(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2
அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா...