Tuesday, October 31, 2006

அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது. சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு. "முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு" விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன். பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு,...
Read more »

Thursday, October 26, 2006

சென்னையிலே செந்திலாண்டவர் ஷோக்கா கீறாரா?

"தருமம் மிகு சென்னை" என்று எழுதும் போதே, அதன் செந்தமிழ் அப்படியே வந்து தென்றலாய்(?) ஒட்டிக் கொள்கிறது:-) என்ன செய்ய!"அது சரி...அது இன்னாப்பா 'தருமம் மிகு சென்னை'?மெட்ராஸ்-க்குள்ள அம்மாந் தருமம் கீதா? இல்லாங்காட்டி நீயா எதுனா பிகிலு வுடுறியா? மேட்டருக்கு ஸ்டெரெயிட்டா வா மாமே", என்று அங்கு செளகார்பேட்டையில் யாரோ மொழிவது, இங்கு என் காதில் தேன் வந்து பாய்கிறது!அதனால ஸ்டெரெயிட்டா மேட்டருக்கு வருகிறேன்!...
Read more »

Saturday, October 21, 2006

அமெரிக்கப் பெருசுகள் சாப்பிட்ட தீபாவளி மைசூர்பாக்

வாங்க; அனைவருக்கும் குதூகலம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!ஷாம்பூ குளியல் முடிஞ்சு, புது ஜீன்ஸ், மிடி எல்லாம் போட்டுக் கொண்டு, பட்டாசு எல்லாம் வெடிச்சாச்சா?குட்டிகள் அடிக்கும் கும்மாளம், வெடிச்சத்தத்தை விடப் பெரிதாகக் கேட்கிறதா?இந்த ஒரு பண்டிகை, நம்ம நாடு முழுமைக்கும் கொடுக்கும் சந்தோஷமே தனி தான்!நம்ம நாடுன்னு இல்லாம, புலம் பெயர்ந்த அனைத்து இந்தியர்கள் வீட்டிலும், முடிஞ்ச வரை களை கட்டுது!நண்பர்கள்...
Read more »

Sunday, October 15, 2006

புதிரா? புனிதமா??

தலைப்பைப் பாத்துட்டு டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் தொடர்புடைய ஏதோ ஒரு வலைப்பூன்னு, யாரும் வலையில் வந்து விழுந்துடாதீங்க சொல்லிட்டேன் :-)தமிழ்மணத்தில் ஒரே புதிர் போட்டிகளும், "படம் பாத்துக் கதை சொல்" போட்டிகளுமா இருக்கே, நாமளும் ஜோதியில் ஐக்கியம் ஆகிடலாமே என்ற எண்ணத்தில்...இதோ ஒரு போட்டி!!!துளசி டீச்சரும் கிளாசுக்கு அஞ்சு நாள்(?) வரமாட்டாங்களாம். இதான் சமயம்ன்னு நாமளே கேள்வித்தாள் செட் பண்ணி, நாமளே மார்க் போட்டுக்கலாமே! நம்ம மக்கள்ஸ் நிறைய பேரை பாஸாக்கி, டிஷ்டிங்கஷனும் போட்டுக் கொள்ள இதை விட வேறு சான்ஸ்...
Read more »

Thursday, October 12, 2006

பாகம்2 - கடப்பாரையால் இறைவன் வாங்கிய இடி

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்.)உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!அழகாக உடுத்திக்கொண்டு, நகைகள் பூண்டு, ஒரு நடுவயதுப் பாலகனாய், அனந்தனின் மனைவியார் முன் தோன்றினான்."அம்மா, இவ்வளவு சிரமப் படுறீங்களே; விலகுங்க நான் உதவி செய்யறேன்; உங்க புருஷனுக்கு மனசாட்சியே இல்லியா? உங்கள இப்படி வேல வாங்குறாரே!"அய்யோ, அவர் வேணாம்ன்னு தான் சொன்னாரு....
Read more »

Friday, October 06, 2006

இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1

மோவாய்க் கட்டையில் ஒரு பெரிய வெள்ளைப் பொட்டு. எங்கனாச்சும் பாத்தா மாதிரி இருக்குதுங்களா? ஒரு கடவுளின் திருவுருவச் சிலையில் தான்!யாருன்னு தெரியுதுங்களா?ஏன் அந்தப் பொட்டு? சும்மா இல்லை! அடிபட்டதற்கு மருந்து! என்னது அடியா?ஏன் என்ன ஆச்சு, பாக்கலாம் வாரீகளா?நடந்தாய் வாழி காவேரி!ஒரே ஆறாக ஓடி வரும் காவேரி, அரங்கத்துக்குச் சற்று முன்னால் இரண்டாகப் பிரிகிறாள்!அரங்கத்தைத் தாண்டிய பின் மீண்டும் சேர்ந்து ஒரே...
Read more »

Tuesday, October 03, 2006

திருமலை விழா 9 - சக்ர நீராட்டம் - சுபம்

ஒன்பதாம் நாள் (விழா நிறைவு)சக்ர நீராட்டம் (சக்ர ஸ்நானம்)தீர்த்தம் -ன்னா என்னப்பா? இந்த கேள்விக்குப் பலர், பலவிதமாய் பதில் சொல்லுவார்கள்! :-) ஆனா நாம அங்கெல்லாம் போகப் போறது இல்லை :-))அனைத்து ஆலயங்களிலும், விழா நிறைவுறும் போது, தீர்த்தவாரி என்ற ஒன்று நடைபெறுவது உண்டு. கேரளத்தில் அய்யப்பனுக்கு ஆறாட்டு என்று வழங்குவார்கள். பல ஊர்களில் பல விதமாய் வழங்கி வருகிறது! நீர் நிலைகள் பற்றி நண்பர் ஜிரா ஒரு பதிவு...
Read more »

Monday, October 02, 2006

திருமலை விழா 8 - தேர் திருவிழா / குதிரை வாகனம்

எட்டாம் நாள்காலை - தேர் திருவிழா (ரதோற்சவம்)"தேரு வருதே" - இதை அப்படியே திருப்பிப் போடுங்கள்! என்ன வந்தது?அதே, "தேரு வருதே"!ஆங்கிலத்தில் இதை Palindrome-ன்னு சொல்லுவாங்க! தமிழில் இதற்குப் பெயர் என்னன்னு தமிழ் ஆய்ந்த யாராச்சும் வந்து சொல்லுங்கப்பா! (இலக்கணத்தில் ஒரு வகையான அணி என்று சொல்லலாமா?)இன்று காலை திருமலையில் தேர் திருவிழா. வாகனங்கள் போதாதா? அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய ஆழித்தேரா? ஏன்?வாகனங்களைத்...
Read more »

Sunday, October 01, 2006

காந்தியால் கிடைத்த outsourcing பணம்

வாங்க நண்பர்களே! காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!எனக்குத் தெரிந்த காந்தி ஜெயந்தி:பள்ளிப் பருவத்தில் காந்தி ஜெயந்தி:பள்ளியில் assembly-இல் பாட்டுப் பாடி, காந்தியின் படத்துக்கு முன்னர் உறுதி மொழி எடுப்போம். என்ன உறுதி மொழின்னு கேட்காதீங்க, ப்ளஸ் ஒன்லேயே அதெல்லாம் மறந்துட்டோம்!கல்லூரியில் காந்தி ஜெயந்தி:ஹாஸ்டல் நண்பர்கள் பலர் லீவு நாள் அதுவுமா அவஸ்தைப் பட்ட நாள்.பின்ன என்னாங்க எல்லாக் கடையும் லீவு! முன்னாடியே...
Read more »

திருமலை விழா 7 - சூர்ய / சந்திர வாகனம்

ஏழாம் நாள்காலை - கதிர் ஒளி வாகனம் (சூர்யப் பிரபை வாகனம்)இன்னிக்கி சூரியன்FM பல பேர் கேக்கறாங்க. சில பேரால அது இல்லாம இருக்க முடியறது இல்ல. காதோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல், எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு நிக்குது. பாட்டைக் கேட்டுச் சிலர், சில பேருக்கு dedication செய்யறாங்க!ஆனால் இந்த Total Dedication என்பது உலகத்தில் ஒரே ஒருத்தருக்குத் தாங்க பொருந்தும். அது நம்ம சூரிய பகவான் தாங்க! உலகத்தில தப்பு...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP