Thursday, September 18, 2008

இறைவனுக்கு எது பிடிக்கும்? - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - Part 2

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை! ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ! - ஜய விஜயர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்...கருமுகிலான் யோசிக்கிறான்! சென்ற பதிவு இங்கே!(மன்னிக்கவும்! பாக்டிரீயாக் காய்ச்சலின் காரணமாக, ஓரிரு வாரமாய் தொடரைப் பதிய முடியவில்லை! சென்ற பகுதியை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடுங்கள்; தொடர்ச்சி/Continuity...
Read more »

Sunday, September 07, 2008

வேளாங்கண்ணியம்மன் பிறந்தநாள்: ஆடாது அசங்காது வா அம்மா!

பள்ளியில் படிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர்-8 அன்று விசேடமாக மேடையில் ஏற்றப்படுவேன்! பலி கொடுப்பதற்காக!அட, நீங்க ஒன்னு! அவசரப்பட்டு சந்தோஷப் பட்டுக்காதீங்க! என்னைக் களப்பலி கொடுக்க இது என்ன மகாபாரதப் போரா? அடியேன் சொல்வது புனித ஆரோக்கிய அன்னையின் திருவவதார நாள் திருப்பலி - Our Lady of Good Health, Birthday Mass!பொதுவாகத் திருப்பலியில் கத்தோலிக்க மாணவர்கள் தான் கலந்து கொள்வர். பலியின் முடிவில்...
Read more »

Thursday, September 04, 2008

இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1

"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்டு வர இம்புட்டு நேரமா ஆகும்?""அதில்லீங்க அத்தை! வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது! இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு!வரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது! அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்!""நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம்! ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு...
Read more »

Wednesday, September 03, 2008

பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்!

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சுடா-ன்னு வழக்கத்தில் சொல்லக் கேட்டிருப்பீங்க! "நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன்! ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி!" - இப்படிச் சொல்வதற்குத் தானே இந்தப் பழமொழியைப் பயன்படுத்தறாங்க, இப்பல்லாம்?பிள்ளையார் சிலை பண்ணலாம்-னு தான் களிமண்ணைத் திரட்டி, உருட்டி ஆரம்பிச்சேன்!ஆனால் கடைசியா வந்து நின்னதென்னவோ பிள்ளையார் உருவம் இல்லைப்பா!...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP