Thursday, November 30, 2006

கைசிகம் - புராணமா? புரட்சியா??

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)இன்று கைசிக ஏகாதசி (Dec-01, 2006). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன்...
Read more »

Thursday, November 23, 2006

பதிவுலகமே - நன்றி! நன்றி! நன்றி!

முகம் தெரியாத ஒருவருக்கு எப்போதாவது நன்றி சொல்லி இருக்கீங்களா?இன்னிக்கு நாம சொல்லலாமா?எங்கும் நன்றி! எதிலும் நன்றி!! எல்லோருக்கும் நன்றி!!செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்...
Read more »

Saturday, November 18, 2006

ஒத்த ரூவா தாரேன்!

"ஒத்த ரூவா தாரேன்" என்ற குஷ்புவின் கரகாட்டப் பாட்டு எவ்வளவு பிரபலம்?ஆனா இந்த "ஒத்த ரூபாயைப்" பாத்து எவ்வளவு நாள் ஆகி விட்டது, தெரியுமா?இதோ கீழே பாருங்க!இதுகளை எல்லாம் எங்காச்சும் எப்பவாச்சும் பாத்த ஞாபகம் இருக்குங்களா?பார்த்த ஞாபகம் இல்லையோ? இதை நிச்சயமா அடிக்கடி பாத்திருப்பீங்க! அப்படிப் பாக்காதவங்க, இப்பவே நல்லா பாத்துக்குங்க!அப்புறம் இதுவும் நாணயமாப் போச்சேன்னு ரொம்ப நாணயமாப் புலம்பக்கூடாது, சொல்லிட்டேன்!...
Read more »

Thursday, November 09, 2006

புதிரா? புனிதமா?? - பாகம் 2

----------------------------------------------------------------------------------------------விடைகள் பதிப்பிக்கப்பட்டன! (அப்பாடா, நியுயார்க் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து, இதோ வீடு வந்து சேர்ந்து, நேரே தமிழ்மணம்!)சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்!முடிவுகள் இதோ!10/10 குமரன், ஜெயஸ்ரீ9/10வெட்டிபையல் (பாலாஜி)7/10இராமநாதன், சிவமுருகன், கீதாம்மாவெற்றிக் கனி பெற்றவர்க்குப் பரிசை இரவு, மின்-மடல் வழியாக அனுப்பி வைக்கிறேன்.......பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!வென்றவர்க்குச்...
Read more »

Saturday, November 04, 2006

"தண்ணி" காட்டிய இறைவன்

தொண்டர்கள் தொடர் இது!அப்படித் தான் ஒரு முறை, "தண்ணி உள்ள காட்டிலேயே", நமக்குத் "தண்ணி" காட்டினான் இறைவன்!!சென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்!இன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.ஒருவர் நல்ல வசதியுடன் "ஜம்" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு!ஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP