Showing posts with label PaavaiPod12. Show all posts
Showing posts with label PaavaiPod12. Show all posts

Wednesday, December 28, 2011

கோதைத்தமிழ்12: SweetHeart @nilaakaalam

மக்கா, இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, ஒரு பெண்புலி! பெண்நிபுணி! பெண் FM:)
வேற யாரு? நம்ம @nilaakaalam (எ) நிலா தான்!

அவங்க சும்மா எல்லாம் பேச மாட்டாங்களாம்! ஒவ்வொரு பேச்சுலயும் BGM (எ) பின்னணி இசை இருக்கணுமாம்! அப்போ தான் பேசுவாங்களாம்!
அதுக்காக, இவங்க Podcastக்கு, நான் என்ன இளையராஜா-வையா BGM போடச் சொல்ல முடியும்?:)

கேளுங்க ஒலிக் கோப்பை!
விடிகாலை ஒலி, மாடு கத்தும் ஒலி, இராம-இராவணக் கத்திச் சண்டை ஒலி, எழுந்திருக்கும் ஒலி, காதல் ஒலி-ன்னு...
பின்னணி ஒலிகளோடு...கோதை ஊருக்கே நம்மைக் கூட்டிப் போறாங்க!

இந்தப் பெண்ணின் மிக வித்தியாசமான Podcast! அழகா யோசிச்சிச் செஞ்சி இருக்காங்க! நல்ல மாற்றுச் சிந்தனை!
நிலா நிலா ஓடி வா! நில்லாமல் பேசி வா!
FM Station ஏறி வா! இசை நிலவு கொண்டு வா:)



நன்றி நிலா! நல்ல முயற்சி! எழிலான பேச்சும் ஒலியும்! வாழ்த்துக்கள்!



கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,


சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கன்னுக்குட்டியைப் பார்த்தவுடன் மனசு இரங்கிப் போய்...எருமை கனைக்கிறது! நினைத்த மாத்திரத்தில் தானாவே பால் வடியுது!
இப்படி வடியும் பால் ஆறாய் ஓடி, வீட்டையே சேறாக்குகிறது! அடியே நற்செல்வன் என்னும் கண்ணனின் ஆருயிர்த் தோழனின் தங்கச்சியே, எழுந்திருடீ!

ஒரே பனி பெய்யுது எங்க தலை மேலே! இருந்தாலும் உன் வீட்டு வாசலில் வந்து உன்னைக் கூப்புடுகிறோம்! எதுக்கு?
இலங்கை வேந்தனைச் சினந்து வென்றவன்! அவன் தானே நமக்கு Sweet Heart? அவனைப் பாடும் ஒலி கேட்டுமா நீ வீட்டைத் திறக்கலை?

அப்படியென்ன ஒரு பெரிய தூக்கம்? அக்கம் பக்கத்து வீட்டுக்கெல்லாம் உன் தூங்குமூஞ்சிப் புராணம் தெரிவதற்குள் எழுந்து, எங்களோடு வாடீ!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = மனத்துக்கினியான்!

Sweet Heart என்று காதலில் கொஞ்சுகிறோமே? அதுக்கு நல்ல மொழியாக்கம் என்ன? தமிழைப் படுத்தாத தமிழ்ப்படுத்தல் என்ன?:)
கோதை ஒரு நல்ல மொழியாளர்! மிக அழகான சொல்லாக்கம் தருபவள்! இதோ தருகிறாள் பாருங்கள்! Sweet Heart = மனத்துக்கினியான்!

அடுத்த இரண்டு நாளும், தானியங்கிப் பதிவுகள்! Posts & Tweets are scheduled:) வர்ட்டா?:)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP