தன் சொந்த "காம" விஷயங்களுக்கெல்லாம் இறைவனைத் தூது அனுப்புவதா? என்று சக அடியாரிடம் 'வெறுப்பு' பாராட்டி........., அந்தப் பகையால், உயிரையே விடத் துணிந்த ஒருவரின் கதை!
பந்தலில், நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராணப் பூச்சுகள் இல்லாமல்...மூல நூலில் உள்ளது உள்ளபடி...
இன்று ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் குரு பூசை (நினைவு நாள்) - Jun 25,2011 (ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில்...)
ஏயர்-கோன்-கலிக்காம-நாயனார்!அது என்னாங்க ஏயர் கோன்?
ஏயன் = காங்-கேயன், கார்த்தி-கேயன், நச-ரேயன்(இயேசுநாதர்)...இப்படிப் பல ஏயன்கள்! ஏயன்=தலைவன்!
இன்னும் விவரமாச் சொல்லணும்-ன்னா...ஏயன்=ஈயன்! ஈன்று தரப்படும் குழந்தை, பின்பு தலைவனாகத் திகழ்வது!
* கங்கை ஈன்றதால் = காங்கேயன் (முருகன்)
* கார்த்திகை ஈன்றதால் = கார்த்திகேயன் (முருகன்)
* நசரேத் என்னும் ஊர் ஈன்றதால் = நசரேயன் (இயேசு பிரான்)
* குந்தி ஈன்றதால் = கெளந்தேயன் (அருச்சுனன்)
அது போல பல ஏயன்களுக்கு (வீர மகன்களுக்கு)...கோன்-ஆக (தலைவனாக) விளங்கியதால் = ஏயர் கோன்!
கலிக்காமர் என்பதே இவர் சொந்தப் பெயர்!
ஏயர் கோன் = பட்டப் பெயர்!
சீர்காழி/ வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள '
திருப்பெரு மங்கலம்' தான் இவரோட சொந்த ஊரு!
நந்தனாருக்கு நந்தி விலகுச்சே (திருப்புன்கூர்), அதுக்கும் சற்று கிட்டக்க!
சோழப் படைகளுக்குத் தளபதிகளைக் கொடுக்கும் குடியில் தோன்றியவர்! பெரும் வீரர்! அதை விட, பெரும் சிவ பக்தர்!
ஆனால்.......
ஆனால்.......
இவருக்கு, இன்னொரு சிவபக்தரான சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டாலே ஆகாது!ஏனாம்? அவரு பாட்டெழுதி பேரு வாங்கிக்கறாரு-ன்னு பொறாமையா? ஏதாச்சும் வாய்க்கால்-வரப்பு தகறாரா? :)
அதெல்லாம் ஒன்னுமில்லை! சுந்தரர், தன் 'காம இச்சைக்காக' ஈசனையே தூது போகுமாறு வேண்டினாராம்! அதான்! :))
'இவன் பண்ணினது தப்பு - அதுக்குத் தூது, இறைவனே போக வேணுமா? அட, அந்தாளு தான் மானங்கெட்டுக் கேட்டா, இந்த ஈசனும் அப்படியே போயிடறதா? சீச்சீ!' - இப்படியான வெறுப்பு கலிக்காமருக்கு! :))
ஆனா சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, சுந்தரர் நிலை என்ன?
'போடா! என்னை ஈசனே ஒன்னும் சொல்லலை! நீயென்ன பெருசா கருத்து சொல்ல வந்துட்ட'?-ன்னு பதிலுக்கு குதிச்சாரா? :) இல்லை!

சுந்தர மூர்த்தி நாயனார் = சொகுசு மூர்த்தி நாயனார் தான்!:)
ஆனால் அந்த சொகுசிலும், ஈசனையே முன்னிறுத்தி எதையும் செய்பவர்!
ஈசன் தான் அவருக்கு உற்ற தோழன்! அவனிடம் எதையுமே மறைக்கும் வழக்கம் இல்லை அவருக்கு!
* சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சா, அதையும் அவன் கிட்ட சொல்லுவாரு!
* தான் ஸ்டைலாப் போட்டுக்கும் உடுப்பு எப்படி இருக்கு-ன்னு, அதையும் அவன் கிட்டவே கேப்பாரு!
* ஒரு பொண்ணு அழகா நடனம் ஆடுறாங்களா, வாவ் செம ஃபிகர்-ன்னு அதையும் ஈசன் கிட்டயே சொல்லித் தான் அவருக்குப் பழக்கம்:)
அப்படி ஒரு அன்னோன்ய பாவனை! எனக்கு முருகனா வந்து வாய்ச்சானே, அது போல-ன்னு கூட வச்சிக்கோங்களேன்!:))
ஈசன்-ன்னா பெரிய கடவுள், அவரைத் துதிக்கணும், கைலாச பதவி, அவர் முன்பு பணிவோடு நடந்துக்கணும் போன்ற எண்ணமெல்லாம் சுந்தரருக்குத் தோனாது!
ஏதோ தோள் மேல் கை போட்டு பேசுற பாவனை தான் எப்பமே!
ஆனா இது உலகத்தில் எல்லாருக்கும் புரிஞ்சிடுமா? இது "ஒரு வினோதமான" பாவனை!யாராச்சும் முருகன் சிலையைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு, Bed-ல்ல வச்சிக்கிட்டே தூங்குவாங்களா?:) காலையில் எழுந்திரிச்ச உடனேயே, முருகனுக்கு முத்தம் கொடுப்பாங்களா?:)
யாராச்சும் தன் அந்தரங்க ஆசை, காமம் உட்பட, இதையெல்லாம் போய் தெய்வத்து கிட்ட சொல்லுவாங்களா?
இப்படித் தான் சொகுசு மூர்த்தி நாயனாரான = சுந்தர மூர்த்தி நாயனார், தன் அந்தரங்க ஆசைகளையும் ஈசனிடம் மட்டுமே சொல்லுபவர்!
திருவாரூரில் பரவை நாச்சியோடு காதல் திருமணம்! ஆனால் சென்னை திருவொற்றியூர் ஆலயம் சென்ற போது, அங்கே இன்னொரு நடன மங்கை, சங்கிலி நாச்சியைக் கண்டு இருவருக்கும் காதல்!
அங்கேயே மணம் செய்து கொண்டார்! பின்னர் இறைவனிடம் படவும் பட்டார்! ஆனால் திருமணத்தைக் கேள்விப்பட்ட பரவை நாச்சிக்கு தாங்க மாட்டாத கோவம்! சுந்தரர் மீண்டும் திருவாரூர் சென்ற போது, கதவடைத்து விட்டார்!

அவள் கோபத்தைத் தணிக்க, ஆரூர் அழகேசரான ஈசனையே தூது செல்லுமாறு வேண்டினார் சுந்தரர்!
மாறு வேடத்தில் சென்ற ஈசனுக்கும் கதவு சார்த்தப் பட்டது!
ஒரு முறைக்கு இரு முறை...., வீதி விடங்கப் பெருமான், வீதியில் கால் தேய நடந்து, பரவையின் கோபத்தைத் தணித்தார்!
இதைக் கேள்விப்பட்டுத் தான், நம்ம கலிக்காமருக்கு மனசே ஆறலை!
'
மாலும் ஐயனும் தேடித் தேடொணாத் திருவடிகள்...
அதைக் கால் தேய நடக்க விட்டானே...அதுவும் தன் இச்சைக்காக! பாவி! இவனெல்லாம் ஒரு சமயக் குரவனாம்? சுந்தரனாம்....ச்ச்சீ'
- இப்படியொரு வெறுப்பை வளர்த்துக் கொண்டு, அதைப் பலரிடம் சொல்லியும், அவ்வப்போது வெளிக்காட்டியும் வந்தார் கலிக்காமர்!
விஷயம் சுந்தரர் காதுகளுக்குச் சென்றது! சுந்தரருக்குத் தன் மேலேயே வெட்கமாக இருந்தது! 'ஆமாம்-ல்ல? நான் ஈசனை மதிக்காமல் ரொம்பத் தான் வேலை வாங்குறேனோ? ஆனா எனக்கு அவன் தானே எல்லாம்!
இது உலக வழக்கத்துக்கு மாறாக வேணும்-ன்னா இருக்கலாம்! காமமோ? காதலோ? அவன் கிட்டச் சொல்லாம யார் கிட்ட போய்ச் சொல்வது? - இதை கலிக்காமருக்கு எப்படிப் புரிய வைப்பேன்'?
'ஏன் புரிய வைக்க வேண்டும்? போனாப் போறான் கலிக்காமன்! அவன் வழி அவனுக்கு, என் வழி எனக்கு!'
- இப்படி உதறித் தள்ள மனம் வரவில்லை சுந்தரருக்கு!
அடியார்கள் குழுவில் இசைந்து இருப்பதல்லவோ அழகு!கலிக்காமர் நல்ல மனிதர்! நல்ல சிவ பக்தர்! அவர் வெறுக்கும் படி நான் இருக்கிறேனே! அவருக்குப் புரிய வைப்பது எப்படியோ?.....
என்று ஈசனிடமே மறுபடியும் போய்......ஏங்ங்ங்ங்கி.......நிற்க........

கலிக்காமருக்குச் சூலை நோய்! கடும் வயிற்று வலி! மருத்துவர்கள் வந்து மருந்து குடுத்தும் நிற்கவில்லை!
கனவில் ஈசன்....
"கலிக்காமரே, நம் சுந்தரன் இங்கு வருவான்...உன் வலி தீரும்!"திடுக்கிட்டு எழுந்தார் கலிக்காமர்! 'ஆகா! என்ன கொடுமை இது! நம் சுந்தரன்-ன்னு அடைமொழியா? ச்சீ...அவன் வந்தா என் வலி தீர வேண்டும்?
வேண்டவே வேண்டாம்! நான் செத்தாலும் சாவேன்! ஆனால் அவன் வந்து, என் வலி தீர்ந்தது-ன்னு இருக்கக் கூடாது'
அங்கு ஈசன்...."
சுந்தரா...நம் கலிக்காமனின் வலியைத் திருநீற்றால் தீர்ப்பாயா? உன்னைப் பிடிக்காதவன் வீட்டுக்கு நீ செல்வாயா?"
சுந்தரர்: 'ஈசனே...நீயே....நம் கலிக்காமன்-ன்னு உறவு கொண்டாடுகிறாயே, அப்படியானால் உன் உறவு என் உறவு அல்லவா! இதோ கிளம்பிப் போகிறேன்!'
இருவருமே சிறந்த பக்தர்கள் தான்! ஆனால் தன்னைப் பின்னுக்குத் தள்ளி, தன் மானத்தையும் பின்னுக்குத் தள்ளி...அவனுக்கே அவனுக்கே....என்று இருக்கும் மனசு??? = பேதை மனசு!

சுந்தரர், திருப்பெருமங்கலம் வருகிறார் என்று தெரிந்து, ஊரே கூடி விட்டது!
பலருக்கும் சுந்தரரின் தெய்வத் தமிழ்ப் பதிகம் கேட்க ஆசை இருக்கோ இல்லையோ.....ஆனால் இரண்டு எதிர் துருவங்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் ரசா பாசம் அரங்கேறுமோ?.....அதைக் 'கண்டு களிக்கும்' ஆவல் கூடி விட்டது :))
ஆனால், கலிக்காமருக்கு, இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை!
என்ன இது...இக்கட்டான நிலைமை!
அவனா? ச்சே...வேண்டவே வேண்டாம்! தனி அறையில்....தன் வாள் எடுத்து, தன் வயிற்றைத் தானே குத்திக் கொண்டார்!
ஐயோ! இரத்த வெள்ளம்!
கலிக்காமரின் மனைவி துடிக்கிறார்கள்!
கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில்...
இப்படிக் குப்-பென்று நடந்து விட்டதே! முருகா!
பொன்னார் மேனியனே....புலித்தோலை அரைக்கசைத்துஅன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?ஆகா! வீட்டு வாசலில் தேவாரப் பதிகச் சத்தம் கேட்கிறதே! சுந்தரர் வந்து விட்டாரோ?
வீடேறி வந்து விட்ட ஒருவரை எப்படி நடத்துவது?குகக் குறிப்போ? அல்லது முகக் குறிப்போ?
வாங்க வாங்க, வந்த அஞ்சே நிமிடத்தில் போங்க போங்க....
.........இப்படியெல்லாம் செய்ய மனம் வருமா அந்தக் குல மகளுக்கு? மானக் கஞ்சாற நாயனாரின் மகள் அல்லவா!
அருமைக் கணவனின் உடலை, அறையில் பத்திரப்படுத்தி இருத்தி, கட்டி அணைத்து...கண்ணைத் துடைத்து...
அழுகை ஒலிகளை அடக்கச் சொல்லி விட்டு, தானும் அடக்கிக் கொண்டு....வெளியில் ஓடுகிறாள்!
சிறந்த சிவத் தொண்டரான சுந்தரரை, உள்ளே வருக, என்று அழைத்து, பணிந்து, இடி விழுந்தது போல் நிற்கிறாள்!
சுந்தரரும், 'அம்மா, கலிக்காமரைக் காண வேண்டுமே!' என பேச்சை ஆரம்பிக்க...விஷயம் ஒவ்வொன்றாய் வெடித்து வெளியில் வருகிறது...
சுந்தரர் அலறி அடித்து, அறைக்குள் ஓட....அங்கே இரத்த வெள்ளத்தில் கலிக்காமர்!
ச்சே...நல்லது செய்ய நினைத்து தீயதாய் முடிந்ததே...இதற்கா இத்தனை தூரம் வந்தேன்...வந்து இவள் மாங்கல்யத்தைக் கெடுத்தேனோ?
இப்படியுமா.....என் மீது வெறுப்பின் உச்ச கட்டம்?....சுந்தரர் கதறி அழ.....
திடுமென்று, யாரும் எதிர்பாரா வண்ணம்....
அருகே இருந்த வாளை உருவி....தன் மீது பாய்ச்சிக் கொள்ள.....

"சுந்தரா...நில்!!!!
எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தாயே!
உயிரைப் 'பரிந்தால்' புரியும்! பரிவதில் ஈசனைப் பாடி...."
கலிக்காமர் எழுந்தே விட்டார்!
என்ன மாயமோ...கலிக்காமர் எழுந்தே விட்டார்!
சுந்தரரின் உருவிய வாளை இறுகிப் பிடித்து கொண்டார்!
சுந்தரனின் விந்தையான பேதை மனம், அப்போது தான் கலிக்காமருக்குப் புரிந்தது...* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், தன் கருத்தை மட்டுமே முன்னிறுத்திய தான் எங்கே......
* பலரிடமும் பேசி இழிவு படுத்துகிறேன் என்று தெரிந்தும், ஈசனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, என் வீட்டு வாசலில் நின்ற சுந்தரன் எங்கே....
வெட்கம் பிடுங்கி தின்ன....சுந்தரர் காலில் கலிக்காமர் வீழ....
அன்பு பிடுங்கித் தின்ன....கலிக்காமர் காலில் சுந்தரர் வீழ....
இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள்! உயிர் நண்பர்கள் ஆனார்கள்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றிவீடும் வேண்டா விறலின் விளங்கினார்!
திருப்புன்கூர் ஆலயத்துக்குச் சுந்தரரை அழைத்துச் சென்ற கலிக்காமர்...அங்கே இறைவன், நந்தனாருக்கு விலகிய நந்தி....என்று அனைத்தும் காட்ட...
சுந்தரர் தேவாரப் பதிகங்கள் பாடி....அதில் தன் நண்பரான கலிக்காமர் பேரையும் பாடிக் குறித்து வைத்தார்!
ஏத நன்னிலம் ஈராறு வேலிஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துபூத வாளி நின் பொன்னடி அடைந்தேன்பூம்பொழில் திருப் புன்கூர் உளானேஉம்பர் ஆளியை உமையவள் கோனைஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்துஅன்பினாற் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடுஐந்தும் வல்லவர் அருவினை இலரேபந்தல் வாசகர்களே......நம் மனசாட்சியை நாமே கேட்டுக் கொள்வோமா?* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், நம் கருத்தை மட்டும் தான் நாம் முன்னிறுத்துவோமா?
* இழிவு படப் போகிறோம் என்று தெரிந்தும், அன்பனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, இன்னொரு வீட்டு வாசலில் போய் நிற்போமா?....
அவன் உள்ள உகப்புக்கு நாமா?நம் உள்ள உகப்புக்கு அவனா?பேதை மனம் கொண்ட சுந்தரரையும், வீர மனம் கொண்ட கலிக்காமரையும் சேர்த்து வைத்த....
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!
ஏயர் கோன், கலிக்காம நாயனார் திருவடிகளே சரணம்!