"ஓம் நமோ" என்றால் என்ன? - Part 4
வரிக்கு வரி "நமோ, நமோ"-ன்னு சொல்றாங்களே! ஏன்? ஒரே "நம நம"-ன்னு கை அரிக்கும் சில பேருக்கு! அந்த "நம நம" தான் "நமோ நமோ"-வா? :)
சென்ற தொடர் பதிவுகளில் "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்தோம்-ல? இன்னிக்கு "நமோ" என்றால் என்னான்னு பார்க்கலாம், வாரீயளா? சென்ற பதிவு இங்கே!
நாத விந்து கலாதி நமோ நம!
வேத மந்த்ர சொருபா நமோ நம!
ஞான பண்டித சாமீ நமோ நம!-ன்னு ஒரு முழு அர்ச்சனையே செய்து முடிப்பார் அருணகிரியார்! பாட்டு முழுக்க "நமோ நம" தான்! எதுக்கு இத்தனை "நமோ நம"?
நம-ன்னா நமஸ்காரம் (அ) வணக்கம்-ன்னு சொல்லுவாய்ங்களே! எதுக்கு வரிக்கு வரி வணக்கம்? முருகன் என்ன அரசியல்வாதியா? அத்தனை முறை விழுந்து கும்பிடணுமா என்ன? அப்போ தான் என் பொடிப் பையன் அருள்வானா என்ன? :)

"நம" என்பதன் மேலோட்டமான பொருள் "வணக்கம்" என்பது தான்! நம = போற்றி!
ஓம் விநாயகாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் கெளரி புத்ராய நம!
ஓம் ஸ்கந்தா க்ரஜாய நம!-ன்னு பிள்ளையார் கோயிலில் அர்ச்சனை நடக்கும்! சுண்டல் சாப்பிடும் போதாச்சும் கேட்டு இருப்பீங்க தானே? :)
ஆனால் "நம" என்றால் வெறுமனே "போற்றி" என்று மட்டும் பொருள் அல்ல!
ஒரு குறிப்பிட்ட தன்னலமான காரியத்துக்கு, நம்ம பேரைச் சொல்லி, அர்ச்சனை செய்யறோம்-ல? அப்போது சொல்லப்படும் "நம" என்பது வேண்டுமானால் "போற்றி"-ன்னு இருக்கலாம்! என் தோழி ஆண்டாளும் இந்த அர்ச்சனையைத் தமிழில் செய்து வைக்கிறாள்!
பூபாலக திரிவிக்ரமாய நம = அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நம = சென்றங்கு தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி
என்று தமிழ் அர்ச்சனைக்கு வித்திட்டுச் செல்கிறாள்!
ஆனால் அரும்பெரும் மந்திரங்களை ஓதும் போது சொல்லும் "நம" என்பதற்கு, வெறுமனே "போற்றி" என்று பொருள் அல்ல!
நம = ந + ம = இல்லை + எனது!
* இங்கு எதுவுமே எனதில்லை என்பது தான் = ந+ம!
* எல்லாமே உனது என்பது தான் = ந+ம!
அட! என்னாங்க இது அநியாயமா இருக்கே? ஓம் நமோ நாராயணாய-ன்னு சொல்லச் சொன்னாய்ங்க! "எனக்கு" நல்லது நடக்கும்-ன்னு தானே அப்படிச் சொல்லச் சொன்னாய்ங்க?
இப்போ திடீர்-ன்னு வந்து, "எனதில்லை! எனதில்லை"-ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டா? இந்த இருவது ரூவா அர்ச்சனைத் தட்டு கூட "எனது" தானே! "என்" காசில் தானே வாங்கினேன்? அப்பறம் "எனதில்லை"-ன்னா எப்படி? போங்கய்யா, நல்ல போங்கா இருக்கே! :))
அதுக்கும் முன்னாடி, இன்னொன்னும் பார்த்திடுவோம்!
சென்ற பதிவில், எல்லா மந்திரத்துக்கும் முன்னாடி, "ஓம் ஓம்"-ன்னு சேர்த்துச் சேர்த்து சொல்றாங்களே? அது ஏன்?-ன்னு கேட்டோம்-ல? எதுக்கு "ஓம்" என்கிற முன்னொட்டு (Prefix)?
பிரணவம் (எ) ஓங்காரம் சேரும் போது தான், மந்திரம் முழுமை அடைகிறது! இல்லீன்னா முழுமை அடையாது!
ஓம் + நம சிவாய! ஓம் + சரவண பவ!
இப்படி எல்லாத்தோடவும் "ஓம்" சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! பூரணத்துவம் பெறும்!
ஓங்காரம் சேர்க்கும் போது மட்டுமே, நமக்கும்-இறைவனுக்குமான உறவு, அந்த மந்திரத்தில் ஏறுகிறது!
நம சிவாய என்று சொல்லும் போது, அவன் பேரை மட்டுமே சொல்கிறோம்! அது நாம சங்கீர்த்தனம்! திருப்பெயர்த் துதி!
ஆனால் பேரைப் பாடும் அதே நேரத்தில், அவனுக்கும் நமக்குமான உறவை கெட்டிப் படுத்திக் கொள்ள வேணாமா?

* ஓம் = அ + உ + ம் = அவன்->உறவு->நாம் -ன்னு சென்ற பதிவுகளில் பார்த்தோம்!
* ஓம் = எனக்கு நீ, உனக்கு நான் என்கிற உறவு!
* இந்த உறவை, அவன் பேரோடு சேர்த்துச் சொல்லும் போதே, நாமும்-அவனும் இன்னும் இறுகுகிறோம்!
எங்கம்மாவை ஜோதீஸ்வரி-ன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க! நான் கூட செல்லமா ஜோதீ-ன்னு தான் கூப்பிடுவேன்! :)
ஆனா உறவு? = அம்மா-ன்னு கூப்பிடும் போது தானே?
ஜோதி-ன்னு கூப்பிட்டாலும், "அம்மா"-ன்னு கூப்பிடும் போது எப்படி உறவு குழைந்து கெட்டிப் படுகிறதோ, அதே போல்,
சங்கரா, சிவா, நமசிவாய-ன்னு கூப்பிட்டாலும், "ஓம்" என்று சேர்க்கும் போதே உறவு கெட்டிப் படுகிறது! புரிகிறதா? :)
* திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
அப்பாவை விட புள்ளைக்கு ஒரு எழுத்து கூட! ஒரு படி பெருமையும் கூட! :)
இந்த மந்திரங்களோடே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! ஆனால் ஒரே ஒரு மந்திரத்துக்கு மட்டுமே, இப்படி "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை!
அந்த மந்திரத்துக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி, ஒன்னா ஒட்டிக்கிட்டு இருக்கு! அது என்னா மந்திரம்-ங்க?
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
திரு எட்டெழுத்து, அஷ்டாட்சரம் என்று சொல்லப்படும் இந்த மந்திரத்துக்கு மட்டும் தான் இப்படி பிரிக்க முடியாத உறவு!
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
(1)----(2)--(3)----(4)--(5)--(6)--(7)--(8)
என்பதில் ஓம்-ஐ தனியாக் கழட்டி விட்டு எண்ணிப் பாருங்க! Count & See?
எட்டெழுத்து என்பது போய், ஏழு எழுத்து-ன்னு ஆயிரும்! :)
அஷ்டாட்சரம் என்பது தானே மந்திரம்? சப்தாட்சரம்-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? :)
ஆக, ஓங்காரத்தை, அஷ்டாட்சரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! பொருளே போயிரும்!
ஓங்காரம் உள்ளேயே இருப்பதால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! Or else meaningless!
ஆனா மற்ற மந்திரங்களுக்கு இப்படி இல்லை!
* ச ர வ ண ப வ = 6! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவாறெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
* ந ம சி வா ய = 5! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவைந்தெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
ஆனால் திரு எட்டெழுத்தில் மட்டுமே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கத் தேவையில்லாத படிக்கு, மந்திரத்தோடே ஒட்டி உறவாடுகிறது! இயற்கையாகவே ஓங்காரம் என்னும் DNA அமைந்து விட்டது!
அதான், "உன்றன்னோடு-உறவேல்-நமக்கு" என்று DNA மகத்துவம் காட்டுகிறாள் கோதை! அந்த DNA-வை "ஒழிக்க ஒழியாது" என்றும் பாடுகிறாள்!
முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே என்று இதன் தாத்பர்யம்!
அதாச்சும் நமக்கு ஒரு ஆபத்து-ன்னா யார் "முன்னாடி" ஓடி வருவாய்ங்க? = அம்மா தானே? "உறவு" தானே?
ஏதோ யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்!
ஆனா முப்பத்து மூவரும் வருவதுக்கு முன்னாடியே, "முன் சென்று", கப்பம் தவிர்ப்பது எது? = கலி (ஒலி)! = ஓம் + ந மோ + நா ரா ய ணா ய!
குறிப்பு:
இதனால் "நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களுக்கு எல்லாம் ஓங்கார உள்ளுறை இல்லை! அதனால் ஒரு படி கம்மி!" என்று ஒரு சிலர் வழக்கம் போல தப்பர்த்தம் எடுத்துக்க கூடாது! எப்பமே கணக்கு போட்டு, ஆன்மீகம் பண்ணும் மனப் போக்கு உள்ளவர்கள் தான் இப்படி எடுத்துக்கிடுவாங்க! :))
அந்தந்த மந்திரத்துக்கு அந்தந்த பெருமையும் மகிமையும் கட்டாயம் உண்டு!
"ஓங்காரம் என்னும் பிரிக்க முடியாத உறவைக் காட்ட வந்த மந்திரம் = திரு எட்டெழுத்து" என்று மட்டுமே கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!
* "ஓம்" என்று சொல்லி, அவன்-நாம் உறவை இறுக்கிக் கொண்டாகி விட்டது!
* "நமோ" என்று சொன்னால், "எனது இல்லை" என்று வருகிறதே! = அப்படின்னா எது எனதில்லை? எது என்னுடையது?
வாட்? எது உனதா? ஆசை-தோசை! :)
உடலோ பிரகருதிக்கு (matter) சொந்தமானது! பஞ்ச பூதமாகி விடும்!
ஜீவனோ இறைவனுக்குச் சொந்தமானது!
உடம்பும், உயிருமாத் தானே இருக்கே? உடம்பு பிரகருதிக்குச் சொந்தமான பொருள்! ஜீவன் பரமாத்மாவுக்குச் சொந்தமான பொருள்! அப்போ எனக்கு???
உடம்பும், உயிரும் தவிர்த்து மீதி என்ன இருக்கோ, அதான் உனக்குச் சொந்தம்!
மீதி என்ன இருக்கு? = பிருதா அகங்கரணம் பரம்!
தான் என்ற நினைப்பு = அகங்காரம் தான் மீதி இருக்கு! அது மட்டும் தான் உனக்குச் சொந்தம்! :)
எல்லாம் அற என்னை "இழந்த" நலம், சொல்லாய் முருகா! சுர பூபதியே!
உடம்பும் உன்னுது கிடையாது! உயிரும் உன்னுது கிடையாது! மீதி இருக்குற "தான் என்கிற உணர்வு மட்டுமே உனக்குச் சொந்தம்! So,"ந + மோ" என்றால் என்ன?.....(தொடரும்)

Read more »
சென்ற தொடர் பதிவுகளில் "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்தோம்-ல? இன்னிக்கு "நமோ" என்றால் என்னான்னு பார்க்கலாம், வாரீயளா? சென்ற பதிவு இங்கே!
நாத விந்து கலாதி நமோ நம!
வேத மந்த்ர சொருபா நமோ நம!
ஞான பண்டித சாமீ நமோ நம!-ன்னு ஒரு முழு அர்ச்சனையே செய்து முடிப்பார் அருணகிரியார்! பாட்டு முழுக்க "நமோ நம" தான்! எதுக்கு இத்தனை "நமோ நம"?
நம-ன்னா நமஸ்காரம் (அ) வணக்கம்-ன்னு சொல்லுவாய்ங்களே! எதுக்கு வரிக்கு வரி வணக்கம்? முருகன் என்ன அரசியல்வாதியா? அத்தனை முறை விழுந்து கும்பிடணுமா என்ன? அப்போ தான் என் பொடிப் பையன் அருள்வானா என்ன? :)

"நம" என்பதன் மேலோட்டமான பொருள் "வணக்கம்" என்பது தான்! நம = போற்றி!
ஓம் விநாயகாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் கெளரி புத்ராய நம!
ஓம் ஸ்கந்தா க்ரஜாய நம!-ன்னு பிள்ளையார் கோயிலில் அர்ச்சனை நடக்கும்! சுண்டல் சாப்பிடும் போதாச்சும் கேட்டு இருப்பீங்க தானே? :)
ஆனால் "நம" என்றால் வெறுமனே "போற்றி" என்று மட்டும் பொருள் அல்ல!
ஒரு குறிப்பிட்ட தன்னலமான காரியத்துக்கு, நம்ம பேரைச் சொல்லி, அர்ச்சனை செய்யறோம்-ல? அப்போது சொல்லப்படும் "நம" என்பது வேண்டுமானால் "போற்றி"-ன்னு இருக்கலாம்! என் தோழி ஆண்டாளும் இந்த அர்ச்சனையைத் தமிழில் செய்து வைக்கிறாள்!
பூபாலக திரிவிக்ரமாய நம = அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நம = சென்றங்கு தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி
என்று தமிழ் அர்ச்சனைக்கு வித்திட்டுச் செல்கிறாள்!
ஆனால் அரும்பெரும் மந்திரங்களை ஓதும் போது சொல்லும் "நம" என்பதற்கு, வெறுமனே "போற்றி" என்று பொருள் அல்ல!
நம = ந + ம = இல்லை + எனது!
* இங்கு எதுவுமே எனதில்லை என்பது தான் = ந+ம!
* எல்லாமே உனது என்பது தான் = ந+ம!
அட! என்னாங்க இது அநியாயமா இருக்கே? ஓம் நமோ நாராயணாய-ன்னு சொல்லச் சொன்னாய்ங்க! "எனக்கு" நல்லது நடக்கும்-ன்னு தானே அப்படிச் சொல்லச் சொன்னாய்ங்க?
இப்போ திடீர்-ன்னு வந்து, "எனதில்லை! எனதில்லை"-ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டா? இந்த இருவது ரூவா அர்ச்சனைத் தட்டு கூட "எனது" தானே! "என்" காசில் தானே வாங்கினேன்? அப்பறம் "எனதில்லை"-ன்னா எப்படி? போங்கய்யா, நல்ல போங்கா இருக்கே! :))
அதுக்கும் முன்னாடி, இன்னொன்னும் பார்த்திடுவோம்!
சென்ற பதிவில், எல்லா மந்திரத்துக்கும் முன்னாடி, "ஓம் ஓம்"-ன்னு சேர்த்துச் சேர்த்து சொல்றாங்களே? அது ஏன்?-ன்னு கேட்டோம்-ல? எதுக்கு "ஓம்" என்கிற முன்னொட்டு (Prefix)?
பிரணவம் (எ) ஓங்காரம் சேரும் போது தான், மந்திரம் முழுமை அடைகிறது! இல்லீன்னா முழுமை அடையாது!
ஓம் + நம சிவாய! ஓம் + சரவண பவ!
இப்படி எல்லாத்தோடவும் "ஓம்" சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! பூரணத்துவம் பெறும்!
ஓங்காரம் சேர்க்கும் போது மட்டுமே, நமக்கும்-இறைவனுக்குமான உறவு, அந்த மந்திரத்தில் ஏறுகிறது!
நம சிவாய என்று சொல்லும் போது, அவன் பேரை மட்டுமே சொல்கிறோம்! அது நாம சங்கீர்த்தனம்! திருப்பெயர்த் துதி!
ஆனால் பேரைப் பாடும் அதே நேரத்தில், அவனுக்கும் நமக்குமான உறவை கெட்டிப் படுத்திக் கொள்ள வேணாமா?

* ஓம் = அ + உ + ம் = அவன்->உறவு->நாம் -ன்னு சென்ற பதிவுகளில் பார்த்தோம்!
* ஓம் = எனக்கு நீ, உனக்கு நான் என்கிற உறவு!
* இந்த உறவை, அவன் பேரோடு சேர்த்துச் சொல்லும் போதே, நாமும்-அவனும் இன்னும் இறுகுகிறோம்!
எங்கம்மாவை ஜோதீஸ்வரி-ன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க! நான் கூட செல்லமா ஜோதீ-ன்னு தான் கூப்பிடுவேன்! :)
ஆனா உறவு? = அம்மா-ன்னு கூப்பிடும் போது தானே?
ஜோதி-ன்னு கூப்பிட்டாலும், "அம்மா"-ன்னு கூப்பிடும் போது எப்படி உறவு குழைந்து கெட்டிப் படுகிறதோ, அதே போல்,
சங்கரா, சிவா, நமசிவாய-ன்னு கூப்பிட்டாலும், "ஓம்" என்று சேர்க்கும் போதே உறவு கெட்டிப் படுகிறது! புரிகிறதா? :)
* திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
அப்பாவை விட புள்ளைக்கு ஒரு எழுத்து கூட! ஒரு படி பெருமையும் கூட! :)
இந்த மந்திரங்களோடே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! ஆனால் ஒரே ஒரு மந்திரத்துக்கு மட்டுமே, இப்படி "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை!
அந்த மந்திரத்துக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி, ஒன்னா ஒட்டிக்கிட்டு இருக்கு! அது என்னா மந்திரம்-ங்க?
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
திரு எட்டெழுத்து, அஷ்டாட்சரம் என்று சொல்லப்படும் இந்த மந்திரத்துக்கு மட்டும் தான் இப்படி பிரிக்க முடியாத உறவு!
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
(1)----(2)--(3)----(4)--(5)--(6)--(7)--(8)
என்பதில் ஓம்-ஐ தனியாக் கழட்டி விட்டு எண்ணிப் பாருங்க! Count & See?
எட்டெழுத்து என்பது போய், ஏழு எழுத்து-ன்னு ஆயிரும்! :)
அஷ்டாட்சரம் என்பது தானே மந்திரம்? சப்தாட்சரம்-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? :)
ஆக, ஓங்காரத்தை, அஷ்டாட்சரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! பொருளே போயிரும்!
ஓங்காரம் உள்ளேயே இருப்பதால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! Or else meaningless!
![]() | ![]() |
ஆனா மற்ற மந்திரங்களுக்கு இப்படி இல்லை!
* ச ர வ ண ப வ = 6! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவாறெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
* ந ம சி வா ய = 5! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவைந்தெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
ஆனால் திரு எட்டெழுத்தில் மட்டுமே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கத் தேவையில்லாத படிக்கு, மந்திரத்தோடே ஒட்டி உறவாடுகிறது! இயற்கையாகவே ஓங்காரம் என்னும் DNA அமைந்து விட்டது!
அதான், "உன்றன்னோடு-உறவேல்-நமக்கு" என்று DNA மகத்துவம் காட்டுகிறாள் கோதை! அந்த DNA-வை "ஒழிக்க ஒழியாது" என்றும் பாடுகிறாள்!
முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே என்று இதன் தாத்பர்யம்!
அதாச்சும் நமக்கு ஒரு ஆபத்து-ன்னா யார் "முன்னாடி" ஓடி வருவாய்ங்க? = அம்மா தானே? "உறவு" தானே?
ஏதோ யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்!
ஆனா முப்பத்து மூவரும் வருவதுக்கு முன்னாடியே, "முன் சென்று", கப்பம் தவிர்ப்பது எது? = கலி (ஒலி)! = ஓம் + ந மோ + நா ரா ய ணா ய!
குறிப்பு:
இதனால் "நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களுக்கு எல்லாம் ஓங்கார உள்ளுறை இல்லை! அதனால் ஒரு படி கம்மி!" என்று ஒரு சிலர் வழக்கம் போல தப்பர்த்தம் எடுத்துக்க கூடாது! எப்பமே கணக்கு போட்டு, ஆன்மீகம் பண்ணும் மனப் போக்கு உள்ளவர்கள் தான் இப்படி எடுத்துக்கிடுவாங்க! :))
அந்தந்த மந்திரத்துக்கு அந்தந்த பெருமையும் மகிமையும் கட்டாயம் உண்டு!
"ஓங்காரம் என்னும் பிரிக்க முடியாத உறவைக் காட்ட வந்த மந்திரம் = திரு எட்டெழுத்து" என்று மட்டுமே கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!
* "ஓம்" என்று சொல்லி, அவன்-நாம் உறவை இறுக்கிக் கொண்டாகி விட்டது!
* "நமோ" என்று சொன்னால், "எனது இல்லை" என்று வருகிறதே! = அப்படின்னா எது எனதில்லை? எது என்னுடையது?
வாட்? எது உனதா? ஆசை-தோசை! :)
உடலோ பிரகருதிக்கு (matter) சொந்தமானது! பஞ்ச பூதமாகி விடும்!
ஜீவனோ இறைவனுக்குச் சொந்தமானது!
உடம்பும், உயிருமாத் தானே இருக்கே? உடம்பு பிரகருதிக்குச் சொந்தமான பொருள்! ஜீவன் பரமாத்மாவுக்குச் சொந்தமான பொருள்! அப்போ எனக்கு???
உடம்பும், உயிரும் தவிர்த்து மீதி என்ன இருக்கோ, அதான் உனக்குச் சொந்தம்!
மீதி என்ன இருக்கு? = பிருதா அகங்கரணம் பரம்!
தான் என்ற நினைப்பு = அகங்காரம் தான் மீதி இருக்கு! அது மட்டும் தான் உனக்குச் சொந்தம்! :)
எல்லாம் அற என்னை "இழந்த" நலம், சொல்லாய் முருகா! சுர பூபதியே!
உடம்பும் உன்னுது கிடையாது! உயிரும் உன்னுது கிடையாது! மீதி இருக்குற "தான் என்கிற உணர்வு மட்டுமே உனக்குச் சொந்தம்! So,"ந + மோ" என்றால் என்ன?.....(தொடரும்)

















































