"ஓம் நமோ" என்றால் இதுவே! - 5
விமானத்தில் எழுதிக் கொண்டே வரும் பதிவு என்பதால், நடுநடுவே ஏர் ஹோஸ்டஸ் கிட்ட கடலை போடுவதை, நீங்களே டீஜென்ட்டா, ஒட்டுக் கேட்காமப் படிக்கணும்-ன்னு கேட்டுக் கொள்கிறேன்! :)
"நமோ" என்றால் என்ன?-ன்னு லேசாப் பார்த்தோம்! சென்ற பதிவு இங்கே!
ஆனா பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் சுருக்கமா ஒரு தொகுப்புரையைப் பார்த்துட்டு, இன்னிக்கி மேட்டருக்குப் போவோம்!

* நம என்றால் ந+ம = இல்லை + எனது!
* எதுவும் எனதில்லை என்பது தான் நம!
நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களில் எல்லாம் ஓங்காரத்துவம் இல்லை என்றும் சென்ற பதிவில் பார்த்தோம்!
நம சிவாய என்பதில் எல்லாம் "நம"-ன்னு தானே இருக்கு! அப்புறம் எதுக்கு "நமோ"?
* எனது இல்லை = "நம" என்று சொன்னா போதாதா?
* எதுக்கு "நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :)
பல பிறவிகள், பிறவிச் சுழல்-ன்னு எல்லாம் சில பேரு தத்துவமா பேசுவாங்க!
"புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்....பிறந்து இறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர்!

அனாதி காலமாய் இந்தப் பந்தங்களில் மாட்டிக்கிட்டு இருக்கோம் அல்லவா?
இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறோம்! :)
ஆனா எதுனால மாட்டிக்கறோம்?-ன்னு மட்டும் கொஞ்சம் தெரிஞ்சிப்போம்!
தெரிஞ்சிக்கிட்டோம்-ன்னா அது நம்மள விட்டுரும்!
மாட்டிக்கிட்டாலும், ரொம்ப டார்ச்சர் கொடுக்காம விட்டுரும்! :)
எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....
இந்தப் பதிவு எனது, பின்னூட்டம் எனது, பிளாக்கரே எனது, என் பதிவைப் படிக்கறவங்க எல்லாம் என் ஆளுங்க, இதைப் படிச்சிக்கிட்டு என் கிட்ட கோச்சிக்கறவங்க எல்லாம் என் விரோதிங்க! :)
சின்ன வயசுல பென்சில் எனது, பருவ வயசுல நயன்தரா காமிக்ஸ் எனது,
கல்லூரியில் அவ எனது, அவ கிட்ட போட்ட கடலை எனது! அவ கிட்ட கடலை போடற மத்தவங்க எல்லாரும் கூட எனது (என் எனிமி),
வேலைக்குச் சேர்ந்தாப் பொறவு போனஸ் எனது, கல்யாணம் ஆனப் பொறவு என் போனஸ் அவளுது, ஆனா அவ அப்பா சொத்து எப்படியும் ஒரு நாள் எனது..... :)
இப்படி இந்த மம-மம = எனது-எனது, என்ற லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இதுல ஒருத்தன் கூட விதி விலக்கு அல்ல! சன்னியாசி உட்பட! :)
மூனு நாளைக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட கோச்சிக்கிட்டு போனாரு ஒரு சன்னியாசி! போன மூனாம் நாளே திரும்பி வந்தாரு! ஏன் போனீங்க, ஏன் வந்தீங்க-ன்னு அந்தம்மா கேட்டாக! வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)
இப்படி மம, மம-ன்னு மாரடிச்சிகறதாலேயே மாட்டிக் கொள்கிறோம்! அப்போ இந்த டார்ச்சர்-ல இருந்து தப்பிக்க என்ன வழி?
* ந மம = நம! நம! நம!
இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!
அட போங்கய்யா! ஒங்க சம்பளத்தை ஒங்களது இல்லை-ன்னு சொல்லிருவீங்களா? பெருசா பேச வந்துட்டாங்க "நமஹ"-வைப் பத்தி!
யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)
இப்படி நம, நம, நம-ன்னு மனதறிய சொல்லுறது ரொம்ப கஷ்டம்! ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? அதான் "ஓம் நமோ"! :)

பிறக்கும் போது உடம்பு மட்டும் தானே பொறந்துச்சு?
அக்காஃபீனா தண்ணி பாட்டில், செரிலாக் பால் பாட்டில், ஷேம் ஷேம்-மை மறைக்க லூயி பிலிப்ஃஸ்-ன்னு பலதும் ரெடிமேடா பேக் பண்ணி கொண்டு வந்தோமா என்ன? :)
அப்பறம் அம்மா பாலூட்டினாங்க! அப்பா துணி வாங்கிக் கொடுத்தாரு!
நாக்குல தேன் தடவினாங்க! சொக்கா போட்டாங்க! கொலுசு போட்டாங்க! பள்ளிக் கூடம் அனுப்பி வச்சாங்க! கல்யாணம் பண்ணி வச்சாங்க! (அ) பண்ணி வைக்கச் சொன்னோம்! :)
அப்பறம் எல்லாம் அப்படியே ஒவ்வொன்னா நடந்துச்சி! குழந்தை வந்துச்சி! :)
அப்பாலிக்கா Skoda காரு வந்துச்சி, 3 BHK வீடு வந்துச்சி, நடு வயதில், பாஸ் கிட்ட இருந்து ப்ரமோஷன் வந்துச்சி, கூடவே பெத்த புள்ளை கிட்ட இருந்து ஆப்பு வந்துச்சி! :)
அனுபவிச்சி, அனுபவிச்சி, கடைசீசீசீல.....புதுத் துணி போர்த்தி அனுப்பி வச்சிட்டாங்க! ஆனா அதையும் அங்கே சுடறவன் எடுத்துக்கிட்டான்!
உம்....பொறந்த போது எப்படி வந்தோமோ, அப்படித் தான் பொசுங்கற போதும் போறோம்!
ஆனா நடுவுல மட்டும், இத்தனையும் சேர்ந்துக்கிட்டு, சை-சை-ன்னு ஆடுது!

இதுக்கு, படாத பாடுபட்டு, இது என்னுடையது, இது என்னுடையது-ன்னு அபிமானப்பட்டு...
அப்படி உணர்ந்து விட்டோமானால், அது தான் நமஹ! நம = எனதில்லை!
* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!
அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
தோடா! இதெல்லாம் பதிவுல பேசத் தான் நல்லா இருக்கும்! உபன்னியாசத்தில் வேணும்-ன்னா கை தட்டுவாய்ங்க! பேசி முடிச்சப்பறம் அவருக்குப் போட்ட பொன்னாடை/சால்வையைத் தூக்கிட்டு ஓடறேன்-ன்னு வையி! "சேச்சே! எனதில்லை! நாராயணனுடையது"-ன்னு சும்மா வுட்டுருவாங்களா? :)))
இம்புட்டு பேசறியே கேஆரெஸ்! இந்த மாதவிப் பந்தல் உனதில்லை-ன்னு சொல்லேன் பார்ப்போம்! விட்டுருவியா?
"நமோ! எனதில்லை மாதவிப் பந்தல்"-ன்னு பந்தலை, மதுரையம்பதி-மெளலி அண்ணா பேருக்கு எழுதி வையேன் பார்ப்போம்? :)
என்னாது? மெளலி அண்ணாவுக்கா? போங்கய்யா! குமரன், ஜீவா, ஜிரா-ன்னு எல்லாம் சொல்லலாம்-ல? கோவி கண்ணனுக்கு எழுதி வச்சாலும் வைப்பேன்! இல்லாங்காட்டி பதிவர் அம்பி-க்கு எழுதி வைச்சாலும் வைப்பேன்!
ஆனா மெளலி அண்ணாவுக்கு மட்டும் எழுதியே வைக்க மாட்டேன்! = ஓம் எனதில்லை மதுரையம்பதியுடையது! :)))
ஹிஹி! அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் எல்லாம், நம, நம-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்லணும்? சும்மா கொஞ்ச நேரம் யோசிச்சிப் பார்த்தேன்! அட, விமானத்தில் விளக்கு அணைச்சிட்டாங்க! அதான்! :)
பொதுவா, எனக்குப் புரிபடாத எதையுமே பந்தலில் எழுத மாட்டேன்! சும்மா எங்கேயோ படிச்சிட்டு, யாரையோ திருப்திப்படுத்த, "அதை மட்டுமே ஏன் எழுதற, இதையும் தான் எழுதேன்?" - என்பதெல்லாம் நமக்கு ஒத்தே வராது! உணர்ந்து எழுதினா மட்டுமே பிடிக்கும்! அவ்ளோ தான்!
அதுனால, இந்த "ஓம் எனதில்லை"-ன்னு எழுத ரொம்ப சங்கடமா இருந்துச்சி!
பைசா பெறாத பந்தல் பதிவையே எனதில்லை-ன்னு சொல்ல கேஆரெஸ்-க்கு வக்கில்லை! இதுல என்ன பெருசா "ஓம் எனதில்லை"-க்கு நான் வந்து விளக்கம் கொடுக்கறது? :)
அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் நம, நம-ன்னு சொல்லணும்? - கொஞ்சம் போல யோசிக்க ஆரம்பிச்சேன்!
அலுவல் விஷயமா இந்த பிரேசில் பயணத்துக்குப் போனேன்-ல்ல? ரியோ டி ஜெனீரோ - Atlantic Copacabana ஹோட்டல்-ல மூனு நாள் தங்கி இருப்பேனா? ஒத்தை ஆளுக்கு அறையாகக் கொடுக்காமல், பெரிய Suite-ஆக கொடுத்திருந்தாய்ங்க! உம்...ஆனால் நெருக்கமான ஒரு மின்னஞ்சல் பார்த்துவிட்டு...எப்படா திரும்ப ஊருக்கு வருவோம்-ன்னு இருந்துச்சி!
அந்த மூனு நாளும் அந்த மாளிகை என்னுது தான்! அதுல மின்னுற மீன் தொட்டி, அலங்கார விளக்கு, வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர்-ன்னு எல்லாமே என்னுது தான்! வேற எவனும் கை வைக்க முடியாது! ஆனா...?
* அந்த அலங்கார விளக்குக்கு ஏதோ ஒன்னு ஆயிரிச்சி, சரியா எரியாம அரையும் கொறையுமா எரியுது! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா?
* ஹோம் தியேட்டர்-ல கீறல் விழுந்துரிச்சி! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா? இதே நம்ம வீட்டுப் பொட்டிக்கு ஆகியிருந்தா???
வாடகைக்கு கொஞ்ச நாள் இருக்கப் போறோம்-ன்னு நல்லாத் தெரிஞ்சதால, அந்த அறையின் செல்வங்களை அனுபவித்தாலும், அதில் பாசம் பொத்துக்கிட்டு கொட்டலை!
அதுக்காக அறையில் அனுபவிக்காமலும் இருக்க முடியாது! :)
அதே சமயம், அறையில் ஓவர் ஒட்டுதலும் இல்லை!
இதோ இனி அந்த மீன் தொட்டியைக் கொஞ்சப் போவதில்லை! அதே போலத் தான் இந்த நமோ=எனதில்லை! :)
இப்போ சொல்லுங்க! நாம எல்லாருமே இங்கிட்டு வாடகை-க்கு இருக்கும் போது, ஓம்-நமோ-நாராயணாய = ஓம்-எனதில்லை-நாராயணனுடையது என்பது டுபாக்கூரா? :))
* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
பொறந்த போது எப்படி வந்தாயோ, அப்படித் தான் பொசுங்கும் போது போகப் போகிறோம் என்றாலும் கூட...தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
எனவே தாற்காலிகத்தை ஓவராக் கட்டிக் கொண்டு அழாமல்,
அவ்வப்போது, நம-நம-நம-ன்னு வாயால் ஆச்சும் சொல்லிக்கிட்டு இருந்தா...
அது ரொம்ப டார்ச்சர் கொடுக்காம நம்மள விட்டுரும்! :)
* உடல் (தேகம்) = பிரகிருதி (Matter)க்குச் சொந்தமானது!
* உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!
* அப்போ எனக்கு என்ன சொந்தம்? = "நான்" என்கிற "வெற்று" உணர்வு மட்டுமே சொந்தம்! :)))
பிருதா அகங்கரணம் பரம்! "நான்" என்ற அகங்காரம் மட்டும் தான் மீதி இருக்கு!!
அந்த "நான்" எம்பெருமானுக்கு உரியவன்!
நான் சேஷன்! எம்பெருமான் சேஷி!
* "நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து!
* "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து!
* இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!
இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!
* நான் = "நானே" இல்லை!
* நான் = "அடியேன்"!
இராமானுசரின் சீடரான முதலியாண்டான் கொஞ்சம் சாதி அபிமானம் மிக்கவராக இருந்தாரு! கர்மப் பிடிப்பும் ஐயாவுக்கு ஜாஸ்தி! அவரைத் திருத்த எண்ணிய இராமானுசர், அவருக்குத் தாம் உபதேசிக்காமல், தன் ஸ்டிரிக்ட்டான குரு திருக்கோட்டியூர் நம்பியிடமே அனுப்பி வைத்தார்! அவரிடம் போன முதலியாண்டான்,
"*நான்* முதலியாண்டான் வந்திருக்கேன்" என்று சொல்ல...
நம்பியோ, "நான் செத்த பிறகு வாரும்" என்று சொல்லி விட்டார்!
உபதேசம்-ன்னு ஒரு பெரியவர் கிட்ட போனா இப்படியா? அவர் செத்த பிறகு எப்படி அவர் கிட்ட உபதேசம் பண்ணிக்கறது? "*நான்* செத்த பிறகு வாரும்"-ன்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம சொல்றாரே என்று குழம்ப...
"நான்" என்ற சொல் செத்த பிறகு வாரும் - என்பது கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது! அடுத்த முறை, "அடியேன்" என்று சொல்ல, கதவு திறந்தது! :)
நான் = "நானே" இல்லை!
நான் = "அடியேன்"!
"இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு...
1. "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம்
அவனுக்கு உறவாக நான் இருக்கேன்! எனக்கு உறவாக அவன் இருக்கான்!
2. "நமோ" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
நமோ = எனதில்லை! நான் உட்பட எல்லாமே அவனுடையது!
எல்லாமே அவனுடையதாக இருக்க, இங்கே "நான்"-ன்னு அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!
3. அப்போ, "நாராயணாய" என்றால் என்ன? (தொடரும்...)

Read more »
"நமோ" என்றால் என்ன?-ன்னு லேசாப் பார்த்தோம்! சென்ற பதிவு இங்கே!
ஆனா பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் சுருக்கமா ஒரு தொகுப்புரையைப் பார்த்துட்டு, இன்னிக்கி மேட்டருக்குப் போவோம்!

* நம என்றால் ந+ம = இல்லை + எனது!
* எதுவும் எனதில்லை என்பது தான் நம!
நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களில் எல்லாம் ஓங்காரத்துவம் இல்லை என்றும் சென்ற பதிவில் பார்த்தோம்!
நம சிவாய என்பதில் எல்லாம் "நம"-ன்னு தானே இருக்கு! அப்புறம் எதுக்கு "நமோ"?
* எனது இல்லை = "நம" என்று சொன்னா போதாதா?
* எதுக்கு "நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :)
பல பிறவிகள், பிறவிச் சுழல்-ன்னு எல்லாம் சில பேரு தத்துவமா பேசுவாங்க!
"புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்....பிறந்து இறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர்!

அனாதி காலமாய் இந்தப் பந்தங்களில் மாட்டிக்கிட்டு இருக்கோம் அல்லவா?
இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறோம்! :)
ஆனா எதுனால மாட்டிக்கறோம்?-ன்னு மட்டும் கொஞ்சம் தெரிஞ்சிப்போம்!
தெரிஞ்சிக்கிட்டோம்-ன்னா அது நம்மள விட்டுரும்!
மாட்டிக்கிட்டாலும், ரொம்ப டார்ச்சர் கொடுக்காம விட்டுரும்! :)
எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....
இந்தப் பதிவு எனது, பின்னூட்டம் எனது, பிளாக்கரே எனது, என் பதிவைப் படிக்கறவங்க எல்லாம் என் ஆளுங்க, இதைப் படிச்சிக்கிட்டு என் கிட்ட கோச்சிக்கறவங்க எல்லாம் என் விரோதிங்க! :)
சின்ன வயசுல பென்சில் எனது, பருவ வயசுல நயன்தரா காமிக்ஸ் எனது,
கல்லூரியில் அவ எனது, அவ கிட்ட போட்ட கடலை எனது! அவ கிட்ட கடலை போடற மத்தவங்க எல்லாரும் கூட எனது (என் எனிமி),
வேலைக்குச் சேர்ந்தாப் பொறவு போனஸ் எனது, கல்யாணம் ஆனப் பொறவு என் போனஸ் அவளுது, ஆனா அவ அப்பா சொத்து எப்படியும் ஒரு நாள் எனது..... :)
இப்படி இந்த மம-மம = எனது-எனது, என்ற லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இதுல ஒருத்தன் கூட விதி விலக்கு அல்ல! சன்னியாசி உட்பட! :)
மூனு நாளைக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட கோச்சிக்கிட்டு போனாரு ஒரு சன்னியாசி! போன மூனாம் நாளே திரும்பி வந்தாரு! ஏன் போனீங்க, ஏன் வந்தீங்க-ன்னு அந்தம்மா கேட்டாக! வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)
இப்படி மம, மம-ன்னு மாரடிச்சிகறதாலேயே மாட்டிக் கொள்கிறோம்! அப்போ இந்த டார்ச்சர்-ல இருந்து தப்பிக்க என்ன வழி?
* ந மம = நம! நம! நம!
இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!
அட போங்கய்யா! ஒங்க சம்பளத்தை ஒங்களது இல்லை-ன்னு சொல்லிருவீங்களா? பெருசா பேச வந்துட்டாங்க "நமஹ"-வைப் பத்தி!
யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)
இப்படி நம, நம, நம-ன்னு மனதறிய சொல்லுறது ரொம்ப கஷ்டம்! ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? அதான் "ஓம் நமோ"! :)

பிறக்கும் போது உடம்பு மட்டும் தானே பொறந்துச்சு?
அக்காஃபீனா தண்ணி பாட்டில், செரிலாக் பால் பாட்டில், ஷேம் ஷேம்-மை மறைக்க லூயி பிலிப்ஃஸ்-ன்னு பலதும் ரெடிமேடா பேக் பண்ணி கொண்டு வந்தோமா என்ன? :)
அப்பறம் அம்மா பாலூட்டினாங்க! அப்பா துணி வாங்கிக் கொடுத்தாரு!
நாக்குல தேன் தடவினாங்க! சொக்கா போட்டாங்க! கொலுசு போட்டாங்க! பள்ளிக் கூடம் அனுப்பி வச்சாங்க! கல்யாணம் பண்ணி வச்சாங்க! (அ) பண்ணி வைக்கச் சொன்னோம்! :)
அப்பறம் எல்லாம் அப்படியே ஒவ்வொன்னா நடந்துச்சி! குழந்தை வந்துச்சி! :)
அப்பாலிக்கா Skoda காரு வந்துச்சி, 3 BHK வீடு வந்துச்சி, நடு வயதில், பாஸ் கிட்ட இருந்து ப்ரமோஷன் வந்துச்சி, கூடவே பெத்த புள்ளை கிட்ட இருந்து ஆப்பு வந்துச்சி! :)
அனுபவிச்சி, அனுபவிச்சி, கடைசீசீசீல.....புதுத் துணி போர்த்தி அனுப்பி வச்சிட்டாங்க! ஆனா அதையும் அங்கே சுடறவன் எடுத்துக்கிட்டான்!
உம்....பொறந்த போது எப்படி வந்தோமோ, அப்படித் தான் பொசுங்கற போதும் போறோம்!
ஆனா நடுவுல மட்டும், இத்தனையும் சேர்ந்துக்கிட்டு, சை-சை-ன்னு ஆடுது!

இதுக்கு, படாத பாடுபட்டு, இது என்னுடையது, இது என்னுடையது-ன்னு அபிமானப்பட்டு...
அப்படி உணர்ந்து விட்டோமானால், அது தான் நமஹ! நம = எனதில்லை!
* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!
அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
தோடா! இதெல்லாம் பதிவுல பேசத் தான் நல்லா இருக்கும்! உபன்னியாசத்தில் வேணும்-ன்னா கை தட்டுவாய்ங்க! பேசி முடிச்சப்பறம் அவருக்குப் போட்ட பொன்னாடை/சால்வையைத் தூக்கிட்டு ஓடறேன்-ன்னு வையி! "சேச்சே! எனதில்லை! நாராயணனுடையது"-ன்னு சும்மா வுட்டுருவாங்களா? :)))
இம்புட்டு பேசறியே கேஆரெஸ்! இந்த மாதவிப் பந்தல் உனதில்லை-ன்னு சொல்லேன் பார்ப்போம்! விட்டுருவியா?
"நமோ! எனதில்லை மாதவிப் பந்தல்"-ன்னு பந்தலை, மதுரையம்பதி-மெளலி அண்ணா பேருக்கு எழுதி வையேன் பார்ப்போம்? :)
என்னாது? மெளலி அண்ணாவுக்கா? போங்கய்யா! குமரன், ஜீவா, ஜிரா-ன்னு எல்லாம் சொல்லலாம்-ல? கோவி கண்ணனுக்கு எழுதி வச்சாலும் வைப்பேன்! இல்லாங்காட்டி பதிவர் அம்பி-க்கு எழுதி வைச்சாலும் வைப்பேன்!
ஆனா மெளலி அண்ணாவுக்கு மட்டும் எழுதியே வைக்க மாட்டேன்! = ஓம் எனதில்லை மதுரையம்பதியுடையது! :)))
ஹிஹி! அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் எல்லாம், நம, நம-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்லணும்? சும்மா கொஞ்ச நேரம் யோசிச்சிப் பார்த்தேன்! அட, விமானத்தில் விளக்கு அணைச்சிட்டாங்க! அதான்! :)
பொதுவா, எனக்குப் புரிபடாத எதையுமே பந்தலில் எழுத மாட்டேன்! சும்மா எங்கேயோ படிச்சிட்டு, யாரையோ திருப்திப்படுத்த, "அதை மட்டுமே ஏன் எழுதற, இதையும் தான் எழுதேன்?" - என்பதெல்லாம் நமக்கு ஒத்தே வராது! உணர்ந்து எழுதினா மட்டுமே பிடிக்கும்! அவ்ளோ தான்!
அதுனால, இந்த "ஓம் எனதில்லை"-ன்னு எழுத ரொம்ப சங்கடமா இருந்துச்சி!
பைசா பெறாத பந்தல் பதிவையே எனதில்லை-ன்னு சொல்ல கேஆரெஸ்-க்கு வக்கில்லை! இதுல என்ன பெருசா "ஓம் எனதில்லை"-க்கு நான் வந்து விளக்கம் கொடுக்கறது? :)
அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் நம, நம-ன்னு சொல்லணும்? - கொஞ்சம் போல யோசிக்க ஆரம்பிச்சேன்!
![]() | ![]() |
அலுவல் விஷயமா இந்த பிரேசில் பயணத்துக்குப் போனேன்-ல்ல? ரியோ டி ஜெனீரோ - Atlantic Copacabana ஹோட்டல்-ல மூனு நாள் தங்கி இருப்பேனா? ஒத்தை ஆளுக்கு அறையாகக் கொடுக்காமல், பெரிய Suite-ஆக கொடுத்திருந்தாய்ங்க! உம்...ஆனால் நெருக்கமான ஒரு மின்னஞ்சல் பார்த்துவிட்டு...எப்படா திரும்ப ஊருக்கு வருவோம்-ன்னு இருந்துச்சி!
அந்த மூனு நாளும் அந்த மாளிகை என்னுது தான்! அதுல மின்னுற மீன் தொட்டி, அலங்கார விளக்கு, வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர்-ன்னு எல்லாமே என்னுது தான்! வேற எவனும் கை வைக்க முடியாது! ஆனா...?
* அந்த அலங்கார விளக்குக்கு ஏதோ ஒன்னு ஆயிரிச்சி, சரியா எரியாம அரையும் கொறையுமா எரியுது! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா?
* ஹோம் தியேட்டர்-ல கீறல் விழுந்துரிச்சி! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா? இதே நம்ம வீட்டுப் பொட்டிக்கு ஆகியிருந்தா???
வாடகைக்கு கொஞ்ச நாள் இருக்கப் போறோம்-ன்னு நல்லாத் தெரிஞ்சதால, அந்த அறையின் செல்வங்களை அனுபவித்தாலும், அதில் பாசம் பொத்துக்கிட்டு கொட்டலை!
அதுக்காக அறையில் அனுபவிக்காமலும் இருக்க முடியாது! :)
அதே சமயம், அறையில் ஓவர் ஒட்டுதலும் இல்லை!
இதோ இனி அந்த மீன் தொட்டியைக் கொஞ்சப் போவதில்லை! அதே போலத் தான் இந்த நமோ=எனதில்லை! :)
இப்போ சொல்லுங்க! நாம எல்லாருமே இங்கிட்டு வாடகை-க்கு இருக்கும் போது, ஓம்-நமோ-நாராயணாய = ஓம்-எனதில்லை-நாராயணனுடையது என்பது டுபாக்கூரா? :))
* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
பொறந்த போது எப்படி வந்தாயோ, அப்படித் தான் பொசுங்கும் போது போகப் போகிறோம் என்றாலும் கூட...தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
எனவே தாற்காலிகத்தை ஓவராக் கட்டிக் கொண்டு அழாமல்,
அவ்வப்போது, நம-நம-நம-ன்னு வாயால் ஆச்சும் சொல்லிக்கிட்டு இருந்தா...
அது ரொம்ப டார்ச்சர் கொடுக்காம நம்மள விட்டுரும்! :)
* உடல் (தேகம்) = பிரகிருதி (Matter)க்குச் சொந்தமானது!
* உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!
* அப்போ எனக்கு என்ன சொந்தம்? = "நான்" என்கிற "வெற்று" உணர்வு மட்டுமே சொந்தம்! :)))
பிருதா அகங்கரணம் பரம்! "நான்" என்ற அகங்காரம் மட்டும் தான் மீதி இருக்கு!!
அந்த "நான்" எம்பெருமானுக்கு உரியவன்!
நான் சேஷன்! எம்பெருமான் சேஷி!
* "நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து!
* "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து!
* இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!
இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!
* நான் = "நானே" இல்லை!
* நான் = "அடியேன்"!
இராமானுசரின் சீடரான முதலியாண்டான் கொஞ்சம் சாதி அபிமானம் மிக்கவராக இருந்தாரு! கர்மப் பிடிப்பும் ஐயாவுக்கு ஜாஸ்தி! அவரைத் திருத்த எண்ணிய இராமானுசர், அவருக்குத் தாம் உபதேசிக்காமல், தன் ஸ்டிரிக்ட்டான குரு திருக்கோட்டியூர் நம்பியிடமே அனுப்பி வைத்தார்! அவரிடம் போன முதலியாண்டான்,
"*நான்* முதலியாண்டான் வந்திருக்கேன்" என்று சொல்ல...
நம்பியோ, "நான் செத்த பிறகு வாரும்" என்று சொல்லி விட்டார்!
உபதேசம்-ன்னு ஒரு பெரியவர் கிட்ட போனா இப்படியா? அவர் செத்த பிறகு எப்படி அவர் கிட்ட உபதேசம் பண்ணிக்கறது? "*நான்* செத்த பிறகு வாரும்"-ன்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம சொல்றாரே என்று குழம்ப...
"நான்" என்ற சொல் செத்த பிறகு வாரும் - என்பது கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது! அடுத்த முறை, "அடியேன்" என்று சொல்ல, கதவு திறந்தது! :)
நான் = "நானே" இல்லை!
நான் = "அடியேன்"!
"இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு...
1. "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம்
அவனுக்கு உறவாக நான் இருக்கேன்! எனக்கு உறவாக அவன் இருக்கான்!
2. "நமோ" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
நமோ = எனதில்லை! நான் உட்பட எல்லாமே அவனுடையது!
எல்லாமே அவனுடையதாக இருக்க, இங்கே "நான்"-ன்னு அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!
3. அப்போ, "நாராயணாய" என்றால் என்ன? (தொடரும்...)













