Wednesday, April 29, 2009

சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்!

இன்று இரு மகத்தான மனிதர்களின் பிறந்தநாள்! ஆன்மீக ஆற்றின் ஓரமாகப் பல காலம் தேங்கி விட்டன சனாதனக் குப்பைகள்! திடீர்-ன்னு ஒரு பெரு வெள்ளம் வந்து, அந்தக் குப்பையை இருந்த இடம் தெரியாமல் அடிச்சிக்கிட்டு போனது! அந்த வெள்ளம் தான் உலகாசான் - ஜகத்குரு என்று போற்றப்படும் ஆதி சங்கரர், இராமானுசர்!இருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான்! சித்திரைத் திருவாதிரை (Apr 29th 2009)!பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கரா!...
Read more »

Friday, April 24, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்- தமிழ் ஈழம்- கடைசி நேர முயற்சிகள் என்ன?

அலுவல் வேலையா லண்டன் சென்று, நேற்று இரவு தான் ஊர் திரும்பினேன்! லண்டனில் சக அலுவலகத் தோழி ஒருத்தி (ஈழத்துப் பெண்)! அவளிடம் பேசும் போது சில ஈழ விஷயங்கள் பார்வைக்கு வந்தன! அவள் சொன்னது: "90% வரை ஒளித்தல் மறைத்தல் இல்லாது, அனைத்து தரப்பு நியாயங்களோடே, பி.பி.சி-யின் ஈழச் செய்தி வழங்கல் நல்லதொரு விஷயம்!" - இதோ மொத்த ஈழ விவகாரங்களுக்கான பி.பி.சி சுட்டி! ஆனால் இந்தப் பதிவை, வழியில் எழுதிக்கிட்டு வரும் போதே,...
Read more »

Wednesday, April 08, 2009

மாயவரத்தைக் கலாய்த்த ஆழ்வார்! - திருஇந்தளூர்!

மயிலாடுதுறை! வடமொழியில் மயூரம், மாயூரம்-ன்னு தேய்ஞ்சி தேய்ஞ்சி, கடைசீல மாயவரம்-ன்னு ஆகிப் போச்சு! மாய-வரம் = மாய்ஞ்சி போக, யாராச்சும் வரம் கொடுப்பாய்ங்களா என்ன? :)மக்களே, நேற்று மதுரை மீனாட்சிக்குக் குடமுழுக்கு-ன்னா, இன்னிக்கி மாயவரத்துல குடமுழுக்கு! மாயவரத்துல முடவன் முழுக்கு தானே?இது என்னா புதுசா குடமுழுக்கு-ன்னு பாக்கறீங்களா? மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட அண்மையில் உள்ள ஒரு...
Read more »

Tuesday, April 07, 2009

புதிரா? புனிதமா?? - மதுரை மீனாட்சி!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன! விடைகளுக்கான விளக்கங்களைக் கெபி அக்கா, ஸ்ரீதர், குமரன் முதலான வெற்றியாளர்கள் பின்னூட்டத்தில் சொல்லுவார்கள்!அன்னையின் குடமுழுக்கு அமைதியாக, அதே சமயம், எளிமையாக நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி! பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு என்பது வீண் ஆடம்பரச் செலவு அன்று! வாழும் வீட்டின் மராமத்துப் பணி போலத் தான் இதுவும்!கலைச் செல்வங்களைத் தொல்பொருள்...
Read more »

Thursday, April 02, 2009

படகோட்டியா? தம்பியா?? - இராமன் மனம் யாருக்கு?

நாம் எல்லாம் விமானத்தில் சொந்த ஊர் போய் இறங்கியவுடன் என்ன செய்வோம்?விமான நிலையத்திலிருந்து நேரே வீட்டுக்கு தானே ஓட்டம்? பின்பு அவரவர் வசதிற்கு ஏற்ப, குளித்து விட்டோ குளிக்காமலோ, இட்லி-வடை-தோசை-சாம்பார், காரச்சட்னி, புதினாச் சட்னி,தேங்காய்ச் சட்னி,வெங்காய்ச் சட்னி என்று விதம் விதமா வெட்டி விட்டு தானே மறு வேலை? அப்புறம் தானே நண்பர்களைப் பார்க்கப் போவதோ, இல்லை பதிவர் சந்திப்போ, மற்றது எல்லாம்?ஆனால் ராமன்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP