இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - Final Part!
"இல்லையப்பா! எனக்கு மோட்சம் கிட்டாது! நான் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!" - அதிர்ந்து விட்டான் வில்லி!
எடக்கு மடக்கு பண்ணுவதே, இப்பவெல்லாம் இந்த உடையவருக்கு வழக்கமாகப் போய் விட்டது! இவரே இப்படிச் சொன்னால் இவரை நம்பி வந்த சீடர்கள், பாவம் என்ன செய்வார்கள்? முந்தைய பதிவு இங்கே!
"முன்பு, குருவின் ஆணையை மீறி, எட்டெழுத்தின் பொருளை, ஊரைக் கூட்டிச் சொன்னேனே! மறந்து விட்டாயா?
நன்மையோ, தீமையோ, நான் செய்த காரியம் செய்தது தானே? விதைத்தது முளைத்து தானே ஆகும்! குருவின் ஆணையை மீறியவனுக்கு நரகம் அல்லவா கிட்டும்? சரி தானே வில்லி?"
(மெளனம்)

"ஆனால்.....இங்கே, இப்போதே, அரங்கன் சாட்சியாகச் சொல்கிறேன்!
குருவின் ஆணையை மீறினவன் என்றாலும்.....
எனக்கும் மோட்சம் உண்டு!
என்னைப் பற்றினீர்கள் அல்லவா? உங்கள் எல்லாருக்கும் மோட்சம் உண்டு!"
(குழப்பத்துடன்...)
"ஆகா! குருவே! உங்கள் வாக்கிலிருந்து இப்படி ஒரு சொல் வர என்ன புண்ணியம் செஞ்சோமோ தெரியலையே! என் கவலை எல்லாம் தீர்ந்தது!"
"அட என்ன சீடனப்பா, நீ? "என்னால்" தான் உங்களுக்கு எல்லாம் மோட்சம் என்று சொல்கிறேன்! திமிர் பிடித்துப் போய், ”தான்” என்னும் ஆணவமாகப் பேசுகிறார் இராமானுசர்? - இப்படியெல்லாம் திருப்பித் தாக்க மாட்டாயா?
அடியேன் அடியேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நீ எப்போது அடுத்த குரு ஆவது?"
(குரு தன்னிடம் மட்டும் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று குழம்புகிறான் வில்லி! தப்பாக எதுவும் விவாதத்தை ஆரம்பித்து வைத்து விட்டோமோ? அதான் உடையவர் இந்த வாங்கு வாங்குகிறாரோ?)
"என்ன வில்லி? குழப்பமா இருக்கா?....எனக்கு மோட்சம் கிடைத்தால், உங்களுக்கும் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும்-னு சொன்னேன் அல்லவா!
எனக்கு யாரால் கிடைக்கும்-னு நினைக்கிறாய்? என் சுய பிரதாபத்தாலா கிடைக்கும்? இல்லை! என் குருவான பெரிய நம்பியால் கிடைக்கும்! அவருக்கு மோட்சம் உண்டு என்றால் எனக்கும் கண்டிப்பாக உண்டு!
ஆனால்...பெரிய நம்பிக்கு நிச்சயமாக் கிடைக்குமா? கிடைத்து விட்டதா??"
(வில்லி மயக்கம் போட்டு விழாத குறை! "இவரு ஊர்-ல ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாரா?
மொதல்ல நம்ம மேல கையை வச்சாரு!
அடுத்து அவர் மேலேயே கை வச்சிக்கிட்டாரு!
இப்போ என்னடான்னா, அவர் குருநாதர் மேலேயே கையை வைக்கிறாரே?")
"என்ன வில்லி இவ்வளவு தீவிரமாக யோசிக்கிறாய்?
* உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் -> உங்கள் குரு இராமானுசனால்!
* இராமானுசனுக்கு மோட்சம் கிடைக்கும் -> அவர் குரு பெரிய நம்பியால்! - இது வரை சரி!
* பெரிய நம்பிக்கு கிடைக்கும் -> அவர் குரு, ஆளவந்தாரால்!
* ஆளவந்தாருக்கு கிடைக்கும் -> மணக்கால் நம்பியால்!
* மணக்கால் நம்பிக்கு கிடைக்கும் -> உய்யக் கொண்டாரால்!
* உய்யக் கொண்டாருக்கு கிடைக்கும் -> நாதமுனியால்!
* நாதமுனிக்கு கிடைக்கும் -> நம்மாழ்வாரால்!
சரி......நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைக்குமா? கிடைச்சுச்சா??"
(வில்லி அரண்டு நடுநடுங்கிப் போய் விட்டான்! சீடர்கள் பேந்த பேந்த விழிக்கிறார்கள்! உபன்னியாசம் கேட்க வந்த ஊரே வாயைப் பிளக்கிறது! "என்னாது? நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைச்சுச்சா-வாஆஆஆ?.....
அடேயப்பா! இவரு இந்தக் கட்சியில் இருந்து கொண்டு, இந்தக் கட்சிக்கே வேட்டு வைக்கிறாரே! இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் விவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)
"நான் இன்னும் முடிக்கவில்லை வில்லி!
* நம்மாழ்வாருக்கு கிடைக்கும் -> சேனை முதலியாருக்கு கிடைத்தால்!
* சேனை முதலியாருக்கு கிடைக்கும் -> அன்னை மகாலட்சுமிக்கு கிடைத்தால்!
* அன்னை, மகாலட்சுமிக்கு ஒருவேளை மோட்சம் கிடைக்குமாஆஆ?...."
"அய்யோ.....குருவே....."
"பதறாதீர்கள்!....கேளுங்கள்!
* மகாலட்சுமிக்கு கிடைக்கும் -> இறைவனுக்கு கிடைத்தால்.......
* இறைவன், பரப்பிரம்மமான, நாராயணனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆஆஆஆஆஆஆல்......"
(அத்தனை மக்களும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார்கள்.....கோவிந்தா கோவிந்தா என்கிற கோஷம்!.....அப்போதும் அவர் விடவில்லை.....)
* இறைவனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆல்....அப்போ மகாலட்சுமிக்கும் கிடைக்கும்!
* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? சொல்லுங்க பார்ப்போம்"
(காவிரியாறு கூட வாயைப் பொளந்து விட்டது! ஒரு துளிச் சத்தம் கூட எழவில்லை! மனிதன், மிருகம், புல், பூண்டு என்று அவ்வளவு உயிர்களும் கப்..சிப்..
"இவருடன் வாதாட முடியாது போலிருக்கே! இவர் வாதங்களை முன் வைக்கும் போது எம்பெருமானார் வாதாடுகிறாரா? இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா??....தெரியவில்லையே!")
"இறைவனின் வீட்டில் இறைவனுக்கு இல்லாத இடமா? இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா என்று எந்தப் பைத்தியக்காரனாவது கேட்பானா?
இறைவனுக்கு உண்டு என்றால், நான் சொன்ன வரிசையில் அப்படியே ஒவ்வொருவராய் பின்னோக்கி வாருங்கள்.....
அவனுக்கு உண்டு என்றால், அவளுக்கு உண்டு!
அவளுக்கு உண்டு என்றால் சேனை முதலியாருக்கு உண்டு.....
சேனை முதலியாருக்கு உண்டு என்றால், நம்மாழ்வாருக்கு உண்டு.....
இப்படியே பின்னோக்கி வந்து....உங்கள் வரை வந்து.....
பெரிய நம்பிக்கு உண்டு என்றால், இராமானுசனுக்கும் உண்டு!
இராமானுசனுக்கு உண்டு என்றால், உங்களுக்கும் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"
(அத்தனை பேர் முகத்தி்லும் அப்படி ஒரு சிரிப்பூபூபூபூபூ)
"இறைவனின் குழந்தைகள் தானே எல்லாரும்! அவைகளை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அவனும் அவளும் சொல்லத் தான் முடியுமா?
அப்படி ஒரு குடும்பக் கோட்பாட்டை எந்த தாய்-தந்தையாவது உருவாக்குவார்களா???
* குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?
** என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!
மண்ணில் பிறந்தவர் அனைவர்க்கும் மோட்சம் உண்டு! வானவரும், தேவர்களும் கூட, மோட்சம் அடைய வேண்டும் என்றால், மானிடனாய்ப் பிறந்து தான் மோட்ச நிலைக்குச் செல்ல முடியும்!
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர், எமது இடம் புகுக என்று
வைகுந்தத்து அமரரும், முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது ***மண்ணவர்*** விதியே!!!
புண்ணியமோ-பாபமோ, சொர்க்கமோ-நரகமோ,
கர்ம வினைகளை அறுக்க மானிடனாய்ப் பிறந்தே ஆக வேண்டும்!
அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!
அப்படி மானிடராகப் பிறந்து,
அற்றது பற்றெனில், உற்றது வீடு! = ஆனால் அந்தப் பற்று எப்படி அறும்???"
மாறனோடு இப்போது ஐயன் வள்ளுவனைத் துணைக்கு அழைப்போமா?
பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றற்றான் பற்றிலே பரிபூர்ண சரணாகதி செய்தக்கால்=அற்றது பற்று!
அப்புறம் என்ன?
அற்றது பற்றெனில், உற்றது வீடு!
= மாறன் + வள்ளுவன் வாக்கு மாறுமோ? மாலவன் வாக்கு அல்லவா!

எனவே மோட்ச நிலை குறித்து அதீதமாகக் கவலைப்பட்டு, போலி குருக்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு வீண் குழப்பங்கள் எதற்கு?
அவன் பத்துடை அடியவர்க்கு மிகவும் எளியவன், பிறர்களுக்குத் தான் அரிய வித்தகன்!
உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!
நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்!
ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!
எனவே, காருண்யம் வற்றாத நீர் நிலை - எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! இதோ...
அகல கில்லேன் இறையும்! என்று
அலர் மேல் மங்கை உறை மார்பா!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!!
அப்படிப் புகுந்தவர், வைகுந்தமும் புகுவர்!
இறைவனுக்கு மோட்சம் உண்டென்றால், நம் அனைவருக்கும் உண்டு!
வைகுந்தம் புகுவது *மண்ணவர்* விதியே!!!
இந்தத் தொடர் பதிவு - மூன்று பாகமாய் வந்தது.
இதில் சரணாகதி தத்துவத்தை வீடணன், பாஞ்சாலி, கஜேந்திரன் என்று ஒரு கதை போலத் தான் பார்த்தோம்!
This series was only a primer! Kinda Eye Opener! ஆனால் இன்னும் சில ஆழ்ந்த n-dimension பரிமாணங்கள் இதில் உள்ளன!
அதைப் பார்ப்பதற்கு முன்னால், அடிப்படையை கொஞ்சம் ஆழ வாங்கிக் கொள்ள வேண்டும்! அடிப் படையை வாங்காமால், ஆனைப் படைகள் ஆயிரம் வாங்கினாலும், வெற்றி என்பது சந்தேகமே! கொஞ்ச நாளில் காற்றில் கரைந்து விடும்!
எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் "அடி" சேரா தார்!
திக்கெட்டும் தத்துவங்கள் ஆயிரம் பேசலாம்!
அவை எல்லாம் பளிச்செனத் தோன்றி மறையும் மின்னல் தான்!
திருவடி சரணங்கள் என்பதே நிலைத்த தீபம்!
நிலைத்த தீபிகை=அதுவே சரணாகதி தீபிகை!
ஹரி ஓம்!
(நிறைந்தது)
இன்னும் சிலருக்குச் சில-பல கேள்விகள்:
* பரிபூர்ண சரணாகதி செய்த பின் ஒருவனின் வாழ்க்கை நிலை என்ன?
* தாய்க் குரங்கைக் குட்டியானது கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமா? இல்லை, தாய்ப்பூனையே சேய்ப்பூனையைக் கவ்விச் சென்று காப்பாற்றுமா?
* மற்ற சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம், சமணம், பெளத்தம், சாக்தம், சைவம், வைணவம் போன்றவற்றில் சரணாகதியின் நிலை என்ன?
* சங்கத் தமிழ் இலக்கியத்தில் சரணாகதி பேசப்படுகிறதா?
* அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் = போன்ற தத்துவங்களின் சாராம்சம் என்ன? அவற்றில் சரணாகதி சொல்லப்படுகிறதா?
* மூன்று ஆச்சார்யர்களும் முரண்பட்டார்களா? இராமானுசர் சங்கரைப் புகழ்கிறார்! ஏன்? எதற்கு? எங்கே?
* பிறவி-சரணாகதி-மோட்சம் என்பது ஒரு சுழற்சியா? ஆதியில் என்னவாக இருந்தது? - இது அத்தனையும் ஏன்? எந்துக்கு? எந்து? யாகே? க்யோ? WHY? WHY? WHY?
* அறிவியல் இதற்கு வெளிச்சம் போட உதவுமா?
இவற்றை ஒவ்வொன்றாக மாதவிப் பந்தலில் பார்க்கப் போகிறோம்!
இரு வாரத்துக்கு ஒரு முறை (fortnightly) என்று முயல்கிறேன்;
நண்பர்கள் மற்றும் சக பதிவர்கள் கண்ணன் சார், குமரன், SK, மெளலி அண்ணா, கீதாம்மா, திவா சார், ஜீவா, கோவி கண்ணன் போன்றவர்கள் உதவியுடன்...!
உங்கள் விவாத விளக்குகளுடன்; அதற்கு முன் இவ்விரு பதிவுகளையும் படித்துப் பார்க்கவும்!
* தம்பி CVR இன் Destination Unknown சிறுகதை!
** நண்பர் குமரனின், இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?
பெரும் தத்துவங்கள் என்பதால், எப்போதும் போல் விளையாட்டான நடையில் அடியேனால் எழுத முடியுமா தெரியவில்லை! அதனால் இந்தப் பொருளில் பேசப் போகும் பதிவுகளை எல்லாம் "$$$" என்று தலைப்பில் குறிப்பேன்!
இதையே அவரவர் எச்சரிக்கை மணி/ஆராய்ச்சி மணியாக எடுத்துக் கொண்டு வருவதும் வராமலும் போகலாம்! :)
அதே சமயம், மற்ற விளையாட்டான பதிவுகள் வழக்கம் போல் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :))
Read more »
எடக்கு மடக்கு பண்ணுவதே, இப்பவெல்லாம் இந்த உடையவருக்கு வழக்கமாகப் போய் விட்டது! இவரே இப்படிச் சொன்னால் இவரை நம்பி வந்த சீடர்கள், பாவம் என்ன செய்வார்கள்? முந்தைய பதிவு இங்கே!
"முன்பு, குருவின் ஆணையை மீறி, எட்டெழுத்தின் பொருளை, ஊரைக் கூட்டிச் சொன்னேனே! மறந்து விட்டாயா?
நன்மையோ, தீமையோ, நான் செய்த காரியம் செய்தது தானே? விதைத்தது முளைத்து தானே ஆகும்! குருவின் ஆணையை மீறியவனுக்கு நரகம் அல்லவா கிட்டும்? சரி தானே வில்லி?"
(மெளனம்)

"ஆனால்.....இங்கே, இப்போதே, அரங்கன் சாட்சியாகச் சொல்கிறேன்!
குருவின் ஆணையை மீறினவன் என்றாலும்.....
எனக்கும் மோட்சம் உண்டு!
என்னைப் பற்றினீர்கள் அல்லவா? உங்கள் எல்லாருக்கும் மோட்சம் உண்டு!"
(குழப்பத்துடன்...)
"ஆகா! குருவே! உங்கள் வாக்கிலிருந்து இப்படி ஒரு சொல் வர என்ன புண்ணியம் செஞ்சோமோ தெரியலையே! என் கவலை எல்லாம் தீர்ந்தது!"
"அட என்ன சீடனப்பா, நீ? "என்னால்" தான் உங்களுக்கு எல்லாம் மோட்சம் என்று சொல்கிறேன்! திமிர் பிடித்துப் போய், ”தான்” என்னும் ஆணவமாகப் பேசுகிறார் இராமானுசர்? - இப்படியெல்லாம் திருப்பித் தாக்க மாட்டாயா?
அடியேன் அடியேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நீ எப்போது அடுத்த குரு ஆவது?"
(குரு தன்னிடம் மட்டும் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று குழம்புகிறான் வில்லி! தப்பாக எதுவும் விவாதத்தை ஆரம்பித்து வைத்து விட்டோமோ? அதான் உடையவர் இந்த வாங்கு வாங்குகிறாரோ?)
"என்ன வில்லி? குழப்பமா இருக்கா?....எனக்கு மோட்சம் கிடைத்தால், உங்களுக்கும் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும்-னு சொன்னேன் அல்லவா!
எனக்கு யாரால் கிடைக்கும்-னு நினைக்கிறாய்? என் சுய பிரதாபத்தாலா கிடைக்கும்? இல்லை! என் குருவான பெரிய நம்பியால் கிடைக்கும்! அவருக்கு மோட்சம் உண்டு என்றால் எனக்கும் கண்டிப்பாக உண்டு!
ஆனால்...பெரிய நம்பிக்கு நிச்சயமாக் கிடைக்குமா? கிடைத்து விட்டதா??"
(வில்லி மயக்கம் போட்டு விழாத குறை! "இவரு ஊர்-ல ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாரா?
மொதல்ல நம்ம மேல கையை வச்சாரு!
அடுத்து அவர் மேலேயே கை வச்சிக்கிட்டாரு!
இப்போ என்னடான்னா, அவர் குருநாதர் மேலேயே கையை வைக்கிறாரே?")
குரு பரம்பரை - இறைவி-இறைவனே முதல் குரு! அது சேனை முதலியார் என்று அப்படியே விரிந்து, ஒரு ஆபரணம் போல் ஒளிர்கிறது!
"என்ன வில்லி இவ்வளவு தீவிரமாக யோசிக்கிறாய்?
* உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் -> உங்கள் குரு இராமானுசனால்!
* இராமானுசனுக்கு மோட்சம் கிடைக்கும் -> அவர் குரு பெரிய நம்பியால்! - இது வரை சரி!
* பெரிய நம்பிக்கு கிடைக்கும் -> அவர் குரு, ஆளவந்தாரால்!
* ஆளவந்தாருக்கு கிடைக்கும் -> மணக்கால் நம்பியால்!
* மணக்கால் நம்பிக்கு கிடைக்கும் -> உய்யக் கொண்டாரால்!
* உய்யக் கொண்டாருக்கு கிடைக்கும் -> நாதமுனியால்!
* நாதமுனிக்கு கிடைக்கும் -> நம்மாழ்வாரால்!
சரி......நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைக்குமா? கிடைச்சுச்சா??"
(வில்லி அரண்டு நடுநடுங்கிப் போய் விட்டான்! சீடர்கள் பேந்த பேந்த விழிக்கிறார்கள்! உபன்னியாசம் கேட்க வந்த ஊரே வாயைப் பிளக்கிறது! "என்னாது? நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைச்சுச்சா-வாஆஆஆ?.....
அடேயப்பா! இவரு இந்தக் கட்சியில் இருந்து கொண்டு, இந்தக் கட்சிக்கே வேட்டு வைக்கிறாரே! இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் விவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)
"நான் இன்னும் முடிக்கவில்லை வில்லி!
* நம்மாழ்வாருக்கு கிடைக்கும் -> சேனை முதலியாருக்கு கிடைத்தால்!
* சேனை முதலியாருக்கு கிடைக்கும் -> அன்னை மகாலட்சுமிக்கு கிடைத்தால்!
* அன்னை, மகாலட்சுமிக்கு ஒருவேளை மோட்சம் கிடைக்குமாஆஆ?...."
"அய்யோ.....குருவே....."
"பதறாதீர்கள்!....கேளுங்கள்!
* மகாலட்சுமிக்கு கிடைக்கும் -> இறைவனுக்கு கிடைத்தால்.......
* இறைவன், பரப்பிரம்மமான, நாராயணனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆஆஆஆஆஆஆல்......"
(அத்தனை மக்களும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார்கள்.....கோவிந்தா கோவிந்தா என்கிற கோஷம்!.....அப்போதும் அவர் விடவில்லை.....)
* இறைவனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆல்....அப்போ மகாலட்சுமிக்கும் கிடைக்கும்!
* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? சொல்லுங்க பார்ப்போம்"
(காவிரியாறு கூட வாயைப் பொளந்து விட்டது! ஒரு துளிச் சத்தம் கூட எழவில்லை! மனிதன், மிருகம், புல், பூண்டு என்று அவ்வளவு உயிர்களும் கப்..சிப்.."இவருடன் வாதாட முடியாது போலிருக்கே! இவர் வாதங்களை முன் வைக்கும் போது எம்பெருமானார் வாதாடுகிறாரா? இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா??....தெரியவில்லையே!")
"இறைவனின் வீட்டில் இறைவனுக்கு இல்லாத இடமா? இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா என்று எந்தப் பைத்தியக்காரனாவது கேட்பானா?
இறைவனுக்கு உண்டு என்றால், நான் சொன்ன வரிசையில் அப்படியே ஒவ்வொருவராய் பின்னோக்கி வாருங்கள்.....
அவனுக்கு உண்டு என்றால், அவளுக்கு உண்டு!
அவளுக்கு உண்டு என்றால் சேனை முதலியாருக்கு உண்டு.....
சேனை முதலியாருக்கு உண்டு என்றால், நம்மாழ்வாருக்கு உண்டு.....
இப்படியே பின்னோக்கி வந்து....உங்கள் வரை வந்து.....
பெரிய நம்பிக்கு உண்டு என்றால், இராமானுசனுக்கும் உண்டு!
இராமானுசனுக்கு உண்டு என்றால், உங்களுக்கும் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"
(அத்தனை பேர் முகத்தி்லும் அப்படி ஒரு சிரிப்பூபூபூபூபூ)
"இறைவனின் குழந்தைகள் தானே எல்லாரும்! அவைகளை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அவனும் அவளும் சொல்லத் தான் முடியுமா?
அப்படி ஒரு குடும்பக் கோட்பாட்டை எந்த தாய்-தந்தையாவது உருவாக்குவார்களா???
* குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?
** என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!
மண்ணில் பிறந்தவர் அனைவர்க்கும் மோட்சம் உண்டு! வானவரும், தேவர்களும் கூட, மோட்சம் அடைய வேண்டும் என்றால், மானிடனாய்ப் பிறந்து தான் மோட்ச நிலைக்குச் செல்ல முடியும்!
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர், எமது இடம் புகுக என்று
வைகுந்தத்து அமரரும், முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது ***மண்ணவர்*** விதியே!!!
புண்ணியமோ-பாபமோ, சொர்க்கமோ-நரகமோ,
கர்ம வினைகளை அறுக்க மானிடனாய்ப் பிறந்தே ஆக வேண்டும்!
அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!
அப்படி மானிடராகப் பிறந்து,
அற்றது பற்றெனில், உற்றது வீடு! = ஆனால் அந்தப் பற்று எப்படி அறும்???"
மாறனோடு இப்போது ஐயன் வள்ளுவனைத் துணைக்கு அழைப்போமா?
பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றற்றான் பற்றிலே பரிபூர்ண சரணாகதி செய்தக்கால்=அற்றது பற்று!
அப்புறம் என்ன?
அற்றது பற்றெனில், உற்றது வீடு!
= மாறன் + வள்ளுவன் வாக்கு மாறுமோ? மாலவன் வாக்கு அல்லவா!

எனவே மோட்ச நிலை குறித்து அதீதமாகக் கவலைப்பட்டு, போலி குருக்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு வீண் குழப்பங்கள் எதற்கு?
அவன் பத்துடை அடியவர்க்கு மிகவும் எளியவன், பிறர்களுக்குத் தான் அரிய வித்தகன்!
உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!
நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்!
ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!
எனவே, காருண்யம் வற்றாத நீர் நிலை - எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! இதோ...
அகல கில்லேன் இறையும்! என்றுஅலர் மேல் மங்கை உறை மார்பா!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!!
அப்படிப் புகுந்தவர், வைகுந்தமும் புகுவர்!
இறைவனுக்கு மோட்சம் உண்டென்றால், நம் அனைவருக்கும் உண்டு!
வைகுந்தம் புகுவது *மண்ணவர்* விதியே!!!
இந்தத் தொடர் பதிவு - மூன்று பாகமாய் வந்தது.
இதில் சரணாகதி தத்துவத்தை வீடணன், பாஞ்சாலி, கஜேந்திரன் என்று ஒரு கதை போலத் தான் பார்த்தோம்!
This series was only a primer! Kinda Eye Opener! ஆனால் இன்னும் சில ஆழ்ந்த n-dimension பரிமாணங்கள் இதில் உள்ளன!
அதைப் பார்ப்பதற்கு முன்னால், அடிப்படையை கொஞ்சம் ஆழ வாங்கிக் கொள்ள வேண்டும்! அடிப் படையை வாங்காமால், ஆனைப் படைகள் ஆயிரம் வாங்கினாலும், வெற்றி என்பது சந்தேகமே! கொஞ்ச நாளில் காற்றில் கரைந்து விடும்!
எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் "அடி" சேரா தார்!
திக்கெட்டும் தத்துவங்கள் ஆயிரம் பேசலாம்!
அவை எல்லாம் பளிச்செனத் தோன்றி மறையும் மின்னல் தான்!
திருவடி சரணங்கள் என்பதே நிலைத்த தீபம்!
நிலைத்த தீபிகை=அதுவே சரணாகதி தீபிகை!
ஹரி ஓம்!
(நிறைந்தது)
இன்னும் சிலருக்குச் சில-பல கேள்விகள்:
* பரிபூர்ண சரணாகதி செய்த பின் ஒருவனின் வாழ்க்கை நிலை என்ன?
* தாய்க் குரங்கைக் குட்டியானது கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமா? இல்லை, தாய்ப்பூனையே சேய்ப்பூனையைக் கவ்விச் சென்று காப்பாற்றுமா?
* மற்ற சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம், சமணம், பெளத்தம், சாக்தம், சைவம், வைணவம் போன்றவற்றில் சரணாகதியின் நிலை என்ன?
* சங்கத் தமிழ் இலக்கியத்தில் சரணாகதி பேசப்படுகிறதா?
* அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் = போன்ற தத்துவங்களின் சாராம்சம் என்ன? அவற்றில் சரணாகதி சொல்லப்படுகிறதா?
* மூன்று ஆச்சார்யர்களும் முரண்பட்டார்களா? இராமானுசர் சங்கரைப் புகழ்கிறார்! ஏன்? எதற்கு? எங்கே?
* பிறவி-சரணாகதி-மோட்சம் என்பது ஒரு சுழற்சியா? ஆதியில் என்னவாக இருந்தது? - இது அத்தனையும் ஏன்? எந்துக்கு? எந்து? யாகே? க்யோ? WHY? WHY? WHY?
* அறிவியல் இதற்கு வெளிச்சம் போட உதவுமா?
இவற்றை ஒவ்வொன்றாக மாதவிப் பந்தலில் பார்க்கப் போகிறோம்!
இரு வாரத்துக்கு ஒரு முறை (fortnightly) என்று முயல்கிறேன்;
நண்பர்கள் மற்றும் சக பதிவர்கள் கண்ணன் சார், குமரன், SK, மெளலி அண்ணா, கீதாம்மா, திவா சார், ஜீவா, கோவி கண்ணன் போன்றவர்கள் உதவியுடன்...!
உங்கள் விவாத விளக்குகளுடன்; அதற்கு முன் இவ்விரு பதிவுகளையும் படித்துப் பார்க்கவும்!
* தம்பி CVR இன் Destination Unknown சிறுகதை!
** நண்பர் குமரனின், இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?
பெரும் தத்துவங்கள் என்பதால், எப்போதும் போல் விளையாட்டான நடையில் அடியேனால் எழுத முடியுமா தெரியவில்லை! அதனால் இந்தப் பொருளில் பேசப் போகும் பதிவுகளை எல்லாம் "$$$" என்று தலைப்பில் குறிப்பேன்!
இதையே அவரவர் எச்சரிக்கை மணி/ஆராய்ச்சி மணியாக எடுத்துக் கொண்டு வருவதும் வராமலும் போகலாம்! :)
அதே சமயம், மற்ற விளையாட்டான பதிவுகள் வழக்கம் போல் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :))
















