மாதவிப் பந்தலுக்கு கல்யாணமே! சீதா கல்யாண வைபோகமே!
என்னது? மாதவிப் பந்தலுக்குக் கல்யாணமா? எப்போ? எங்கே? ஹா ஹா ஹா! இதோ, இங்கே! போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வரீங்களா? :)
* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
பழனி மலையில் தைப்பூசக் காவடிகளை விட, பங்குனி உத்திரக் காவடிகள் அதிகம்!...காவடிக் கடல்!
அப்படி என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)

* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!
* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!
இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!
இன்று...முருகனருள்-150 ஆம் பதிவு உதிக்கப் போகின்றது! சென்று சேர்மின்கள்!

சரி, நாம மாதவிப் பந்தல் கல்யாணப் பதிவுக்கு வருவோமோ? :)
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!
இந்தப் பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு இந்தப் பாட்டில்! பதிவின் முடிவில் சினிமா, இசை என்று பலர் பாடிய தொகுப்பும் இருக்கு, பாருங்க!
இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து, இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!
இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம் அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா = தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!
அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு?
அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர் எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? இவனுக்கு டகால்ட்டி பண்றதே வேலையாப் போச்சு-ன்னு பாசமாத் திட்டறீங்களா? :)
ஹிஹி! கல்யாண நாள் அதுவுமா என்னைத் திட்டலாமா? பதிவின் இறுதியில் அனுமன் நடத்தி வைத்த கல்யாணம் பற்றிச் சொல்கிறேன்! இப்போ பாடலைக் கேட்போம்!
வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்! படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் யாரு-ன்னு நினைக்கறீங்க? = மீனாட்சி சங்கரன்!
ஞாபகம் இருக்கா? அம்மன் பாட்டு-100 க்கு பாடிக் கொடுத்தாரே! அவரே தான்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ...நீங்களே...கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
To Download
வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!
(சீதா கல்யாண)
பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால
தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!
(சீதா கல்யாண)
பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம
அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!
(சீதா கல்யாண)
சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர
பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!
(சீதா கல்யாண)
நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார
ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!
(சீதா கல்யாண)
பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத
சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!
(சீதா கல்யாண)
பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?
இதோ, தம்பி ராகவ் அனுப்பி வைத்த சுட்டி! குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!
இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!
படங்களில் - சீதா கல்யாண வைபோகமே!
மலையாளம்:
படம்=பைத்ருகம்; குரல்=யேசுதாஸ்
அதே படத்தில், அதே பாடல் - சித்ரா
விளம்பரம்:
தனிஷ்க் நகைகள்; குரல்=ஹம்ஸிகா
இசைக் கருவிகளில் - சீதா கல்யாண வைபோகமே!
சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்:
நாதஸ்வரம்:
கீ-போர்ட் - சத்யா:
பாடகர் குரலில் - சீதா கல்யாண வைபோகமே!
விசாகா ஹரி:
பாலமுரளி கிருஷ்ணா:
யேசுதாஸ்:
மகராஜபுரம் சந்தானம்:
விஜய் சிவா:
ராஜா ராம வர்மா
சரீரீரீ...அது என்ன அனுமன் நடத்தி வச்ச சீதா-ராம கல்யாணம்?
இராமாயணத்தில், மொத்தம் மூன்று இடங்களில் சீதை-இராமன் கல்யாணம் வருகிறது!
1. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - மிதிலையில், தாய் வீட்டில் நடந்த திருமணம்!
2. அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசூயைக்கு, சீதையே தன் வாயால் விவரிக்கும் கல்யாணம் - சித்ரகூடம், காட்டில் "நடந்த" திருமணம்!
3. அன்னையை முதல் முதலாகக் காணும், நம் அன்பன் ஆஞ்சநேயன்...
தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...
அசோக மரத்தடியில், அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...
அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!
தன் மனம் என்னும் மேடையில், அவளையும் அவனையும் ஏற்றி,
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா = அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
* அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
* அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
* இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
* அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...

கல்யாண நிறைவிலே...இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் கல்யாணப் பரிசு = கணையாழி! அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி! உனக்கே நான் ஆழ ஆழி!
சீதா கல்யாண வைபோகமே! இராமா கல்யாண வைபோகமே!
பந்தல் கல்யாண வைபோகமே! கந்தன் கல்யாண வைபோகமே!!

Read more »
* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
பழனி மலையில் தைப்பூசக் காவடிகளை விட, பங்குனி உத்திரக் காவடிகள் அதிகம்!...காவடிக் கடல்!
அப்படி என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)

* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!
* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!
இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!
இன்று...முருகனருள்-150 ஆம் பதிவு உதிக்கப் போகின்றது! சென்று சேர்மின்கள்!

சரி, நாம மாதவிப் பந்தல் கல்யாணப் பதிவுக்கு வருவோமோ? :)
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!
இந்தப் பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு இந்தப் பாட்டில்! பதிவின் முடிவில் சினிமா, இசை என்று பலர் பாடிய தொகுப்பும் இருக்கு, பாருங்க!
இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து, இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!
இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம் அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா = தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!
அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு?
அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர் எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? இவனுக்கு டகால்ட்டி பண்றதே வேலையாப் போச்சு-ன்னு பாசமாத் திட்டறீங்களா? :)
ஹிஹி! கல்யாண நாள் அதுவுமா என்னைத் திட்டலாமா? பதிவின் இறுதியில் அனுமன் நடத்தி வைத்த கல்யாணம் பற்றிச் சொல்கிறேன்! இப்போ பாடலைக் கேட்போம்!
வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்! படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் யாரு-ன்னு நினைக்கறீங்க? = மீனாட்சி சங்கரன்!
ஞாபகம் இருக்கா? அம்மன் பாட்டு-100 க்கு பாடிக் கொடுத்தாரே! அவரே தான்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ...நீங்களே...கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
To Download
வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!
(சீதா கல்யாண)
பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால
தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!
(சீதா கல்யாண)
பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம
அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!
(சீதா கல்யாண)
சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர
பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!
(சீதா கல்யாண)
நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார
ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!
(சீதா கல்யாண)
பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத
சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!
(சீதா கல்யாண)
பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?
இதோ, தம்பி ராகவ் அனுப்பி வைத்த சுட்டி! குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!
இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!
படங்களில் - சீதா கல்யாண வைபோகமே!
மலையாளம்:
படம்=பைத்ருகம்; குரல்=யேசுதாஸ்
அதே படத்தில், அதே பாடல் - சித்ரா
விளம்பரம்:
தனிஷ்க் நகைகள்; குரல்=ஹம்ஸிகா
இசைக் கருவிகளில் - சீதா கல்யாண வைபோகமே!
சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்:
நாதஸ்வரம்:
கீ-போர்ட் - சத்யா:
பாடகர் குரலில் - சீதா கல்யாண வைபோகமே!
விசாகா ஹரி:
பாலமுரளி கிருஷ்ணா:
யேசுதாஸ்:
மகராஜபுரம் சந்தானம்:
விஜய் சிவா:
ராஜா ராம வர்மா
சரீரீரீ...அது என்ன அனுமன் நடத்தி வச்ச சீதா-ராம கல்யாணம்?
இராமாயணத்தில், மொத்தம் மூன்று இடங்களில் சீதை-இராமன் கல்யாணம் வருகிறது!1. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - மிதிலையில், தாய் வீட்டில் நடந்த திருமணம்!
2. அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசூயைக்கு, சீதையே தன் வாயால் விவரிக்கும் கல்யாணம் - சித்ரகூடம், காட்டில் "நடந்த" திருமணம்!
3. அன்னையை முதல் முதலாகக் காணும், நம் அன்பன் ஆஞ்சநேயன்...
தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...
அசோக மரத்தடியில், அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...
அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!
தன் மனம் என்னும் மேடையில், அவளையும் அவனையும் ஏற்றி,
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா = அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
* அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
* அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
* இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
* அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...
கல்யாண நிறைவிலே...இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் கல்யாணப் பரிசு = கணையாழி! அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி! உனக்கே நான் ஆழ ஆழி!
சீதா கல்யாண வைபோகமே! இராமா கல்யாண வைபோகமே!
பந்தல் கல்யாண வைபோகமே! கந்தன் கல்யாண வைபோகமே!!

















