Showing posts with label தெலுங்கு2தமிழ். Show all posts
Showing posts with label தெலுங்கு2தமிழ். Show all posts

Monday, March 29, 2010

மாதவிப் பந்தலுக்கு கல்யாணமே! சீதா கல்யாண வைபோகமே!

என்னது? மாதவிப் பந்தலுக்குக் கல்யாணமா? எப்போ? எங்கே? ஹா ஹா ஹா! இதோ, இங்கே! போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வரீங்களா? :)

* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!

இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
பழனி மலையில் தைப்பூசக் காவடிகளை விட, பங்குனி உத்திரக் காவடிகள் அதிகம்!...காவடிக் கடல்!
அப்படி என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)



* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!

* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!

இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!

இன்று...முருகனருள்-150 ஆம் பதிவு உதிக்கப் போகின்றது! சென்று சேர்மின்கள்!




சரி, நாம மாதவிப் பந்தல் கல்யாணப் பதிவுக்கு வருவோமோ? :)
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!

இந்தப் பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு இந்தப் பாட்டில்! பதிவின் முடிவில் சினிமா, இசை என்று பலர் பாடிய தொகுப்பும் இருக்கு, பாருங்க!

இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து, இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!

இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம் அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா = தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!

அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு?
அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர் எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? இவனுக்கு டகால்ட்டி பண்றதே வேலையாப் போச்சு-ன்னு பாசமாத் திட்டறீங்களா? :)

ஹிஹி! கல்யாண நாள் அதுவுமா என்னைத் திட்டலாமா? பதிவின் இறுதியில் அனுமன் நடத்தி வைத்த கல்யாணம் பற்றிச் சொல்கிறேன்! இப்போ பாடலைக் கேட்போம்!


வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்! படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!

இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் யாரு-ன்னு நினைக்கறீங்க? = மீனாட்சி சங்கரன்!
ஞாபகம் இருக்கா? அம்மன் பாட்டு-100 க்கு பாடிக் கொடுத்தாரே! அவரே தான்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ...நீங்களே...கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

To Download

வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர

அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!

(சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால

தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம

அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!

(சீதா கல்யாண)

சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர

பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!

(சீதா கல்யாண)

நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார

ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத

சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!

(சீதா கல்யாண)

பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?
இதோ, தம்பி ராகவ் அனுப்பி வைத்த சுட்டி! குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!

இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!





படங்களில் - சீதா கல்யாண வைபோகமே!

மலையாளம்:
படம்=பைத்ருகம்; குரல்=யேசுதாஸ்

அதே படத்தில், அதே பாடல் - சித்ரா


விளம்பரம்:
தனிஷ்க் நகைகள்; குரல்=ஹம்ஸிகா



இசைக் கருவிகளில் - சீதா கல்யாண வைபோகமே!

சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்:


நாதஸ்வரம்:


கீ-போர்ட் - சத்யா:



பாடகர் குரலில் - சீதா கல்யாண வைபோகமே!

விசாகா ஹரி:


பாலமுரளி கிருஷ்ணா:


யேசுதாஸ்:


மகராஜபுரம் சந்தானம்:


விஜய் சிவா:


ராஜா ராம வர்மா



சரீரீரீ...அது என்ன அனுமன் நடத்தி வச்ச சீதா-ராம கல்யாணம்?
இராமாயணத்தில், மொத்தம் மூன்று இடங்களில் சீதை-இராமன் கல்யாணம் வருகிறது!
1. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - மிதிலையில், தாய் வீட்டில் நடந்த திருமணம்!

2. அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசூயைக்கு, சீதையே தன் வாயால் விவரிக்கும் கல்யாணம் - சித்ரகூடம், காட்டில் "நடந்த" திருமணம்!

3. அன்னையை முதல் முதலாகக் காணும், நம் அன்பன் ஆஞ்சநேயன்...
தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...
அசோக மரத்தடியில், அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...

அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!

தன் மனம் என்னும் மேடையில், அவளையும் அவனையும் ஏற்றி,
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா = அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
* அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
* அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
* இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
* அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...

கல்யாண நிறைவிலே...இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் கல்யாணப் பரிசு = கணையாழி! அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி! உனக்கே நான் ஆழ ஆழி!

சீதா கல்யாண வைபோகமே! இராமா கல்யாண வைபோகமே!
பந்தல் கல்யாண வைபோகமே! கந்தன் கல்யாண வைபோகமே!!

Read more »

Tuesday, March 23, 2010

வாணி ஜெயராம், சங்கராபரணம், ராமதாசு, இராமநவமி

சங்கராபரணம் படத்தைப் பத்தி உங்களுக்கே நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும்! ஏன்? எதுக்குத் தெரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கீங்க?
இன்னைக்கும் அதன் "சங்கீத-அமைதியில்" மூழ்க முடிகிறதே! எப்படி?

இசை ரசிகர்கள் மட்டுமன்றி, பல தரப்பினருக்கும், படம் பிடிச்சி இருந்ததே!
தெலுங்குப் படம்-ன்னாலே மசாலா, உடற்பயிற்சி நடனங்கள்-ன்னு கேலி பேசப்படும் நிலையில், எப்படி இது போன்ற ஒரு கலைப் படத்துக்கு தெலுங்கில் ஹிட் கொடுக்க முடிந்தது?

தமிழில் சங்கராபரணம் போல் ஒரு படம் வந்துள்ளதா?

மிருதங்கச் சக்ரவர்த்தி, சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற படங்கள் இருக்கு தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் மசாலா எதுவும் கலக்காமல்? வெற்றிகரமாக??

இத்தனைக்கும் படத்தின் ஆரம்பமே, ரொம்ப மெதுவா...ஒரு கலைப் படம் போலத் தான் நகரும்! காதல் காட்சிகள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் - இதெல்லாம் 2% கூட இருக்காது! பாடல்கள் கூட, ரொம்ப Dilute செஞ்சிருக்க மாட்டாங்க! எல்லாமே மரபிசைப் பாடல்கள் தான்! மொத்தம் 12 பாட்டு வேற! தாங்குமா? :)

இத்தனைக்கும், படத்தில், சமூகம் ஒப்புக் கொள்ளாத "உறவுக் குழப்பம்" வேற தொட்டுச் செல்லப்படுகிறது! அபூர்வ ராகங்கள் அவ்வளவா ஓடலையே!
ஆனால் சங்கராபரணமோ, பல மாநிலங்களில், தெலுங்கிலேயே ஓடி, அப்பறம் தான் தமிழில் எல்லாம் டப் செய்யப்பட்டது! ஆனால் இன்னிக்கும் தெலுங்கில் பார்க்கவே பிடிக்கிறது!

படத்தில் இத்தனை "Drawback" இருக்கும் போது, எப்படி...இது ஒரு Trend Setter? :)



இப்போ VJ என்னும் வாணி ஜெயராமுக்கு வருவோம்!

சுசீலாம்மாவுக்கு அடுத்து, என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முடியும்-ன்னா அது வாணி ஜெயராம் தான்!
ஜானகி பாடினாங்க-ன்னா தூங்க முடியாது! ஒரு வித கிக்-கில் எழுந்து கொள்வோம்! :)

"பி.சுசீலா அவர்களை சுசீலாம்மா-ன்னு கூப்படறீங்க, ஆனா இவிங்கள மட்டும் ஜானகி-ன்னு மரியாதை இல்லாம கூப்பிடறீங்களே?"-ன்னு, என்னுடைய இசை இன்பம் பதிவுகளில் மக்கள் கேட்டு இருக்காங்க! :)
ஜானகி குரலோடு "கிக்" அப்படி! வேற ஒன்னும் பெருசா காரணம் இல்லை!

வாணிக்கு முன்பே ஒரு தேசிய விருது கிடைச்சிருந்தாலும்...சங்கராபரண தேசிய விருது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...க்ளைமாக்ஸ் பாடலான = தொருகு நா இதுவன்ட்டி சேவா!

வாணி ஜெயராம், தமிழில், சங்கர் கணேஷ் கிட்ட தான் முதலில் பாடினாங்க-ன்னு நினைக்கிறேன்! அப்பறம் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கண்டு கொண்டார்!
ஆனா எம்.எஸ்.வி கிட்ட பாடின "மல்ல்ல்ல்ல்லிகை - என் மன்னன் மயங்கும்" பாட்டு தான் முதல் பாட்டோ-ன்னு அப்பப்போ நினைச்சிக்குவேன்! அவ்வளவு இனிமை!

Vani Jayaram - MSV


ஆனால் எம்.எஸ்.வி-சுசீலாம்மா Vs இளையராஜா-ஜானகி என்னும் இரண்டு பெரிய மலைகளுக்கு இடையில், வாணி மாட்டிக்கிட்டாங்களோ-ன்னு எனக்கு அடிக்கடி தோனும்!
தமிழில் "காட்சிகரமான" வெற்றிகளை வாணியால் பெற முடியவில்லை! குன்னக்குடி மட்டுமே வாணியைத் தன் எல்லாப் படங்களிலும் பயன்படுத்திக் கொண்டார்!

பின்னாளில், மலையாள இசை உலகம், வாணி ஜெயராமை வெற்றிகரமாக இழுத்துக் கொண்டது! அதனால் என்ன? வாணியின் - "கேள்வியின் நாயகனே" பாட்டு ஒன்னே போதும்! திரை மரபிசையில், பல்லாண்டு பல்லாண்டு, மணம் பூத்துக் கிடக்கும்!

அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?-
ன்னு ஹை பிட்ச்சில் எகிறும்!
ஆனா பெருமாள் ஞாபகத்துக்கு வரவே மாட்டாரு! ஏன்னா இங்கே தாயார் மட்டுமே தெரிவாங்க! :)

But, அதுக்கு அப்பறம், பழனி மலையில் உள்ள வேல் முருகா-ன்னு ஆரம்பிப்பாங்க பாருங்க...
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்(தி) இரு முருகா...திருமுருகா...திருமுருகா
...ன்னும் போது, அந்தப் பிடிவாதம் கண்டு இன்னிக்கும் அழுதுருவேன்!


இப்போது சங்கராபரணம் + வாணி ஜெயராம்-க்கு வருவோம்!

தேசிய விருது என்னமோ தொரகு நா இதுவன்ட்டி சேவா என்னும் க்ளைமாக்ஸ் பாட்டுக்குத் தான்!
ஆனால் எந்த பெரிய இசைக் கருவியும் இல்லாம,
ஒரு டொய்ங்க் டொய்ங்க் என்பதை மட்டும் வச்சிக்கிட்டு,
ஒக்க நிமிஷப் பாட்டு ஒன்னு வரும் பாருங்க!
அந்த டொய்ங்க் டொய்ங்-கை வாழ்க்கை-ல மறக்கவே முடியாது!

மஞ்சு பார்கவியோட பையன் (பொண்ணு), சங்கர சாஸ்திரி வாரி இன்ட்டிக்கு ஒச்சிந்தே, ஈ பாட்டு மூலமா, அனாதை-ன்னு "பொய்" சொல்லி, Entry கொடுக்கும் கட்டம்!
அப்போ பாடப்படும் மிக எளிமையான பாடல்...மிக ஆத்மார்த்தமான பாடல்...

12 வருஷம் ஆகியும் கூட...தன்னை எட்டிப் பார்க்காத ஒருத்தருக்கு...
தன் அன்பை, பொய் ஆக்கி விடாத பாடல்!


ஆகா! என்ன பாட்டு-ங்க அது? = பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
இன்று ராம நவமி! (Mar 24, 2010)!
சக்ரவர்த்தித் திருமகனின் பிறந்த நாள்! - Happy Birthday Rama!
Happy Birthday - Bharatha, Lakshmana, Satrughana - அடுத்த இரண்டு நாட்களும்...)

இராமநவமி அதுவுமா, ஜெயிலுக்குப் போவோம் வாங்க!.....இராமதாசரும் இராமனும் வாழ்ந்த அந்த ஜெயிலுக்குப் போயி, பாடலைக் கேட்போமா?


சிறைச் சுவரில்...இராமதாசரின் தனிமைக் கைவண்ணம்...


தெலுங்குப் பாடலுக்கு பெருசு பெருசா விளக்கம் சொல்வதற்குப் பதிலா...
"அதே மெட்டில்", தமிழாக்கிக் கொடுத்துள்ளேன்!
பொருளும் புரிஞ்சி, இசையும் அதே மெட்டில் இருக்கா-ன்னு பார்த்துச் சொல்றீங்களா?

பாட்டைக் கேட்டுகிட்டே, பதிவை வாசியுங்க!
* மூலப் பாடல் இங்கே!
* தமிழில் "பாட" முயற்சித்து உள்ளேன்! :) பயமா இருந்தா கேட்க வேணாம்! :)
ஆனால்...இந்தப் பாடல்...என் சுவாசம் போல!
அதான் நியுயார்க்கில் இருந்து, சிகாகோ வந்து, எங்கும் வெளியே போகாம, விடுதி அறையில்.....இதை ஹம் பண்ணிக்கிட்டே, எழுதிக்கிட்டு இருக்கேன்! :)


படம்: சங்கராபரணம்
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: பத்ராச்சலம் இராமதாசர்
ராகம்: நாத நாமக்ரியை

ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா
நா தரமா பவ, சாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா

எப்படி என்மேல், கருணை புரிவாய், ரவி ராகவ குல ராமா?
எப்படி அடியேன், கடல் கடப்பேனோ, அல்லி விழி அபி ராமா??

ஸ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா
காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா


திரு ரகு குலனே, சீதையின் சுவையே, அடியரை அணைத்திடும் ராமா!
தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!


க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலேஞ்சகு ராமா
தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா

போய்புகு பிழைகள், செய்தேன் எனினும், தூசாக்கிடுவாய் ராமா!
வறுமையும் வெறுமையும், போக்கி எனக்கருள், தெய்வ சிகாமணி ராமா!

வாசவ நுத, ராம தாச போஷக, வந்தனம் அயோத்ய ராமா!
பாசுர வர, சத் குணமுலு கல்கின, பத்ராதீஸ்வர ராமா!

வாசவன் துதி, ராம தாசனைக் காக்கும், அபயம் அயோத்தி ராமா!
தேசமும் குணமும், நடையாய் உடையாய், பத்ர கிரீஸ்வர ராமா!



(* பாடலின் பொருளையும், சில தெலுங்குப் பதங்களையும்...சரி பார்த்துக் கொடுத்த மதுமிதா அக்கா, துளசி டீச்சர், திவாகர் சாருக்கு...மன வந்தனமுலு!)


சங்கராபரணம் - படத்தில் பாடல் வரும் காட்சி:


பக்த ராமதாசு படத்தில், இதே பாடல், விஜய் யேசுதாஸ் பாடுகிறார்:


கர்நாடக இசையில்:
* பால முரளி கிருஷ்ணா



ஏன் பத்ராச்சலம் இராமதாசர் பாடல்கள் மட்டும் இப்படி மனதை என்னமோ செய்யுது?

எல்லா விதமான அன்புக்கும், காதலுக்கும், பாசத்துக்கும், நட்புக்கும்...
கால அளவிலே...
ஒரு பொறுமை உண்டு! ஒரு எல்லையும் உண்டு!

சீதை இராமனுக்கு ஒரு வருடம் தான் காத்திருந்தாள்!
அதற்குள் தற்கொலை முடிவு!

நம் அன்பன் வந்து தடுத்தான்! பிழைத்தாள்!

ஆனால் இராமதாசர் என்னும் இந்தக் கோபண்ணா...
ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை....
மொத்தம் 12 வருடம்....
மொத்த பாண்டவர்களின் வனவாச காலம்...
அவன் வந்து மீட்பானா, பார்ப்பானா என்று கூடத் தெரியாது...

அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!

நமக்கு கஷ்டம் வந்தா...ஒன்னு கடவுளை வெறுவெறு-ன்னு வெறுத்துக்குவோம்! இல்லை கர்ம பரிகாரத்தை பிடிபிடி-ன்னு பிடிச்சிக்குவோம்! :)
ஆனால், அவனுக்கென்றே அடைந்து கிடப்போமா?

இப்போ சொல்லுங்க.....
சரணாகதி என்னும் ஆத்ம சமர்ப்பணம் = உன் உள்ள உகப்புக்கே நான்!
இங்கு நம்மில் யார் ஆத்திகர்கள்? :)

இராம நவமி அன்று, இராமனைப் பற்றி எழுதவில்லை! சினிமாவும் பாட்டுமா எழுதி விட்டேன்! மன்னியுங்கள்!
ஆனால் இந்த ஆன்மீகம் "சினிமாத்தனமாக" இருந்தாலும்......
இதுவே நம் அன்பன் ஆஞ்சநேயனுக்குப் பிடித்தமானது! - யத்ர யத்ர ரகு நந்தன கீர்த்தனம்! எங்கெங்கெல்லாம்....அங்கெங்கெல்லாம்!

மனத்துக்கு இனியானை மனத்திலே வைத்தான்
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!

என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்....வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ???

Read more »

Monday, June 29, 2009

தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!

மிகவும் தகர்ந்து போய், நம் கண் முன்னாடியே பொடிப்பொடியாகும் போழ்து, பேச்சே வராமல் நீரே வரும்! ஸ்தம்பித்து நிற்றல்-ன்னும் சிலர் சொல்லுவார்கள்!

அப்போது, "இன்னுமா கருணையில்லை? பேசினால் பொன்னும் சிந்திடுமா?" என்று என் கையைப் பிடித்து தடவிக் கொடுக்கும் ஆறுதலான பாட்டு ஒன்று உண்டு!

நேற்றைய கொடூரமான இரவில், தொலை தூரம் வண்டி ஓட்டிக் கொண்டே, நூறு முறையாவது இதைக் கேட்டிருப்பேன்!
இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, ஓடிக் கொண்டிருக்க, நானும் பல மைல்கள் எங்கே என்றே தெரியாமல், எங்கோ ஓடிக் கொண்டே இருந்தேன்!

இந்தப் பாடல் பக்த ராமதாசு என்ற தெலுங்குப் படத்தின் வாயிலாகப் பிரபலமான பாடல்! பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
அதை சினேகா பாடும் போது, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்!

இதில் ஒரு விசித்திரமான சோகம் என்னவென்றால்,
இந்தப் பாடலை மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் பாடலாம்! துக்கத்தில் துவளும் போதும் பாடலாம்!
இரண்டுக்குமே ஒத்து வரும் அற்புதம் எப்படி இந்தப் பாட்டில் அமைந்தது? = "மெல்லிய மனசு"!

இந்தப் பாடல் "மெல்லிய மனசு" என்ற ஜீவனைக் கட்டிச் சிறையில் எழுதப்பட்ட பாடல்!
அந்த மென்மை தான், ஒரு வெள்ளை இறகு போல, காற்றில்லாத போதும் பறக்கும்! காற்று அடிக்கும் போதும் பறக்கும்!

சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா? = அன்பாக வந்தவர்களை அரவணைத்துக் கொள்பவன் என்று "விருது" மட்டும் வாங்கி வச்சிருக்கியே?
* இதை மகிழ்ச்சியாய் இருக்கும் போது சொன்னால் = கலாய்த்தல்!
* இதையே கண்ணீரில் சொன்னால் = கையறு நிலை!

கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ! = கருணையோடு இந்த பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு! உன் பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?

கேளுங்கள்:
* பக்த ராமதாசு படத்திலிருந்து - சித்ரா - துன்பத்தில்!
* பாலமுரளி கிருஷ்ணா - மிக்க இன்பத்தில்!


இதை மெட்டு மாறாமல் தமிழாக்கி, என் வாய் பல முறை முணுமுணுக்கும்!
அப்படி முணுமுணுத்ததை இப்போது பந்தலில் உங்கள் முன் வைக்கிறேன்!
இதோ! அதே மெட்டில், ஆனால் தமிழில்.......

கேட்டுக் கொண்டே படியுங்கள்! சங்கராபரணம் படத்தில்-வாணி ஜெயராம் பாடுவது...

பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி
பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!

பலுகே பங்கார மாயே, பிலிசின பலுக வேமி
கலலோ நீ நாம ஸ்மரண, மறவே சக்கனி சாமீ
வினவினால் வாயைத் திறந்தொரு வார்த்தை சொன்னால் தப்பா?
கனவிலும் நாமம் தன்னை, மறவேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)


எந்த வேடின கானி, சுந்தைன தய ராதோ?
பந்தமு சேய நீ, நெந்-ததி வாடனு தந்த்ரி
எத்தனை வேண்டி னாலும், உள்ளம் இரங்கி டாயோ?
அத்தனை அழுத்த்த் தமா? அகலேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)

சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா?
கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ!
(பலுகே பங்கார மாயனா?)

சரணா கத விருதை, முரணாக வாங்கி னோயோ?
கருணை கொண்டே பத்ரா....சல..ராம தாசன் என்னொடு...
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)


இதை அன்பர்கள் யாரேனும் தமிழில் பாடிக் கொடுக்க முடியுமா? மிகவும் மகிழ்வேன்!

வரிகள்: பத்ராசலம் ராமதாசர்
ராகம்: ஆனந்த பைரவி்
தாளம்: ஆதி


படத்தில், சினேகா பாட, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்! பின்னே, அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் கட்டினால் சும்மா விடுவார்களா?
ஆலயத்தின் பணத்தை எடுத்து, அரசாங்கத்துக்குப் பயன்படுத்தினால் அது நியாயம்! ஆனால் அரசாங்கப் பணத்தை எடுத்து (அதுவும் கடனாகத் தான்) ஆலயம் கட்டினால், அது நியாயம் இல்லை! :)

உலகம், "நியாயம்" என்பதற்கு விதித்திருக்கும் விதியே தனி! ஆனால் மென்மையான மனத்துக்கு இந்த உலக விதிகளா கண்ணுக்குத் தெரிகிறது???
மனத்தைப் பறி கொடுத்தால், எல்லாமும் பறி கொடுக்க வேண்டியது தான்! அப்படிப் பறி கொடுத்தவர்களில் ஒருவர் பத்ராசலம் இராமதாசர்!

கோதாவரிக் கரையில், சீதையின் கடத்தல் நடந்த இடம் என்று கருதப்படும் பஞ்சவடி தான் இந்த பத்ராச்சலக் காடுகள்!
* கடத்தலுக்கு முன்பு இன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!
* கடத்தலுக்குப் பின் துன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!

* நினைந்தவாறு இருக்கும் பிராட்டியும்,
* புன்சிரிப்பில் இராகவப் பெருமாளும்,
* அன்பே உருவான இளைய பெருமாளும்...என்று திருவுருவ அழகே அழகு!

அதற்கு ஆலயம் எடுப்பித்த போது, சொந்தப் பணம் போதவில்லை! நன்கொடையாய் வந்த பொதுப் பணமும் போதவில்லை! கோல்கொண்டா அரசாங்க தாசில்தாரான இராமதாசர், வரிப் பணத்தில் சற்று கடன் வாங்குகிறார்! கருவூலத்தில் வட்டியுடன் திருப்பிச் சேர்ப்பதாக முறி எழுதிக் கொடுத்துத் தான் பணம் எடுத்துக் கொள்கிறார்!

மன்னன் தானி ஷா, வெகுண்டு எழுகிறான்!
இத்தனை காலம் ஆலயங்களின் வருவாய்களைக் கருவூலத்துக்குத் திருப்பினோமே என்று நினைக்க கூட அந்த "நீதிபதிக்கு" நேரம் போதவில்லை!
பொதுப்பணத்தில் கை வைத்த குற்றத்துக்காக இராமதாசர் சிறைப் பிடிக்கப்படுகிறார்! அது வரை சரியே! ஆனால் சிறைக் கொடுமைகள் அதிகம் கொடுத்து, அவரை அக்கு வேறு ஆணி வேறாகத் துன்புறுத்துகிறார்கள்!

கடனாகப் பெற்றதைத் திரும்ப அடைக்காத வரை, அடைக்காதவரை ஆளனுப்பித் துன்புறுத்தும் கிரெடிட் கார்டு காலம் தான் போலும், அந்தக் காலமும்!
சிறைக் கொடுமைகளுக்கு நடுவே தான் இந்தத் துன்ப/இன்ப மயமான பாட்டு!
சிறையில் இருந்தது கூடத் துன்பமாகத் தெரியவில்லை!
அவன் பாராமுகம் = துன்பம்! அவனைப் பார்க்கும் முகம் = இன்பம்!

இளவல்கள் இரண்டு பேர், தானி ஷாவின் அரண்மனைக்கு வந்து, தங்கக் காசுகள் செலுத்தி, விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்!
அன்று அன்னையைச் சிறை மீட்டவன், இன்று என்னையும் சிறை மீட்டுவானோ?
அவர்கள் செலுத்திய பதினாறாம் நூற்றாண்டு தங்கக் காசுகள் இன்றும் உள்ளன! ஒரு பக்கம் பட்டாபிஷேகம், மறுபக்கம் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று அந்தக் காசுகளை இன்றளவும் காணலாம்!

இசைக்கடல் தியாகராஜருக்கும் முன்னோடியானவர் பத்ராசலம் இராமதாசர்! தியாகராஜரே அவர் பெயரைப் பல இடங்களில் பாடுகிறார்! தெலுங்கு மொழியில் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்தப் பத்ராசலம் இராமதாசர்!


ராமதாசு - படத்திலிருந்து: (Must See)



பத்ராசலம் ஆலயத்தில் திருக்கல்யாணத்தின் போது: (Nice to See. Pl. watch the jewels hand picked by Ramadasar.)



தீபிகா - சிட்னியில்:



FUSION: (Must Hear)



உன்னி கிருஷ்ணன்:



ஸ்வாதித் திருநாள் ராம வர்மா:



* Srivats கேட்டுக் கொண்டபடிக்கு, From Rock to Ragas!


கருணிஞ்சு பத்ராசல = கருணையோடு உன் பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு!
வர ராம தாச போஷ = உன் ஆதுரமான பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?

பலுகே பங்கார மாயனா!
எந்நாளும் உன்னோடு "பிரிவின்றி",
பரிவுடன் ஆயிரம் பல்லாண்டு!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP