Monday, June 29, 2009

தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!

மிகவும் தகர்ந்து போய், நம் கண் முன்னாடியே பொடிப்பொடியாகும் போழ்து, பேச்சே வராமல் நீரே வரும்! ஸ்தம்பித்து நிற்றல்-ன்னும் சிலர் சொல்லுவார்கள்!அப்போது, "இன்னுமா கருணையில்லை? பேசினால் பொன்னும் சிந்திடுமா?" என்று என் கையைப் பிடித்து தடவிக் கொடுக்கும் ஆறுதலான பாட்டு ஒன்று உண்டு!நேற்றைய கொடூரமான இரவில், தொலை தூரம் வண்டி ஓட்டிக் கொண்டே, நூறு முறையாவது இதைக் கேட்டிருப்பேன்!இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க,...
Read more »

Thursday, June 25, 2009

"ஓம் நமோ" என்றால் இதுவே! - 5

விமானத்தில் எழுதிக் கொண்டே வரும் பதிவு என்பதால், நடுநடுவே ஏர் ஹோஸ்டஸ் கிட்ட கடலை போடுவதை, நீங்களே டீஜென்ட்டா, ஒட்டுக் கேட்காமப் படிக்கணும்-ன்னு கேட்டுக் கொள்கிறேன்! :)"நமோ" என்றால் என்ன?-ன்னு லேசாப் பார்த்தோம்! சென்ற பதிவு இங்கே!ஆனா பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் சுருக்கமா ஒரு தொகுப்புரையைப் பார்த்துட்டு, இன்னிக்கி மேட்டருக்குப்...
Read more »

Friday, June 19, 2009

"ஓம் நமோ" என்றால் என்ன? - Part 4

வரிக்கு வரி "நமோ, நமோ"-ன்னு சொல்றாங்களே! ஏன்? ஒரே "நம நம"-ன்னு கை அரிக்கும் சில பேருக்கு! அந்த "நம நம" தான் "நமோ நமோ"-வா? :)சென்ற தொடர் பதிவுகளில் "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்தோம்-ல? இன்னிக்கு "நமோ" என்றால் என்னான்னு பார்க்கலாம், வாரீயளா? சென்ற பதிவு இங்கே!நாத விந்து கலாதி நமோ நம!வேத மந்த்ர சொருபா நமோ நம!ஞான பண்டித சாமீ நமோ நம!-ன்னு ஒரு முழு அர்ச்சனையே செய்து முடிப்பார் அருணகிரியார்! பாட்டு முழுக்க...
Read more »

Sunday, June 14, 2009

12-B யா? 32-B யா?

மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சிங்காரச் சென்னையில ஒரு பஸ் ரூட் இருக்கு! 32-ஆம் நம்பர் பஸ்! வள்ளலார் நகர்(Mint) to விவேகானந்தர் இல்லம்! மாநகரப் பேருந்தில் ஏறி உட்கார்ந்தா, ஊரெல்லாம் சுத்தி, ஜிலுஜிலு-ன்னு நம்மள மெரீனா பீச்சுக்கு கொண்டு போய் சேத்துரும்!அது போல இருக்கு இந்த 32-கேள்வி ஆட்டம்! ஜிலுஜிலு-ன்னு எங்கு கொண்டு போய் சேர்க்கப் போகுதோ? :)என்னைய பத்தி என்னென்னமோ பொய் சொல்லி, இந்த ஆட்டைக்கு அழைத்த மவராசன்...
Read more »

Friday, June 12, 2009

ஓம் என்றால் இது தான்! - Part 3!

ஓங்காரத்தின் பொருள் உண்மையிலேயே "வேறு யாருக்குமே" தெரியாதா? அதனால் மொத்த உலகமும் பயன் பெற முடியாதா? சிவபெருமான், உமையன்னை, முருகன் என்ற மூவருக்கு "மட்டுமே" தெரிய, "ஓம்" என்ன குலக் கல்வியா? இல்லை! இல்லை! இல்லை! முந்தைய பதிவு இங்கே!சில "தீவிர" சைவப் பெருமக்கள் இவ்வாறு சொல்வது முற்றிலும் தவறு! மதத்துக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு, தங்களையும் அறியாமல், அந்த முருகனுக்கே களங்கம் சேர்ப்பிக்கிறார்கள்!...
Read more »

Tuesday, June 09, 2009

சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி!

மக்கா, என்னடா இது, பதிவு ஒன்னு பின்னால ஒன்னு, தினமும் வந்துக்கிட்டே இருக்கே-ன்னு யாரும் சந்தேகப் படக் கூடாது! சொல்லிட்டேன்! ஆமா! :)இன்னிக்கு ஞான சம்பந்தர் குரு பூஜை (Jun-09, 2009)!ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்றெல்லாம் அவருக்கு ஏற்றம்! இன்று தமிழ்ச் சைவ சமயம் இந்த நிலையில் இருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட வெற்றிப் பிள்ளை, சம்பந்தரே ஆவார்!உமையன்னையின் முலைப்பால்...
Read more »

Sunday, June 07, 2009

ஓம் என்றால் என்ன? - Part 2!

வாங்க மக்களே! "ஓம்" இந்து மதத்துக்கு மட்டுமே உரியதா? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்! முந்தைய பதிவு இங்கே!ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஏதோ இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தம்-ன்னு யாரும் நினைச்சிறக் கூடாது! சென்ற பதிவில் சொன்னது போல், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்!சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குதுங்க! கேள்விப்பட்டு இருக்கீங்களா?...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP