Tuesday, May 26, 2009

Happy Birthday: ஜிரா வித் சில்க் ஸ்மிதா!

பிறந்த நாள் அதுவுமா என் தோழன் ஜிரா என்னும் ஜி.ராகவன், ஒரு பரங்குன்றின் மேல், பலத்த போதையில் மலையேறிக்கிட்டு இருந்தாரு! புதுச் சொக்கா, புது IPod! பிறந்தநாள் பரிசுகள் பளபளக்க, IPod-இல் ஒரு செம கிக்கான ரொமான்டிக் பாட்டு!"நடவிஞ்ச மயூராலு ஒச்சின மோமு ஒக்கடே!ஈசருகி பாக மொழி செப்பின மோமு ஒக்கடே!"1975-இல், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, நம்ம சில்க் ஸ்மிதா-க்குன்னே போட்ட தெலுங்குப் பாட்டாம்! இந்தப் பாட்டெல்லாம்...
Read more »

Monday, May 25, 2009

தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

கால் நூற்றாண்டுப் போராட்டம், கணப் பொழுதில் முடிவுக்கு வந்து விட்டது! கோபம், வெறி, போர், உரிமை, நியாயம் என்ற பல உணர்ச்சிகளும், துரோகம் என்ற ஒரே உணர்ச்சியில் அத்தனையும் மங்கிப் போய் முடிந்து விட்டன! தமிழினம் வாங்கி வந்திருக்கும் பிரத்யேகமான வரம்/சாபம் இது! :(((செம்மொழி செம்மொழி-ன்னு சொன்னாங்க! ஆனா இம்புட்டுச் சிவப்பா இரத்தம் தோய்ந்து இருக்கும் இந்தச் "செம்"மொழி-ன்னு அப்ப யாருக்கும் தெரியாமப் போனது தான்...
Read more »

Thursday, May 14, 2009

தமிழ்மணம்-5000! எந்த வலைப்பூ?

தமிழ்மணத்தில் 5000-வது வலைப்பூ...திரட்டப்பட்டுள்ளது! அது யாருதா இருக்கும்? எந்த வலைப்பூவா (பதிவா) இருக்கும்?தமிழ்மணத்தின் 5000-வது பதிவு ஒரு ஆன்மீகப் பதிவு டோய்! :)Hip Hip! Hurrah! Cheers! அரச மீனவன் பாட்டிலை ஓப்பன் பண்ணி ஆன்மீகப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்து சொல்லுங்க மக்கா!:)))5000 வலைப்பதிவுகள் கொண்ட முதல் திரட்டி (தமிழில்) தமிழ்மணம் தான்! - இது வியத்தகு வளர்ச்சி! பெருமை மிக்க வளர்ச்சி! இதனுடன் வளர்ந்தது வெறும் தமிழ்மணம் என்னும் ஒரு திரட்டி மட்டுமல்ல!* தமிழ் வளர்ந்தது!* தமிழில் எழுதும்...
Read more »

Thursday, May 07, 2009

நரசிங்கத்தின் முன்னே பிரகலாதனா? அனுமனா?

பிரகலாதக் குழந்தைக்காக அல்லவா ஓடோடி வந்தான் இறைவன்? இரணியன் எந்த இடத்தைக் காட்டி குழந்தையை என்ன கேள்வி கேட்பானோ? அது பதிலுக்கு என்ன சொல்லுமோ? என்று பதபதைத்து, பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்தது யாருக்காக? = பிரகலாதனுக்காகவா? அனுமனுக்காகவா? அட, அனுமன் எப்படிப்பா நரசிம்ம அவதாரத்தில் வந்தாரு? :)இன்று சுதர்சன-நரசிம்ம ஜெயந்தி (May-07-2009)! சுதர்சனம், நரசிம்மம் இரண்டுமே "உதித்த" நாள்! ஒரு திரு சிம்மம்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP