தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!
மிகவும் தகர்ந்து போய், நம் கண் முன்னாடியே பொடிப்பொடியாகும் போழ்து, பேச்சே வராமல் நீரே வரும்! ஸ்தம்பித்து நிற்றல்-ன்னும் சிலர் சொல்லுவார்கள்!அப்போது, "இன்னுமா கருணையில்லை? பேசினால் பொன்னும் சிந்திடுமா?" என்று என் கையைப் பிடித்து தடவிக் கொடுக்கும் ஆறுதலான பாட்டு ஒன்று உண்டு!நேற்றைய கொடூரமான இரவில், தொலை தூரம் வண்டி ஓட்டிக் கொண்டே, நூறு முறையாவது இதைக் கேட்டிருப்பேன்!இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க,...