Saturday, July 25, 2009

கோதையின் பிறந்தநாள்: Kissing For Dummies

மக்களே, என் மனத்துக்கினிய தோழி, என் மன்னவன் காதலி,தென் பாண்டித் தெள்ளமுது, பேரழகுப் பெட்டகம்,தமிழன்னையே விரும்பிச் சுவைக்கும் தமிழ் பேச வல்லாள், காதலர்க்கு நல்லாள்...அவளுக்கு இன்று பிறந்த நாள் (Jul-25-2009, ஆடிப் பூரம்)!திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!இனிய பிறந்த நாள்...
Read more »

Tuesday, July 21, 2009

சூரிய கிரகணம் For Dummies: தமிழில் என்ன? அறிவியலில் என்ன?

வாங்க மக்கா! முப்பது நாளில் மூன்று கிரகணங்கள், கிரகண காலத்தில் என்ன செய்யக் கூடாது?, கிரகண கால நன்மை தீமைகள், கிரகணமும்-அரசியலும்-மஞ்சள் துண்டும் - இப்படி விதம் விதமாப் படிச்சி ஓய்ஞ்சிருப்பீங்க! :)1. ஆன்மீகத்தில் கிரகணம்2. தமிழில் கிரகணம் (கரவணம்)3. அறிவியலில் கிரகணம்-ன்னு மூனாப் பிரிச்சி, லேசு மாசாப் பாத்துருவமா? :)1. ஆன்மீகத்தில் கிரகணம்:ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கிரகணப் பதிவையும் ஒருகா வாசித்து...
Read more »

Friday, July 17, 2009

குமரனின் அப்பாவுக்கு அஞ்சலியும், ஆதி சங்கரர் அம்மாவும்!

ஆதி சங்கரர்! அவர் அன்னையின் ஒப்புதலுக்காக, எட்டு வயதில் ஒரு முதலை நாடகம் ஆடி, துறவறம் பூண்டார்! பூணும் முன்னர், தான் துறவியாகப் போய் விட்டாலும், அன்னையின் இறுதி நேரத்தில் தாமே வருவதாக வாக்களித்துச் செல்கிறார்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார்!நாட்கள் நகர்ந்து, அத்வைத அரசாங்கம் நாடெங்கும் வளர்கிறது! சிருங்க-கிரி என்னும் சிருங்கேரியில் முதல் மடம் கண்டாகி விட்டது!*ஞானப் பிழம்பாக ஞான யோகி,* கர்மாக்களை...
Read more »

Monday, July 13, 2009

புதிரா? புனிதமா?? - நாயன்மார்கள்!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்ட் செய்யப்பட்டுள்ளன! விளக்கங்கள் பின்னூட்டத்தில் அறிந்தவர்கள் கொடுக்கலாமே? சின்ன அம்மணி-க்கா? முகில்?? அடிச்சி ஆடுங்களேன் :)அஞ்சலிப் பதிவென்பதால் வெற்றியாளர்-ன்னு யாரும் இல்லை!சின்ன அம்மணி-க்கா தான் முதல் முயற்சியில் அதிகம் சொன்னது!Followed by லோகன் & முகிலரசி! வாழ்த்துக்கள்!வென்றார்க்கும், விளையாட்டில் நின்றார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!நாயன்மார்களின்...
Read more »

Monday, July 06, 2009

அருணகிரிநாதர் செய்த மர்ம டகால்ட்டி! - 2

யார் காது காலி ஆச்சு? அருணையா? வில்லியா? சென்ற பதிவு இங்கே!சில சமயம், குற்றத்தை ஒரேயடியா அடக்கணும்-ன்னா, நாமளே "சிறு" குற்றம் பண்ணாத் தான் ஆச்சு! ஓவர் ஸ்பீடில் போற ஒருத்தனை, போலீசும் ஓவர் ஸ்பீடில் போய்த் தானே பிடிக்கணும்! இதுக்காகப் போலீசை கொறைபட்டுக்க முடியுமா? :)கண்ணன் செய்த பல செயல்களும் இப்படித் தான்! அதையே தான் அருணகிரியும் செய்யறாரு! வாயில் நுழையாத வெட்டு வெடுக்குப் பாடலைப் பாடறாரு! பொருளை அதிகம்...
Read more »

Sunday, July 05, 2009

"வைணவத் திமிர்" அடக்கிய முருகன் பாட்டு! - 1

என்ன மக்களே, எப்படி இருக்கீக? தலைப்பைப் பார்த்து என்னமோ ஏதோ-ன்னு பயந்து போயிறாதீங்க! ஒரு சிலர், மகிழ்ந்தும் போயிறாதீங்க :)))யாருப்பா அது? யாரு திமிரை யாருப்பா அடக்கினாங்க? அது என்னா பாட்டு-ன்னு கேக்கறீங்களா மக்கா?* அவர் ஒரு வைணவக் குடும்பத்தைச் சார்ந்தவர்!* அவர் திமிரை அடக்கியது ஒரு சைவ அறிஞர்!* அந்தப் பாட்டு ஒரு முருகப் பெருமான் பாட்டு!ஆகா! சைவ அறிஞரா? வைணவத் திமிரா? கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே!...
Read more »

Thursday, July 02, 2009

வைணவத்தைத் "தழுவிய" திருச்செந்தூர் முருகன்!

திருச்சீர் அலைவாய்! வெள்ளை அலைகள் முப்போதும் தாலாட்டும் என் முருகச் சிற்றூர்! "அலைபாயுதே கந்தா - என் மனம் அலைபாயுதே" என்னும் படிக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று! (Jul-02, 2009) திருச்செந்தூர் கொஞ்சம் வித்தியாசமான படை வீடு! மற்ற படை வீடுகளெல்லாம் மலைகளில் இருக்க, இப்படை வீடு மட்டுமே, கடலோரத்தில்! குறிஞ்சிக் கடவுளான முருகன், நெய்தற் கடவுளாய் மாறிய மர்மம் என்னவோ? :) அலையாழி அறிதுயில்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP