Tuesday, August 23, 2011

தலை மேல்...கையெழுத்தே!

என்னவன் கால் பட்டு அழிந்தது... என்ன அது? சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன் கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!...
Read more »

Friday, August 12, 2011

வங்கத்தின் கூம்பேறி...

வங்கம் புறப்படத் தயாராகி விட்டது! ங்ங்ங்கூம் என்ற சத்தம்! ஆனால், மனிதன் எழுதிய விதிகள், மனங்களுக்குத் தெரிவதில்லையே! ஒருநாள்... காதல் பறவை ஒன்று... ஆறுதல் தேடி, வங்கத்தின் கூம்பிலே... பாய்மரக் கொம்பிலே வந்து அமர்ந்து விட்டது! ஒரு நாள், பல நாள் ஆக... பறவைக்குத் தெரியாது, இப்போது ங்ங்ங்கூம் என்ற சத்தம், "இடத்தைக் காலி பண்ணு" என்ற பொருளில் எழுப்பப் படுகிறது என்று... பாய் மரம் = பாய்களையும் துணிகளையும்...
Read more »

Tuesday, August 02, 2011

ஆண்டாள் பாசுரம்! - முருகனுக்கு!!

என்னாது, ஆண்டாள்........முருகன் மேல பாட்டு பாடி இருக்காளா? மறந்தும் புறம் தொழா-எல்லாம் கிடையாதா? ha ha ha! நான் ஒன்னும் சொல்லலை! நீங்களே பாருங்க! - இது தமிழ் அர்ச்சனைப் பாடல்!  சுசீலாம்மாவின் குரலில், இதோ:  இங்கே போங்க......... ...
Read more »

இளையராஜா இசையில்...ஆண்டாள் பிறந்தநாள்!

இன்று....என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP