Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, February 26, 2010

(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2

அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!

சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா நடக்கிறது??? இவரைக் கேட்பார் எவருமே இல்லியா?"

இந்தக் கதையின் முந்தைய பாகம் இங்கே!
அந்தப் பதிவு வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு! அப்போ அடியேனின் தமிழ்மண நட்சத்திர வாரம்! :)
அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால், கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)

இதை இன்னிக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்னா-ன்னு கேட்கறீங்களா?
இன்று தான் அந்தக் கதை நாயகனின் பிறந்த நாள்! (மாசி ஆயில்யம்! Feb 26, 2010) - Happy Birthday Dhanur Daasa! :)
பிள்ளை உறங்கா வில்லி தாசனே! - பின்னாளில் திருவரங்க ஆலயத்துக்கே "மேலாளன் ஆன வேளாளனே"! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



இருள் மயங்கும் வேளை! அருள் முயங்கும் வேளை!
அவன் கையைப் படக்-கென்று பிடித்துக் கொண்டார்...விறுவிறு என்று இழுத்துக் கொண்டு வருகிறார்...கிடுகிடு கிடுவென்று...

தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் வீதி தாண்டி,
ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,

இதோ வந்தாகி விட்டது காயத்ரி மண்டபத்துக்கு!
24 காயத்ரி எழுத்துக்களும் 24 தூண்களாய்த் தாங்கும் பேரமைதிக் கருவறை!
அதன் மேல் அந்த ஓங்கார விமானம்!
ஓம் என்பது போலவே வளைந்து நெளிந்த....பிரணவாகார ரங்க விமானம்!

குறுகிய வாசல்! உள்ளம் உருகிய வாசல்!
நெய் தீப மணமும், துளசீ மணமும் துளைக்கின்றது!
வட-தென் காவேரிக் குளிர்ச்சி உள்ளேயும் சிலிர்க்கிறது!
வீணை ஏகாந்தம் இந்த இரவிலும் இசைக்கிறது!

ஆயர்ப்பாடி வெண்ணெய் வீச்சம் கருவறையில் வீசுகிறது!
பச்சைக் கர்ப்பூர நெடி...அன்று கோதையின் பச்சை உடம்பை என்னமோ பண்ணியதே! இன்று என் உடம்பையும் என்னமோ செய்கிறதே!!!

தனுர்தாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
"அவளை விட அழகிய கண்ணைக் காட்டுறேன்-ன்னு சொன்னவரு, இங்கே கூட்டிக்கிட்டு வராரே! மாடத் தெரு ஆடலாளியைக் காட்டுவாரு-ல்ல நினைச்சோம்"! - அந்தப்புரம் என்று எண்ணி வந்தவன் நொந்தப்புரம் ஆனான்!
ஆனால்...ஒரே விநாடி தான்....திரை விலகியது.....அய்யோ.....

கரிய..பெரிய..உரிய..விரிய..சரிய..தெரிய..அரிய..உருவம்!!
ஜென்ம ஜென்மத்துக்கும்....
மெல்லிய தீபம், அசைத்து அசைத்துக் காட்டப்படுகிறது!
பாதத்தில் ஜொலிக்கும் தீபம்....சிறிது சிறிதாக மேலேறுகிறது!!

* திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
* சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே
* உந்தி (தொப்புள்) மேலதன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
* திருவயிற்று உதர பந்தனம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

"தனுர்தாசா...என்ன சிலையாக நின்று விட்டாய்? என்ன காண்கிறாய், சொல்?"

* ஆர மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
* கண்டம் (கழுத்து) கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
* செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

"என்ன தடுமாறுகிறாய்? அருகில் இதற்கென்றே உள்ள இரண்டு திருமணத் தூண்களைப் பிடித்துக் கொள்! விழுந்து விடாதே! சொல், சொல்...என்ன செய்கிறது?"

பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!!





அரங்கனின் பெருந்தாமரைக் கண்களின் நேராக நேத்ர தீபம் சுழல்கிறது!
நாமும் சுழல்கிறோம்!
நம் மனசென்னும் ஆழியுட் புக்கு...முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழையாய்...
நேத்ரானந்த தீப சேவை!

ஒன்று மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்,
இன்று மறப்பேனோ ஏழைகாள்? - அன்று
கருவரங்கத்து உட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கத்து மேயான் திசை!!!

"என்னது? பெரியவாய கண்களா?
அடேய்....நீ கண்டாயா? கண்டு என்ன செய்தாய்? சொல்! தனுர்தாசா....சொல்!"

"கண்டேன்! கண்டேன்! நாடி நான் கண்டு கொண்டேன்!
என்னையே பார்க்கும் கண்கள்! என்னையே விழுங்கும் கண்கள்!
இல்லை இல்லை! உலகையே விழுங்கும் கண்கள்!
ஐயோ! கரியவனின் பெரிய வாய கண்கள்!"

கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும், முடிவில்லதோர் எழில்
நீலமேனி...ஐயோ....நிறை கொண்டது என் நெஞ்சினையே!


"என்னது ஐயோ-வா? எதற்கு ஐயோ என்று சொல்கிறாய்?"

"தாங்க முடியவில்லை சாமீ! நடுங்குகின்றேன்! என்ன செய்தீர்கள் என்னை?
என் கண்கள் அந்தக் கண்களோடு ஒட்டிக் கொண்டது போல் இருக்கே!
வைத்த கண்ணை மீண்டும் எடுக்க முடியவில்லையே!
அந்தக் கண்களே வெள்ளைப் பாற்கடல் போல் இருக்கே!
அந்த வட்ட விழி - நட்ட நடு - கருமணியில்.....நானும் தெரிகிறேனே!"

"ஓ! அந்தக் கண் மேல் உந்தன் கண்ணை வைத்து விட்டாயா?
இனி, அவனும் உன் மேல் கண்ணை வைத்து விட்டான்!
இனி, உன்னைக் கன்ணுள் வைத்துத் தாங்குவான்!
இனி, என்ன செய்யப் போகிறாய் தனுர்தாசா?"

என் அமுதினைக் கண்ட கண்கள்,
மற்று ஒன்றினைக் காணாவே!
மற்று ஒன்றினைக் காணாவே!!
மற்று ஒன்றினைக் காணாவே!!!

திரையிடப்பட்டது! முறையிடப்பட்டது!
அரங்கனில் கிறங்கினான்! அங்கேயே உறங்கினான்!


மல்யுத்த வீரன், மல்லாண்ட திண்தோள் தனுர்தாசன், இராமானுசரின் சீடர்களுள் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான்!
குருவை...அவன் தேடிப் போகவில்லை! அவனைத் தேடி...குரு வந்தார்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இன்று போலி குருக்களைத் தேடி, போலியாய் அலையும் பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியது இது!
குருவைத் தேடித் தேறவும் முடியுமா? குரு போலியா இல்லையா என்று கண்டுபிடிக்கும் ஞானம் இருந்திருந்தால் நீயே குருவாக ஆகியிருப்பாயே!
அந்த ஞானமே இல்லாத போது, நீ எதை வைத்து ஒரு குருவைச் சோதிக்க முடியும்?

உன் பேராசைகள் நிறைவேறுமா என்று மை போட்டுப் பார்க்கவல்ல குருவைத் தேடி அலைகிறாயா?
பேராசையாக அலைந்தால், பேராசிரியர் தான் கிடைப்பார்!
பேர் ஆசிரியர் - பேருக்கு ஆசிரியர் - பேராசைப் பேராசிரியர்!


அதனால் "நல்ல" குருவை எடை போட்டுத் தேடி "அலையாதே"!
தாகமாய் இரு! தண்ணீர் கிடைக்கும்!!
மாணவனாய் இரு! ஆசான் கிடைப்பார்!!
குரு இல்லை என்றால்...வாழ்க்கைப் பாடங்களையே...இறைவன் உனக்கு குருவாக ஆக்குவான்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


தனுர்தாசன் பெரிய பண்டிதன் கிடையாது! முரட்டு மல்லன்!
அவனைச் சேர்த்துக் கொண்டு் அரசவை வாதப் போரில் எல்லாம் வெல்ல முடியாது!
ஆனாலும் குழாத்தில் அவனையும் சேர்த்துக் கொண்டார் இராமானுசர்!
பயன் அன்று ஆகிலும், பாங்கு அல்லன் ஆகிலும், திருத்திப் பணி கொள்வது தானே குருவின் சிறப்பு!

சீடனின் உள்மனம் குருவுக்குத் தெரியும்! அங்கு கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லவே இல்லை! இது தெரியுமா, அதைப் படிச்சிருக்கியா என்றெல்லாம் ஒன்னுமே கேட்கவில்லை!
முக்கியமாக "உன் குலம்-கோத்திரம் என்ன? கலை-ஆசார்யன் என்ன?" என்ற கேள்வி எல்லாம் எழவே இல்லை!
சீடர்களுள் சீடராய்ச் சேர்த்துக் கொண்டார்!
தனுர் தாசன் என்று இருந்தவனை, "பிள்ளை உறங்கா வில்லி" என்னும் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொடுத்து, தீட்சையும் அளித்து விட்டார்!

ஆனால் அவனுக்கு குடும்பம்-ன்னு ஒன்னு இருக்கே!
என்ன தான் அவள் நடன மங்கையாக இருந்தாலும்,
சாத்திரத் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆயினும்...
அவள்-அவன்...இருவரும் ஆருயிர் காதல் துணைகள் ஆயிற்றே!
ஹேமாம்பா என்ற அவளுக்கும் "பொன்னாச்சி" என்று தீட்சை அளித்து விட்டார்!

இருவரையும் இராமானுசர் பிரிக்கவில்லை! அதே சமயத்தில் தம்பதிகளை மடத்திற்குள்ளே சேர்க்காமல், தனி இல்லத்தில் குடியிருத்தினார்!
காதலன்-காதலி இருவருமே தொண்டில் சிறந்து, சிறிது நாளில் பலரின் நன்மதிப்பையும் பெற்றனர்!


என்ன தான் வில்லியைச் சேர்த்துக் கொண்டாலும், அவன் கட்டை உருவம், நாலாம் வருணம் என்ற எண்ணம் சில சீடர்கள் மனத்தில் உறுத்தலாகவே இருந்தது போலும்!

அவனிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் ஒட்டி உறவாடாமல், "தங்களுக்குள் மட்டும் தனிக் கோஷ்டியாக" இருந்தனர்!
மனதுக்குள் சிரித்துக் கொண்ட இராமானுசர், அவர்களை அடக்கித் திருத்த வேறு வழிகளைக் கையாண்டார்...

தினமும் ஆற்றில் குளிக்கப் போகும் முன், அந்தணச் சீடனின் தோள் பற்றி நடப்பார்!
குளித்து முடித்த பின், வில்லியின் தோள் பற்றி நடந்து வருவார்!
அச்சோ...குளிச்சி முடிச்ச பிறகும் இப்படித் தீட்டாயிடுத்தே-ன்னு சொல்லாத முடியாத படிக்கு,
பேச்சால் பேசிக் கொண்டிராமல், செய்கையால் சாதியின் வாயை அடைப்பது, இராமானுசருக்கு, கை வந்த கலை!

"சுவாமி, நீங்க அந்த வில்லிக்கு ரொம்பவே இடம் கொடுக்கறீங்க"

"ஏன்? கொடுத்தா தப்பா சிஷ்யர்களே? வில்லியின் பண்பட்ட மனம் இங்கே யாருக்காச்சும் இருக்கா?"

"அப்படி என்ன பண்பட்டுட்டான் அவன் மட்டும்?"

"சொல்கிறேன்...இப்போது போய்த் தூங்குங்கள். பின்னிரவு ஆகி விட்டது!"

சீடர்கள் தூங்கச் சென்றார்கள்! சிறிது நேரம் கழித்து உடையவர் தானே சென்று, அத்தனை பேரின் மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள் போட்டார்!
தீராத விளையாட்டுப் பிள்ளை! உடையவர் மடத்திலே சீடருக்கு ஓயாத தொல்லை! :)

மறுநாள் காலை...மடத்தில் சுப்ரபாதமா ஒலித்தது? இல்லையில்லை!
கேட்கக் கூசும் வசவு வார்த்தைகள் ஒலித்தன!
சீடர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.

"சீடர்களே, சாதாரண ஒரு நூல் துண்டுக்கா இத்தனை பேச்சு பேசுகிறீர்கள்? தகுமா இது?
பல நூல் கற்ற நீங்கள், சில "நூலுக்கு", உயர் நூலை அடகு வைத்தீர்களே!
ஆக, உங்கள் யாவருக்கும் இது நாள் வரை.......
வாய் தான் மறையோதிற்றா? மனம் ஓதவில்லையா?"

"குருவே!"

"சரி சரி, உங்களைச் சோதிக்க நான் தான் ஆடைகளைக் கத்தரித்தேன்! நீங்கள் பேசிய இழிசொல் அத்தனையும் என்னையே சேரட்டும்!
உம்ம்ம்..முரட்டு மல்லன் வில்லி கூட இப்படி எல்லாம் பேசியதில்லை!"

"ஆசார்யரே...அய்யோ...மதி இழந்தோம்! கேவலமாய் நடந்து கொண்டோம்! மன்னியுங்கள்! இப்போதே வில்லியிடம் சென்று மன்னிப்பு கோருகிறோம்!"

"வேண்டாம்! அவன் லட்சணம் என்ன என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம்!
இன்று இரவு வில்லியை நான் மடத்துக்கு அழைத்துப் பேசப் போகிறேன்!
அந்தச் சமயம் பார்த்து நீங்கள் அவன் வீட்டுக்கு மாறுவேடத்தில் சென்று, பொன்னாச்சியின் நகைகளை திருடிக் கொண்டு வாருங்கள்!"

"என்ன! திருட்டா? குருவே..."

"உம்...சொன்னதைச் செய்யுங்கள்! ஆசார்யரின் ஆக்ஞை!"



வில்லி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான்! கையில் நகை மூட்டை!

"சாமீ, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, என் வீட்டில் யாரோ சில கொள்ளையர்கள் புகுந்து களவாடியுள்ளனர்!
உறங்கிக் கொண்டிருந்த பொன்னாச்சி எழுந்து பார்த்து அலற நினைத்தாள் போலும்!
ஆனால் கொள்ளையர்கள் நாமம் தரித்து, திருச்சின்னங்கள் தாங்கி இருப்பதைப் பார்த்து அமைதியாகி விட்டாள்!

படுத்துக் கொண்டிருந்தவள், சரி தன் மேலுள்ள நகைகளையும் எடுத்துக் கொள்ளட்டுமே என்று திரும்பிப் படுத்தாள் போல!
ஆனால் அவள் அசைவு கண்டு அவர்களோ பயந்து ஓடி விட்டார்கள்!

இது என்ன சோதனை சுவாமி? பூலோக வைகுந்தம் என்று சொல்வீர்களே!
அரங்கத்திலா இப்படித் திருட்டு நடக்கிறது?
அதுவும் அடியார்கள் போல் தோற்றம் அளிப்பவர்கள் இப்படிச் செய்வது நமக்கு அல்லவா இழுக்கு??

அதான் பொன்னாச்சியின் சம்மதத்தோடு அத்தனை நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து வந்து விட்டேன்! இதை ஏற்றுக் கொண்டு அந்த ஏழைப்பட்ட அடியார்களிடம் கொடுத்து விடுங்கள்!
அன்னதானம் போன்ற திருப்பணிகளும் செய்ய வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்! அப்படிச் செய்தால் திருட்டு ஒழிந்து, நம் இயக்கம் காப்பாற்றப்படும்".

இராமானுசர் மற்ற அத்தனை சீடர்களையும் திரும்பி ஒரு பார்வை பார்க்க...
அனைவருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது!
இத்துப் போன மேல் துண்டுக்குச் சத்தம் போட்ட நாம் எங்கே?
சத்தம் போட்டுத் தாக்குவதே தொழிலாகக் கொண்டிருந்த வில்லி எங்கே?

சீடர்கள் அத்தனை பேரும்...குலம் பார்க்காது...
வில்லி தாசனின் காலில்...
நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்க,
நடந்த நாடகத்தை ஏதுமறியா வில்லி விழி விழியென விழித்தான்!

இராமானுசர் நடந்தது அத்தனையும் அவனுக்கு விவரித்தார்! இனி அடியவர் கூட்டத்தில் எவரும் குல விசாரிப்பு செய்யக் கூடாது என்பதை அப்போதே சட்டமாக இயற்றினார்!

"அடியவரைக் குலப் பரிசோதனை செய்பவன், பெற்ற தாயை...யோனிப் பரிசோதனை செய்தவனுக்கு ஒப்பாவான்!!!"
என்று அவர் அதிரடியாக முழங்கியதைக் கேட்டு ஸ்ரீரங்கமே அதிர்ந்து போனது!
அப்படி ஒரு வார்த்தை எம்பெருமானார் இராமானுசர் வாயில் இருந்து வரும் என்று எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

கொஞ்ச நாளில், வில்லி சிறந்த மாணாக்கனாகத் தேறி வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை பெற்றான்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆனான்!
பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று ஆழ்வார் பாசுரங்களை நாட்டியம் செய்து பாடிப் பரவினாள்! அவர்கள் காதல் ஈரப் பாசுரம் போல் ஈரமாகவே வளர்ந்தது!

மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் - கீழிருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்!


எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
பொன்னாச்சி உடனுறை பிள்ளை உறங்கா வில்லி தாசன் திருவடிகளே சரணம்!!
Read more »

Thursday, September 18, 2008

இறைவனுக்கு எது பிடிக்கும்? - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - Part 2

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை! ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ! - ஜய விஜயர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்...கருமுகிலான் யோசிக்கிறான்! சென்ற பதிவு இங்கே!
(மன்னிக்கவும்! பாக்டிரீயாக் காய்ச்சலின் காரணமாக, ஓரிரு வாரமாய் தொடரைப் பதிய முடியவில்லை! சென்ற பகுதியை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடுங்கள்; தொடர்ச்சி/Continuity புரிந்து விடும்)

"ஆகா! இவர்களுக்குத் திருவிளையாடல் ஆடித் தான் புரிய வைக்கணும் போல இருக்கே! பார்த்தாயா லக்ஷ்மீ, என் துவாரபாலகர்களே, என் சொல்லைக் கேட்டு நடக்க, கொஞ்சம் யோசிக்கிறார்கள்!
ஆனால் (பின்னாளில்), நம் இராமானுசனை அண்டினோர் மட்டும், அவன் சொன்ன வண்ணமே செய்கிறார்களே! இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?

"உம்..."

"என்ன உம்? உடையவர் சொன்ன ஒரே வார்த்தைக்காகப் பேரறிஞர் முதலியாண்டான், கொஞ்சம் கூட கூச்சம் பாராமல், யார் வீட்டுக்கோ சென்று தண்ணி இறைக்கப் போகிறார்! ஆனா என் துவார பாலகர்கள்? எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?"

"ஹா ஹா ஹா, பெருமாளே! உங்களுக்கு இன்னுமா காரணம் புரியவில்லை?"
"புரியவில்லையே தேவீ! நான் தான் வேதம் சொன்னேன்! நான் தான் கீதை சொன்னேன்! அதையே தானே இந்த இராமானுஜன் இன்னும் விரித்து விரித்து விலாவரியாகச் சொல்கிறான்! அவன் சொந்தமா ஒன்னும் சொல்லலை! ஆனா எனக்கு மட்டும் மதிப்பு இல்லாமப் போச்சுதே!"

"ஓ...நீங்க அப்படி வரீங்களா? சரீ....வேதம், கீதை-ல எல்லாம் என்னான்னு சொன்னீங்க சுவாமி?"

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று-ன்னு சொன்னேன்"

"சரி தான்! உங்க கால்-ல வந்து விழு விழு-ன்னு நீங்களே சொல்லிக்கிட்டா யாரு வந்து விழுவாங்க? இதே ஒரு அடியவர், அதோ அழகிய மணவாளப் பெருமாள் இருக்காரு! அவர் அன்பானவர்! அவர் கால்-ல விழுங்க-ன்னு சொன்னா அது அழகு, அடக்கம், ஆற்றுப்படுத்தல், வழிகாட்டல்! அப்போ வந்து விழுவாங்க!"

"ஓ...."

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று - இதை எப்போ எங்கே சொன்னீங்க?"

"கீதையில் பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னேன்! இது கூடவா உனக்குத் தெரியாது?"

"உக்கும்...கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? யாருக்கு அம்புட்டு பொறுமை இருக்கு?
குழந்தைகளுக்கு என்ன தரப் போகிறோம்-ன்னு முன்னாடியே சொன்னா தானே, அதுங்க ஆர்வத்தோடு விளையாட்டில் கலந்துக்குங்க!"

"அட! ஆமாம்!"

"இதே ஆண்டாளைப் பாருங்க, எடுத்த எடுப்பிலேயே சொல்லிடறா, நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்-னு! - அம்மா எப்போதும் சொல்லிவிட்டுக் கொடுக்க மாட்டாள்! கொடுத்து விட்டுச் சொல்லுவாள்!
அது தான் அம்மாவின் ஹிருதயம்! அம்மாவின் ஹிருதயம் தான் ஆச்சார்ய ஹிருதயம்! அதுனால தான் ஆச்சாரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு!"

"ஓ..."

"என்ன ஓ...ஓ...ன்னு ஓ போடுறீங்க சுவாமி? :) பேசாம நீங்களும் அடியார் கூட்டத்தில் போய்ச் சேர்ந்துடுங்க! அப்பறம் தெரியும் அங்கே மட்டும் எப்படி வேலை டாண் டாண்-னு நடக்குதுன்னு? இப்போ நீங்க பேசாம வேடிக்கை பாருங்க! அதோ....சனகாதி ரிஷிகள் உங்களைத் தேடி வராங்க பாருங்க!"


சனகாதி ரிஷிகள், குழந்தை ரிஷிகள்! மொத்தம் நான்கு பேர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்...
திருப்பாற்கடலை நோக்கி வருகிறார்கள்! இறைவனுக்கு உருவம் இருக்கா என்ன? போய் தான் பார்த்துடுவோமே-ன்னு சும்மா அதிரடியாகக் கிளம்பி வருகிறார்கள்...

இறைவனின் பாற்கடல் ஆலயத்துக்குள் வந்தவர்கள், துவாரபாலகரான ஜய-விஜயர்களைப் பார்க்கிறார்கள்! பார்த்தும் பார்க்காதது போல், நேரடியாக உள்ளே செல்ல எத்தனிக்கிறார்கள்!
அளந்தவனையே அளந்து பார்க்க அல்லவா வந்துள்ளார்கள்! அதான் இறைவன் ஒருவனையே குறியாகக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்!

ஜய விஜயர்களுக்குப் பாவம் அப்போது தான் பெருமாள் தங்களைக் கீழே வருகிறீர்களா-ன்னு கேட்ட டென்ஷன்! தப-தப என்று உள்ளே நுழையும் சனகாதி ரிஷிகள் நால்வரையும் தடுக்கிறார்கள்! வரவின் காரணம் என்ன என்பதை உரைத்து விட்டுச் செல்லும்படிச் சொல்கிறார்கள்...பிடி சாபம்...

"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும்! அது தானே உங்கள் கடமை? ஆனால் இறைவனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் உங்களுக்கு ஆணவத்தையும் திமிரையும் அல்லவா வளர்த்து இருக்கு?
அதை வளர்த்து விட்ட அந்த நெருக்கம் இனி உங்களுக்குத் தேவையில்லை! இறைவனை இக்கணமே பிரியுங்கள்! பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்!"

"ஐயோ...முனி சிரேஷ்டர்களே...அபயம், அபயம்! சக அடியார்களே அபயம், அபயம்! அடியோங்களை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

"உம்..."

"பெருமாள் சற்று முன்னர் தான் பூலோகம் வருகிறீரா-ன்னு கேட்டார்! அப்போது அவரிடம் தயங்கினோம்! ஆனால் இப்போது சாபம் பெற்றுச் செல்ல வேண்டியதாகப் போய்விட்டதே!
இறைவனிடம் வைக்க வேண்டிய பற்றை, மோட்சத்தில் வைத்தோமே! ஐயகோ! எங்களை மன்னித்து, விமோசனத்துக்கு வழி காட்டுங்கள் ரிஷிகளே!"

"இறைவனை நூறு பிறவிகள் பிரிந்து, ஆத்திகர்களாக வாழ்கிறீரா? இல்லை
இறைவனை மூனு பிறவிகள் பிரிந்து, நாத்திகர்களாக வாழ்கிறீரா? - எது வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள்! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க நாங்கள் இங்கு வரவில்லை! வேறு ஒரு முக்கியமான வேலையாக வந்துள்ளோம்!"

"முனீஸ்வரா, இறைவன் வாய் விட்டுக் கேட்ட போது யோசித்தோம்! ஆனால் இப்போது அதேயே யாசித்தோம்! அவர் சங்கல்பம் எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்! - அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் அது வரம் ஆகியிருக்கும்! இப்போதோ அது சாபம் ஆகிப் போனது!

சரி, எது எப்படியோ, எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! ஆகவே, நாத்திகராய்ப் பிறந்தாலும், மூன்றே பிறவிகள் பிரிந்து, அவரையே சீக்கிரமாகச் சேர வேண்டும்!
சீக்கிரமான கைங்கர்ய பலனையே எங்களுக்குச் சாபமாக ஆக்கித் தாருங்கள்! நன்றி உடையவர்களாக இருப்போம்!"

முனிவர்களுக்கே வெட்கமாகிப் போனது...அவசரப்பட்டு விட்டோமோ? பாவம், இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ? அப்படி ஒன்றும் மோசமாக எல்லாம் இவர்கள் செய்து விடவில்லையே?

அப்போது மூக்கைத் துளைக்கும் ஒரு நறுமணம்! - துளசீ மணம்! காற்றோடு கலந்து வீசி வீசி வருகிறது! கூடவே ஒரு சப்தம்! ஜல், ஜல்! கல், கல்!



"ஆகா எம்பெருமான் பொற் பாதச் சலங்கைகள் ஒலிக்க நடந்து வருகிறானோ? அவன் மணம் அல்லவா இந்தத் துளசீ மணம்?
ச்சே! அவனைப் போய் உருவம் இருக்கா, அது இருக்கா, இது இருக்கா-ன்னு எல்லாம் சந்தேகப்பட்டோமே! அதைப் போக்கிக் கொள்ள இவ்வளவு தூரம் நடந்து வேறு வந்தோமே! இது என்ன வெட்கக் கேடு?

பெற்ற தாய்க்கு முலைப்பால் சுரக்குமா என்று சோதித்துப் பார்த்து விட்டா ஒரு குழந்தை பிறக்கிறது? ச்ச்சீ! இது என்ன கேவலமான சோதனைப் புத்தி நமக்கு?
அருவமான நீராவி உருவமான நீர் ஆகாதா? இல்லை உருவமான நீர் தான், அருவமான ஆவி ஆகாதா?

மெத்தப் படித்ததால் ஞான யோகமும், தினப்படி கர்மாக்கள் செய்ததால் கர்ம யோகமும், அவனைப் போற்றிப் பாடியதால் பக்தி யோகமும் கை கூடிற்றே தவிர,
இப்படிச் சோதித்துப் பார்க்கும் ஒரு எண்ணம் எப்படி நமக்கு வந்தது? அப்படியானால் இந்த மூன்று யோகங்களைத் தவிர, நமக்கு இன்னும் வேறு ஏதோ ஒன்னு குறையுதோ?"

எம்பெருமான் முனிவர்கள் முன் தோன்றி விட்டான். வாசலுக்கே வந்து விட்டான்!
மயிலிறகு அசைய அசைய, பீதாம்பரம் உருள உருள, கையில் தாமரைப் பூ சுழற்றச் சுழற்ற, இட்டடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க...இதோ ஈசன்!

அடியில் முடி வீழச் சேவிக்கிறார்கள் முனிவர்கள்! ஆகா என்ன ஆச்சரியம்!
திருவடிகளைக் காணோம்!
உருவம் சோதிக்க வந்தவர்க்கு, அடியை அருவம் ஆக்கிச் சோதிக்கிறானோ?
தவற்றினை உணர்ந்த தவ முனிகள், எம்பெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்! உய்வுக்கு வழி காட்டுமாறு வேண்டுகிறார்கள்!

"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா! - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே! அப்படியானால் எங்களுக்கு வேறேதும் ஒர்ய் யோகம் இன்னும் கைவர வேண்டுமோ? அதை என்னவென்று சொல்லி அருள வேண்டும் சுவாமி!"

"சனகாதிகளே! சொல்கிறேன்! ஆனால் அதற்கு முன்னால்...இங்கிருக்கும் ஜய விஜயர்கள் ஏன் இப்படி முகம் வாடிக் களைத்துப் போயுள்ளார்கள்?"

"அவர்கள் அகம்பாவமாக நடந்து கொண்டார்கள் சுவாமி! அதனால் தான் அவர்களைச் சபித்து பூலோகம் அனுப்பத் துணிந்து விட்டோம்!"

"ஆகா! என்ன காரியம் செய்தீர்கள்? ஜய விஜயர்கள் பரம பாகவதர்கள் ஆயிற்றே! சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு என்னைப் பிரிய மாட்டாது, வைகுண்டத்தைப் பிரிய மாட்டாது இருக்கலாம்! ஆனால் அவர்களுக்கு அகம்பாவமா? யார் சொன்னது?"

"அவர்களே ஒப்புக் கொண்டார்கள் சுவாமி!"

"அவர்கள் ஒப்புக் கொண்டால், அது அவர்கள் சுபாவம்! ஆனால் நான் ஒப்புக் கொள்வேனா?"

"சுவாமி..."

"யாருக்கு அகம்பாவம்? அகம்-பாவம்! உங்களுக்கா? அவர்களுக்கா? இல்லை எனக்கா?"

"ஐயையோ...சுவாமி..."

"ஆலயத்துக்குள் நுழையும் போது, கண்ணில் பட்டவரை எல்லாம் தள்ளி விட்டு, நேராகக் கருவறைக்குள் சென்று விடுவீர்களா? கோபுரம் தரிசித்து, கொடிமரம் வணங்கி, சேனை முதலியாரையோ/தும்பிக்கை உடையானையோ துதித்து, கருடனையும் கண்டு, ஆலய வரிசையில் அடியார் கூட்டத்தை எல்லாம் கண்ட பின்னர் தானே, என்னைச் சேவிக்க வருவீர்கள்?
இல்லை கண்ணை மூடிக் கொண்டு, நேராகக் கருவறை வந்து தான் கண்ணைத் திறப்பீர்களா?"

"சுவாமி..."
(சனகாதிகள் வெலவெலத்துப் போகின்றார்கள்)


"அது போலத் தானே இங்கும்? ஜய விஜயர்கள் என் பணியில் இருக்கும் அடியார்கள் அல்லவா! அவர்களை வணங்கக் கூட வேண்டாம்! முகமன் கூறலாம் அல்லவா? கூடி இருந்து குளிர்ந்தேலோ தெரியாதா உங்களுக்கு?
நேரடியாக இறைவனும் நானும் மட்டுமே! மற்ற எவனும், எந்த அடியானும் எங்களுக்கு நடுவில் இல்லை என்ற அதிகாரப் போக்கை உங்களுக்கு யார் கொடுத்தது?"

"சுவாமி..."

"ஜய விஜயர்களுக்கு இறை-அணுக்க அகங்காரம் என்று சொல்லும் உமக்குத் தான் அகங்காரம் என்று நான் சொல்கிறேன்!"
(சனகாதிகள் வெலவெலத்துப் போகிறார்கள். இவ்வளவு கோபமாகச் சினப்பார் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!)

"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று!
எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! அதனால் நாத்திகனாய்ப் பிறந்தாலும் பரவாயில்லை! மூன்றே பிறவிகள் பிரிந்து, கைங்கர்ய சீக்கிரத்தையே அவர்கள் விரும்பினார்கள்! அவர்களைப் போய்...."
(சனகாதிகள் தேம்பித் தேம்பி அழ...)

"இப்போது நான் உங்களைச் சபிக்கட்டுமா?"

"சுவாமி..."

"வேண்டாம், போங்கள்!
கேட்டீர்களே ஞானம், கர்மம், பக்தி தவிர வேறு என்ன வேண்டும்-ன்னு! உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை!
பின்னாளில் சிவபெருமான் சொல்லப் போகிறார்! அதுவும் வாய் பேசாமல், மவுன மொழியாகவே சொல்லப் போகிறார்!
நீங்கள் சபித்த நாத்திகர்களிடம் இருந்து நீங்களே ஒரு பாடம் கற்றுக் கொள்வீர்கள்!
அந்த நாத்திகரின் வம்சக் கொழுந்து தான், அசைக்க முடியாத பக்தி என்றால் என்ன என்று, மெத்தப் படித்த உங்களுக்கு உணர்த்தப் போகிறது!
ஒன்று மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்! அடியார்களுக்குச் சாபம் தெரியாது! சரணமே தெரியும்!"

"சுவாமி..."

"சென்று வாருங்கள்!"
(இறைவன் மறைந்து விடுகிறான்)

அடியவர்களை அலட்சியம் செய்த அறிஞர்கள், இறைவனிடத்தில் நமக்கு Straight Dealing, இவர்கள் என்ன இடையில் என்று அதிகாரப் போக்காய் யோசித்த யோகிகள்...
உயிர்ப் பயம் என்று வரும் போது மட்டும், தங்கள் சொந்த நலனுக்காக, தினமும் நூறு முறை "இரண்யகசிபுவே நமஹ", "இரண்யகசிபுவே நமஹ" என்று சொல்லும்படி ஆயிற்று! :)

ஆத்திக ஜய விஜயருக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறிய ஞானிகள்,
நாத்திக ஜய விஜயருக்கு ஆயிரம் முறை வணக்கம் சொல்ல வேண்டியதாகப் போயிற்று :)

எதை எதோடு, எப்போது கோர்க்க வேண்டுமோ, அதை அதோடு, அப்போது கோர்க்க வேண்டும்! - அந்தக் கலையில் ஒருவனே வல்லவன்! அவனே நல்லவன்!

ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ? அந்த வேறேதோ என்ன?
(தொடரும்)...
Read more »

Thursday, September 04, 2008

இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1

"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்டு வர இம்புட்டு நேரமா ஆகும்?"

"அதில்லீங்க அத்தை! வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது! இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு!
வரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது! அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்!"

"நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம்! ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு பாத்தா, எப்பவும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கியே!
வீடுன்னா வேலைகள் இருக்கத் தான் செய்யும்! நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும்! இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை? ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா?"

"அதில்லீங்க அத்தை..."

"பதிலுக்குப் பதில் பேசாதே! உங்க வீட்டுல செல்வச் செழிப்பிலே வளர்ந்த பொண்ணுன்னா, தண்ணி இறைக்கக் கூடவே ஒரு வேலையாளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்!
அதை விட்டுட்டு, உனக்கும் சேர்த்து நாங்களே வேலை செய்யணும்-னா எப்படி? எங்களுக்குத் தான் செய்ய வேணாம்! உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல?"

தேசிகன் திருக்கிணறு

அத்தை-அத்துழாய் உரையாடல்! அத்தை சொற்களால் அர்ச்சிக்கிறாள்! அத்துழாய் பாவம் சின்ன பொண்ணு! பெரிய நம்பியின் திருமகள்!
அதுவோ புதுசாய் புகுந்த புகுந்த வீடு! எல்லாரும் நல்லவங்க தான்!
ஆனால் உள்ளதையும் சரி, உள்ளத்தையும் சரி, அன்பினால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை! சில சமயம் சொற்கள் வெளிப்பட்டு விடுகின்றன!

அவர்கள் வீட்டில் வேண்டுமானால் அவை சாதாரண சொற்களாய் இருக்கலாம்! ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே! :)
தீந்தமிழ்ப் பாசுரங்களே ஓதி ஓதி வளர்ந்த வீட்டுப் பெண்ணொருத்தி, திக்-திக் வார்த்தைகளைக் கேட்டால் என்ன செய்வாள் பாவம்! தன் அப்பா பெரிய நம்பிகளிடம் சொல்லாமல் சொல்லிக் கண் கலங்குகிறாள்!

"நம் வீட்டில் எது நடந்தாலும், அண்ணாவிடம் சொல்வது தானேம்மா வழக்கம்! போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்!"


நம்-அண்ணாவிடம் செல்கிறாள் அத்துழாய்! அது யார் நம்-அண்ணா?
நம்-ஆழ்வார் தெரியும்! அது யார் நம்-அண்ணா?
நம்-கோயில்-அண்ணன் என்று மொத்த திருவரங்கமும் உரிமை கொண்டாடிய உடையவர் தான் அந்த நம்-அண்ணா!

"அட, இதெல்லாம் குடும்ப விஷயம்! இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா? பேசாம நகரும்மா! வந்தோமா, சேவிச்சோமா, பிரசாதம் வாங்கினோமா, போயிக்கிட்டே இருக்கணும்!"

இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது! அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர்! குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான்! அந்தரங்க விஷயமும் அந்த-"ரங்க" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்!
காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை?


"என்னம்மா...சொல்லு அத்துழாய்! நீர் இறைக்க, உங்க வீட்டிலிருந்து கூடவே ஒருவரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்-னா சொன்னாங்க?"

"உம்...சுவாமி!"

"முதலியாண்டான்......"

"சொல்லுங்கள் குருவே!"

"நம் அத்துழாய் பொருட்டு, இந்தத் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய உமக்கு விருப்பமா?"

"அடியேன்! சித்தம்!"
ஆகா...என்ன இது? முதலியாண்டான் சகல சாஸ்திர பண்டிதராச்சே! அவரைப் போய்....சேச்சே!
கோயிலில் கூட இது போன்ற வேலைகளை எல்லாம் "படிக்காத அடியார்கள்" அல்லவா செய்வார்கள்?

இவர் சொல்லின் செல்வர்! வாயைத் திறந்தால் வண்டமிழும் வடமொழியும் கொட்டுமே! இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர்! இவரையா இப்படி? படிச்ச படிப்புக்கு ஒரு கெளரவம் வேண்டாம்?

ஏதோ கோயில் கைங்கர்யம்; குருவுக்கு முடியலைன்னாலும் பரவாயில்லை! போனாப் போகுது-ன்னு செஞ்சிடலாம்!
யாரோ ஒரு சம்பந்தி! அவிங்க வீட்டுக்குப் போய் தண்ணி இறைச்சிக் கொடுக்கணுமாம்! இது என்ன மானக்கேடு? இதுக்குத் தீர்த்தக் கைங்கர்யம்-னு பெத்த பேரு வேற!

ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க! பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க! அவிங்கள இப்படிச் செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

முதலியாண்டான் மறைபொருள் வித்தகர்! இவருக்கா இப்படி? உடையவர் தான் சொன்னார் என்றால் இவருக்கு எங்கே போனது புத்தி? எதிர்த்துப் பேச வேண்டாம்? ஏன் இப்படி மென்மையாகவே போகிறார்கள்? கொஞ்சம் கூடச் சரியில்லை!


(திருப்பாற்கடலில் வாயிற் காத்தருளும் ஜய விஜயர்களோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்...)
"என்னப்பா, ஜய-விஜயா,......நானும் வேதம் எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு! யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை! நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல! செல்லப் போகிறேன்! என்னுடன் வருகிறீர்களா?"

"சுவாமி...நாங்கள் பரிபூர்ண சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! சரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்ற தங்கள் வாக்கு பொய்யாகலாமா?
நாங்கள் மீண்டும் பிறவி எடுத்தால், செய்த சரணாகதிக்கு ஏது மதிப்பு?
நீங்கள் ஆணையிட்டால் நாங்கள் இங்கேயே இருக்கவே பிரியப்படுகிறோம்!"

(கருமுகில் முகம் இன்னும் சற்றே கருக்கிறது...)

"சுவாமி...தங்கள் முகம் மாறலாமா? சரி, நாங்கள் உம்முடனேயே வருகிறோம்!"

"கடனே என்று சொல்ல வேண்டாம்! யோசித்துச் சொல்லுங்கள்! மேலும்....,
என்னுடன் உங்களை அழைத்துச் சென்றால், கதையில் நீங்கள் வில்லன்களாகத் தான் வருவீர்கள்! ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள்! திட்டித் தீர்ப்பார்கள்! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!"

"சுவாமி, ஆத்திகர்கள் எங்களை வசைபாடுவார்களா? அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும்? உம்மிடம் சரணாகதி செய்த எங்களுக்கு, இது தானா நீங்கள் செய்யும் உபகாரம்?

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை!
ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ!
"


* முதலியாண்டான் சென்றாரா? ஜய-விஜயர்கள் சென்றார்களா?
* ஏன் செல்ல வேண்டும்? எதற்குச் செல்ல வேண்டும்?
* "என்" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா?
* "என்" ஞானம், "என்" கர்மம், "என்" பக்தி - இதெல்லாம் "என்"னாவது?
"நான்" செய்த இதுக்கெல்லாம் மதிப்பில்லையா?

(அடுத்த பதிவில்....)
Read more »

Thursday, December 28, 2006

ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2

இதற்கு முந்தைய பதிவு இங்கே!

அகார உகார மகாரங்களின் சேர்க்கை "ஓம்"காரம். ஆங்காரம் அழிய ஒங்காரம் வேண்டும்! நண்பர் ஜிரா ஓங்காரம் பற்றி ஒரு நல்ல பதிவிட்டிருந்தார். அது அடியேனைப் போன்ற ஆன்மீக ஞானமில்லாத் தற்குறிகளுக்குப் புரியுமா?
அடியேனுக்குத் தெரிந்த ஓங்காரம் எல்லாம், பானைக்குள் இருந்து வரும் ஓங்கார சப்தம் தான்! என்னது, பானைக்குள் ஓங்காரமா? ஆம், ஆழ்வார் பாசுரக் காட்சி!


om-pots-krishna

குட்டிக் கண்ணன், வெண்ணெய் முழுதும் உண்டு விட்டு, காலி வெங்கலப் பானையை நடுக்கூடத்தில் வைத்துத் தட்டுகிறான்!
தோம் தோம் தோம் என்ற சப்தம் போய்,
ஓம் ஓம் ஓம் என்ற பிரணவ சப்தம் ஒலிக்கிறது!
பிரணவ மந்திரம் = அ+உ+ம்.
அதன் நடு நாயகமான உகாரம் = காத்தல் தொழில் அல்லவா?
காக்கும் கடவுள் பரந்தாமன், கண்ணன் தானே?
தெய்வக் குழந்தை ஓங்கார ஒலி கேட்டு, உகார சப்தத்தில் உவக்கின்றது!




நேற்று அரங்கத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயா, அரங்கனிடம் என்ன கேட்டார்? "பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தாயே" என்று கேட்டார்!
அதற்குப் பதில் ஆயர்ப்பாடியில் தான் உள்ளது. கண்ணனின் ஊரான ஆயர்ப்பாடிக்குப் போகலாம் வாருங்கள். ஆயர்ப்பாடிக்குப் போகணும்னா "விசா" வேண்டுமே! என்ன விசா? கோபியர்களைப் போல் குழந்தை மனம் வேண்டும். அது தான் அந்த விசா!

ஆயர்ப்பாடியில் அன்று சிறுவர்க்கு எல்லாம் ஒரே கும்மாளம்; கண்ணன் லாவகமாக வெண்ணெய் திருடி எல்லா நண்பர்களுக்கும் வாரி வாரிக் கொடுக்கிறான்.
ஒரு கோபிகையின் வீட்டில் நுழைகிறது மழலைப் பட்டாளம். கருப்புப் பானையில் மடக்கு போட்டு வெண்ணையை மூடி வைத்துள்ளார்கள்.
கையை விட்டான் கண்ணன்; வந்து விட்டாள் அந்தக் கோபிகை!
ஓடி விட்டனர் எல்லாரும். நம் கண்ணனும் ஓடியே போய் இரு பெரும் பானைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டான்.

புறங்கையில் வெண்ணெய் ஒட்டிக் கொண்டுள்ளதே! அதை நக்கினான். உடனே, அங்கிருந்த மணி ஒன்று டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு என்று தானே அடிக்கிறது!
*அடேய் மணி! என்னைக் காட்டிக் கொடுக்கிறாயா என்று கேட்டது குழந்தை! - "இல்லை சுவாமி, அடியேன்!" என்கிறது அந்த மணி!

கண்ணன் மீண்டும் உண்ண, மணியோ மீண்டும் அடிக்கிறது!
*அடப்பாவி, "அடியேன்" என்று சொல்லிவிட்டு அடிக்கிறாயே!
சுவாமி நான் சொன்ன அடியேன் வேறு!
"மணியாகிய அடியேன்" என்று தான் சொன்னேனே தவிர "அடிக்க மாட்டேன்" என்று சொல்லவில்லையே! :-)
நீங்கள் உண்பது நிவேதனம் அல்லவா? அப்போது மணி ஒலிப்பது தானே என் கடமை! - ஹூஹூம், இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து குழந்தை எழுந்து ஓடுகிறான்!




கோபிகை இதைப் பார்த்து விட்டாள்! அடே கண்ணா என்று துரத்திக் கொண்டே ஓடுகிறாள்! பின்னால் யசோதையும் வந்து விட்டாள்!
குழந்தை ஓடியே போய் ததிபாண்டன் என்றவன் வீட்டுக்குள் ஒளிகிறது!
ததிபாண்டன் இடையரில் கடையன்! தயிர்க் கடையன்.
படிப்பறிவு எல்லாம் கிடையாது! மிகவும் எளியன்! ஆனால் அன்பே உருவானவன்; அடிக்கக் கூட மாட்டான், மாட்டை!


dhathi-pandan

அவன் வீட்டிலோ எல்லாக் குடங்களிலும் தயிர் நிரம்பி வழிகிறது!
ஓரமாய் ஒரு காலிப் பானை தென்பட, குழந்தை அதற்குள் குதித்து ஒளிந்து கொள்கிறது! இதைத் ததிபாண்டன் பார்த்து விட்டான்!
பானை மேல் ஒரு மூங்கில் தட்டு போட்டு மூடி, அதன் மேல் சாய்ந்து கொண்டான்.

யசோதை: ததிபாண்டா, அந்தத் திருட்டுக் கண்ணன் இங்கே ஓடி வந்தானே! பாத்தியா? அவன் இன்று என்னிடம் அடி வாங்காமல் தப்பவே முடியாது, பார்க்கலாம்!
பாண்டன்: யசோதாம்மா, கண்ணனை நான் பாத்தே மாசக் கணக்குல ஆகுதே! இங்கு வர மாட்டேனே! என்னிடம் ஏற்கனவே ஒரு முறை பிடிபட்டான்; அதிலிருந்தே எனக்கும் அவனுக்கும் ஆகாது! - கூசாமல் பொய் சொன்னான்!

எல்லாரும் போய் விட்டார்கள்; ஆனால் பாண்டன் எழுந்திருக்கவே இல்லை!
* அடே பாண்டா, விலகு! எனக்கு மூச்சு முட்டுது என்று குழந்தை பானையில் இருந்து குத்துகிறது!
கண்ணா, உனக்குப் பானையில் இருந்து விடுதலை வேணும்னா, எனக்கும் நீ விடுதலை கொடுக்க வேணும்! மோட்சம் என்ற விடுதலை கொடுக்க வேணும்!

* என்னது மோட்சமா? மோட்சம் என்றால் உனக்கு என்னன்னு தெரியுமா?
எல்லாம் தெரியும்! கோவிலில் அந்த நாமக்காரப் பூசாரி சொல்வாரே! சாமி கூடவே இருக்கலாம் என்று! அது தானே எனக்கும் வேணும்!
சும்மா கேள்வி எல்லாம் கேட்காதே கண்ணா! பிறவி என்கிற பானையிலிருந்து எனக்கு மோட்சம் வேண்டும்; உன்னால் கொடுக்க முடியுமா? முடியாதா??


paanai-moksham

* ததி பாண்டா, சற்று முன்னர் கூசாது பொய் சொன்ன உனக்கா மோட்சம்?
உனக்கு மட்டும் என்ன? இந்தப் பானைக்கும் சேர்த்தே கொடுப்பேன் மோட்சம்!

கண்ணன் பானைக்குள் இருந்து எழுகிறான்!
அவன் வாக்கை மெய்யாக்க, வைகுந்த விமானம் வருகிறது; பாண்டனையும், பானையும் சேர்த்தே ஏற்றிக் கொள்கிறது! ஆச்சாரியர்கள் தங்கள் வியாக்யானத்தில், "வைகுந்தம் சென்றால், இப்போதும் அந்தப் பானையைக் காணலாம்", என்று சுவைபட உரைப்பார்கள்!




இந்த நிகழ்ச்சியைத் தான் பிள்ளைப் பெருமாள் ஐயா சொல்கிறார்.
"பொய் சொன்னவனுக்குத் தானே நீ அன்று மோட்சம் கொடுத்தாய்?" என்று உரிமையாக, கோபத்துடன் கேட்டார்!
பெருசா என்னைப் பாத்து, பக்தி செய்தாயா, சரணாகதி செய்தாயா என்று எல்லாம் கேள்வி கேட்டாயே ரங்கா! அந்தப் பாண்டனோ இல்லை பானையோ பக்தி பண்ணியதா? கர்ம யோகம் செய்ததா?

சரணாகதின்னா என்னன்னு அதுக்கு மட்டும் தெரியுமா? உன்னை வணங்க அதற்குக் கைகள் தான் உண்டா? அதற்குத் தரவில்லை நீ மோட்சம்? அடியேன் ஒரு பானை விலை கூடவா பெற மாட்டேன்?

அரங்கன் அசந்து போய் விட்டான்! பின்னே இப்படி கிடுக்கிப்பிடி போட்டால்!
* பிள்ளையே! மோட்சத்தை விட ருசியான ஒன்றை உமக்குத் தருகிறேன்.
அது தான் தமிழ்ச்சுவை!
அதை உண்ணத் தான் நானே, இங்கே துயில் கொண்டு இருக்கிறேன்!
நீவிர், பராசர பட்டரின் சீடராய் இருந்து, அட்டப் பிரபந்தம்-(கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல்) என்னும் அரும் பெரும் தமிழ் நூல் செய்து, பின்னர் எம்மை வந்து அடைவீராக என்று அருளினான்.


624%20SRGM%20VIMANA

பிள்ளை மகிழ்ந்து விட்டார்; ஆனாலும் விடவில்லை!
ரங்கா என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லையே!
மெத்தப் படித்த தசரதன், தர்ம நியாயங்கள் எல்லாம் பேசி, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிரையே விட்டானே! அவனுக்கு வெறும் சொர்க்கம் தானே கிட்டியது!
படிப்பு வாசமே இல்லாத பாண்டன்! கூசாது சொன்ன பொய்க்கு பேசாது அருளினாயே மோட்சம்! அது ஏன்?

* பிள்ளைப் பெருமாள் ஐயாவே! தசரதன் என்றில்லை; பீஷ்மர், துரோணருக்கும் இப்படித் தான் கிட்டியது! தெரியுமா?
இன்றோடு பகல் பத்து முடிகிறது!
நாளை மோட்ச ஏகாதசி என்று போற்றப்படும் வைகுந்த ஏகாதசி அல்லவா? மேலும் கீதை பிறந்த நாளாயிற்றே!
அன்று உன் சந்தேகம் தீர்க்கிறேன்! இராப்பத்தில் இயம்புகிறேன்! சரியா?
சரி, சரி நீர் பேசினது போதும்! எனக்கு அலங்காரம் ஆகட்டும்!
அடியவர் கண்ணுக்கு எல்லாம் நான் அழகாகத் தெரிய வேண்டும் அல்லவா?
Read more »

Wednesday, December 27, 2006

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?=திருவரங்கம்.

திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.

ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.
அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து, அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள். பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்!
அதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்!

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(- தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

அரங்கன் அரங்கத்துக்கே அரசன்! எந்த அரங்கம்? திருவரங்கமா? இல்லை இல்லை!
உலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்; அந்த அரங்கத்துக்கு அரசன்! அவன் குடிகள் நாம் எல்லோரும்!

ரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;

அழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி ஊரே கொண்டாடி மகிழும் விழா! மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்!

அதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா! = திருவாய்மொழித் திருநாள்

என்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்!


சரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,
குட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி

பள்ளி கொண்டுள்ளான் அரங்கன்.

அவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய அர்ச்சகர். அவ்வளவு தான்.

அவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.
தன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.
ஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: "ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்!"

அரங்கன்: "என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது?"

"எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா! எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா? எனக்கு நீ கொடுக்க மாட்டாயா?"

"சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா?"

"இல்லை, சுவாமி!"

* சரி, ஞான யோகம்?"

"அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!"

"* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?"

"அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!"

"* ஹூம்ம்ம்ம்ம்ம்; சரணாகதி செய்திருக்கிறீரா?"

"அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி."

"* சரி போகிறது! ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா?"

"பசித்த பலருக்கு அப்பப்போ சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் பார்த்து சோறிட்டது இல்லை சுவாமி"

* என்ன இது இப்படிச் சொல்கிறீர்? சரி, போனால் போகட்டும்! என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா?"

"இல்லை சுவாமி! நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்!"



வந்ததே கோபம் ரங்கநாதருக்கு! எழுந்து உட்கார்ந்தார்!
நாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம்! அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே!

"* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்? என்ன அக்ரமம்! மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா? ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்?"

இதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
பெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது! அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள்! இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்!

பிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.
"ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்?
உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?...
அன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ!..."
என்று கேட்டாரே ஒரு கேள்வி!

அதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்!
இன்று வரை எழுந்திருக்கவே இல்லை!
அப்படி என்ன தான் கேள்வி கேட்டார்?....
சற்றுப் பொறுங்கள்! அடுத்த பதிவில்!!

வைகுந்த ஏகாதசி Dec 30 (மார்கழி 15) அன்று வருகிறது!
அதையொட்டி தினம் ஒரு தொடராக ஐந்து பதிவுகள் இடலாம் என்று எண்ணம்.
இந்தக் கதையை ஒட்டி, தமிழ் விழா, அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,
இறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.
இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP