ஒரே இலையில் சாப்பிட்ட அனுமன்-இராமன்!
"நானும், என் தோழனும் ஒரே தட்டில் சாப்பிடறது இல்லையா? தட்டில் இருந்து தட்டுக்கு....படக் படக்-ன்னு டிரான்ஸ்பர் ஆகுமே?":)
"டாய்! அது வேற இது வேற!"
"சரி! இப்போ என்னாங்குற?"
"டாய் கேஆரெஸ்! என்னமோ நீ தான் அனுமனுக்குப் பந்தி பரிமாறினாப் போல பேசுற? அனுமனும் இராமனும் ஒரே இலையில் சாப்பிட்டாங்க-ன்னு சும்மா அடிச்சித் தானே விடுற?":)
"ஹிஹி! அடிச்சி விடும் பழக்கம் எனக்கு இல்லையப்பா!"
"உக்கும்...இவரு பெரிய திருவிளையாடல் சிவாஜி கணேசன், தருமி கிட்ட பேசறாரு! ஒழுங்கா சொல்லுறா வெண்ணெய்":)
"ஹா ஹா ஹா! முடிஞ்ச வரை, தரவோடு பொருத்திப் பார்த்து விட்டு, பதிவில் சொல்லுறது தான் வழக்கம்! Data based and NOT opinion based!
எனக்கும் இது நாள் வரை இந்த விஷயம் தெரியாதுடா! திடீர்-ன்னு ஓவியர் வினு வரைஞ்ச ஒரு ஓவியத்தைப் பார்த்தேனா? Stun ஆயிட்டேன்! நீயே பாரேன்!"
"ஆகா...............! ஆமாம் போலத் தான் இருக்கு"!
"என்னா...இருக்கு, முறுக்கு-ங்குற? நான் சொல்லும் போது மட்டும் ரொம்பவே குதிச்ச?":)
"கோச்சிக்காத ரவி! எழுத்தாளர் ஜெயமோகன் பதிவுல போய் இப்படிக் குதிக்க முடியுமா? உன் கூடத் தானே சீண்ட முடியும்! அதான்!":)
கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது,
மனைவி உண்ட இலையில் கணவன் உண்பது
- இதெல்லாம் ஒரு அது! ஒரு இது! ஆசை!:)
ஆனா சினிமாவில் பார்த்துப் பார்த்து, அப்படிச் சாப்பிட்டாலே அது மனைவி தான் என்று முடிவு கட்டி விட்டோம்!
முத்தம்-ன்னாலே காதலர்கள் குடுப்பது தானா? என் காதல் முருகனுக்கு சதா முத்தம் குடுக்கும் நான், அதே சமயம் தோழி கோதையின் கைகளிலும் முத்தம் கொடுத்து இருக்கேனே! :)
அது போல ஒரே இலைச் சாப்பாடு என்பது ஒரு நெருக்கம்! அதன் நோக்கத்தைத் தான் பார்க்கணும்! தாறு மாறா யோசிக்கப்பிடாது!:)
சின்ன வயசு இராமானுசர், மூத்த குருவான திருக்கச்சி நம்பிகள் உண்ட இலையில் உண்ண ஆசைப்பட்டார்!
ஏன்? = ஏன்-னா சடங்கு சாஸ்திரம்-ன்னே இருந்த அவருக்குள், ஆழ்வாரின் ஈரத் தமிழை முதலில் விதைத்தது நம்பிகளே!
ஆனால் நம்பியோ so called தாழ்ந்த குலத்தவர்!
தமிழ்ப் பாட்டு பாடித் திரிபவர்! கன்னங் கரேல்!
'அந்தாளு' உண்ட இலையில் நம்ம புருஷன் இராமானுசரா? சீச்சீ! எங்கும் கேட்டிராத புதுப் பழக்கமான்னா இருக்கு? என்ன காரியம்-ண்ணா பண்றேள்?
இராமானுசரின் மனைவிக்கு இது பிடிக்காமல் போய்...எதை எதையோ செய்ய..., அவர்களின் மண முறிவுக்கான வித்து இங்கு தான் ஆரம்பம்!
பின்னர் கிணற்றடியில், பெண் என்ற தன்மையும் மீறி, தகாத வார்த்தைகளைக் கொட்டி, மொத்தமாய் முறிந்து போனது!
நாம மேட்டருக்கு வருவோம்! ஒரே-இலை உணவு என்பது குழந்தை உணவை அம்மா/அப்பா எடுத்து உண்பதும் கூட உண்டு!
இங்கே இராகவனுடன் ஒரே இலை உணவு!
சொல்வது ஆழ்வார் பாசுரம்!
அதைத் தான் ஓவியமா வரைஞ்சி இருக்கார் வினு!
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு, என்று
கோதில் வாய்மையினா லொடும், "உடனே உண்பன் நான்" என்ற ஓண்பொருள், எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன், அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
- திருமங்கை ஆழ்வார்! பெரிய திருமொழி! (1419)
இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஜெட் வேகத்தில் திரும்புகிறது விமானம்!
இராகவன்-சீதையொடு, இலக்குவன், சுக்ரீவன், வீடணன், அனுமன் முதலானோர்! வழியில் பரத்துவாச முனிவரின் குடில்!
அவரோ நிலைமை புரியாமல், இராமனைக் குடிலுக்கு விருந்துண்ண அழைக்கிறார்! முணுக் எனக் கோபிக்கும் முனிவரிடம் விளக்கி மாளுமோ?
அங்கே பரதன் குறித்த காலத்தில் வராவிட்டால் தற்கொலை என்று இருக்கிறான்! என்ன செய்வது? யார் உதவிக்கு? = எப்போதும்! முப்போதும்!
ஆவி காத்து இருப்பது ஒரேயொரு அடியவன் தான்! எப்போதும், முப்போதும்!
* தற்கொலையில் சீதையின் ஆவி காத்தான்!
* போரிலே இலக்குவன் ஆவி காத்தான்!
* மாயத்தில், இராமனின் ஆவி காத்தான்!
* இதோ, பரதனின் ஆவியும் காத்தான்!
ஆவி காப்பான் எம் ஆஞ்சநேயன்!
சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
அன்று, அவள் ஆவி காத்தது போல்,
அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீரில்,
என்னையும் காத்தருள்!
'அவனுக்கு என்னை விதி' என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!

பரதனின் உயிர் காக்கப் பறந்து சென்ற அனுமன், வழியில் குகனுக்கும் தேறுதல் சொல்லி, பரதனைக் காத்து மீள்கிறான்!
அதற்குள், முனிவரின் குடிலில், உணவு! எல்லாரும் அமர்ந்து உண்ணத் துவங்கி விட்டார்கள்! வந்து நிற்கிறான் ஆஞ்சநேயன்! இடம்?
இதயத்திலே இடம் கொடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் கோமகன்கள் இருக்கின்ற காலத்திலே, அனுமனுக்கு எங்கு இடம் கொடுப்பது?
ஆ! இவன் நம்ம ஊழியன் போலத் தானே உழைக்கிறான்? இவனை எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் அன்பு மாறப் போறதில்ல!
So, நாங்கல்லாம் சாப்பிட்டு முடிச்சாப் பொறவு சாப்பிட்டுக்கோ ஆஞ்சநேயா-ன்னு சொல்லி இருக்கலாம்! எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் இவன் தானே!
ஆனால் வாழ்விற்கு ஒரே ஒரு இராகவன்! அவன் மனமும் துணியுமோ?
இடமில்லை ஆஞ்சநேயா!
ஆனால்....
என் முன்னே இடமுளது!
வா, என் முன்னே வந்து அமர்ந்து விடு!
ஓர் இலையில்...இப்பக்கம் நான், அப்பக்கம் நீ!
என்ன கூச்சம்? வா!
எச்சிற் பட்ட உணவு என்ற கூச்சமோ?
மாருதி ஓடியே சென்று அமர்ந்து விட்டான்!
தீரச் செயல்கள் செய்யும் அனுமன் திடுக்கிட்டு நிற்கிறான்!
என்ன பேச?
அன்னை சீதை கூட, பக்கத்தில் தனி இலையில் தான் உண்கிறாள்!
ஆனால் இப்படி ஊரறிய உலகறிய...
அண்ணலின் சரி சமானத்தில்...ஓர் இலையில்...
போதும் போதும் என்று இவனும் இப்பக்கம் தள்ள...
ஞான, கர்ம யோகிகள் அத்தனை பேரும், நமக்கு இப்படியொரு பேறில்லையா என ஏங்க...
தன் ஞானம், தன் கர்மம், தன் பக்தி என்று இல்லாது.....
உன் 'சரணம்' என்றே இருக்கும் சிறிய திருவடிக்கு அமுது படையல்!
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு = வாயுவின் மகன், குரங்கெனும் விலங்கு
மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து = இது வானர சாதி என்று மனத்தளவும் எண்ணாது, உகப்பாக...
காதல் ஆதரம் கடலினும் பெருக = அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று கடல் போல் பொங்க
செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று = ஆவி காத்தவனுக்கு ஆவியே கைம்மாறோ என்னுமாப் போலே
கோதில் வாய்மையினா லொடும் = வெறும் பேச்சுக்கு மட்டும் உறவு பாராட்டாது, வாய்மையினால்...
"உடனே உண்பன் நான்" = உன் கூடவே நானும் சாப்பிடுகிறேன்
என்ற ஓண்பொருள், எனக்கும் ஆதல் வேண்டும் = இப்பேர்ப்பட்ட அன்பு எனக்கும் வாய்க்க வேண்டும் பெருமாளே!
என்று அடியிணை அடைந்தேன் = என்று உன் சிறிய திருவடிகளை அடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்து அம்மானே! = அரங்கத்து அம்மானே! என் மீது அன்பு காட்டு!
..........என்று திருமங்கை ஆழ்வார், அனுமனை முன்னிட்டுக் கொண்டு, அரங்கனை வேண்டும் பாசுரம்!
இன்றும் திருவரங்கத்தில், இந்தக் காட்சி நடத்தப்படுவதாக, இப்போதே அறிந்தேன்!
ஓரிலைச் சோறுண்டு...
இன்னமும் தனக்கென மோட்சமும் போகாது...
இங்கேயே, அடியவர்களோடு, குணானுபவத்தில்...
மாதவிப் பந்தலிலும் வந்து அமர்ந்து கொள்ளும் இந்தச் சிறிய்ய்ய்ய்ய்ய திருவடியான எம் ஆஞ்சநேயனை,
பந்தல் வாசகர்கள், அன்பர்கள் எல்லாரும் தொட்டுத் தொட்டுக் கை குலுக்கிக் கொள்ளுங்கள்!
அவனோடு ஓரிலையில் உண்ட....சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!



















