா, வெறும் "Darshan"-ன்னு நினைச்சிக்காதீங்க!:)
* மானுட சேவை செய்து, அவனையும் கண்டால் மட்டுமே "சேவித்தல்"!
அதுவே நல்லது! அப்படியே செய்விப்போம்/ சேவிப்போம்!
நாளை, இன்னொரு பெண் பதிவர், நமக்கெல்லாம் தாய்ப் பதிவர்...பேசுவார்! வர்ட்டா?:)
அனுமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)
Read more »
யாருய்யா அது? = எறுழ்வலி பலராமன் @balaramanL
ஆகா! அது என்னா எறுழ்வலி? அப்படின்னா?
அவரோட வலைப்பூவின் பேரு அது! என்னா பொருள்-ன்னு அவரு வந்து சொல்லட்டும்! இல்லீன்னா அங்கே போய் கட்டாயம் பாருங்க:)
இதோ...உங்கள் முன்னால் நற்றமிழ் நவில...
நன்றி பலராமா! பேருக்கேத்தபடி, பலமான பேச்சு!:) என்ன மக்களே, ஐயா-வைப் பெண்கள் கல்லூரி விரிவுரையாளரா அனுப்பிச்சீறலாமா?:)

கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய
பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: கிழக்கு வானம் வெளுத்துருச்சி! எருமை மாடுகளைச் சிறுவீட்டில் (கொல்லைப் புல்வெளி) மேய விட்டாச்சி!
கோயிலுக்குப் போற பொண்ணுங்களையெல்லாம் புடிச்சி வச்சிக்கிட்டு, "இருடீ, இவளும் வரட்டும்"-ன்னு உனக்காகத் தான்டீ காத்துக்கிட்டு இருக்கோம்!
துள்ளலான பொண்ணே, எழுந்துருடீ, பறையடிச்சி நோன்பு கொண்டாடும் நேரம் வந்துருச்சி!
முன்பு குதிரை அரக்கனின் வாயைப் பிளந்தவன், கொல்ல வந்த மல்லரை மடக்கியவன் - நம்ம கண்ணன்...
அவனை இங்க இருந்தே சோம்பேறித்தனமாக் கும்பிடாம, அங்கு மற்ற அடியவர்களோடு....சென்று + சேவிப்போம்!
அவன் நம்மைப் பார்த்தவுடனேயே, ஆ-வா ன்னு வியப்பும் அன்புமாக் கூப்புடுவான்!
நம் விருப்பங்களை ஆராய்ந்து அருள் செய்வான்! ஓடியா! போவோம்ம்ம்ம்ம்!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சேவித்தல்!
பொதுவா, திருமால் கோயில்களில் மட்டுமே...பெருமாளைச் சேவிச்சிக்கோ-ன்னு சொல்லுறது வழக்கம்!
முருகனைச் சேவிச்சிக்கோ, சிவபெருமானைச் சேவிச்சிக்கோ, அம்பாளைச் சேவிச்சிக்கோ-ன்னு யாரும் அவ்வளவா சொல்லுறது இல்லை! ஏன்?
இவ்விடங்களில், "தரிசனம்"-ன்னு வடமொழியில் சொல்வதே பெரும்பாலும் வழக்கம்!
ஆனால் கிறித்துவம் - புனித விவிலிய (Holy Bible) - தமிழாக்கத்தில், "கர்த்தரைச் சேவித்து அவர் நிழலில் இளைப்பாறி இருப்பாய்"-ன்னு வரும்!
ஆக...இந்தச் "சேவித்தல்", சில பேரு மட்டுமே நுணுக்கமாய்க் கையாளுறாங்க! சேவித்தல்-ன்னா என்ன?
செய்தல் -> செய்வை -> சேவை -> சேவி
* சும்மா போய், இறைவனை 'லுக்கு' விட்டுட்டு வராம...
* தன்னைப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் = சேவித்தல்!
வெறுமனே 'தரிசனம்' என்பது வைணவத்தில் அவ்வளவாக இல்லை! அடியார் தொண்டு 'செய்'யணும்! அடியவர் தொண்டே ஆண்டவன் தொண்டு!
மாலை தொடுத்தலோ, கோயில் ஒழுகலோ, உணவு இடலோ, பாசுரம் சேவித்தலோ...ஏதாச்சும் ஒன்னு...
= "செஞ்சாத்" தான், 'சேவித்த' பலன் கிடைக்கும்!
செய்வை-ன்னு கலித்தொகை, புறநானூறு பேசும்!
பரிசிலர் இடத்தே இனியவை "செய்வை" -ன்னு, பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுவாங்க!
இந்தச் செய்வை தான் -> சேவை ஆச்சு!
"சேவா" தள் (Seva Dal)-ன்னு வடமொழியில் இருப்பதெல்லாம், இங்கிருந்து போனது தான்! அதன் மூலம் = செய்வை-சேவை!
இப்படி, இறைக் காட்சியை, அடியவர் தொண்டோடு சேர்த்துவிட்டு, செய்வை->சேவை! சேவி...என்று ஆனது!
* பெருமாளைச் சேவி-ன்னா, வெறும் "Darshan"-ன்னு நினைச்சிக்காதீங்க!:)
* மானுட சேவை செய்து, அவனையும் கண்டால் மட்டுமே "சேவித்தல்"!
அதுவே நல்லது! அப்படியே செய்விப்போம்/ சேவிப்போம்!
நாளை, இன்னொரு பெண் பதிவர், நமக்கெல்லாம் தாய்ப் பதிவர்...பேசுவார்! வர்ட்டா?:)
அனுமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)







