Thursday, December 30, 2010

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1

அவள் ஒரு தயிர்க்காரி! பேரு "தும்பையூர் கொண்டி"! கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா! அவள் மோட்சம் போவாளா?



என்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு "உளறுகிறேன்"-ன்னு பார்க்கறீங்களா? அது எப்பமே பண்ணுறது தானே! :)

தும்பையூர்!

எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!
ஆரணி தொகுதி! திருவண்ணாமலை மாவட்டம்!
செய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு!(Ramana Maharishi College of Engg)

அது என்ன தும்பையூர்?
தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ! தும்பைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க-ல்ல?

தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட!
போர் புரியும் போது வீரர்கள் சூடிக் கொள்வது! திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா? :)

அந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள்! சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி!
வாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும்! எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்!

தும்பையூர் கொண்டி! பேரே நல்லா இருக்கு-ல்ல? :)


திருமலை அடிவாரம்! = அடிப்படி!
இன்னிக்கி "அலிபிரி" என்று தெலுங்கில் சொல்லுகிறார்கள்! அங்கே...........குருவுக்கும் சீடனுக்கும் வாக்குவாதம்!

ஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான்? இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே! :)
பாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு!
ஈரத் தமிழாய்ப் பார்ப்பதால்...அவனையும் அறியாமல், இப்படி மனம் செல்கிறது....

குலம் தரும், செல்வம் தந்திடும்,
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,
அருளோடு பெருநிலம் அளிக்கும்..


"சுவாமி, நிப்பாட்டுங்க, நிப்பாட்டுங்க!"

"எதுக்குப்பா நிறுத்தச் சொல்லுற? எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள்! இரு முடிச்சிடறேன்! அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா?"

வலம் தரும், மற்றும் தந்திடும்,
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,
நாரணா என்னும் நாமம்!

"ஆகா! சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே! பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா?"

"ஆமாம் ஆமாம்!"

"உண்மை தான் குருவே! அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போகலாம்! ஆனால் "அம்மா என்னும் சொல்"?
நம்ம அம்மா கூட, நம் நிம்மதியை எப்பவாச்சும் வந்து கெடுப்பாங்க! ஏம்மா படுத்தற? என்போம்! அவங்க அறையை விட்டுக் கிளம்பிய பின் தான் நமக்கு நிம்மதி......ஆனா அப்பவும் என்ன சொல்கிறோம்? = "அம்மாடி"! :)

பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்!"
அது போலத் தான் "அவன் என்னும் சொல்"!
அவன் பேரே என்னையும் தாங்கும்! அவன் பேரே என்னையும் தாங்கும்!

"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா! என்னால் உனக்குப் பெருமையா? உன்னால் எனக்குப் பெருமையா? ஆகா!"

"அதை விடுங்கள் குருவே! எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை! ஏதோ "தரும் தரும்"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே! அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா? தனம் தருமா? கல்வி தருமா?? என்ன தரும்?"


"ஓ அதுவா?
* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்!
* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்! "நீங்காத செல்வமும்" தரும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்!"

"அருமை! ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா!"

"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா! நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்!
அதான் மோட்சம் கொடுக்கும்-ன்னு ஒரு முறை சொல்லிட்டாரே...
அப்பறம் எதுக்கு இன்னொரு முறையும், அருளோடு மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்லணும்?
முதலில் சொன்னது அருளில்லாத மோட்சம்! பின்னே சொன்னது அருளோடு மோட்சமா? - இப்படியெல்லாம் சந்தேகமா ஆழ்வார் எழுத மாட்டாரே....."

"உம்ம்ம்ம்............அது வந்து....அது வந்து....."

"சொல்லுங்க சுவாமி! எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது!"

"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...
* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா.....அப்படி இருக்காது சுவாமி! புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க! ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு!
கேவலம், இந்திர லோகத்தையா "நாரணா" என்னும் சொல் கொடுக்கும்? நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு! அப்படி இருக்காது சுவாமி!"

"ஆகா! ஆரம்பித்து விட்டாயா? இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா?"

"மன்னிச்சிக்குங்க சுவாமி! புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை! ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்!"

"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற?"

"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்?
அன்பர் மனசுக்கெல்லாம்.....
சொர்க்க வாசல் என்பதே....
அவன் வீட்டு வாசல் தானே
சுவாமி?"

"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்!
ஆனா நீ தான் - நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்-ன்னு எதுக்கு ரெண்டு முறை மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்றாரு-ன்னு கேட்ட!
என்னை அப்படியும் போக விடாம, இப்படியும் போக விடாம....என்ன இராமானுசா இது?"



அடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....

"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல! என் பேரு தும்பையூர் கொண்டி!
தயிர்க் காரி! திண்ணாமலை பக்கம்! இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்!
ஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை! கொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க...."

"சரிம்மா! இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற? பார்க்க லட்சணமா வேற இருக்க! இந்தக் காட்டில் தனியா வரலாமா? தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே!"

"அது இல்லீங்க! நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்! இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே! இவரு தான் இராமானுசரா?"

"ஆமாம், அதுக்கென்ன இப்போ? என் பேரு திருமலை நம்பி! அவரோட குரு!"

"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும்? நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க!
நல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ! இந்தத் தும்பையூர்த் தயிர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க"

"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார்! தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம்! வெளியில் வாங்கும் வழக்கமில்லை!"

"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு! பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே! நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்!"

"சரி! தினப்படிக்கு மூன்று படி தயிர்! அளந்து விட்டுப் போம்மா! மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ!"

தும்பையூர் கொண்டி (மனசுக்குள்): "உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க! வேறு ஏதோ வாங்கப் போகிறேன்!"

(தொடரும்....)

34 comments:

  1. முதல்ல பந்தலை வழக்கம்போல களைகட்ட வைக்க வந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  2. என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா? யாருக்குப்பா இது?:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு?:)

    ReplyDelete
  3. //அது என்ன தும்பையூர்? தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ!
    துமபைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க///

    <<<>>>>>
    தும்பைப்பூ ரொம்ப சாஃப்ட் அதுக்கும் இப்படி சொல்வாங்க.

    ReplyDelete
  4. //தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட! போர் புரியும் போது வீரர்கக் சூடிக் கொள்வது! திணைகள்: வெட்சி/கரந்தை, வஞ்சி/காஞ்சி, உழிஞை/நொச்சி, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா? :)

    //

    <<<<<<><>>> இங்க பார்த்ததும் நினைவுக்கு வர்து! ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே!:)

    ReplyDelete
  5. ஆஹா ஆரம்பமே என் விருப்பப்பாசுரமா? இதுல இந்த வலம் தரும் என்ற சொல்லுக்கும் சரியான அர்த்தம் தேவை. தும்பையூர் தயிர்க்காரி என்ன சொல்லபோறாங்கன்னு தொடரும் பதிவுக்கு ஆவலா காத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி சுவாரஸ்யமாய் கதையாக எல்லாவற்றையும் சொல்லும் தம்பிகே ஆர் எஸ்ஸுக்கு புத்தாண்டில் நல்லன எல்லாம் தர அரங்கனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. கதை நல்லா தொடங்கியிருக்கு. தெரியாத கதைங்கறதால இன்னும் சுவையா ஆவலா இருக்கு. சீக்கிரமாவே தொடரும் போட்டுட்டீங்களேன்னு இருக்கு. :)

    ReplyDelete
  7. தும்பையூர்!

    எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!
    அது என்ன எங்க ஊர் பக்கத்துல:)

    கை கொடுத்து தூக்கி பெருமாள் பாதத்தை காட்டிய எங்க ஊர் கலவை கமலக்கண்ணி அம்மன் பக்கத்துல இருக்கு:)

    ReplyDelete
  8. நீண்ட நாளுக்குப் பிறகு படித்ததில் மிகுந்த சந்தோஷம் புததாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வெரி வெரி குட். விரைவில் தொடரவும்...தெரிந்த கதை என்றாலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. :-)

    ReplyDelete
  10. @Krs:
    happy new yr!
    no time to read, but i guess it's good. :)
    btw, i'll reply to your comments on a prev post later when i have time.
    but, narasimmarin nalayiram- i have found a name.
    NPR- narisammarai paadum rajesh/narasimmarukku piditha rajesh

    ReplyDelete
  11. @ KRS,
    Very interesting to read this Story. Your style of writing is amazing.

    Best Wishes.

    ReplyDelete
  12. //குமரன் (Kumaran) said...
    கதை நல்லா தொடங்கியிருக்கு. தெரியாத கதைங்கறதால//

    உங்களுக்குத் தெரியாத கதை என்பதே ஒரு "கதை" தானே குமரன்? :) பாருங்க ராதாவுக்குத் தெரிஞ்சி இருக்காம்! :)

    //சீக்கிரமாவே தொடரும் போட்டுட்டீங்களேன்னு இருக்கு. :)//

    பாட்டுக்கு உண்மையான பொருள் தெரியணும்-ல்ல? ஏதோ ஒரு தைரியத்தில் முதல் பகுதியை எழுதி விட்டேன்! :)

    ReplyDelete
  13. @KRS:
    Just now read the story.
    Beautiful, na?
    Ivvalavu suspense thvayaaa??
    Konjam seekram next part potrunga...
    appadi neenga post pannalai-nna i'll trouble u through e-mail :)
    if that also doesn't work out, i'll corner mr. radhamohan.. :)
    indha vilaivugal vendam endraal (please) next part-ai ASAP podavum!! :))

    ReplyDelete
  14. @KRS:
    ok, my guess on what the twice-repeated statement meant (i don't understand Tamil that much, so this is not linguistically based)

    1. mukti
    2. serving Him

    mukti-anyone can get!
    even those who do karma yoga, gnana yoga, sidhars, yogis, etc.
    but, "bhakti" is love, na?
    we want to serve Him, na?
    what is the use of just being free from the material world?
    what is the use of mukti if we can't serve Him?
    if we can't belong to Him?
    our real freedom is at His feet!
    serving Him, loving Him...
    so, purely a guess...
    the first statement meant "freedom from this world, reaching Him"- the chanting of His name frees us from bondage.
    But, even those who worship God as "Brahman" alone get mukti.
    What is the use?
    They don't get to render service. They don't get to enjoy the Supreme Pleasure.
    the second meant "continuous grace even after mukti"
    what grace?
    It is His grace alone that we can love Him, serve him, right?
    To be able to love him unconditionally, to serve him, to be at His call forever, and to declare in full submission- "i am Yours!"
    So, i think the second repetition meant His association- able to serve Him and His devotees till we reach Him, and then to be able to serve Him!! :)))

    -----
    If this is wrong (most probably is), let Sri Ramanuja correct me through your words, KRS.
    Afterall, he is my guru!

    p.s: ippa neenga post potte aaganum!
    to tell me the real meaning, post potte aaganum!
    so, c'mon!! :))

    ReplyDelete
  15. //என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா? யாருக்குப்பா இது?:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு?:)//

    Yes, shailaja aunty!
    Kothaiyin kizhi konjam (rombave) yosikkudhu! :)
    kothai sonnadhai olunga ketkaamal padhi kothai sonnadhum padhi thanakku thonugiradhaiellam padudhu! :))
    (adhu dhaan avangale paadraanga- elle ilangiliye-innum urangiriyo: padhi-thookathil kettaal ippadi dhaan! )
    kothaikitte keppom kili-yai enna seiyalaam endru :))))))

    ReplyDelete
  16. //என்னது எல்லே இளங்கிளியே இன்னும் கமெண்டலையோவா? யாருக்குப்பா இது?:)ஆண்டாள் பாசுரத்தை எப்படியெல்லாம் டகாலக்கடி செய்றாங்கப்பா சிலபேரு?:)//

    ஷை-அக்கா! நன்றி! கோதையின் தமிழ்ச் சொத்து, என் சொத்தும் கூட! அவள் ஆருயிர்த் தோழன் எனக்கும், என்னால் என் தோழன் ராகவனுக்கும், உயிலில் பங்கு எழுதி இருக்கா! :)

    கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
    இன்று நம் ஆனுள் வரும் மேல், அவன் வாயில்...
    என்ற சிலப்பதிகார வரிகள்!

    அதை, கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி-ன்னு இவ மட்டும் திருப்பாவையில் யூஸ் பண்ணலாம்! நாங்க இவ பாட்டை யூஸ் பண்ணக் கூடாதாமோ? ஏய் கோதை, ரொம்ப பேசினே, உன் கிளியாகிய நான், உன் கொண்டையில் ஒரு கொட்டு வைப்பேன்-டீ, ஜாக்கிரதை! :)

    ReplyDelete
  17. //இங்க பார்த்ததும் நினைவுக்கு வர்து! ஏன் தும்பைப்பூ மேல வைரமுத்து பாட்டு எழுதல மற்ற பல அரிய பூவையெல்லாம் எழுதி இருக்காரே!:)//

    வைரமுத்து உங்களுக்குத் தெரியுமே-க்கா! கேட்டுச் சொல்லுங்க!

    சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு - அதில்
    பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு!-ன்னு எழுதியவர்...

    தும்பைப் பூப் போல தேகம் தான்டி உனக்கு - அதில்
    துப்பட்டாவா என்னைக் கொஞ்சம் இறுக்கு!-ன்னு மாத்திப் பாடச் சொல்லுங்க! :)

    ReplyDelete
  18. // ஷைலஜா said...
    இதுல இந்த வலம் தரும் என்ற சொல்லுக்கும் சரியான அர்த்தம் தேவை//

    கொடுங்க, யார் வேணாம்-ன்னா! கொடுங்க! வலம், வலம்-ன்னா என்னாக்கா? வலம்=Right?? :)

    //தும்பையூர் தயிர்க்காரி என்ன சொல்லபோறாங்கன்னு தொடரும் பதிவுக்கு ஆவலா காத்துக்கொண்டிருக்கிறேன்//

    நானும் தான்! KK also! :)

    //இப்படி சுவாரஸ்யமாய் கதையாக எல்லாவற்றையும் சொல்லும் தம்பிகே ஆர் எஸ்ஸுக்கு புத்தாண்டில் நல்லன எல்லாம் தர அரங்கனை பிரார்த்திக்கிறேன்//

    நல்லன எல்லாம் தரும்-ன்னு பாசுரத்தாலேயே ஆசீர்வாதமா? சூப்பர்! நல்லன எல்லாம் தரும்-ன்னு எனக்கு மட்டுமில்லாம, "நல்லன எல்லாம், எல்லார்க்கும் தரும்"-ன்னு ஆசீர்வாதம் பண்ணிருங்க-க்கா! எல்லாருக்கும் தந்தா, அவங்க கிட்ட இருந்து நான் கடன் வாங்கிப்பேன்! :)

    ReplyDelete
  19. //அது என்ன எங்க ஊர் பக்கத்துல:)

    கை கொடுத்து தூக்கி பெருமாள் பாதத்தை காட்டிய எங்க ஊர் கலவை கமலக்கண்ணி அம்மன் பக்கத்துல இருக்கு:)//

    தோடா! கலவை குலவை அடிக்குறாருப்பா! :)

    ReplyDelete
  20. //krish48 said...
    நீண்ட நாளுக்குப் பிறகு படித்ததில் மிகுந்த சந்தோஷம் புததாண்டு வாழ்த்துக்கள்//

    நன்றி கிருஷ்! எனக்கும் நீண்ட நாளுக்குப் பிறகு எழுதியதில் சந்தோஷம்! :)

    ReplyDelete
  21. //Radha said...
    வெரி வெரி குட். விரைவில் தொடரவும்...தெரிந்த கதை என்றாலும் படிக்க ஆவலை தூண்டுகிறது. :-)//

    தெரிந்த கதையா? யாருக்கு? உனக்கு, உன் VK-க்கு! எனக்குத் தெரியாதே! மின்னஞ்சலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாத் தான் அடுத்த பாகம்! :)

    ReplyDelete
  22. // @Krs:
    happy new yr!
    no time to read, but i guess it's good. :)//

    படிக்காமயே, எப்படி குட் சொல்ல முடியும் KK? :)

    // but, narasimmarin nalayiram- i have found a name.
    NPR- narisammarai paadum rajesh/narasimmarukku piditha rajesh//

    ha ha ha
    NPR = National Public Radio, New York la :)

    ReplyDelete
  23. //Prasad said...

    @ KRS,
    Very interesting to read this Story. Your style of writing is amazing.//

    வாங்க பிரசாத்! புத்தாண்டு வாழ்த்துக்கள்! என் ஸ்டைலா? என்னது பாட்ஷா ஸ்டைல் மாதிரி சொல்லுறீங்க! My Style is always Talking Style! Talking to The Beloved! Sugamo Sugam! :)

    ReplyDelete
  24. // In Love With Krishna said...

    @KRS:
    Just now read the story.
    Beautiful, na?
    Ivvalavu suspense thvayaaa??//

    he he

    // Konjam seekram next part potrunga...//

    I didnt read this part of the comment-ma! :)

    //appadi neenga post pannalai-nna i'll trouble u through e-mail :)
    if that also doesn't work out, i'll corner mr. radhamohan.. :)//

    wow! i like the 2nd option! do it right now! :)

    //indha vilaivugal vendam endraal (please) next part-ai ASAP podavum!! :))//

    corner radha mohan! antha viLaivu thaane vENum! so next part, un corner-ai paathu vittu! :)

    ReplyDelete
  25. //mukti-anyone can get!
    even those who do karma yoga, gnana yoga, sidhars, yogis, etc.
    but, "bhakti" is love, na?
    we want to serve Him, na?
    what is the use of just being free from the material world?//

    சூப்பர்!
    You are almost close to the correct answer! But u have to tell what that has to do with Thumbaiyur Kondi also. What is the connexn? :)

    ReplyDelete
  26. //If this is wrong (most probably is), let Sri Ramanuja correct me through your words, KRS.
    Afterall, he is my guru!//

    ramanuja, thro my words-eh? omg! i am gasping for breath! :)
    Ippo, ennakku nee thaan guru! :)

    //p.s: ippa neenga post potte aaganum!
    to tell me the real meaning, post potte aaganum!
    so, c'mon!! :))//

    so c'mon, c'mon! corner radha mohan! :)

    ReplyDelete
  27. //Yes, shailaja aunty!
    Kothaiyin kizhi konjam (rombave) yosikkudhu! :)
    kothai sonnadhai olunga ketkaamal padhi kothai sonnadhum padhi thanakku thonugiradhaiellam padudhu! :))//

    சேச்சே! இந்தக் கிளி, கொஞ்சம் வித்தியாசமான கிளி! தானா எதுவும் சொல்லலை! தோழி கோதை சொன்னதைத் தான் சொல்லுறேன்!

    ஆனா, தோழி வாயால் சொல்லிக் கொடுத்ததை மட்டும் அல்ல!
    அவ, தன் மனசில் நினைச்சதையும் கண்டு புடிக்கும் மேஜிக் கிளி! :)

    அதனால் அவ வாய் மொழி மட்டும் இல்லாமல் இதய ரகசியமும் வெளியில் சொல்லிடறேன்! என்னடீ கோதை? சரி தானே? க்கீ, க்கீ! :)

    ReplyDelete
  28. @KRS:
    read between the lines...only if troubling u doesn't work out, i'll go to mr. radhamohan...
    and i have ur email id, i don't have his... :))
    so better, put your post fast, asap...
    otherwise, i'll hack ur account! :))
    or best, i'll complain to my kothai- enna, unga kili pesamaatengudhu-nnu.

    ReplyDelete
  29. //so c'mon, c'mon! corner radha mohan!//
    i'll corner (gokul radha's mohan) to make you post...
    or rather, i'd go and complain to kothai, as previously said...
    best, if nothing works, i'll go and complain to my lover's nephew in tiruchendur!!!
    (avarai sevichu romba naal achu, naan sonna avarukku ketkum paarthukonga, i am His area)
    ithanai vilaivuga vendam endral-- POST ENGE???

    ReplyDelete
  30. read all the comments !
    :)))))))
    the same question...where is part-2?
    :))

    ReplyDelete
  31. In Love With Krishna said...

    NPR- narisammarai paadum rajesh/narasimmarukku piditha rajesh

    Narasimmarukku ennai pidichirukkaa!! Iam so happy
    Thanks)

    ReplyDelete
  32. //so better, put your post fast, asap...
    otherwise, i'll hack ur account! :)//

    போட்டாச்சும்மா போட்டாச்சு! மீசையோடு போட்டாச்சு! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP