Monday, December 31, 2007
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது...
Monday, December 24, 2007
கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: Christianity
தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?

அன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்!
"அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே! எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே! ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா?"
"ஓய், என்னைக் கேட்கறீரா? நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா! இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன்! அச்சோ! ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Wednesday, December 19, 2007
பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?திருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,அப்படியே...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: மீள்பதிவு
Monday, December 17, 2007
குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!

குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ!அறிவன்அரைபிளேடுமோகன்தாஸ்தங்கம்லஷ்மிபொன்ஸ்ஜெயஸ்ரீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே!புதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்! மகிழ்ச்சியாய் இருக்கு!ஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்!பரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே! :-)இதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: புதிரா? புனிதமா??, புதிர் போட்டிகள், பொன்னியின் செல்வன்
Tuesday, December 11, 2007
கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி!

Dec 11, பாரதி பிறந்த நாள்;முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.சில...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Friday, November 30, 2007
திருக்கோவிலூர்: பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?

பொன்மேனி கண்டேன்-னு பாடிய ஆழ்வார், பொய் சொன்னாரா என்ன? "பொன்னார் மேனியனே" - சிவபெருமான் ஆயிற்றே!வந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே! நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு? முந்தைய பதிவு இங்கே!நீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது? அதை எடுத்துப் பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்!அது போல்,...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: ஆழ்வார், திருக்கோவிலூர்
Tuesday, November 20, 2007
கைசிகப் புரட்சி! "கீழ்க்குலத்தான்" அந்தணனுக்குக் காட்டிய வழி! (மீள்பதிவு)

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)இன்று கைசிக ஏகாதசி (Nov-21, 2007). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: மீள்பதிவு
திருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா? - 2

ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க....இப்போ நால்வர் நெருக்க,என்னவென்றே புரியவில்லை மூவருக்கும்! நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது! அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது! திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்? முந்தைய பதிவு இங்கே!யாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான்? வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: ஆழ்வார், திருக்கோவிலூர், முதலாழ்வார்கள்
Wednesday, November 07, 2007
திருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்!

திருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க! அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்! - ஹிஹி...புரியலீங்களா?சரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க! பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க!ஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).அவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: அந்தணர் அல்லாதார், ஆழ்வார், திருக்கோவிலூர், முதலாழ்வார்கள்
Wednesday, October 31, 2007
அமெரிக்கா ஆடும் பேயாட்டம்! (மீள்பதிவு)

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு."முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு" விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: மீள்பதிவு