முருகனின் கடைசி "வகுப்பு"!
(ஆடிக் கிருத்திகைப் பதிவு: Aug-10)
"அருணகிரி" = இது, முருகனைப் பாடவே பொறந்த ஒரு பேரு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய் -ன்னு... தானே குடுக்கும் வாக்குமூலம்!
* முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு = திருப்புகழ்
* கடைசியில் பாடி நிறைந்தது = சிவ லோகமே = திருவகுப்பு
திருப்புகழில் சந்தம் கொஞ்சும்;
ஊர் ஊராகச் சென்று பாடின அனுபவம் தெரியும்;
பழசை மறக்க மாட்டாது கணிகையரைத் திட்டும் கோபம் புரியும்;
தன்...