வாணி ஜெயராம், சங்கராபரணம், ராமதாசு, இராமநவமி
சங்கராபரணம் படத்தைப் பத்தி உங்களுக்கே நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும்! ஏன்? எதுக்குத் தெரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கீங்க?
இன்னைக்கும் அதன் "சங்கீத-அமைதியில்" மூழ்க முடிகிறதே! எப்படி?
இசை ரசிகர்கள் மட்டுமன்றி, பல தரப்பினருக்கும், படம் பிடிச்சி இருந்ததே!
தெலுங்குப் படம்-ன்னாலே மசாலா, உடற்பயிற்சி நடனங்கள்-ன்னு கேலி பேசப்படும் நிலையில், எப்படி இது போன்ற ஒரு கலைப் படத்துக்கு தெலுங்கில் ஹிட் கொடுக்க முடிந்தது?
தமிழில் சங்கராபரணம் போல் ஒரு படம் வந்துள்ளதா?
மிருதங்கச் சக்ரவர்த்தி, சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற படங்கள் இருக்கு தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் மசாலா எதுவும் கலக்காமல்? வெற்றிகரமாக??

இத்தனைக்கும் படத்தின் ஆரம்பமே, ரொம்ப மெதுவா...ஒரு கலைப் படம் போலத் தான் நகரும்! காதல் காட்சிகள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் - இதெல்லாம் 2% கூட இருக்காது! பாடல்கள் கூட, ரொம்ப Dilute செஞ்சிருக்க மாட்டாங்க! எல்லாமே மரபிசைப் பாடல்கள் தான்! மொத்தம் 12 பாட்டு வேற! தாங்குமா? :)
இத்தனைக்கும், படத்தில், சமூகம் ஒப்புக் கொள்ளாத "உறவுக் குழப்பம்" வேற தொட்டுச் செல்லப்படுகிறது! அபூர்வ ராகங்கள் அவ்வளவா ஓடலையே!
ஆனால் சங்கராபரணமோ, பல மாநிலங்களில், தெலுங்கிலேயே ஓடி, அப்பறம் தான் தமிழில் எல்லாம் டப் செய்யப்பட்டது! ஆனால் இன்னிக்கும் தெலுங்கில் பார்க்கவே பிடிக்கிறது!
படத்தில் இத்தனை "Drawback" இருக்கும் போது, எப்படி...இது ஒரு Trend Setter? :)

இப்போ VJ என்னும் வாணி ஜெயராமுக்கு வருவோம்!
சுசீலாம்மாவுக்கு அடுத்து, என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முடியும்-ன்னா அது வாணி ஜெயராம் தான்!
ஜானகி பாடினாங்க-ன்னா தூங்க முடியாது! ஒரு வித கிக்-கில் எழுந்து கொள்வோம்! :)
"பி.சுசீலா அவர்களை சுசீலாம்மா-ன்னு கூப்படறீங்க, ஆனா இவிங்கள மட்டும் ஜானகி-ன்னு மரியாதை இல்லாம கூப்பிடறீங்களே?"-ன்னு, என்னுடைய இசை இன்பம் பதிவுகளில் மக்கள் கேட்டு இருக்காங்க! :)
ஜானகி குரலோடு "கிக்" அப்படி! வேற ஒன்னும் பெருசா காரணம் இல்லை!
வாணிக்கு முன்பே ஒரு தேசிய விருது கிடைச்சிருந்தாலும்...சங்கராபரண தேசிய விருது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...க்ளைமாக்ஸ் பாடலான = தொருகு நா இதுவன்ட்டி சேவா!
வாணி ஜெயராம், தமிழில், சங்கர் கணேஷ் கிட்ட தான் முதலில் பாடினாங்க-ன்னு நினைக்கிறேன்! அப்பறம் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கண்டு கொண்டார்!
ஆனா எம்.எஸ்.வி கிட்ட பாடின "மல்ல்ல்ல்ல்லிகை - என் மன்னன் மயங்கும்" பாட்டு தான் முதல் பாட்டோ-ன்னு அப்பப்போ நினைச்சிக்குவேன்! அவ்வளவு இனிமை!
ஆனால் எம்.எஸ்.வி-சுசீலாம்மா Vs இளையராஜா-ஜானகி என்னும் இரண்டு பெரிய மலைகளுக்கு இடையில், வாணி மாட்டிக்கிட்டாங்களோ-ன்னு எனக்கு அடிக்கடி தோனும்!
தமிழில் "காட்சிகரமான" வெற்றிகளை வாணியால் பெற முடியவில்லை! குன்னக்குடி மட்டுமே வாணியைத் தன் எல்லாப் படங்களிலும் பயன்படுத்திக் கொண்டார்!
பின்னாளில், மலையாள இசை உலகம், வாணி ஜெயராமை வெற்றிகரமாக இழுத்துக் கொண்டது! அதனால் என்ன? வாணியின் - "கேள்வியின் நாயகனே" பாட்டு ஒன்னே போதும்! திரை மரபிசையில், பல்லாண்டு பல்லாண்டு, மணம் பூத்துக் கிடக்கும்!
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?-ன்னு ஹை பிட்ச்சில் எகிறும்!
ஆனா பெருமாள் ஞாபகத்துக்கு வரவே மாட்டாரு! ஏன்னா இங்கே தாயார் மட்டுமே தெரிவாங்க! :)
But, அதுக்கு அப்பறம், பழனி மலையில் உள்ள வேல் முருகா-ன்னு ஆரம்பிப்பாங்க பாருங்க...
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்(தி) இரு முருகா...திருமுருகா...திருமுருகா...ன்னும் போது, அந்தப் பிடிவாதம் கண்டு இன்னிக்கும் அழுதுருவேன்!
இப்போது சங்கராபரணம் + வாணி ஜெயராம்-க்கு வருவோம்!
தேசிய விருது என்னமோ தொரகு நா இதுவன்ட்டி சேவா என்னும் க்ளைமாக்ஸ் பாட்டுக்குத் தான்!
ஆனால் எந்த பெரிய இசைக் கருவியும் இல்லாம,
ஒரு டொய்ங்க் டொய்ங்க் என்பதை மட்டும் வச்சிக்கிட்டு,
ஒக்க நிமிஷப் பாட்டு ஒன்னு வரும் பாருங்க!
அந்த டொய்ங்க் டொய்ங்-கை வாழ்க்கை-ல மறக்கவே முடியாது!

மஞ்சு பார்கவியோட பையன் (பொண்ணு), சங்கர சாஸ்திரி வாரி இன்ட்டிக்கு ஒச்சிந்தே, ஈ பாட்டு மூலமா, அனாதை-ன்னு "பொய்" சொல்லி, Entry கொடுக்கும் கட்டம்!
அப்போ பாடப்படும் மிக எளிமையான பாடல்...மிக ஆத்மார்த்தமான பாடல்...
12 வருஷம் ஆகியும் கூட...தன்னை எட்டிப் பார்க்காத ஒருத்தருக்கு...
தன் அன்பை, பொய் ஆக்கி விடாத பாடல்!
ஆகா! என்ன பாட்டு-ங்க அது? = பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
இன்று ராம நவமி! (Mar 24, 2010)!
சக்ரவர்த்தித் திருமகனின் பிறந்த நாள்! - Happy Birthday Rama!
Happy Birthday - Bharatha, Lakshmana, Satrughana - அடுத்த இரண்டு நாட்களும்...)
இராமநவமி அதுவுமா, ஜெயிலுக்குப் போவோம் வாங்க!.....இராமதாசரும் இராமனும் வாழ்ந்த அந்த ஜெயிலுக்குப் போயி, பாடலைக் கேட்போமா?
தெலுங்குப் பாடலுக்கு பெருசு பெருசா விளக்கம் சொல்வதற்குப் பதிலா...
"அதே மெட்டில்", தமிழாக்கிக் கொடுத்துள்ளேன்!
பொருளும் புரிஞ்சி, இசையும் அதே மெட்டில் இருக்கா-ன்னு பார்த்துச் சொல்றீங்களா?
பாட்டைக் கேட்டுகிட்டே, பதிவை வாசியுங்க!
* மூலப் பாடல் இங்கே!
* தமிழில் "பாட" முயற்சித்து உள்ளேன்! :) பயமா இருந்தா கேட்க வேணாம்! :)
ஆனால்...இந்தப் பாடல்...என் சுவாசம் போல!
அதான் நியுயார்க்கில் இருந்து, சிகாகோ வந்து, எங்கும் வெளியே போகாம, விடுதி அறையில்.....இதை ஹம் பண்ணிக்கிட்டே, எழுதிக்கிட்டு இருக்கேன்! :)
படம்: சங்கராபரணம்
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: பத்ராச்சலம் இராமதாசர்
ராகம்: நாத நாமக்ரியை
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா
நா தரமா பவ, சாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா
எப்படி என்மேல், கருணை புரிவாய், ரவி ராகவ குல ராமா?
எப்படி அடியேன், கடல் கடப்பேனோ, அல்லி விழி அபி ராமா??
ஸ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா
காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா
திரு ரகு குலனே, சீதையின் சுவையே, அடியரை அணைத்திடும் ராமா!
தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!
க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலேஞ்சகு ராமா
தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா
போய்புகு பிழைகள், செய்தேன் எனினும், தூசாக்கிடுவாய் ராமா!
வறுமையும் வெறுமையும், போக்கி எனக்கருள், தெய்வ சிகாமணி ராமா!
வாசவ நுத, ராம தாச போஷக, வந்தனம் அயோத்ய ராமா!
பாசுர வர, சத் குணமுலு கல்கின, பத்ராதீஸ்வர ராமா!
வாசவன் துதி, ராம தாசனைக் காக்கும், அபயம் அயோத்தி ராமா!
தேசமும் குணமும், நடையாய் உடையாய், பத்ர கிரீஸ்வர ராமா!
(* பாடலின் பொருளையும், சில தெலுங்குப் பதங்களையும்...சரி பார்த்துக் கொடுத்த மதுமிதா அக்கா, துளசி டீச்சர், திவாகர் சாருக்கு...மன வந்தனமுலு!)
சங்கராபரணம் - படத்தில் பாடல் வரும் காட்சி:
பக்த ராமதாசு படத்தில், இதே பாடல், விஜய் யேசுதாஸ் பாடுகிறார்:
கர்நாடக இசையில்:
* பால முரளி கிருஷ்ணா

ஏன் பத்ராச்சலம் இராமதாசர் பாடல்கள் மட்டும் இப்படி மனதை என்னமோ செய்யுது?
எல்லா விதமான அன்புக்கும், காதலுக்கும், பாசத்துக்கும், நட்புக்கும்...
கால அளவிலே...
ஒரு பொறுமை உண்டு! ஒரு எல்லையும் உண்டு!
சீதை இராமனுக்கு ஒரு வருடம் தான் காத்திருந்தாள்!
அதற்குள் தற்கொலை முடிவு!
நம் அன்பன் வந்து தடுத்தான்! பிழைத்தாள்!
ஆனால் இராமதாசர் என்னும் இந்தக் கோபண்ணா...
ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை....
மொத்தம் 12 வருடம்....
மொத்த பாண்டவர்களின் வனவாச காலம்...
அவன் வந்து மீட்பானா, பார்ப்பானா என்று கூடத் தெரியாது...
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
நமக்கு கஷ்டம் வந்தா...ஒன்னு கடவுளை வெறுவெறு-ன்னு வெறுத்துக்குவோம்! இல்லை கர்ம பரிகாரத்தை பிடிபிடி-ன்னு பிடிச்சிக்குவோம்! :)
ஆனால், அவனுக்கென்றே அடைந்து கிடப்போமா?
இப்போ சொல்லுங்க.....
சரணாகதி என்னும் ஆத்ம சமர்ப்பணம் = உன் உள்ள உகப்புக்கே நான்!
இங்கு நம்மில் யார் ஆத்திகர்கள்? :)
இராம நவமி அன்று, இராமனைப் பற்றி எழுதவில்லை! சினிமாவும் பாட்டுமா எழுதி விட்டேன்! மன்னியுங்கள்!
ஆனால் இந்த ஆன்மீகம் "சினிமாத்தனமாக" இருந்தாலும்......
இதுவே நம் அன்பன் ஆஞ்சநேயனுக்குப் பிடித்தமானது! - யத்ர யத்ர ரகு நந்தன கீர்த்தனம்! எங்கெங்கெல்லாம்....அங்கெங்கெல்லாம்!
மனத்துக்கு இனியானை மனத்திலே வைத்தான்
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்....வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ???

Read more »
இன்னைக்கும் அதன் "சங்கீத-அமைதியில்" மூழ்க முடிகிறதே! எப்படி?
இசை ரசிகர்கள் மட்டுமன்றி, பல தரப்பினருக்கும், படம் பிடிச்சி இருந்ததே!
தெலுங்குப் படம்-ன்னாலே மசாலா, உடற்பயிற்சி நடனங்கள்-ன்னு கேலி பேசப்படும் நிலையில், எப்படி இது போன்ற ஒரு கலைப் படத்துக்கு தெலுங்கில் ஹிட் கொடுக்க முடிந்தது?
தமிழில் சங்கராபரணம் போல் ஒரு படம் வந்துள்ளதா?
மிருதங்கச் சக்ரவர்த்தி, சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற படங்கள் இருக்கு தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் மசாலா எதுவும் கலக்காமல்? வெற்றிகரமாக??

இத்தனைக்கும் படத்தின் ஆரம்பமே, ரொம்ப மெதுவா...ஒரு கலைப் படம் போலத் தான் நகரும்! காதல் காட்சிகள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் - இதெல்லாம் 2% கூட இருக்காது! பாடல்கள் கூட, ரொம்ப Dilute செஞ்சிருக்க மாட்டாங்க! எல்லாமே மரபிசைப் பாடல்கள் தான்! மொத்தம் 12 பாட்டு வேற! தாங்குமா? :)
இத்தனைக்கும், படத்தில், சமூகம் ஒப்புக் கொள்ளாத "உறவுக் குழப்பம்" வேற தொட்டுச் செல்லப்படுகிறது! அபூர்வ ராகங்கள் அவ்வளவா ஓடலையே!
ஆனால் சங்கராபரணமோ, பல மாநிலங்களில், தெலுங்கிலேயே ஓடி, அப்பறம் தான் தமிழில் எல்லாம் டப் செய்யப்பட்டது! ஆனால் இன்னிக்கும் தெலுங்கில் பார்க்கவே பிடிக்கிறது!
படத்தில் இத்தனை "Drawback" இருக்கும் போது, எப்படி...இது ஒரு Trend Setter? :)

இப்போ VJ என்னும் வாணி ஜெயராமுக்கு வருவோம்!
சுசீலாம்மாவுக்கு அடுத்து, என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முடியும்-ன்னா அது வாணி ஜெயராம் தான்!
ஜானகி பாடினாங்க-ன்னா தூங்க முடியாது! ஒரு வித கிக்-கில் எழுந்து கொள்வோம்! :)
"பி.சுசீலா அவர்களை சுசீலாம்மா-ன்னு கூப்படறீங்க, ஆனா இவிங்கள மட்டும் ஜானகி-ன்னு மரியாதை இல்லாம கூப்பிடறீங்களே?"-ன்னு, என்னுடைய இசை இன்பம் பதிவுகளில் மக்கள் கேட்டு இருக்காங்க! :)
ஜானகி குரலோடு "கிக்" அப்படி! வேற ஒன்னும் பெருசா காரணம் இல்லை!
வாணிக்கு முன்பே ஒரு தேசிய விருது கிடைச்சிருந்தாலும்...சங்கராபரண தேசிய விருது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...க்ளைமாக்ஸ் பாடலான = தொருகு நா இதுவன்ட்டி சேவா!
வாணி ஜெயராம், தமிழில், சங்கர் கணேஷ் கிட்ட தான் முதலில் பாடினாங்க-ன்னு நினைக்கிறேன்! அப்பறம் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கண்டு கொண்டார்!
ஆனா எம்.எஸ்.வி கிட்ட பாடின "மல்ல்ல்ல்ல்லிகை - என் மன்னன் மயங்கும்" பாட்டு தான் முதல் பாட்டோ-ன்னு அப்பப்போ நினைச்சிக்குவேன்! அவ்வளவு இனிமை!
Vani Jayaram - MSV
ஆனால் எம்.எஸ்.வி-சுசீலாம்மா Vs இளையராஜா-ஜானகி என்னும் இரண்டு பெரிய மலைகளுக்கு இடையில், வாணி மாட்டிக்கிட்டாங்களோ-ன்னு எனக்கு அடிக்கடி தோனும்!
தமிழில் "காட்சிகரமான" வெற்றிகளை வாணியால் பெற முடியவில்லை! குன்னக்குடி மட்டுமே வாணியைத் தன் எல்லாப் படங்களிலும் பயன்படுத்திக் கொண்டார்!
பின்னாளில், மலையாள இசை உலகம், வாணி ஜெயராமை வெற்றிகரமாக இழுத்துக் கொண்டது! அதனால் என்ன? வாணியின் - "கேள்வியின் நாயகனே" பாட்டு ஒன்னே போதும்! திரை மரபிசையில், பல்லாண்டு பல்லாண்டு, மணம் பூத்துக் கிடக்கும்!
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?-ன்னு ஹை பிட்ச்சில் எகிறும்!
ஆனா பெருமாள் ஞாபகத்துக்கு வரவே மாட்டாரு! ஏன்னா இங்கே தாயார் மட்டுமே தெரிவாங்க! :)
But, அதுக்கு அப்பறம், பழனி மலையில் உள்ள வேல் முருகா-ன்னு ஆரம்பிப்பாங்க பாருங்க...
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்(தி) இரு முருகா...திருமுருகா...திருமுருகா...ன்னும் போது, அந்தப் பிடிவாதம் கண்டு இன்னிக்கும் அழுதுருவேன்!
இப்போது சங்கராபரணம் + வாணி ஜெயராம்-க்கு வருவோம்!
தேசிய விருது என்னமோ தொரகு நா இதுவன்ட்டி சேவா என்னும் க்ளைமாக்ஸ் பாட்டுக்குத் தான்!
ஆனால் எந்த பெரிய இசைக் கருவியும் இல்லாம,
ஒரு டொய்ங்க் டொய்ங்க் என்பதை மட்டும் வச்சிக்கிட்டு,
ஒக்க நிமிஷப் பாட்டு ஒன்னு வரும் பாருங்க!
அந்த டொய்ங்க் டொய்ங்-கை வாழ்க்கை-ல மறக்கவே முடியாது!

மஞ்சு பார்கவியோட பையன் (பொண்ணு), சங்கர சாஸ்திரி வாரி இன்ட்டிக்கு ஒச்சிந்தே, ஈ பாட்டு மூலமா, அனாதை-ன்னு "பொய்" சொல்லி, Entry கொடுக்கும் கட்டம்!
அப்போ பாடப்படும் மிக எளிமையான பாடல்...மிக ஆத்மார்த்தமான பாடல்...
12 வருஷம் ஆகியும் கூட...தன்னை எட்டிப் பார்க்காத ஒருத்தருக்கு...
தன் அன்பை, பொய் ஆக்கி விடாத பாடல்!
ஆகா! என்ன பாட்டு-ங்க அது? = பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
இன்று ராம நவமி! (Mar 24, 2010)!
சக்ரவர்த்தித் திருமகனின் பிறந்த நாள்! - Happy Birthday Rama!
Happy Birthday - Bharatha, Lakshmana, Satrughana - அடுத்த இரண்டு நாட்களும்...)
இராமநவமி அதுவுமா, ஜெயிலுக்குப் போவோம் வாங்க!.....இராமதாசரும் இராமனும் வாழ்ந்த அந்த ஜெயிலுக்குப் போயி, பாடலைக் கேட்போமா?
சிறைச் சுவரில்...இராமதாசரின் தனிமைக் கைவண்ணம்...
தெலுங்குப் பாடலுக்கு பெருசு பெருசா விளக்கம் சொல்வதற்குப் பதிலா...
"அதே மெட்டில்", தமிழாக்கிக் கொடுத்துள்ளேன்!
பொருளும் புரிஞ்சி, இசையும் அதே மெட்டில் இருக்கா-ன்னு பார்த்துச் சொல்றீங்களா?
பாட்டைக் கேட்டுகிட்டே, பதிவை வாசியுங்க!
* மூலப் பாடல் இங்கே!
* தமிழில் "பாட" முயற்சித்து உள்ளேன்! :) பயமா இருந்தா கேட்க வேணாம்! :)
ஆனால்...இந்தப் பாடல்...என் சுவாசம் போல!
அதான் நியுயார்க்கில் இருந்து, சிகாகோ வந்து, எங்கும் வெளியே போகாம, விடுதி அறையில்.....இதை ஹம் பண்ணிக்கிட்டே, எழுதிக்கிட்டு இருக்கேன்! :)
படம்: சங்கராபரணம்
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: பத்ராச்சலம் இராமதாசர்
ராகம்: நாத நாமக்ரியை
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா
நா தரமா பவ, சாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா
எப்படி என்மேல், கருணை புரிவாய், ரவி ராகவ குல ராமா?
எப்படி அடியேன், கடல் கடப்பேனோ, அல்லி விழி அபி ராமா??
ஸ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா
காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா
திரு ரகு குலனே, சீதையின் சுவையே, அடியரை அணைத்திடும் ராமா!
தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!
க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலேஞ்சகு ராமா
தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா
போய்புகு பிழைகள், செய்தேன் எனினும், தூசாக்கிடுவாய் ராமா!
வறுமையும் வெறுமையும், போக்கி எனக்கருள், தெய்வ சிகாமணி ராமா!
வாசவ நுத, ராம தாச போஷக, வந்தனம் அயோத்ய ராமா!
பாசுர வர, சத் குணமுலு கல்கின, பத்ராதீஸ்வர ராமா!
வாசவன் துதி, ராம தாசனைக் காக்கும், அபயம் அயோத்தி ராமா!
தேசமும் குணமும், நடையாய் உடையாய், பத்ர கிரீஸ்வர ராமா!
(* பாடலின் பொருளையும், சில தெலுங்குப் பதங்களையும்...சரி பார்த்துக் கொடுத்த மதுமிதா அக்கா, துளசி டீச்சர், திவாகர் சாருக்கு...மன வந்தனமுலு!)
சங்கராபரணம் - படத்தில் பாடல் வரும் காட்சி:
பக்த ராமதாசு படத்தில், இதே பாடல், விஜய் யேசுதாஸ் பாடுகிறார்:
கர்நாடக இசையில்:
* பால முரளி கிருஷ்ணா

ஏன் பத்ராச்சலம் இராமதாசர் பாடல்கள் மட்டும் இப்படி மனதை என்னமோ செய்யுது?
எல்லா விதமான அன்புக்கும், காதலுக்கும், பாசத்துக்கும், நட்புக்கும்...
கால அளவிலே...
ஒரு பொறுமை உண்டு! ஒரு எல்லையும் உண்டு!
சீதை இராமனுக்கு ஒரு வருடம் தான் காத்திருந்தாள்!
அதற்குள் தற்கொலை முடிவு!
நம் அன்பன் வந்து தடுத்தான்! பிழைத்தாள்!
ஆனால் இராமதாசர் என்னும் இந்தக் கோபண்ணா...
ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை....
மொத்தம் 12 வருடம்....
மொத்த பாண்டவர்களின் வனவாச காலம்...
அவன் வந்து மீட்பானா, பார்ப்பானா என்று கூடத் தெரியாது...
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
நமக்கு கஷ்டம் வந்தா...ஒன்னு கடவுளை வெறுவெறு-ன்னு வெறுத்துக்குவோம்! இல்லை கர்ம பரிகாரத்தை பிடிபிடி-ன்னு பிடிச்சிக்குவோம்! :)
ஆனால், அவனுக்கென்றே அடைந்து கிடப்போமா?
இப்போ சொல்லுங்க.....
சரணாகதி என்னும் ஆத்ம சமர்ப்பணம் = உன் உள்ள உகப்புக்கே நான்!
இங்கு நம்மில் யார் ஆத்திகர்கள்? :)
இராம நவமி அன்று, இராமனைப் பற்றி எழுதவில்லை! சினிமாவும் பாட்டுமா எழுதி விட்டேன்! மன்னியுங்கள்!
ஆனால் இந்த ஆன்மீகம் "சினிமாத்தனமாக" இருந்தாலும்......
இதுவே நம் அன்பன் ஆஞ்சநேயனுக்குப் பிடித்தமானது! - யத்ர யத்ர ரகு நந்தன கீர்த்தனம்! எங்கெங்கெல்லாம்....அங்கெங்கெல்லாம்!
மனத்துக்கு இனியானை மனத்திலே வைத்தான்
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்....வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ???










